Followers

Friday, April 27, 2012

சிவ சங்கரன் யஹ்யாவாக மாறிய அற்புத நிகழ்வு!

சிவ சங்கரன் யஹ்யாவாக மாறிய அற்புத நிகழ்வு!

ஒரு மனிதனுக்கு எந்த நேரத்தில் எப்பொழுது மாற்றம் வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இறைவன் நாடி விட்டால் அது எந்த நெரமும் நடந்து விடும் என்பதற்கு சகோதரர் சிவ சங்கரன் ஒரு எடுத்துக் காட்டாக உள்ளார். இஸ்லாம் முதன் முதலாக கரீம் என்ற பள்ளி வகுப்புத் தோழன் மூலம் அறிமுகமாகிறது. கறீம் தான் மத்ரஸாவில் கற்ற பல பாடங்களை சிவ சங்கரனுக்கும் சொல்லிக் கொடுத்துள்ளார். அன்று ஆரம்பித்த தேடல் இன்று சவுதி அரேபியா வந்து யஹ்யாவாக பரிணமித்து அவரை இஸ்லாத்தை ஏற்க வைத்தள்ளது.

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவரது மனைவி சிவ சங்கரனை கடுமையாக எதிர்த்துள்ளார். குழந்தைகளோடு சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுமுள்ளார். ஆனால் இறைவனின் கிருபையால் அந்த சகோதரியும் குர்ஆனை படித்து விளங்கி குழந்தைகளோடு இன்று இஸ்லாத்தில் ஐக்கியமாகி உள்ளார்.

இவர் இஸ்லாத்தை ஏற்பதை அறிந்து கொண்ட சில இந்துத்வ நண்பர்கள் இவரை மிரட்டியும் உள்ளனர். இவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். ஏக இறைவனுக்கு முன்னால் அந்த இந்துத்வ நண்பர்களின் மிரட்டல் எந்த சலனத்தையும் இவர் உள்ளத்தில் ஏற்படுத்தவில்லை. இஸ்லாத்தை ஏற்று உறுதி மொழியையும் மொழிந்தார். ஏக இறைவனை மட்டுமே இனி வணங்குவார். முகமது நபி சொன்னதன்படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்.




யஹ்யாவாக மாறி விட்டதால் இனி கேரள மாநிலத்தில் யாரும் இவரது சாதியை நோட்டம் விட மாட்டார்கள். 'நீ உயர்ந்த சாதி: நான் தாழ்ந்த சாதி' என்ற பட்டி மன்றங்களுக்கெல்லாம் அவரது வாழ்வில் அவசியம் இருக்காது. உலக முஸ்லிம்களின் தோழராக இனி பார்க்கப்படுவார். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற வார்த்தைகளை வெறும் உதட்டளவில் சொல்லாமல் இனி உளளத்தளவில் சொல்லலாம்.

இஸ்லாமிய உலகில் புதிதாக பூத்திருக்கும் சிவசங்கரன் என்ற யஹ்யாவை ஆரத் தழுவி அரவணைப்போம்.

'அழகிய செய்தியை இறைவனே அருளினான். அவை திரும்ப திரும்பக் கூறப்பட்டதாகவும் ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளன. இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும் உள்ளங்களும் இறைவனை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே இறைவனின் நேர்வழி'
-குர்ஆன் 39:23


சிவசங்கரன் இதற்கு முன் செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு புதிய மனிதராக இஸ்லாமியராக உலகில் பிரவேசிக்கிறார். குர்ஆன் சொன்னதன் படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அந்த இறைவன் வாக்களித்த சொர்க்க வாழ்வை ஏற்படுத்திக் கொள்வார். அதற்காக நாமும் பிரார்த்திப்போம்.

By JEDDAH: P.K. ABDUL GHAFOUR
Published: Apr 26, 2012 22:25 Updated: Apr 26, 2012 22:25

When Shivashan-karan, a young Hindu farmer from the south Indian state of Kerala embraced Islam, he had to face a lot of troubles and tribulations. Many forces from within his family and outside had tried to discourage him from accepting Islam as his new way of life.

But he stood steadfast in the new religion, which he embraced after studying the Holy Qur'an and reading Islamic books. Ever since he became a Muslim, he has been trying to bring his family members and close friends to the fold of Islam by explaining to them the important features of the divine religion.

Speaking to Arab News, he explained the circumstances that prompted him to embrace Islam. It began when he was a primary school student when his classmate Kareem used to tell him what he had learned from the madrassa (Islamic school), including the fundamentals of Islam, the concept of Paradise and Hell.

