Followers

Tuesday, March 05, 2013

மதுரையில் அத்வானிக்கு குண்டு வைத்தவர்கள் யார்?

திருச்சி:ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஒரு மோசடி வழக்கிற்காக திருச்சியை சேர்ந்த குபேரனை விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆம்! கடந்த மாதம் மும்பையிலிருந்து புதுவையை நோக்கி வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட வெடிக்குண்டு தொடர்பு பற்றியும் அதனோடு தொடர்புடைய நபர்களை பற்றியும் அவன் வெளியிட்ட வாக்குமூலம் தான் அது. உடனே இது பற்றிய தகவலை வெடிக்குண்டு வழக்கை விசாரிக்கும் புதுவை மாநில சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தந்தனர். புதுவை போலீசாரும் இதுபற்றிய தீவிர விசாரணையில் இறங்கினர். புதுவையை சேர்ந்த அந்த நபர்களுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) குபேரனை விசாரிக்க திருவண்ணாமலை ஆரணியை அடுத்த மட்டதாரியை சேர்ந்த தீனதயாளன் மற்றும் மட்டாசிமங்கலம் துறையூர் சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது. இதுதொடர்பாக புதுவை சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். விசாரணையில் ரயிலில் வெடிக்குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளான் சிவசங்கர். அவனிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அவன் வீட்டிலிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

‘குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும’ விசாரணையில் கூறி இருக்கிறான் இந்த சிவசங்கர். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா? போன்ற விவரங்களை சேகரிக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.

இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீனதயாளனை விசாரித்தபோது மதுரையில் பா.ஜ.க அத்வானியின் ரதயாத்திரை வழியில் வைக்கப்பட்ட பைப் வெடிக்குண்டுடன் தொடர்புடையவன் என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்தும் இதன் பின்ணணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக மதுரை சம்பவத்தை வைத்து பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சி திட்டம் வெளிப்பட்ட நிலையில், அதுபோன்ற இந்த சம்பவமும் காவி பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் பத்திரிக்கை தர்மம் அனைத்தும் கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும். மேலும் கைது செய்யப்பட்டவரின் முகவரி இல்லாத அமைப்பு என தலைப்புச் செய்தியாக, விவாத பொருளாக தங்களின் முஸ்லிம் விரோத போக்கை தீர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

Source: புதிய பாதை

http://www.deccanherald.com/content/316055/one-more-held-planting-bomb.html

தகவல் அனுப்பித் தந்த சகோ ஆஷிக்குக்கு நன்றி!

18 comments:

அஞ்சா சிங்கம் said...

குபேரன் என்ற பெயரில் தங்கி இருந்த நபர் கைது ..
அவர் உண்மையான பெயர் ஷாரூக் கான் ..
எப்படி உங்கள் கண்களுக்கு விசேஷ திறமை உள்ளது ............:-)

Anonymous said...

//இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் பத்திரிக்கை தர்மம் அனைத்தும் கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும். //
200% correct

பாகிஸ்தான்காரன் said...

தலைவரே.
அண்மையில் அமெரிக்காவின் தூண்டுதலாலும் , இஸ்ரேலின் பின்புலத்தினாலும், பிலிபைன்ஸ்ஸின் முஸ்லீம் கிளான் குழு மலேசியாவின் சபா மானிலத்தின் சில தீவுகளில் புகுந்து 8 மலேசிய பொலீஸாரினை கொன்றிருந்தார்கள்.
பதிலுக்கு முஸ்லீம்களால் ஆளப்படும் மலேசிய அரசாங்கத்தின் ராணுவம் 52 கிளான் முஸ்லீம்களை போட்டுத்தள்ளியது.
இன்னமும் அங்கே சூழ் நிலை நல்ல நிலையை அடையவில்லை. தயவு செய்து இது குறித்தும் ஆராய்ந்து பதிவிடவும்.
நன்றி

பாகிஸ்தான்காரன் said...


தலைவரே
சிரியாவின் அண்மைய நிலையையும் ஆராய்ந்து எழுதவும். அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் சதியால் இறந்த சிரிய மக்களின் எண்ணிக்கை வருத்தத்தை உண்டாக்கிறது. 80000 முஸ்லீம்களின் உயிர் என்பது சும்மாயில்லை.
இன்னமும் இன்னிலை நீடிக்கத்தான் வேண்டுமா? இதுக்கு ஒர் முடிவில்லையா ? தீர்வுத்திட்டம் குறித்த உங்களின் எண்ணத்தை பகிருங்கள். முடிந்தால் பான் கீ மூனுக்கு கடிதம் எழுதவும்

பாகிஸ்தான்காரன் said...

முன்னாள் பாப்பரசர் 16ஆம் பென்டிக் முஸ்லீம் என்பது போல ,முன்னாள் முன்னாள் பாபரசர் 23 அருளப்பர் சின்னப்பர் இந்து என்பது போல ஏன் இந்த //சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் // ஆகியோர் பவுத்தர்களாய் இருக்கக்கூடாது ?
கடைசியில் அமைதியை போதித்த புத்தரினை பின்பற்றுபவர்களும் தீவிரவாதத்தில் குதித்துவிட்டனரா?

Unknown said...

அருமை. அடிக்கடி எழுதுங்கள்

Anonymous said...

ஷாலி says:
March 7, 2013 at 6:04 am

மதமாற்றத்தை ஒழிக்கவேண்டும் என்று கூறுகிறார்களே தவிர, சாதி தீண்டாமையை ஒழிக்கிறோம்,யாரும் மதம் மாறதீர்கள் என்று சொல்வதற்கு எவரும் இல்லை.காரணம் வர்ணத்தை,சாதியை எவரும் மாற்ற முடியாது.மண்ணில் பிறந்ததிலிருந்து மண்ணுக்குள் போன பின்பும் அது தொடரும்.மிஷநரிகள் என்று ஆத்திரப்படுவதில் அர்த்தம் உண்டா? தாழ்த்தப் பட்ட மக்களுக்கு குலக்கல்வியை மட்டுமே கொடுத்தது ஹிந்து மதம். கிறித்தவர்கள் பள்ளிக்- கூடக்கல்வியை கொடுத்து வளப்படுத்தினார்கள்.
உதாரணமாக,மிஷனரிகள் முதலில் வந்து இறங்கிய கேரளாவிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்ட ஈழவர்களுக்கும்,பழங்குடிகளுக்கும் கல்விக்கண்ணை திறந்தார்கள்.இன்று இந்தியாவில் கல்வி அறிவு பெற்ற மாநிலங்களில் முதல் இடங்களை பிடிக்கும் மக்கள் இவர்கள்தான்.கல்விக்கடவுள் சரஸ்வதியை பெற்ற மக்களில் கைநாட்டுத்தான் அதிகம்.ஹிந்து ஆதிக்கவாதிகள் கூறுவதுபோல்,மிஷனரிகள் ஆசைக்காட்டியோ,அச்சுறுத்தியோ இதைச்செயயவில்லை.ஹிந்து மதத்தின் கொடூரமான சாதீய சமூக அடக்குமுறைதான் இதற்குக்காரணம். உதாரணமாக,கேரளாவில் நம்யூதிரி,நாயர்,கம்மாளர்,ஈழவர்,புலையர் இவர்களுக்குள் என்ன சகோதரத்துவம் இருந்தது? தொலைவில் வரும் புலையரை ஒரு நம்யூதிரி பார்த்துவிட்டாலே, நம்யூதிரியை தீட்டுப்படுத்திய குற்றத்திற்காக அந்த புலையரை கொலையும் செய்யலாம்.ஈழவப்பெண்கள் இடுப்புத்துணியுடன்தான் திரியவேண்டும்.மார்பை மறைக்கக்கூடாது.அவர்களை “டாப்லெஸ் மாடல்”களாக பார்த்து மகிழ்தது உயர் சாதிக்கூட்டம்.மீறி மார்பை மறைத்த பெண்ணின் மார்பை அறுத்து ஒரு ஓலை கொட்டானில் வைத்து சந்தையில் மக்கள் பார்வைக்கு வைத்து எச்சரிக்கை செய்தது.”முலைக் கொட்டான் சந்தை” என சரித்திரம் பேசுகிறது. மதம் மாறிய பிறகே அவர்கள் குப்பாயம் அணிய முடிந்தது.பின்னோருமுறை திருவாங்கூர் மகாராஜா வீதியில் ஊர்வலம் வந்தபோது,அந்த மன்னனைப் பார்த்து,”இதுவரை எங்கள் மேலே உள்ளதைத்தானே பார்த்தீர்கள்! இப்ப கீழே உள்ளதையும் பார்த்துக்கொள்!” என்று ஆடையை தூக்கிக்காட்டினார்களாம். தாழ்த்தப்பட்ட மக்கள் வெறுக்கும் அளவிற்கு அவர்களை அடிமையாக வைத்திருந்தது ஹிந்து மதம்.ஹிந்துப்பெரியவர்கள் பள்ளிக்கூடம்,மருத்துவமனை எதுவும் ஏழைகளுக்கு கட்டவில்லை.ஆனால் ஏராளமான கோயில்களைக் கட்டி தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேலை கொடுத்தனர். என்ன வேலை அர்ச்சகரையும்,உற்ச்சவரையும் தூக்கி சுமக்கும் வேலை,பந்தம் கொளுத்துதல், மேளம் அடித்தால்.இந்த வேலைக்குப் பெயர்தான் “வெட்டி வேலை” சம்பளம் கிடையாது.கோவில் பிரசாதம்,சுண்டல் கிடைக்கும்.இப்படி பிறப்பின் பெயரில் மக்களை அடிமைகளாய் வைத்திருந்த வேளையில் அந்நிய ஆபிரகாமிய மதங்கள் இவர்களை விடுவித்தபடியால் ஏற்ப்படும் இயல்பான கோபம்தான் உங்களது. நன்றாக கோபப்படுங்கள்.உங்களிடம் நியாயம் உள்ளது. அன்று வெள்ளை க்ரைஸ்தவர்கள் ஆபிரகாம் லிங்கன் மீதும் உங்களைப்போலவே கடும் கோபம் கொண்டனர். அன்றைய க்ருஸ்துக்களும் இன்றைய க்ருஷ்ணாக்களும் ஆத்திரம் கொள்ள அடிப்படைக்காரணம் அடிமை விடுதலைதான்.
Reply

