Followers

Tuesday, February 21, 2012

கத்தியின்றி ரத்தமின்றி துறந்தனர் தங்கள் சாதியை!

கத்தியின்றி ரத்தமின்றி துறந்தனர் தங்கள் சாதியை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நேரடி பார்வையில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் தங்களின் வாழ்க்கை வழி முறைகளை மாற்றிக் கொண்டோரின் தகவல்கள்:


1.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளையில் இன்று (17-2-2012) சத்தியராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
-------------------------------------------------------------


2.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 10-2-2012 அன்று நடராஜன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுலைமான் என மாற்றிக் கொண்டார்.

----------------------------------------------------------




3.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையில் சென்ற 01-02-2012 புதன்க்கிழமையன்று தாம்பரத்தை சேர்ந்த சகோதரர் குமார் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார்கள்.
இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

------------------------------------------------------------



4.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையில் கலைவாணி என்ற சகோதரி குடும்பத்துடன் கடந்த 18-1-2012 இஸ்லாத்தை தழுவினார்கள்.
தாம்பரம் லக்ஷ்மிபுரத்தை சேர்ந்த கலைவாணி தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் தூய இஸ்லாத்தை தழுவினார். தன்னுடைய பெயரை ஆயிஷா எனவும், மகள் கோமதியின் பெயரை மர்யம் எனவும், மகன் ஹேம்னாத்துடைய பெயரை இம்ரான் எனவும் மாற்றிக்கொண்டனர்.
மேலும் சகோதரர் இம்ரான் இடுப்பில் கட்டியிருந்த கயிறு அவர்களுக்கு விளக்கப்பட்டு கழற்றி எரியப்பட்டது.
திருக்குர்ஆன் தமிழாக்கம், துஆக்கள் மனனம், மாமனிதர் நபிகள் நாயகம், தொழுகை முறை, இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

------------------------------------------------------------


5.
மதுரை மாவட்டம் மீனம்பாள்புரம் கிளையில் கடந்த 14-1-2012 அன்று கண்ணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் கரீம் என மாற்றிக் கொண்டார்.
-------------------------------------------------------------



6.
தென் சென்னை மாவட்ம் கே.கே.நகர் கிளையில் 06.01.2012 அன்று “ப்ரீத்தி” என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை “சபானா” என்று மாற்றி கொண்டார்கள்.
இவருக்கு பெண்களுக்கான சட்டங்கள், தொழுகை முறை, ஹிஜாப் அணியும் முறை ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய அடிப்படை கல்வி, துஆகளின் தொகுப்பு ஆகிய நூல்களும் திருக்குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.

-------------------------------------------------------------



7.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 20/01/12 அன்று விவேக் என்ற சகோதரர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார். தனது பெயரை வாசிம் என மாற்றிக்கொண்டார்.
------------------------------------------------------------


8.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்ட மர்கசில் கடந்த 20-1-2012 அன்று சுரேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள் இவருக்கு திருக்குர்ன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------


9.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 21-1-2012 அன்று பூபதி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை பிலால் என மாற்றிக் கொண்டார்.

------------------------------------------------------------


10.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 28/01/12 அன்று செந்தில் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சம்சுதீன் என மாற்றிக் கொண்டார். இவருக்கு குர்ஆன் ஹதீஸ் காலண்டர் வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------




11.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆந்திர மாநிலம் பாடேறு கிளையில் கடந்த 30-1-2012 அன்று பிறசமயத்தை சேர்ந்த இருவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.
--------------------------------------------------------------




12.
TNTJ ஜித்தா மண்டலம் “தபூக்” கிளையில் 17/02/2012 அன்று தபூக் [King Khaled Hospital] பணிபுரியும் [அல் மஜ்ஜால்-அல் அரபி] கம்பனியைச் சேர்ந்த-அரியலூர் மாவட்டம் – காரூரைச் சேர்ந்த சகோதரர் முத்து வேல் முருகன் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இப்ராஹீம் என மாற்றிக் கொண்டார்.
TNTJ தபூக் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விளக்கி நூல்கள் மற்றும் சீடிக்கள் வழங்கினார்கள்.
--------------------------------------------------------------



ஆண்கள் தஃவா சென்டர்
இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அவர்களில் ஆண்களுக்காக சேலத்தில் மூன்று மாதம் இஸ்லாமிய பயிற்சி ஆண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.
பாடத்திட்டங்கள்:
1. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
2. திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
3. துஆ மனனம்
4. தொழுமை முறை
5. நபிகளார் வரலாறு
6. இஸ்லாமிய ஒழுங்குகள்
மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.
முகவரி:
24/11E, ஆசாத் நகர், சூரமங்கலம்,
சேலம்-636005

-நன்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

இதைப் படிக்கும் நண்பர்களுக்கு:

இந்த பதிவைப் பார்த்து சிலர் கோபப்படலாம். நன்றாக சிந்தித்தீர்கள் என்றால் உங்களின் கோபம் தானாக அகன்று விடும். நாராயண குரு, பெரியார், அம்பேத்கார் என்று எவ்வளவோ பெரிய மனிதர்கள் எல்லாம் முயற்ச்சித்து இந்த சாதிப் பேயை, தீண்டாமைப் பேயை ஒழிக்க முடியவில்லை. படித்து விட்டால் சாதி மறைந்து விடும் என்று நம்பினோம். ஆனால் படித்தவர்களுக்கு மத்தியில்தான் இன்று சாதி வெறி தலைதூக்கி இருக்கிறது. அதற்கு உதாரணமாக இணையத்தில் சாதியால் நடக்கும் சண்டைகளை பார்வையிடலாம். ஆரிய திராவிட பிரச்னை உலக முடிவுநாள் வரை தீராது போல் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கூட பழம் பதிவர் ஒருவர் 'சாதி சமூகத்தில் இருந்தே ஆக வேண்டும்' என்று பதிவிடுகிறார். பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம், என்று சாதிக் கொடுமை தொடர்கதையாகவே உள்ளது.

கத்தியின்றி ரத்தம் இன்றி ஒரு தீர்வு இதற்கு உண்டென்றால் அது இஸ்லாம் ஒன்றுதான். எனவே இஸ்லாத்தை ஏற்ற இந்த சகோதரர்களை வாழ்த்துங்கள். எங்களைப் போன்ற சாதிகளற்ற சமூகமாக மாற நீங்களும் அவர்களை வாழ்த்துங்கள். புதிய கொள்கையை அவர்கள் ஒன்றும் பின்பற்றவில்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது மூதாதையரின் மார்க்கத்துக்கு திரும்பியிருக்கின்றனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு நமது முதாதையர் அனைவரும் ஏக இறைவனையே வணங்கி வந்தனர். ஆரியர்களின் படையெடுப்பால் பல தெய்வ வணக்கம் நமக்குள் புகுந்து விட்டது. இந்த சகோதரர்கள் தங்களின் பழைய மார்க்கத்தை புதுப்பித்து இருக்கிறார்கள். அவ்வளவே!

அடுத்து இவ்வளவு சிறந்த சேவை செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை தங்களின் சொந்த பகையை மனதில் கொண்டு இந்த இயக்கத்தை கூடிய வரை முடக்க நினைக்கின்றனர். தவ்ஹீத் ஜமாத்தாக இருந்தாலும் தமுமுகவாக இருந்தாலும் முஸ்லிம் லீக்காக இருந்தாலும் பாபுலர் ஃப்ரண்டாக இருந்தாலும் செய்யும் நல்ல காரியங்களுக்கு சமூக ஒற்றுமைக்கு நம்மால் ஆன உதவிகளை செய்வோம். அது செய்ய விருப்பமில்லாதவர்கள் உபத்திரம் செய்யாமலாவது இருப்போம்.

மார்க்கத்தை ஏற்ற இந்த சகோதரர்கள் இனி அவர்களின் பழைய முகாமுக்கும் செல்ல முடியாது. நாமும் சரியாக கவனிக்கா விட்டால் தவறான வழிக்கு சென்று விடுவர். எனவே முஸ்லிம்கள் இவர்களுக்கு தகுந்த வேலை கொடுப்பது, கல்வி கொடுப்பது, நம் உறவினர்களைக் கொண்டு திருமணம் முடித்துக் கொடுப்பது என்று அவர்களை இந்த தலைமுறையிலேயே சாதிகளை முழுவதும் அறுத்த தலைமுறைகளாக மாற்ற வேண்டும். அந்த நிலையை அடைய பரம்பரை முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளும் நம்மவர்களின் பங்குதான் அதிகமிருக்கிறது.

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும்போது, முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.'
-குர்ஆன் 30:110

57 comments:

VANJOOR said...

.
.
சொடுக்கி >>>>>இன்றைய உலகத்திற்கு தேவை இஸ்லாம்! இஸ்லாம்! இஸ்லாம் என முழங்குகிறார். மோகன கிருஷ்ண‌ன். <<<<<< விடியோ காணுங்கள்


சொடுக்கி >>>>> இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். ‍ அதிசயத்தக்க‌ வரலாறு. <<<<<< படியுங்கள்.

சொடுக்கி >>>>>புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! . ஒரு செங்கொடியின் அறைகூவல். <<<<< படியுங்கள்.

சொடுக்கி >>>>>>
முஸ்லிமான R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன்!!! –
<<<<<<< படியுங்கள்.

சொடுக்கி >>>>>
ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது. இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்
<<<< படியுங்கள்.
.
.

ராவணன் said...

கத்தியின்றி ரத்தமின்றி அந்த முகமதுவின் மதத்திலிருந்து யாராவது வெளியே வர முடியுமா?

இதை அரேபியாவில் யாராவது கூறமுடியுமா?

இந்தியாவில் சுதந்திரம் கட்டுப்பாடற்றது.எல்லையற்றது...இந்திய கடவுள்களைப் போல பரந்த மனமுடையவர்கள் இந்தியர்கள்.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ்

சிராஜ் said...

சகோ ராவணன்,

/* கத்தியின்றி ரத்தமின்றி அந்த முகமதுவின் மதத்திலிருந்து யாராவது வெளியே வர முடியுமா? */

செங்கொடி என்ற பெயரில் இருக்கும் பதிவர் கலீலுர் ரஹ்மான் இஸ்லாத்தை விட்டு வந்து இஸ்லாத்தை விமர்சித்துக்கொண்டு இருக்கிறாரே, அவர் என்ன கை இல்லாமலா சுத்திக்கொண்டு இருக்கிறார்?

naren said...

