Followers

Tuesday, February 28, 2012

நாசாவில் ஒரு சவுதி யுவதி!

சுற்றுச் சூழல் மற்றும் உயிர் தொழில் நுட்ப பிரிவில் டாக்டரேட் பட்டம் பெற்ற மஜ்தா அப்ராஸ் என்ற சவுதி பெண்மணி நாசாவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் லண்டன் பல்கலைக் கழகத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்.

நாசா வளைகுடா பிராந்தியத்தின் தலைவரான முஹம்மது இபுறாகிம் கூறும்போது 'மஜ்தா அப்ராஸ் வளைகுடா பகுதிகளில் சுற்றுச் சூழலை கண்காணிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டு அதில் வெற்றியும் பெற்றதற்காக இப்பதவியில் அமர்த்தப்படுவதாக' கூறினார்.




பதவி ஏற்பு விழாவில் அப்ராஸ் பேசும் போது 'எனது இந்த வெற்றிக்கு காரணமான மன்னர் அப்துல்லாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த வழிகாட்டியை இந்த நாடு பெற்றுள்ளது. பெண்கள் முன்னேற்றத்தில் மன்னர் அதீத அக்கறை காட்டுகிறார். பிரின்ஸ் நூரா பல்கலைக் கழகம் மூலம் இனி சவுதி பெண்கள் சமூகத்தில் சிறந்த இடத்தைப் பெற முடியும். மேலும் அதிகார மையமான சூரா கவுன்ஸிலிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாரத்தை பெண்களுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார் மன்னர். மேலும் எனது இந்த முன்னேற்றத்திற்கு பிரின்ஸ் துர்க்கி பின் நாஸரும் ஒரு காரணம். அவர் கேட்டுக் கொண்டதால்தான் சவுதி சுற்றுச் சூழல் அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு தலைவியாக இருக்கிறேன்.' என்றார்.

மேலும் மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தின் உயிரியல் பிரிவில் ஆசிரியராகவும் நுண்ணுயிரியியல், சுற்றுச் சூழல் என்று பல தலைப்புகளில் விரிவுரையும் ஆற்றியுள்ளார். ஜெத்தா பெண்கள் அமைப்பிலும், கேன்ஸர் சம்பந்தமான அல் ஈமான் குரூப்பிலும், எகிப்திய ஆராய்ச்சி சென்டரிலும், சவுதி எய்ட்ஸ் தடுப்பு அமைப்பிலும் உறுப்பினராக உள்ளார் மஜ்தா அப்ராஸ்.

நன்றி அரப் நியூஸ்
25-02-2012

எட்டு மணி நேரம் வேலை பார்க்கவே நமக்கு உலகத்து டென்ஷனும் வந்து விடுகிறது. இந்த பெண்மணி இத்தனை வேலைகளையும் சளிப்பில்லாமல் பார்ப்பது ஆச்சரியம்தானே!
முந்தய பதிவில் ஒரு அன்பர் இஸ்லாமிய ஆட்சி வந்தால் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் அமைதி போய் விடும் என்றும் பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்கு நான் சொல்லிக் கொள்வது.

பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, டுனீஷியா போன்ற எந்த நாடுகளும் இஸ்லாமிய ஷரீயாவை பின்பற்றவில்லை. அதன் ஆட்சியாளர்கள் மக்களை சுரண்டுவதிலும், தங்களின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எதையும் செய்யக் கூடியவர்களாகவுமே இருந்தனர். ஆட்சித் தலைமை மார்க்கப் பற்றுடன் இருந்தால் அதன் குடிமக்களும் மன்னனையொட்டி நேர்மையாக நடப்பர். நாட்டு மக்களும் சுபிட்சமாக இருப்பர். சதாமிலிருந்து கடாபியிலிருந்து அனைத்து தலைவர்களும் ஆடம்பர வாழ்விலும் சுகபோகங்களிலும் திளைத்தனர். நேரம் பார்த்து அமெரிக்காவுக்கு எண்ணெய் வயல்கள் மீது மோகம் வர நாட்டின் எதிர்ப்பாளர்களை பயன்படுத்திக் கொண்டு ஆட்சிகளையும் வீழ்த்தியது. ஆனால் அமெரிக்கா நினைத்ததற்கு மாற்றமாக புதிதாக ஆட்சியில் அமர்ந்த அனைத்து நாடுகளிலும் இஸ்லாமிய சட்டங்கள் பின் பற்றப்படுகின்றன. மக்களும் அதனை விரும்புகின்றனர். தங்களுக்கு அமைதியும் சுபிட்சமும் இஸ்லாமிய சட்டங்கள் மூலமாகத்தான் கிடைக்கும் என்று எண்ண ஆரம்பித்துள்ளனர். இனி வரும் காலங்களில் இந்த நாடுகளில் முழுமையான இஸ்லாமிய சட்டத்தால் அமைதி திரும்பும்.