Anonymous said...

ஷாலி says:
March 4, 2013 at 12:37 pm

 சி. ஜெயபாரதன் says:
March 4, 2013 at 1:21 am
// Veer Savarkar was a bloody Liar regarding Gandhi’s murder Plot. He was indirectly responsible for Gandhi’s murder. //
அய்யா ஜெயபாரதன் அவர்களே! நீங்கள் என்ன விளக்கம் கொடுத்தாலும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.குண்டு வைப்பது,கொளுத்துவது,கொலை செய்வது என்ற கலாச்சார மரபை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.மகாத்மா காந்தி கொலையைப் பற்றி நீங்கள் சொல்கிறீர்கள்.இதற்க்குப்பின்னால் காலா காந்தி என்னும் கருப்புக்காந்தி பெரும்தலைவர் காமராஜ் அவர்களை உயிருடன் கொளுத்த முயன்ற கூட்டமும் இதுதான்.மறக்கப்பட்ட வரலாற்றை சிறிது புரட்டிப்பார்ப்போம்.
1966 ம் வருடம் நவம்பர் 7 ந் தேதி டில்லியில் சங்கராசாரியர்களின் தலைமையில் சாதுக்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்வோர் பாராளுமன்றத்தின் மீது ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கத்தின் ஆதரவில் தாக்குதல் நடத்துகின்றனர். பசுவதை தடைச்சட்டம் அமுலாக்கக் கூறி வீதிகளில் சூலாயுதம்,மற்றும் பல ஆயுதங்களுடன் சாதுக்கள் களம் இறங்குகின்றனர். பெட்ரோலை கொண்டு வானொலி நிலையம்,தபால் அலுவலகம் கொளுத்தப்படுகிறது. காமராஜர் அவர்கள் பகல் உணவு முடித்துவிட்டு ஓய்வாக இருந்தபொழுது அவரது வீட்டை சூழ்ந்து கொண்டு தீ வைத்து கொளுத்தி கொல்ல முயன்றனர்.அதில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தார். காமராஜரை கொல்ல முயற்சிக்க காரணம்,சில ஆட்களுக்கு முன்பு அவர் பேசிய பேச்சு.
“பணக்காரனும் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொல்கிற வர்களும்தான் சோசலிசத்திற்கு எதிரிகள். பிறப்பால் உயர்ந்தவர்கள்தான் ஏன் சோசலிசத்தை எதிர்க்கின்றார்கள் தெரியுமா? பணக்காரர்களோடு சேர்ந்து சோசலிசத்தை வர விடாது தடுத்துவிட்டால் தங்களுடைய சாதியின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். நாம் விட்டுவிடுவோமா என்ன?” —நவ சக்தி. 3-11-1966.
தீ வைப்பு கொலை முயற்சிக்கு பிறகு காமராஜர் அவர்கள் சேலத்தில் நடந்த கூட்டத்தில், “ குறிப்பாக,அவர்களுக்கு பயம் என்னைப்பற்றித்தான்.இந்தக் காமராஜ் தான் சோசலிச சமூதாயத்தினை அடைந்தே தீருவேன் என்று சொல்கின் றான். அவன்தான் அதிலே தீவீரமாக இருக்கின்றான் என்று நினைக்கிறார்கள். என் வீட்டுக்கு தீ வைக்கின்றான். ஆனால் நான் இதற்க்கெல்லாம் பயப்படமாட்டேன்.கடமையை செய்தே தீருவேன்.” -நவ சக்தி. 15-12-1966.
கைப் புண்ணிற்கு கண்ணாடி கேட்கும் திருவாளர்கள். ஸ்ரீ மான் க்ருஷ்ணா-பாண்டியன் வகையாறாக்கள் காந்தியையே தூக்கி கனம் பார்த்தவர்கள், ஏழைத் தமிழன் எம்மாத்திரம்? அய்யா ஜெய பாரதன் அவர்களே! அவுங்க இதுக்கெல்லாம் செரிப்பட்டு வரமாட்டாக….ஊதுற சங்க ஊதுங்க! விடியும்போது விடியட்டும்!

Anonymous said...

