Followers

Friday, October 17, 2014

கடித்த நாயை நாம் பாதுகாக்கத்தானே வேண்டும்!



கடித்த நாயை நாம் பாதுகாக்கத்தானே வேண்டும்!

“இவ்வழக்கில் ஜெய லலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் நான் மதிக்கக்கூடியவர். அவர் ஜெயலலிதாவின் உடலில் உள்ள நோய்களை பற்றி எடுத்துக்கூறி ஜாமீன் கேட்டார். அதனால் நான் அதிகமாக ஆட்சேபிக்கவில்லை.

எனவேதான் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இருக்கிறது. தண்டனைக்கும் இடைக்காலத் தடை மட்டுமே விதித்திருக்கிறது. அவர் வீட்டை விட்டு எங்கும் போக கூடாது. கட்சிக்காரர்களை சந்திக்ககூடாது. அரசியல் செய்ய கூடாது. மேல் முறையீட்டில் வாய்தா வாங்கக்கூடாது. டிசம்பர் 18-ம் தேதிக்குள் வழக்கை நடத்த வேண்டும். ஒரே ஒரு நாள் தாமதித்தால் கூட ஜாமீன் தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள் கண்டிப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த ஜாமீன் காலத்தில் சுப்பிரமணியன் சுவாமியையோ, நீதிபதியையோ அசிங்கமாக பேசக்கூடாது. கார்ட்டூன் போடக் கூடாது. வீடு மீதோ, ஆட்கள் மீதோ தாக்குதல் நடத்தக் கூடாது. மீறி ஏதாவது நடந்தால் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் இல்லாமல் போய்விடும் என நீதிபதிகளே கூறி இருக்கிறார்கள்.

அவருடைய கட்சிக்காரர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது. அதனை ஜெயலலிதா தடுக்க வேண்டும். நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அருவருப்பாக பேசக்கூடாது. தமிழ்நாட்டில் மீண்டும் சட்டம் ஒழுங்கை கெடுத்தால் அவருக்குத்தான் பிரச்சினையாக முடியும்.

ஆனால் அதே நேரத்தில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் நான்காண்டு சிறை தண்டனை ஏழாண்டாக கூட மாற வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஜெயலலிதாவுக்கு சிக்கல் இன்னும் முடிந்துவிடவில்லை. இதனை யாரும் மறந்துவிடக் கூடாது''என்றார்.

ட்விட்டரில் விமர்சனம்

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிமுகவினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.அதில் அதிமுகவினரை பொறுக்கிகள் என குறிப்பிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

-சுப்ரமணியம் சுவாமி
தமிழ் ஹிந்து நாளிதழ்
18-10-2014

நாய் கடித்தால் கடி பட்டவர் அந்த நாயை இறந்து விடாமல் மிக ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த சம்பவம் ஏனோ எனக்கு இப்போது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. :-)

No comments: