Followers

Friday, April 06, 2012

இலங்கை பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?

சுவனப்பிரியன் தனது பக்கத்து நாடான இலங்கையைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலும் மூழ்கியிருந்தார்.. பழைய காட்சிகள் எல்லாம் லைவ்வாக வருகிறது.

காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை கோழைத்தனமாக சுட்ட விடுதலைப்புலிகள்: யாழ்ப்பாணத்தில் கோடீஸ்வரர்களாக இருந்த முஸ்லிம்களை கை செலவுக்கு கொஞ்ச பணத்தைக் கொடுத்து விரட்டிய விடுதலைப்புலிகள்: பத்மனாபா முதற்கொண்டு பல எதிர் கருத்து உடையவர்களை போட்டு தள்ளிய விடுதலைப் புலிகள்: மிதவாத தலைவரான அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்றவர்கள்: தன்னை தலைவனாக ஏற்காத தமிழர்களை போட்டு தள்ளிய பிரபாகரன்: வன்னி காட்டில் தனது மக்களையே கேடயமாக பாவித்த பிரபாகரன்:: தமிழ் இளைஞர்களை வலுக்கட்டாயமாக புலிகள் இயக்கத்தில் சேர்த்து அவர்களின் எதிர் காலத்தை சூன்யமாக்கியது: அடுத்த பிரதமராக விருந்த ராஜீவ் காந்தியை தமிழ் மண்ணிலேயே போட்டு தள்ளியது:

என்று காட்சிகள் அடுத்தடுத்து வருகின்றன.

சுவனப்பிரியன் மேலும் சிந்தனையில் ஆழ்கிறார். இவ்வளவு கொடுமையை செய்தவர்களை அன்றைய பெரும்பான்மையான இந்து தமிழர்கள் ஏன் பிரபாகரனிடம் நியாயம் கேட்கவில்லை. ஒரே மொழியை பேசக் கூடிய முஸ்லிம்கள் நமது சொந்தங்கள் அல்லவா! முஸ்லிம்களை கொன்றது அநியாயம் என்று அன்றே இந்த மக்கள் பிரபாகரனை பிடித்து உலுக்கியிருந்தால் ஒரு நிதானத்துக்கு வந்திருப்பார் அல்லவா! 'இழப்பு முஸ்லிம்களுக்குத்தானே! நமக்கு என்ன வந்தது?' என்று கண்டு கொள்ளாமல் இருந்தது தமிழ் இந்துக்களின் தவறல்லவா!

மேலும் காட்சிகள் ஓடுகிறது......

விடுதலைப்புலிகளோடு இந்தியாவும் பேசிப் பார்க்கிறது. அப்பாவி பொது மக்கள் இறக்கக் கூடாது என்பதற்காக ஒரு சமரசத் தீர்வுக்கு இந்தியா பலமுறை அழைக்கிறது. வழக்கம் போல் எதற்கும் பிரபாகரன் தலை சாய்க்கவில்லை. தேர்தலும் கூடாது: தனி ஈழத்துக்கு ராஜாவாக தான் மகுடம் சூட்ட வேண்டும். அதை இந்தியாவும் இலங்கையும் உலக நாடுகளும் ஆதரிக்க வேண்டும். இதில் உறுதியாக இருக்கவே முடிவில் விடுதலைப்புலிகளை ஒடுக்கி தமிழர்களை சுதந்திரப் பறவைகளாக்க இந்தியா முடிவெடுத்தது. ஆயுதங்களை இலங்கைக்கு கொடுத்தது. போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றது. முதலிலேயே பிரபாகரன் சரண் அடைந்திருந்தால் பல அப்பாவி பொது மக்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அவரோ தனது மக்களையே கேடயமாக பயன் படுத்தினார். தப்பி ஓடியவர்களை சுட்டுக் கொன்றார். முடிவில் இலங்கை ராணுவம் முழு போரை பிரகடனப்படுத்தியது.



அனைத்தையும் யோசித்த சுவனப்பிரியன் என்ன செய்வது என்று குழம்புகிறார். முன்பு முஸ்லிம்களை கொன்றொழித்த பல விடுதலைப்புலிகள் முகாம்களில் உள்ளனர். அவர்களை இப்பொழுது தண்டிப்பதால் போன முஸ்லிம்களின் உயிர் திரும்பப் போவதில்லை. அவர்கள் தனது தலைவன் பிரபாகரனின் கட்டளையை செயல்படுத்தியவர்கள்.

அதே போல் போரில் விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தியதால் அப்பாவி பொது மக்களும் இறக்க நேரிட்டது. இலங்கை ராணுவம் சில இடங்களில் அத்து மீறியும் செயல்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தை தற்போது தண்டிப்பதால் போன தமிழர்களின் உயிர் திரும்ப வரப் போவதில்லை.

எனவே சுவனப்பிரியன் முடிவில் கூட்டி கழித்து ஒரு முடிவுக்கு வருகிறார். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். என்ற முடிவுக்கு வந்தவராக பொது மக்களைப் பார்த்து பேச ஆரம்பிக்கிறார்.

'தமிழ் மக்களே! இந்து, முஸ்லிம், கிறித்தவ மார்க்கங்களை வாழ்வியலாகக் கொண்டவர்களே! 30 ஆண்டு காலம் கஷ்டப் பட்டு விட்டீர்கள். இனி மேலாவது உங்களின் வாழ்வில் வசந்தம் ஒளிர வேண்டும். இது வரை உங்களின் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக இருந்த விடுதலைப்புலிகள் தற்போது அகதி முகாம்களில் உள்ளனர். படிப்பையும், தொழிற் கல்வியையும் கற்றுக் கொண்டு சமூகத்தில் இனி இரண்டறக் கலந்து விடுவார்கள். அவர்களையும் நீங்கள் அரவணைத்துக் கொள்ளுங்கள்.

மொழிப் பற்று இருக்கலாம். அது வெறியாக மாறக்கூடாது. சிங்கள மொழியை கற்றுக் கொள்வதால் அந்நாட்டு சமூகத்தில் ஒன்றர உங்களால் கலக்க முடியும். இதற்காக நம்முடைய தனித் தன்மையை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இனத்துக்கு தமிழையும், மார்க்கத்துக்கு அரபியையும், தொழிலுக்கு சிங்களத்தையும் கற்றுக் கொண்டு உள்ள பல தமிழ் முஸ்லிம்களை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். 'ஹிந்தியை புறக்கணிப்போம்' என்று பீலா விட்டுக் கொண்டிருந்த கருணாநிதியின் பேரப் பிள்ளைகள் எல்லாம் இன்று ஹிந்தி கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பான்மையான சிங்களவர்களை எதிரிகளாக பாவிக்காமல் சகோதரர்களாக பழகுங்கள். தனி ஈழம் என்பது கருணாநிதி, கோபால்சாமி, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் அரசியல் பண்ண வேண்டுமானால் சாத்தியப்படும். பூகோள ரீதியாக செயல்படுத்த முடியாத ஒன்று. இனியும் காலத்தைக் கடத்தாமல் பவுத்தம், இஸ்லாம், கிறித்தவம், இந்து போன்ற நான்கு மதங்களையும் இணைத்து இலங்கையை கட்டியெழுப்ப வாருங்கள். 'நாடு கடந்த தமிழ் ஈழம்' என்ற தமாஷூக்கெல்லாம் உங்கள் பணத்தை கொடுத்து தீவிரவாதத்தை திரும்பவும் வளர்க்காதீர்கள். நியாயமான உங்களின் எந்த கோரிக்கையையும் இந்திய அரசிடம் வையுங்கள். பல குடியிருப்புகளை தற்போது இந்திய அரசு கட்டி வருகிறது. மேலும் உதவ தயாராக இருக்கிறது. தமிழக மக்களும் உங்களுக்கு உதவ தயாராகவே உள்ளனர்.

போர் முடிந்து மூன்று வருடமாகியும் எந்த முன்னேற்றமும் இல்லையே என்ற கேள்வியும் வருகிறது. சண்டை முடிவுக்கு வந்ததால் இன்று உயிருக்கு உத்தரவாதமாவது இருக்கிறது. உலக நாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கை அரசு உள்ளதால் இனி தமிழர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையும். அது ஒன்றுபட்ட இலங்கையிலேயே சாத்தியமாகும். புலிகள் பதுக்கி வைத்த கண்ணி வெடிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அது முடிந்தவுடன் அனைவரையும் அவர்களின் சொந்த கிராமத்திலேயே தங்க வைக்கப்படுவர். இந்திய அரசு அங்கு நடக்கும் முன்னேற்றங்களை கூர்ந்து கவனித்து வருகிறது.

