Followers

Friday, September 28, 2012

சவுதியில் கை ரேகைகளின் முக்கியத்துவம்!

தற்போது கை ரேகைகளை பதிந்து கொள்ளும் முறை சவுதி முழுக்க பரவலாக்கப்பட்டுள்ளது. வேலைக்காக வரும் வெளி நாட்டவர் முதற் கொண்டு ஹஜ் உம்ராவுக்காகவும் சுற்றுலா வரும் அனைத்து வெளி நாட்டவரும் தற்போது அவர்களின் கை ரேகைகளை அவசியம் பதிய வைக்கப்படுகிறார்கள். சில வருடங்களாக ஹஜ் பயணிகளுக்கு இந்த கைரேகை முறையை செயல் படுத்தியதில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அடையாளம் காணும் முறை மிக இலகுவாகி விடும். மேற் கண்ட தகவலை பாஸ்போர்ட் துறைக்கான டைரக்டர் ஜெனரல் அப்துல் அஜீஸ் அல்ஜஜீரா பேப்பருக்கு கொடுத்த செய்தியில் கூறியுள்ளார்.



மருத்துவர்களாக பணிபுரியும் சவுதி பெண்கள் நோயாளிகளின் கை ரேகைகளை பதிவு செய்கின்றனர்.

முகத்தையும் மூட சொல்லி குர்ஆனோ நபிமொழியோ கட்டளையிடவில்லை. இது அந்த பெண்களாக விரும்பி அணிந்து கொள்வது. பல ஆண்களோடு கலந்து வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படுவதால் தாங்களாகவே முகத்தை மூடிக் கொள்கின்றனர். இது அவர்களின் வேலைக்கு எந்த வகையிலும் இடைஞ்சலாகவும் இல்லை. ஆனால் வெளி நாடுகளிலிருந்து பணிக்கு வரும் பெண்கள் யாரும் முகத்தை மூட மாட்டார்கள். அவர்களை யாரும் முகத்தை மூடச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் இல்லை.

//அரபு நாட்டில் வேலை செய்வபவர்களால் எல்லாம் இந்தியப்பொருளாதாரம் வாழவில்லை.தனி நபர் வாழ்க்கைக்கு தான் அப்பணம் போகிறது. அங்கு வேலை செய்பவர்கள் இந்தியாவுக்கு அனுப்புவது சொற்ப பணமே,மேலும் பெரும்பாலும் ஹவாலா என்பதால் அரசுக்கு நட்டமே.// -வவ்வால்

'உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்திய தேசத்தவர்தான் அதிக அளவில் சவுதியில் பணி புரிகின்றனர். இவர்கள் இந்தியாவுக்கு ஒரு வருடத்தில் சவுதியிலிருந்து மாத்திரம் ஆண்டுக்கு 15 பில்லியன் ரியால்களை வங்கி மூலமாக அனுப்புகின்றனர். (ஹவாலா முறையில் அனுப்புவது கணக்கில் வராது. ஆனால் நான் அனுப்புவது வங்கி மூலமே! அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தக் கூடாது அல்லவா? :-)) ஆறு வளைகுடா நாடுகளிலிருந்து மட்டும் இந்தியர்கள் ஒரு வருடத்துக்கு அனுப்பும் பணம் 37 பில்லியன் ரியால்களாகும். இந்த மொத்த பணமும் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருக்கிறது' என்கிறார் சவுதி ஹாலந்து பேங்கின் மேனேஜிங் டைரக்டர். ஆக எத்தனை இலட்சம் மக்கள் நம் இந்தியாவில் இருந்து மட்டும் வருகை புரிகிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இத்தனை மக்களையும் எந்த சிக்கலும் இல்லாமலும் நிர்வாகத்தை சிறப்பாக நடத்த தற்போது இந்த கை ரேகை முறை மிக உதவியாக இருக்கிறது.

அடுத்து சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் ஆண்கள் அனைவரின் கை ரேகைளையும் பதிய ஆணை பிறப்பித்துள்ளார் இளவரசர் பந்தர் பின் அப்துல்லா. அவர் மேலும் கூறும் போது 'இந்த கை ரேகையானது வழக்கு விசாரணைக்கும் அரசு ஆவணங்களை சரி பார்ப்பதற்கும் மிக உதவியாக உள்ளது. இவை அனைத்தும் ஸ்கேன் செய்து பாதுகாக்கப்படுவதால் பல வருடங்களுக்குப் பிறகும் சம்பந்தப்பட்டவரின் தகவல்களை மிக இலகுவாக பெற முடிகிறது. விமான நிலையங்களில் தேவையில்லாமல் பெண்கள் முகத்தை காட்ட வேண்டிய அவசியமும் மட்டுப்படுத்தப் படுகிறது" என்கிறார்..

உலகின் அனைத்து நாட்டு மக்களையும் தன்னகத்தே கொண்ட சவுதி அரேபியா வெளி நாட்டு மக்களின் பிரச்னையை மிக இலகுவாக தீர்த்து வைப்பதை பார்த்தோம். ஆனால் அறிவியல் துறையில் மிக உயரிய இடத்தைப் பிடித்த நமது நாடு இன்றும் அஸ்ஸாம், மற்றும் எல்லையோர மாநிலங்களின் பிரச்னையை தீர்க்க கையை பிசைந்து கொண்டிருக்கிறது. நிலக்கரி, கிரானைட்,ஸ்பெக்ட்ரம் போன்ற முறைகேடுகளில் சுருட்டிய பணத்தை வைத்தே ஒரு வருட பட்ஜெட்டைப் போட்டு விடலாம். இவ்வளவு பணம் புரளும் நமது நாட்டில் நாட்டின் பாதுகாப்புக்காக இது போல் புகைப்படம், கைரேகை போன்றவற்றை கணிணியில் பதியும் முறையை ஏன் நம் ஆட்சியாளர்கள் ஏற்படுத்த தயங்குகிறார்கள்? இதில் என்ன சிக்கல்? தற்போதுதான் ரேஷன் கார்டை கணிணியில் பதியும் முறை ஆரம்பமாகி உள்ளது. அது இன்னும் முழுமையடையவில்லை. ஆமை வேகத்தில் பணி நடந்து வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையும் வெறும் புகைப்படத்தோடு நிற்கிறது. இன்னும் கைரேகை முறை ஆரம்பிக்கப் படவில்லை.


பண்டைய பாபிலோன் சைனா நகரங்களில் முன்பு கை ரேகைகளை களிமண்ணில் பதிந்துள்ளார்கள்.
---------------------------------------------
//வரும் காலங்களில் சவுதி பிச்சைக்காரர்களை மும்பை, டில்லி வீதிகளில் பார்க்கலாம்.
ஏன்...சென்னை, கோவையில் கூட பார்க்கலாம்.

அதுவரை நான் இருக்கவேண்டும்..அந்தக் கண் கொள்ளா காட்சியைப் பார்க்கவேண்டும்.//

ராவணன் என்ற பதிவரின் ஒரு பின்னூட்டமே இது. நமது இந்திய நலனில் மிகுந்த அக்கறை கொண்ட மன்னரையும் அந்நாட்டு மக்களையும் பிச்சைக்காரர்களாக்கிப் பார்ப்பதில் இவருக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை. 'சவுதிகளைப் போல் வசதியாக எனது இந்திய நாட்டையும் பார்க்க ஆசைப்படுகிறேன்' என்று எண்ணினால் அதை வரவேற்கலாம். என்ன செய்வது அவர் பேசவில்லை. அவருக்குள் இருக்கும் டாஸ்மாக் பேசுகிறது. இறைவன் தான் எனது நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அவருக்கு நான் கொடுத்த பதில்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்.

வாழ்வில் ஒருவர் பெருமை சிறுமை அடைவதற்கு பிறர் காரணம் அல்ல. அவரவர் செயலே காரணம். பொன் மாற்று அறிவதற்கு உரைகல் வைத்திருப்பர். பொன்னை உரசிப் பார்த்து அதன் தரம் அறிவர். அதுபோல் ராவணனின் செயலும் எண்ணமும் அவரை நல்லவரா கெட்டவரா என்பதை காட்டி விடும்.

சுருங்கச் சொன்னால் 'எண்ணம் போல் வாழ்வு' :-)

-----------------------------------------------

"சவுதியில் இன்னும் 18 ஆண்டுகளில் எண்ணெய் தீர்ந்துவிடுமா?"
என்று சார்வாகன் ரொம்பவும் கவலைப்பட்டு (அதாவது மனதுக்குள் சந்தோஷப்பட்டு) ஒரு பதிவிட்டிருந்தார்.

"நாமும் எமது மூதாதையர்களும் பேரித்தம் பழம் உண்டும், பாலைக்
குடித்தும் வாழ்ந்தவர்கள் மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்தால் நாம் மீண்டும் பேரித்தம் பழத்தோடும் பாலோடும் வாழ்ந்து கொள்வோம்"

மன்னர் பைசல் அவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான அக்டோபர் யுத்தத்தின் போது மேற்கு நாடுகளுக்கு பெட்ரோல் விநியோகிப்பதை நிறுத்திய போது சொன்ன பிரபல்யமான கூற்றுதான் இது.

பெட்ரோல் தீர்ந்தால் ஒன்றும் குடி மூழ்கி போகாது. முகமது நபி தனது ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று பேரித்தம் பழங்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார் என்பதை ஞாபகப்படுத்தினால் இவர்களும் அவரைப் போலவே வாழப் பழகிக் கொள்வார்கள். வெளிநாட்டு வேலையாட்களை வெளியாக்கினால் பில்லியன் கணக்கில் டாலர்களை மிச்சப்படுத்தலாம். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு டிரைவர்கள், மூன்று டிரைவர்கள் என்ற நிலை மாறி சவுதிகளே ஓட்டுனர்களாகி விடுவார்கள். தற்போது விவசாயத்திலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எனவே இஸ்லாம் என்ற அருமையான வழியை வைத்து சவுதிகளை சிக்கன வாழ்வு வாழ்பவர்களாக மாற்றி விடலாம்.

ஹஜ், உம்ரா வருபவர்களுக்காக இன்று அரசு கோடிக்கணக்கான டாலர்களை செலவழிக்கிறது. பெட்ரோல் குறைந்தால் ஒவ்வொரு வெளி நாட்டவரும் 3000 ரியால் பராமரிப்பு செலவுக்காக சவுதி அரசுக்கு கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் உலக முஸ்லிம்கள் கட்டியே தீர வேண்டும். இதை வைத்தே கூட அரசு செலவினங்களை சமாளித்து விடலாம்.

என் பையன்களுக்கே அவர்கள் ஆடம்பரமாக ஏதும் கேட்டால் இரண்டு நபி மொழிகளை எடுத்துப் போடுவேன். மௌனமாகி சென்று விடுவார்கள். எனவே கவலையை விடுங்கள். எந்த சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து விடுவர். அதற்கு இஸ்லாம் அழகிய வழி காட்டுகிறது.

மனமிருந்தால் மார்க்கமுண்டு. :-)

------------------------------------------------------

மனிதனின் விரல் ரேகைகளைப் பற்றி குர்ஆன்!

'மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்'

75 : 3, 4 - குர்ஆன்


அன்றைய அரபுகள் 'இறந்ததற்கு பின்பு திரும்பவும் எழுப்பப் படுவோமா? எலும்புகள் மக்கி மண்ணான பிறகு எவ்வாறு நம்மை இறைவன் உயிர்ப்பிப்பான்?' என்றெல்லாம் முகமது நபியிடம் சந்தேகத்தோடு கேட்க ஆரம்பித்தனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.

விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகள் எல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் இறைவன் ஏன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?

மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.

ஏன் என்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான். இதனால் தான் இன்று மேலை நாடுகளில் பேங்கிலிருந்து பணம் எடுக்க ரேகைகளை உபயோகப் படுத்துகிறார்கள். நம் நாட்டிலும் காவல் துறையிலிருந்து நீதி மன்றம் வரை விரல் ரேகைகளையே பயன் படுத்துகிறோம்.

ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்ப கொண்டு வந்து விடுவோம். நமக்கு மக்கிப் போன எலும்புகளை ஒன்றாக்கி திரும்பவும் உயிர்ப்பிப்பது பெரிய காரியம் அல்ல என்ற உண்மையை இறைவன் விளக்குகிறான்.


64 comments:

Anonymous said...

are you indian or arabian be a indian

suvanappiriyan said...

//are you indian or arabian be a indian //

I am a pure Indian.

i am a pure tamilan.

i am a pure dravidan.

and also i am a pure muslim.

UNMAIKAL said...

காலம் செய்யும் கோலம்.

கோவி கண்ணன் வீட்டுக்கு அருகில் ஓடும் பாலாறும் தேனாறும்! (எதிர்பதிவுக்கு எதிர்பதிவு)

கோவி கண்ணன் எழுதிய சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் என்ற பதிவிற்கான எதிர் பதிவை கக்கு மாணிக்கம் அவர்களின் பின்னூட்டத்துடன் ஆரம்பிக்க விரும்புகிறேன்.

/* உண்மை நிலை புரியாமல் நுனிப்புல் மேயும் சிலரின் அரை வேக்காட்டு ஆக்கங்களுக்கு பதில் சொல்ல இப்படி ஒரு பதிவு அவசியமா கண்ணன்? */

என்று பின்னூட்டமிட்டுருந்தார் அண்ணாச்சி கக்கு மாணிக்கம் அவர்கள்.

வாங்க கக்கு மாணிக்கம்,

நீங்க வேணும்னா புல்ல அடிவரை மேஞ்சிட்டு ஒரு ஆக்கம் போடுங்களேன்.

நீங்க புல்ல FULL ஆ மேஞ்சீங்களா இல்லையான்னு பின்னூட்டம் வழியா விவாதிப்போம்.

உங்களுக்கு இந்த இரண்டு வரிகள் தான். நீங்க அப்பீட்டாகிக்கலாம்.
இனி, அண்ணன் கோவி கண்ணன்,

விவாசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ இல்லாத பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது.

நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம்.

எவ்வளவு நல்ல கருத்து இது?

எவ்வளவு உண்மையும் கூட.

இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக நீங்கள் மாற்றி இருக்கலாம் ?

அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர் வந்து விட்டதா , உடனே எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் நீங்கள் கட்டுரை தீட்டியதோ ஏனோ?????

இதற்க்கு மறுப்பு சொல்றதா இருந்தா நமது நாடு அப்படியெல்லாம் கிடையாது.

விவசாயத்தில் இன்ன இன்ன மாதிரிலாம் இருக்கோம்,மணல் திருட்டு நடைபெறுவது இல்லை,

விவசாயநிலங்கள் வீட்டு மனைகளாக மாறவில்லை என்றால் அது சரியான பதில்.
அதுவும் இல்லையா,

சவுதியோட திட்டங்கள் சரி இல்லை.

இப்படி இப்படி செய்து இருந்தால் இன்னும் வளமான நாட்டை உருவாக்கலாம் என்று கூறினீர்கள் என்றால் அது நியாயம்.

அத விட்டுட்டு வீட்டு வேலை செய்பவர்களை பற்றி பேசினால் என்ன அர்த்தம்?

விவசாயத்திற்கும் வீட்டு வேலை செய்வதற்கும் என்ன சம்பந்தம்???


நான் தெரியாமல் தான் கேட்கிறேன்,

நமது நாட்டில் மட்டும் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இல்லையா?

அவர்களை அடிமை போல் நடத்துவது நடக்க வில்லையா????

அல்லது உங்களுக்கு தெரியாதா????

பதிவின் மையக் கருத்தோட விவாதிக்கப் பழகுங்கள்.

ஒரு இனத்தின் மீது உள்ள உங்களின் வெறுப்பை எல்லா இடங்களிலும் காட்டாதீர்கள்.


அதற்காக சவுதியில் யாரும் தவறு செய்தால் அதற்க்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று கதை கட்டி விடாதீர்கள்.

யார் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே.

யார் விபச்சாரம் செய்தாலும் மரண தண்டை தான் தீர்வு என்பது என் கருத்து.

அது என் குடும்பத்தாராக இருந்தாலும் சரியே, ஏன் நானாக இருந்தாலும் சரியே.

கீழ்க்கண்ட வசனம் ஒரு புத்தகத்தில் உள்ளது.

இது தான் உலகிலேயே எனக்கு அதிகம் பிடித்த வசனம்.

இது எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறினால் அதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆகவே புத்தகப் பெயரை நான் குறிப்பிடவில்லை
.
"நீதி செலுத்துங்கள். அது உங்களுக்கோ, உங்கள் உறவினர்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே. ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியில் இருந்து பிறழச்செய்து விடக்கூடாது." சிராஜ். vadaibajji.blogspot.com

SOURCE: http://vadaibajji.blogspot.com/2012/01/explain-to-govi-kannan.html

கோவி கண்ணனின் எதிர்ப்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்ப்பதிவு. - டோண்டு ராகவன்
வடை பஜ்ஜி பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இது.

//விவசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ
இல்லாத பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது. நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம். //

எவ்வளவு நல்ல கருத்து இது ?

எவ்வளவு உண்மையும் கூட. இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக நீங்கள் மாற்றி இருக்கலாம் ?

அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர் வந்து விட்டதா , உடனே எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் நீங்கள் கட்டுரை தீட்டியதோ ஏனோ????/ -

அன்புடன், டோண்டு ராகவன்.
dondu.blogspot.com

SOURCE: http://dondu.blogspot.com/2012/01/blog-post_12.html

அஜீம்பாஷா said...

உங்கள் பதிவுகளுக்கு எதிராக பின்னூட்டம் இட்டே உங்களை இத்தனை பிரபலமாக்கிய எதிர் கருத்துள்ள பதிவர்களுக்கு நன்றி. நிச்சயமாக இந்தியா போன்ற ஜனநாயக பிறந்த நாம் வெளிநாடு வருவதற்கு முன்பே இவர்களின் இந்த எள்ளி நகையாடலை சகிக்க கற்றுகொண்டோம். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அந்த சக்தியை கொடுத்திருக்கிறான். ஆமின்.
நீங்கள் உங்கள் பணி தொடருங்கள்.

அஞ்சா சிங்கம் said...

/////ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு டிரைவர்கள், மூன்று டிரைவர்கள் என்ற நிலை மாறி சவுதிகளே ஓட்டுனர்களாகி விடுவார்கள்.///////////////////

நீங்க இப்படி சொல்றீங்க ஆனால் செய்தி வேறுமாதிரி இருக்கு முஸ்லீம் பெண்கள் கார் ஓட்டக்கூடாது.சமீபத்தில் முஸ்லீம் பெண்கள் சவுதி அரேபியாவில் கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு 10 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். பெட்ரோல் காலி ஆனால் சட்டத்தை கொஞ்சம் மாத்திக்கலாம் . இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் கார் ஓட்டுவதை பார்த்திருக்கிறேன் . அதை தவறு என்று சொல்கிறீர்களா . எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் "குண்டி காய்ந்தால் குதிரையும் புல்லை திங்கும்" என்று இது அரேபிய குதிரைக்கும் பொருந்தும் தானே .

ஆஷா பர்வீன் said...

இறைவனின் சாந்தி தங்கள் மீது உண்டாகட்டும்

//என் பையன்களுக்கே அவர்கள் ஆடம்பரமாக ஏதும் கேட்டால் இரண்டு நபி மொழிகளை எடுத்துப் போடுவேன். மௌனமாகி சென்று விடுவார்கள். எனவே கவலையை விடுங்கள். எந்த சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து விடுவர். அதற்கு இஸ்லாம் அழகிய வழி காட்டுகிறது.

மனமிருந்தால் மார்க்கமுண்டு. :-)//
அருமையான பதிவு சகோதரரே....

மாஷா அல்லாஹ்

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!ஏனைய வளைகுடா நாடுகளில் அலுவலகம் முழுக்க முகமூடி போட்டுக்கொண்டு பெண்கள் பணி புரிவதில்லை என நினைக்கின்றேன்.அவரவர் விருப்பப்படி தலையை மட்டும் துணியால் மூடிக்கொண்டோ அல்லது படத்தில் உள்ளபடி ஒரு சில பெண்களோ அல்லது பாப் கட் தலைமுடியுடன் நவீன உடையெனவே பெண்கள் காட்சியளிக்கிறார்கள்.எல்லா பெண்களும் முகத்தை மூடிக்கொள்வதை விரும்பிச் செய்கிறார்கள் என்பது நம்பும் படியாக இல்லை.படம் சிரிப்பையே வரவழைக்கிறது:)

சரி!நான் சொல்ல வந்த விசயம் அதுவல்ல.வவ்வால் குறிப்பிட்டதான அடைப்பான் வளைகுடாப் பணம் ஹவாலா பணம் என்பது தவறு.இந்திய பொருளாதாரத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த அன்னிய செலவாணிகளில் வளைகுடா பணமும் ஒன்று.முந்தைய கால கட்டங்களில் வங்கியின் மூலம் அனுப்பும் பணத்தை விட ஹவாலாவாக கிடைக்கும் பணம் கொஞ்சம் அதிகம் என்பதால் பலர் ஹவாலா மூலமாக பணம் அனுப்பியது உண்மை.(எந்தக் கால கட்டத்திலும் ஹவாலாவை தொடாதவன் என்ற பெருமை எனக்குண்டு:))

ஆனால் முன்பு ப.சிதம்பரம் பொருளாதார துறை அமைச்சராக இருந்த போது நிகழ்ந்த சட்ட மாற்றங்களால் ஹவாலுக்கு ஆப்பு வைக்கப்பட்டு வங்கி மூலமாக பணம் அனுப்புவதே லாபம் என்பதால் பலரும் வங்கி முறைக்கே மாறிவிட்டார்கள்.

எங்கே நீங்கள் சொன்ன அடைப்பானை வவ்வால் குறிப்பிட்டார் என்பதை தெரிவித்தால் அங்கே போயும் அவர் தலையில் ஒரு கொட்டு வைக்கலாம் என நினைக்கின்றேன்:)

ராஜ நடராஜன் said...

சவுதியில் இப்பொழுதுதான் கைரேகை முறை வருகிறது என்றால் சவுதி பிற்போக்கான நாடு என மற்றவர்கள் ஏளனம் செய்வது சரியானதுதான்:)

கைரேகை முறை மிகவும் அரத புராதன அறிவியல் முறை.துபாய் போன்ற விமான நிலையத்தில் கணநேர கண்ரேகை முறை பிரபலமாக புதிய முறை வந்து விட்டது.

ராஜ நடராஜன் said...

//பெட்ரோல் தீர்ந்தால் ஒன்றும் குடி மூழ்கி போகாது//

தற்போதைய சூழலில் பெட்ரோல் இல்லாமல் போனால் குடி மூழ்கி போய் விடும் என்பதோடு,கப்பல்,விமானம் என அனைத்தும் மூழ்கிப் போய் விடும் எனப்தே உண்மை.நீர்,மண்,காற்று,சூரிய,சந்திரன்,நெருப்பு என இயற்கை தன்மைகள் தவிர நுகர்வுப் பொருட்கள் அனைத்தும் பெட்ரோலிய மயமானது.ஆசிய,மத்திய கிழக்கு நாடுகள் பெட்ரோல் இல்லாமல் போனால் கூட வாழ்ந்து விடக்கூடும்.அமெரிக்கா குதிரைப் பயணம் செல்லவும்,ஐரோப்பா நாடுகள் ஐலசா என கப்பல் ஓட்டவும் கொஞ்சம் சிரமப்படக் கூடும்:)

அதே போல் மாற்று எரிபொருள் வந்தாலும் கூட அதற்கேற்ற்வாறு பொருளாதாரத்தை அமைத்துக்கொள்ளூம் வலிமையை இப்போதைய அரேபிய பொருளாதாரம் வலிமை பெற்றவை.

ராஜ நடராஜன் said...

சகோ.அஸீம் பாஷா!இங்கே பின்னூட்டங்களுக்கான காரணம் சகோ.சுவனப்பிரியன் கருத்துக்கள் பலவற்றை பொதுவில் வைப்பதில் சில சரியானதாகவும் பல தவறானதாகவும் உள்ளது என்பதால் தவறுகளை பலரும் சுட்டுக்காட்ட விரும்புகின்றனர்.தவறுகளையும் சுட்டிக்காட்டினாலும் சகிக்க பழகிக்கொண்டோம் என்பதை கோவி.கண்ணன் தடித்த தோல் என்று மாற்றுப் பெயரையும் நேற்று முன் வைத்தார்:)

Anonymous said...

UNMAIKAL Comment is very nice awesome

UNMAIKAL said...

PART 1. அப்துல் நாசர் மதானியுடன் இரண்டு மணி நேரம். - அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

('மக்கள்உரிமை' இந்த வார இதழில் வந்துள்ள கட்டுரை)

கோவை தொடர் வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஒன்பதரை ஆண்டு காலம் கோவை சிறையில் பிணையின்றி அடைக்கப்பட்டு இறுதியில் குற்றமற்றவர் என சென்ற ஆகஸ்ட் 1, 2007ல் விடுதலையான கேரள ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’த் தலைவர் அப்துல் நாசர் மதானி அவர்கள்

மீண்டும் ஆக்ஸ்ட் 17, 2012ல் பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கர்நாடக அரசால் கைது செய்யப்பட்டது ஒரு சிலருக்கு நினைவு இருக்கக்கூடும்.

கடும் நோய்வாய்ப்பட்டிருக்கும் அவரைப் பிணையின்றி கர்நாடக அரசும் கடந்த மூன்றாண்டுகளாகச் சிறையில் அடைத்துள்ளது.

பெங்களூரு பராப்பன அக்ரகாரத்தில் புதிதாகக் கட்டபட்டுள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் இருக்கும் அவரை இன்று (17.09.2012) சந்தித்தோம்.

எங்கள் இருவரைத் தவிர நகரி பாபையா, ஆர்.ரமேஷ், ஷோயப், முகம்மது காக்கின்ஜே (பெங்களூரு), ரெனி அய்லின், ‘தேஜஸ்’ நாளிதழ் ஆசிரியர் முகமது ஷெரீப் (கேரளா) ஆகியோரும் வந்திருந்தனர்.

கர்நாடகச் சிறைகளில் கைதிகளைப் பார்ப்பதற்கான சடங்குகளும், கெடுபிடிகளும் அதிகம்.

ஏற்கனவே இருமுறை மைசூர் சிறையில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியைச் சந்தித்த அனுபவம் எங்களுக்குஉண்டு.

எல்லாச் சடங்குகளும் முடிந்து சிறையின் முதன்மை வாயிலுள் நுழையும் போது ஒரு கணம் நிறுத்தி நம் கை ஒன்றில் ஒரு முத்திரை பதிப்பார்கள்.

அனேகமாக வேறெந்த மாநிலச் சிறைகளிலும் இப்படி ஒரு பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

அந்த முத்திரையைக் கைதியைப் பார்த்துவிட்டு வரும் வரையில் நாம் அழிக்காமல் வைத்திருக்க வேண்டும்.

சிறைக்குள் நுழையும் போது போடப்படும் இந்த முத்திரை நமக்கு சோழர் காலத்தில் கட்டாயமாகப் பிடித்து வரப்பட்டு தேவதாசிகள் ஆக்கப்பட்டவர்களுக்கும், நாசி சித்திரவதைக் கூடங்களில் யூதர்களுக்கும் இடப்பட்ட முத்திரைகளை நினைவூட்டுவது தவிர்க்க இயலாது.

மைசூர் சிறையைக் காட்டிலும் பராப்பன அக்ரகாரச் சிறையில் கெடுபிடிகள் அதிகம்.

சிறைகள் நவீனப்படுத்தப்பட படுத்தப்பட கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் (surveillances) அதிகமாகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி, நம்மூர் புழல் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சிறைகள் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.

பராப்பன அக்ரகாரச் சிறையில் கைதிகளைப் பார்ப்பதற்கு முன்பானசடங்குகளை முடிக்க சுமார் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

சிறைக் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் நமது பேராசிரியர் பாபையாவின் மாணவராக இருந்ததால், சற்றுக் கூடுதல் சலுகை அளிக்கப்பட்டும் கூட, எங்களுக்கும் சடங்குகளை முடிக்க மூன்று மணி நேரமானது.

க்யூவில் நின்று மனுக் கொடுத்து நமது இடது பெருவிரல் ரேகை, முகம் அனைத்தையும் நுண்ணிய கேமரா ஒன்றின் முன் அமர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்,

நமது தொலைபேசி எண் உட்பட முக்கிய விவரங்களையும் அத்துடன் பதிந்து ‘ப்ரின்ட் அவுட்’ ஒன்றைத் தருவார்கள்.

இதற்கான இடத்தில் க்யூவில்காத்திருந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதைதைக் கண்டோம்.

2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி நமது நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.4 சதம்.

ஆனால்,சிறைச்சாலைகளில் அவர்களின் பங்கு 50 சதத்திற்கும் மேல் என்பது நினைவுக்கு வந்தது.

விரல் ரேகை,முகப்பதிவு கொண்ட தாள்களை சிறை வாசலில் கொடுத்து விட்டு மீண்டும் காத்திருந்தால் வெகு நேரம் கழித்துச் சிறை அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பின் நமக்கு அழைப்பு வரும்.

கண்காணிப்பாளர்,பாபையாவின் மாணவர் என்பதால் நாங்கள் சற்று விரைவாக அழைக்கப்பட்டதோடு,

கண்காணிப்பாளரின் அறையிலேயே ஒருபுறம் அமர்ந்து சற்று ஆறஅமரப் பேசவும் முடிந்தது.

நாங்கள் உள்ளே நுழைந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் அப்துல் நாசர் மதானியைச் சக்கர நாற்காலியில் தள்ளி வந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒருவன் வீசிய குண்டு வீச்சில் வலது காலை இழந்தவர் மதானி. வழக்கு நடந்துக்கொண்டிருந்த போது குண்டு வீசியவன் வந்து அவாரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளான்.

அவனை மன்னித்ததோடு அவன் மீதான தனது குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்று வழக்கு தள்ளுபடி ஆவதற்குக் காரணமாக இருந்தவர் மதானி.

தூய வெள்ளுடையில் மலர்ந்த முகத்துடன் அருகில் நெருங்கிய மதானியைக் கண்டவுடன் அனைவரும்எழுந்து நின்றோம்.

துரும்பாய் இளைத்து இருந்தாலும் அவரது கண்களில் ஒளி குன்றவில்லை.

ஒவ்வொருவராக அருகில் சென்று அவரது கைகளைப் பற்றி அறிமுகம் செய்துக் கொண்டோம்.


Continued ……

UNMAIKAL said...

PART 2. அப்துல் நாசர் மதானியுடன் இரண்டு மணி நேரம். - அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

கண்காணிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்த பாபையா எழுந்தோடி வந்தார்.

மதானியின் அருகில்வந்தவுடன் அவருடைய கண்கள் கலங்கின.

கன்னங்கள் துடித்தன. அப்படியே அவரை மார்புறத் தழுவிக் கொண்டார்.

பார்த்திருந்த அனைவருக்கும் நெஞ்சு இரும்பாய் கனத்தது.

மனித உரிமைப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் சிறை அனுபவித்தவர் பேராசிரியர் பாபையா.

மார்க்ஸ், சுகுமாரன் என்று நாங்கள் பெயர்களைச் சொன்னவுடன் மதானி உடனடியாக எங்களை நினைவுகூர்ந்தார்.

கோவைச் சிறையில் இருந்த போது சுகுமாரன் அவரைச் சந்தித்துள்ளார்.


கோவைச் சிறையில் இருந்த அவரை உடல் நலம் கருதி பிணையில் விடுவிக்க வேண்டுமென நாங்கள் முன்னின்று தமிழ் எழுத்தாளர்களிடம் கையொப்பம் பெற்று வெளியிட்ட அறிக்கையை மதானி இருமுறை நினைவுகூர்ந்தார்.

அறிக்கையில் கலைஞரின் மகள் கனிமொழியும்கையெழுத்திட்டிருந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

பிரபஞ்சன், சாரு நிவேதிதா, வெளி ரங்கராஜன்,சுகிர்த ராணி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.

அடுத்த ஒன்றைரை மணி நேரமும் மெல்லிய குரலில் மதானி பேசிக் கொண்டிருந்தார்.

மதானி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்.

சுற்றிலும் நாற்காலிகளை நெருக்கமாகப் போட்டு நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்.

தற்போது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து மிக விரிவாக சொன்னார்.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவாக விளக்கினார்.

பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேர்களில் 31வது குற்றவாளியாக அவர் இணைக்கப்பட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட முக்கியமானவர்களில் ஓரிருவரை முன்னதாகத் தனக்குத் தெரியும் என்பதைத் தவிர இந்தக் குற்றச் செயலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும்,

இப்படியான ஒரு செயல் நடக்கப்போகிறது என்பது தனக்குத் தெரியாது என்பதையும் விரிவாக விளக்கிச் சொன்னார்.

விசாரணையில் இருக்கும் வழக்கு என்பதால் எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை.

எனினும் ஒன்றை மட்டும் இங்கு சொல்லியாக வெண்டும். முக்கிய குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தடியண்டவீடு நசீர் தங்களுடைய சதி குறித்து மதானிக்குத் தெரியுமெனக் கூறியுள்ளதாதாக விசாரணையின் போது மதானியிடம் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளனர்.

“நசீரை ஒருமுறை என்னிடம் அழைத்து வாருங்கள். உங்கள் முன் நான் அவரைக் கேட்கிறேன்” என மதானி வற்புறுத்தியுள்ளார்.

தயங்கிய புலனய்வுத்துறையினர் இறுதியாக வேறொரு சிறையில் இருந்த நசீரை முகமூடியிட்டு அழைத்து வந்து நிறுத்தியுள்ளனர்.

புனாய்வுத்துறையினர் முன்னிலையில் மதானி கேட்ட போது தான்அப்படிச் சொல்லவில்லை என நசீர் பதிலளித்ததோடு,

“உங்களை அரசியலில் இருந்து விலகச் சொல்லிப் பலமுறை எச்சரித்தேனே நான்” என்றும் கூறியுள்ளார்.

குற்றமற்ற என்னை ஏன் இப்படித் திரும்பத் திரும்பக் கொடுமைப் படுத்துகிறீர்கள் என மதானி கேட்டபோது விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒரு கணம் அமைதியாய் இருந்தபின் இப்படிச்சொல்லியுள்ளார்.

“இந்தப் பிறவியில் நீர் ஏதும் குற்றம் செய்யாதிருக்கலாம். போன பிறவியில் செய்திருப்பீர். அந்தப் ‘பூர்வ கர்மா’வின் பலனை இப்போது அனுபவிக்கிறீர்.”

வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டால் கோவை வெடிகுண்டு வழக்கில் அவர் எப்படிக் குற்றமற்றவர் என்று விடுதலைச் செயப்பட்டாரோ அதேபோல் இதிலும் விடுதலை செய்யப்படுவது உறுதி.

ஆனால்,பராப்பன அக்ரகாரச் சிறை வளாகத்தில் இருந்து செயல்படும் தனிநீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்கத் தயாராக இல்லை.

குற்றம்சட்டப்பட்ட பலரும் வெவ்வேறு சிறைகளில் இருப்பதைக் காரணம் காட்டி விசாரணையை இழுத்தடிக்கிறார்கள்.

அதேநேரத்தில் படிப்படியாக மோசமாகிக் கொண்டிருக்கும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு,அவரைப் பிணையில் விடுதலைச் செய்ய அரசும், நீதிமன்றமும் தயாராக இல்லை.

கடும் இருதய நோய், முற்றிய நீரிழிவு நோய், நீரிழிவினால் ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பு, முதுகுத்தண்டுத் தேய்வு என்பவற்றோடு, எல்லாவற்றுக்கும் மேலாகப் பெங்களூருச் சிறைவாசம் இன்று அவர் கண் பார்வையைப்பறித்துள்ளது.

வலது கண் பார்வை முற்றிலும் பறிபோய்விட்டது.

இடது கண்ணில் 20 சதப் பார்வைதான் எஞ்சியிருக்கிறது.

நீரிழிவுனால் ஏற்பட்ட இந்த பார்வைக் குறைவுக்கு உரிய நேரத்தில் லேசர் சிகிச்சை அளித்திருந்தால இன்று அவர் பார்வை காப்பாற்றப்பட்டிருக்கும்.

துண்டாடப்பட்டு முழங்காலுக்கு மேல் எஞ்சியிருக்கும் அவரது வலது காலின் மேல்புறம் உணர்ச்சியற்றுப் போயுள்ளது. உள்ளே கடுமையான வலி.

கேரளம் சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்தால் நிச்சயம் பலனிருக்கும் என அவர் நம்புகிறார்.

ஆனால், கர்நாடக அரசும், நீதிமன்றமும் அனுமதி அளிக்கவில்லை.


Continued ….

UNMAIKAL said...

PART 3. அப்துல் நாசர் மதானியுடன் இரண்டு மணி நேரம். - அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

உச்சநீதிமன்றம் வரை சென்று வேண்டிய போது பெங்களூரிலேயே ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உத்தரவு கிடைத்தது.

70 ஆயிரம் ரூபாய் அளவில் முடிய வேண்டிய சிகிச்சைக்கு அங்குள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவ மனை எட்டரை லட்ச ரூபாய் ‘பில்’ கொடுத்தது.

ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டுமெனவும்,

ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை முழு சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும் எனவும்

அந்த வைத்தியசாலை வலியுறுத்தியும் சிறை அதிகாரிகள் ஒருமுறை கூட அவரைப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை.

உள்ளூர் மருத்துவமனை ஒன்றிற்குக் கண் மருத்துவத்திற்காக அனுப்பப்பட்ட போது,

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அடுத்த நாள் அவரது வலது கண் பார்வை முற்றிலும் அழிந்து போனது.

இப்படி அவரது உடல் அவயவங்களை ஒவ்வொன்றாகச் சிறை வாழ்க்கை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து மிக விரிவாக அவர் சொன்னார். மிக மிகச் சுருக்கமாகவே நாங்கள் இங்குக் குறிப்பிட்டுள்ளோம்.

கடைசியாக அவர் சொன்னது எங்கள் எல்லோரது கண்களையும் கசிய வைத்தது.

“எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை நோன்பு நாட்களில் குனிந்து தொழவும் என்னால் முடியவில்லை.

ஆனால், அல்லாஹ்வின் அருளால் மன உறுதியை மட்டும் நான்இழக்கவில்லை. என் மனம் தளர்ந்துவிடவில்லை.

உடல் உபாதைகளையும் கூடத் தாங்கிக்கொள்கிறேன்.

ஆனால் கண் பார்வை இழந்ததைவிடவும் என்னால் தாள முடியாத வேதனையாகஇருப்பது எனக்குள்ள மலச் சிக்கல்தான்.

சாப்பிட்டு இரண்டு நாளானாலும் மலம் கழிவதில்லை. திடீரென இரவு நேரங்களில் என்னை அறியமலேயே மலம் கழிந்துவிடுகிறது.

அந்த நேரத்தில் என்னையும் என் படுக்கையும் என்னால் சுத்தம் செய்துக் கொள்ள முடிவதில்லை.

இரவு நேரத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் அதைச் செய்ய முடியாது.

நகர வேண்டுமானால் எனது வலது செயற்கைக் காலைப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

தண்ணீரை எடுப்பது, கழுவுவது எதையும் தனியாகச் செய்ய முடியாது. இரவு முழுக்க அப்படியே கிடக்கவும் முடியவில்லை. இந்தக் கொடுமையைதான் என்னால் தாங்க முடியவில்லை.”

அந்த அறையில் ஒரு கணம் இறுக்கமான அமைதி நிலவியது.

நாங்கள் என்ன ஆறுதல் அவருக்குச் சொல்ல முடியும்.

நேரமாகிவிட்டது என்பதைத் தெரிவிப்பதற்காகக் கண்காணிப்பாளர் ஒருமுறை அங்கு வந்து எங்களைப் பார்த்துப் புன்முறுவலித்துச் சென்றார்.

நாங்கள் புறப்படத் தயாரானோம்.

“நான் ஒன்பதரை ஆண்டுக் காலம் கோவைச் சிறையிலிருந்தேன். சிறையில் இருந்தது என்பதைத் தவிர எனக்கு வேறெந்தப் பிரச்சினையும் இல்லை.

அதிகாரிகள் என்னிடம் அக்கறையுடன் நடந்துக் கொண்டார்கள்.

தமிழ்நாட்டு ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் என்னிடம் அக்கறையாக நடந்து கொண்டார்கள்.

சிறையில் நான் எதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.

இங்கே எல்லாம் தலைக்கீழ். என்னுடைய ‘செல்’ அருகில் ஒரு பூனைக்குட்டிஇருக்கிறது.

அதுவொன்றுதான் இங்கே காசு கேட்பதில்லை.

இங்குள்ள ஊடகங்களும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் என்னைப்பற்றி மோசமாக எழுதுகின்றன.”

மெல்லிய குரலில் எல்லாவற்றையும் எளிய ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் மதானி.

நாங்கள் எழுந்து நின்றோம்.

குனிந்து ஒவ்வொருவராக அவரைத் தழுவிக் கொண்டோம்.

நகர மன்மின்றி நகரத்தொடங்கிய போது அவர் குரல் எங்களை அழைத்தது “நீங்கள் வந்து சென்றது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.

நீங்கள் நாளை நடத்த உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லப் போகிறவை எனது சிகிச்சைக்கும்,

நான் பிணையில் விடுதலைப் பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒருவேளை அந்தப் பயன் எனக்குக் கிடைக்காமலும் போகலாம்.

ஆனால் நீங்கள் வந்ததே எனக்குப் பெரும் பயன்தான்.

அல்லாஹ்வின் அருளால் நான் விடுதலையாகி வெளியே வந்தால்,என்னுடைய எஞ்சிய வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செலவிடுவேன். அவர்களோடு வாழ்ந்து மடிவேன்.”

மதானியின் ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’, தலித், முஸ்லிம் ஒற்றுமையை முன்னெடுத்துப் பேசுகிற ஒன்று.

அவரது நிறுவனங்களின் மூலம் பெரிய அளவில் தலித்கள் பயனடைகின்றனர்.

நாங்கள் படிகளில் இறங்கிக் கீழுள்ள பேரேட்டில் கையெழுத்திட்டோம்.

எங்களது செல்போன்களைப் பெற்றுக் கொண்டோம்.

கையிலுள்ள முத்திரை அடையாளத்தைக் கத்தி பொருத்திய துப்பாக்கியுடன் இருந்த காவலரிடம் காட்டிய பின் கதவு திறந்தது..

ஏதோவொரு கொண்டாட்டத்திற்காக ஒளி அலங்காரம் செய்வதற்கென சீரியல் விளக்குகள் சிறை வாசலில் வந்து இறங்கி இருந்தன.

எதற்காக இருக்கும் என நாங்கள் சற்று வியப்புடன் நோக்கிய போது மிகப் பெரிய அலங்கரிக்கப்பட்ட ஒரு வண்ண விநாயகர் சிலையை சுமார் 10 கைதி வார்டர்கள் சுமந்துவந்து கொண்டிருந்தனர்,

ஓ! நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி அல்லவா?

suvanappiriyan said...

அஞ்சா சிங்கம்!

//இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் கார் ஓட்டுவதை பார்த்திருக்கிறேன் . அதை தவறு என்று சொல்கிறீர்களா . எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் "குண்டி காய்ந்தால் குதிரையும் புல்லை திங்கும்" என்று இது அரேபிய குதிரைக்கும் பொருந்தும் தானே .//

பெண்கள் கார் ஓட்ட இஸ்லாம் தடை செய்யவில்லை. வெளி பயணங்களுக்கு தனியாக செல்லாமல் கணவன், சகோதரன், தகப்பன் போன்ற துணைகளோடு செல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறது. அந்த பெண்களின் பாதுகாப்பை கருதி.

//எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் "குண்டி காய்ந்தால் குதிரையும் புல்லை திங்கும்" என்று இது அரேபிய குதிரைக்கும் பொருந்தும் தானே . //

இதில் என்ன சந்தேகம்!

suvanappiriyan said...

சகோ அஜீம் பாஸா!

//உங்கள் பதிவுகளுக்கு எதிராக பின்னூட்டம் இட்டே உங்களை இத்தனை பிரபலமாக்கிய எதிர் கருத்துள்ள பதிவர்களுக்கு நன்றி.//

இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதல்களே 90 சதமான மாற்று மதத்தவர் மனதில் குடி கொண்டுள்ளது. இது போன்ற பதிவுகள் அதனை ஓரளவு களையும். எனவே மாற்று கருத்துடையவர்களை வரவேற்போம். பண்போடு அவர்களுக்கு பதிலும் கொடுப்போம.

suvanappiriyan said...

சகோ ஆஷா ஃபர்வீன்!

வஅலைக்கும் சலாம்!

//அருமையான பதிவு சகோதரரே....

மாஷா அல்லாஹ்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//ஏனைய வளைகுடா நாடுகளில் அலுவலகம் முழுக்க முகமூடி போட்டுக்கொண்டு பெண்கள் பணி புரிவதில்லை என நினைக்கின்றேன்.அவரவர் விருப்பப்படி தலையை மட்டும் துணியால் மூடிக்கொண்டோ அல்லது படத்தில் உள்ளபடி ஒரு சில பெண்களோ அல்லது பாப் கட் தலைமுடியுடன் நவீன உடையெனவே பெண்கள் காட்சியளிக்கிறார்கள்.//

ஆண்கள் பழகும் இடங்களில் சவுதி பெண்கள் மட்டுமே கண்கள் தவிர்த்து முகத்தையும் மூடிக் கொள்வர். மற்ற வெளிநாட்டு பெண்களான எகிப்து, பிலிப்பைன், ஜோர்டான் நாட்டு பெண்கள் முகத்தை திறந்த வாறு சர்வ சாதாரணமாக செல்வதை பார்க்கலாம். சவுதி பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்பியவர்கள் மூடிக் கொள்வார்கள்

//எங்கே நீங்கள் சொன்ன அடைப்பானை வவ்வால் குறிப்பிட்டார் என்பதை தெரிவித்தால் அங்கே போயும் அவர் தலையில் ஒரு கொட்டு வைக்கலாம் என நினைக்கின்றேன்:)//

எங்காவது பறந்து கொண்டிருப்பார். வலை வைத்து பிடித்து கொட்டி விடுங்கள். :-)

//கைரேகை முறை மிகவும் அரத புராதன அறிவியல் முறை.துபாய் போன்ற விமான நிலையத்தில் கணநேர கண்ரேகை முறை பிரபலமாக புதிய முறை வந்து விட்டது.//

நான் துபையை ஒப்பிட வில்லையே! கை ரேகை முறையை நமது நாட்டில் இன்னும் ஏன் நடைமுறையில் கொண்டு வரவில்லை என்பதே எனது கேள்வி. இதனால் பல குழப்பங்கள் தீர வழி உண்டல்லவா?

//தற்போதைய சூழலில் பெட்ரோல் இல்லாமல் போனால் குடி மூழ்கி போய் விடும் என்பதோடு,கப்பல்,விமானம் என அனைத்தும் மூழ்கிப் போய் விடும் எனப்தே உண்மை//

நான் சொன்னது சவுதி பொருளாதாரத்தை உத்தேசித்து. பெட்ரோல் தீர்ந்தால் உலக நாடுகள் அனைத்துக்கும் பிரச்னைதான். பிறகென்ன...பழையபடி சைக்கிள், மாட்டு வண்டி, குதிரை வண்டி....என்று பழமைக்கு திரும்ப வேண்டியதுதான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ராவணன் said...

அண்ணாச்சிக்கு என் மேல ரொம்பப் பாசம்.

என்னைக்கோ எங்கோ நான் கூறியதை இன்னமும் பிடித்துத் தொங்குவதைப் பார்க்கும்போது நீங்கள் வவ்வால் இனமாக இருக்ககூடும் என்றே நினைக்கின்றேன்.

பாத்து அண்ணாச்சி...ஓவரா தொங்கினா மூளை வெடிச்சிடும்.

ராவணன் said...

அண்ணாச்சி நான் யாருன்ன உங்களுக்குத் தெரியும்...நீங்க யாருன்ன எனக்குத் தெரியும். பின்ன எதுக்கு அண்ணாச்சி இதெல்லாம்?

உதயம் said...

அ.மார்க்ஸின் கட்டுரையிலிருந்து இன்னும் என்னால் மீளமுடியவில்லை. எப்பேர்பட்ட நயவஞ்சகம்? அவரை சாகும் வரை சிறையிலிட்டு துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறொன்றுமில்லை.

அவர் செய்த ஒரே தவறு, ஒடுக்கப்பட்ட தலித் மக்களையும் நசுக்கப்படும் முஸ்லிம்களையும் இணைத்து அரசியல் செய்ய முயன்றது தான். அவரது பேச்சை கேட்டிருக்கிறேன், சிங்கம் கர்ஜிப்பது போல இருக்கும், என்ன ஒரு ஆளுமை, தேஜஸ். அவரை சந்தித்தபின்னர் தான் "பழநிபாபா" முஸ்லிம் ஜமாத்களையும் தலித்களையும் ஒருங்கிணைக்கும் பணியில் முயற்சியை மேற்கொண்டிருந்தார். அதிமுக விலிருந்து திமுக வை சாடிய போதும், திமுக விலிருந்து அதிமுக வை சாடிய போதும் சரி, ஊர்தோறும் போய் இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளை சாடிய போதும் சரி, பழநி பாபாவின் உயிருக்கு பெரிய ஆபத்து வந்ததில்லை. ஆனால், முஸ்லிம்களையும் தலித்களையும் ஒன்றிணைத்து அரசியல் செய்ய துவங்கியவுடனே அவரை கொன்று விட்டார்கள். இதெல்லாம் யார் செய்கிறார்கள் என்றும், இப்போது வரை இந்திய உயர்பதவிகளையும் உள்துறையையும், உளவு துறையையும் யார் வைத்துள்ளார்கள் என்றும், இந்தியாவை மறைமுகமாக யார் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் உங்களுக்கெல்லாம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

கோவி.கண்ணன் said...

//இதற்கு பதிலளிக்கும் முகமாக மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.//

யார் வேண்டுமானாலும் சந்தேகம் கேட்கலாம் நாங்கள் பொருமையின் சிகரம் என்று நீங்கள் அடிக்கக்கடி கூறுவதால், மேற்கண்ட கூற்றை ஒட்டி சந்தேகம் கேட்கலாம் என்று உள்ளேன்.

இறந்த இஸ்லாமியரின் இறுதி சடங்கில் (ஜன்சா) வயிற்றை அமுக்கி உள்ளே உள்ளதையெல்லாம் வெளிய எடுத்து, மேற்கொண்டு எதுவும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு தான் தான் அடக்கம் செய்வார்கள் என்று எப்போது ஒரு பதிவில் படித்த நினைவு, விரல் நுனியை கூட மறுசீரமைக்கிற கடவுள், அடக்கம் செய்யும் உடலுக்குள் என்ன இருந்தால் என்ன ? அப்படியே இருந்தாலும் அவை மக்கிப் போவதற்கு எடுக்கும் நாட்கள் எத்தனை ? சொர்கத்துக்கு எழுப்பும் முன் அவற்றையெல்லாம் களைந்துவிட்டு கூட்டிச் செல்ல முடியதா ? இந்த உவ்வே சமாச்சாரம் சடங்காக செய்ப்படுவது அரேபிய முறைகளைப் பின்பற்றியதா ?

இந்த உவ்வே வேலையை செய்ய தனியாக ஆட்கள் இருக்கிறார்களா ?

suvanappiriyan said...



கோவி கண்ணன்!

//இறந்த இஸ்லாமியரின் இறுதி சடங்கில் (ஜன்சா) வயிற்றை அமுக்கி உள்ளே உள்ளதையெல்லாம் வெளிய எடுத்து, மேற்கொண்டு எதுவும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு தான் தான் அடக்கம் செய்வார்கள் என்று எப்போது ஒரு பதிவில் படித்த நினைவு, விரல் நுனியை கூட மறுசீரமைக்கிற கடவுள், அடக்கம் செய்யும் உடலுக்குள் என்ன இருந்தால் என்ன ? அப்படியே இருந்தாலும் அவை மக்கிப் போவதற்கு எடுக்கும் நாட்கள் எத்தனை ? சொர்கத்துக்கு எழுப்பும் முன் அவற்றையெல்லாம் களைந்துவிட்டு கூட்டிச் செல்ல முடியதா ? இந்த உவ்வே சமாச்சாரம் சடங்காக செய்ப்படுவது அரேபிய முறைகளைப் பின்பற்றியதா ?//

சுத்தம் ஒரு மனிதனுக்கு அவசியம். எனவே இறந்த பிறகும் அவருக்கு பிரார்த்தனை புரிவதற்காக பள்ளி வாசலுக்கு அந்த உடலை எடுத்துச் செல்வர். பள்ளியில் அந்த உடலை முன்னால் வைத்து எல்லோரும் கூட்டாக ஒரு தொழுகையை நடத்துவர். மனித உடல் இறந்தவுடன் அந்த அதிர்ச்சியில் சிறிது மலமோ சிறு நீரோ வெளியாகி விடும். அது உடலை அடக்கும் வரை அப்படியே விட்டால் துர்வாடை வர ஆரம்பித்து விடும். எனவே தான் அந்த உடலை தண்ணீரால் குளிப்பாட்டி வயிற்றை மெல்ல அழுத்தி அசுத்தங்களை வெளியேற்றுவர்.

இறந்த உடலை குளிப்பாட்டும் போது வலது பக்கமாக ஆரம்பிக்கவேண்டும் என்று ஹதீஸ் வந்திருப்ப பதால் கை, கால்களை வலது பக்கமாக கழுவதால் ஆரம்பிக்க வேண்டும். இன்னும் ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை கழுவ வேண்டும். ஒவ்வொரு தடவையும் வயிற்றை அழுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மூன்று தடவைக்குமேலும் அசுத்தங்கள் வெளியாகி கொண்டிருந்தால் தேவைக்கேற்ப ஒற்றைப் படையாக கழுவிக் கொள்ளலாம் என ஹதீஸில் வந்திருக்கிறது.

கடைசியாக கழுகும்போது துர் வாடைகளை நீக்கி விடுவதற்காக கற்பூரத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பலமுறை கழுகியும் அசுத்தங்கள் வெளியாகிக் கொண்டிருந்தால் அந்த பகுதியில்பஞ்சை வைத்து அடைத்து விட்டு அசுத்தம் வெளியான அந்த இடத்தை மட்டும் கழுகிவிட்டு மறுபடியும் ஒழு மட்டும் செய்து விட்டால் போதுமானது குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் வெள்ளைத் துணி (கஃபன்) அணிவித்த பிறகும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் மறுபடியும் கழுவி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

//இந்த உவ்வே சமாச்சாரம் சடங்காக செய்ப்படுவது அரேபிய முறைகளைப் பின்பற்றியதா ?//

முகமது நபியின் கட்டளைப்படி செய்யப்படுகிறது.


//இந்த உவ்வே வேலையை செய்ய தனியாக ஆட்கள் இருக்கிறார்களா ?//

இதற்கென்று தனியாக ஆட்களை வைக்கச் சொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. சட்டம் தெரியாதவர்கள் ஊரில் குளிப்பாட்டுவதற்கென்று சிலரை அழைத்து அவர்களுக்கு பணம் கொடுப்பது உண்டு. ஆனால் இறந்த உடலை சொந்த ரத்த பந்தங்கள்தான் குளிப்பாட்ட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது..

கணவன் தன் மனைவியையும் மனைவி தன் கணவனையும் குளிப்பாட்டலாம் .

நபி அவர்கள் தமது மனைவி ஆயிஷா அவர்களிடத்தில் கவலைப் படாதீர்கள் எனக்கு முன்னால் நீங்கள் இறந்து விட்டால் நானே உங்களை குளிப்பாட்டுவேன் என்று கூறினார்கள்(ஆதாரம் :அஹ்மத்)

அபூபக்கர் அவர்கள் நான் இறந்த பின் எனது மனைவிதான் பின் என்னை குளிப்பாட்டவேண்டும்என்று வஸிய்யத் செய்து இருந்தார்கள்.(ஆதாரம் : முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)

உவ்வே சமாசாரம் என்று முகத்தை சுழிப்பது ஏன்? எல்லா மனிதனுக்கும் இந்த இயற்கை உபாதை உள்ளதுதானே! ஒவ்வொரு மனிதனும் அதனை சுமந்து கொண்டுதான் 'தன்னை போல் உண்டா' என்று பெருமையோடு உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

Anonymous said...

You better settle in saudi.
For India's sake, please dont come back.
India subitchamadaiyum. :)

suvanappiriyan said...

//You better settle in saudi.
For India's sake, please dont come back.//

நான் எங்கு செட்டில் ஆவது என்பதை தீர்மானிக்க வேண்டியது நானே! எனது தாய் நாட்டுக்கு வருவதற்கு எந்த வந்தேறிகளின் அனுமதியும் எனக்கு தேவையில்லை.

//India subitchamadaiyum. :)//

எப்படி? ஒரு தலித் பெண்ணை பத்து பேர் கற்பழித்து அதை மொபைலிலும் அனுப்பி அந்த பெண்ணின் தந்தையை தற்கொலை செய்ய வைத்தது போலவா? :-)))))

அஜீம்பாஷா said...

'இறந்த இஸ்லாமியரின் இறுதி சடங்கில் (ஜன்சா) வயிற்றை அமுக்கி உள்ளே உள்ளதையெல்லாம் வெளிய எடுத்து, மேற்கொண்டு எதுவும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு தான் தான் அடக்கம் செய்வார்கள் என்று எப்போது ஒரு பதிவில் படித்த நினைவு, விரல் நுனியை கூட மறுசீரமைக்கிற கடவுள், அடக்கம் செய்யும் உடலுக்குள் என்ன இருந்தால் என்ன ? அப்படியே இருந்தாலும் அவை மக்கிப் போவதற்கு எடுக்கும் நாட்கள் எத்தனை ? சொர்கத்துக்கு எழுப்பும் முன் அவற்றையெல்லாம் களைந்துவிட்டு கூட்டிச் செல்ல முடியதா ? இந்த உவ்வே சமாச்சாரம் சடங்காக செய்ப்படுவது அரேபிய முறைகளைப் பின்பற்றியதா ?

இந்த உவ்வே வேலையை செய்ய தனியாக ஆட்கள் இருக்கிறார்களா ?'

விரைவில் சகோதரர்.கோவி.கண்ணன் மவுலவி. அப்துல் ஜப்பார் ஆக வேண்டுகிறேன்.

Nasar said...

திரு.கண்ணன் பாய் அவர்களே...
நல்ல கேள்வி...நல்ல சந்தேகம்..
நான் அறிந்திடாத விடயம்,சரி என்னுடன் பணிபுரியும் குவைத்திகளிடம், மஸ்ரிகளிடம் கேட்டு தெளிவு பெறுவேன்,,,
பெட்ரோல் சுத்தமாக இல்லைஎன்றாலும், எத்தியோபியாவைப்போல அரபிகள்
இருக்கமாட்டார்கள் மற்றும் இப்போதுள்ள ஆடம்பரமும் இருக்காது என்றே நினைக்கிறேன் ஏன்னா பார்பதற்கு அரபிகள் இன்னோசெண்டாக இருந்தாலும்
தங்கள் நாட்டில் பெட்ரோல் இல்லை என்றல் நாளை நம் கதி என்னவாகும்
என்பதை பெரும்பாலான அரபிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்..அப்போ அரசாங்கத்துக்கும் தெரியாமலா இருக்கும் ..??!!
நான் நேரில் பார்த்தவரை சவுதியில், HAIL,BURAITHA,KASIM,AFQAIK,ABHA,TAIF
JEZAN போன்ற இடங்களில் நல்ல கோதுமை விளைச்சல் உண்டு மேலும் ஜோர்டான் எல்லையில் உள்ள தபூகில் மிகப் பெரிய பண்ணை நிலங்கள் உண்டு ஒவ்வெரு பண்ணையிலும் குறைந்தது 1000 பேர்களாவது வேலை செய்வதை நான்நேரிலகண்டிருக்கிறேன் கோதுமை,பேரிச்சம்,ஆப்பிள்,பேரிக்காய்,பிளம்ஸ், அப்ரிக்கட்,திராட்சை,ஆலிவ் மரங்களை ABHA மற்றும் TABUQ ஆகிய இடங்களில் அதிகமாக விளைகிறது. SO சவூதியை பொறுத்தவரை உணவுக்கு பஞ்சம் இருக்காது..
குவைத்தில் விளை நிலங்கள் ரொம்ப கம்மி..

Nasar said...

சகோ அசிம் பாஷா ...
கண்ணன் கேட்ட கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரிந்திருந்தால்
அழகான முறையில் பதில் கொடுத்திருக்கலாமே ....!! இப்படி சொல்வது தவறாக படவில்லையா..??!!
மாற்றார்கள் இஸ்லாம் குறித்தான கேள்விகளுக்கு நம்மால் முடிந்தவரையில்
அழகான முறையில் பதிலளித்தால், துவேசம் இல்லாமல் நட்புடன் பழகுவார்கள்...அவர்கள் இஸ்லாத்தில் வருவது வராததும் நம் கையில் இல்லை..செய்தியை ஏத்திவைப்பது தான் நம் கடமை ,,,,,,,

--

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்.

///விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகள் எல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் இறைவன் ஏன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?

மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.///

-----கண்ணை வைத்து.... டி என் எ வை வைத்து... போன்றவை எல்லாம் இன்றைக்கு அதிநவீன அடையாளப்படுத்தும் ஒன்றாக இருந்தாலும்... அன்றைய சிந்திக்கும் மக்களுக்கு எளிதாக கண்ணுக்கு தெரிந்து புரியும் வகையில்... ஓர் உதாரணம்... விரல் நுனி.. (ரேகை) இப்படியாக சொல்லப்பட்டு இருக்கலாம்..! இறைவனே சரியான விளக்கம் அறிந்தவன்..!

நல்லதொரு சிந்தனையை ஊட்டும் சிறப்பான பதிவு. நன்றி சகோ.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//-----கண்ணை வைத்து.... டி என் எ வை வைத்து... போன்றவை எல்லாம் இன்றைக்கு அதிநவீன அடையாளப்படுத்தும் ஒன்றாக இருந்தாலும்... அன்றைய சிந்திக்கும் மக்களுக்கு எளிதாக கண்ணுக்கு தெரிந்து புரியும் வகையில்... ஓர் உதாரணம்... விரல் நுனி.. (ரேகை) இப்படியாக சொல்லப்பட்டு இருக்கலாம்..! இறைவனே சரியான விளக்கம் அறிந்தவன்..!//

நீங்கள் சொல்வது போல் இவை எல்லாம் நவீன கண்டுபிடிப்புகள். முகமது நபி காலத்துக்கு முன்பிருந்தே இன்று வரை மனிதனை பிரித்தறியும் சாதனமாக கை ரேகைகள் இருந்து வருகின்றது. எல்லா காலத்து மக்களுக்கும் பொருந்தக் கூடிய உதாரணத்தை இங்கு இறைவன் உபயோகப்படுத்தியிருக்கலாம். இறைவனே அறிந்தவன்.

suvanappiriyan said...

//கண்ணன் கேட்ட கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரிந்திருந்தால்
அழகான முறையில் பதில் கொடுத்திருக்கலாமே ....!! இப்படி சொல்வது தவறாக படவில்லையா..??!!
மாற்றார்கள் இஸ்லாம் குறித்தான கேள்விகளுக்கு நம்மால் முடிந்தவரையில்
அழகான முறையில் பதிலளித்தால், துவேசம் இல்லாமல் நட்புடன் பழகுவார்கள்...அவர்கள் இஸ்லாத்தில் வருவது வராததும் நம் கையில் இல்லை..செய்தியை ஏத்திவைப்பது தான் நம் கடமை //

சகோ நாசர் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். நமது வாதங்களையும் விளக்கங்களையும் அழகிய முறையில் வைக்கச் சொல்லியே குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது. இதை நமது சகோதரர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

Anonymous said...

Kavya says:
September 27, 2012 at 10:56 am

நான் எழுதியது மறுபடியும் புரிய வில்லை; அல்லது தவறாகப் புரியப்பட்டிருக்கிறது.

வாதியிடம் வாதமிருக்கிறது. பிரதிவாதியிடமும் உண்டு. ஆனால் வாதியின் கட்சி மட்டுமே கேட்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டால் அத்தீர்ப்பு தீர்ப்பன்று. அது சதி என்பதே நான் சொன்னது.

இருவருக்கும் நோட்டீசு அனுப்பி, பின்னர் ஒருவர் மட்டுமே வந்து வாதிட, இன்னொருவர் நோட்டிசையை வாங்கியும் வராமலிருக்க, அல்லது நோட்டிசை ஏற்க மறுத்து வராமலிருந்தால் மட்டுமே நீதிபதிக்கு ex parte (ex party is wrong spelling) தீர்ப்பு வழங்க அதிகாரம். . ஆனால் சூழ்ச்சி செய்து அன்னோட்டீசை ஒருவருக்கு மட்டுமே அனுப்பி இன்னொருவர் பெறவிடாமல் தடுக்கப்பட்டு. பின்னர் அது நீதிபதிக்குத் தெரியவந்தால், அவர் மறு தீர்ப்பு வழங்கலாம்.

சம்பந்தர் எழுதியது மட்டுமே இருக்கிறது. சமணர்கள் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் விரட்டியடிக்கப்பட்டது மட்டுமில்லாமல், அவர்கள் எழுதிய நூல்களையும் எரித்தார்கள்; எறிந்தார்கள் இந்த தமிழ்த்துரோஹிகள்.

அவர்கள் எழுதிய எஞ்சிய நூல்களே நாலடியார்; சிறுபஞ்சமூலம்; நாண்மணிக்கடிகை; திருகடுகம் போன்றவை. அனைத்தும் நீதி நூல்கள்.
சமணர்களுக்கு எதிராக நல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டு அழிக்கப்பட்டார்கள். இச்சதிக்கு காவியுடை அணிந்த முற்றும் துறந்த முனிவர் சம்பந்தர் தலைமை தாங்க, சதியை நடாத்திவர்கள் பாண்டியனின் துணைவி மங்கையர்க்கரசியார், மற்றும் பரஞ்சோதி.

சம்பந்தர் தமிழுக்கு எதிராகவும் நின்றார் எனலாம். அவர் சமணர்களைக் கீழ்த்தரமான தமிழிலும் திட்டியவர்.

தமிழக வரலாறு வெற்றியடைந்தோராரால் எழுதப்பட்டது அவர்களுக்கு வசதியாக. அதைத்தான் நாம் படிக்கிறோம். அல்லது படித்துத்தொலைக்கவேண்டும் !

Anonymous said...

K A V Y A says:
September 24, 2012 at 4:46 pm

லெட்சுமணனின் பிரச்சினை ஒரு கட்டுரையைத் தவறாகப்படிப்பதிலேயே வருகிறது. கட்டுரைப்பொருள் தமிழ். வரலாறன்று. தமிழ்மொழியே.

சமணர்கள் தீவைத்தனர் என்று சொல்லியிருக்கலாம். தீ வச்சுப்புட்டானுக என்று சொல்லல் ஒரு தமிழாசிரியருக்கு அழகன்று.

மேலும், வரலாற்றையேப்பார்த்தாலும், அவரின் வழி தவறானதாகும். ஒரு ‘தீவிர ஹிந்து’ சம்பந்தர் சொன்னாரென்று சமணர்களை கொடியவர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். அவரின் சஹ ஹிந்துக்கள் கைதட்டி மகிழவார்கள். நாமெவரும் அன்று என்ன நடந்தது என்று சொல்லவியலாது. நாம் பார்க்கவில்லை. சம்பந்தர் எழுதிவைத்தார். சமணர்கள் எழுதி வைத்தனரா? எழுதிவைத்திருந்தால், இவர் சொல்வது பொய்யா? அவர்கள் சொல்வது பொய்யா என்ற கேள்வியெழும். கண்டிப்பாக சம்பந்தர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள்.

வழக்கில் இருவர்; ஒருவர்தான் ஆஜராகிரார். மற்றவர்கள் என்ன காரணத்தினாலோ ஆஜராகவில்லை. நீதிபதி ஆஜரானவர் சொன்னதை மட்டுமே ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கினால் அத்தீர்ப்பு சரியாக இருக்குமா?

சமணர்கள் அழிக்கப்பட்டனர். அல்லது விரட்டப்பட்டனர். அந்நிகழ்ச்சியை வரலாறாக எழுதக்கூட செய்யவிடாமல் விரட்டப்பட்டனர். இப்படியிருக்க சம்பந்தர் சொன்னதை மட்டுமே இழுத்துப்போட்டு வரலாற்றை ஜோடித்தால் எல்லாரும் ஒருவேளை தீவிர ஹிந்துக்களாகிவிடுவர் என்று நினைப்பு போலும் !

ஒரு ஆசிரியர் மாணாக்கருக்கு வரலாற்றுப்பாடம் சொல்லித்தரும்போது எந்த பக்கமும் சாராமல் மாணாக்கரைத் தாமே ஒரு முடிவுக்கு வரச்செய்ய உதவும்படி எல்லாக்கருத்துக்களையும் அவர்களுக்கு விளக்க வேண்டும். அவ்வளவுதான். மாறாக அவரே ஒரு பக்கம் நின்று மற்றொரு பக்கத்தைத் தூடனை செய்தால், அவர் மாணாக்கரை உருவாக்க மாட்டார். தீவிரவாதிகளைத்தான் உருவாக்குவார்.

சமணர்களை இழித்துரைக்கும் இவரின் மாணாக்கர்களை நினைத்தால் மனம் பதறுகிறது.

UNMAIKAL said...

PART 1. ஆர்.எஸ்.எஸ். வேலாயுதன் - ‍ நாஸர் மதானி.

நாஸர் மதானியை சந்திப்பதற்கு முன்னால் முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம்

முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு;


அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும் தான் எனது முழுநேர தொழிலாக மாறியது. – R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதன்.

எனது வாழ்க்கையில் முதல் முதலாக பழகிய இரண்டு முஸ்லிம் நண்பர்கள் தாம் ரபீக்கும், அஃப்சலும்.

ஒரு நாள் இவர்கள் என்னிடம், "வேலாயிதா, நீ மஹ்தனியோடு சேர்ந்து நின்று பணியாற்று. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் பிஜேபி க்கும் பதிலடி கொடுப்பவர் அவர்தான்" என்று சொன்னார்கள்.

ஒரு இரவில் அவர்கள் என்னை மஹ்தனியைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார்கள். அன்று தான் முதன் முதலாக முஸ்லிம் நண்பர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

மஹ்தனியின் அந்த விகாரமான தோற்றத்தை பார்ப்பதற்கு எனக்கு ஒரு வித அச்சமாகத்தான் இருந்தது.

தலித் இனத்தை, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த என்னை அவர் ஏற்றுக்கொள்வாரா? என்னிடம் பேசுவதற்கு விருப்பப்படுவாரா? என்றெல்லாம் எனது மனம் கலங்கியது.

இவ்வாறாக ஒரு விதத்தில் எர்ணாகுளம் ஃபிரீடம் சாலையில் இருக்கின்ற என்.எம்.மெஹ்பூபின் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். வீட்டின் மேல் மாடிக்கு என்னை அழைத்துச் சென்று தனிமையாக ஓரிடத்தில் உட்கார வைத்தார்கள்.

நாஸர் மஹ்தனியை பார்ப்பதற்கு ஒரு வித அச்சமாகத்தான் இருந்தது.

ஏனென்றால் நானும் ஓர் ஆர்.எஸ்.எஸ். காரனாகத்தானே இருந்தேன்.

மஹ்தனி மீது வெடிகுண்டு எறிந்து அவரது காலை முறித்தது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா?.

என்னை ஏதாவது செய்யப்போகிறாரா?. தனிமையில் சிக்கிக்கொண்டேனோ? என்றெல்லாம் எனது மனம் அச்சத்தால் அல்லாடிக்கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழிந்ததும் அதி விகாரமானத் தோற்றத்தில் பிரகாசமான முகத்தோடு நாஸர் மஹ்தனி படியேறி வந்தார்.

ஒரு கால் ஊனமானதால் வேறொரு நபரின் தாங்கலோடு ஏணிப்படி ஏறி வந்து என் முன்னே உட்கார்ந்தார்.

பத்து நிமிடம் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம்.

என்னைப் பற்றியும் வீட்டு நிலவரம் பற்றியும் ரொம்ப அக்கரையோடும் ஆவலோடும் விசாரித்தார்.

எர்ணாகுளத்தில் மஹ்தனி கட்சியின் மாநாடு நடக்கிறது. கட்சியில் முழுமையாகச் செயல்பட வேண்டும் என்று கூறி பி.டி.பியை எனக்கு அறிமுகப் படுத்தினார்கள்.

நாஸர் மஹ்தனியின் கட்சியின் பெயர் மக்கள் ஜனநாயக கட்சி [PEOPLES DEMOCRATIC PARTY] PDP எனச் சுருக்கமாக கூறுவார்கள்.

எர்ணாகுளத்தில் கட்சியின் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன்.

மஹ்தனியின் தீப்பொறி பறந்த பேருரையை நான் கேட்டேன்.

ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி க்கு எதிராக அவரது பேச்சும், ஆவேசமும் தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கமுள்ள அவரது மன ஈர்ப்பும் என்னை நன்றாக கவர்ந்தது.

மேடையில் வேலாயுதன் என்று என்னையும் அறிமுகப்படுத்தினார்கள்.

பிஜேபியையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும் எதிர்த்து வரும்போது உன்னை ஒரு மேடையிலும் சேர்க்கமாட்டாங்கடா.

பறைய இனத்தைச் சார்ந்த உனக்கு யாரும் அடைக்கலம் தரமாட்டார்கள் என்றெல்லாம் பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இதற்கு முன் என்னிடம் கூறியிருந்தார்கள்.

பல மேடைகளில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் சதி வேலைகளை சொல்வதும், தலித்துகளுக்காக மேடையில் பேசுவதற்கும் எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டேன்.


இப்படி நாஸர் மஹ்தனியின் கட்சியான ஜனநாயக மக்கள் கட்சியின் ஒரு முக்கியப் பங்காளியாக நான் மாறினேன்.

முஸ்லிம் மக்களின் அரவணைப்பும் அவர்களுக்கு என்னிடமிருந்த பாசகுணமும் என் மனதை பெரிய அளவில் மாற்றியது.

இருந்தாலும் கட்சியின் ஒரு கமிட்டிக் கூட்டம் எர்ணாகுளத்தில் நடக்கும் போது நாஸர் மஹ்தனியின் மாவட்ட செயலாளர் சித்திரபானு என்ற நபர் என்னிடம் கூறினார்:

"வேலாயுதா நீ உஷாராக இரு. மஹ்தனி உன்னை கொலை செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். காரன் கொன்றதாக கூறிவிடுவார்."

கட்சிக்காக ஒரு இரத்த சாட்சி என்ற முறையில் இந்த விஷயம் எனது மனதை உறுத்திக் கொண்டிருந்தது.


Continued …

சொடுக்குக >>>> ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதனின் வாழ்க்கைப் பயணம் <<<< முழுதும் படிக்க

UNMAIKAL said...

PART 2. ஆர்.எஸ்.எஸ். வேலாயுதன் - ‍ நாஸர் மதானி.

இதை நான் நேரடியாக மஹ்தனியிடம் கூறினேன்.

மஹ்தனி கோபப்பட்டார்.

கட்சியின் பொதுச் செயலாளர் இருக்கும் போதுதான் இதை நான் மஹ்தனியிடம் கூறினேன்.

அப்போதுதான் வெடித்தது கலகம்.

சித்திரபானுவின் மகன் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன்.

சித்திரபானுவும் இரகசியமாக ஆர்.எஸ்.எஸ்ஸில் பணிபுரிந்து வந்தார்.

என்னை மக்கள் ஜனநாயக கட்சியிலிருந்து மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் கை கொண்ட தந்திரம் இது.

தலித் இனத்தவர்களை எப்படியேனும் அழிக்க வேண்டும் என்ற கூட்டு ஆலோசனைதான் ஆர்.எஸ்.எஸ். நடத்திக் கொண்டிருந்தது.

அன்றைய நாள்களில் சவர்ணர்கள், தலித்துகளை வீதியில் போட்டுக் கொன்றார்கள்.

இன்றோ இந்த சவர்ணர்கள்தான் உயர்ஜாதியினர் ஆர்.எஸ்.எஸ். ரூபத்தில் அவர்களை சதி செய்து கொலை செய்கிறார்கள்.


ஒரு காலத்தில் நாசர் மஹ்தனி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை முன்னிறுத்தி மேடைப் பேச்சுக்களை தீவிரமாக பேசும் போது அது கேட்க கேட்க கோபம்தான் வந்து கொண்டிருந்தது எனக்கு.

ஏனென்றால் சிறு வயதில் அம்மா சொல்லிக் கொடுக்கின்ற ஒரு ராம வசனம் நினைவுக்கு வரும்.

ராம ராம ராம ராம் பாஹிமாம் [ராமபாதம் சேரணே முகுந்தராம பாவரிமாம்].

இப்படி ராமபாதம் சேருவதுதான் மிகவும் உயர்ந்தது என்று அம்மா சிறு வயதில் எனக்குச் சொல்லிக்கொடுப்பார்கள்.

அந்த ராமன் பிறந்த இடத்தில்தான் திரும்பவும் பாபரி மஸ்ஜிதை நாங்கள் கட்டுவோம் என்று மேடையில் பேசுகின்ற மஹ்தனியை பார்க்கும் போதேல்லாம் எனக்கு வெறுப்பும், கோபமும் பொத்துக் கொண்டுவரும்.

மாலை நேரம் சுமார் 4 மணிக்குத்தான் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட செய்தியை நான் அறிகிறேன்.

அன்று முழுவதும் நானும் எனது ஆர்.எஸ்.எஸ். நண்பர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தோம்.

எனது சாகாவின் எதிரொலி கேரளத்தில் நடக்கவில்லையென்றாலும், பைசாபாத்தில் நடந்தேறியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும், சாகாவின் மீது அதிக ஈர்ப்பும் ஏற்பட்டது.

இதற்கெல்லாம் மறுப்பாகவும், எதிர்ப்பாகவும் பாபரி மஸ்ஜித் திரும்பவும் கட்டப்பட வேண்டும் என்ற ஓரே எண்ணத்தோடுதான் பி.டி.பி. யின் பின் துணையோடு அயோத்தி சென்றேன் 1996 ல்.

1996 டிசம்பர் 30 -ம் தேதிதான் எர்ணாகுளத்திலிருந்து ரயில் ஏறினேன்.

அந்த இரண்டு நாள்களிலும் கடந்த நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டே சென்றேன்.

லக்னோவில் சென்றிறங்கினால் ஒரு பெரும் முஸ்லிம் சமூகம் எங்களை வரவேற்கும் என்ற எண்ணம் எனது மனதில் இருந்தது.

அங்கு சென்று இறங்கும் போதுதான் தெரிகிறது. போலீஸ் பட்டாளம் தெரு முழுவதும் நிறைந்து நின்றது.

டிசம்பர் 6 முதல் அங்குள்ள முஸ்லிம்கள் பயத்தால் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.

பாபரி மஸ்ஜித் என்று பேசுவதற்குக்கூட அவர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.

கேரளத்தின் மக்கள் தொகைக்கு சமமான உத்திரப்பிரதேசத்தின் முஸ்லிம் மக்களின் இந்த உள்ளத்தைப் பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

கேரளத்தில் தாழ்த்தப்பட்ட தலித் இனத்தாரும் உ.பி.யில் முஸ்லிம்களும் சங்கபரிவாரின் சக்திகளுக்கும் அவர்களது தந்திரங்களுக்கும் இரையாகி தரைமட்டமாக ஆகிவிடுகிறார்களே என்ற எண்ணம்தான் எனது உள்ளத்தில் வேதனையில் ஆழ்ந்து கொண்டிருந்தது.

இத்துணை எளிமையாகவும், இனிமையாகவும் பாசமும் காட்டுகின்ற முஸ்லிம் சமூகத்தையா மிகவும் கீழான இட்டுக்கட்டப்பட்ட அவதூறுகளைச் சொல்லி அழிக்கத் துடிக்கின்றார்கள்.

அவர்களின் சின்னங்களையும் பள்ளிகளையும் அவதூறு பேசுகிறார்கள் என்று எனது மனம் கவலையில் வாடிற்று.


அயோத்தி நோக்கி நாங்கள் மேற்கொண்ட பயணத்தில் நான் கலந்து கொள்ளவில்லையென்றால் இதையெல்லாம் நான் தெரிந்திருக்கவே முடியாது.

அயோத்தி அணிவகுப்பிற்காக சென்ற பிறகுதான் தெரிகிறது இந்த ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் இல்லாத ஒரு பழியை முஸ்லிம்கள் மீது வேண்டுமென்றே போட்டு குற்றம் சுமத்தி அவர்களை அழிப்பதற்கு ஆயத்தமாகின்றார்கள் என்ற உண்மை.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இதனை நடத்திக்காட்டிவிட்டார்கள். இதனை நான் கண்கூடாகக் கண்டேன்.



CONTINUED……..

சொடுக்குக >>>> ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதனின் வாழ்க்கைப் பயணம் <<<< முழுதும் படிக்க

UNMAIKAL said...

PART 3. ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியனாக இருந்த வேலாயுதன் - ‍ நாஸர் மதானி.

அயோத்திக்கு மேற்கொண்ட பயணத்தில் நான் கலந்து கொள்ளவில்லையென்றால் முஸ்லிம்களைப் பற்றி இன்னும் மிக கேவலமான கருத்துக்களைக் கொண்டவனாகவே வாழ்ந்திருப்பேன்.

இந்தியாவில் முக்கியமான இஸ்லாமிய கேந்திரங்கள் நிறைந்த உத்திரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் இவ்வளவு பிற்போக்குவாதிகளாகவும் கிஞ்சிற்றும் விழிப்புணர்வு இல்லாதவர்களாகவும் போனது ஏன்? என்ற கேள்வி இப்போதும் எனது மனதை உறுத்திக் கொண்டே இருகின்றன.

அது மட்டுமல்லாமல் இவ்வளவு சுலபமாக முஸ்லிம்களுக்கு இந்த அவமானம் நடந்த பிறகும் இன்னொரு முஸ்லிம் சமூகம் அதற்காக கொஞசம்கூட வருத்தப்படவில்லையே ஏன்?

அதற்கெதிராக பேசுவதற்கு முயற்சி செய்யாமல் இருப்பது என்னுள் வியப்பை ஏற்படுத்தியது.



இப்படியாக முதன் முதலில் கொல்லம் மாவட்டத்தில் முன்னத்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டேன்.

இப்படித்தான் எனக்கு மஹ்தனியின் அன்வாருஷ்ஷேரியுமாக [ஸ்தாபனம்] பந்தம் ஏற்பட்டது.

இந்த ஸ்தாபனம் நாசர் மஹ்தனியால் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிராக நிறுவப்பட்டது.

இந்த நிறுவனத்தைப் பற்றித்தான் நான் எனது ஆர்.எஸ்.எஸ் வாழ்க்கையில் மிகவும் கோபமாக உரையாற்றினேன்.

இந்துக்களை கொன்றொளிப்பதற்காக நாசர் மஹ்தனியால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் அன்வாருஷ்ஷேரி என்றும்,

தீவிரவாதத்தை வளர்க்கின்ற ஒரு முக்கிய நிறுவனம் என்றும், சிறுவர்களுக்கு ஆயுதப்பயற்சி கொடுக்கின்ற ஒரு நிறுவனம் என்றெல்லாம் பொய்யைப் பேருரையாக ஆற்றியது எனது நினைவுக்கு வந்தது.

ஓர் இஸ்லாமிய நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த நான் தங்குவதும், அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு என் மேலுள்ள பாசமும் பரிவும் என் மனதை நன்றாக கவர்ந்தது.

எங்களை இவர்கள் தாழ்வாக பார்ப்பார்கள் என்றெல்லாம் நான் முன்னால் நினைத்ததுண்டு.
இதற்கெல்லாம் நேர் மாறாகத்தான் அவர்களது [முஸ்லிம்களது] பழக்க வழக்கங்கள் இருந்தன.

சொல்லித் தீர்க்கமுடியாத அரவணைப்பு, அவர்களுடன் ஒன்றாக இருந்து சாப்பிடுவது, அவர்களோடு ஒன்றாக ஒரே இடத்தில் துங்குவது, இதெல்லாம் என் மனதில் வேலாயுதன் என்ற நான் ஓர் பிலாலாக மாறுவதற்கு பாதை போட்டுத்தந்தன.


அன்வாருஷ்ஷேரி என்ற நிறுவனம் குறிப்பாக சொல்லப்போனால் ஒரு யத்தீம்கானாவாகும் [அநாதைகள் விடுதி]. அங்குள்ள அநாதைப் பிள்ளைகள் என்னோடு கொண்டிருந்த மரியாதை இதெல்லாம் தாழ்ந்த இனத்தைச் சார்ந்த எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரு தலைவரிடம் கூட இப்படிப்பட்ட எளிமையான, அன்பான குணங்களை நான் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை.

யத்தீம்கானாவில்(அநாதைகள் விடுதியில்) நான் கொஞ்சம் நாள் பி.டி.பியின் ஒரு ஸ்ஷார்த்தியாக [வேலாயுதனாக] தங்கினேன்.

எல்லா வியாழக்கிழமையிலும் அந்த அநாதைகள்:

"இறைவா, எங்களுக்கு உணவளித்தவர்களுக்கு நீ உணவளிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்கிறவர்களுக்கு நீ உதவி செய்வாயாக!"

என்றெல்லாம் பிரார்த்தனை செய்வதை நான் பார்த்தேன்.

அப்போது தான் எனது மனதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வாழ்க்கை தென்பட்டது.

இந்த பிள்ளைகளைப் பற்றியா நாங்கள் தீவிரவாதிகளென்றும்,

தீவிரவாதத்தை ஊட்டுகின்ற நிறுவனம் என்றும்

இந்நிறுவனத்தில் தீவிரவாதத்தை பிஞ்சு உள்ளங்களில் ஊட்டுகிறார்கள் என்றும்

பொய்யைப் புனைந்துரைத்தோம்?.

இந்த ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் அபாண்டமான பொய்யைச் சொன்னார்கள் என்ற எண்ணம் எனது மனதில் தெரிந்தது.

மேலும் நாசர் மஹ்தனியையும் இவ்வாறுதான் தீவிரவாதி என்று முத்திரை குத்தினார்கள் என்ற உண்மையும் எனக்குத் தெரிந்தது.


சொடுக்குக >>>> ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதனின் வாழ்க்கைப் பயணம் <<<< முழுதும் படிக்க

Anonymous said...

கணவரின் கள்ளக்காதலை கண்டுபிடித்தவுடன் தற்கொலைக்கு முயன்ற பாக். வெளியுறவு அமைச்சர் ஹீனா


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் தனது கணவர் பிரோஸ் குல்சாரின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்தவுடன் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக வங்க தேச பத்திரிக்கை பிளிட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் தனது கள்ளக்காதலனான அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவை மணப்பதில் தீவிரமாக உள்ளார். இதற்கிடையே ஹீனாவின் கணவர் பற்றிய செய்தியை பிளிட்ஸ் வெளியிட்டுள்ளது. ஹீனாவின் கணவர் பிரோஸ் குல்சார் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை ஹீனா கண்டுபிடித்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த ஹீனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்த விவகாரத்திற்கு பிறகே கணவன் மனைவி இடையே இருந்த நம்பிக்கை கெட்டுவிட்டதாம்.
ஹீனாவும் பிலாவலும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இன்டர்நெட்டிலும் மணிக்கணக்கில் சாட் செய்வார்களாம். பிலாவலுடன் இவ்வளவு நேரம் என்ன சாட் செய்வாய் என்று கேட்டால் அரசியல் விவகாரங்களைப் பற்றி பேசுவதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளாராம்.
இந்நிலையில் பிலாவலை மணந்தே தீருவேன் என்று ஹீனா தனது கணவர் மற்றும் சர்தாரியிடம் சண்டைபோடுகிறார் என்று கூறப்படுகிறது.

Anonymous said...

அரை மணி நேரம் கட்டிப்புரண்டு சண்டை போட்ட பெண்கள்.. திகைத்து நின்ற போலீஸ்!

ஹரான், சவூதி அரேபியா: சவூதி அரேபியாவின் தஹரான் என்ற நகரில் ஒரு ஷாப்பிங் மாலில், பெண்களுக்கு இடையே திடீரென ஏற்பட்ட மோதலால் அரை மணி நேரம் அந்த ஷாப்பிங் மால் பெரும் களேபரமாகி விட்டது. பெண்கள் போட்ட சண்டையை விலக்க முடியாமல் ஆண் போலீஸார் தவித்து நின்றனர். இந்த அரை மணிநேர சண்டையில் பல பெண்களுக்குக் காயம் ஏற்ப்ட்டது.
தஹரான் நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் பர்ச்சேஸ் செய்து கொண்டிருந்த சில பெண்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் பெரும் சண்டையாக மாறியது. ஆளாளுக்கு தலையைப் பிடித்தும், செருப்புகளை எடுத்து அடித்துக் கொண்டும், கையில் இருந்த பேக்குகளால் சரமாரியாக அடித்தும் சண்டை போட ஆரம்பித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த போலீஸார் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் ஆண் போலீஸார். சவூதி நாட்டுச் சட்டப்படி ஆண்கள் பெண்களைத் தொடக் கூடாது. எனவே அவர்கள் சண்டையை விலக்கி விட முடியாமல் திகைத்து நின்றனர். இதையடுத்து பெண் போலீஸாருக்குத் தகவல் போனது. ஆனால் அவர்கள் ஆடி அசைந்து வருவதற்குள் சண்டை மேலும் உக்கிரமாகி விட்டது.
மாலில் இருந்த கடைகளுக்குள் ஓடி ஓடி சண்டை போட்டனர் அந்தப் பெண்கள். இதனால் அங்கிருந்த பலர் காயமடைந்தனர். குறிப்பாக பெண்கள்தான் பலர் காயமடைந்தனர்.
ஒரு வழியாக ஓடி வந்த பெண் போலீஸார், சண்டை போட்ட பெண்களை கடும் சிரமத்துக்கு மத்தியில் விலக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சண்டையால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது. மேலும் தரை முழுவதும் செருப்புகள் சிதறிக் கிடந்தன. அவை அனைத்தும் அங்கிருந்த செருப்புக் கடையில் வைக்கப்பட்டிருந்த செருப்புகளாகும்.
சும்மாவாச் சொன்னாங்கே, பொம்பளை கிட்ட வம்பு வச்சுக்காதேன்னு...!

Anonymous said...

மேலே உள்ள 3 கட்டுரைகளும் முஸ்லீம்களிடையே தனி மனித ஒழுக்கம் எவ்வாறு உள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு. போயா நீயும் உன் மதமும்.

Anonymous said...

//பெண்கள் கார் ஓட்ட இஸ்லாம் தடை செய்யவில்லை. வெளி பயணங்களுக்கு தனியாக செல்லாமல் கணவன், சகோதரன், தகப்பன் போன்ற துணைகளோடு செல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறது. அந்த பெண்களின் பாதுகாப்பை கருதி. //

அப்படியாகில் சவுதியில் இஸ்லாம் சட்டம் இல்லையா? அப்படியாகில் அண்மையில் கார் ஓட்டிய பெண்ணுக்கு தண்டனை கொடுத்ததாக வந்த செய்தி இஸ்ரேலின் சதியா? இல்லை அமெரிக்க சதியா?

Anonymous said...

//சுத்தம் ஒரு மனிதனுக்கு அவசியம்.//
உலகத்தில் யார் வேண்டுமானாலும் சுத்தத்தை பற்றி பேசலாம். ஆனால் முஸ்லீம்கள் மட்டும் பேசவே கூடாது. வாரத்திற்கு ஒருமுறை குளிக்கும் பழக்கமுடயவர்கள்தானே முஸ்லீம்கள். அதுவும் அரபிகள் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பவர்கள். இதனால்தான் கூடுதலான முஸ்லீம்கள் அத்தரினை உபயோகிப்பார்கள்.
கலியாண வீடுகளில் ஒற்றுமை என்ற பெயரில் ஒரே தட்டில் சாப்பாட்டினைப்போட்டு அனைவரும் கை வைத்து உண்பார்கள். அதில் ஒருவனுக்கு நோய் இருந்தாலும் அனைவருக்கும் பரவும்.
பண்டி இறச்சியில் புழு உள்ளதென்று சொல்லும் இவர்கள் மாட்டிறைச்சியை மூக்கு முட்ட தின்பார்கள்.
சுத்தம் பற்றி நீங்கள் பேசினால் அல்லாவே உங்களை சபித்துவிடுவார்

நன்னயம் said...

சமீபத்திய செய்தி,
காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது, திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவது இல்லையெனில் தீர்த்துக் கட்டுவது போன்ற பெண்களுக்கு எதிரான கொடூரச் செயல்கள் இந்தியா முழுதும் அதிகரித்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.
கோவையில் 21 வயது இளம்பெண் சுருதி மேனன் தற்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோவையை அடுத்த வடவள்ளி கல்வீரம் பாளையம் தோப்பில் நகரை சேர்ந்தவர் ராஜீவ்மேனன். டெல்லியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லதா(வயது 43). இவர்களுடைய மகள் சுருதி(21).
இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஐ.பி அவருடன் கோவை காளப்பட்டியை சேர்ந்த அயூப் மகன் அஜீம்(21) என்பவரும் படித்தார்.
இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜீமுடன் பழகுவதை சுருதி குறைக்கத் தொடங்கினார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த அஜீம் நேற்று மாலை சுருதியின் வீட்டுக்குச் சென்றார். முதலில் பேசிப்பார்த்தார் சுருதி அஜீமை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் கத்தியை எடுத்தார். சுருதியின் தாயார் அஜீமைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
பிறகு சுருதியையும் கத்தியால் குத்தி கொலை செய்து அதன் பின்னும் தனது வெறி நீங்காததால் சுருதியின் உடலுக்கு அசிட் ஊற்றி எரித்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டார் அஜீம்.
இதில் பரிதாபம் என்னவெனில் உடல் நமமில்லாத சுருதியின் தாத்தா தட்டுத் தடுமாறி எழுந்து வந்து பக்கத்திலிருப்பவர்களை முடியாமல் அழைத்துள்ளார்.
பிறகு போலீஸுக்குத் தக்வல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சுருதி, அஜீம் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லதாவை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து லதா ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
பெற்றோரின் அறிவுரைக்கு இணங்க சுருதி காதலை மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அஜீம் பிடிவாதமாக சுருதிய துரத்தி வலுக்கட்டாயப்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த கொடூரமான செயலை செய்த மிருகம் ஒரு இஸ்லாமியர் ஆவார்.

Anonymous said...

எப்படி? ஒரு தலித் பெண்ணை பத்து பேர் கற்பழித்து அதை மொபைலிலும் அனுப்பி அந்த பெண்ணின் தந்தையை தற்கொலை செய்ய வைத்தது போலவா? :-)))))//

என்னமோ முஸ்லீம்கள் கற்பழிப்பதில்லை போலவும் இந்துக்கள் மட்டும் கற்பழிப்பதையே முழு நேர தொழிலாக செய்வது போலதான் நினைப்பு. மிக அண்மையில் உங்களை போன்ற 4 முஸ்லீம்கள் இலங்கையின் வடபகுதியிருக்கும்
ஒரு சிறு தீவுக்கு பழைய இரும்பு வாங்க போன இடத்தில் மூளை வழர்ச்சி குறைந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்பட்த்தியதை கேள்விப்பட்டதில்லையா? அது சரி இதுகளெல்லாம் தெரிந்தால் நீங்கள் ஏன் இன்னும் முஸ்லீமாக இருப்பீர்கள் ? இந்துவாகவோ இல்லை கிறீஸ்தவராகவோ மாறியிருக்கமாட்டீர்கள்?

UNMAIKAL said...

மோடியின் முகம்!

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் ஆட்சிபற்றி பார்ப்பன ஊடகங்கள் புகழும் வார்த்தைகளைச் சொல்லி மாளாது.

தொழிற்புரட்சி என்றால் குஜராத்தைப் போய் அல்லவா பார்க்க வேண்டும் என்று பராக்குப் பாடுவார்கள்.

மோடி ஆட்சிக்கு முன்பிருந்தே குஜராத் தொழில் வளம் மிக்க மாநிலம்தான்.

இந்தியா முழுமையும் குஜராத்திகள் தங்கள் வியாபார சாமராஜ்ஜியத்தை நிறுவியவர்கள் தாம்.

அப்படியே மோடி ஆட்சியின் காரண மாகத்தான் குஜராத் தொழில் வளம் கொழிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்!

அதற்காக அவரின் எல்லாவிதமான வெறி பிடித்த முஸ்லிம் எதிர்ப்பு ஒழிப்புக் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள வேண்டுமா?

சிறுபான்மையின மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை எல்லாம் புறந்தள்ளக் கூடியவர் -சட்ட ரீதியாகவே தேர்தலில் நிற்கவோ ஆட்சியில் அமரவோ எப்படி அருகதை உடையவராக இருக்க முடியும்?


திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளைக் கேட்டால் பதில் சொல்லுவார்.

குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மோடிக்குத்தான் ஆதரவாக வாக்களித்தார்கள் என்று சிலாகிக்கிறார்.

மூவாயிரம் முஸ்லீம் மக்களைக் கொன்று குவிப்பதற்குக் காரணமான முரடர் ஒருவர் ஆட்சியில் இருந்தால், சிறுபான்மை மக்கள் அச்சத்தின் காரணமாகக்கூட அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கக் கூடும்.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு - அதன் தொடர்ச்சியான அவலங்கள் பற்றிக் குறிப்பிடும்பொழுது முதல் அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ளவர் என்ன சொன்னார்?

எந்த ஒரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்று தத்துவம் பேசவில்லையா?

நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல்லுவேன் என்று பிரதமர் வாஜ்பேயி புலம்பினாரே - குஜராத் கலவரத்தின் பின்னணியில் இதன் பொருள் என்ன?

ராஜ தர்மத்தைக் காக்க வேண்டும் என்று மோடிக்கு பிரதமர் வாஜ்பேயி குத்திக் காட்டியதன் நிலைப்பாடு என்ன?

இன்றுவரை திருந்தியிருக்கிறாரா இந்த நவீன இட்லர் மோடி?

முஸ்லீம்களின் கல்வி நலனுக்கென ஒரு பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் வீதம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.

இதில் 90 சதவீதத்தை மத்திய அரசு கொடுக்கிறது.

10 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்ற நியாயமான நிபந்தனைதான் இது.

இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் இதனை வரவேற்று ஏற்றுக் கொண்டிருக்க குஜராத் முதல் அமைச்சர் மோடி மட்டும் முரண்டு பிடிப்பானேன்?

நாங்கள் பத்து சதவீதம் பணம் கொடுத்தால்தானே நீங்கள் 90 சதவீதம் கொடுப்பீர்கள்! என்று எதிர் வினா போடுகிறார்.

இது ஒரு முதல் அமைச்சர் வாயில் இருந்து வரக் கூடிய சொல் தானா? வரலாமா?

இந்த யோக்கியதையில் உள்ள ஒருவர் தான் ஒரு மாநிலத்தில் சிறுபான்மை மக்களை அரச பயங்கரவாதமாக நர வேட்டை ஆடியது போதாது என்று,

இந்திய பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அந்த நரவேட்டையை இந்தியத் துணைக் கண்டம் அளவுக்கு நடத்தி முடிக்க நாக்கை நீட்டிக் கொண்டு அலைகிறது பார்ப்பன ஓநாய்க் கூட்டமும், காவிப் பயங்கரவாதக் கும்பலும்.

மோடியின் ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கும் பருவம் தொடங்கி விட்டது.

மோடியின் அமைச்சரவை சகாக்கள் கூட இதில் தப்பவில்லை.

இதற்கு மேலும் இவர் வீராப்புப் பேசுகிறார் என்றால் இவரை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

இதைவிட இவரைத் தூக்கிச் சுமக்க ஆசைப்படுவோரைக் குறித்துத்தான் என்ன நினைப்பது?


http://www.viduthalai.in/page-2/44781.html

Anonymous said...

உங்களது எதிரி அமெரிக்கா காரன் வழங்கும்( IBM) இந்த விரல் அடையாள் முறையை நீங்கள் ஏன் சவுதியில் பயன்படுத்துகிறீகள்? இனசென்ற் ஒவ் முஸ்லீம் படத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து அதை பகிஸ்கரிக்கலாமே , நீங்கள் உப்பு போட்டு தின்பவர்கள் என்றால்?

Anonymous said...

I am a pure Indian.

i am a pure tamilan.

i am a pure dravidan.

and also i am a pure muslim.////
இதை தமிழ்ப்படுத்தினால்

நான் தூய சந்தர்ப்பவாதி.இதை இன்னும் விழக்கமாக சொன்னால் "அமெரிக்காகாரன் வேண்டாம் ஆனால் வேண்டும்.

எனக்கு படியழக்கும் சவுதி அரபிக்காக என் நாட்டை எப்படிவேண்டுமானலும் கேவலபடுத்துவேன்.

முஸ்லீம்கள் மட்டுமே காலம் காலமாக உலகெல்லாம் வாழும் சமூகம்.
மற்றயவர்கள் எல்லாம் நேற்று பெய்தமழையில் முளைத்த காலன்கள்.

திராவிடர்கள் என்றால் என்னவெண்றே எனக்கு தெரியாது. சும்மா நாலு வரி போடவேண்டும் என்பதற்காக போட்டது. கோவிச்சுக்காதீங்க பாஸ்.

UNMAIKAL said...

அட கொலைகார, நச்சுப்பாம்பு, காவி பயங்கரவாதி அத்வானியே?

உனக்குத்தான் எத்தனை நாக்குகள்?

==================================

கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இழுக்க நாம் மதசார்பற்றவர்கள் என்பதை காட்ட வேண்டும்: அத்வானி

சூரஜ்குண்ட்: இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு பாஜக எதிரான கட்சியல்ல என்பதை நாம் மீண்டும் உணர்த்த வேண்டும்.

காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், முஸ்லீம்களின் ஓட்டுக்களையும் பெறும் வகையில் கட்சியை நாம் முன் நிறுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரான அத்வானி கூறியுள்ளார்.

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹரியாணா மாநிலம் சூரஜ்குண்டில் கடந்த மூன்று நாளாக நடந்தது.

இதில் இறுதி உரையாற்றிய அத்வானி எழுதி வைத்துப் பேசியதாவது:

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாது; அதற்குள் கவிழ்ந்துவிடும்.

நோயாளியைப் போல் நோய்வாய்ப்பட்டுள்ள மத்திய அரசு, அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்ஸிஜன் பொருத்திய நிலையில் உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி அரசு புலனாய்வு அமைப்பான சிபிஐயுடன் உடன் மட்டுமே நிலையான கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளது.

2014ம் ஆண்டு வரை ஆட்சியை தொடர சிபிஐ அமைப்பை மத்திய அரசு நம்பியுள்ளது.

ஐ.சி.யூவில் இருக்கும் ஆட்சி நீண்டநாள் நிலைக்காமல் சீக்கிரமே கவிழ்வதே நல்லது என்று ஆளும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளே நினைக்க தொடங்கிவிட்டன.

அதற்கான முயற்சியில் கூட்டணி கட்சிகள் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

இதனால், இன்னும் ஓராண்டுக்குள் ஆட்சி கவிழ்ந்து மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடப்பது உறுதி.

செயல்படாதவராக பிரதமர் மன்மோகன் சிங் உள்ளார் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதைச் சொல்ல நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக கட்சித் தலைவர் நிதின் கட்கரியுடன் ஏற்கெனவே ஆலோசனை செய்துவிட்டேன்.

இப்போது நம்முடைய கூட்டணிக்கு புதிய கட்சிகளைக் கொண்டு வர வேண்டியது அவசியம்.

நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) 'தேசிய ஜனநாயகக் கூட்டணி பிளஸ்' ("NDA Plus") என்ற நிலைக்கு விரிவாக்க வேண்டும். இதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

நம்முடன் கூட்டணி அமைப்பதால் தங்களது மதசார்பற்ற நிலைக்கு பிரச்சனை வரும் என சில கட்சிகள் கருதுகின்றன.

அவர்களது அச்சத்தை போக்கும் வகையில், மதசார்பின்மைக்கு நாமும் எதிரிகள் அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் கட்சியின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

சிறுபான்மை இனத்தினருக்கு நாம் எதிரிகள் அல்ல, இதுவரை எந்த அநீதியையும் செய்யவில்லை என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்.

முதலில் பா.ஜனதா தலைவர்கள் பல குரலில் மாறுபட்டுப் பேசக் கூடாது.

அனைவரும் ஒரே கருத்தையே வலியுறுத்த வேண்டும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல கட்சிகளை சேர்த்து பெரிதாக்க வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சி மதச்சார்பின்மையை பின்பற்றுவதை உறுதிப்படுத்தி நமைப் பற்றிய அச்சத்தை அகற்ற வேண்டும்.

இப்படி செயல்பட்டால் 1998, 1999-ம் ஆண்டுகளைவிட கூடுதல் இடங்களைக் கைப்பற்றலாம்.

இஸ்லாமுக்கு எதிரான அமெரிக்கத் திரைப்படம் இன்னும் இன்டர்நெட்டில் வலம் வருகிறது.

இது கடும் கண்டனத்துக்குரியது. நபிகள் நாயகத்தை தவறாகக் காட்டும் அந்தப் படத்தை ஏற்கவே முடியாது.

எந்த மதமாக இருந்தாலும் அதன் புனிதத் தலைவர்களை கீழ்த்தரமாக சித்தரிப்பது தவறு என்றார் அத்வானி.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக இரண்டுக்குமே தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டி கிடைக்காது என்றே கூறப்படுகிறது.

இதனால் திமுக, அதிமுக, சமாஜ்வாடி கட்சி, பிஜூ ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெறும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்று தெரிகிறது.

ஆனால், பாஜகவின் மதவாத நிலை காரணமாக இதில் அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகள் பாஜகவுடன் கூட்டணிக்குத் தயாராக இல்லை.

இந் நிலையில் தான் கூட்டணிக்குள் இந்தக் கட்சிகளில் சிலவற்றையாவது இழுத்தால் தான் அடுத்த ஆட்சி சாத்தியம் என்பதை பாஜக உணர்ந்துள்ளது.

இதுவே அத்வானியின் இந்தப் பேச்சில் எதிரொலித்துள்ளது.

http://tamil.oneindia.in/news/2012/09/29/india-to-win-more-allies-re-project-bjp-commitment-162299.html

suvanappiriyan said...

சகோ எதிகாலிஸ்ட்!

//சமீபத்திய செய்தி,
காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது, திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவது இல்லையெனில் தீர்த்துக் கட்டுவது போன்ற பெண்களுக்கு எதிரான கொடூரச் செயல்கள் இந்தியா முழுதும் அதிகரித்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.
கோவையில் 21 வயது இளம்பெண் சுருதி மேனன் தற்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.//

அதற்குத் தான் இஸ்லாம் ஆண்களையும் பெண்களையும் தனித்து பழக வேண்டாம் என்று கட்டளையிடுகிறது. அந்த பெண் அவனை காதலிக்காமல் இருந்திருந்தால் அல்லது அந்த கிறுக்கன் காதலை உண்மை என நம்பாமல் இருந்திருந்தால் இந்த இரண்டு இறப்புகளும் தவிர்க்கப்பட்டிருக்கும். அவன் இஸ்லாமியனாக பிறந்தும் முஸ்லிமாக வாழாததினால் ஒரு உயிரை கொன்று தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளான்.

கோவி.கண்ணன் said...

//விரைவில் சகோதரர்.கோவி.கண்ணன் மவுலவி. அப்துல் ஜப்பார் ஆக வேண்டுகிறேன்.//

மவுலவி, நான் மவுலி, கிரேசி மோகன் என்றெல்லாவா நினைத்தேன்.

Anonymous said...

சுவனப்பிரியரே

உங்கள் எதிர்தரப்புக்கு பொழுது போகவில்லை போல ..

அமோகமான ஆதரவை பெற்று உள்ளீர்கள் ...

வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

//அவர்கள் இஸ்லாத்தில் வருவது வராததும் நம் கையில் இல்லை..செய்தியை ஏத்திவைப்பது தான் நம் கடமை //

இந்த ஆசையில் தான் சுவனப்பிரியன் & வஹாபி பதிவர்கள் தீயாக வேலை செய்றாங்களா ?

தாடி வச்சு அதை மெயிண்டன் பண்னனும், நல்லா இருப்பதை அறுத்து சுன்னத் செய்து கொள்ளனும், இதையெல்லாம் செஞ்சும் பெயரை மாற்றி வைக்கனும், அப்பறம் இதெல்லாம் ஏன் செய்யனும் சும்மா நிரந்தர சொர்கம்னு பத்திரம் எழுதிக் கொடுக்காத ஒரு நம்பிக்கையை வைச்சு செய்து கொள்ளனும்.

ரொம்ப அடாவடியாக இருக்கே. நம்பிச் செய்கிற திருமணங்களே முறிந்து போகிறது வெறும் நம்பிக்கைகாக மதம் மாறுவது எல்லாம் அறிவுள்ளவன் செய்யமாட்டான், அப்படி செய்பவன் இருக்கிறான் என்று சொன்னாலும் இவை யெல்லாம் மதங்கள் அனைத்திலிருந்து ஒரு சிலர் வெளியேறி வேற மதத்திற்கு செல்வது என்ற முறையில் இதில் பெருமை படவும் ஒன்றும் இல்லை.

உங்களுக்கு அடுத்த ஜன்மத்தில் நல்ல ஒரு இந்துவாக பிறக்க ஆசிர்வதிக்கிறேன் என்று எவராவது சொன்னால் முகம் சுளிப்பாக இருக்கும், காரணம் முதலில் பிறவி நம்பிகைக்கு அப்பால் தான் அதை நீங்கள் நம்ப வேண்டும். எனவே உங்க நம்பிக்கைகளை யாரிடமும் திணிக்க முயற்சிக்காதீர்கள்.

யாராவது நோய்வாய்பட்டு, வறுமையில் வாடுபவராக இருந்தால் அவர் நிலை மாறவேண்டும் என்று வேண்டுகிறேன், தொழுகிறேன் என்று கூறினால் அது பாராட்டதக்கது, அதவிட்டுவிடு இவனும் என்கூட தோளோடு தோள் தொட்டுரசி தொழனும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்றால் அவை அபத்தம்.

உங்களுக்கு என் கடும் கண்டனங்கள். உங்கள் செயல அருவெறுப்பானது

கோவி.கண்ணன் said...

//இதற்கு பதிலளிக்கும் முகமாக மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.//

நிரந்த சொர்க்கத்துக்கு எழுப்பும் பொழுது குழந்தையாக இருக்கும் பொழுதே அறுத்துப் போட்ட முனைத்தோலையும் தேடி எடுத்து ஒட்ட வைத்து அழைக்கப்படுவார்களா ? அல்லது வழக்கம் போல் தேவையற்ற படைப்பு என்று விட்டுவிட்டு எழுப்பப்படுவார்களா ?

சொர்கத்தில் நோய் தொற்று இருக்காது என்கிற நம்பிக்கையில் முனைத்தோலும் சேர்த்தே எழுப்பப்படும் என்றே நினைக்கிறீர்களா ?

ஐயா, மறுபடியும் இது டவுட் டவுட் வகைதான் உங்களை கிண்டல் செய்வதாக நினைக்க வேண்டாம்.

வவ்வால் said...


சு.பி.சுவாமிகள்,

// இவ்வளவு பணம் புரளும் நமது நாட்டில் நாட்டின் பாதுகாப்புக்காக இது போல் புகைப்படம், கைரேகை போன்றவற்றை கணிணியில் பதியும் முறையை ஏன் நம் ஆட்சியாளர்கள் ஏற்படுத்த தயங்குகிறார்கள்? இதில் என்ன சிக்கல்?//

உங்களுக்கு சவுதி எதாவது செய்ய ஆரம்பித்தால் தான் ஓ இப்படி ஒன்று இருக்கான்னே தெரிய வரும் போல :-))

இந்தியாவில பாஸ்போர்ட்டுக்கு எல்லாம் கை ரேகை வைக்கணும்னு மாத்தி மாமாங்கம் ஆச்சு, நீங்க அப்போ இந்திய பாஸ்போர்ட் வச்சில்லையா?

மேலும் இந்த கைரேகை முறை ரொம்ப பழைய ஒன்று தான், கை ரேகையை விட கண் கருவிழி ரேகை தான் தனித்துவமானது என அதனையும் பயன்ப்படுத்த ஆரம்பிச்சாச்சு.

இந்தியாவில் அனைவருக்கும் ,புகைப்படம்,கருவிழி, கை ரேகை என அடங்கிய ஸ்மார்ட் கார்ட் அடையாள அட்டை கொடுக்கும் பணி துவங்கியாச்சு.

தமிழ் நாட்டை பொறுத்தவரை இதற்கான வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது, இனிமேல் கார்டு விநியோகம் செய்ய வேண்டியது தான்.

உங்க குடும்பத்தார் அடையாள அட்டை முகாமுக்கு போகலை போல. அதற்கான கெடு முடிந்து போச்சே?

இனிமே எடுக்கணும்னா நாம தான் போய் அலையணும்.

120 கோடி பேருக்கும் அடையால அட்டை தயாரித்து கொடுக்க கொஞ்சம் தாமதம் ஆகலாம்,ஆனால் பெரும்பாலும் ஆவணப்படுத்துதல் வேலை முடிந்துவிட்டது.

இங்கே திருப்பதிக்கு போக ஆன் லைனில் பதிவு செய்யவே கைரேகை முறை கொண்டு வந்து பல வருடம் ஆச்சு.

----------

ராச நட ராசரே,

வாசிக்க வேண்டியது தான் அதுக்குன்னு ஒரே அடியா வாசிச்சா கிழிஞ்சிட போவுது ...வாத்தியம் :-))

சு.பியும் சொல்லி இருக்கார் ஹவாலா இல்லாமல் 37 பில்லியன் ரியால்னு அப்போ ஹவாலா இருக்குன்னு தானே அர்த்தம்.


ஒரு சவுதி ரியால்=14.1 ரூ,

1 பில்லியன்=100 கோடி எனவே

37*100*14.1=51,800 கோடி.

இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பல டிரில்லியன் டாலர் மதிப்பு.

எனவே வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பணம் ஒரு சிறிய பங்களிப்பே அன்றி , இந்திய பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்த போதுமானது அல்ல.

எனக்கு என்னமோ சு.பி சுவாமிகள் சொன்ன சட்டப்பூர்வமான பணபரிமாற்ற அளவு ரொம்ப கம்மியா இருக்கு. எனவே இதனை விட அதிக பணம் ஹவாலா முறையில் செல்லும் என நினைக்கிறேன்.