நண்பர் சுவனப்பிரியன்,
இத்தனைப் பேர் இஸ்லாத்தில் சேர்ந்துள்ளார்கள் என்ற பெருமிதம் உங்கள் முகத்தில் தெரிவதை நான் கற்பனை செய்கிறேன்.
சேருகின்றவர்கள்..
1)எந்த முஸ்லிம்? தவ்வீதா( இந்தியன், தமிழ்நாடு இன்னும்பிற), சுன்னத் ஜமாத்தா, jaqhஆ, குரானிஸ்ட்டா, ஷியாவா, சுன்னியா, அஹமதியாவா?

2) யார் சொல்லும் பட்வாவை கேட்க வேண்டும்? சம்சுதீன் காசுமியா, அண்ணன் பி.ஜேவா, ஷேக் அப்துல்லா ஜமாலியா அல்லது பெரியார்தாசன் @ அப்துல்லாவையா?

3) அவர்களுக்கு தொப்பி கட்டாயமா? தொழுகையின் போது விரலை ஆட்டலாமா? அந்த மாதிரி கட்டுபாடுகள் உள்ள மசுதிகளுக்கு அடிவாங்காமல் தொழுகை செய்யலாமா?

4)ஜகாத் ஒரு முறையா? வருடா வருடமா? (அதிமுக்கியம் சுவனம் கிடைக்க கடைமகளில் இதுவும் ஒன்று)

5) தாடி வைக்கலாமா? புல் பேண்ட் போடலாமா?

6)ஐந்து முறை தொழுகையா? மூன்று முறை தொழுகையா? கலால் தொழுகை உண்டா இல்லையா?

7)யாருடைய தமிழாக்கத்தை படிப்பது? (இது எனக்கு முக்கியம்)?

8) நான்கு மத்ஹபில் எந்த மத்ஹபை கடைப்பிடிக்க வேண்டும்? அல்லது அண்ணன் மத்ஹபை கடைப்பிடிக்க வேண்டுமா?

9) முஸ்லிம் சமுதாயத்தில் class என்ற வடிவில் வரும் caste பார்ப்பதில்லை என்பதை உங்கள் மனதிலிருந்து உண்மையாக சொல்ல முடியுமா? ஒரு அரபியர் இந்தியரை தாழ்த்தப்பட்ட சாதியை எப்படி நடத்துகிறார்களோ அப்படித்தானே நடத்துகிறார்கள்.

Anonymous said...

//செங்கொடி என்ற பெயரில் இருக்கும் பதிவர் கலீலுர் ரஹ்மான் இஸ்லாத்தை விட்டு வந்து இஸ்லாத்தை விமர்சித்துக்கொண்டு இருக்கிறாரே, அவர் என்ன கை இல்லாமலா சுத்திக்கொண்டு இருக்கிறார்?//

செங்கொடி அரேபியவிலா பிறந்தார்?

Anonymous said...

துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக்
ஹா ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

மறை கிழண்ட கேசுங்களா எங்கடா குண்டு வைக்கால்ம்மு திரியும் ஆட்களே
கேவலமா இல்லை இப்படி எல்லாம் மத பிரச்சாரம் செய்ய


துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக்
ஹா ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

UNMAIKAL said...

//naren said...

நண்பர் சுவனப்பிரியன்,
இத்தனைப் பேர் இஸ்லாத்தில் சேர்ந்துள்ளார்கள் என்ற பெருமிதம் உங்கள் முகத்தில் தெரிவதை நான் கற்பனை செய்கிறேன்.

சேருகின்றவர்கள்..
1)எந்த முஸ்லிம்? தவ்வீதா( இந்தியன், தமிழ்நாடு இன்னும்பிற), சுன்னத் ஜமாத்தா, jaqhஆ, குரானிஸ்ட்டா, ஷியாவா, சுன்னியா, அஹமதியாவா?

2) யார் சொல்லும் பட்வாவை கேட்க வேண்டும்? சம்சுதீன் காசுமியா, அண்ணன் பி.ஜேவா, ஷேக் அப்துல்லா ஜமாலியா அல்லது பெரியார்தாசன் @ அப்துல்லாவையா?

3) அவர்களுக்கு தொப்பி கட்டாயமா? தொழுகையின் போது விரலை ஆட்டலாமா? அந்த மாதிரி கட்டுபாடுகள் உள்ள மசுதிகளுக்கு அடிவாங்காமல் தொழுகை செய்யலாமா?

4)ஜகாத் ஒரு முறையா? வருடா வருடமா? (அதிமுக்கியம் சுவனம் கிடைக்க கடைமகளில் இதுவும் ஒன்று)

5) தாடி வைக்கலாமா? புல் பேண்ட் போடலாமா?

6)ஐந்து முறை தொழுகையா? மூன்று முறை தொழுகையா? கலால் தொழுகை உண்டா இல்லையா?

7)யாருடைய தமிழாக்கத்தை படிப்பது? (இது எனக்கு முக்கியம்)?

8) நான்கு மத்ஹபில் எந்த மத்ஹபை கடைப்பிடிக்க வேண்டும்? அல்லது அண்ணன் மத்ஹபை கடைப்பிடிக்க வேண்டுமா?

9) முஸ்லிம் சமுதாயத்தில் class என்ற வடிவில் வரும் caste பார்ப்பதில்லை என்பதை உங்கள் மனதிலிருந்து உண்மையாக சொல்ல முடியுமா? ஒரு அரபியர் இந்தியரை தாழ்த்தப்பட்ட சாதியை எப்படி நடத்துகிறார்களோ அப்படித்தானே நடத்துகிறார்கள். //

Naren நரெனுடைய சந்தேகங்கள் அனைத்துக்கும் http://onlinepj.com/ என்ற தளம் சென்று பூரண விடை / விளக்கம் பெறலாம்.

.

VANJOOR said...

ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விட்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஒழிந்து போய்விடும்.

இந்தக் கொள்கையை ஒருவன் ஏற்றுக் கொண்டால் அவனுடைய ஜாதி, கோத்திரம், பூர்வீகம் என்ன என்பதை முஸ்லிம்கள் கவனிக்கவே மாட்டார்கள்.

அவனை ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய சகோதரன் என்று கருதி கண்ணியமாக நடந்து கொள்வதைப் பரவலாகக் காணலாம்.

எவ்வளவு பெரிய மதகுருவானாலும், செல்வந்தரானாலும், செல்வாக்கு மிக்கவர்களானாலும் பள்ளிவாசல்களில் அவர்களுக்குப் பரிவட்டம் கட்டப்படுவதில்லை. முதல் மரியாதை செய்யப்படுவதில்லை.

எந்த வரவேற்பும் அளிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்வதானால் அவர்கள் பிரத்தியோகமாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை.

பள்ளிவாசல்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். பின்னால் வந்தால் நாட்டின் ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும்.
வருவது ஜனாதிபதியாயிற்றே என்று மக்களும் நினைக்க மாட்டார்கள். அந்த ஜனாதிபதியும் நினைக்க மாட்டார். நான் ஜனாதிபதி என்னை முதல் வரிசையில் நிறுத்துங்கள் என்று அவரும் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் வெளியே போ என்று சொல்லும் அளவிற்கு இந்தச் சமுதாயம் தெளிவாக இருக்கிறது.

இந்தத் தெளிவைக் கொடுத்தது எது?
அவர்களை இப்படி உருவாக்கியது எது?

எவனுக்கும் தலை வணங்காமல் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தியது எது?

லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற கொள்கை தான் அவர்களை இப்படி மாற்றியது.


இஸ்லாத்தில் சாதி (ஜாதி) உண்டா? இஸ்லாத்தில் சாதி (ஜாதி) இல்லை.!!

இஸ்லாத்தில் சாதி பாகுபாடு இல்லை


சொடுக்கி >>>> இஸ்லாத்தில் ஜாதி, வர்ணாஸிரமம் இல்லையே !! ஏன்? <<<<< விளக்கம் பெறுங்கள்.
.
.
.

suvanappiriyan said...

சகோ நரேன!

//1)எந்த முஸ்லிம்? தவ்வீதா( இந்தியன், தமிழ்நாடு இன்னும்பிற), சுன்னத் ஜமாத்தா, jaqhஆ, குரானிஸ்ட்டா, ஷியாவா, சுன்னியா, அஹமதியாவா?//

குர்ஆனை பின்பற்றும் முஸ்லிமாக இருப்பார்.

//2) யார் சொல்லும் பட்வாவை கேட்க வேண்டும்? சம்சுதீன் காசுமியா, அண்ணன் பி.ஜேவா, ஷேக் அப்துல்லா ஜமாலியா அல்லது பெரியார்தாசன் @ அப்துல்லாவையா?//

முகமது நபி சொல்லும் பத்வாவை பின் பற்ற வேண்டும்.

//3) அவர்களுக்கு தொப்பி கட்டாயமா? தொழுகையின் போது விரலை ஆட்டலாமா? அந்த மாதிரி கட்டுபாடுகள் உள்ள மசுதிகளுக்கு அடிவாங்காமல் தொழுகை செய்யலாமா?//

தொப்பி அவசியம் இல்லை. ஏனெனில் முகமது நபி சில நேரங்களில்தான் தலையை மறைத்துள்ளார். தலையில் சூடு அதிகமானால் விரும்பியவர்கள் அணிந்து கொள்ளலாம். தொழுகையில் கட்டாயம் இல்லை.

ஆரம்ப காலங்களில் என்னையும் எங்கள் ஊர் பள்ளியில் அனுமதிக்கவில்லை.:-) தற்போது எந்த ஊரிலும் எந்த பள்ளியிலும் தலையில் தொப்பி இல்லாமல் தொழலாம்.

//4)ஜகாத் ஒரு முறையா? வருடா வருடமா? (அதிமுக்கியம் சுவனம் கிடைக்க கடைமகளில் இதுவும் ஒன்று)//

ஒருமுறை கொடுத்தால் போதும். வசதியுள்ளவர்கள் விருப்பமுடையவர்கள் வருடா வருடம் கொடுத்தால் அது தர்மத்தில் சேர்ந்து அதுவும் அவருக்கு நன்மையாகவே முடியும்.

//5) தாடி வைக்கலாமா? புல் பேண்ட் போடலாமா?//

தாராளமாக! முகமது நபி வலியுறுத்திய நடைமுறை. தாடி வைத்தாலே ஒரு கம்பீரம் வந்திரும்ல..ஆண் சிங்கத்தையும் பெண்சிங்கத்தையும் பாருங்கள். எது அழகாக இருக்கிறது. ஆண் மயிலையும் பெண் மயிலையும் பாருங்கள். சேவலையும் பெட்டைக் கோழியையும் பாருங்கள்.

ஃபுல் பேண்ட் தாராளமாக போடலாம்.