மேலும் தமிழ் இந்துக்களில் யாழ்ப்பாணத்தவர் மலையகத்தவரை மதிப்பதில்லையாம். பல சாதிப்பிரிவினைகள் இந்துக்கள் மத்தியில் இன்றும் இருந்து வருவதாக பல பதிவுகளில் படித்தேன். எவ்வளவு உயர்ந்த சாதியாக இருந்தாலும் 6 அடி மண் தான் அல்லது எலக்ட்ரிக் சுடுகாடுதான். இதை உணர்ந்து தீண்டாமையை ஒதுக்கி 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் முன்னோர்களின் பாதையை பின்பற்றி புதிய இலங்கையை உருவாக்குவோம் வாருங்கள்.' என்று பேசிக் கொண்டே வந்தவர் 'தடால்' என்ற சத்தத்தோடு கீழே விழுந்தார். ஆம்...இதுவரை தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருந்த சுவனப்பிரியன் விழித்தெழுந்து முகம் கழுவ சென்றார்.

-------------------------------------------------------------

அரசு வேலைகளில் இணைந்து சமூகத்தில் கலப்போம்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இலங்கை பொலிஸில் இணைய விண்ணப்பிக்கலாம் என்று இலங்கை பொலிஸார் கூறியுள்ளனர்.
2009 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து தமிழ் பேசும் பொலிஸாரை படைக்கு சேர்ப்பதற்கான மேலும் பொதுவான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் பணிக்கு முன்னாள் விடுதலலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் விண்ணப்பிக்கலாம் என்று முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஆனால், முன்பு போர் நடந்த பகுதிகளில் ஆட்சேர்ப்புப் பணிகள் நடப்பதாகவும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் எவரும் அந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான சுப்பிரிண்டண்ட் அஜித் றோகண பிபிசியிடம் தெரிவித்தார்.
அனேகமாக அனைத்து முன்னாள் போராளிகளும், பலவந்தமாகவே விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டு, போருக்கு அனுப்பப்பட்டார்கள் என்று அவர் கூறினார்.
எந்த விதமான குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல், வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாமல் மனந்திருந்தி பொலிஸில் பணியாற்ற விரும்பும் எந்தவொரு முன்னாள் போராளியும் பொலிஸ் பணியில் இணைவது குறித்து கவனம் செலுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.
அனைத்து முன்னாள் போராளிகளும் பொலிஸ் படையில் இணைவது அவ்வளவு இலகுவானதல்ல. அவர்கள் விண்ணப்பிக்கும் பதவியின் தரத்துக்கு ஏற்ப கபொத சாதாரண, உயர்தர கல்வியை அல்லது பட்டப்படிப்பை அவர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அரசாங்கத்தினால் புனர்வாழ்வு நடவடிக்கை என்று கூறி சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பல முன்னாள் போராளிகள் பள்ளிக்கூட மட்ட சோதனைகளை பூர்த்தி செய்யவிருக்கிறார்கள்.
போரின் இறுதி வேளையில் இவ்வாறு சரணடைந்ததாக கூறப்படும் சுமார் பத்தாயிரம் பேர் தற்போது விடுவிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
இன்னும் ஆயிரம் பேர் முகாமில் இருக்கும் நிலையில் ஏனையவர்கள் வழக்கு விசாரணைகளுக்காக காத்திருக்கிறார்கள்.
மேலும் நூற்றுக்கணக்கான விடுதலைப்புலிகள் சிறைகளில் இருக்கிறார்கள்.
போருக்கான மிகப்பெரிய காரணம் மொழிப்பிரச்சினைதான் என்பதால், பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பொலிஸ் படையில் தமிழர்களையும், தமிழ் தெரிந்த முஸ்லிம்களையும் ஆட்சேர்ப்புச் செய்வது அவசியமாகும் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
பெண்கள் உட்பட சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பதவிகளுக்காக 450 தமிழ் பேசுவோர் பயிற்சியை தற்போது ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த வருடத்தில் போர் ஆண்டு நிறைவு அணிவகுப்பில் இருந்து தாம் திடீரென விலக்கப்பட்டதற்காக தமிழ் பொலிஸார் சிலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இது ஒரு பாதுகாப்பு பிரச்சினை என்று அவர்கள் கருதுவது போல் தென்படுவதாக ஒருவர் கூறியிருந்தார்.
-பிபிசி
ஜனவரி 30, 2012

தனி ஈழம் அமையும் போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை வேலையற்றறு இருக்கும் இளைஞர்கள் நாட்களை கடத்தாமல் அரசு கொடுக்கும் வேலைகளை பெற்று சமூகத்தில் ஒன்றரக் கலக்க வேண்டும்.

--------------------------------------------------------


A group of Sri Lankan citizens who said they were Tamil businessmen protested in front of the Indian High Commission in Colombo demanding that India support Sri Lanka at the United Nations Human Rights Council session in Geneva.

The protest was held before Prime Minister Manmohan Singh made clear India's “inclination” on the U.S.-sponsored resolution against Sri Lanka at the Council.
The businessmen reminded the Indian High Commission of the riots targeting Tamils in Colombo and wanted India to refrain from taking any course of action that might hurt Tamils in Sri Lanka. A few of them later met Deputy High Commissioner P. Kumaran and handed over a four-page memorandum detailing the past (when they were repressed by the LTTE), the present (the government is working to implement the recommendations of a commission that went into the cause of the Tamil struggle), and the future (what would happen if India did not support Sri Lanka at the UNHRC).

The memorandum, which reflected the government line on most points, said the businessmen had “suffered untold hardships for nearly 30 years due to the LTTE. All major industries, the agriculture, fisheries and services in the north and east Sri Lanka were adversely affected, and many were forced to liquidate their businesses as it was not viable for them to continue in the theatre of conflict”. Also, “LTTE levied heavy taxes…to finance their misplaced ideology”.

The memorandum went on to describe the steps taken by the government to bring about normalcy in the war-ravaged Northern Province, and also put on record the fears of the Tamil business community.

Stand welcomed
The Tamil National Alliance has welcomed India's stand on the U.S.-sponsored resolution.
It also thanked the political parties in Tamil Nadu for bringing pressure on the government. But many prominent individuals and civil society leaders here have criticised the Indian stand.

Elsewhere in the city, hundreds of Buddhist monks and leaders from other religions participated in an Adishtana Pooja and Satyagraha to defeat anti-Sri Lankan forces and conspiracies. A similar Buddhist prayer was held on Saturday too, to bless the government.
-R. K. Radhakrishnan
The Hindu

One comment:

the LTTE tried to control part of our mother land. they couldn’t do it. now they are trying to get us in trouble by saying we committed war crimes. all the LTTE supporters including channel 4 and jayalalitha are doing all they can to gain a separate country for Tamils. our army did not commit war crimes. the LTTE did. they killed un-armed people by hundreds. they set up bombs everywhere including temples and killed people. they recruited kids aged 12 for the war. They introduced suicide bombing.

Tamil people came running to army controlled area at the last stage of war coz the LTTE used their own as a human shield.

ex-LTTE people are being given jobs by the SL gov.

if USA and others are so worried about human rights, why didn’t they speak up when ltte killed people?

and when they kill Osama its ok when we kill prabha, its a crime? Jealous much?

hello? wake up. they both are terrorists.

channel 4 type of false videos mean nothing. just watch youtube videos about ltte bomb blasts if you want to know the real thing

what would USA do if a group of people wanted part of their country and that group killed people in hope of getting a separate country? They would fight right? That’s what we did too.

We love normal Tamil people, Tamil food, the saris and the Tamil movies too. We love living in the same country in peace with them. It’s the terrorists that we destroyed.

So don’t be fooled by the terrorists. Open your eyes and see the truth. please…

During the war time, we were always afraid we didn’t know when a bomb would blast killing people. when we went out in the morning we were not sure if we would be able to return home alive.

Now we live in a peaceful country and we are happy. For gods sake, I share my lunch with a Tamil friend so stop trying to portray us as monsters. we are very friendly and innocent people. We are Buddhists. we don’t hurt other people.
from: eesha
Posted on: Mar 20, 2012 at 10:01 IST

-------------------------------------------------------------

டிஸ்கி: இந்த பதிவு எமதர்மனை வைத்து கற்பனையாக எழுதப்பட்ட ஒரு இலங்கைப் பதிவரின் பதிவுக்கு எதிர்பதிவு. அவருக்கு பின்னூட்டமாகத்தான் எழுதினேன். பதில் நீளமாகி விட்டதால் தனி பதிவாகவே கொடுத்துள்ளேன்.

33 comments:

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஸலாம்,
இயல்பான ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு. ஆனால் காகிதப்புலிகளும் அரசியல பம்மாத்து புலிகளும் இது குறித்து தமிழ் மக்கள் சிந்தித்து விடக் கூடாதென்பதில் உறுதியாக இருக்கின்றனர். அப்படி மக்கள் சிந்தித்து விட்டால் "நாடு கடந்த தமிழீழம்" என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்த முடியாதே. பாவம் இலங்கை வாழ் தமிழர்கள். சரியான தலைமையின்றி தவறாகவே வழி நடத்தப்படுகிறார்கள்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஷேக் தாவுத்!

