Followers

Wednesday, October 15, 2014

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இல்லையா?

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இல்லையா?

தங்கமணி!

//வஹாபிகளின் வழித்தோன்றல்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று சிரியாவில் சவுதி அரேபியா, பஹ்ரேன், ஷேக்குகளின் ஆதரவுடன் அங்குள்ள சியா, யாஜிதி ஆண்களை கழுத்தை வெட்டிக்கொன்று, அவர்களின் மகள்கள், மனைவிகள், பெண்களை விலைக்கு வாங்கி விற்று, பாலுறவு அடிமைகளாக வைத்துகொண்டிருக்கிறார்களே, அதெல்லாம் சுன்னாவா?
அவர்களுக்கெல்லாம் அநீதி இழைக்கப்படவில்லையா? அல்லது அதெல்லாம் அல்லாவின் வழியில் நடக்கும் ”அறப்போரா”?//

இஸ்லாத்தின் பெயரால் யார் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு குர்ஆனின் கட்டளை இருக்க வேண்டும். அது அல்லாமல் தனி மனிதர்கள் செய்யும் எந்த காரியத்துக்கும் இஸ்லாமோ முஸ்லிம்களோ பொருப்பாக மாட்டார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பே சிஐஏவும், மொஸாத்தும் சேர்ந்து அவர்களின் காரியங்களை சாதித்துக் கொள்ள உருவாக்கிய அமைப்புகளே! எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் இத்தனை இடங்களை இவர்களால் எப்படி பிடிக்க முடிந்தது? அதிலும் பல லட்சம் டாலருக்கு பெட்ரோலை விற்கின்றனர் இந்த தீவிரவாத குழுவினர். இதனை வாங்குபவர்கள் யார்? உங்கள் வீட்டில் உங்களையே கண்காணிக்கும் வசதிபடைத்த அமெரிக்காவால் இதனை கண்டுபிடிக்க முடியாதா? சதாம் ஹூசைனை சில வாரங்களிலேயே முடிவுக்கு கொண்டு வந்தனர். கடாஃபியையும் சில வாரங்களிலேயே ஒரு முடிவுக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாத ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒரு முடிவுக்கு கொண்டு வர இன்னும் இவர்களால் முடியவில்லையாம். தாலிபான்களை உருவாக்கியதும் அமெரிக்காவும், இஸ்ரேலும்தான். அதே போல் அல்காயிதா, உசாமாபின்லேடன், என்று அனைவரையும் உருவாக்கியது சிஐஏவும் மொசாத்தும் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. இதை ஏன் இவர்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

அமைதியிழந்த அமெரிக்க ஐரோப்பிய மக்கள் இன்று லட்சக்கணக்கில் இஸ்லாத்தில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இன்றும் 10 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் தேசங்களாக மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. எனவே இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு அந்த தேசங்கள் தள்ளப்பட்டுள்ளன. அதற்கான முதல்படிதான் அல்காயிதா, ஐஎஸஐஎஸ போன்ற அமைப்புகள். இந்த அமைப்பின் பெயரால் அராஜகங்களை அரங்கேற்றினால் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் தடுக்க முடியும். அதோடு தீவிரவாதிகளை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் அரபு நாடுகளின் பெட்ரோல் வளத்தையும் சுரண்ட முடியும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். தற்போது ஆப்கானிஸ்தானத்தில் அந்த நாட்டை பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் சென்ற மாதம் அமெரிக்கா புதிதாக பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டதை நாம் பத்திரிக்கையில் பார்த்தோம்.

நமது நாட்டிலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பை உளவுத்துறையே உருவாக்கியதாக ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய காட்ஜூ கூறியதையும் நாம் மறந்து விட முடியாது.

இந்தியாவில் தங்களின் கிளைகளை திறக்கப் போவதாக அல்காயிதாவின் தலைவர் ஜவாஹிரி கொடுத்த அறிக்கையை நாம் பத்திரிக்கைகளில் பார்த்தோம். இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருக்கும் போது திடீரென்று இவர் அறிவிக்க காரணம் என்ன? இந்த செய்தி எங்கிருந்து கசியவிடப்பட்டது?

SITE என்ற செய்தி ஸ்தாபனத்திலிருந்து இந்த செய்தி கசிய விடப்பட்டுள்ளது. இந்த செய்தி ஸ்தாபனமானது இஸ்ரேலுடைய மொசாத்தின் அங்கத்தினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மேலும் நெருக்குதல்களைக் கொடுக்கவும் இந்துத்வாவாதிகளுக்கு இந்து மக்களின் ஆதரவை பெற்றுத் தரும் முகமாகவே இந்த செய்தியை மொசாத் கசிய விட்டுள்ளது.

அஸ்ஸாம் காஷ்மீர் குஜராத் போன்ற மாநிலங்களில் ராணுவத்தாலும் ஆட்சியாளர்களாலும் பல கொடுமைகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கலாம். அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பது இந்திய முஸ்லிம்களுக்கு தெரியும். காவல்துறையும், நீதித் துறையும் இந்தியாவில் முற்றாக சிதைந்து விடவில்லை. எனவே அல்ஜவாஹிரி போன்ற அமெரிக்க கைக் கூலிகளின் உதவி எந்த இந்திய முஸ்லிமுக்கும் தேவையில்லை என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

1. சைபல் எட்மண்ட்ஸ் என்ற எஃப்பிஐ அங்கத்தினர் விவரிக்கும் போது அல்ஜவாஹிரி நேடோவில் வேலை செய்த முன்னால் அதிகாரி என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். அல்காய்தா என்ற இந்த அமைப்பும் அமெரிக்காவின் சிஐஏ வால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார். வளைகுடாக்களில் கால் ஊன்றவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்துத்வாவாதிகளின் கைகளை பலப்படுத்தவும் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவே அல்காயிதாவை இஸ்ரேலிய மொசாத் உருவாக்கியதாக விவரித்து கூறுகிறார்.

2. SITE என்ற இந்த செய்தி ஸ்தாபனமானது ரிடா கட்ஸ் என்ற முன்னால் இஸ்ரேலிய ராணுவ வீரரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தற்போது இந்த யூதன் மொசாத்தில் வேலை செய்து வருகிறார். இந்த செய்தி ஸ்தாபனமானது அல்காய்தாவின் முக்கிய செய்திகளை வெளியிடுவதும் மேலும் அமெரிக்காவுக்கு தோதான செய்திகளை தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் இதன் முக்கிய பணியாகும்.

2 comments:

k.rahman said...

https://www.facebook.com/profile.php?id=100007384787541&fref=ts

inayam sirikkudhu

Dr.Anburaj said...

கற்பனை .படிததுன் சிரித்தேன். ஐஸ்ஐஸ்,போடா கராம்.அல் உம்மா அல் கைதா தக்ரிக் மற்றும் பாக்கிஸ்மதான் போன்ற அரேபிய சமய நாடுகில் செயல்படும் இயக்கங்கள் அனைத்தும் சாத்வீக த்துவங்களை புத்தனை விட சிறப்பாக போதித்து வாழ்ந்து வரு்ம இயக்கங்கள்.போதுமா சுவனப்பிரியரே