ஷாலி says:
March 9, 2013 at 8:31 am

// புத்தர் தசாவதாரங்களில் ஒன்றாக வணங்கப்படுகிறார்;புத்தர் வைதிக சமயத்தில் வணங்கப்படுகிறார் என்பதை உப்பு மிளகாய் மசாலாக்கள் கலந்து முன் வைப்பவர்கள் பௌத்த சாஸ்திரங்களில் ஸ்தோத்திரங்களில் மற்றைய வைதிக சமய தைவங்கள் புத்தரை வணங்குபவராகக் காண்பிக்கப்படுதலையும் காய்த்தல் உவத்தலில்லாமல் யோஜிக்கலாமே!!!//

பேஷா யோஜிக்கலாம்! புத்தரால் சொல்லப்பட்ட மூல பவுத்தம் ஹீனயானம் என்னும் தேரவாதம்.இது பாமர மக்கள் பேசும் பாலி மொழியில் எழுதப்பட்டது.பிற்காலத்தில் ஆந்திரா ஆரியர் நாகர்ஜுனரால் அறிமுகப்படுத்தப்பட்டதே மகாயானம்.இது ஆரியர்களின் தேவ பாஷையான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. புத்தரின் ஹீனயானம் கடவுளைப் பற்றி பேசவில்லை.நாத்திகம் பேசுகிறது.மகாயானர்களின் பவுத்தம் ஆத்திகம் பேசுகிறது.”மகாயான பவுத்தம் மூட நம்பிக்கைகள் கொண்ட கழிவுப்பொருள்களுக்கு ஒரு வாகனமாக மாறி விட்டது” என்கிறார்,தேவி பிரசாத் சட்டோபாத்யாய அவர்கள். ,புத்தரின் உண்மை வரலாற்றை மறைக்க பல புத்த அவதாரங்களை உருவாக்கினார்கள்.புத்தருக்கு முன்பு 24 புத்த அவதாரங்கள் வந்து விட்டதாகவும் இறுதியாக வந்தவர்தான் கௌதம புத்தர் என்கிறது “மகாவம்சம்”
ஆரிய நாகர்ஜுனரால்,மனித புத்தர் விஷ்ணு அவதாரமாக “போதி சத்துவர்”கடவுளாக மாற்றப்பட்டார். இந்த போதி சத்துவரைத்தான் வைதிக தைவங்கள் வணங்குவதாக திரு.க்ருஷ்ணாஜி குறிப்பிடுகிறார்.//ஒன்று க்ரந்த வ்யூற சூத்ரம்…இந்த சூத்ரத்தை வாசிக்கையில் ஆர்ய அவலோகிதேஸ்வரர் என்ற போதி சத்துவரை தர்மராஜனான யமன்,சிவபெருமான்,உமாதேவி,போன்றோர் எல்லாம் ஸ்துதி செய்வதை வாசிக்கலாம்.// சூத்திர மனிதன் புத்தனை ஆரிய அவலோகிதேஸ்வராக மாற்றி விட்டார்கள்.
ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மச்ச புராண ஸ்லோகம் “மத்சய குர்மோ வராஹங்க் நரஸிம்ஹோ த வாமஹ் ராமோ ரமசோ கிருஷ்ணங்கா புத்தா கல்கி இதிகாக்ரம்திஹ்!”

ஆனால் இதில் பிரபல்யமான பரசுராம அவதாரம் இந்த லிஸ்டில் காணப்படவில்லை.ஏன்? பவுத்தத்தை உண்டு ஜீரணிக்க புத்தரை உள்ளே சேர்த்து பரசுராமரை வெளியே தள்ளி தசாவதார கணக்கு காட்டப்பட்டது.கிறிஸ்தவத்தில் சவுல் என்னும் பவுல் ஒரு கடவுள் கொள்கையை திரித்துவமாக மாற்றியதுபோல்,இங்கு ஆரிய நாகர்ஜுனரும் திரிபிடகமாக மாற்றிவிட்டார். அங்கு திரித்துவம்,இங்கு திரிபிடகம் (தர்மகயா,சம்போக கயா,நிர்மாண கயா) அதாவது,படைக்கப்பட்ட கடவுள்.பரிசுத்த ஆவி,மனித உருவெடுத்த மைந்தன்.இயேசுவின் பிறப்பு அற்புதம் போலவே புத்தர் பிறப்பும்,
புத்தரின் தாய் நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் வாடினார்.ஒருநாள் கனவில் விண்ணிலிருந்து ஒரு வெள்ளை யானை அவர் இடுப்பின் வழியாக வயிற்றினுள் செல்வதாக கனவு கண்டார்.வெள்ளை யானை தெய்வத்தன்மை பொருந்தியதால் தெய்வச்செய்தி சொல்லப்பட்டதாக நினைக்கிறாள்.சிறிது நாளில் கருவுற்று புத்தரை பெற்றெடுக்கிறாள்.புத்தர் மாயாவின் இடுப்பின் வழியாகப் பிறந்தார் என்பது மகாயான நூல்கள் தரும் செய்தி.அவ்வாறு குழந்தை பிறந்தபொழுது வானில் பல அதிசயங்கள் தோன்றுகின்றன.பல அறிஞர்கள் வந்து, உலகின் ரட்சகன் மண்ணில் வந்து விட்டார். என்று வாழ்த்துகின்றனர். பெத்தலேகமில் நடந்த மாதிரியே இங்கும்.இயேசுவின் மறு வருகையை எதிர்பாற்பதுபோல் மைத்ரேய புத்தனின் வருகையையும் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.மகாயான விஷ்ணு ஹிந்து புத்தனுக்கும், கிறிஸ்தவத்திற்க்கும் தொடர்பு இருப்பதாலோ என்னமோ, இங்குள்ள கிருஸ்தவர்கள் முழுக்க முழுக்க ஹிந்துக்கிருஸ்தவர்களாக நடைமுறை வாழ்கையை அனுசரிக்கின்றனர்.இதனின் எச்ச சொச்சம் தான் திரு.பாண்டியன் குறிப்பிடும் தலித் கிருஸ்துவர்கள்,நாடார் கிருஸ்தவர்கள், தேவாலயத்திலும்,கல்லறையிலும் இட ஓதுக்கீடு.
ஆரியம்- திராவிடர்களையும்,புத்தர்களையும் ஜைனர்களையும்,சீக்கியர்களையும்,நாஸ்திகர்களையும்,இறுதியாக இந்திய கிறிஸ்தவர்களையும் உண்டு செரித்து உலாத்துகிறது.

ஸ்ரீ க்ருஷ்ணாஜி! இனியாவது சமாதானமாக போங்கள்.க்ரைஸ் தவ மதத்தோடு ஐக்கியப் படுங்கள்.”சமாதானம் பேசுபவர்கள் பாக்கியவான்கள்.” பைபிள் சொல்கிறது. “உயர்ந்த கருத்துக்கள் நாற்புரத்திலிருந்தும் வரட்டும்.”உங்க ரிக் வேதம் சொல்கிறது.அப்புறம் என்ன ஒன்னுக்குள்ளே ஒன்னு.ஒரு சின்ன பிரச்சினை உள்ளது அதை சரி செய்தீர்கள் என்றால் அமோகமாக இருக்கும்.பத்து அவதாரத்தில் ஒரு அவதாரமான பலராமன் அவதாரத்தை உருவி விட்டு புத்தனை சேர்த்துக்கொண்ட மாதிரி,ஏதாவது ஒரு அவதாரத்தை கழட்டி விட்டுவிட்டு, “இயேசுஸ்வரர்”அவதாரத்தை சேர்த்துக்கொண்டீர்கள் என்றால் எங்கேயோ போய்விடுவீர்கள்.அப்புறம் என்ன?ஐரோப்பாவிலிருந்து அலாஸ்கா வரை “அகண்ட ஹிந்துலோகஸ்த்தான்”.இறுதியில் சமூகத்தின் கூட்டு மனசாட்சிப்படி முஸ்லிம்களுக்கு “கபர்ஸ்தான்” கொடுத்துவிடலாம். ஆபிரகாமிய மதங்களை ஒழித்த பிறகு அனைவரும் கோரசாக பாடலாம்.” ஜெகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே! உங்கள் அகமகிழ பாடுகின்றோம் கேளுங்கள் இதையே!……”

ஷர்புதீன் said...

தினமும் அரைமணி நேரம் என்று உங்களது / மற்றவர்களது / தமிழ்மணத்தை / சார்ந்த இடுக்கைகளை படித்து வருகிறேன். என்னை சுற்றி நடப்பவைகளை கவனிப்பவன் என்ற ஒன்று மட்டுமே இதற்க்கான காரணமாக இருக்கிறதே அன்றி வேறு காரணங்கள் இல்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். காரணம் அறிய விரும்பினால் எனது 2013 மார்ச் மாத இடுக்கையை பார்க்கவும்!

Anonymous said...