//6)ஐந்து முறை தொழுகையா? மூன்று முறை தொழுகையா? கலால் தொழுகை உண்டா இல்லையா?//

ஒரு நாளைக்கு ஐந்து முறை கட்டாயம் தொழ வேண்டும். மற்ற தொழுகைகள் விருப்பமிருந்து நேரமும் கிடைத்தால் தொழலாம்.

//7)யாருடைய தமிழாக்கத்தை படிப்பது? (இது எனக்கு முக்கியம்)?//

பிஜேயுடைய தமிழாக்கம் எனக்கு இலகுவாக இருப்பதால் நான் அதைப் படிக்கிறேன். மற்றவர்கள் எழுதியதும் பெரும் மாற்றங்கள் ஏதும் இல்லை. படிப்பவருக்கு எது இலகுவாக இருக்கிறதோ அதை படிக்கலாம்.

//8) நான்கு மத்ஹபில் எந்த மத்ஹபை கடைப்பிடிக்க வேண்டும்? அல்லது அண்ணன் மத்ஹபை கடைப்பிடிக்க வேண்டுமா?//

முகமது நபி அவர்களின் மத்ஹபை பின்பற்ற வேண்டும். நான் அதைத்தான் பின் பற்றுகிறேன்.

//9) முஸ்லிம் சமுதாயத்தில் class என்ற வடிவில் வரும் caste பார்ப்பதில்லை என்பதை உங்கள் மனதிலிருந்து உண்மையாக சொல்ல முடியுமா? ஒரு அரபியர் இந்தியரை தாழ்த்தப்பட்ட சாதியை எப்படி நடத்துகிறார்களோ அப்படித்தானே நடத்துகிறார்கள்.//

கண்டிப்பாக நான் பார்ப்பதில்லை. அரபுகள் திருமண உறவுகளை தங்களுக்குள் வைத்துக் கொள்வார்கள். அது மொழியினால் வந்த வேறுபாடு. மற்றபடி நான் பல நேரம் ஒரே தட்டில் அவர்களோடு அமர்ந்து சாப்பிட்டுள்ளேன். ஒன்றாக அவர்கள் குரூப்பில் ஹஜ் செய்துள்ளேன். என்னைப் பின்பற்றி பல அரபிகள் தொழுதுமிருக்கிறார்கள். நான் சந்தித்த இத்தனை ஆண்டு அனுபவத்தில் ஒரு முறை கூட என்னை இழிவாக பார்த்ததுமில்லை. பேசியதுமில்லை. இஸ்லாமும் அதனை ஆதரிக்கவில்லை.

ஒரு சில அரபுகள் தவறாக நடந்தால் அவர்களிடம் இஸ்லாம் முழுமையாக இருந்திருக்காது.

mohamedali jinnah said...

மாஷா அல்லாஹ்

சார்வாகன் said...

வாழ்க வளமுடன் சகோ

மதம் என்பது ஒரு வாழ்வு முறை,கலாச்சார அடையாளம் என்பது நம் கருத்து.இவ்வகையில் ஒருவர் தனக்கு பிடித்த வாழ்வு முறைக்கு மாறுவதில் த்வறில்லை.இந்தியாவின் நாகரிகமான மதசார்பற்ற சட்டங்கள் இதற்கு அனைவருக்கும் உரிமை தருகின்றன.

ஆனால் ஏன் மாறினார்கள் எனபதற்கு சாதியை துறக்க என்ற காரணம் மட்டும்தானா?

மற்றப்டி மதமாற்ற‌த்தால் அவர்களின் சமூக பொருளாதார வாழ்வு முன்பை விட சீராகும் எனில் நமக்கும் மகிழ்ச்சியே!!!!!!!!!!!!.

ஆனாலும் இவ்வளவு இணைய தொலைகாட்சி,.... பிரச்சாரத்திற்கு மதம் மாறியோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.
நன்றி

Unknown said...

Assalamu alikum bro!
Masha allah!

suvanappiriyan said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ சார்வாகன்!

//மதம் என்பது ஒரு வாழ்வு முறை,கலாச்சார அடையாளம் என்பது நம் கருத்து.இவ்வகையில் ஒருவர் தனக்கு பிடித்த வாழ்வு முறைக்கு மாறுவதில் த்வறில்லை.இந்தியாவின் நாகரிகமான மதசார்பற்ற சட்டங்கள் இதற்கு அனைவருக்கும் உரிமை தருகின்றன.//

சட்டங்கள் இல்லை என்றாலும் ஒருவனை அளவுக்கு மீறி சொந்த மதத்தில் மதிப்பதில்லை எனும் போது எங்கு மதிப்பு கிடைக்கிறதோ அங்கு செல்ல நினைப்பது பெரும்பாலோரின் இயல்பு.

//ஆனால் ஏன் மாறினார்கள் எனபதற்கு சாதியை துறக்க என்ற காரணம் மட்டும்தானா?//

நம் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலோர் மாறுவதற்கு சாதி பாகுபாடே காரணமாகிறது.

//மற்றப்டி மதமாற்ற‌த்தால் அவர்களின் சமூக பொருளாதார வாழ்வு முன்பை விட சீராகும் எனில் நமக்கும் மகிழ்ச்சியே!!!!!!!!!!!!.//

கண்டிப்பாக மாற வேண்டும். பழைய முஸ்லிம்கள் அவர்களை அரவணைக்க வேண்டும். இறைவன் நாடினால் கண்டிப்பாக மாறும்.

//ஆனாலும் இவ்வளவு இணைய தொலைகாட்சி,.... பிரச்சாரத்திற்கு மதம் மாறியோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.//

கிறிததவர்களைப் போல் திட்டம் தீட்டி வெளிநாட்டு உதவிகளை அதிகம் பெற்று நடத்தப்படுவதில்லை இஸ்லாமிய பிரசாரம். எந்த அரசாங்கமும் பண உதவியும் செய்வதில்லை. ஆர்வத்தில் தாங்களாகவே பிரசாரத்தை எடுத்துச் சென்று இந்த மன மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

பணம் பொருள் மட்டுமே ஒருவனின் வாழ்க்கையை மாற்றி விடாது. இவர்கள் தங்களின் வாழ்க்கையை குர்ஆனாகவே மாற்றிக் கொண்டால் மிகச் சிறந்த மன மாற்றத்தை வாழ்க்கைத் திட்டத்தை பெற முடியும்.

அடுத்து இவர்களை தவ்ஹீத் ஜமாத் கண்காணிப்பதால் தர்ஹா வணக்கம் மூடப் பழக்கம் என்று மற்றொரு பாவத்தில் சென்று விழுவதிலிருந்தும் இவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆஷிக்!

//அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//செங்கொடி என்ற பெயரில் இருக்கும் பதிவர் கலீலுர் ரஹ்மான் இஸ்லாத்தை விட்டு வந்து இஸ்லாத்தை விமர்சித்துக்கொண்டு இருக்கிறாரே, அவர் என்ன கை இல்லாமலா சுத்திக்கொண்டு இருக்கிறார்?//

ராவணனுக்கு அழகிய முறையில் பதில் அளித்தமைக்கு நன்றி!

suvanappiriyan said...

//துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக்
ஹா ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா//

வர்ணாசிரமம் தரை மட்டமாகிறதே என்று மரை யாருக்கு கழண்டிருக்கிறது என்பதை மற்றவர்களும் விளங்கிக் கொள்வதற்காகவே அனானியின் பின்னூட்டத்தை வெளியிட்டேன்.

suvanappiriyan said...

சலாம் வாஞ்சூர் அண்ணன்!

//ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விட்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஒழிந்து போய்விடும்.//

வருகை புரிந்து சிறந்த பின்னூட்டத்தையும் அளித்தமைக்கு நன்றி!

suvanappiriyan said...

//மாஷா அல்லாஹ்//

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி சகோ நீடூரலி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஜாபர்கான்!

//Assalamu alikum bro!
Masha allah!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மஸ்தூக்கா said...

//ஆனாலும் இவ்வளவு இணைய தொலைகாட்சி,.... பிரச்சாரத்திற்கு மதம் மாறியோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.//
எல்லோரும் தயாரா இருங்க இதோ நாத்திகத்தின் இவ்வளவு இணைய தொலைகாட்சி,.... பிரச்சாரத்திற்கு நாத்திகராக மாறியோர் பட்டியலை வெளியிடப் போகிறார் நண்பர் சார்வாகன்.

வலையுகம் said...

சகோ சுவனப்பிரியன்

//வர்ணாசிரமம் தரை மட்டமாகிறதே என்று மரை யாருக்கு கழண்டிருக்கிறது என்பதை மற்றவர்களும் விளங்கிக் கொள்வதற்காகவே அனானியின் பின்னூட்டத்தை வெளியிட்டேன்.//

ஹா ஹா ஹா பாவம்,பாவம் விட்டுறுங்கே

Anonymous said...

இது ஒரு தாக்கியா நாடகம்

பொய் சொல்லாதீங்க சுவன பிரியன்

அது எப்படி கத்தியின்றி இரத்தமின்றி ஆகும்?

விருத்த சேதனம் பண்னும் போது கத்தியிலாமல் எப்படி செய்ய முடியும்.

வி.சே செய்தால் இரத்தம் வருமா வராதா?


.பேண்ட் சட்டை மாற்றி அரபி ஆடை அணியுங்கள்!

ஹி ஹி ஹி

NKS.ஹாஜா மைதீன் said...

மாஷா அல்லாஹ்...

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹு அக்பர். (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். திருக்குர்ஆன் 2:256

suvanappiriyan said...

சகோ மஸ்தூக்கா!

//எல்லோரும் தயாரா இருங்க இதோ நாத்திகத்தின் இவ்வளவு இணைய தொலைகாட்சி,.... பிரச்சாரத்திற்கு நாத்திகராக மாறியோர் பட்டியலை வெளியிடப் போகிறார் நண்பர் சார்வாகன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஹைதர் அலி!

//ஹா ஹா ஹா பாவம்,பாவம் விட்டுறுங்கே//

மரை யாருக்கு கழண்டுள்ளது என்பதை தற்போது அனைவரும் உணர்ந்திருப்பர்.

எப்படி காஃபிர் என்ற வார்த்தையை தவறாக அர்த்தம் செய்து கொண்டார்களோ அதுபோல் துருக்கர் என்ற சொல்லும் அவமானமான சொல் என்பது சிலரின் நினைப்பு. அதிலும் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் எவருமே துருக்கியிலிருந்து வரவில்லை. எல்லோருமே இந்து மதத்தின் வர்ணாசிரமத்தின் கோரப் பிடிக்கு பயந்து இஸ்லாத்தை ஏற்றவர்களே! இந்த விபரம் எனக்கும் உங்களுக்கும் தெரியும். அந்த அனானிக்கு தெரிய வாய்ப்பில்லையே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//மாஷா அல்லாஹ்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஹாஜா மைதீன்!

suvanappiriyan said...

