Followers

Sunday, April 29, 2012

இந்திய + இத்தாலிய இரும்பு மனுஷி!!

இந்திய + இத்தாலிய இரும்பு மனுஷி!!

உண்மையில் நாம் பாராட்டத்தான் வேண்டும். எத்தனை இழப்புகள்! எத்தனை சோகங்கள்! அத்தனையையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் வீறு கொண்டு எழுந்து இன்று வரை பலருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் சோனியா அம்மையாரை என்ன பாராட்டினாலும் தகும். பொதுவாக அரசியல்வாதிகளையே எனக்கு பிடிக்காது. ஆனால் இந்த இத்தாலிய பெண்மணியின் அறிவும் சமயோஜிதமும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது..




இத்தாலியில் உள்ள லூசியானாவில் பிறந்தார். 'எட்விகி அண்டோணியா அல்பினா மையினோ' (யப்பா... எவ்வளவு கஷ்டம் உச்சரிப்பில் :-)) என்பது இவரது இயற் பெயர். 1946 ல் பிறந்தார். ராஜீவ் காந்தியை மணந்ததற்கு பிறகு தனது பெயரை 'சோனியா காந்தியாக' மாற்றிக் கொண்டார்.

மேல் நாட்டு மருமகளாக வந்து இன்று உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒருவராக எல்லோராலும் பார்க்கப்படுகிறார். இந்திய அரசியலில் ஒரு செல்வாக்கு மிக்க நபராக 2004ல் போர்பஸ் பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டார். உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் மூன்றாவது இடம் வகிக்கிறார். 'டைம்' பத்திரிக்கை இவரை 2007,2008 ஆண்டுகளில் 100 அதிக செல்வாக்கு மிக்க மக்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது. எவ்வளவு சக்தி இருந்தாலும் நம் அம்மையார் ஜெயலலிதா போல் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடாமல் வெகு எளிமையாக எந்நேரமும் புன் சிரிப்போடு வலம் வருவது எல்லலோராலும் செயல்படுத்த முடியாத ஒன்று.




தனது கணவன் இறந்த சோகம்: சில ஆண்டுகளுக்கு முன்னால் மாமியார் சுடப்பட்டு இறந்த சோகம். அதற்கும் முன்னால் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த சோகம்: என்று அடுக்கடுக்காக வந்த சோகங்களை எல்லாம் புறந் தள்ளி அதனையே தனது முன்னேற்றத்துக்கு படிக்கற்க்களாக்கி இன்று புகழின் உச்சியில் இருக்கிறார் சோனியா! பிரதமர் பதவி சில காரணங்களால் கிடைக்காமல் போனாலும் அந்த எண்ணத்தையே தூரமாக்கி அந்த பிரதமரையே ஆட்டி வைக்கும் பொறுப்பை சுமந்து இன்று வரை எந்த குறையும் இல்லாமல் செய்து வருகிறார்..


(இத்தாலியில் சோனியா காந்தி அவர்கள் பிறந்த வீடு)

இவருடைய இடத்தில் நம்ம ஜெயலலிதா அம்மாவை உட்கார வைத்திருந்தால் மன்மோகன் சிங்கின் கதி என்ன ஆகியிருக்கும் என்பதையும் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். ஜெயலலிதாவுக்கு இருந்த பவரால் வாஜ்பாயை எப்படி எல்லாம் ஆட்டி வைத்தார் என்பதை நாம் கண்கூடாக பார்த்தோம்.