//பாவம் இலங்கை வாழ் தமிழர்கள். சரியான தலைமையின்றி தவறாகவே வழி நடத்தப்படுகிறார்கள்.//

மிதவாத தலைவர்களை எல்லாம் முன்பே கதையை முடித்து விட்டார்களே! புதிய தலைமை: அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லக் கூடிய தலைமை: தற்போது இலங்கைத் தமிழருக்கு அவசியமாகிறது.

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி! சகோ.

Barari said...

மிக சரியான தெளிவான தீர்வு .வாழ்த்துக்கள்

Anonymous said...

முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசு சார்பானவர்கள் என்ற பிரச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது.

"முஸ்லிம்களை நம்ப முடியாது. அவர்கள் ஒரு நேரம் தமிழரோடு சேர்ந்து நிற்பார்கள். மற்ற நேரம் சிங்களவர்களுடன் சேர்ந்து நிற்பார்கள்." இது போன்ற கருத்துகள் பரப்பப் பட்டன.

நாஜிகளின் காலம் வரையில் ஐரோப்பாவில் "யூதர்களை நம்ப முடியாது." போன்ற கருத்துகள் சாமானியர் மத்தியிலும் பிரபலமாக இருந்தது.

தமிழ் அரசியல்வாதிகளும் "தொப்பி பிரட்டிகள்" போன்ற முஸ்லிம்களை இகழும் இனவாதச் சொற்களை சாதாரண மக்கள் மனதில் விதைத்தார்கள்.

முஸ்லிம்கள் மீதான யாழ்ப்பாணத் தமிழரின் வெறுப்புணர்வு கருத்தியல் ரீதியானது. ஆயினும் தமிழ் முதலாளிய வர்க்கமும் வர்த்தக போட்டி, பொறாமைகள் காரணமாக அதனை விரும்பியிருக்கலாம்.

திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல

Saturday, 12 August 2006 20:31 பி.இரயாகரன்

யுத்தத்தின் பெயரில் நடந்தது இனவழிப்பே.

இதைப் புலிகள் தொடங்கி வைக்க, பேரினவாதம் முடித்துவைக்க முனைகின்றது.

உண்மையில் இரண்டு இராணுவங்கள் மோதவில்லை.

திருகோணமலையில் இருந்து தமிழ்மொழி பேசும் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க,
புலிகள் நடத்திய வெறியாட்டம் தான் மூதூர்ச் சம்பவம்.

வெறும் முஸ்லீம் மக்களை மட்டுமல்ல, தமிழ் மக்களையும் அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும் வகையில், அந்த மக்களை அந்த மண்ணில் சிறுபான்மை இனமாக்கும் வகையில், அவர்களின் சமூக பொருளாதார வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் தான், இந்த புலி வெறியாட்டம் நடாத்தப்பட்டது.

நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் புலிகளால் நடாத்தப்பட்டது.

முஸ்லிம் மக்கள் விரோத உணர்வுடன் வெறியேற்றப்பட்டு நடத்திய வெறியாட்டம் ஒருபுறம் அரங்கேற,

அதை தலையில் வைத்து நக்கிப் பிழைக்க ஆடுபவனின் முஸ்லீம் விரோத வக்கிரமோ கேவலமாக உலகெங்கும் அரங்கேறுகின்றது.

இதுவே பல உண்மைகளை பளிச்சென்று நிரூபித்துவிடுகின்றது.

முஸ்லீம் துரோகி பற்றியும், எட்டப்பர் பற்றியும் மூக்கால் அழுது புலம்பும் ஓட்டுண்ணிப் பினாமிகள்,

எடுப்பார் கைப்பிள்ளையாகி முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் தம்மையறியாமலேயே நிர்வாணமாகி தலைவிரிகோலமாகி விடுகின்றது.

மூதூர் தாக்குதலை நியாயப்படுத்த, அதை முஸ்லீம் எட்டப்பர் மீதான தாக்குதலாக வாய் கூசாது உரைக்கின்றனர்.

சரி எட்டப்பர் இருந்தனர் என்று வைத்துக் கொள்வோம், அதற்காக ஒரு இனத்தையே சூறையாடுவது எப்படி நியாயமாகும்.

அதே நீங்கள் தானே, தமிழ் மக்கள் மத்தியில் எட்டப்பர் ஒழிப்பை 1986 முதலாக முடிவின்றி நாள் தோறும் நடத்துகின்றீர்களே.

அப்படிச் செய்யும் நீங்கள் தமிழனை துரோகிகள் ஏன் கூறுவதில்லை.

ஏன் அதை முஸ்லீம் மக்களுக்கு மட்டும் கூறுகின்றீர்கள்.

அடிவருடிகளாகி நக்கித் தின்னும் புலிப்பினாமிக் கூட்டம் இப்படி குரைத்தபடி, மனித அவலத்தின் மேல் சிலிர்த்து உறுமுகின்றனர்.

அதேநேரம் புலித்தலைவர்கள் தம்மை நல்லபிள்ளையாக காட்டிக் கொள்ள அறிக்கைகளை விடுகின்ற இன்றைய நிலையில்,

முஸ்லீம் மக்கள் மீதான பலிப்பும் அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும் என்ற வக்கிரத்தை, புலிகளின் பினாமிக் கும்பல் வசைபாடல் ஊடாக முன்வைக்கின்றது.

இதை எழுத்திலும் ஆபாசமாக கொட்டித் தீர்க்கின்றனர்.


SOURCE: >>>>>>>
ஈழத்தமிழர் = (இந்துக்கள் + கிறிஸ்தவர்கள் ) - (முஸ்லிம்கள்)
<<<<<<<
.

suvanappiriyan said...

சகோ அனானி!

//சரி எட்டப்பர் இருந்தனர் என்று வைத்துக் கொள்வோம், அதற்காக ஒரு இனத்தையே சூறையாடுவது எப்படி நியாயமாகும்.//

சரியான வாதம்! ஒரு இனத்திலோ அல்லது ஒரு மதத்திலோ 100 சதவீதம் நேர்மையானவர்கள் இருக்க முடியாது. முஸ்லிம்களில் ஒரு சிலர் எட்டப்பர் வேலை பார்ப்பதாகவே வைத்துக் கொள்வோம். அந்த வேலையை செய்தது யார் என்று தீர்மானித்து அவர்களை தண்டிப்பதுதானே நியாயம். அதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையே பிறந்த மண்ணை விட்டு விரட்டியடித்தது எந்த வகை நியாயம். இன்றும் கூட அந்த மக்கள் முகாம்களில் காலத்தை ஓட்டி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனையை இறைவன் உடன் அங்கீகரிக்கிறான்.

suvanappiriyan said...

சகோ பராரி!

//மிக சரியான தெளிவான தீர்வு .வாழ்த்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப்பிரியன் ,

இது ஒரு எதிர்ப்பதிவு என்று கூறி உள்ளீர்கள். எந்த பதிவிற்கு என்று தெரிய வில்லை, தெரிந்து கொள்ளவும் விரும்ப வில்லை.
கடந்தகால கசப்புக்களை மறந்து அனைவரும் இணைந்து ஒரே சமூகமாக வாழ வேண்டும் சகோ. பாவம் அந்த மக்கள்.
பட்ட துயரங்களும், இழந்த உயிர்களும் போதும். இனியாவது அவர்கள் வாழ்வில் வசந்தங்கள் வீச வேண்டும் என்பதே எனது ஆசை.

சிராஜ் said...

என்னதான் சமாதானம் பேசினாலும் சிங்களவன் மனது மாற கொஞ்ச நாள் ஆகும். அவன் தமிழர்களை அடிமை படுத்தவே நினைப்பான்.
இப்போதைக்கு தமிழர்களுக்கு தேவை நல்ல, தெளிவான சிந்தனை உள்ள தலைவர்கள் தான். அவர்களுக்கு அப்படி ஒருவர் கிடைக்க இறைவன்
போதுமானவன்.

சிராஜ் said...

மத்தபடி இன்னும் தமிழ் ஈழம் னு பேசுற சீமான், நெடுமாறன் மதுரம் வைக்கோ போன்றவர்களைப் பார்த்தால் சிரிக்கிறதா அழுவுரதான்னு தெரியல.
பாவம் அவர்களுக்கு என்ன பிரச்சனையோ????

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//பட்ட துயரங்களும், இழந்த உயிர்களும் போதும். இனியாவது அவர்கள் வாழ்வில் வசந்தங்கள் வீச வேண்டும் என்பதே எனது ஆசை.//

அதற்கான தீர்வைத்தான் இந்த பதிவும் சொல்கிறது.