//அல்லாஹு அக்பர். (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை;//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ அரஅல.

VANJOOR said...

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


இளையான்குடியில் இஸ்லாத்தை ஏற்ற 6 பேர்.

இளையான்குடியில் உள்ள கிறிஸ்தவ குடும்பம் ஒன்று இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு அங்குள்ள தாவா சென்டரில் இஸ்லாத்தை ஏற்றது!

அவர்கள் ஏகத்துவ கலிமாவை மொழிந்து தங்கள் பெயர்களையும் முறைப்படி கீழ்க் கணடவாறு மாற்றிக் கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ்.


தனபால்-வயது 40 - இப்ராஹிம்
தனபாக்கியம்- வயது - 35 சாரா
ஸ்டிபன் -வயது 14 - இஸ்மாயில்
நவீனா-வயது 10 - மர்யம்
ஸ்டாலின்- வயது 8 - இஸ்ஹாக்
வில்லின்-வயது 4 - யஃகூப்


இஸ்லாத்தை ஏற்ற இவர்கள் ஒரு செங்கல் சூளையில் மொத்தமாக முன் பணம் வாங்கி அவர்களிடத்தில் பொருளாதார அடிமைகளாக இருப்பது தெரிய வந்தது .

இந்நிலையில் இதில் இருந்து மீட்டு தங்களின் வாழ்வாதரத்திற்கு ஒரு வியாபாரத்திற்கு கடன் கொடுத்து உதவுமாறு இளையான்குடி நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திடம் கோரிக்கை வைத்தனர்.

அல்லாஹ்வின் அருளால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மாநில செயலாளர் செங்கிஸ் கானின் முயற்சியால் நேற்று இளையான்குடி கிளை நிர்வாகம் மூலம் ரூ 30000 வட்டியில்லா அழகிய கடன் வழங்கி அவர்களை பொருளாதார அடிமைத்தளையில் இருந்து மீட்க பட்டார்கள் .

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
இறைவனுக்கே புகழனைத்தும்.
அல்லாஹு அக்பர்.
புதியவர்களான இவர்களுக்கும், முயற்சித்த ததஜ விற்கும் ஈருலகிலும் இறைவனின் ஸலாமும் ரஹ்மத்தும் பரக்கத்தும் கிடைக்க இறைஞ்சுகிறேன்.

'கட்டுப்பாட்டுடன் இப்படித்தான் வாழவேண்டும்' என்று விரும்புவோர் இஸ்லாமை தம் வாழ்வியல் மார்க்கமாகவும் சட்டமாகவும் ஏற்று எக்கணமும் கட்டுப்பட்ட மக்களாக இறைவனுக்கு நித்தம் நன்றி செலுத்துகின்றனர். அதில் பல அனுகூலங்களில் ஒன்றே சாதியும் தொலைவது அல்லவா..?

suvanappiriyan said...

vanjore Bhai!

//இஸ்லாத்தை ஏற்ற இவர்கள் ஒரு செங்கல் சூளையில் மொத்தமாக முன் பணம் வாங்கி அவர்களிடத்தில் பொருளாதார அடிமைகளாக இருப்பது தெரிய வந்தது //

உலக கஷ்டத்திலிருந்தும் மறு உலக கஷ்டத்திலிருந்தும் மீண்ட நமது புதிய சகோதரர்களை பாசத்தோடு அரவணைப்போம்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//'கட்டுப்பாட்டுடன் இப்படித்தான் வாழவேண்டும்' என்று விரும்புவோர் இஸ்லாமை தம் வாழ்வியல் மார்க்கமாகவும் சட்டமாகவும் ஏற்று எக்கணமும் கட்டுப்பட்ட மக்களாக இறைவனுக்கு நித்தம் நன்றி செலுத்துகின்றனர். அதில் பல அனுகூலங்களில் ஒன்றே சாதியும் தொலைவது அல்லவா..?//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

suvanappiriyan said...

திரு கந்தர்வன்!

//இது தான் சங்க கால நிலை. தமிழர் சமயம் என்றென்றுமே உருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு இந்த சான்று போதும்.//

விக்கிபீடியா தரும் தகவல்:

வேதகாலக் கடவுள்கள்
வேதகாலக் கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேதகாலத்தில் உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்ட பல கடவுள்கள் தற்காலத்தில் அந்நிலையை இழந்துள்ளார்கள். அக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த கடவுள்கள் இன்று உயர்நிலையில் மதிக்கப்படுகிறார்கள்.
வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவர்களுள், இந்திரன், பிரஜாபதிஆகிய கடவுள்கள் தவிர, 8 கடவுள்கள் வசுக்கள் எனவும், 11 பேர் உருத்திரர்கள் எனவும், 12 பேர் ஆதித்தர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின்ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதாஎன்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.

“எல்லாவுலகங்களும் அரசனின்றி அச்சத்தால் எப்பக்கங்களிலும் சிதறுண்டிருக்குங்கால் அவ் வெல்லாவற்றையும் காத்தற் பொருட்டுப் பிரம்ம தேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன் அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு அரசனைப் படைத்தான்.”
-“சுக்கிர நீதி” என்ற வட மொழி நூல்

“பல்வேறு தெய்வங்களின் மனித வடிவமே மன்னன்”
-நாரத ஸ்மிருதி,- ஆ.சிவசுப்பிரமணியன்

அதாவது இறைவனுக்கு உரிய தகுதிகள் அனைத்தையும் நமது முன்னோர்களின் வேதங்கள் அரசனுக்கு தாராளமாக கொடுத்து வந்ததையே மேலே உள்ள வாக்கியங்கள் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த கருத்துக்களை சாதாரண மனிதன் சொன்னதாக சொல்லாமல் இறை பக்தியை ஊட்டி வேதங்களின் மூலமாக சொன்னதால் நம் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட்டது.

“மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தாரால் நடை பெறுகின்றதோ அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போலக் கண் முன்னே துன்பமுறுகின்றது’ என்று குறிப்பிடுகிறார்” (8.21) மனு

நம் நாட்டு சட்டத்தை அம்பேத்கார் தலைமையில்தான் வகுத்ததாக சொல்வார்கள். நமது நாடு முன்னேறாமல் இருக்க இதுவும் ஒரு காரணமோ!

suvanappiriyan said...

திரு கந்தர்வன்!

//இது தான் சங்க கால நிலை. தமிழர் சமயம் என்றென்றுமே உருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு இந்த சான்று போதும்.//

தம்புள்ள, இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் A9 பாதையில் இருக்கிறது. தம்புள்ளையில் ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், இன்று சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக உள்ளன. எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், அந்தக் குகைகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று தெரியவில்லை. கி.மு. முதலாம் நூற்றாண்டில் இருந்து, அதாவது பௌத்த மதம் பரவிய காலத்தில் இருந்து தான், குகையின் நவீன கால வரலாறு ஆரம்பிக்கின்றது. இன்றைக்கு அந்த குகைகளுக்குள் புத்தர் சிலைகளும், விஷ்ணு போன்ற இந்துக் கடவுளரின் சிலைகளும் மட்டுமே காணப்படுகின்றன.

இவை எல்லாம் பிற்காலத்தில், பௌத்த மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்டவை. தம்புள்ள குகைகளை (அது இன்று குகைக் கோயில் என்று அழைக்கப் படுகின்றது.) யுனெஸ்கோ பொறுப்பேற்று பராமரித்து வருகின்றது. ஆசியக் கண்டத்திலேயே, இது போன்ற ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த விசாலமான குகைகள் மிக அரிது என்று கூறப் படுகின்றது. உண்மையில் அது ஒரு குகை அல்ல. குறைந்தது ஐந்து குகைகள் ஒன்றுக்கொன்று தொடர்பாக உள்ளன. இந்தக் குகைகளை இணைக்கும் சுரங்கப் பாதைகள் உள்ளன. ஒரு காலத்தில், அந்தக் குகைகள் எல்லாம் ஒரு நகரம் போன்று உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். அதாவது மனிதர்கள் வாழ்ந்த பாதாள உலகம்!

வட இலங்கையில், நாகநாடு இருந்ததாக மணிமேகலை எனும் தமிழ்க் காப்பியம் கூறுகின்றது. நாகதீபத்தில் (இன்று: நயினா தீவு) இருந்த ஆலயம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், நாக தம்பிரான் கோயில்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் திருவிழா நடக்கும் பிரபலமான கோயில்கள் அவை. "இந்து மதத்தில் இல்லாத, இந்து மதம் அங்கீகரிக்காத," நாக வழிபாடு, நாகர்கள் என்ற இனத்திற்கு உரியது.

பொதுவாகவே, பல தெய்வ வழிபாட்டைக் கடைபிடிக்கும் இந்துக்கள் வாழ்ந்த பூமியில், ஒரே இறைவனை மட்டும் வழிபடும் மதத்தை பின்பற்றும் மக்கள் வாழ்ந்தனரா? இந்தியாவில், நாகலாந்து மாநிலத்தில் சேமே இன நாகர்கள் என்றொரு பிரிவுண்டு. சேமே இன நாகர்கள், பல தெய்வ வழிபாட்டைக் கைவிட்டு விட்டு, காலப்போக்கில் தாமாகவே ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள். வட-கிழக்கு இந்தியாவில் வாழ்ந்த Bnei Menashe பழங்குடி இன மக்களை, "தொலைந்து போன யூத இனக் குடிகளில் ஒன்று" என யூதர்கள் நம்புகின்றனர். இன்று அந்த மக்கள், இஸ்ரேலில் குடியேறி முழுமையான யூதர்களாக மாறி விட்டனர். இந்த தகவலும், நாகர்களின் ஓரிறைக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்கின்றது.

"ஓரிறைக் கோட்பாட்டை பின்பற்றிய நாகர்கள்", எதற்காக குகைகளில் வசித்தார்கள்? தொன்று தொட்டு நிலவி வரும் மூட நம்பிக்கை காரணமாகவே, நாகர்கள் குகை வாழ்வை தேர்ந்தெடுத்தனர் என்று, நாகர்கள் பற்றிய புராணக் கதைகள் கூறுகின்றன. அதாவது, வேட்டையாடும் கருடனிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்காக, நாகங்கள் பாதாள லோகத்தில் வாழ்வதாக ஐதீகம் ஒன்றுண்டு. கருடனும், பாம்பும் ஜென்ம விரோதிகள் என்பது எமக்கெல்லாம் தெரிந்தது தான். ஆனால், நாங்கள் இங்கே விலங்கினங்களைப் பற்றிப் பேசவில்லை. நாகர்கள் என்பது ஒரு மனித இனத்தை சேர்ந்தவர்களைக் குறிக்கும் பெயர். அப்படியானால், கருடன் என்பதும் இன்னொரு மனித இனத்தைக் குறிக்கும் பெயரா?