He was also aware of the importance of life after death. As a teenager he used to work for daily wages with other laborers. At that time he had seen the injustice being committed to those workers by their employers. "This strengthened my belief in the day of judgment because it is essential to punish corrupt employers for doing injustice to their poor workers," he pointed out. When he was 32 another incident took place that strengthened his faith in God. A Muslim friend of him was practicing black magic in the neighborhood and he was against it. Fearing that Shivashankaran's challenge would affect his business, the magician warned him that a big catastrophe would befall on him within 90 days. "I was really afraid and prayed to God in the darkness of that night, raising my hands, to protect me from that man's evil designs and punish him for his black magic. God heard my prayer as his magic did not affect me and was inflicted by the deadly disease of cancer. He was a strong man with a stout body and within 90 days he became a lean person. I never expected God would answer my prayer that quickly. He looked like a Satan and even his children were afraid of approaching him and he had tried to commit suicide twice before his death."
After having strengthened his faith in God and the Hereafter, it was easy for Shivashankaran to understand the Qur'an when a Muslim friend gave him the holy book to read. Soon after becoming a Muslim, Yahya (his new name) started propagating the faith among his family members, starting from wife, sisters and daughters. His wife and a sister have already declared their Shahada, pronouncing there is no god, except Allah and Muhammad is His Prophet, in addition to four friends. When his family saw him reading so many books on Islam, they were suspicious about his plan. When he told his wife and children about his plan to accept Islam as his new religion they threatened they would commit suicide. "By the grace of God I was able to overcome those difficult situations."

Some family members with the support of local Hindu leaders threatened either to kill him or break his bones. "But God gave me the strength to face those threats, and I have been praying for my brothers and sisters to accept Islam to save themselves from the Hell."

Yahya also explained how he changed the lifestyle of a Muslim gangster. "He was a drunkard and a powerful man. Everybody in the town feared him. When he heard me talking to another Hindu friend about Islam, he was amused to know what we were discussing. He also asked me to tell him more about Islam because he was not aware of its teachings. He offered me every support."
When some Muslim friends asked him to declare Shahada in the beginning, Shivashankaran was a bit hesitant. He was thinking about the consequences and the tremor it would create in his house and family. Consequently, he read all available Hindu scriptures including Bhagavad Geeta and Mahabharat with the hope it would take him to the Paradise without embracing Islam. "I could not find anything in those scriptures that would save me in the day of judgment," he said. However, it helped him talk to Hindu leaders with confidence when they tried to discourage him from becoming a Muslim. An avid reader of Islamic books, Yahya called upon his Muslim brethren to learn more about their religion by studying the Qur'an and Sunnah and set a good example to others through their lives.

-Arab News 26-04-2012

28 comments:

Flavour Studio Team said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
மாஷா அல்லாஹ்.... :) //ஒரு மனிதனுக்கு எந்த நேரத்தில் எப்பொழுது மாற்றம் வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இறைவன் நாடி விட்டால் அது எந்த நெரமும் நடந்து விடும் ...// மறுக்க இயலாத உண்மை...!!

Flavour Studio Team said...

அஸ்ஸலாமு அலைக்கும்... மாஷா அல்லாஹ்
//ஒரு மனிதனுக்கு எந்த நேரத்தில் எப்பொழுது மாற்றம் வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இறைவன் நாடி விட்டால் அது எந்த நெரமும் நடந்து விடும் /// மறுக்க முடியாத உண்மை சகோ... அல்லாஹு அக்பர்...!!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ்..இறைவன் அவருக்கும் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தந்தருளட்டும்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Anonymous said...

stupid fellow........ a hindu will not tolerate this. Compared to other religion, in hindu religion only there is no ritual ceremony for changing of religion....

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஷர்மிளா ஹமீத்!

//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
மாஷா அல்லாஹ்.... :) //ஒரு மனிதனுக்கு எந்த நேரத்தில் எப்பொழுது மாற்றம் வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இறைவன் நாடி விட்டால் அது எந்த நெரமும் நடந்து விடும் ...// மறுக்க இயலாத உண்மை...!! //

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆஷிக்!

//மாஷா அல்லாஹ்..இறைவன் அவருக்கும் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தந்தருளட்டும்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ அனானி!

