ரியாத் தமிழ்ச் சங்கத்தில்
திருச்சி சிவா அவர்கள்! (1)
நேற்று ரியாத் தமிழ்ச்
சங்கத்தின் விழாவில் திருச்சி சிவா எம்பி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன். விழா ஆரம்பமாக திருக்குர்ஆன் ஓதப்பட்டது. பிறகு
அதன் தமிழாக்கமும் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு சிறுவர் சிறுமியர் தமிழ்த்தாய் வாழ்த்து
பாடினர். அவர்களோடு சேர்ந்து அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்களும் தமிழத் தாய் வாழ்த்தை
பாடினர். பலரும் பேசி முடித்தவுடன் திருச்சி சிவா அவர்கள் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். திருச்சி சிவா அவர்கள்
பேசிய பேச்சுக்களிலிருந்த எனது பார்வையை அடுத்த பதிவில் பார்போம். அதை விட முக்கியமாக
எனக்கு இன்னொன்று பார்வையில் பட்டது.
அதாவது திருக்குர்ஆன்
ஓதப்படும் போதும் அதன் தமிழ் அர்த்தத்தை வாசித்த போதும் அரங்கத்தில் யாரும் எழுந்திருக்கவில்லை.
அதே நேரம் தமிழ்த்தாய் வாழத்து பாடப்படும் போது அரங்கமே எழுந்து நின்றது. அந்த அரங்கத்தில்
இருந்தது பெரும்பாலும் இஸ்லாமியர்களே! திருக்குர்ஆன் ஓதப்படும் போது எழுந்திருக்காத
இஸ்லாமியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்தனர்.
இஸ்லாத்தைப் பொருத்த
வரை எழுந்து நின்று மரியாதை செய்யும் வழக்கம் இல்லை. தற்போது நபிகள் நாயகம் உயிரோடு
இருந்து எங்கள் முன்னால் வந்தால் கூட மரியாதை நிமித்தமாக எழுந்திருக்க மாட்டோம். அவ்வாறு
எழுந்திருக்கக் கூடாது என்று கட்டளையும் இட்டுச் சென்றுள்ளார். ஒரு மனிதருக்கோ அவர்
கொண்டு வந்த மார்க்கத்துக்கோ மரியாதை செய்வதென்பது அதன்படி நடந்து காட்டுவதாகும். எனவேதான்
குர்ஆன் ஓதப்படும்போது அதற்காக இஸ்லாமியர்கள் எழுந்திருக்கவில்லை.
ஆனால் தமிழர்களின்
மரபு என்பது மரியாதை நிமித்தம் எழுந்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வழக்கத்துக்கு
மதிப்பளித்து தமிழ்த்தாய் வாழ்த்து படித்த போது இஸ்லாமியரும் எழுந்து நின்று அந்த வழக்கத்துக்கு
மதிப்பளித்தனர். அவ்வாறு எழுந்திருக்கா விட்டாலும் அதனை ஒரு குறையாக நாமும் பார்பதில்லை.
தமிழ் இந்துக்களும் பார்பதில்லை.
ஆனால் காஞ்சி விஜயேந்திரர்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது எழுந்திருக்காததை நாமும் காணொளியில் கண்டோம். தேசிய
கீதத்துக்கு எழுந்து நின்ற விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்காததது
சமஸ்கிரதத்துக்கு கீழ் தான் தமிழ் இருக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியே ! தமிழ்
மொழி ஒரு நீச பாஷை என்று பல காலம் இவருக்கு முன் இருந்தவர்கள் தைரியமாக எழுதியும் வந்துள்ளனர்.
இஸ்லாமியரின் வழக்கத்தையும் தமிழ் இந்துக்களின் வழக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கே
இதனை இங்கு பதிந்தேன்.....

