நாகர் இனம் போன்று, கருட இனத்தவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருப்பார்களா? ஆதி காலத்தில், கருட இனத்தவருக்கும், நாக இனத்தவருக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றிருக்குமா? யுத்தத்தில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்கும், மறைந்திருந்து தாக்குவதற்கும் வசதியாக, நாகர்கள் குகைகளில் வசித்திருப்பார்களா? ஆன்னிய ஆக்கிரமிப்பாளர்களினால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள், காடுகளிலும், மலைகளிலும் புகலிடம் தேடுவது சரித்திர காலம் தொட்டு நடந்து வரும் நிகழ்வு ஆகும். இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த நாகர் இன மக்களை அழிக்கத் துடித்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் யார்? அவர்களுக்கும் கருடனுக்கும் என்ன தொடர்பு? யார் அந்தக் கருடர்கள்? அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்?

-http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_28.html

சார்வாகன் said...

/எல்லோரும் தயாரா இருங்க இதோ நாத்திகத்தின் இவ்வளவு இணைய தொலைகாட்சி,.... பிரச்சாரத்திற்கு நாத்திகராக மாறியோர் பட்டியலை வெளியிடப் போகிறார் நண்பர் சார்வாகன்./

நண்பர் மஸ்தூக்கா
நான் இறை மறுப்புக் கொள்கை உடையவன் என்பதற்காக அனைவரும் அக்கொள்கைக்கு வரவைப்பதல்ல நம் நோக்கம். சில் மதங்களின் பிரச்சார உத்திகளான மத புத்தக்த்தில் அறிவியல்[ரொம்ப போர் அடிக்குது ஆகவே இப்போது இல்லை!!!!!!!!!],பரிணாம் கொள்கை எதிர்ப்பு என்ற தந்திரங்களை விளக்கி பதிவிடுகிறோம்.மத ரீதியான் ஆட்சி,சட்டங்கள் உலக் முழுதுமே கூடாது என்கிறோம்.ஜனநாயக் ஆட்சி,மதசார்பற்ற மனித உரிமை சட்டங்கள் உலக் முழுதும் வேண்டும் என்கிறோம்.

மதம் பின்பற்றும் பலருக்கு தங்கள் மதம் பற்றி போதிய விவரங்கள் தெரிவது இல்லை.மதம் என்பது கலாச்சார அடையாளம்,வாழ்வு முறை என்பதும் மத பிரச்சாரத்திற்கு அரசியல்,பொருளாதார வலிமை உள்ளதால் மட்டுமே நீடிக்கிறது.இந்த மத்ப் போட்டியில் பல மதங்கள் தங்களின் கெடுபிடியான கொள்கைகளை தளர்த்துவதை முன்னேற்றமாக்வே பார்க்கிறேன்.

மதப் போட்டியில் காணாமல் போன மதங்கள்,கடவுள்கள் ஏராளம்.இறை மறுப்பு மதங்களான பௌத்தம்,சமணம் கூட கடவுள்களை உருவாக்கி கொண்டன.

நம் நாட்டில் இறை மறுப்பாளர்கள் அவர்கள் பிறந்த மதத்தின் பெயரால்தான் அறியப்படுகிறார்கள்.ஆகவே இறைமறுப்பாளர்கள் மதத்திலும் ஒரு அமைதி காக்கும் சிறுபான்மையினர்.

மதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை.அதன் மூலம் அவர் வாழ்வு முறை மாறும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று அறிந்தே மாறுகிறார்.அவர்களால் புதிய சூழலுக்கு ஒத்துப்போக முடியவில்லையெனில்,சரியாக் நடத்தப் படாவிட்டால் மாறிய மதத்தில் நீடிப்பது கடினம். ஆகவே அவர்களை விமர்சிக்க நான் விரும்பவில்லை.

மதம் மாறிய சகோதரர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்!!!!!!!!!

நன்றி

Anonymous said...

மதம் மாறிய முஸ்லீம்களின் குழந்தைகளின் எதிர்காலம். .////


எதிர்காலம்

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அல்ஹம்துலில்லாஹ்..

இவர்கள் ஈருலகிலும் வெற்றி பெற துஆ செய்வோம்..

ராவணன் said...

ஓரிறை எனப்படும் உங்கள் இறைவனுக்கு உருவம் இருக்காது என்று எப்படி கூறுகின்றீர்கள். உங்கள் இறைவன் தனக்கென ஒரு உருவத்தைக்கூட ஏற்படுத்திக் கொள்ளமுடியாத அளவிற்கு பலவீனமானவரா? சக்தியில்லாதவரா?

நீங்கள் முகமது கூறுவதை மட்டுமே நம்புவீர்கள் என்றால் பேச ஒன்றும் இல்லை.

நீங்கள் அந்த முகமது மதத்தைத் சேர்ந்தவர்.முகமது அறிந்த அளவிற்கே நீங்களும் அறிந்திருப்பீர்கள். அதையும் தாண்டி இந்த உலகம் பரந்து விரிந்துள்ளது.

நீங்கள் அந்த இறைவனை தொழுவது உண்மை என்றால் அந்த இறைவன் வேறு எங்கும் தோன்றியிருக்க மாட்டார் என்று எப்படி நம்புகின்றீர்கள்? அந்த இறைவன் வந்து கூறினாரா?

உங்கள் இறைவனும் பலமுறை தூதர்களை இறக்கியுள்ளார். ஒரே ஒரு தூதரை சிறப்பாக ஏன் இறக்கமுடியவில்லை. அனைத்து மக்களையும் ஏன் நல்லவர்களாகப் படைக்கவில்லை.

இதைப் பற்றி உங்களுக்கும் தெரியாது, உங்களது மத நிறுவனர் முகமதுவிற்கும் தெரியாது.

கும்பலாகக் கூடி பஜனை செய்வதால் மட்டும் பொய் உண்மையாகாது.

அந்த ஏக இறைவன் நேரில் வந்தாலும் உங்களுக்குப் புரியாது, ஏனென்றால் அந்த இறைவனை நீங்கள் நம்பவில்லை, அந்த முகமது கூறுவதை மட்டுமே நம்பும் மூடர்கள்.

Jafar ali said...

ஸலாம் சகோதரர் சுவனப்பிரியன்! மாஷாஅல்லாஹ்! அருமையான பதிவு! ஜஸாகல்லாஹ் ஹைரன்!!!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ சையத் இப்றாம்ஸா!

//அல்ஹம்துலில்லாஹ்..

இவர்கள் ஈருலகிலும் வெற்றி பெற துஆ செய்வோம்.. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஜாபர் சஃபா மர்வா!

// ஸலாம் சகோதரர் சுவனப்பிரியன்! மாஷாஅல்லாஹ்! அருமையான பதிவு! ஜஸாகல்லாஹ் ஹைரன்!!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அனானி!

//மதம் மாறிய முஸ்லீம்களின் குழந்தைகளின் எதிர்காலம். .//////

அந்த குழந்தைகளுக்கு கூடிய வரை இவர் விளக்க முயற்ச்சிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் தங்களுடனோ அல்லது தங்களின் உறவினர்களிடத்திலோ அவர்கள் பெரியவர்கள் ஆகும் வரை வளர்க்கும் பொறுப்பை மதம் மாறிய நபர் கவனிக்க வேண்டும். அதற்கான செலவுகளையும் அவரே செய்ய வேண்டும்.

நீங்கள் கொடுத்த சுட்டியையும் பார்த்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணாமலை யுனிவர்சிடி வளாகத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மகளைய கழுத்தை அறுத்த ஒரு இந்து மதத்தவரை பற்றிய செய்தியை படித்தேன். இது எல்லா சமூகத்திலும் உள்ளதே!

suvanappiriyan said...

திரு ராவணன்!

//ஓரிறை எனப்படும் உங்கள் இறைவனுக்கு உருவம் இருக்காது என்று எப்படி கூறுகின்றீர்கள். உங்கள் இறைவன் தனக்கென ஒரு உருவத்தைக்கூட ஏற்படுத்திக் கொள்ளமுடியாத அளவிற்கு பலவீனமானவரா? சக்தியில்லாதவரா?//

இறைவனுக்கு உருவம் இல்லை என்று யார் சொன்னது? அந்த உருவத்தை பார்க்கும் சக்தி நமது கண்களுக்கோ அதை உருவகப்படுத்த நமது அறிவுக்கோ ஆற்றல் பத்தாது என்பதுதான் இஸ்லாத்தின் கொள்கை.

பிரம்மா, விஷ்ணு, முருகன் என்று பல உருவங்களில் இறைவன் இருப்பான் என்பதை எதை வைத்து முடிவு செய்தீர்கள். உங்கள் இந்து மத வேதங்களே ஓரிறையைத்தானே தூக்கிப் பிடிக்கிறது.

//நீங்கள் அந்த இறைவனை தொழுவது உண்மை என்றால் அந்த இறைவன் வேறு எங்கும் தோன்றியிருக்க மாட்டார் என்று எப்படி நம்புகின்றீர்கள்? அந்த இறைவன் வந்து கூறினாரா?//

அவர் அருளிய வேதங்களில் கூறியிருக்கிறாரே!

//உங்கள் இறைவனும் பலமுறை தூதர்களை இறக்கியுள்ளார். ஒரே ஒரு தூதரை சிறப்பாக ஏன் இறக்கமுடியவில்லை. அனைத்து மக்களையும் ஏன் நல்லவர்களாகப் படைக்கவில்லை.//

இறுதி தீர்ப்பு நாளில் இதனை இறைவனிடம் நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

//அந்த ஏக இறைவன் நேரில் வந்தாலும் உங்களுக்குப் புரியாது, ஏனென்றால் அந்த இறைவனை நீங்கள் நம்பவில்லை, அந்த முகமது கூறுவதை மட்டுமே நம்பும் மூடர்கள்.//

'இறைவனின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன. மறைவானதை அறிவேன்: என்று உங்களிடம் கூற மாட்டேன், நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன்: எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறெதனையும் நான் பின் பற்றுவதில்லை.' என்று முஹம்மதே! கூறுவீராக! 'குருடனும் பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!'
-குர்ஆன் 6:50

இங்கு இறைவன் உங்களைப் போன்ற ராவணன்களைப் பார்த்துதான் கேட்கிறான். பதில் சொல்லுங்கள்.

Anonymous said...