சவுதி அரேபியாவில் கராமா என்ற அமைப்பு அல்வலீது பவுண்டேஷன் மற்றும் இளவரசி அமீரா துணையோடு 90000 டாலர் அன்பளிப்பில் தற்போது இயங்கி வருகிறது. முஸ்லிம் பெண் வழக்கறிஞர்களை உலக தரத்திற்கு உயர்த்துவதே கராமாவின் நோக்கம். உலக அளவில் மனித குலத்தின் கண்ணியம், மத சுதந்திரம், மத உரிமை, இஸ்லாமிய சட்டங்கள் போன்றவற்றில் முஸ்லிம் பெண்கள் சிறந்த இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இவ்வமைப்பு பாடுபடுகிறது. இந்த அமைப்பு வாஷிங்டனிலும் தனது கிளையை துவக்கியுள்ளது.

உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஓரளவு ஷரியத் சட்டத்தின் படி ஆட்சி நடைபெறும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இங்கு பெண்களுக்கு கல்வி கற்பதில், வேலைக்குச் செல்வதில் எந்த விதத்திலும் சவுதி அரசு தடை போடவிலலை. இஸ்லாமும் அதற்கு தடை போடவில்லை. ஆண்களை விட பெண்களே இன்று கல்வி கற்பதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். பெண்களுக்கு கல்வியைக் கொடுப்பதோடு அவர்களின் பாதுகாப்புக்கும் அரசு ஆவண செய்கிறது.

//The king’s latest announcement promised that women could vote in the next municipal elections, scheduled for 2015. Half of the municipal council’s seats are elected, and the other half are appointed by the government. The powers of the councils remain unclear and are not significant, though recent changes ensure that each municipal council can directly work with the local mayor and governor, and not only report to the minister of municipal and rural affairs in Riyadh.

The king also announced that women could become full voting members of the Shura Council, an appointed consultative body that has authority to review laws and question ministers but cannot propose or veto legislation and has no binding powers. In 2006 the Shura Council appointed six women as advisors, a number that has now risen to 12. //-BBC




2015ல் நடக்கவிருக்கும் தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமையையும் பெண்கள் பெற்றுள்ளனர். அதிகார மையமான சூரா கவுன்சிலிலும் அங்கததினர்களாயுள்ளனர் பெண்கள்.

நம் நாட்டில் என்ன செய்கிறோம். பெண் விடுதலை என்ற பெயரில் ஆணும் பெண்ணும் கல்லூரியிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் சேர விட்டதனால் பல இடங்களில் பிரச்னை. விபரம் தெரியாத இந்த கல்லூரி பருவத்தில் காதலில் விழுந்து தங்களின் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்பவர்களே அதிகம்.

வேலை பார்க்கும் இடங்களிலும் பெண்களுக்கு சில ஆண்கள் கொடுக்கும் டார்ச்சர் சொல்லி மாளாது. எனவேதான் இஸ்லாம் படிப்பதாக இருந்தாலும் வேலை பார்ப்பதாக இருந்தாலும் பெண்களையும் ஆண்களையும் தனித்தனியாக்கி விடுங்கள் என்கிறது. இதனால் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ என்ன பிரச்னை வந்து விடப் போகிறது?http://www.blogger.com/img/blank.gif அலுவலக நேரங்களில் பெண்களிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து மாறி தங்களது வேலையில் கவனத்தை செலுத்துவார்கள். கல்லூரிகளிலும் பெண்களின் பின்னால் சுற்றுவதை விட்டு விட்டு இவன் படிப்பில் கவனத்தை செலுத்துவான்.


உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக்கழகமான பிரினஸ் நூரா பல்கலைக் கழகத்தைப் பற்றி நான் முன்பு இட்ட பதிவு.

-------------------------------------------------------------

பெண் விடுதலை என்று கூறி நாம் பெண்களை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம் என்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த செய்தியை பார்ப்போம்.

ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார். பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).

இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.

மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்.

"இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில்மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
-dinamalar 23-02-2012

பேசாமல் அந்த கணவர்கள் சீட்டு குலுக்கிப் போட்டு மனைவியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

------------------------------------------------------------

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வாசலில், மகளை கழுத்தறுத்து கொலைமுயற்சி செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் வானமாதேவி பகுதியை சேர்ந்தவர் ஞானவள்ளி. இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் காதல் வயப்பட்டிருந்த நிலையில், இவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர்கள் உறவினர் பையனை நிச்சயம் செய்தனர். இதுதொடர்பாக, பெற்றோருக்கும், ஞானவள்ளிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு வந்த ஞானவள்ளியை, அவரது தந்தை கல்லூரி வாசலிலேயே கழுத்தை அறுத்தார். இதில், படுகாயமடைந்த ஞானவள்ளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு நிலவிவருகிறது. சிதம்பரம் போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dinamalar 20-02-2012

15 comments:

Anonymous said...

வெட்கமா இல்லையா உங்களுக்கு... இந்த நாட்டில், இந்திய மக்களில் ஆயிரமாயிரம் சாதனை மகளீர் இருக்கும் போது, ஏதோ ஒரு நாட்டு பெண் சாதனை பண்ணி இருக்குன்னு உச்சி முகர்ற கேடு கெட்ட பிறவியான உங்களை என்னன்னு சொல்றது.

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ...

நல்ல செய்தி..இஸ்லாமிய பெண்கள் எந்த அளவிலும் பின்தங்கி இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்...

suvanappiriyan said...

அனானி!

//வெட்கமா இல்லையா உங்களுக்கு... இந்த நாட்டில், இந்திய மக்களில் ஆயிரமாயிரம் சாதனை மகளீர் இருக்கும் போது, ஏதோ ஒரு நாட்டு பெண் சாதனை பண்ணி இருக்குன்னு உச்சி முகர்ற கேடு கெட்ட பிறவியான உங்களை என்னன்னு சொல்றது.//

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' - திருமூலர் மந்திரம.

திருமூலர் மந்திரத்தையே கேவலப்படுத்தும் வர்ணாசிரிம புத்தியை எங்கு கொண்டு சேர்ப்பது.

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜாமைதீன்!

//நல்ல செய்தி..இஸ்லாமிய பெண்கள் எந்த அளவிலும் பின்தங்கி இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Seeni said...

alhamthulillaah!

nalla karuththu!

Anonymous said...

உங்க வசதிக்கேற்ப்ப திருமூலரையும் இணை வைச்சுப்பீங்க போல் இருக்கு, அப்போ - உங்க வலைத்தளத்தின் முகப்பில்
யாதும் ஊரே.. யாவரும் கேளீர்... வாசகத்தை வைங்க. உங்களுக்கு ரெம்ப தேவைப்படும்.

suvanappiriyan said...

Anany!

//உங்க வசதிக்கேற்ப்ப திருமூலரையும் இணை வைச்சுப்பீங்க போல் இருக்கு, அப்போ - உங்க வலைத்தளத்தின் முகப்பில்
யாதும் ஊரே.. யாவரும் கேளீர்... வாசகத்தை வைங்க. உங்களுக்கு ரெம்ப தேவைப்படும்.//

திருமூலரின் கருத்தை எடுத்தாளவது எப்படி இணை வைத்தலாகும்? உலகின் அனைத்து மொழிகளுக்கும் இறைத் தூதரை அனுப்பியதாக குர்ஆன் சொல்கிறதே!

திருமூலரின் வரியை முகப்பில் போடடாலும் தவறில்லை. நம் முன்னோர்கள் ஏக இறைவனையே வணங்கியதற்கு சிறந்த சாட்சி திருமந்திரம்.

suvanappiriyan said...