poovannan says:
March 10, 2013 at 9:25 am

ஹிந்து சீக்கியர் என்று ஒரே அடிதடியாக இருக்கிறதே
சீக்கியரை கேட்டு விட்டு பேசலாமே அவர்கள் ஹிந்துக்களா என்று
இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொள்ளப்பட்ட ஹிந்துக்களை விட பல மடங்கு அதிகமானோர் சீக்கிய காலிஸ்தானி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.காளிஸ்தானி தீவிரவாதிகள் பற்றி சிறிதளவு தெரிந்தவர்களுக்கு,படித்தவர்களுக்கு கூட இது புஇர்யும்
பஞ்சாபில் பல மாவட்டங்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.குறிப்பிட்ட மாவட்டங்களில் 48 சதவீதத்தில் இருந்து 32 சதவீதம் ஆகி விட்டது என்று ஆதாரத்துடன் பல புத்தகங்கள் அப்போது வெளிவந்தன.பேருந்தில் இருந்து சீக்கியரை இறக்கி விட்டு விட்டு மீதம் இருந்த ஹிந்துக்களை மொத்தமாக கொள்வதும் நடந்திருக்கிறது
RSS இந்திராவின் மரணத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ராஜிவை ஆதரிதததால் தான் பா ஜ கா வெறும் இரண்டு இடங்கள் 1984 தேர்தலில் பெற்றது.சீக்கியர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் பல rss காரர்களும் அடக்கம்
இது டெல்ஹியில் வெட்டுபட்ட செக்கை குடும்பங்கள் அனைத்திற்கும் தெரியும்
அவர்களில் ஒருவராக இருந்து பின்பு பிரதமர் ஆன மன்மோகன் சொல்வதை கொஞ்சம் பாருங்கள்

http://www.rediff.in/election/1999/sep/02man.htm

The first information reports lodged at different police stations in Delhi prove that several RSS men were involved in the riots, Dr Singh said.

He dismissed as “BJP propaganda” reports that Sikh voters had asked him during campaigning how they could vote for a party that had “blood on its hands”.

He said the BJP had no right to dictate from where he could contest. “How can they prevent me from contesting an election just because I am a Sikh?” he challenged.

Anonymous said...

poovannan says:
March 10, 2013 at 9:40 am

மன்மோகன் இப்படி கூறியதால் அதிர்ச்சி அடைந்த எதிராக நின்ற பா ஜ க வேட்பாளர் மல்ஹோத்ரா ,மன்மோகனின் மூன்று மகள்களும் சீக்கியர் அல்லாதவரை திருமணம் செய்தவர்கள்,அவர் சீகியரே அல்ல என்று எல்லாம் பிரச்சாரம் செய்தார்.சீக்கியரின் மேல் இருந்த டில்லி மக்களின் வன்மம் (புது டில்லியை வெடிகுண்டு தினமும் வெடிக்கும் இடமாக சீக்கிய தீவிரவாதிகள் ஆக்கி வைத்திருந்ததால் )அவரை தோல்வி அடையவும் செய்தது
குஷ்வந்த் சிங்க் போன்றோர் மன்மோகன் சிங் வெல்ல வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.அவர் எங்கும் rss சீக்கியர்களுக்கு உதவியது என்று எழுதியது கிடையாது.பல ஹிந்துக்களின் உதவியை தான் குறிபிட்டுள்ளார். அவர் ஒரு rss எதிர்ப்பாளர். டெல்லியில் பா ஜ க வலுவான நிலையில் உள்ள கட்சி.காங்கிரஸ் கட்சியை விட அடிப்படை தொண்டர்கள் அதிகம் உள்ள கட்சி. அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சீக்கியர் கூட இறக்காமல் டெல்லி கலவரத்தை தடுத்திருக்க முடியும்.
பங்கு பெற்ற அவர்களை பாதுகாவலர்கள் என்று வாய் கூசாமல் அதற்குள் சொல்ல முடிவதை விட சீக்கியர்களுக்கு வேறு எதுவும் வேதனை தராது.பஞ்சாபில் காலிச்டானியர்கலால் ஹிந்து தலைவர்கள்,rss தலைவர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டார்கள்

இருவது ஆண்டுகளுக்கு முன் டெல்லிக்கு சென்றிருக்கிறீர்களா
ஹோட்டல்கள் ஏழரைக்கு மூடப்படும்.மேல ஒரு மணி நேரம் எட்டரை வரை இருக்க கட்டணம் நூறு ரூபாய் வசூலிப்பர்.தீவிரவாதிகளின் பயம் காரணமாக எட்டரைக்கு அனைத்து கடைகள்,உணவகங்கள் மூடப்படும்.மதுவிலக்கு இருக்கும் குஜராத்,மணிப்பூர் மாநிலங்களில் கூட இரவில் மது கிடைத்து விடும்.ஆனால் டெல்லியில் வாய்ப்பே இல்லை.கஷ்டப்படவனுக்கு தான் தெரியும் அப்ப இருந்த டெல்லியின் நிலை .இப்ப கூட கனடாவில் காலிஸ்தான் ஆதரவாக விளையாட்டு போட்டிகளின் போது கொடிகள் தென்பட்டது

http://www.indianexpress.com/news/dont-allow-antiindia-activities-in-canada/639440/

It also comes close on the heels of the 25th anniversary of the bombing of Air India plane ‘Kanishka’ in 1985 which claimed the lives of 329 people in which some Khalistani extremists living in Canada were believed to be involved.

Anonymous said...

poovannan says:
March 10, 2013 at 9:48 am

http://www.sikhmuseum.com/bluestar/newsreports/840613_1.html

The United News of India news agency said about 1,200 Sikh deserters from Bihar state have surrendered in neighboring Uttar Pradesh state and given up their efforts to reach Punjab. UNI said all major groups of deserters have been accounted for, although a few smaller groups are still at large.