Mr Sarvahan,


///இந்த மத்ப் போட்டியில் பல மதங்கள் தங்களின் கெடுபிடியான கொள்கைகளை தளர்த்துவதை முன்னேற்றமாக்வே பார்க்கிறேன். மதப் போட்டியில் காணாமல் போன மதங்கள்,கடவுள்கள் ஏராளம்.இறை மறுப்பு மதங்களான பௌத்தம்,சமணம் கூட கடவுள்களை உருவாக்கி கொண்டன.///


கொள்கைகளை தளர்த்துவதால், மதங்களின் அத்திவாரமே தகர்ந்து போவது இயல்பு. இதற்கு மதங்கள் மட்டுமல்ல, மதங்களுக்கு அப்பாலான கொள்கைகளும் விதி விலக்கல்ல.

பௌத்தம் இறைமறுப்புக் கொள்கையல்ல. ஆத்திகக் கொள்கையுமல்ல. அதன் உறுதியற்ற கொள்கையினால் எத்தனையோ இடங்களில், தகர்ந்தும் போயுள்ளது.

///நம் நாட்டில் இறை மறுப்பாளர்கள் அவர்கள் பிறந்த மதத்தின் பெயரால்தான் அறியப்படுகிறார்கள்.ஆகவே இறைமறுப்பாளர்கள் மதத்திலும் ஒரு அமைதி காக்கும் சிறுபான்மையினர்.///


இறைமறுப்பாளர்கள் சிறுபான்மையாக இருப்பதனால், அமைதி.

நாடு பூராவும் இருந்தால், அதுவே தொல்லை.

தமிழ் , சிங்கள இறைமறுப்பாளர்கள், கம்யூனிசவாதிகள் இலங்கையிலும் இருக்கிறார்கள்.

இலங்கைக்கான தீர்வுப் பேச்சு என்று வரும்போது, அந்த இறைமறுப்புக் கொள்கையாளர்களால் அமைதியாக ஒன்றுபட முடியவில்லை. மதம், இனம் என்றுதான் அந்த இறைமறுப்பாளர்களிடமிருந்து துவேஷமாக, ஆக்ரோஷமாக வெளிவருகின்றது.

ஆக, இறைமறுப்பாளர்கள் மதத்திலும் அமைதி காப்பவர்கள் என்பது - நடைமுறையில் ஏற்க முடியவில்லை.

- Ismath

suvanappiriyan said...

சகோ இஸ்மத்!

//ஆக, இறைமறுப்பாளர்கள் மதத்திலும் அமைதி காப்பவர்கள் என்பது - நடைமுறையில் ஏற்க முடியவில்லை.

- Ismath//

பல பின்னூட்டங்களுக்கு அழகிய முறையில் நீங்கள் பதிலளித்து வருகிறீர்கள். வருகைக்கும் கருத்தக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

ஒரு மார்க்கத்தை தழுவுவதால் தனது முந்தய மதத்தில் இருந்த தீணடாமையும் சாதிக் கொடுமையும் நீங்குவதாக ஒருவன் நினைத்து மாறினால் அது வரவேற்கப்பட வேண்டுமல்லவா! எங்காவது சென்று குறைந்த பட்சம் மனிதனாகவாவது வாழட்டுமே!

உடன் நீங்கள் அதற்கு நாத்திகராக இருக்கலாம் என்பீர்கள். எவ்வளவுதான் நாத்திக வாதம் பேசினாலும் வீடுகள் சொந்தங்கள் என்று வரும்போது கடவுள் வழிபாட்டை தவிர்க்க முடியாது. நீங்கள் இந்து என்பதையும் மறுக்க முடியாது.

மதம் மாறும் ஒரு சிலர் இந்த தலைமுறையில் சிறிது சிரமத்தை ஏற்றுக் கொண்டாலும் அவர்களின் வாரிசுகளின் வருங்காலம் சிறப்பாகவே இருக்கும். இதற்கு உதாரணமாக தமிழக முஸ்லிம்களை சொல்லலாம். கிறித்தவர்களை சொல்லலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கிறித்தவத்திலும் சாதி புகுந்து விட்டது.

suvanappiriyan said...

திரு மயில்வாகனன்!

//தாங்கள் குறிப்பிட்டுள்ள அல்லோபநிஷத் 1:10 (அதர்வண வேதம்), சாம வேதம் – இந்திர அதிகாரம் 2 – மந்த்ரா 152 – புத்தகம் 2 – செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை, என்பதெல்லாம் எந்த வெளியீட்டில் உள்ளன? தெரியப் படுத்துங்கள்.//

ஜாகிர் நாயக்கின் புத்தகத்திலிருந்து எடுத்தது அது. அது அல்லாமல் முழுவதுமாக டவுன்லோட் செய்ய கீழே நான் கொடுத்துள்ள தளத்திற்க்குச் செல்லுங்கள். இதை நான் ஒரு தகவலுக்காக திரு களிமிகு கணபதியின் பின்னூட்டத்திற்காக பவிஷ்ய புராணத்தைக் குறிப்பிட்டேன். குர்ஆனை நிரூபிக்க வேறு பல ஆதாரங்கள் முஸ்லிம்களிடம் உண்டு. முந்தய வேதங்களில் இந்த செய்திகள் இருந்ததால்தான் புராணங்களிலும் அது பற்றிய செய்திகள் காணக்கிடைக்கிறது. எழுதுபவரின் மன நிலையைப் பொறுத்து புராணங்களின் கதையும் மாறும். எனவே இதை தகவலுக்காகத்தான் குறிப்பிட்டேன்.

இந்து வேதங்களின் மூலப்பிரதி நம்மிடம் கைவசம் இல்லாததும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு பெறும் தடங்கலாக உள்ளது. தெரிந்தே பலர் அதனை அழித்து விட்டனர்.

11.2 ThePrediction of Islam
[From thethird part of thePratisarga Parva.]Shri Suta Gosvamisaid: In thedynasty of kingShalivahana,there were tenkings who went tothe heavenlyplanets afterruling for over500 years. Thengradually themorality declinedon the earth. Atthat timeBhojaraja was thetenth of the kingson the earth.When he saw thatthe moral law of conduct wasdeclining he wentto conquer all thedirections of hiscountry with ten-thousand soldierscommanded byKalidasa. Hecrossed the riverSindhu andconquered overthe gandharas,mlecchas, shakas,kasmiris, naravasand sathas. Hepunished themand collected alarge ammount of wealth. Then theking went alongwith
Mahamada(Mohammad),the preceptor of mleccha-dharma,
and hisfollowers to thegreat god, LordShiva, situated inthe desert. Hebathed Lord Shivawith Ganges

water andworshipped him inhis mind withpancagavya (milk,ghee, yoghurt,cow dung, andcow urine) andsandalwoodpaste, etc. Afterhe offered someprayers andpleased him.SutaGoswami said:After hearing theking’s prayers,Lord Shiva said: Oking Bhojaraja,you should go tothe place calledMahakakshvara,that land is calledVahika and now isbeingcontaminated bythe mlecchas. Inthat terriblecountry there nolonger existsdharma. Therewas a mysticdemon named Tripura, whom Ihave alreadyburnt to ashes, hehas come againby the order of Bali. He has noorigin but heachieved abenediction fromme. His name isMahaoda and hisdeeds are likethat of a ghost. Therefore, O king,you should not goto this land of theevil ghost. By mymercy yourintelligence willbe purified.Hearing this theking came back tohis country....... That city is knownas their site of

pilgrimage, aplace which was
Madina
or freefrom intoxication.Having a form of aghost (Bhuta), The symptoms of my followers willbe that they firstof all will
cuttheir genitals
,have no shikha,but
havingbeard
.......Theref ore, they will beknown as
musalman
.Theintelligent king,Bhojarajestablished thelanguage of Sanskrit in threevarnas - thebrahmanas,kshatriyas andvaisyas - and forthe shudras heestablishedprakrita-bhasha,the ordinarylanguage spokenby common men.After ruling hiskingdom for 50years, he went tothe heavenlyplanet. The morallaws establishedby him werehonored even bythe demigods. The arya-varta,the pious land issituated betweenVindhyacala andHimacala or themountains knownas Vindhya andHimalaya. TheAryans residethere, but varna-sankaras resideon the lower partof Vindhya. Themusalman peoplewere kept on the

other side of theriver Sindhu. Onthe island of Barbara, Tushaand many othersalso the followersof Isamsiha werealso situated asthey weremanaged by aking or demigods.

பவிஷ்ய புராணத்தின் முழு பகுதியையும் டவுன்லோட் செய்ய இந்த தளத்துக்கு செல்லுங்கள். ஆங்கிலத்திலும் சமஸ்கிரதத்திலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

http://www.scribd.com/doc/36063659/Bhavishya

suvanappiriyan said...

http://www.cyberistan.org/islamic/prophhs.html#mahamad

The compiler of the Puranas, Mahrishi Vyasa, is highly honored among the Hindus as a great rishi and learned person. He was a pious and God fearing man. He also wrote the Gita and the Maha Bharat. Among the eighteen volumes of the Puranas is one by the title ‘Bhavishya Puran,’ literally meaning future events. The Hindus regard it as the Word of God. The prophecy containing Prophet Muhammad by name is found in Prati Sarg Parv III: 3, 3, Verse 5.
Before the English translation is presented, a note on the word Malechha that appears in the first part of verse 5 is in order. The word Malechha means a man belonging to a foreign country and speaking foreign language. This word is now used to degrade people meaning unclean or even worse. Its usage varies and depends on who is using it and for whom. Sir William Jones had great difficulty in recruiting a Pundit to teach him Sanskrit because he was considered unclean (Malechha). It was only after the direct intervention of Maharaja (King) Shiv Chandra that Pundit Ram Lochna agreed to teach him Sanskrit.
It is not known when this word began to be used in the derogatory sense, whether before the advent of Prophet Muhammad (s), after the conversion of Hindu King Chakrawati Farmas (of Malabar, located on the southwest coast of India) to Islam during the lifetime of the Prophet, soon after the arrival of Muslims in India (711 CE) or sometime later. Mahrishi Vyasa, the compiler of the Puranas, has defined a wise Malechha as “a man of good actions, sharp intellect, spiritual eminence, and showing reverence to the deity (God).
The translation of Verses 5-27 (Sanskrit text of the Puranas, Prati Sarg Parv III: 3, 3) is presented below from the work of Dr. Vidyarthi.