//alhamthulillaah!

nalla karuththu!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ சீனி!

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//தயவு செய்து இந்தப் பதிவை வாசிப்பவர்களில் 30 -35 பேர் இப்பதிவிற்கு உங்கள் பல்வேறு கள்ள ஐடிகளின் கள்ள ஓட்டுகளை போட்டு, இப்பதிவை தமிழ்மண முகப்புப் பக்கத்தில் சிறந்த பதிவாக "மகுடம்" சூட்டி விடாதீர்கள். அதற்கான தரமே வேறு. Please ...!//

கழிவறை பதிவுக்கு முதல் ஓட்டாக போட்டு மகுடம் ஏற ஆசைப்பட்டீர்களே! அப்போ அதுவும் கள்ள ஓட்டா! ஒன்று தெரியுமா? முந்தய பல பதிவுகளுக்கு எனது பதிவுக்கு நானே ஓட்டு போட்டதில்லை. ஓட்டு போடுங்கள் என்று யாரிடம் சொல்வதும் இல்லை.

திரு தருமி!

//நிச்சயம் போராட்டம் வெடித்தே தீரும் - சரியான தருணத்திற்காகவே அது காத்திருக்கிறது.//

உங்கள் ஆசை நிறைவேறப் போவதில்லை. ஏனெனில் எகிப்து, டுனீஷியா, லிபியா,ஈராக் போன்ற நாட்டு தலைவர்களெல்லாம் இஸ்லாத்துக்கு எதிரான ஆட்சியை நடத்தி வந்தனர். எனவே அந்த மக்களால் தண்டிக்கப்பட்டனர். சவுதி நிலைமை வேறு. இங்கு இருக்கும் பூசல் சொற்பமான ஒரு சில ஷியாக்களால் உண்டாக்கப்படுவது. அதை எப்படி சமாளிப்பது என்பது சவுதி அரசுக்கும் தெரியும்.

மிகப்பரந்த செல்வம் கொழிக்கும் நாட்டில் சில மாற்றுக் கருத்துக்கள் இருக்கவே செய்யும். அதையும் சரி செய்வார்கள் ஆட்சியாளர்கள்.

எனவே பழையபடி ஹூருல்ஈன்கள், கில்மான்கள் என்ற பல்லவியை ஆரம்பிக்கவும். ஆட்சி மாறும் கனவு பலிக்காது.

சார்வாகன் said...

ஸலாம் சுவனன்

சவுதி பெண் நாசான்வின் மண்டல் ஆய்வுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்து நல்லதுதான்.ஒருமாதம் நாசாவில் பயிற்சி எடுத்து சவுதியில்தான் பணியாற்றுவார்.இம்மாதிரி குழுக்கள் உலக முழுதும் உண்டு.
இருப்பினும் சவுதி பெண்களுக்கு இவர் முன்னுதரணம் என்பதில் மாற்ருக் கருத்து இருக்க முடியாது.

இந்திய பெண்களில் இதே போல் சாதனையாளர்களான் கல்பனா சாவ்லாவை ஒப்பிட்டு இருந்தால் பதிவு நிச்சயம் பாராட்டப்பட் வேண்டிய ஒன்றுதான்.
//பெண் விடுதலை என்று கூறி நாம் பெண்களை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம் என்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த செய்தியை பார்ப்போம்.

1.ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

2. சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வாசலில், மகளை கழுத்தறுத்து கொலைமுயற்சி செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது //


நீங்கள் குறிப்பிட்ட இரு சம்பவங்களில் குறிப்பிட்ட பெண்களை ஒப்பிடிவது நாகரிகமாக் இல்லை இதே போல் இங்கேயே உங்கள் மதம் சார்ந்த குடும்பங்களில் நடக்கவே நடக்காது என கூற முடியுமா!.நல்லவன்,கெட்டவன்,விபச்சாரம்,கள்ளக்காதல் எல்லா குடும்பங்களிலும் நடக்கும்விடயமே. கணவன் வெளிநாட்டில் இருந்தால் வீட்டில் கேமராவை வைத்துக் கண்கானிக்க்லாமா என்ற விடயத்தையும் பி.ஜே தொலைக்காட்சியில் விவாதித்தார் என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.