Military sources said at least 2,000 Sikh soldiers deserted their army bases in eastern, northern and western India last weekend and headed for Punjab state and New Delhi to protest against the army attack on the seventeenth century shrine.

At least 46 deserters were killed in gun battles with military and police pursuers, 600 were arrested and most of the others surrendered, said the sources, who spoke on condition they not be identified.

Thirteen rebel Sikh soldiers were reported killed and 33 seriously wounded in a pitched battle yesterday with loyal troops in Agartala, in the northeastern state of Tripura.

Rebel soldiers captured near Bombay disclosed they had planned to take over the airport in the western port city, prompting Indian Airlines to alert all stations against possible hijack attempts.

ராணுவ கலகத்தில் ஈடுபட்ட சீக்கிய சிப்பாய்கள் ஹிந்து உயர் அதிகாரிகளை கொன்று ஆயுதங்களோடு போராடினார்கள்.கிருத்துவ ,இஸ்லாமிய அதிகாரிகளை கொல்லாமல் விட்டு விட்டார்கள்.
அப்போது இணையம் கிடையாது.அந்த காலத்தைய செய்தி தாள்களை இணையத்தில் ஏற்றினால்,எத்தனை ஆயிரம் ஹிந்துக்கள் பஞ்சாபில் கொல்லப்பட்டார்கள்,டெல்லியில் வெடிகுண்டு எத்தனை முறை காலிஸ்தான் தீவிரவாதிகளால் வைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் இந்திரா இறந்த பிறகு எத்தனை ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை பற்றிய உண்மைகள் விளங்கும்

Anonymous said...

poovannan says:
March 10, 2013 at 10:08 am

The Indian government paid no attention to Sikh concerns and began arresting Sikhs blindly. About 150,000 Sikhs were arrested and many were killed- still not a single demand was met. Sant Jernail Singh said, “There is no solution to Sikhs’ problems without freedom.” Riots between Hindus and Sikhs broke out. When Sikhs were killed, police took no action but when Hindus were killed, not only victims were punished but also innocent Sikhs were killed. In other states of India many Sikhs were killed. All Sikhs traveling in trains and buses were stopped and killed. In Haryana, Hindus were called from villages by beating drums to kill Sikhs. Every train was stopped and Sikhs were dragged out and killed. At this point Sant Jarnail Singh was assured that the Indian government was making plans to attack the Golden Temple at Amritsar. He addressed the Sikhs and advised them to be ready to defend the Golden Temple. He said, “The day Indian government attacks the Golden Temple, foundation of Khalistan will be laid.”

When the movement got out of the government’s control, Punjab was handed over to the military. The Indian government had planned to attack Golden Temple in the first week of June because Martyr day of Fifth Guru, Guru Arjan Dev Ji was on June 6th and Indian government knew there was going to be a big Sikh gathering. The Government knew that Sikhs would gather in thousands. Punjab was totally under military control. A curfew was announced. Telephone lines were cut and all press reporters were asked to leave Punjab. Punjab was completely disconnected from the rest of the world. The entire state was surrounded by troops and all paths were blocked. Nobody was allowed to enter or leave. All the Sikhs were being harassed all over India.

http://www.searchsikhism.com/rss.html

Punjab from other parts of the country, so that the Hindu population can overtake the native Punjabi population. The theory is that if there are more Hindus than Sikhs in Punjab that during the elections more people will claim Hindi as their first language instead of Punjabi. By numeric superiority and by law, Hindi would eventually become the first language of Punjab. By eclipsing Punjabi as the official language, Punjab would become a Hindi State. But, it goes much deeper then that. It will also impact education policy. No Punjabi means Gurmukhi Script will not be taught resulting in less people learning Gurbani and fewer Sikhs. Punjabi is the Sikhs’ native tongue and Sri Guru Granth Sahib Ji is written in Gurmukhi script. This is a classic cultural genocidal tactic.
இவர்கள் ஏதோ குட்டி குட்டி இயக்கங்கள் கிடையாது. 1989 தேர்தலில் முழுக்க முழுக்க காலிஸ்தானி ஆதரவாளர்களே வெற்றி வாகை சூடினார்கள்.அவர்கள் தேர்தலை புறக்கணித்ததால் பதிவான பத்து சதவீத வாக்குகளை வைத்து பின்த் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசாங்கம் 91 இல் பதவிக்கு வந்தது. அவர் முழுமுயற்சியோடு சீக்கிய தீவிரவாதத்தை அடக்கினார். சிறிது வசதியான சமூகம் என்பதால் சீக்கியர்கள் காலிஸ்தான் கிடைக்க பல இழப்புகளை வெகுநாட்கள் சந்திக்க வேண்டும் எனபது புரிந்ததும் அதில் ஈடுபாடு இழந்தார்கள்.30 சதவீதம் உள்ள தலித் சீக்கியர் காலிஸ்தான் தீவிரவாதத்தில் ஈடுபாடு காட்டாததும் காலிஸ்தான போராட்டங்கள் தோல்வியடைய இன்னொரு முக்கிய காரணம்.ஆனால் முதல் மந்திரி இந்த போராட்டத்தில் தன உயிரையும் இழந்தார்
Reply