“A malechha (belonging to a foreign country and speaking foreign language) spiritual teacher will appear with his companions. His name will be Mahamad. Raja (Bhoj) after giving this Mahadev Arab (of angelic disposition) a bath in the 'Panchgavya' and the Ganges water, (i.e. purging him of all sins) offered him the presents of his sincere devotion and showing him all reverence said, 'I make obeisance to thee.' 'O Ye! the pride of mankind, the dweller in Arabia, Ye have collected a great force to kill the Devil and you yourself have been protected from the malechha opponents (idol worshipers, pagans).' ‘O Ye! the image of the Most Pious God the biggest Lord, I am a slave to thee, take me as one lying on thy feet.'

“The Malechhas have spoiled the well-known land of the Arabs. Arya Dharma is not to be found in that country. Before also there appeared a misguided fiend whom I had killed [note: e.g., Abraha Al-Ashram, the Abyssinian viceroy of Yemen, who attacked Mecca]; he has now again appeared being sent by a powerful enemy. To show these enemies the right path and to give them guidance the well-known Mahamad (Mohammad), who has been given by me the epithet of Brahma is busy in bringing the Pishachas to the right path. O Raja! You need not go to the land of the foolish Pishachas, you will be purified through my kindness even where you are. At night, he of the angelic disposition, the shrewd man, in the guise of a Pishacha said to Raja Bhoj, "O Raja! Your Arya Dharma has been made to prevail over all religions, but according to the commandments of ‘Ashwar Parmatma (God, Supreme Spirit), I shall enforce the strong creed of the meat-eaters. My follower will be a man circumcised, without a tail (on his head), keeping beard, creating a revolution, announcing call for prayer and will be eating all lawful things. He will eat all sorts of animals except swine. They will not seek purification from the holy shrubs, but will be purified through warfare. Because of their fighting the irreligious nations, they will be known as Musalmans (Muslims). I shall be the originator of this religion of the meat-eating nation."

suvanappiriyan said...

திரு பிரபு!

//பேரிச்சம் மரங்களாய் நட்டால் இந்த இந்திய மண் பாலைவனமாகும் என்பது தான்.
இந்த புரிதல் கூட இல்லாமல் தானியங்கள், பழம், பூ அனைத்தும் பேரிச்சம் பழத்தை போல் வயத்துக்கு தான் போகுது அதனால் பேரிச்சம் பழம் மட்டும் சாப்பிடுங்கன்னு அல்லது எல்லாம் பேரிச்சம் பழம் தான்னு. விவாதிப்பதில் அர்த்தமில்லை.//

ஒரு கிலோ விலையுயர்ந்த ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை பழங்களை ஒருவன் சாப்பிடுவதை விட விலை குறைந்த ஒரு பேரித்தம் பழத்தை ஒருவன் உட்கொண்டால் முன்னால் சொன்ன பழங்களை விட அதிக இரும்பு சத்தை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். சந்தேகம் இருநதால் மருத்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்.

இதற்காக நம் நாட்டில் பேரித்தம் பழம் பயிரிட தேவையில்லை. இறக்குமதி செய்து கொள்ளலாம்.:-)

Anonymous said...

இதை படிக்கும் இந்துக்கள் யாரும் பாபர் மசூதி இடித்ததற்காக வருத்தப்பட தேவை இல்லை . இடிக்கப்பட வேண்டிய ஒன்று தான் இடிக்கப்பட்டு இருக்கிறது. பிரிட்டிஷார் இந்த நாட்டை பிடித்து வைத்து கொண்டு ஜாதியையும், மதத்தையும் பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு ஆட்சி செய்தனர். அது போலவே இந்த கூட்டமும் சாதியை வைத்துகொண்டு இங்கே பிரிவினையை நடத்தி கொண்டு இருக்கிறது. அரசியல் கட்சியினர் தங்கள் கட்சிக்கு ஆள் சேர்ப்பது போல் மதத்திற்கு ஆள் சேர்க்கின்றனர். இந்துக்களே சாதி பிரிவினையை விடுகிறோம் என்று சொன்னால் கூட இந்த ஈன கூட்டம் விடாது. இந்துக்களின் சாதி பிரிவினையை வைத்தே இந்த மத வெறியர்களின் மத வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. எந்த முறையில் இவர்களை இந்த நாட்டில் வாழ விடாமல் தடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இவ்வளவு தைரியமாக மத மாற்றம் செய்கிறார்கள். இதையே ஒரு இஸ்லாமிய நாட்டில் பிற மதத்தினர் செய்ய அனுமதிப்பானா இந்த பீஜே. தன்னளவில் ஒழுக்கமாக இருப்பவனே பிறரை குறை சொல்ல வேண்டும். இந்த அளவு மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் இவர்கள் தங்களுக்கு எதிராக சில நேரங்களில் மக்கள் திரும்பும்போது ஈனத்தனமாக 'எங்களை வாழ விடவில்லை' என்று கூச்சல் இடுகிறார்கள். இந்த பதிவை படிக்கும்போது தோன்றுவது ஒன்று தான்.

மோடி செய்ததும் தவறு இல்லை.
இஸ்ரேல் செய்வதும் தவறு இல்லை.

Anonymous said...

Mr Anonymous


///இந்துக்களே சாதி பிரிவினையை விடுகிறோம் என்று சொன்னால் கூட இந்த ஈன கூட்டம் விடாது.///

சக இந்துக்களையே ஈனக் கூட்டம் என்று வசைபாடும்போது, அவர்களும் என்ன செய்வார்கள்? அவர்கள் அந்தக் கொடுமைகளிலிருந்து பிரிவதுதான் நல்லது என்று தாமே முடிவெடுக்கிறார்கள்.

///மோடி செய்ததும் தவறு இல்லை.
இஸ்ரேல் செய்வதும் தவறு இல்லை.///

அப்படியே, முஸ்லிம்கள் எங்கெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்களோ கொல்லப்படுகிறார்களோ, அவையும் தவறல்ல என்று உங்கள் பின்னூட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.

- Ismath

Anonymous said...

//சக இந்துக்களையே ஈனக் கூட்டம் என்று வசைபாடும்போது, அவர்களும் என்ன செய்வார்கள்? //
உலகம் எங்கும் உள்ள உங்கள் கூட்டத்திற்கு மண்டையில் மூளை என்ற ஒன்று கிடையாது என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான், அதற்காக இந்த அளவுக்கு இருக்க வேண்டுமா? நான் குறிப்பிட்டது யாரை என்பதை மூளை உள்ள யாரும் புரிந்து கொள்வார்கள். உங்களுக்கு புரியவில்லை என்றால் சொல்கிறேன் 'இந்துக்களே சாதி பழக்கத்தை விடுகிறோம் என்று சொன்னால் கூட மத வியாபாரம் செய்யும் இஸ்லாமிய வியாபாரிகளால் ஜாதியை விட முடியாது' இந்துக்கள் சாதி பழக்கத்தை விட்டுவிட்டால் இவர்களது மத வியாபாரம் படுத்து விடும். தவறு இருப்பது இந்துக்கள் மீது தான், இன்னும் சாதியை கட்டி கொண்டு இவர்கள் அழுவதால் தான் ஒரு சுய கருத்தற்ற கூட்டம் தான் மத வியாபாரத்தை இங்கே செய்து கொண்டு இருக்கிறது. பீஜே போன்றவர்களின் பிழைப்பு இந்த மத வியாபாரத்தில் தான் ஓடுகிறது. இந்த வியாபாரத்திற்கு உங்கள் கூட்டம் பயன்படுத்தும் கருவிதான் இந்த ஜாதி.

// அவர்கள் அந்தக் கொடுமைகளிலிருந்து பிரிவதுதான் நல்லது என்று தாமே முடிவெடுக்கிறார்கள்.//
கொடுமைகளில் இருந்து விடுபடுவதாக நினைத்து படு குழியில் அல்லவா விழுகிறார்கள்.

//அப்படியே, முஸ்லிம்கள் எங்கெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்களோ கொல்லப்படுகிறார்களோ, அவையும் தவறல்ல என்று உங்கள் பின்னூட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.//
அல்லாவின் பிள்ளைகள் செய்கின்ற குண்டு வெடிப்புகள், தற்கொலை தாக்குதல்கள், இது போன்ற மத மாற்றங்கள். உங்களால் கொல்லப்படுகின்ற அப்பாவிகளின் மரணம் இவையெல்லாம் உங்களுக்கு தவறு அல்ல என்று தோன்றினால் நீங்கள் சொன்னவை எனக்கும் தவறு அல்லதான். சரி ஒன்று சொல்லுங்கள் எந்த விதத்தில் நீங்கள் வஞ்சிக்கபடுகிரீர்கள். உங்கள் கூட்டம் இருக்கும் இடத்திற்கு நான் என் மதத்தை பரப்ப வந்தால் நீங்கள் என்னை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ப்பு கொடுப்பீர்களா. எங்களை வஞ்சிக்க வந்து விட்டான் என்று என்னை அடித்தே கொன்று விட மாட்டீர்களா. அதே நேரத்தில் உங்கள் இடத்திற்கு நான் வந்து என் சோலிய பார்த்துட்டு இருந்தால் நான் ஒழுங்காக இருக்கலாம் அல்லவா. அது தான் உங்கள் விசயத்திலும் நடக்கிறது. இந்த வஞ்சிக்கபடுகிரார்கள் என்பதை நீங்கள் பிறரை பார்த்து கூற கூடாது பிறர்தான் உங்களை பார்த்து வஞ்சகர்கள் என்று கூற வேண்டும். இஸ்மத் சார் உங்களுக்கு புரியலைனா தெளிவா சொல்றேன் 'முஸ்லிம்களை பார்த்து தான் வஞ்சகர்கள் என்று பிறர் கூற வேண்டும்"

Anonymous said...

Mr Anonymous,

///உலகம் எங்கும் உள்ள உங்கள் கூட்டத்திற்கு மண்டையில் மூளை என்ற ஒன்று கிடையாது என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான், அதற்காக இந்த அளவுக்கு இருக்க வேண்டுமா?///

எமது மண்டையில் மூளை இல்லை என்று புகழ்ந்ததற்கு, என் மனதார நன்றிகள் தங்களுக்கு உரித்தாகட்டும்!

///'இந்துக்களே சாதி பழக்கத்தை விடுகிறோம் என்று சொன்னால் கூட மத வியாபாரம் செய்யும் இஸ்லாமிய வியாபாரிகளால் ஜாதியை விட முடியாது'///

இந்து மக்களுக்கு எப்படி சாதிப் பழக்கத்தை விடலாம்? ஒருபோதும் விட முடியாது.

சாதி, வர்ணாசிரம் போன்றவை இந்து மதத்தில் பொதிந்திருப்பதால், நீங்கள் நினைத்தாலும் அந்த பழக்கத்தை மாற்ற முடியாது.

இஸ்லாமிய வியாபாரிகள் ஏற்றுக்கொண்டிருப்பது ஏகத்துவக் கொள்கை. அதை வாங்கவோ விற்கவோ முடியாது.