//என்னதான் சமாதானம் பேசினாலும் சிங்களவன் மனது மாற கொஞ்ச நாள் ஆகும். அவன் தமிழர்களை அடிமை படுத்தவே நினைப்பான்.
இப்போதைக்கு தமிழர்களுக்கு தேவை நல்ல, தெளிவான சிந்தனை உள்ள தலைவர்கள் தான். அவர்களுக்கு அப்படி ஒருவர் கிடைக்க இறைவன்
போதுமானவன்.//

உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.

//மத்தபடி இன்னும் தமிழ் ஈழம் னு பேசுற சீமான், நெடுமாறன் மதுரம் வைக்கோ போன்றவர்களைப் பார்த்தால் சிரிக்கிறதா அழுவுரதான்னு தெரியல.
பாவம் அவர்களுக்கு என்ன பிரச்சனையோ????//

அவர்களுக்குள்ள பிரச்னையை முடித்துக் கொள்ள மற்றவர்களை சிக்கலில் மாட்டிவிடுகிறார்கள். அதுதான் பிரச்னையே!

இத்தனை பேரும் ஒன்று சேர்ந்து தமிழக மக்களிடம் மட்டும் நன்கொடைகளை பெற்றால் ஈழத் தமிழர்களின் பல குடியிருப்புகளை அரசாங்கத்தை எதிர்பார்க்காமலேயே கட்டிக் கொடுக்க முடியும். அதற்காகவெல்லாம் ஒரு துரும்பைக் கூட நகர்த்த மாட்டார்கள்.

இன்னொரு விஷயமும் இருக்கிறது. இலங்கையில் அமைதி திரும்பி விட்டால் ஐரோப்பாவில் அகதிகளாக வாழ்க்கையை வசதியாக நடத்தி வரும் லட்சக்கணக்கான மக்கள் தாயகம் திரும்ப வேண்டி வரும். அப்படி நடந்து விடக் கூடாது என்பதற்காகவும் பலர் காயை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

baleno said...

ஆக்கபூர்வமான பதிவு. அருமையான ஆலோசனைகள். உங்களுக்கு நன்றி.
புலிகள் ஒழிக்ககபட்டதினால் குண்டுத் தாக்குதல்கள் இல்லை, படுகொலைகள் இல்லை, பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளை கட்டாயப்படுத்தி யுத்தத்திற்கு பிடிப்பார் கிடையாது.இதனால் தங்கள் பிழைப்பு கெட்டுவிட்டதே என்கின்ற மிக பெரிய கவலை பலருக்கு. இதை எப்படி குலைக்கலாம் என்பது பற்றியே தீவிரமாக சிந்திக்கிறார்கள்.

ஹிந்தியை புறக்கணிப்போம்' என்று பீலா விட்டுக் கொண்டிருந்த கருணாநிதியின் பேரப் பிள்ளைகள் எல்லாம் இன்று ஹிந்தி கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கும் அதே கதை தான். சிங்களவனின் மொழியை படியாதே என்று இலங்கையில் வாழும் தமிழனுக்கு ஆலோசனை கூறியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாடுகளில் ஆங்கிலம் பிரான்ஸ் எல்லாம் படிப்பித்தார்கள். இரண்டாவது மொழியாக ஸ்பானிஸ்சும் படிப்பித்தார்கள். இலங்கையில் உள்ள தமிழனுக்கும் சிங்களம் தெரிந்தால் சிங்களவனுடன் கதைத்து பேசி ஒற்றுமையாகி விடுவார்களோ என்ற பயம்.

suvanappiriyan said...

ஆதித்தன் கரிகாலன்!

//நன்றி ஓசூர் ராஜன்; இன்று நாம் வழிபடும் கோவில்/ தேவாலயம்/மசூதி இவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் அப்படியே இருந்தன என யாரும் சொல்ல முடியாது. இன்று முஸ்லிம்களால் வழிபடப்படும் கபாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிலை வழிபாடு நிலவியது. மேலும் அங்குள்ள புனித கல்லும் சிவலிங்க வடிவத்தை ஒத்துள்ளது. அதேபோல இந்த இந்து ஆலயங்களும் சமண பௌத்த தலங்களாக இருந்திருக்கலாம்.//

கஃபாவில் நாள் ஒன்றுக்கு ஒரு சிலை வைத்து வணங்கியதை முகமது நபியும் மறுக்கவில்லை. முஸ்லிம்களும் மறுக்கவில்லை. அதற்கு முன்னால் இன்னும் 3000 ஆண்டுகள் பின்னோக்கி சென்றால் இறைத் தூதர் ஆபிரஹாம் இதே கஃபாவில் ஓரிறைக் கொள்கையை போதித்தார். சிலை வழிபாடு பின்னர் வந்தது. அதைத்தான் முகமது நபி அப்புறப்படுத்தி திரும்பவும் ஓரிறைக் கொள்கையை நலை நாட்டினார். அது இன்று வரை தொடர்கிறது.

ஆனால் இங்கு நண்பர் ராஜன் தரும் தகவலின் அடிப்படையில் பல வழிபாட்டத்தலங்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. பல கல்வெட்டுகளை மறைத்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கொவிலைப் பற்றிய சர்ச்சை தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்து கொவில்கள் முன்பு சமண கோவில்களாகவும், பவுத்த கோவில்களாகவும் இருந்ததை மறைத்து வரலாற்றில் பொய்யை ஏன் கலக்க வேண்டும் என்பதே நண்பர் ராஜனுடைய வாதம்.

suvanappiriyan said...

சகோ பலினோ!

//இங்கும் அதே கதை தான். சிங்களவனின் மொழியை படியாதே என்று இலங்கையில் வாழும் தமிழனுக்கு ஆலோசனை கூறியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாடுகளில் ஆங்கிலம் பிரான்ஸ் எல்லாம் படிப்பித்தார்கள். இரண்டாவது மொழியாக ஸ்பானிஸ்சும் படிப்பித்தார்கள். இலங்கையில் உள்ள தமிழனுக்கும் சிங்களம் தெரிந்தால் சிங்களவனுடன் கதைத்து பேசி ஒற்றுமையாகி விடுவார்களோ என்ற பயம்.//

ஆங்கிலம்,பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகள் அனைத்தம் நமது நாடுகளை காலனிகளாக வைத்திருந்தவர்களின் தாய் மொழி. தேசப் பற்றினால் இந்த மொழிகளை படிக்க விருப்பமில்லை என்று சொன்னாலும் ஓரளவு வாதத்துக்கு ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அதுவும் கூட தவறு.

ஆனால் இவர்களோ சிங்களத்தையும் ஹிந்தியையும் படிக்க வேண்டாம் என்று அறிக்கை விடுகின்றனர். இதனால் தனது மக்களை எந்த அளவு பின்னோக்கி கொண்டு செல்கிறார்கள் என்பதை இவர்கள் உணருவதில்லை. நான் வந்த புதிதில் ஹிந்தி தெரியாமல் எந்த அளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும். பெரும்பான்மையோர் பேசும் மொழியை கற்பது காலத்தின் கட்டாயம். இதை என்று நாம் உணரப் போகிறோமோ தெரியவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

இந்தியாவில் பெண்களின் உரிமை பட்டப்பகலில் பறிக்கப்படுகிறது:

http://youtu.be/OMF3Rxpmo7o

Anonymous said...

அன்புடன் சுவனப்பிரியன்,

நான் தென்னிலங்கையிலேயே பிறந்து வளர்ந்தவன். தமிழிலேயே படித்தாலும் சிங்களத்திலும் மிக நன்றாகவே பேசுகிறேன். இங்கே நீங்கள் மொழி பற்றிக் கருத்துக் கூறுவது சரிதான். என்றாலும், நீங்கள் சில விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் சிங்களத்தை இரண்டாம் மொழியாகக் கற்று 1994 ஆம் ஆண்டிலேயே திறமைச் சித்தி பெற்றுள்ளேன். கடந்த 2002 ஆம் ஆண்டு முதலே சிங்களப் பாடசாலைகள் அனைத்திலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நானும் சிங்களப் பாடசாலையொன்றிற் தமிழாசிரியனாக இருந்துள்ளேன். அவ்வாறே தமிழ்ப் பாடசாலைகளிற் சிங்களம் முன்னிருந்தே கற்பிக்கப்படுகிறது. எனினும், பெரும்பாலான தமிழ்ப் பகுதிகளிற் சிங்களப் பாடம் கற்பிக்கப்படுவதில்லை.

இங்கு மாத்தறை மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பேசுவோரின் தொகை நூற்றுக்கு இரண்டு சதவீதம் மட்டுமே. அவ்வாறிருந்தும், அரசாங்க நிறுவனங்களிற் பெரும்பாலானவற்றிற் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கின்றனர்.