Anonymous said...

poovannan says:
March 10, 2013 at 10:51 am

Hindus will occupy Punjab gradually. Already their population has increased by 12% in last ten years or so. The problem is exacerbated by the population imbalance created by ultrasound gender selection and subsequent female infanticide by native Punjabis. Migrant Hindus are readily afforded all rights in Punjab that Punjabis are not accorded in other states. We must do something to stem the flow of migrant Hindus coming into Punjab and buying land. Sikhs are not permitted these days in any of the Indian states to buy land, vote or own businesses there whereas Hindus coming in Punjab have right to vote and buy the land for farming. Soon there will be more Hindu farmers in Punjab than Sikhs and the Hindus will control the market. Sikhs will be pushed from the market and lose economic clout, eventually lose their livelihood and become severely impoverished. Sikhs need to exhibit foresight and work to stem the tide of Hindu migrants before they lose their power base. The Sikhs need to act soon or another genocide like the one in 1984 is forthcoming. If the migrants remain in Punjab they are likely to support the Congress. We need to remember that the Congress is responsible for killing more than 300,000 Sikhs in the past 17 years and putting 60,000 Sikhs in jails without any charge or trail. The record of the BJP is just as dismal.

Secondly, pseudo saints, false living Gurus like Radha Swami, Nirankaris, Noormahals, Saccha Sodda are entities created by the RSS. The RSS has setup this network of agents to mislead unsuspecting Sikhs. These groups and individuals are given billions of rupees every year to spread their mission of misinformation and propaganda against Sikhism. These groups often distort the meanings and content of Gurbani to mislead the population. Legitimate Sikh groups are often sidelined and threatened while these scoundrels enjoy police protection and full support. Now the RSS has started sending and encouraging these false people to branch out to outside countries too. Be well aware and avoid them!

The third tactic of the RSS involves the distortion and destruction of educational content. They have taken control of the educational policy making of the Punjab. They are pushing the lie in that Sikhism is a sect of Hinduism. Competitions are being held on Sikhism but the books provided for students include all this false information about Sikhism. The RSS is publishing the Sikh history books, which state that Sikh Gurus lived their lives as Hindus and they have done everything with the help of Hindus.

அடிப்படைவாத சீக்கியர்கள் (நம்ம ஹிந்டுத்வர்கள்,சாவர்க்கர் ,சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள்) கம்முனிச கட்சிகளில் இருக்கும் சீக்கியர்களை,rss இயக்கத்தில் உள்ள ஹிந்துக்களை எதிரிகளாக தான் இன்றும் கருதுகிறார்கள்.பஞ்சாபில் சீகியர்களுக்கான் கட்சி அகாலி தளம்,பஞ்சாபி ஹிந்டுக்களுக்கான் கட்சி பா ஜ க. இதை மாற்ற சித்து போன்றவர்களை இழுத்தும் பா ஜ க வால் சீக்கியர்களை கட்சிக்குள் இழுக்க முடியவில்லை.
உட்டர்க்ஹாந்து மாநிலம் பிரியும் போது அங்கு சேர்க்க கூடாது என்று உத்தம் நகரில் உள்ள சீக்கியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.இன்றும் அங்குள்ள பெரும்பாலான மலைகளை சீக்கியர்கள் அவர்கள் வழிப்பாட்டு தளங்களாக கைப்பற்றி விட்டார்கள் என்று பொருமும் இந்துக்கள் உத்தர்கந்த் மாநிலத்தில் அதிகம் பேர் உண்டு

suvanappiriyan said...

வருகை புரிந்து கருத்தைப் பதிந்த அனைவருக்கும் நன்றி! கம்பெனியில் ஓய்வில்லாத வேலை. எனவே இணையத்தில் முன்பு போல் அதிகம் நேரம் செலவழிக்க முடியவில்லை. அலுவலக வேலைகள் முழுவதும் முடிந்தவுடன் வழக்கம் போல் இணையத்தில் சந்திப்போம். அதுவரை அவ்வப்போது காப்பி பேஸ்ட் :-) பதிவுகளாக வரும்.

Anonymous said...

salaam alaikum bhai,

in the link you provided, it is nowhere mentioned that they are linked to the advani bomb issue. I would like to know how did you come to that decision.

-habib

Dr.Anburaj said...

இந்திராகாந்தி சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை சீக்கியர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். கோவையிலும் நடந்தது. பின்னர்தான் கலவரம் வெடித்தது.அரசு முறையான நடவடிககை எடுக்கவில்லை என்பதும் உண்மை.