யாரும் அதில் இணையத்தான் முடியும், நீங்கள் உள்பட!

///கொடுமைகளில் இருந்து விடுபடுவதாக நினைத்து படு குழியில் அல்லவா விழுகிறார்கள்.///

ஓரிறைக் கொள்கையை ஏற்றவர்கள், படு குழியிலா அல்லது கரை சேர்ந்தவர்களா என்பதை அறிய, அவர்களிடமே கேட்டுப் பார்க்கலாமே!

///அல்லாவின் பிள்ளைகள் செய்கின்ற குண்டு வெடிப்புகள், தற்கொலை தாக்குதல்கள், இது போன்ற மத மாற்றங்கள். உங்களால் கொல்லப்படுகின்ற அப்பாவிகளின் மரணம் இவையெல்லாம் உங்களுக்கு தவறு அல்ல என்று தோன்றினால் நீங்கள் சொன்னவை எனக்கும் தவறு அல்லதான்///

பெரும்பாலும் இந்திய ஊடகங்கள்கூட, புலிகளை தமிழ்ப் பயங்கரவாதிகள் என்றுதான் ஊதும். இவர்கள் 90% இந்துக்கள்.

நீங்கள் சொன்ன குண்டு வெடிப்புகள், தற்கொலைத் தாக்குதல், நிராயுதபாணிகளான அப்பாவிகளைக் கொன்று குவித்தல், கப்பம் வாங்குதல் போன்ற மகாபாதகச் செயல்களுக்கு சொந்தக்காரர்கள்தான், இந்த தமிழ்ப் பயங்கரவாதிகள்.

எம்மவர் செய்யும் பாதகச் செயலும் இந்துத் தமிழ்ப் பயங்கரவாதிகள் செய்யும் பாதகச் செயலும் தவறென்றோ அல்லது தவறல்ல என்றோ தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தான்!

///உங்கள் கூட்டம் இருக்கும் இடத்திற்கு நான் என் மதத்தை பரப்ப வந்தால் நீங்கள் என்னை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ப்பு கொடுப்பீர்களா. எங்களை வஞ்சிக்க வந்து விட்டான் என்று என்னை அடித்தே கொன்று விட மாட்டீர்களா.///

இந்து மக்களுக்கே, இந்து மதத்தைப்பற்றி அறிய வாய்ப்பில்லை. இந்து மத மூல நூல்கள்கூட, ஒரு பிரிவார் மட்டுமே படிக்க அனுமதி. இந்த இலட்சணத்தில், வேறு மதத்தவர் படிப்பதாவது!

இருந்தாலும் சந்தோசம்! அத்தனை இந்து மத மூல நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால், எமக்கும் பயன் அடையலாம்.

செய்வீர்களா?

- Ismath

Anonymous said...

//எமது மண்டையில் மூளை இல்லை என்று புகழ்ந்ததற்கு, என் மனதார நன்றிகள் தங்களுக்கு உரித்தாகட்டும்!//



//இந்து மக்களுக்கு எப்படி சாதிப் பழக்கத்தை விடலாம்? ஒருபோதும் விட முடியாது.//
இதைத்தான் உங்களால் சொல்ல முடியுமே தவிர ஜாதியை விடுங்கள் என்று உங்களால் சொல்ல முடியாது. இந்துக்களின் ஜாதி பிழைப்பில் தான் உங்கள் மத பிழைப்பு ஓடிக்கொண்டு இருக்கிறது. இரண்டுமே ஈன பிழைப்பு தான், ஆனால் அந்த பிழைப்பிலும் நாங்க தான் உசத்தி என்று நீங்கள் மார்தட்டி திரிவது தான் கேவலமாக இருக்கிறது. ஜாதி பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல மக்களாக வாழுங்கள் என்று கூற உங்கள் மதத்தவருக்கு துணிவு இருக்கிறதா?

//சாதி, வர்ணாசிரம் போன்றவை இந்து மதத்தில் பொதிந்திருப்பதால், நீங்கள் நினைத்தாலும் அந்த பழக்கத்தை மாற்ற முடியாது.//
முகமதுவின் காலத்தில் இணையதளம் மூலமாகவா உங்கள் மதத்தை பரப்பினீர்கள்?. அன்று இருந்ததிற்கும் இன்றும் எத்தனை மாற்றங்கள். மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. பெரியாரை போல், அம்பேத்கரை போல் , நாராயண குருவைபோல் இன்னும் பலருக்கும் ஜாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் வரும்போது எல்லாம் மறையும். நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஜாதி ஒழிய வேண்டும் என்று விரும்பும், நிறுவன மதங்களை தேடி ஓடாத பலர் இங்கு இன்னும் இருக்கிறார்கள்.

//இஸ்லாமிய வியாபாரிகள் ஏற்றுக்கொண்டிருப்பது ஏகத்துவக் கொள்கை. அதை வாங்கவோ விற்கவோ முடியாது.//
அப்படி இல்லையே, இஸ்லாமியனாக மாறினால் சுவனத்தில் ஹூருல் ஈன்கள் என்ற கன்னிகைகள் கிடைப்பார்கலாமே, இந்த டீலுக்கு பெயர் என்ன. 'நீ இஸ்லாமியனாக மாறு, உனக்கு சுவனத்தில் அழகான கன்னிகைகளையும் மது வகைகளையும் அல்லா வைத்திருக்கிறார்' என்று கூறினால் அதற்கு என்ன பெயர்
//யாரும் அதில் இணையத்தான் முடியும், நீங்கள் உள்பட!//
நன் எதுக்கு சார் இணைய வேண்டும், நான் நல்ல வழியில் தான் இருக்கிறேன்

//ஓரிறைக் கொள்கையை ஏற்றவர்கள், படு குழியிலா அல்லது கரை சேர்ந்தவர்களா என்பதை அறிய, அவர்களிடமே கேட்டுப் பார்க்கலாமே!//
குழியில் விழுந்து கிடப்பவர்களிடம் எப்படி கேட்க முடியும், நீங்கள்தான் அவர்களை மேலே வர விடுவதில்லையே,

--Anandan--

Anonymous said...

//பெரும்பாலும் இந்திய ஊடகங்கள்கூட, புலிகளை தமிழ்ப் பயங்கரவாதிகள் என்றுதான் ஊதும். இவர்கள் 90% இந்துக்கள்.//
90% தானே இந்துக்கள், அதை எப்படி இந்து தீவிரவாதிகள் என்று கூற முடியும், அவர்கள் என்ன இந்து மதத்திற்காக போராடுகிறார்களா அல்லது கொலை செய்யும்போது உங்கள் ஆட்கள் 'அல்லாஹு அக்பர்' என்று அல்லாவிற்கு சமர்ப்பணம் செய்வதை போல் 'நாராயணா' என்றோ 'நமசிவாயா' என்றோ கூரிகொண்டோ செய்வதில்லையே, மேலும் எந்த கோவிலுக்கு உள்ளும் தங்கள் ஆயுதங்களை சேகரித்து வைத்து கொண்டு பதுங்கி இருப்பதில்லையே. நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் 90% இந்துகள் என்று, அப்படி என்றால் மீதம் இருப்பது வேற்று மதத்தினர், இதை எப்படி இந்து தீவிரவாதிகள் என்று கூற முடியும். நாட்டுக்காகவும் போராடுபவர்களுக்கும் மதத்திற்காக பிறரின் உயிரை எடுப்பவர்களுக்கும் வித்தியாசம் உண்டு.
ஆனால் உங்கள் கூட்டத்தில் எப்படி, எல்லாமே மதத்தை மையப்படுத்தி தான் நடக்கிறது. உங்கள் மசூதிகளில் இருந்து தான் தீவிரவாதத்தின் வேரே கிளம்புகிறது. பல மசூதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தார்கள், மசூதியின் இமாம் தீவிரவாதிகளுக்கு உதவினார். மசூதியில் இருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்று செய்திகளில் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். அவ்வளவு ஏன் சமீபத்தில் உலக பயங்கரவாதி பின்லேடன் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாட்டில் தொழுகை நடத்தியவர்கள் தானே நீங்கள்.

//நீங்கள் சொன்ன குண்டு வெடிப்புகள், தற்கொலைத் தாக்குதல், நிராயுதபாணிகளான அப்பாவிகளைக் கொன்று குவித்தல், கப்பம் வாங்குதல் போன்ற மகாபாதகச் செயல்களுக்கு சொந்தக்காரர்கள்தான், இந்த தமிழ்ப் பயங்கரவாதிகள்.
எம்மவர் செய்யும் பாதகச் செயலும் இந்துத் தமிழ்ப் பயங்கரவாதிகள் செய்யும் பாதகச் செயலும் தவறென்றோ அல்லது தவறல்ல என்றோ தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தான்!//

கொலையும் தீவிரவாதமும் எந்த வழியில் இருந்தாலும் அதற்கு என்னதான் நியாயமான காரணங்கள் கூறினாலும் அது தவறுதான். இந்து மதம் தீவிரவாதத்தை ஆதரிக்க வில்லை. இந்து ஒருவன் தீவிரவாதம் செய்தால் அவன் இந்துவே அல்ல. அது தவறு. கண்டிக்கப்பட வேண்டியது.

//இந்து மக்களுக்கே, இந்து மதத்தைப்பற்றி அறிய வாய்ப்பில்லை. இந்து மத மூல நூல்கள்கூட, ஒரு பிரிவார் மட்டுமே படிக்க அனுமதி. இந்த இலட்சணத்தில், வேறு மதத்தவர் படிப்பதாவது!//

உங்களை யார் படிக்க அனுமதிக்கவில்லை. உங்கள் உலக மகா அறிஞர் ஜாகிர் நாயக் மேடைக்கு மேடை வேதங்களில் இருந்தும் உபநிஷடங்களில் இருந்தும் வசனங்களை எடுத்து விடுகிறாரே அவரை யார் தடுத்தார்கள். தாரளமாக நீங்களும் படிக்கலாம்.

//இருந்தாலும் சந்தோசம்! அத்தனை இந்து மத மூல நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால், எமக்கும் பயன் அடையலாம்.//
நீங்கள் பயன் அடைந்தால் சந்தோசம். ஆனால் உங்களுக்கு நேர்வழி தெளிவாக காட்டப்பட்ட பிறகு காபிர்களின் நூல்களை படித்தால் அல்லாவும் இறை தூதரும் கோபித்து கொள்ள மாட்டார்களா. காபிர்களின் இறை வேத நூல்களினால் நீங்கள் பயன் அடைந்தால் அல்லாவுக்கு வருத்தம் வராதா

---Anandan---