//stupid fellow........ a hindu will not tolerate this. Compared to other religion, in hindu religion only there is no ritual ceremony for changing of religion....//

கோபப்படாமல் சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்திய நாடு முன்பு 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில்தான் செயல்பட்டு வந்தது. ஆரியர்களின் வருகைக்கு பின்னால்தான் நமது முன்னோர்களின் மார்க்கம் சிதைக்கப்பட்டு பல சாதிகளாக பிரிக்கப்பட்டு பல தெய்வ வணக்கத்துக்கு தள்ளப்பட்டோம். இன்று சிவசங்கரன் அவரது மூதாதையர் மார்க்கத்தைத்தான் தழுவியுள்ளார். எனவே அவரை வாழ்த்துங்கள்.

சால்ட் கொட்டாய் சரசு said...

//இந்திய நாடு முன்பு 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில்தான் செயல்பட்டு வந்தது. ஆரியர்களின் வருகைக்கு பின்னால்தான் நமது முன்னோர்களின் மார்க்கம் சிதைக்கப்பட்டு பல சாதிகளாக பிரிக்கப்பட்டு பல தெய்வ வணக்கத்துக்கு தள்ளப்பட்டோம். இன்று சிவசங்கரன் அவரது மூதாதையர் மார்க்கத்தைத்தான் தழுவியுள்ளார். //

எது அந்த ஒரு குலம்? யார் அந்த தேவன்? ஓஹோ, ஆரியம் வருவதற்கு முன்னால் இஸ்லாம்தான் இந்தியாவில் இருந்த மதமா? 1400 வருடங்களுக்கு முன்னால் அரேபியாவில் தோன்றிய மதம் எப்படி 2000 வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்திருக்க முடியும். பண்டைய நாவலந்தீவில் (அப்டின்னா என்னாவா? இந்தியாதானுங்கோ) இருந்த மதங்கள் இருவகை. நம்பும் மதங்கள் காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம். நம்பா மதங்கள் சமணம், புத்தம், ஆசிவகம்.

போக்குவரத்து கான்ஸ்டபிள் said...

பாஸ் இது ஒன்வே ட்ராஃபிக்னு சிவசங்கரன்கிட்ட தெளிவுபடுத்தினீங்களா?

ராவணன் said...

சிவசங்கரனுக்கு கொடுக்கப்பட்டது என்ன?

சிவசங்கரனைப் படைத்தது யார்? உங்களின் ஏக இறைவனா? முதலிலேயே அவரை யஹ்யாவாகப் படைக்கக்கூடாதா?

ஓ......அவருக்கு அவ்வளவு அறிவு இல்லையா?

Anisha Yunus said...

மாஷா அல்லாஹ்....மாஷா அல்லாஹ்.... நெகிழ்ச்சி மிகும்போது சொல்ல வார்த்தைகளே இல்லை.... மாஷா அல்லாஹ்.... அல்லாஹ் அந்த குடும்பம் முழுவதற்கும் அளப்பறிய அவன் கருணையையும், மக்ஃபிரத்தையும் தந்தருள்வானாக. ஆமீன். சும்ம ஆமீன்.

suvanappiriyan said...

சலாம் சகோ அன்னு!

//மாஷா அல்லாஹ்....மாஷா அல்லாஹ்.... நெகிழ்ச்சி மிகும்போது சொல்ல வார்த்தைகளே இல்லை.... மாஷா அல்லாஹ்.... அல்லாஹ் அந்த குடும்பம் முழுவதற்கும் அளப்பறிய அவன் கருணையையும், மக்ஃபிரத்தையும் தந்தருள்வானாக. ஆமீன். சும்ம ஆமீன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

போக்குவரத்து கான்ஸ்டபிள்!

//பாஸ் இது ஒன்வே ட்ராஃபிக்னு சிவசங்கரன்கிட்ட தெளிவுபடுத்தினீங்களா?//

'முஹம்மதே! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம். நீர் அவர்கள் மீது அடக்கு முறை செய்பவர் அல்லர். எனது எச்சரிக்கையை அஞ்சுபவனுக்கு குர்ஆன் மூலம் அறிவுரை கூறுவீராக!'
-குர்ஆன் 50:45

இந்த வசனம் நமக்கு தெரிவிப்பது நாளைக்கே யஹ்யா இஸ்லாமிய நடைமுறை பிடிக்காமல் சிவ சங்கரனாக மாறுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் இதனால் இஸ்லாத்துக்கு எந்த நட்டமும் வந்து விடப் போவதில்லை. யாரும் அவரை இஸ்லாத்தில் இருந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தவும் மாட்டார்கள். எனவே இது ஒரு வழிப் பாதையல்ல நண்பரே!

suvanappiriyan said...