வவுனியாவிலிருந்து 2003 ஆம் ஆண்டு தென்னிலங்கையின் காலி மாநகரிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த தமிழ் மாணவர்கள் அனைவரும் அஞ்சிக் கொண்டுதான் வந்தார்கள். இங்குள்ள சிங்களவர்கள் அவர்களை உபசரித்ததைப் பார்த்து வியந்து போனார்கள். போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே நிலைமை இப்படித்தான் இருந்தது. இது நான் கண்ணாற் கண்டது.

தமிழ் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியவர்கள் அனைவரும் சுயநலவாதிகள். மேலை நாடுகளிற் படாடோபமாக வாழ்ந்து கொண்டு இங்குள்ள ஏழைத் தமிழர்களின் வாழ்வை வீணடிக்க நினைக்கிறார்கள் பலர். அவ்வாறே, இந்தியாவில் சீமான், வைகோ போன்ற கேடு கெட்ட அரசியல்வாதிகள் அங்குள்ள தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்த முனைகின்றனர்.

இலங்கையில் நடைபெற்ற போரில் பலரும் எள்ளாளனையும் துட்டகைமுனுவையும் உதாரணமாகக் காட்டினர். எள்ளானும் துட்டகைமுனுவும் ஆகிய இருவருமே தமிழர்கள் என்பதை அறியாதவர்கள் உண்மையைத் திரித்துக் கூறுகின்றனர். மக்களுக்கு மத்தியில் வெறுப்பையும் பகைமையும் விதைக்கின்றனர். அப்பாவித் தமிழர்கள் பலர் அநியாயமாகக் கொல்லப்பட்டதில் விடுதலைப் புலிகளின் பங்கே மிக மிக அதிகம். இதைத் தெரியாதவர்கள் நாடுகளுக்கிடையிற் பகைமையை விளைவிக்கவும் முயல்கின்றனர்.

போர் நடைபெற்ற காலத்தில், கொழும்புக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருவது கூட நிச்சயமற்றதாகத்தான் இருந்தது. எங்கு சென்றாலும் எமது அடையாள அட்டை மட்டும் இருந்தால் எப்படியாவது தப்பி வரலாம் என்றொரு நம்பிக்கை. அப்படியிருந்தும் ஆங்காங்கே குண்டு வெடிக்கும் போது வாழ்க்கை சுத்த சூனியமாகவே இருந்தது. எமது பாடசாலைக் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டது. பல தடவைகள் குண்டு வெடிப்புகள் நடந்த இடங்களுக்கு அருகில் இருந்துள்ளேன். போரின் காரணமாக எமது தந்தையின் வியாபாரம் அடிபட்டுப் போனது. மிகவும் கஷ்டப்பட்டோம். பல ஆண்டுகள் சரியான உணவுகூடக் கிடைக்காமல் வாழ்ந்தோம். வாழ்வு நிச்சயமற்றதாக இருந்தது. மிகவும் கசந்து போயிருந்தது. இப்போது போரில்லாததால், நிம்மதியாக மூச்சுவிட முடிகிறது. எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கு நல்வாழ்வை என்றென்றும் தர வேண்டுமென இறைஞ்சுகிறேன்.

இப்படிக்கு,
முஹம்மது

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மத்!

//இங்கு மாத்தறை மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பேசுவோரின் தொகை நூற்றுக்கு இரண்டு சதவீதம் மட்டுமே. அவ்வாறிருந்தும், அரசாங்க நிறுவனங்களிற் பெரும்பாலானவற்றிற் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கின்றனர்.

வவுனியாவிலிருந்து 2003 ஆம் ஆண்டு தென்னிலங்கையின் காலி மாநகரிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த தமிழ் மாணவர்கள் அனைவரும் அஞ்சிக் கொண்டுதான் வந்தார்கள். இங்குள்ள சிங்களவர்கள் அவர்களை உபசரித்ததைப் பார்த்து வியந்து போனார்கள். போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே நிலைமை இப்படித்தான் இருந்தது. இது நான் கண்ணாற் கண்டது.//

உங்களின் நீண்ட பதில் இலங்கையின் உண்மை நிலையை அழகாக விளக்குவதாக உள்ளது. சிங்கள மொழியை தமிழர்கள் கற்றால்தான் இலங்கையில் பல பதவிகளை பெற முடியும். அதன் மூலம் தமிழர்களுக்கு உதவிகளும் செய்ய முடியும்.

சிங்களவர்களில் ஒரு சில தீவிரவாத கொள்கை உடையவர்களும் உள்ளனர். அவர்களை வென்றெடுப்பதுதான் தமிழர்களின் முன் உள்ள முக்கிய பிரச்னையே!

இந்தியாவையே எடுத்துக் கொள்ளுங்கள். சுதந்திரம் அடைந்த நாள் முதலாக முஸ்லிம்கள் ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஆர் எஸ் எஸ் நரேந்திர மோடி அத்வானி போன்ற பாசிச வாதிகளால் பல முறை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதனால் முஸ்லிம்கள் கொதித்து தனி நாடு வேண்டும் என்றோ அல்லது தீவிரவாதத்தையோ கையில் எடுக்கவில்லை.

ஏனெனில் இந்து மதத்தில் பாசிச வாதிகள் என்பது 2 சதவீதம் கூட தேற மாட்டார்கள். பெரும்பான்மையான இந்துக்கள் மிதவாத தன்மை கொண்டவர்கள். அந்த பாசிச வாதிகளின் மனங்களையும் மாற்றுவதற்கு 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை தமிழகத்தின் ஊர்கள் தோறும் நடத்தி வருகிறோம். தவறான பிரசாரத்தால் இஸ்லாமியர்களை தவறாக விளங்கியிருந்த பல இந்துக்கள் இன்று உண்மையை உணர்ந்து வருகிறார்கள். எங்காவது தவறு நடந்தால் சாத்வீகமான முறையில் பெண்களும் களத்தில் இறங்கி போராடி பல வெற்றிகளையும் பெற்றுள்ளனர். இஸ்லாத்தில் தீவிரவாதம் தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளை இந்து, இஸ்லாம், கிறித்தவ தமிழர்கள் ஓரணியில் நின்று அநியாயம் நடக்கும் போது போராட்டங்களை அறிவித்தால் மீடியாக்கள் மூலமாக உலக மக்களை அடையும். சிங்கள தீவிரவாதிகளின் கொட்டமும் அடங்கும்.

தமிழ் இந்துக்களையும் சிங்களவர்களையும் இணைக்கும் பாலமாக தமிழ் முஸ்லிம்களாகிய நாம் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வேலை செய்தது விடுதலைப் புலிகள்தானேயொழிய அப்பாவி தமிழ் இந்துக்கள் அன்று. பெரும்பான்மையான தமிழ் இந்துக்கள் முஸ்லிம்களோடு உறவாடவே விரும்புகின்றனர். இதை உணர்ந்து முஸ்லிம்களும் பழையனவற்றை மறந்து தமிழ் இந்துக்களோடு சகோதர பாசத்தோடு பழக வேண்டும் என்பதே எனது விருப்பம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்!

கேள்வி : இஸ்லாமிய மார்க்கச் சகோதரர்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, கடைகள் அமைக்கின்றார்களே? இஸ்லாம் எப்படி அறிவுப்பூர்வமான மார்க்கம் எனக்கூற முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கம் தரவும். மு. ஷேக்மைதீன், தென்காசி.

பதில் : முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது. இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும். கடவுளை நம்புவோர் மனிதனை விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பதை நம்ப வேண்டும்.

நீங்கள் ஒரு கொலை செய்து விடுகிறீர்கள். அதற்காக உங்களுக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ விதிக்கப்படுகிறது.

உடனே நீங்கள் உங்கள் வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கிறீர்கள். மாற்றி அமைக்கப்பட்ட வீட்டைப் பார்த்து விட்டு இவர் வீட்டை மாற்றி அமைத்துள்ளதால் இவரது தண்டனையை ரத்துச் செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு மறை கழன்று விட்டது எனக் கூறுவோம். உலகமே கை கொட்டிச் சிரிக்கும்.

வாஸ்து சஸ்திரத்தை நம்புபவர்கள் இறைவனை இத்தகைய நிலையில் தான் நிறுத்துகின்றனர்.

ஒவ்வொரு மனிதனைப் பொருத்தே அவனுக்கு ஏற்படும் நன்மை - தீமைகளை ஏக இறைவன் நிர்ணயம் செய்கிறான். இந்த ஆளுக்கு இது தான் என இறைவன் தீர்மானம் செய்து விட்ட பிறகு வீட்டை மாற்றுவதால், வீட்டின் அமைப்பை மாற்றுவதால், அணிந்திருக்கும் ஆடையை மாற்றுவதால் இவர் வேறு ஆள்' என்று இறைவன் நினைத்து ஏமாந்து போவான் என்று நம்புகிறார்களா?

