Followers

Tuesday, December 18, 2018

விசாரணைக் கைதிகளை 'தீவிரவாதி' என்று முத்திரை குத்தும் சன் டிவி!

விசாரணைக் கைதிகளை 'தீவிரவாதி' என்று முத்திரை குத்தும் சன் டிவி!
கோவையில் இந்துத்வா தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஐந்து இஸ்லாமியர்களை கைது செய்து அவர்கள் வீட்டில் இன்று சோதனை நடைபெறுவதாக இன்று (19-12-2018) சன் செய்திகளில் செய்தி வாசிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர் 'தீவிரவாதி இஸ்மாயீல்' என்றும் 'தீவிரவாதி ஹூசைன்' என்றும் திரும்ப திரும்ப சொல்கிறார். விசாரணைக் கைதிகளை 'தீவிரவாதி: என்று முத்திரை குத்த இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? ஸ்டாலின் சன் குழுமத்தை விசாரித்து உண்மையை அறிய வேண்டும்.
பொதுவாக தமிழகத்தை பொருத்த வரை இந்துக்களும், முஸ்லிம்களும், கிருத்துவர்களும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். பேரிடர் காலங்களில் இஸ்லாமியர்கள் ஓடோடி வந்து தங்கள் உழைப்பையும், பொருளாதாரத்தையும் வாரி இறைத்து தொப்புள் கொடி உறவுகளின் உயிரையும் உடமைகளையும் காக்கின்றனர். பசித்தவர்களுக்கு உணவளிக்கின்றனர். இவ்வளவு வாஞ்சையோடு வாழ்ந்து வரும் இஸ்லாமியர் இந்துக்களை கொல்ல முடிவெடுப்பார்களா? அப்படி முடிவெடுப்பவன் ஒரு முஸ்லிமாக இருக்க முடியுமா? இந்துத்வா தலைவர்கள் கொல்லப்பட்டால் அதனால் பலனடைவது யார்?
சிறு பிள்ளைக்கும் தெரியும் இந்துத்வாக்கள் கொல்லப்பட்டால் பிஜேபியின் ஓட்டு வங்கி தமிழகத்தில் அதிகரிக்கும். சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. மண் குதிரையான அதிமுகவோடு பிஜேபி களம் காணப் போகிறது. சில சீட்டுக்களையாவது பெற்று விட பிஜேபி முயலும். அதற்காக இது போன்ற கைது நடவடிக்கைகள் அதிகமாக நிகழலாம். பிஜேபியினரே அவர்கள் அலுவலகத்தக்கு தீ வைத்து விட்டு அதனை இஸ்லாமியர் மேல் போடலாம். அவர்கள் ஆட்களை அவர்களே கொன்று விட்டு அதனையும் இஸ்லாமியர் மேல் போடலாம். காவல்துறையும், நீதித் துறையும், உளவு அமைப்புகளும் அவர்களின் கையில் இருப்பதால் எதனையும் அவர்களால் சாதிக்க முடியும். எனவே இனி வரும் காலங்களில் இஸ்லாமியர் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது. தவ்ஹீத் ஜமாத், தமுமுக, எஸ்டிபிஐ போன்ற அமைப்புகள் பகைமைகளை மறந்து ஒன்று பட்டு எதிரிகளை வீழ்த்த முன் வர வேண்டும். தவறினால் வட மாநிலங்களின் நிலையையே நாம் இங்கும் காண்போம்.
அத்தகைய துர்பாக்கியமான நிலையிலிருந்து இறைவன் நம்மைக் காப்பானாக!

No comments: