Followers

Saturday, February 27, 2016

நான்கு பேரை கொன்ற அமெரிக்க இளைஞன்!



வாஷிங்டன் பெல்ஃபெர் நகரில் நேற்று ஒரு துப்பாக்கி ஏந்திய இளைஞன் கண்மூடித்தனமாக சுட்டதில் நான்கு பேர் மரணித்துள்ளனர். முடிவில் அந்த இளைஞன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளான்.

தகவல் உதவி
NDTV
27-02-2016

1 comment:

Dr.Anburaj said...


ஒரு அரேபிய மத இளைஞனின் அரக்கத்தனம் -அசைவ விருந்து
( இந்துக்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றாா்கள். என்றால் முஸ்லீம்கள் அதிக அளவில் பிறரை கொலை செய்கின்றாா்கள்.)

மும்பையை அடுத்த தானேயை சேர்ந்தவர்கள் அன்வர் இஸ்மாயில் (வயது 60). அஜ்கரி (55) தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகன், 4 மகள்கள் என 5 பிள்ளைகள். பத்லு என்ற மகள் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தனித்தனியே வசிக்கின்றனர்.

சி.ஏ. படித்த மகன் அஸ்னேன், மனைவி ஜபின் (28), குழந்தைகள் முக்தசிரா (5), பிறந்து 5 மாதமே ஆன ஹூமேளா மற்றும் பெற்றோர், தங்கை பத்லு ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அஸ்னேன், தனக்கு பதவி உயர்வு கிடைத்ததாக கூறி அதை கொண்டாடுவதற்கு மணமான சகோதரிகள் சபீனா, மாரியா, சுபியா ஆகியோரை விருந்துக்கு அழைத்தார். அவர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். அவர்களது கணவன்மார் வரவில்லை. அனைவருக்கும் அஸ்னேன் அசைவ விருந்து அளித்தார். விருந்து முடிந்து அனைவரும் உறங்க சென்றனர்.
அலறல் சத்தம்

நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்த வீட்டுக்குள் இருந்து மிகுந்த அலறல் சத்தம் கேட்டது. அதை அந்த வழியே சென்ற ஒருவர் கேட்டு, வீட்டுக்குள் எட்டிப்பார்த்தபோது, அங்கே பலரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததும், ஒரு பெண் மட்டும் உயிருக்கு போராடுவதும் தெரிந்தது. அதைக்கண்டு அந்த வாலிபர் அலற, கூட்டம் கூடிவிட்டது.

தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அஸ்னேனின் தங்கை சுபியா ஆவார்.
14 பேர் படுகொலை

அஸ்னேனின் தந்தை அன்வர் இஸ்மாயில், தாய் அஜ்கரி, மனைவி ஜபின், மகள்கள் முக்தசிரா, ஹூமேளா, அக்காள் சபீனா, அவரது மகள் சாதியா (17), மகன்கள் ஆத்தல் (12), அலி ஹசன் (9), தங்கை பத்லு, மற்றொரு தங்கை மாரியா, மாரியாவின் மகன்கள் உமேர் (10), யூசுப் (6), சுபியாவின் 5 மாத பெண் குழந்தை அல்பியா ஆகிய 14 பேர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

வீட்டின் உள்ளே போலீசார் சென்று சோதனை செய்தபோது உள்ளே ஒரு அறையில் அஸ்னேன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டனர். அவரது கையில் ரத்தக்கறை படிந்த கத்தி இருந்தது. 15 பேரது உடல்களையும் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய், தடயவியல் வல்லுனர்கள் வந்து, தடயங்களை சேகரித்தனர்.
பின்னணி என்ன?

முதல் கட்ட விசாரணையில் சொத்து தகராறில் அஸ்னேன் இந்த படுகொலைகளை அரங்கேற்றி, தானும் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது.

இருப்பினும் நடந்தது என்ன என்பது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஸ்னேனின் தங்கை சுபியா உடல்நிலை முன்னேறி, அவரிடம் விசாரணை நடத்தகிறபோதுதான் தெரியவரும்.

இந்த சம்பவம், மும்பை, தானே பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஒரு சம்பவத்தை இதுவரை கண்டதில்லை என நேரில் கண்ட பலரும் கூறினர்.