50 ஆயிரத்துக்கு மேலான தொகை என்றால் ஹவாலா முறை என முன்னர் ஒருவர் என்னிடம் சொல்லி இருக்கிறார்,காரணம் அதிக பணம் ஒருவர் அக்கவுண்டில் அடிக்கடி வெளிநாட்டில் இருந்து டெபாசிட் ஆனால் ,அதனை கண்காணிப்பார்களாம்.

ஹவாலா இல்லைனு சொல்வது முழுபூசணி சோறு கதை தான்.

வவ்வால் said...

சு.சுவாமிகள்,

ஒன்றை சொல்ல மறந்துட்டேன், இந்தியாவில் கொண்டு வந்த "ஆதார்" என்ற அடையாள அட்டை திட்டத்தினை இஸ்லாமிய அமைப்புகள் தான் எதிர்த்தன, அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்க கூடாதுன்னு :-))

ஒரு வேளை அப்படி எதிர்ப்பு தெரிவித்து உங்க குடும்பமும் அடையாள அட்டை எடுத்துக்க போகல்லையோ?

நாங்க எல்லாம் வேலையை 6 மாசம் முன்னமே முடிச்சாச்சு :-))

------
இந்த அடையாள அட்டை முரையில் ஒரே ஒரு பிரச்சினை ,கண் தெரியாதவங்களுக்கு கருவிழி ரேகை பதிவாக்க முடியாது, அவர்களுக்கு அட்டை கொடுக்காமல் வெயிட்டிங்கில் போடுவாங்களாம்.

aadhar id card with 12 digit social security number கொடுப்பாங்க, அதுக்கு அப்புறம் அரசு சம்பந்தமான எல்லாவகையான பயன்ப்பாட்டுக்கும் நம்பர் சொன்னா போதும்.

மேலும் விவரங்களுக்கு,

http://uidai.gov.in/

suvanappiriyan said...

வவ்வால்!

//தமிழ் நாட்டை பொறுத்தவரை இதற்கான வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது, இனிமேல் கார்டு விநியோகம் செய்ய வேண்டியது தான்.//

என்னத்த முடிச்சீங்களோ போங்க.... எங்க வீட்டுக்கு எல்லாம் பக்காவாக வந்து விட்டது. ஆனால் இன்னும் 25 சதமான பேர்களுக்கு பழைய கார்டையே கொடுத்து ஒப்பேத்துகிறார்கள். கேட்டால் கணிணியில் ஏற்ற தாமதமாகிறது என்ற பதிலே வருகிறது. கலெக்டர் ஆபிஸூக்கு சென்று அங்கு ஆமை வெகத்தில் பணி நடப்பதையும் பார்த்து விட்டே சொன்னேன்.

சென்னையில் ஒருகால் முடிந்திருக்கலாம். கிராம பக்கங்களில் புகைப்படமே தடுமாற்றம். கைரேகை , கரு விழி அடையாளங்கள் எல்லாம் முடிய இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம். :-)

suvanappiriyan said...

//எனக்கு என்னமோ சு.பி சுவாமிகள் சொன்ன சட்டப்பூர்வமான பணபரிமாற்ற அளவு ரொம்ப கம்மியா இருக்கு. எனவே இதனை விட அதிக பணம் ஹவாலா முறையில் செல்லும் என நினைக்கிறேன்.//

வங்கி அதிகாரிக்கு கிடைத்த தகவலும் தவறாகக் கூட இருக்கலாம். ஹவாலா முன்பு போல் நடப்பதில்லை என்பதே உண்மை. அந்த தொழில் செய்தவர்கள் எல்லாம் இன்று வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள்.

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//சொர்கத்தில் நோய் தொற்று இருக்காது என்கிற நம்பிக்கையில் முனைத்தோலும் சேர்த்தே எழுப்பப்படும் என்றே நினைக்கிறீர்களா ?//

முனைத் தோலும் சேர்த்தே படைக்கப்பட்டு எழுப்பப்படுவதாகத்தான் நான் படித்ததாக ஞாபகம்.

//ஐயா, மறுபடியும் இது டவுட் டவுட் வகைதான் உங்களை கிண்டல் செய்வதாக நினைக்க வேண்டாம்.//

நான் நினைக்கவில்லை. :-)

வவ்வால் said...

சு.பி,சுவாமிகள்,

முதலில் இந்தியாவில் நடக்கவே இல்லை என பதிவில் சொன்னீர்கள், இப்படிலாம் ஸ்மார்ட் கார்ட் திட்டம் நடக்குதுன்னு சொன்னதும், எங்க வீட்டுலவும் வாங்கி இருக்காங்கன்னு சொல்றிங்க?

எதுக்கு இப்படி முன்னுக்கு பின் முரணாக சொல்லுறிங்க.?

சவுதியை உயர்த்தி சொல்லணும் என நினைத்து தானே?

யாருமே உங்கப்பதிவில் இதனை சுட்டிக்காட்டாமல் சம்பந்தமில்லாமல் பின்னூட்டுவதால் என்ன பயன், இதனால் உங்கள் பதிவின் தரம் தான் கீழ் போகும்.

உங்கள் பதிவில் இந்தியாவில் இத்திட்டம் மெதுவாக போகிறது என்று கூட சொல்ல மனம் வரவில்லை என்றால் ,உங்கள் நிலைப்பாடு என்ன என்பது வாசிப்பவர்களுக்கே தெளிவாக புரியும்.

---------

நீங்க தான் வளைகுடா நாட்டு வருமானம் இந்திய பொருளாதாரத்தி தூக்கி நிறுத்துதுன்னு சொல்லி ஒரு தொகை சொன்னிங்க, அதன் உண்மையான இந்திய ரூபாய் மதிப்பு அப்போ தெரியாமலா சொன்னீர்கள்?

இந்திய சில்லரை வர்த்தக மதிப்பே 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள், 37 பில்லியன் ரியாலை டாலராக மாற்றினால் 10 பில்லியன் டாலர் தான் வருகிறது.

எனவே அந்த தொகை பெரிதாக இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தினை உண்டு செய்து விடப்போவதில்லை.

திருப்பி கேட்டதும் வங்கி அதிகாரிக்கு கிடைத்த தகவல் பொய்யாக இருக்கலாம்னு சொல்லுங்க :-))

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சம்பளம் அதிகம்ம் என்பதால் அங்கிருப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அனுப்பும் தொகை அதிகம், வளைகுடா நாடுகளில் எல்லாம் உழைப்பாளர் வகை, சம்பளம் குறைவு அவர்கள் செலவு போக நாட்டுக்கு அன்ப்பும் தொகை குறைவு, அதிலும் பாதிக்கு மேல் ஹவாலா என்பது தான் உண்மை.

எப்படியோ போங்க ,யாரும் கேள்வி கேட்க மாட்டாங்கன்னு தவறான தகவலை வைத்து கதைய நடத்துங்க :-))

Nasar said...

வவ்வால் பாய்,
வந்தே மாதரம் பதிவ பார்த்துட்டு AARDHAR கார்டுக்கு பாண்டி பஜார் போஸ்ட் ஆபிசுல ஒரு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டுல அப்பளை செஞ்சாங்க ஆனா இதுவரை கிடைக்கல.நம்ம ஊரு மக்கள் தொகை அதிகமாக இருக்கிறதால தாமதமோ தெரியல.பிறகு இந்த கார்டுனால சில பிரச்சனைகள் நமக்கு வரும்னு சொல்றாங்க உண்மையா ?? உங்களுக்கு தெரிந்தால் கூறவும்..
இங்கே Rs.50,000 மேல பாங்குல DD எடுக்கமுடியாது, இன்னைக்கு SPEED MONEY
போஸ்டுல பணத்த அனுப்பினால் நாளை காலைல பணம் வந்துடும் SO ஹாவாலா வில் நம் பணத்துக்கு பாதுகாப்பும் இல்லை மற்றும் கமிசனும் பாங்கு போல சரிசமமாக இருக்கிறபடியால் பெரும்பாலனவர்கள் அதை நாடுவதில்லை.....பாங்கில் இணையம் பயன்பாடு அதிகமாக இருக்கிறபடியாலும், 'வெஸ்டெர்ன் மனி' அதிகமாக பாவிப்பதாலும் இப்ப யாரும் ஹாவாலா பக்கம் போறதில்ல முன்பு போல ஹாவாலா கடைகளும் அதிகமாக இல்லை..

Nasar said...

வவ்வால் பாய் சொன்னது..
// எனவே அந்த தொகை பெரிதாக இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தினை உண்டு செய்து விடப்போவதில்லை.//
கேரளாவிலுமா...!!! நல்லமாதிரியாக வந்து இங்கே சருக்கிட்டிங்களே...
இந்தியாவில் பெரும் பயன் அடைவது கேரளா, வளைகுடா பணம் இல்லேன்னா தெருவுக்கு பத்து டீ கடைங்க வந்துடும் .தெரியுங்களா..?!

வவ்வால் said...

நாசர் பூஜாரி,

நீர் என்ன சு.பி சுவாமிக்கு சிஷ்யரா?

சு.பி.சுவாமிகள் ஏன் இந்தியாவில் இப்படியான முயற்சியே இல்லைனு பதிவு போட்டார், இல்லை நடந்துக்கிட்டு இருக்குன்னு சொன்னால் எங்க வீட்டில் ஆறு மாதம் முன்னரே வாங்கிட்டாங்கன்னு சொல்கிறார், அப்போ முரணாக இல்லையா?

நானே சொல்லி இருக்கேன்,அவர்கள் சொன்ன தேதி,இடத்தில் நாம் போகாமல் ,தனியாக முயற்சித்தால் அலைச்சல்னு, நீங்களும் தனியாக தபால் அலுவலகத்திற்கு போய் இருக்கிறீர்கள்.

ஆதார் திட்டத்தின் படி நான் எல்லாம் எடுத்தாச்சு ,இனிமே அவங்க கார்டு அனுப்பும் போது அனுப்புவாங்க இதுவரைக்கும் 60-70% இந்தியா முழுக்க கவர் செய்துட்டாங்கன்னு கேள்வி. எல்லாம் முடிய கொஞ்ச காலம் ஆகவே செய்யும்.

ஏன் எனில் 120 கோடி மக்கள் என்பது கொஞ்சம் நஞ்சம் அல்ல,

----------
//கேரளாவிலுமா...!!! நல்லமாதிரியாக வந்து இங்கே சருக்கிட்டிங்களே...//

இப்போ யாரு கேரளாவ பத்தி பேசினாங்க ஒரே அடியா சறுக்குறிங்களே,

சுபி சுவாமிகள் சொன்ன தொகை ஒட்டு மொத்தமாக இந்தியாவுக்கு அனுப்பப்படும் தொகை,நானும் அது இந்திய பொருளாதாரத்தின் அளவுக்கு ஒப்பிடுகையில் ஒன்றும் இல்லைனு சொல்லி இருக்கேன்.

அப்போ அனுப்புற 51,800 கோடியும் கேரளாவுக்கு தான் போகுதா :-))

நீங்க எல்லாம் தமிழ் நாட்டுக்கு காசே அனுப்பலையா ,என்ன கொடுமைய்யா இது :-))

ஹவால இல்லைனு நீங்க சொல்லுறிங்க, வெளிநாட்டுல இருந்து அதிகம பணம் வங்கி கணக்கில் அடிக்கடி டெபாசிட் ஆனால் ,என்ஃபோர்ஸ்மெண்ட் விசாரிக்கும்னு பலர் சொல்றாங்க, அப்போ எப்படித்தான் பணம் அனுப்புறாங்க(நான் அப்படி ஹவாலா பணம் அனுப்பி,வாங்கியவர்களிடம் பேசி தெரிந்து கொண்டது இது)

மேலும் 51,800 கோடி என்பது வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்திய மக்களின் எண்ணிக்கையை ஒப்பிட குறைவா தொகை என்பது எனது கணிப்பு.

தமிழ்நாட்டுக்கு டாஸ்மாக் மூலம் மட்டுமே 15,000 கோடி கிடைக்குதுங்க.

வவ்வால் said...

நாசர் பூஜாரி,

//பிறகு இந்த கார்டுனால சில பிரச்சனைகள் நமக்கு வரும்னு சொல்றாங்க உண்மையா ?//

சவுதியில் கைரேகையுடன் கார்டு கொடுப்பதால் என்ன பிரச்சினை வருமோ அதுவே இங்கும் வரும் :-))

கொலை,கொள்ளை,கற்பழிப்பு என ஈடுப்பட்டு கை ரேகை சிக்கினால் உடனே கைதாக வேண்டி வரும் ,நீங்க தான் அந்த மாதிரி வேலை எல்லாம் செய்யமாட்டிங்களே அப்புறம் என்ன பயம் :-))

எல்லாவித டாக்குமெண்டிலும் அந்த எண்ணை குறிப்பிட சொல்வாங்க எனவே வேற வேற ஊரில டம்மி அட்ரெஸ் ப்ரூஃப் கொடுத்து சொத்து வாங்கினா மாட்டிப்பாங்க, நீங்க தான் அதை எல்லாம் செய்ய மாட்டிங்களே என் பயப்படுறிங்க :-))

ஒரே ஆளு ரெண்டு பாஸ்போர்ட் , (அதுக்கு தான் கை ரேகையைய பாஸ்போர்ட்ல போட வச்சுட்டாங்க) எப்படியாவது வாங்கினாலும் மாட்டிப்பாங்க. நீங்க தான் டுப்ளிகேட் பாஸ் போர்ட் வாங்க மாட்டிங்களே ஏன் பயப்படுறிங்க :-))

ஆதார்கார்டின் சோசியல் செக்யூரிட்டி நம்பர் பயன்ப்படுத்த சொல்வதால் எந்த இடத்திலும் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது, நீங்க தான் ஆள் மாறாட்டம் எல்லாம் செய்ய மாட்டிங்களே ஏன் கவலைப்படுறிங்க :-))

Unknown said...

Mr Vavvaal,

///மேலும் 51,800 கோடி என்பது வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்திய மக்களின் எண்ணிக்கையை ஒப்பிட குறைவா தொகை என்பது எனது கணிப்பு.///


வளைகுடா நாடுகளில் இருந்து வரும் வருமானம் போதாமல் இருந்தால், ஏன் அங்கே குடும்பம் குடும்பமா நிரந்தரமா இருக்கிறார்கள்? தொலைந்து இந்தியாவிற்கே திரும்பலாமே?

வவ்வால் அவர்களே, அங்கிருக்கும் இந்திய முதலீடுகளையும் நிறுத்தி, வளைகுடா நாடுகளில் வேலைக்கு இருக்கும் இந்தியர்களையும் வரவழைத்துக் கொள்ளலாமே! ஏனெனில், முஸ்லிமல்லாத இந்தியர்கள்தான் அதிகளவில் இருக்கிறார்கள்.

தனது வர்த்தக நலன்களை எப்படியாவது, தக்கவைத்துக்கொள்வதற்கு, இந்திய அரசு வளைந்து, நெளிந்து, பணிந்து இலங்கை அரசிடம் எப்படியெல்லாம் மன்றாடுகிறது என்று விளங்கவில்லையா? அங்கிருந்து வரும் வருமானம், உங்களுக்கு வளைகுடாவில் இருந்து வரும் வருமானத்தைவிட, மிகவும் அதிகமா?

ஆப்கானிய மக்களின் மேம்பாட்டுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில், நேட்டோ நாட்டுப் படைகளின் சீலைக்குள் ஒளிந்துகொண்டு, தனது வர்த்தக நலனை எப்படியாவது அடைந்துவிட வேண்டுமென்று, மறைமுகமாக தளபானுக்கு உதவியளித்துக் கொண்டு திரியும் இந்திய உளவுப் படையை என்னவென்று சொல்ல? ஆப்கானில் இருந்து வரும் வருமானம், வளைகுடாவில் இருந்து வரும் வருமானத்தைவிட, அதிகமா?

///தமிழ்நாட்டுக்கு டாஸ்மாக் மூலம் மட்டுமே 15,000 கோடி கிடைக்குதுங்க.///

தமிழ்நாட்டில் உள்ள சினிமாக் கூத்தாடிகளால், டாஸ்மாக்கை விட, அதிக வருமானம் கிடைக்கிறது.

15,௦௦௦ கோடி போதாது. வீதி வீதியாக டாஸ்மாக் கடைகளைத் திறந்து, மல்டி பில்லியன் லெவலுக்கு வருமானம் வரக்கூடியதாக வந்தால்தான், தமிழ்நாடு தன்னிறைவு அடையும்.

வவ்வால் said...

யூசப்,

முதலில் எதைப்பற்றி பேசுறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு பேச வாங்க, என்ன பேசுறோம்னே தெரியாம வந்திடுறாங்கப்பா :-))