தனது கணவனை கொன்றவர்களை இன்னார்தான் என்று தெளிவாக தெரிந்தும் தனக்கு அதீத பவர் இருந்தும் அதனை உபயோகிக்காமல் அவர்களை பழி வாங்காமல் பொறுமை காத்தாரே அதை எண்ணியும் நான் வியந்ததுண்டு. தான் பொறுமையாக இருந்ததோடு அல்லாமல் தனது குழந்தைகளையும் அதே பொறுமைசாலிகளாக வளர்த்திய விதமும் அருமை. சிறைச் சாலையில் உள்ள நளினியை சந்தித்து 'என் அப்பாவை ஏன் கொன்றீர்கள்?' என்று வருத்தத்தோடு கேட்டாரே அந்த நேரம் மிக உயர்ந்து விட்டார் பிரியங்கா காந்தி. இவ்வளவு பக்குவமாக தனது குழந்தைகளை வளர்த்த திருமதி சோனியா காந்தியை இங்கு நாம் நினைத்துப் பார்க்கிறோம்.




ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படத்தான் இந்தியா முதலில் முடிவெடுத்தது. ஆனால் தமிழகத்தின் ஒட்டு மொத்த எம்பிக்களும் கடைசி போர்க்களக் காட்சிகளை காணொளியாக போட்டுக் காண்பித்ததும் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் பல இடங்களில் சுடப்பட்டு இறந்து கிடந்த காட்சியும் சோனியா காந்தியின் மனதை ரொம்பவுமே உலுக்கி விட்டது. இதன் பிறகு தான் மன்மோகன் சிங்குக்கு போன் போட்டு இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முயற்ச்சித்தார் என்று நெருங்கிய காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. ராஜபக்ஷே நேரிடையாக கேட்டு கொண்டும் அதற்கு செவி சாய்க்காமல் அதற்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் நிலை பாட்டினை எடுத்தது பலராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. இதனால் பெரும் மாற்றம் வந்து விடாது என்றாலும் இலங்கை அரசாங்கத்தை மிரட்ட இது ஒரு வாய்ப்பாக அனைவருக்கும் அமைந்தது.
The Congress president heard out her partymen. It seems she was particularly chilled by the photo of Prabhakaran's young son, shot in the chest, but looking like he was peacefully sleeping.

Sonia assured the Tamil Nadu MPs that she would take action. Soon enough, she had told the PM that India could not be seen to be voting in favour of the Rajapaksa government.

The truth is that this time, the India-Sri Lanka relationship has turned on the death of a child. The irony is that he is Prabhakaran's son- "Times of India " reports. 30-march-2012

எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களின் புனர் வாழ்வுக்காக பல திட்டங்களை சோனியா காந்தி செயல்படுத்தியுள்ளார். இது சம்பந்தமாக இலங்கையில் சுஷ்மா ஸ்வராஜ் பேசும் போது
“உண்மையாக கூறுவதாயின் எல்லோருக்கும் அரசாங்கமே வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதும் தவறான வாதமாகும். அவ்வாறு நோக்கும் போது தொழிற் பயிற்சி வழங்கும் மையங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் நாம் பல்வேறு தொழில்சார் பயிற்சிகளில் தேர்ச்சிபெற்றுள்ளோம். அதன் மூலம் கிடைத்த நிபுணத்துவத்தையே நாம் இன்று இலங்கைக்கு வழங்கியுள்ளோம்.




ஏற்கனவே இது தொடர்பான பயிற்சிகளை நாம் இலங்கை போதனாசிரியர்களுக்கு அளித்துள்ளமையினால் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இந்நவீன உபகரணங்களை கையாளவும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவும் முடியுமாகவிருக்கும். இதனை இங்குள்ள மக்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான பிணைப்பை இது மேலும் பலப்படுத்துமெனவும் நான் நம்புகின்றேன்.

இந்தியா இலங்கையில் 52 திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இவற்றுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது. இந்த ஒத்துழைப்பு காரணமாக இத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி வருகிறது. போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தொழில்துறை என பல வகையான திட்டங்களும் இவற்றில் அடங்குகின்றன.
நட்புறவுமிக்க நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கு இந்தியா உட்கட்டமைப்பு வசதிகள் விடயத்தில் உதவிகளை வழங்கியுள்ளது. இதேநேரம் இலங்கை புதிய உதவிகளுக்கான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. இவையனைத்தையும் இயலுமான சகலவழிகளிலும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டும்” என்றார். இந்தியா ஏற்கெனவே பல குடியிருப்புகளை கட்டி அதில் தமிழர்களை குடியமர்த்தியுள்ளது.