திரு சரசு!

//1400 வருடங்களுக்கு முன்னால் அரேபியாவில் தோன்றிய மதம் எப்படி 2000 வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்திருக்க முடியும். பண்டைய நாவலந்தீவில் (அப்டின்னா என்னாவா? இந்தியாதானுங்கோ) இருந்த மதங்கள் இருவகை. நம்பும் மதங்கள் காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம். நம்பா மதங்கள் சமணம், புத்தம், ஆசிவகம்.//

இஸ்லாம் என்ற மார்க்கத்தை முகமது நபி புதிதாக கொண்டு வந்ததாக தவறாக விளங்கியிருக்கிறீர்கள். ஆதமிலிருந்து ஏசு நாதர் வரை அனைவரும் போதித்தது முகமது நபி போதித்த அதே இஸ்லாத்தைத்தான். ஒவ்வொரு மொழிக்கும் தூதரையும் வேதத்தையும் கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. எனவே நம் தமிழ் மொழிக்கும் வேதமும் தூதரும் வந்துள்ளனர்.அவர் கிருஷ்ணனாகவோ அல்லது திருவள்ளுவராகவோ கூட இருக்கலாம். அதை இறைவனே அறிந்தவன். ஏனெனில் அந்த ஆதாரங்களை எல்லாம் பின்னால் வந்தவர்கள் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர்.

suvanappiriyan said...

திரு ராவணன்!

//சிவசங்கரனைப் படைத்தது யார்? உங்களின் ஏக இறைவனா? முதலிலேயே அவரை யஹ்யாவாகப் படைக்கக்கூடாதா?//

எல்லோரையும் நல்லவராக படைத்து விட்டால் சொர்க்கம் நரகம் சாத்தான் என்ற அனைத்து ஏற்பாடுகளும் வீணாகிப் போய் விடுமே! நம்மைப் படைத்த இறைவன் நமக்கு வைக்கும் சோதனையே இந்த உலக வாழ்வு! அதில் சிவசங்கரன் வெற்றி பெற்று விட்டார்.

Anonymous said...

சால்ட் கொட்டாய் சரசு,

//பண்டைய நாவலந்தீவில் (அப்டின்னா என்னாவா? இந்தியாதானுங்கோ) இருந்த மதங்கள் இருவகை. நம்பும் மதங்கள் காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம். நம்பா மதங்கள் சமணம், புத்தம், ஆசிவகம்.//

மேற்படி உமது கூற்று ஆதாரமில்லாத உளறல். முடிந்தால் ஆதாரம் காட்டும். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய தமிழகப் பகுதியில் வாழ்ந்தோர் நீர் சொல்லும் எதையும் பின்பற்றவில்லை.

-வள்ளுவன்

Anonymous said...

அருமையான நகைச்சுவை பதிவு. :-)

Anonymous said...

madhaveri yaarai vittadhu thaan pidikkum muyalukku moondru kaalgal enbadhaiththaan ivai uraikkindranar iyarkkayai meeriya oru seyal alladhu aattral endha oru madhaththirkko alladhu endha oru kadavulkko kidayaadhu nandri
surendran

Anonymous said...

சால்ட் கொட்டாய் சரசு,

//பண்டைய நாவலந்தீவில் (அப்டின்னா என்னாவா? இந்தியாதானுங்கோ) இருந்த மதங்கள் இருவகை.//

நீர் எங்கு கல்வி கற்றீர்? நாவலந்தீவு என்றால் நான்கு புறமும் நீரினாற் சூழப்பட்ட நிலப்பகுதி. இந்தியா அப்படித்தான் உள்ளதா? உமது அறியாமையை என்னவென்பது?

- வள்ளுவன்

Anonymous said...

அன்புடன் சுவனப்பிரியன்,

//அவர் கிருஷ்ணனாகவோ அல்லது திருவள்ளுவராகவோ கூட இருக்கலாம். அதை இறைவனே அறிந்தவன்.//

கிருஷ்ணன் என்பவன் வெறுமனே ஒரு கற்பனைக் கதாபாத்திரம். வரலாற்றில் அவ்வாறு எவனுமே இருக்கவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கிய ஒரு கற்பனைத் தெய்வம்.

- வள்ளுவன்

Anonymous said...