இன்னும் பல விடயங்கள் எ.கா தர முடியும் எனினும் நாகரிகமாகவே விவாதிப்பது நம் வழக்கம்.பத்வின் இறுதிப் பகுதிக்கு கண்டனங்கள்!!!!!!!!!!!!!!!!.

suvanappiriyan said...

சலாம் சார்வாகன்!

//இந்திய பெண்களில் இதே போல் சாதனையாளர்களான் கல்பனா சாவ்லாவை ஒப்பிட்டு இருந்தால் பதிவு நிச்சயம் பாராட்டப்பட் வேண்டிய ஒன்றுதான்.//

சகோதரி கல்பனாவின் சாதனை நமக்கு முன்பே தெரிந்ததே! சவுதி பெண்களை மத முத்திரையினால் தடுக்கிறார்கள் என்ற வாதத்துக்கு எதிர் வாதமாகத்தான் இந்த பெண்ணின் சாதனையை குறிப்பிட்டேன். இந்த செய்தி நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது

//நீங்கள் குறிப்பிட்ட இரு சம்பவங்களில் குறிப்பிட்ட பெண்களை ஒப்பிடிவது நாகரிகமாக் இல்லை இதே போல் இங்கேயே உங்கள் மதம் சார்ந்த குடும்பங்களில் நடக்கவே நடக்காது என கூற முடியுமா!.நல்லவன்,கெட்டவன்,விபச்சாரம்,கள்ளக்காதல் எல்லா குடும்பங்களிலும் நடக்கும்விடயமே.//

நாம் என்று அனைவருக்கும் பொதுவாகவே அந்த செய்தியை பகிர்ந்துள்ளேன். இஸ்லாமிய குடும்பங்களிலும் இருபாலார் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் ஓடிப்போன செய்திகள் இதற்கு முன் வந்துள்ளது. இங்கு நான் மதத்தைக் காட்டி சொல்லவில்லையே! இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி என்பதற்காகத்தான் தினமலரின் செய்தியைக் கொடுத்தேன்.

வயசுப் பருவத்தில் சரியான கண்டிப்பு இல்லாவிட்டால் எல்லா குடும்பத்து பெண்களும் தவறுவதற்கு வாய்ப்பு கோஎஜூகேஷனில் உள்ளது. இதை அனுமதித்து விட்டு பிறகு என் குழந்தையின் வாழ்க்கை பாழாகி விட்டதே என்று கூக்குரலிடுவதில் என்ன பயன். 'நோய் முதல் நாடி' என்று வள்ளுவரே கூறியிருக்கிறாரே! அதைத்தான் எடுத்துக் காட்டினேன்.

எனவே தவறு செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது பலஹீனமானவர்கள் தவறிட வாய்ப்பிருக்கிறது என்பதையே சொன்னேன். இது அனைத்து மதத்திற்க்கும் பொருந்தும்.

suvanappiriyan said...

தருமி சார்!

//அப்படியே இருந்தாலும், எங்க அல்லா & நபி மீது நம்பிக்கை வந்துட்டா அவுக இஸ்லாமியர் தானே. எப்டி லாஜிக்?//

நீங்க சார்வாகனுக்கு சப்போர்ட் பண்ணாமல் எனக்கு பாயிண்ட் எடுத்துக் கொடுக்கிறீர்களே! இது நியாயமா

//சவுதி ஷாரியா ஆட்சி சரி எனில் இந்துத்வ ஆட்சியும் சரிதான்.///

சீக்கிரம் கொண்டு வாங்க சார்வாகன். அப்போதான் சூத்திரர்கள் எல்லாம் வெகுண்டு இஸ்லாத்தை நோக்கி ஓடி வர வசதியாக இருக்கும். எங்கள் பணியும் குறையும்.:-)!

suvanappiriyan said...

அட..அட...அட...

இஸ்லாமிய எதிர் பதிவு என்றால் எங்கெங்கிருந்தெல்லாமோ ஆட்கள் குழுமுறாங்களேப்பா...

படிப்பறிவில்லாத ஒரு சமூகத்தில் பிறந்து வளர்ந்தவரைப் பற்றி ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தமிழகத்தில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சும்மா சொல்லப்படாது... முகமது நபி அவர்களே கலக்குறீங்க....

