Followers

Monday, December 24, 2018

இந்து முன்னணி பிரமுகர் மாடு திருடி மாட்டிக் கொண்டார்.

இந்து முன்னணி பிரமுகர் மாடு திருடி மாட்டிக் கொண்டார்.
திருச்செந்தூரில் பல நாட்களாக தோட்டத்தில், வீடுகளில் கட்டப்படடிருந்த கறவை மாடுகள் காளை மாடுகள் திடீர் திடீரென்று காணாமல் போயுள்ளன. வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் ஒரு மினி வேனில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்து டிரைவரை விசாரித்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே டிரைவரை காவலர்கள் நன்றாக கவனித்துள்ளனர். உடனே அவன் உண்மையை சொல்ல ஆரம்பித்து விட்டான்.
அதாவது ஏழை விவசாயிகளிடமிருந்து காணாமல் போன பல மாடுகளை இந்த திருட்டு கும்பல் பல காலமாக திருடி விற்று வந்துள்ளது. இதற்கு தலைவனாக இருந்தவன் திருச்செந்தூர் இந்து முன்னணி பிரமுகர் கந்தன். இவனோடு சேர்ந்து முருகேஷன், கார்த்தி, ஹனீஃபா என்ற மூவரும் கூட்டு களவாணிகளாக திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்து முன்னணி திருட்டு கும்பலில் ஹனீஃபா என்ற முஸ்லிம் எதற்கு என்று கேட்கலாம். அதாவது கோமாதாவை திருடும் போது மாட்டிக் கொண்டால் ஹனீஃபாவை மாட்டி விட்டு விட்டு இவர்கள் தப்பித்து விடலாம் என்பது திட்டம். இந்த கிறுக்கு கும்பல் அதனையும் காவல் துறையிடம் ஒப்பித்துள்ளது. அர்ஜூன் சம்பத்தை பிடித்து விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளி வரலாம்.
இந்த திருட்டு கும்பல் கோமாதாவின் மீது பாசமழை பொழிவதெல்லாம் வெளி வேஷம் என்பது தெரிகிறதல்லவா? வட மாநிலங்களில் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்று பொய் கூறி முதியவரை கொன்றது இந்த காட்டு மிராண்டி கும்பல். கோமாதாவை ஏழை விவசாயிகளிடமிருந்து திருடி 25000 பெறுமானமுள்ள மாடுகளை அடிமாடுகளாக 3000 க்கும் 4000 க்கும் விற்ற இந்து முன்னணி திருட்டுக் கும்பலுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.
நேற்று (24-12-2018) நியூஸ்18 சேனல் இதனை ஒளிபரப்பியது. அந்த செய்தியை பதிவதற்காக எனது அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். உண்மை தகவலை துணிந்து பதிந்த நியூஸ்18 சேனலுக்கு நன்றிகள். இதே வட மாநிலமாக இருந்திருந்தால் சம்பவத்தையே மாற்றி முஸ்லிம்களை பலிகடா ஆக்கியிருப்பார்கள்.




1 comment:

Dr.Anburaj said...

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி சுங்கத்துறையிடும் சிக்கிக் கொள்பவா்கள் முஸ்லீம்கள்தாம்.அது குறித்த பதிவை ஏன் இதுவரை என்றாவது போட்டதுண்டா ? இந்துக்களையும்இந்து இயக்கங்களையும் மலினப்படுத்த வேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கை. இந்துக்களையும் இந்து இயக்கங்களையும் பிரிக்க சதி செய்து இப்படி அவதூறான கதைகளை பரப்ப வேண்டும். பிறகு இந்துக்களை அனைவரையும் காக்க ஆதரிக்க எந்த இயக்கமும் இல்லாது செய்ய வேண்டும். பலமற்று தனித்தனியே இந்துக்களை சிதறடிக்க வேண்டும். பின் மாலிக்காபுா் இந்துக்களை கொன்று அழித்ததுபோல் பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷ்யில் இந்துக்களை மத அழிப்பு செய்து அழிக்கப்பட்டது போல் இந்தியாவிலும் இந்துக்களை அழிக்க வேண்டும் என்பது உங்கள் திட்டம்.
இந்து முன்னணியில் தவறானவா்கள் ஒன்றுஇரண்டு இருக்க லாம். இந்து மதத்திற்கு மிகப்பெரிய விழிப்புணா்ச்சியை இந்து முன்னணிஏற்படுத்தியுள்ளது.