இறைவனைப் பற்றிய இவர்கள் நம்பிக்கை இது தான் என்றால் இதை விட நாத்திகர்களாக அவர்கள் இருந்து விட்டுப் போகலாம்.

'ஐயா! என் பெயரை மாற்றிக் கொண்டதால், அதிஷ்டக்கல் மோதிரம் அணிந்துள்ளதால் என்னைத் தண்டிக்காதீர்கள்!' என்று நீதிபதியிடம் ஒரு குற்றவாளி முறையிட்டால் தப்பித்து விட முடியாது எனும் போது நுண்ணறிவாளனான இறைவனிடம் எப்படி இது போன்ற கிறுக்குத் தனங்களால் தப்பிக்க இயலும்? நமக்கென விதிக்கப்பட்ட நன்மைகளும் இப்படித் தான்.

உங்கள் வீட்டுக்கு இரண்டு ஜன்னல்கள் இருக்கும் போது உங்களுக்கு ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புகிறார். அன்றைய தினம் தான் ஒரு ஜன்னலை வாஸ்துப் படி அடைக்கிறீர்கள். உங்களுக்கென அனுப்பட்ட தொகையை அவர் உங்களிடம் தராமல் திரும்பி விடுவாரா? பணம் ஆளுக்குத் தானே தவிர ஜன்னலுக்கு அல்ல.

சாதாரண மனிதனே இவ்வளவு தெளிவாக விளங்கும் போது, இறைவனுக்கு இது விளங்காது; ஏமாந்து விடுவான் என எண்ணுவது என்னே பேதமை!

நமது தமிழகத்தைப் பொருத்த வரை 95 சதவிகிதம் கட்டிடங்கள் எல்லாவிதமான சாஸ்திரங்களும் பார்க்கப்பட்ட பிறகே கட்டப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரம் உண்மை என்றால் 95 சதவிகிதம் பேர் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பத்து சதவிகிதம் பேர் கூட நிம்மதியாக இல்லை.

வாஸ்து சாஸ்திரம் பித்தலாட்டம் என்பதற்கு இது ஒன்றே நிதர்சனமான சான்றாக உள்ளது.

வாஸ்து நிபுணர் என்ற ஃபிராடு பேர்வழிகள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். ஒரு கட்டடம் இப்படி இருந்தால் இன்ன விளைவு ஏற்படும் என்பதை இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். கடவுளே இவர்களிடம் இதைக் கூறினாரா? நிச்சயமாக இல்லை. எவனோ ஒருவன் உளறி வைத்ததைப் பிழைப்புக்கு உதவுவதால் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள்.

இஸ்லாத்தை நம்பும் ஒருவன் எந்த நிமிடம் இத்தகைய கிறுக்குத் தனங்களை நம்புகிறானோ அந்த நிமிடமே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான். உலகில் தான் முஸ்லிம்கள் கணக்கில் இவன் சேர்க்கப்படுவானே தவிர இறைவனிடத்தில் இறைவனை விபரங்கெட்டவனாகக் கருதிய குற்றத்தைச் செய்தவனாவான். அறியாத முஸ்லிம்கள் இனியாவது திருந்திக் கொள்ள வேண்டும்.

-P.Jainullabudeen

suvanappiriyan said...

இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா?

கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின், கலீஃபாக்களாக அபூபக்கர் (ரலி), அலீ (ரலி) மற்றும் ஹசன் (ரலி) ஆட்சி பொறுப்பேற்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் தான் முறையே மாமனார், மருமகன், பேரன் என பொறுப்பேற்க முடிந்ததா? இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா? மறுக்கிறதா? என்று முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்டால் என்ன பதில் கூறுவது. விளக்கம் தரவும். -கா.ஷபீயுல்லாஹ், ஏரிப்புதூர்

பதில்: ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்படுவதற்கு வாரிசுரிமை ஒரு காரணமாக ஆகாது. எந்தப் பணியையும் அதற்குத் தகுதி உள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமனார் என்ற அடிப்படையில் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நிச்சயமாக அப்பதவி வழங்கப்படவில்லை.

இன்னும் சொல்லப் போனால் அப்பதவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்கரிடம் வழங்கிச் செல்லவில்லை. யாரையும் நியமனம் செய்யாமல் தான் மரணித்தார்கள்.

நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பின் யார் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது என்பதில் நபித்தோழர்களிடையே மிகப்பெரிய கருத்து மோதல் எல்லாம் ஏற்பட்டது. அபூபக்கருக்கும் உள்ளூர் வாசிகளின் தலைவரான ஸஃது அவர்களுக்கும் கடும் போட்டியும் நிலவியது.

மக்களின் அதிகப்படியான ஆதரவின் காரணமாக அபூபக்கர் (ரலி) ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவரிடம் அந்தத் தகுதி இருந்ததை மக்கள் கண்டதால் தான் பொறுப்பை ஒப்படைத்தனர்.

ஒரு மனிதனின் சொத்துக்களை அவனது வாரிசுகள் அடைவார்கள் என்று உலகுக்குச் சட்டம் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் விட்டுச் சென்ற சொத்துக்கள் எதற்கும் தனது குடும்பத்தார் வாரிசு இல்லை; அரசுக் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் எனப் பிரகடனம் செய்தார்கள்.

தமக்கு உடமையான சொத்துக்களையே அரசுக் கருவூலத்தில் சேர்க்குமாறு வலியுறுத்திய நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமக்கு உடமையாக இல்லாததைத் தமது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருப்பார்களா?

திருக்குர்ஆனின் போதனையும், நபிகள் நாயகத்தின் அறிவுரைகளும் குலம், கோத்திரத்தின் அடிப்படையில் ஒருவரும் சிறப்படைய முடியாது என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றன.

அதே சமயத்தில் ஒரு ஆட்சித் தலைவரின் வாரிசுக்கு அதற்கான தகுதி இருந்து அந்தத் தகுதியின் காரணமாக அப்பதவியைப் பெற்றால் அதை இஸ்லாம் எதிர்க்காது என்று கூறலாம். இதனால் தான் அலீ (ரலி) அவர்களுக்குப் பின் அவர்களின் மகன் ஹஸன் (ரலி) அவர்களிடம் மக்கள் ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள்.

-P.Jainullabudeen.

suvanappiriyan said...

திரு மாலிக்!

//பிஜேயின் நம்பிக்கைப் படி, செத்தவர்களது சமாதி (கப்று) தரைமட்டத்திற்கு மேல் எழும்பக்கூடாதாம். எனவே அவரைப் புதைத்தபின் அவரது கப்றும் தரைமட்டத்திற்கு மேலே எழும்பாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது சிரமம் தான். நன்கு திண்று அவர் வளர்த்துவைத்துள்ள உடலைப் புதைத்தால், தரை மட்டத்திற்கு மேலே மண் எழும்பத்தான் செய்யும். எனவே ஒரு ரோடு-ரோலரையும் தயார் செய்துக் கொள்ளுங்கள்.//

மாலிக் என்ற பெயரில் ஒரு மனநோயாளி இவ்வாறு பதிவிட்டுள்ளார். பாவம். பாத்திஹா ஓதி வயிறு வளர்க்க முடியாமல் பிஜே பண்ணி விட்டாரே என்ற ஆதங்கத்தில் அந்த பதிவு வந்துள்ளது. இனி மூடப்பழக்கங்கள், சமாதி வழிபாடு, முரீது கொடுக்கிறேன் என்று மக்களை ஏமாற்றுவது, புரோகிதம் அனைத்திற்கும் வழியில்லை தோழர் மாலிக்! பேசாமல் உட்கார்ந்து வயிறு வளர்க்க வேறு இடம் பார்க்கவும். அல்லது 'தீன்இலாஹி' போன்று ஒரு புதிய மார்க்கத்தை உண்டு பண்ணி வயிறு வளர்க்கவும். :-)

VANJOOR said...

ஒரு பெண் ப‌ல‌ க‌ண‌வர்களை மணந்து வாழும் சமூகம்.

ச‌ட‌ல‌ங்க‌ள் மிதக்கும் புனித‌ க‌ங்கை.

இந்தியாவின் கருப்பு பணம்.

வியக்கத்தகு தென்னை ம‌ரமேறும் இய‌ந்திர‌ம்.

அதிசத்தக்க செயற்கை விரல்.

வ‌ள‌ர்ந்து வ‌ரும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம். மக்காவையும் ம‌தீனாவையும் கைப்ப‌ற்றுவோம். தாங்க‌ளே அப்பாவி இந்துக்க‌ளை கொன்றுவிட்டு அப்பாவி முஸ்லீம்க‌ள் மீது ப‌ழிசும‌த்தும் இந்துத்வாக்க‌ள்.

CLICK >>>>
PART 3. இதுதான் இந்தியா வியப்பும் கலக்கமும் காணதவறாதீர்கள் .
<<<< TO READ

.

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

//ஒரு பெண் ப‌ல‌ க‌ண‌வர்களை மணந்து வாழும் சமூகம்.

ச‌ட‌ல‌ங்க‌ள் மிதக்கும் புனித‌ க‌ங்கை.

இந்தியாவின் கருப்பு பணம்.

வியக்கத்தகு தென்னை ம‌ரமேறும் இய‌ந்திர‌ம்.

அதிசத்தக்க செயற்கை விரல்.//

வருகைக்கும் சுட்டியைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு தருமி!

நன்றாக எழுதிக் கொண்டு வரும்போதே இடையில் காமெடியாக ஏதாவது பதிவு எழுத முடிவெடித்தால் வஹாபி, தீவிரவாதம், தாடி, முக்காடு என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதாவது எழுதி விடுகிறீர்கள். நாத்திகம் வீழ்வதையும் இஸ்லாம் மலர்வதையும் கண்டு பொறுக்காமல் கோபம் வரும்போது இது போன்ற பதிவுகள் வருவது இயற்கையே! தவ்ஹீத் வளர்ச்சியினால் இன்று தமிழகத்தில் மட்டும் எந்த திட்டமிட்ட பிரசாரமும் இல்லாமல் தினமும் இரண்டு மூன்று இந்து கிறித்தவ நண்பர்கள் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம் உள்ளனர். சென்ற பதிவுகளில் ஊர், புகைப்படம் முதற்கொண்டு வெளியிட்டுள்ளேன். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பாவை பற்றி சொல்லவே வேண்டாம். அசுர வேகத்தில் இஸ்லாம் வளர்ந்து வருகிறது.

டார்வினுக்கும் நாத்திகத்துக்கும் இனி அவ்வளவாக எதிர்காலம் சுபிட்சமாக இருக்காது. உங்களுக்கு கசந்தாலும் உண்மை அதுதான்.

சூஃபியிசம் என்பது இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையையும் அத்வைதத்தையும் இந்து புராணங்களையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை. அதை தனி மதமாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். இஸ்லாத்தில் அதனை நுழைக்க முடியாது. கிறித்தவத்தையும் பவுத்தத்தையும் எப்படி இந்து மதத்தின் ஒரு பிரிவாக ஆரியம் ஆக்கியதோ அதுபோல் இஸ்லாத்தையும் ஆக்கி அழிக்க நினைக்கின்றனர். அது நடக்காத ஒன்று என்ற உண்மையை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

suvanappiriyan said...

திரு கண்ணபிரான்!

//* இயேசு தம் கையால் ஒரு நூலும் எழுதவில்லை! அவர் சீடர்களே, மலைப்பொழிவு முதலான சுவிசேஷங்களை எழுதி வைத்தார்கள்! பின்னாளில் ஊரெங்கும் பரப்பியும் வைத்தார்கள்!//

பின்பு இயேசு கலிலியோ எங்கும் சுற்றித் நடந்து அவர்களுடையே ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்.
-மத்தேயு 4;23

காலம் நிறைவேறிற்று தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
-மாற்கு 1:15

தேவனால் அருளப்பட்டதும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எனப் பெயர் பெற்றதுமான வேதப் புத்தகத்தை மக்களுக்கு ஏசு போதித்து இருக்கிறார். பின்னால் வந்தவர்கள் என்ன காரணத்தினாலோ அதனை மறைத்து விட்டனர்.

மேலதிக விபரத்திற்காக இந்த தகவல். மற்றபடி பதிவு அருமை.

suvanappiriyan said...

காவ்யா!

//In every internet forum, the Tamil brahmins gang up and form a group with the agenda to attack Islam and Xianity. No wonder, they r doing it here. No prob with that, but they shd not abuse the Hindu religion for that !//

சரியான வாதம்! அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இவர்களின் வர்ணாசிரமத்தை உடைக்கும் ஒரே பலசாலி தற்பொது இஸ்லாம் ஒன்றுதான். கிறித்தவத்தையும் பவுத்தத்தையும் ஏற்கெனவே இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே மாற்றி அங்கும் சாதி வெறியை புகுத்தியாகி விட்டது. மிஞ்சியிருப்பது இஸ்லாம் ஒன்றே. சூஃபியிசத்தை அறிமுகப்படுத்தி இஸ்லாத்தை ஆரிய சாதியில் அமுக்கப் பார்க்கின்றனர். இந்துத்வாவில் ஊறித் திளைத்த மலர் மன்னன் அஜ்மீர் பாவாவை நினைத்து உருவதற்கான காரணமும் அதுதான். ஆனால் இவர்கள் எவ்வளவுதான் திட்டமிட்டாலும் இஸ்லாத்தை இந்து மதத்துக்குள் அடைக்கும் முயற்சி எக்காலத்திலும் பலிக்காது என்பேன்.

//உங்களது உளறலுக்கு சுவனப்பிரியனின் தற்காலிக மவுனமே பரவாயில்லை. அவர் ஒன்றும் காணாமல் போகப்போவதில்லை. வேறொரு திரியில் இன்னொரு இந்து மத அவதூறை எழுதுவார். ஏனெனில் அவரும் இங்கே சொல்லப்படுபவற்றை கண்டுகொள்ளப்போவதில்லை. அந்த நேர்மையும அவரிடம் கிடையாது.// - தங்கமணி

நேர்மையைப் பற்றி யாரெல்லாம் பேசுவது என்பதற்கு ஒரு வரையறையே இல்லாமல் போய் விட்டது. தங்கமணி கொடுத்த இஸ்லாத்தில் உள்ள சாதி லிஸ்டை வைத்துக் கொண்டு குர்ஆனை முழுவதுமாக தேடிப் பார்த்தாலும் ஒரு சாதிப் பெயரையும் காண முடியாது. ஆதாரபூர்வமான ஹதீதகளிலும் உங்களால் சாதிப் பெயர்களை காட்ட முடியாது. இஸ்லாத்தை அழிக்க நினைத்த எதிரிகள் கதைகளை புனைந்து முகமது நபி பெயரால் இட்டுக்கட்டினர். அறிஞர்கள் அதனை இனம் கண்டு என்றோ பறந்தள்ளி விட்டனர். அதை எல்லாம் தேடிப் பிடித்து பின்னூட்டம் இடுவதால் தங்கமணி சிறிது மன திருப்தி பட்டுக் கொள்ளலாம். வேறு எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது.

ஆனால் இதற்கு மாற்றமாக இந்து மதத்தில் புராணங்களில் ஸ்மிருதிகளில் எந்த அளவு சாதி வெறி ஊட்டப்பட்டுள்ளது என்பதை வசன எண் முதற்கொண்டு தருகிறேன். தங்கமணியும் குர்ஆனிலிருந்து சாதி வெறியை வலியுறுத்தும் வசன எண்களை தரட்டும். தருவாரா! அல்லது ஓடி விடுவாரா!

இப்பொழுது யாரிடம் நேர்மை இருக்கிறது என்பது தெரிந்து விடும்.

khaleel said...

மிகவும் வருத்ததுக்குரிய கட்டுரை. நீங்கள் சொல்கிற இதே வாதத்தை தான் குஜராத் கொலைகாரர்களும் ஹிந்துத்வா தீவீரவாதிகளும் சொல்கிறார்கள். இலங்கை தமிழர்கள் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். இவ்வளவு துயரத்திலும் கூட இலங்கை மற்றும் இந்திய தமிழ் முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசாதது வருதமான விஷயம்.

Anonymous said...

புலிப் பினாமி கலீல்,

///இலங்கை தமிழர்கள் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். இவ்வளவு துயரத்திலும் கூட இலங்கை மற்றும் இந்திய தமிழ் முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசாதது வருதமான விஷயம்.///

இந்திய முஸ்லிம்களின் சீரழிந்த வாழ்க்கையைவிட, இலங்கைத் தமிழர்கள் எல்லா உரிமையும் பெற்று சிறப்பாக வாழ்ந்தவர்கள். வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இதுதான் உண்மை.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை உடுத்த உடுப்புடன் தமிழ்ப் பயங்கரவாதிகள் துரத்தியது, தங்கள் பார்வையில் துயரமல்ல???

கொலை, கொள்ளை, ஊரை விட்டே அடித்துத் துரத்துதல், கப்பம் வசூலித்தல், பள்ளிவாசலில் கொலைவெறியாட்டம் ஆடியது, இன்னும் முஸ்லிம்களுக்கெதிரான ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள், தங்கள் பார்வையில் துயரமல்ல??

நாட்டைகூறு போட நினைத்த தமிழ்ப் பயங்கரவாதிகளைத் தண்டித்த செயல், தங்களின் பார்வையில் துயரம். அப்படித்தானே!

