சகோதரர் நாம் மனிதர்கள்!
//எனக்கு ஒரு சந்தேகம்...இந்துக்கள் அதிகம் இருக்கும் இந்த நாட்டில் இந்து மதத்தை கிண்டல் செய்யும் பீ.கே போன்ற படங்கள் சக்கை போடு போடுகின்றன.....கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாட்டில் வெளி வந்த ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் படமும் சக்கை போடு போட்டது.......இதே போன்று இஸ்லாமை அல்லது நபியை விமர்சித்தோ இஸ்லாமியர்கல் அதிகம் வாழும் நாட்டில் ஒரு படம் வெளிவந்து நன்றாக ஒடுமா?// - நாம் மனிதர்கள்!
இந்து மத வேதங்கள் என்ன சொல்கிறதோ அதன் படி இந்துக்கள் நடப்பதில்லை. மாறாக பெரும்பான்மையோர் அதற்கு எதிராகவே நடக்கின்றனர்.
யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'
-------------------------------
யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)
------------------------------
யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.
-------------------------------
பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'
-------------------------------
யாந்தி தேவன் விருதா தேவன்
பித்ர யாந்தி பித்ர விருதா
புதானி யாந்தி புதேஜியா
யாந்தி மதியாஜி நெயிமாம்
(9 : 25)- கீதை
தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்திலும் முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடத்திலும் சாத்தான்களை வணங்குபவர்கள் சாத்தான்களிடத்திலும் போவார்கள். ஏக இறைவனை வணங்குபவர்களோ இறைவனாகிய என்னிடம் வருவார்கள்.
--------------------------
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யோவான் 1 : 18
--------------------------
மேலே வானிலும் கீழே புமியிலும் மற்றும் நீரிலும் உண்டாகி இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு வடிவத்தையேனும் எந்த ஒரு சிலைகளையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
-பைபிள் (யாத்திராகமம் 20 : 1-5)
-------------------------
ஒரே ஒரு மெய்யான கடவுள்தான் இருக்கிறார். அவரே சர்வ வல்லமை உடையவர்: உன்னதமானவர்: வானத்தையும் புமியையும் சமுத்திரத்தையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவருமான சிருஷ்டகர்.
-பைபிள் (அப்போஸ்தலர் 4 : 18-24)
------------------------
இந்து மதமும் கிருத்தவ மதமும் ஏக இறைவனையே வணங்கச் சொல்ல தெருவுக்கு ஒரு கடவுளை உங்கள் இஷ்டத்துக்கு உண்டாக்கிக் கொண்டது யார் தவறு? முக்கடவுள் கொள்கையை கிருத்தவத்தில் நுழைத்தது யார்? பைபிள் ஏக இறைவனையே வணங்கச் சொல்ல இறைத் தூதரான ஏசுவை ஏன் வணங்குகிறீர்கள்? இது பற்றி என்றாவது சிந்தித்துள்ளீர்களா?
“நபியே! இறைவனாகிய என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்' என்று கூறுவீராக.”
-குர்ஆன் 2 : 186
புரோகிதர்களிடம் செல்லாதீர்கள்: உண்டியலில் எனக்காக சாசு போடாதீர்கள். உங்களின் தேவை எதுவோ அதனை என்னிடமே கேளுங்கள். உங்கள் அருகிலேயே இருக்கிறேன். என்று நம்மை படைத்த இறைவன் கூறும் போது அதற்கு மாற்றமாக நடப்பது யார் குற்றம்? இவ்வாறு புரோகிதர்களால் ஏமாற்றப் படுவதைத்தான் பிகே படமும் கண்டிக்கிறது.
இந்து கிருத்துவத்தில் வேதக் கருத்துக்கள் திரிக்கப் பட்டதால் அதன் உண்மைத் தன்மையை சிறிது சிறிதாக இழந்ததால் மக்களுக்கு மதங்களின் மேல் உள்ள பிடிப்பு போய் அந்த மதத்துக்கு எதிரான கருத்து கொண்ட படங்களை விரும்பி பார்க்கின்றனர்.
இஸ்லாமியர்கள் இன்று வரை தங்கள்து வேதத்தில் கை வைக்காமல் எந்த மாற்றமும் செய்யாமல் அதன் தனித் தன்மையைப் பாதுகாக்கின்றனர். அந்த வேத வசனங்களையும் அதனைக் கொண்டு வந்த தூதரையும் தங்களின் உயிரினும் மேலாக மதிக்கின்றனர். இந்த இஸ்லாத்தால் அழகிய வாழ்வு முறையை பெற்றுக் கொண்டதே இந்த பிடிப்புக்கு காரணம். எனவே தான் இஸ்லாத்தையோ, நபிகளையோ கிண்டலடிக்கும் சினிமாக்களை நஞ்சாக வெறுக்கின்றனர் முஸ்லிம்கள்.
இந்துக்களும் கிருத்தவர்களும் தங்கள் வேதங்கள் கூறும் ஏக இறைக் கொள்கையை கடை பிடிக்கத் தொடங்கி விட்டால் இஸ்லாமியர்களைப் போல அவர்களுக்கும் தங்கள் மதங்களின் மேல் பிடிப்பு ஏற்பட தொடங்கி விடும். அதன் பிறகு பிகே போன்ற படங்களுக்கு இந்தியாவில் மதிப்பிருக்காது. அவ்வாறு நீங்கள் ஏக இறைக் கொள்கைக்கு மாறி விட்டால் இந்து கிருத்தவத்தை கிண்டலடிக்கும் படங்களை எடுக்கவும் சினிமாக் காரர்கள் முன் வர மாட்டார்கள்.
முயற்சித்துத்தான் பாருங்களேன்.!