Followers

Monday, July 24, 2006

ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குதல்!

ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குதல்!

நம்மூர் பத்திரிக்கைகளின் நம்பகத் தன்மை எந்த அளவு இருக்கிறது என்பதற்கு ஒரு செய்தியைப் பார்ப்போம்.

'நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் பால் மாரியப்பனுக்கு எலக்ட்ரானிக் ஒயரகளுடன் கூடிய மர்மபார்சல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் விடிய விடிய சோதனை நடத்தினர்.

நெல்லை மாவட்டம் அம்பை நகர பா.ஜ.க தலைவராக இருப்பவர் பால் மாரியப்பன். வி.கே. புரம் மேலகாந்தி நகரில் வசிக்கிறார். சிவந்திபுரத்தில் டீக்கடை நடத்துகிறார்.

அப்பகுதியில் உள்ள கூரியர் ஆபீஸீக்கு சென்னையில் இருந்து நேற்று இரவு 7:30 க்குஒரு பார்சல் வந்தது. 15 கிலோ எடை இருந்தது. முழு முகவரி இல்லை. போன் நம்பர் மட்டும் இருந்தது.அது மார்யப்பன் வீட்டு நம்பர். போனில் தொடர்பு கொண்ட கூரியர் ஊழியர்கள் பார்சலை டீக்கடைக்கு அனுப்பி வைத்தனர். அனுப்புனர் முகவரியில் ரமேஷ், பல்லாவரம், சென்னை என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

பார்சலைப் பிரித்த மாரியப்பன், அதில் எலக்ட்ரானிக் கருவிகள் சில ஒயர்கள் இணைக்கப் பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். வி,கே.புரம் போலீஸ்ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றார்.

பார்சலை இன்ஸ்பெக்டர் செய்யது இப்றாகிம் பிரித்தார்.அதில் ஒரு எலக்ட்ரானிக் பொம்மை சிறிய கம்ப்யூட்டர் சாமான் இணைக்கப் பட்டிருந்தது. ஒர பையில் 'பாகிஸ்தான்' என்று உருத, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

அது வெடிக்கக் கூடிய பொருள் அல்ல என்று அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர். அதன் பிறகும் சந்தேகம் தீராத மாரியப்பன் நெல்லை எஸ்.பி ஆபீஸீக்கு போன் செய்தார். எஸ்.பி. அனந்த கமார் சோமானி உத்தரவின் பேரில் வெடி குண்டு நிபுணர்கள் ராஜன், சிவராஜன், தடவியல் நிபுணர் விஸ்வ முன்ன முகமது விரைந்தனர்.

இன்று அதிகாலை 1.15 -க்கு மெட்டல் டிடெக்டர் மூலம் பார்சலை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்தனர்.அந்த பார்சல் வேண்டாம் என்று மாரியப்பன் கூறியதால் அம்பலவாணபுரம் குயவன் பொத்தைக்கு எடுத்துச் சென்று தீ வைத்து கொளுத்தினர்.

இரண்டு வாரம் முன்பு மனித நேய பாசறை என்ற பெயரில் பா.ஜ.க. வை தாக்கி வி.கே.புரம் பகுதியில் பிட் நோட்டீஸ் விநியோகிக்கப் பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து பால் மாரியப்பன் தலைமையில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பால் மாரியப்பனை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்று தெரிய வந்தது. போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறார் மாரியப்பன்.

- 'தமிழ் முரசு' என்ற மாலைப் பத்ததிரிக்கையில் வந்த செய்தியைத்தான் நீங்கள் மேலே படித்தது.

பால் மாரியப்பனின் அண்ணன் துபாயில் இருக்கிறார். அவர் தன் தம்பி பால் மாரியப்பனுக்கு நவின கம்ப்யூட்டர் ஒன்றை அனுப்பி இருக்கின்றார். அந்தக் கம்ப்யூட்டர் பல்லாவரத்திலிருந்து அவர்களின் குடும்ப நண்பர் ரமேஷ் என்பவர் மூலம் பார்சலில் அனுப்பப் பட்டள்ளது.

பார்சலில் முகவரி தெளிவாகவே இருக்கின்றது. ஆனாலும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காவல் துறையையே ஒரு கலக்கு கலக்கி விட்டார்.இதனால் ஒரு வெளி நாட்டுக் கம்ப்யூட்டரையும் இழந்தார்.

இதைத்தான் நம் மாலைப் பத்திரிக்கையான தமிழ் முரசு பழியை இஸ்லாமிய அமைப்பின் மேல் போட நினைக்கிறது. சம்பந்தப் பட்ட அந்த அமைப்பு இப்பத்திரிக்கையின் மேல் தற்போது வழக்கு தொடர்ந்திருக்கிறது. இவர்களுக்கு எந்த வகையிலாவது இஸ்லாமியரின் பெயரை களங்கப் படுத்த வேண்டும். அது தான் குறிக்கோளும். ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குவது என்பது இதுதானோ!

2 comments:

Muse (# 01429798200730556938) said...

HBO is showing its own film known as "Strip Search", which I find a beautiful political movie.

Requesting your review on that film.

Muse (# 01429798200730556938) said...

Dear Sir,

Requesting you to review the HBO movie "Strip Search", which will be telecasted on august 14th in HBO.

Details available on the following link:

http://www.hbosouthasia.com/southasia/movie/1212