Followers

Thursday, February 25, 2016

மண் சோறு சாப்பிடுவது மேலும் வியாதிகளை அதிகரிக்கும்

டெங்கு, காலரா என்று மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு மண் சோறு சாப்பிடுவது மேலும் வியாதிகளை அதிகரிக்கும் என்று உங்கள் மக்களுக்கு அறிவுறுத்தக் கூடாதா? @சென்னி மலை @dr anbu raj

2 comments:

Dr.Anburaj said...

வாய் திறந்து விட்டால் இந்துத்துவா -மதவெறி கும்பல் என்று கிழி கிழி என்று கிழித்து விடுகின்றீாகள். மக்களுக்கு கருத்து உபதேசம் செய்ய வேண்டும் என்றால் அந்தஸ்து செல்வாக்கு அல்லது அதிகாரம் இருக் க வேண்டும். மூன்றும் இல்லாது ஏது கூறினாலும் யாரும் பொருட்படுத்துவதில்லை.இந்து இயக்கங்கள் செல்வாக்கு பெற விட்டு விடக் கூடாது என்பதில் ஏராளமான அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் உறுதியாகச் செயல்பட்டு வருகின்றது. திருக்கோவில் நிா்வாகத்தை கையில் வைத்திருக்கும் அரசுதான் இதைச் செய்ய வேண்டும். ஒழுங்காக கை கழுவி விட்டு சாப்பிட வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் அரசு ஏன் இது குறித்து பேசினால் என்ன குற்றம் . ஏன் பேசவில்லை.இந்துக்கள் பழமையில் இருக்க வேண்டும். ஸ்ரீநாராயணகுரு விவேகானந்தா் போன்றவா்களை அறிந்து கொண்டால் இத்தகைய பழக்க வழக்கங்களை மக்கள் தானாகவே கைவிட்டு விடுவாா்கள்.ஆனால் தனது செல்வாக்கு குறைந்து விடுமே என்று ஒவ்வெரு அமைப்பும் நய
வஞ்சனை செய்கின்றது.

Dr.Anburaj said...

மூளைச்சாவு
ஒரு இந்துவின் தியாகம்.இந்து குடும்பத்தின் தியாகம்
கோவையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 20). சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் ரமேஷ் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர்.

இதன்படி சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 14 வயது சிறுவனுக்கு பொருத்துவதற்கு இதயமும், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 33 வயது நபருக்கு பொருத்துவதற்கு கணையமும் தானமாக கொடுக்க முன்வந்தனர்.
சிறுவனுக்கு இதயம்

நேற்று கோவையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் இதயம் 10.35 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து 10.37 மணிக்கு புறப்பட்டு 15 நிமிடத்தில் அடையாறு தனியார் மருத்துவமனைக்கு இதயம் பத்திரமாக கொண்டுவரப்பட்டது.

இதற்காக விமான நிலையம் முதல் அடையாறு மருத்துவமனை வரை உள்ள சிக்னல்கள் தடையில்லாமல் வாகனம் செல்லும் வகையில் (கிரீன் காரிடர்) மாற்றப்பட்டிருந்தது. இதையடுத்து உக்ரைன் நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு இதயம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
கணையம்

ரமேஷ் உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட கணையமும் விமானம் மூலம் கோவையில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 1.27 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து 1.47 மணிக்கு புறப்பட்டு 1 மணி 59 நிமிடம் 40 நொடிகளுக்கு அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னை விமான நிலையம் முதல் ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனை வரை உள்ள 18 கி.மீ. தூரத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் சிவ சங்கரன் சரியாக 12 நிமிடம் 40 நொடிகளில் கடந்து கொண்டுவந்தார். இதையடுத்து டாக்டர் அனில் வைத்யா தலைமையில் இளங்குமரன் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் கணையத்தை பொருத்தினர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக..

இதுகுறித்து டாக்டர் இளங்குமரன் கூறுகையில், பொதுவாக கணையம் சிறுநீரகத்துடன் சேர்ந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டு வந்தது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கணையம் மட்டும் பொருத்துவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும் என்றார்.