உங்களை தலைவராக பெற்றதற்கு உண்மையிலேயே பெருமைபடுகிறேன். ஆன்மீகம் கலந்த அருமையான வாழ்க்கைத் திட்டத்தை தந்திருக்கிறீர்கள். பரிபூரண நிம்மதியும் உங்களால் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. அது கிடைக்காதவர்கள் உங்கள் மீது புழுதி வாரி தூற்றுகின்றனர். அறியாத மக்கள். இந்த தலைமுறை இல்லா விட்டாலும் இவர்களின் அடுத்த தலைமறையாவது உங்களை விளங்கிக் கொள்வர். அது வரை பொறுப்போம்.

Anonymous said...

//உங்களை தலைவராக பெற்றதற்கு உண்மையிலேயே பெருமைபடுகிறேன். ஆன்மீகம் கலந்த அருமையான வாழ்க்கைத் திட்டத்தை தந்திருக்கிறீர்கள். பரிபூரண நிம்மதியும் உங்களால் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. அது கிடைக்காதவர்கள் உங்கள் மீது புழுதி வாரி தூற்றுகின்றனர். அறியாத மக்கள். இந்த தலைமுறை இல்லா விட்டாலும் இவர்களின் அடுத்த தலைமறையாவது உங்களை விளங்கிக் கொள்வர். அது வரை பொறுப்போம்.//

சுவனப்பிர்யன்-
உங்கள் மீது வீசப்படும் புழுதியானது, நீங்கள் பிறர் மீது வீசியது தான். பிற மத நம்பிக்கைகளுக்கும் பழக்கவழக்கங்களும் தவறு என்றும். நாங்களே உயர்ந்தவர்கள் உண்மையானவர்கள் என்று பிற மதங்கள் மீது நீங்கள் வீசும் புழுதிகள் தான் திருப்பி உங்கள் மீது வீசப்படுகின்றன. உங்களுடையதை நீங்கள் பொத்திக்கொண்டு 'உங்க மார்க்கம் உங்களுக்கு எங்க வழி எங்களுக்கு' என்று உங்கள் நபியின் வழியில் நடந்திருந்தால் யாரும் உங்கள் மீது எதையும் தூற்ற போவதில்லை. என்னவோ நீங்கள் மட்டுமே ரொம்ப உயர்ந்த வாழ்க்கை வாழ்வதாகவும் அது கிடைக்காமல் மற்றவர்கள் பொறாமையில் வெந்து பேசுவதாகவும் நினைத்தால் அது உங்கள் அறியாமை. உங்கள் நபி பிற வேதங்களை காப்பி அடித்து இஸ்லாமை பரப்பும் முன்பே உலகில் நாகரீகங்களும் இருதிருக்கின்றன நல்ல வாழ்க்கை முறைகளும் இருந்திருக்கின்றன. ஓவராக சீன் போட வேண்டாம் சார். உங்களை சரி படுத்தி கொள்ளுங்கள். பிறகு இந்த ஊத்தை புலம்பல்களை புலம்புங்கள்.

Anonymous said...

http://www.inneram.com/news/central-east-news/18-years-without-salary-tamilan-rescued-from-saudi-arabia-4240.html

சவூதியில் கடந்த பதினெட்டு வருடங்களாக அடிமையாகவும், அநாதரவாகவும் அலைகழிக்கப்பட்ட அப்பாவி தமிழகத் தொழிலாளி ஒருவருக்கு ஒருவழியாகத் தீர்வு கிடைத்துள்ளது.

சவூதியின் ஹைல் மாகாண ஆளுநர் இளவரசர் சவூத் பின் அப்துல் முஹ்சின் என்பவருடைய தலையீட்டால் பெரியசாமி என்னும் அந்தத் தமிழர் கஃபீல் எனப்படும் பொறுப்பாளரிடமிருந்து 85,000 ரியால்களை ஒட்டுமொத்தச் சம்பளமாகப் பெற்று ஊர்திரும்ப வழி ஏற்பட்டுள்ளது. ஜெத்தாவிலுள்ள இந்தியத் துணை தூதரகத்தில் அவருக்கான இத்தொகையை ஷாம்லி காவல் நிலையத்தார் ஒப்படைத்துள்ளனர்.

45 வயதான பெரியசாமியை துன்பத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்க உதவிய ஹைல் மாகாண கவர்னருக்கு இந்திய கான்சல் ஜெனரல் ஃபைஸ் அகமது கித்வாய் வெளிப்படையாக தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். "ஹைல் மாகாண கவர்னரின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், பெரியசாமி தன் துன்பச்சுரங்கத்தின் முடிவில் ஒளியைப் பார்த்திருக்க முடியாது," என்று ஃபைஸ் அஹமது சொன்னார்.

நன்றியறிவித்தலின் அடிப்படையில் ஹைல் மாகாண கவர்னருக்கு ஒரு தனிப்பட்ட கடிதத்தை அனுப்ப உள்ளதாகவும் ஃபைஸ் அகமது கூறினார். "ஷாம்லி காவல்நிலைய அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கடிதம் வழங்கப்படும்"

தமிழ்நாட்டின் காரைக்குடியைச் சேர்ந்த பெரியசாமி சவூதி அரேபியாவுக்கு வேலைக்காக வந்த போது, எல்லோரையும் போல அவருக்கும் கனவுகள் இருந்தன.1994ல் ஆடு மேய்க்கும் வேலைக்கு வந்தவருக்கு, கல்யாணமாகி ஒரேஒரு வருடம் தான் ஆகியிருந்தது.

கஃபீல் எனப்படும் அந்தப் பொறுப்பாளரின் பொறுப்பற்ற தனத்தால் கடந்த 18 வருடங்களாக சம்பளமோ, விடுமுறையோ கிடைக்கவேயில்லை பெரியசாமிக்கு. மன அழுத்தத்தால் ஒருமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

பெரியசாமியின் அவலநிலைக்குத் தீர்வு ஒரு சவூதிக்காரர் மூலம் வந்தது. மனிதாபிமானமிக்க அந்த மற்றொரு சவூதிக்காரர் பெரியசாமியின் நிலையை ஹைல் கவர்னர் இளவரசர் சவூத் இப்னு அப்துல்முஹ்சின் கவனத்திற்கு எடுத்துச்சென்றார். இந்தியத் தூதரக அதிகாரி தட்சினா மூர்த்தியும் சக இந்தியச் சகோதரனான பெரியசாமிக்காக உதவ முன்வந்தார்


கவர்னரின் ஆணைகளின் படி விசாரணைக்குப் பின்னர், அந்தப் பொறுப்பாளர் ஊதியம் மற்றும் விமான ச் சீட்டை செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் ஊதியங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் பெரியசாமியை உடனடியாக இந்தியா திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தப் பொறுப்பாளர் ஒரு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை . இறுதியாக தனக்கு சுமார் ஒரு இலட்சம் ரியால் வரவேண்டியது இருந்தும் 85,000 கிடைத்தால் போதும் என்று பெரியசாமி தெரிவித்ததன் பேரில் அத்தொகையை பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜெத்தா துணைத் தூதரகம் தமிழ்நாட்டில் பெரியசாமி குடும்பத்தாருடன் தொடர்பை ஏற்படுத்தியது."ஜெத்தாவில் உள்ள சில சமூக ஊழியர்கள் எங்களுக்கு அவர் குடும்பத்தார் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க உதவினர்.பெரியசாமியின் இளைய சகோதரர் கண்ணப்பன் ஊரில் அவரை வரவேற்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார் என்று துணைத் தூதர் ஃபைஸ் அகமது கூறினார்.

மேலும் இந்திய சமூகஊழியர்கள் சிலர் இந்தியா செல்லும் பெரியசாமிக்கு உதவ 30,000 சேகரித்து உதவுகின்றனர்.

கடவுச் சீட்டும் இல்லாத பெரியசாமிக்கு இந்திய தூதரகம் ஒருவழிப் பயணத்திற்கான சிறப்பு அனுமதி அட்டையை வழங்கியுள்ளது


Read more about சவூதி: 18 வருடங்கள் சம்பளமில்லாமல் அடிமையாகவும் அநாதரவாகவும் இருந்த தமிழர் மீட்கப்பட்டார். at www.inneram.com