புதுடில்லி: தெகல்ஹா நிறுவனம் விரித்த வலையில் சிக்கி ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் பங்காரு லட்மணனுக்கு இன்று என்ன தண்டனை வழங்குவது என கோர்ட் முடிவு செய்கிறது. இதற்கென காலையில் பங்காரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நேரத்தில் இவரது வக்கீல் வாதிடுகையில் ; எமது கட்சிக்காரர் இருதய நோயாளி, பைபாஸ் சர்ஜரி செய்துள்ளார். நீரிழிவு நோயாளியும் கூட. எனவே இவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் முறையிட்டார். ஆனால் சி.பி.ஐ., இவருக்கு அதிகப்பட்சமாக 5 ஆண்டு சிறை வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதி மதியம் 2.30 மணிக்கு தீர்ப்பளிப்பதாக கூறினார்.

முன்னதாக நேற்று இவர் குற்றவாளி தான் என அறிவிக்கப்பட்டதும் , ஜாமினில் விடாமல் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று வரும் தீர்ப்பு பா.ஜ., வுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் இது எங்களை பாதிக்ககாது என இந்த கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த 2001ல் பா.ஜ., தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் பங்காரு லட்சுமண்( வயது 72 ) . தெகல்ஹா என்ற இணையதளத்தைச் சேர்ந்த சிலர், தங்களை பிரிட்டனின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான, "வெஸ்ட் என்ட் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனக் கூறி, அப்போது பங்காரு லட்சுமணை அணுகினர். டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், பங்காருவை இவர்கள் சந்தித்தனர். அப்போது, "எங்கள் நிறுவனத்தால் அதிநவீன பைனாகுலர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கு வாங்கும்படி, ராணுவ அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, பொய்யாகக் கூறினார். இதை நம்பிய பங்காரு லட்சுமண், இதற்காக அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டார்.இது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. இந்தவிகாரம் பார்லி.,யில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சி.பி.ஐ.,வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கில் சிறப்பு கோர்ட் நேற்று பங்காரு குற்றவாளி என தீர்ப்பளித்தது. நீதிபதி சன்வால் ஷீட் ஆரோரா இவருக்கான தண்டனை விவரத்தை இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கிறார்.

தெகல்ஹா என்ன சொல்கிறது ? : இது குறித்து தெகல்ஹா நிறுவன செய்தி நிருபர் அனிரூதாபஹல் கூறுகையில்; யாரையும் பழிதீர்க்க வேண்டும் என்றோ , யாரையும் களங்கப்படுத்த வேண்டும் என்றோ எங்களுக்கு நோக்கம் இல்லை. பொதுவாழ்வில் ஈடுபடுவோர் எப்படி இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே இவ்வாறு ஒரு ஆபரேஷனில் ஈடுபட்டோம் என்றார்.

பா.ஜ., இது அவரது சொந்த நடவடிக்கைக்கு கிடைத்த பரிசு, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாது என கூறியுள்ளது. குறுகிய காலமே அவர் தலைவர் பதவியில் இருந்தார். இந்த காலத்தை வைத்து பா.ஜ.,வை குறை கூறுவது நியாயமாக இருக்காது என இக்கட்சியின் செய்திதொடர்பாளர் கூறியுள்ளார்.
-Dinamalar
28-04-2012

Anonymous said...

பெண் குழந்தைகளைப் பெற்றோரே விரும்பாமல் புதைகுழிக்கு அனுப்பிடும் கொடுமை இந்தியாவில் தொடர்ந்து நடந்துவருகிறது.

அண்மையில் பெங்களூரில் அஃப்ரீன் என்ற பச்சிளம் சிசு,கொடூரத் தந்தையின் சித்திரவதைக்கு ஆளாகி உயிர் நீத்தது. அதன் பின் டெல்லியில் பெண்குழந்தையைப் பெற்றதற்காகவே மனைவிக்கு விஷ உணவை கணவனே அளித்த செய்தி வந்தது. பெண்குழந்தை மீதான பெற்றோரின் வெறுப்பின் தமிழகச் சம்பவ சாட்சியாக இச்செய்தி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள கொப்பகரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (29) - செல்வி (22) தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக பிறந்த ஒரு பெண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான செல்விக்கு கடந்த மார்ச் 28ம் தேதி மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 3ம் தேதி, தாயான செல்வியே தன் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்று வீட்டின் அருகேயே குழந்தையின் உடலைப் புதைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். பாலக்கோடு வட்டாட்சியர் மாதவன், செல்வியிடம் விசாரித்தபோது ‘பெண் குழந்தை பிறந்ததால், எனது கணவர் குழந்தையை கொன்றுவிடுமாறு என்னிடம் தகராறு செய்தார். இதனால் கள்ளிப்பால் கொடுத்து குழந்தையைக் கொன்றேன்’ என்று செல்வி வாக்குமூலம் கொடுத்தார்.