அந்தக் காட்டுமிராண்டிகளினால் முஸ்லிம்கள் பட்ட இன்னல்கள் போதாதென்று, அவர்களுக்கு ஆதரவளித்து வக்காலத்து வாங்கச் சொல்கிறீர்களா?

- Ismath

Anonymous said...

புலிப் பினாமி கலீல்,

///இலங்கை தமிழர்கள் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். இவ்வளவு துயரத்திலும் கூட இலங்கை மற்றும் இந்திய தமிழ் முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசாதது வருதமான விஷயம்.///

இந்திய முஸ்லிம்களின் சீரழிந்த வாழ்க்கையைவிட, இலங்கைத் தமிழர்கள் எல்லா உரிமையும் பெற்று சிறப்பாக வாழ்ந்தவர்கள். வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இதுதான் உண்மை.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை உடுத்த உடுப்புடன் தமிழ்ப் பயங்கரவாதிகள் துரத்தியது, தங்கள் பார்வையில் துயரமல்ல???

கொலை, கொள்ளை, ஊரை விட்டே அடித்துத் துரத்துதல், கப்பம் வசூலித்தல், பள்ளிவாசலில் கொலைவெறியாட்டம் ஆடியது, இன்னும் முஸ்லிம்களுக்கெதிரான ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள், தங்கள் பார்வையில் துயரமல்ல??

நாட்டைகூறு போட நினைத்த தமிழ்ப் பயங்கரவாதிகளைத் தண்டித்த செயல், தங்களின் பார்வையில் துயரம். அப்படித்தானே!

அந்தக் காட்டுமிராண்டிகளினால் முஸ்லிம்கள் பட்ட இன்னல்கள் போதாதென்று, அவர்களுக்கு ஆதரவளித்து வக்காலத்து வாங்கச் சொல்கிறீர்களா?

- Ismath

Anonymous said...

புலிப் பினாமி கலீல்,

///இலங்கை தமிழர்கள் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். இவ்வளவு துயரத்திலும் கூட இலங்கை மற்றும் இந்திய தமிழ் முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசாதது வருதமான விஷயம்.///

இந்திய முஸ்லிம்களின் சீரழிந்த வாழ்க்கையைவிட, இலங்கைத் தமிழர்கள் எல்லா உரிமையும் பெற்று சிறப்பாக வாழ்ந்தவர்கள். வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இதுதான் உண்மை.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை உடுத்த உடுப்புடன் தமிழ்ப் பயங்கரவாதிகள் துரத்தியது, தங்கள் பார்வையில் துயரமல்ல???

கொலை, கொள்ளை, ஊரை விட்டே அடித்துத் துரத்துதல், கப்பம் வசூலித்தல், பள்ளிவாசலில் கொலைவெறியாட்டம் ஆடியது, இன்னும் முஸ்லிம்களுக்கெதிரான ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள், தங்கள் பார்வையில் துயரமல்ல??

நாட்டைகூறு போட நினைத்த தமிழ்ப் பயங்கரவாதிகளைத் தண்டித்த செயல், தங்களின் பார்வையில் துயரம். அப்படித்தானே!

அந்தக் காட்டுமிராண்டிகளினால் முஸ்லிம்கள் பட்ட இன்னல்கள் போதாதென்று, அவர்களுக்கு ஆதரவளித்து வக்காலத்து வாங்கச் சொல்கிறீர்களா?

- Ismath

suvanappiriyan said...

சகோ இஸ்மத்!

//ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை உடுத்த உடுப்புடன் தமிழ்ப் பயங்கரவாதிகள் துரத்தியது, தங்கள் பார்வையில் துயரமல்ல???//

கலீல் என்ற இஸ்லாமிய பெயரில் எழுதினால் முஸ்லிம்களிலும் மாற்றுக் கருத்து உடையவர்கள் உள்ளார்கள் என்ற நினைப்பு மற்றவர்களுக்கு வரும் என்ற நினைப்பில் எழுதிக் கொண்டிருக்கிறார்.

கலீல் என்ற போலிக்கு!

எவ்வளவு திறமையாக மறைத்தாலும் எழுத்தின் எண்ணங்கள் காட்டிக் கொடுத்து விடும். இனி எழுதினால் கலீல் என்ற இஸ்லாமிய பெயரை தவிர்த்து சொந்த பெயரில் எழுதவும்.

khaleel said...

naan ezhthuvathu en sontha peyaril thaan. allah matrum quran meedhu sathiyamaga. neengal thaan suvanapriyan enra poli peyaril ezhuthugirirgal. nambuvathum nambathathum ungal viruppam. naan kalil illai endru ungaluku eppadi theriyum. edhayum therindhu kondu pesungal.

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று - idhu ungalukkum thaan.

ismath - puligalukku naan eppothum aadharavalika villai. puligal matrum srilanka arasangam ivargalaal chinaa pinaamana muslimgal matrum hindu tamilargalukkum (ilangayil irundhu kashtapadum tamilargaluku europil sogasaga vaalbavargaluku alla) thaan.


ippodhaiku naan kelvipatathuku en varuthathai sonnen. puligal muslimgalai kodumaipaduthiyathu therindha vishayam thaan. aanaal ippothaya topic hindu tamilargal thunbatadhu thaan.adharkku ennoda varuthathai sonnen.

Anonymous said...

ஹலோ புலிப் பினாமி,

உங்களது எழுத்து எடுத்துக் காட்டுகிறது, நீங்கள் கொண்டிருக்கும் பெயர் உங்களுடையதல்ல என்று!

தற்போது தமிழர்கள் மட்டுந்தான் துன்பத்திற்கு உரித்தானவர்கள் என்று புலம்புவது, அழிந்துபோன தமிழ்ப் பயங்கரவாதத்தினதும் அதன் தற்போதுள்ள உங்களைப்போன்ற அடிவருடிகளினதும் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

தமிழரின் துயரத்தை மட்டுமே தூக்கிப் பிடிக்கும் உங்களது இருட்டடிப்பு topic, துயருறும் சிங்கள, முஸ்லிம்களின் இன்னல்களைத் தட்டிக் கழிக்கும் செயல்பாடாகத்தான் கணிக்க முடிகிறது.

- Ismath

baleno said...

கலீல், உங்களது தவறான புரிதல்கள். தமிழ் முஸ்லிம்கள் மட்டும் அல்ல இந்து தமிழர்களும் புலிகளின் கொடுஞ்செயல்களால் மிகவும் துன்பபட்டார்கள்.இதே அமெரிக்காவும், ஜநாவும், இந்தியாவும் புலிகளை ஆயுதங்களை கைவிட்டு சரணடையும் படி பல தடவைகள் வேண்டிக் கொண்டன. ஆனால் புலிகள் மக்களை பணயமாக வைத்து போர் செய்தார்கள். அதனால் பெருமளவில் மக்கள் அநியாயமாக உயிர் இழக்க வேண்டி வந்தது. இது பற்றி சகோதரர் சுவனப்பிரியன் விரிவாக தெரிவித்துள்ளார். புலிகளை ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளீர்கள். தமிழகத்தில் பொய் பிரசாரங்கள் யாவும் புலி ஆதரவாளர்களினாலேயே நடத்தபடுகிறது என்பதை கவனத்தில் எடுங்கள்.

khaleel said...

ஹலோ புத்திஸ்ட் (எ) போலி முஸ்லிம் (எ) எலி பினாமி,



இஸ்மத் என்ற முஸ்லிம் பெயரில் எழுதும் நீங்கள் ஒரு முஸ்லிம் என்பதற்கு என்ன ஆதாரம்? யாருக்கு தெரியும்? எனக்காவது ஒரு profile இருக்கிறது. நீங்கள் தான் பயந்து கொண்டு லண்டனில் இருந்து ஒளிந்து கொண்டு anonymous பெயரில் எழுதுகிறிர்கள். லண்டனில் இருக்கும் நீங்கள் ஒரு புத்திஸ்ட் ஆக கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்? தைரியமாக உண்மையை சொல்லி எழுதுங்கள். வசதியாக லண்டனில் உட்கர்ந்து கொண்டு இலங்கையில் சிங்களவர்களையும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் உசுபேத்தி விட்டு கொண்டு அதில் குளிர் காய்கிறிர்கள். நீங்கள் வக்காலத்து வாங்கும் சிங்களர்கள் தான் இப்போது ஒரு மசூதியை இலங்கையில் இடித்து இருகிறார்கள். போய் அதற்கும் வக்காலத்து வாங்குங்கள். இடித்தது சரி தான் என்று.


எங்கள் நாட்டில் இதே போல முஸ்லிம் மக்களை அழித்த மோதியையும், ஹிந்துத்வையும் நாங்கள் தைரியமாக எதிர்க்க முடியும். உங்களை போல வேலை ஆக வேண்டும் என்பதற்காக ராஜபக்சேவுக்கு ஜால்ரா அடித்து பிழைக்க வேண்டிய தேவை இல்லை. வெட்க கேடு.