இதுகுறித்து மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வி மற்றும் செல்வத்திடம் விசாரணை நடத்திய பின்னர் கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு, வட்டாட்சியர் மாதவன் முன்னிலையில் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும் இத்தம்பதிகளுக்குப் பிறந்த 2வது குழந்தையும் பிறந்த சில நாட்களில் இறந்ததால், அந்த குழந்தையையும் இவர்கள்தாம் கொன்றிருப்பார்களோ என்றும் அதிகாரிகள் சந்தேகித்து அது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

- இந்நேரம்

suvanappiriyan said...

திருச்சி அரியலூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற சகோதரர் கடந்த 14.04.2012 அன்று ரியாத் மண்டலத்தை தொடர்பு கொண்டு, தனக்கு அவசரமாக 4 யூனிட் இரத்தம் தேவைப்படுவதாக கூற, உடனடியாக மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் மூலமாக அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவருடைய உடல் நிலை மற்றும் மருத்துவமனை ஆவணங்களை சரிபார்த்து, கிங் ஃபஹத் மெடிகல் சிட்டி இரத்த வங்கி மூலமாக 4 யூனிட்டுகள் வழங்கப்பட்டது,


தம்மாமில் உள்ள அல் மர்கான் என்ற கம்பெனியில் கனரக வாகன ஓட்டியாக பணிபுரிபவர், அதிக வேலைப்பளு காரணமாக சரியாக ஓய்வெடுக்காமலும் அதிக ஓவர் டைம் செய்ததாலும் அவரது உடலில் இரத்தத்தின் அளவு மிகவும் குறைந்து விட்டது. ரியாத் TNTJ வின் இந்த உதவிக்கு ராமகிருஷ்ணன் அவர்கள் மனதார நன்றி தெரிவித்தது குறிப்பி்டதக்கது.

http://www.tntj.net/83810.html

Seeni said...

maasha allah

Anonymous said...

/இந்து மதத்தின் மேல் உங்களுக்கென்ன அக்கறை இருக்க முடியும்?//

//என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க! நான்கு ஐந்து தலைமுறைக்கு முன்னால் எனது முன்னோர்களும் இந்துக்கள்தானே! ராகவனாகவோ ராமசாமியாகவோத்தானே இருந்திருக்க முடியும். எனது சொந்தங்களைப் பற்றி நான் கவலைப்படாமல் வேறு யார் கவலைப்பட முடியும்?//

அப்படீன்னு நீங்கதான் சில நாட்களுக்கு முன் சொன்னீங்க,
ஆனால் இன்னறைக்கு சொல்லுறீங்க நீங்கதான் ஆதிக்குடியுனு.
எதுங்க சரி??

Anonymous said...

உங்களுடய கட்டுரைகள் எல்லாம் இப்பொழுது முற்றிலும் இந்துசமயத்தை தாக்கித்தான் வருகிறது.
இப்படியான உங்களைமாதிரியானவர்களின் நடவடிக்கைகள்தான் முஸ்ஸுலீகளின் மேல் எல்லாருக்கும் ஒரு வெறுப்பை கொண்டுவருது.
திருந்தவே மாட்டீங்களா?

Anonymous said...

வலது கை செய்யும் உதவி இடதுகைக்கு தெரியாமல் செய்வதுதான் நீங்கள் செய்யும் உதவிக்கான மிகப்பெரிய பலனை கொடுக்கும். அவர்கள் இரத்தம் கொடுத்ததை வெளியே சொல்லித்திரிவது மிக்க கேவலமான விளம்பரயுத்தி. அல்லாவே உங்களை மன்னிக்கமாட்டார். நான் கூட இதுவரை 24 முறை இரத்தம் கொடுத்திருக்கிரேன். ஏன் இன்னும் பல இந்து சகோதரர்கள், முஸ்லீம் நண்பர்கள், கிறீஸ்தவ தோழர்கள் கூடத்தான் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
உங்களைப்போல் ஒருகாலமும் கொடுக்கதவர்களதான் இப்படி பேத்திக்கொண்டிருக்கிறாகர்கள்

ஆத்மா said...

அல்ஹம்துலில்லாஹ்.........ஹிதாயத்தை கொடுப்பவன் அல்லஹ் ஒருவனே