நம்ம தாத்தா கலைஞர் இப்பொழுதுதான் தனி ஈழம் பற்றி பேச ஆரம்பித்துள்ளார். தேர்தல் நெருங்குகிறதல்லவா அதுதான் முக்கிய காரணம். ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் நம்புவதை விடுத்து இலங்கைத் தமிழர்கள் சோனியா காந்தியை நம்பலாம். வாக்கு கொடுத்தாலும் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். நெடுமாறன், வைகோ, சீமான் போன்ற காமெடி பீசுகளை எல்லாம் தூரமாக்கி விட்டு சோனியா காந்தியிடம் நட்புறவை வளர்த்தால் நிரந்தர தீர்வாக இலங்கை தமிழர்களுக்கு அமையும்.

'புலம் பெயர்ந்த தமிழ் ஈழம்' 'தனி ஈழம்' என்பதெல்லாம் கேட்க நன்றாக இருக்கும். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சில ஓட்டுக்களை இந்த கோசங்கள் பெற்றுத் தரும். ஒன்று பட்ட இலங்கையில் மத்திய அரசின் சோனியா காந்தியின் தலையீட்டில் அமையும் ஒரு தீர்வுதான் நிரந்தர தீர்வாக அமையும். காலம் கடத்தாமல் இலங்கைத் தமிழர்கள் சோனியாவை சந்தித்து நிரந்தர தீர்வுக்கு முயற்ச்சிக்கலாம்.

சில லட்சத்துக்கு அதிபதிகளானவர்களின் வாரிசுகள் எல்லாம் தனது வயதொத்த இளைஞர்களோடு பார்களில் வலம் வரும் போது ராகுல் காந்தியோ தலித்களின் குடிசையில் படுத்து கூழ் கஞ்சியை சாப்பிடுவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். இவை எல்லாம் அரசியல் ஸ்டண்ட் என்று ஒதுக்கி விடவும் முடியாது. ஏனெனில் இவை எல்லாம் செய்து காண்பிக்காமலேயே இன்று வரை ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது காங்கிரஸ். 40 வயதுக்கு மேலாகியும் இன்று வரை தனது திருமணத்தைப் பற்றியே எண்ணாமல் நாட்டின் இளைஞர்களின் முன்னேற்றத்தில் அதீத கவனம் செலுத்தி வரும் ராகுல் அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஒரு ரோல் மாடல் என்றால் மிகையாகாது.

நம் ஊரிலும் பதவியில் இருந்தபோது வளர்ப்பு மகனுக்காக நம்ம 'அம்மா' :-) நடத்திய திருமணமும் நகைகளோடு கொலு பொம்மைபோல் போஸ் கொடுத்த இரண்டு பேரையும் நினைத்து பார்க்கிறேன். அங்கு டெல்லியில் கதர் துணிகளோடும் எந்த நகைகளும் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் பிரியங்கா காந்தியையும் நினைத்து பார்க்கிறேன்.


சோனியா காந்தி தனது பிள்ளைகளை பிற காங்கிரஸ் எம்.பிகளுக்கு எளிமையான பழக்க வழக்கங்கள் மேற்கொள்ள வலியுறுத்தினார், அதற்கு முன்னுதாரணமாக அவர் 2009 செப்டம்பர் மாதம் 14 ஆம்நாள் புதுடெல்லியில் இருந்து மும்பைக்கு சிக்கன வகுப்பில் விமானப்பயணம் செய்தார். அதனால் அவர் ரூ 10,000 மிச்சப்படுத்தினார். எம்பிக்களின் ஊதியத்திலிருந்து (ஒரு எம்.பியின் மாத ஊதியம் ரூ 16000)20% இந்தியாவில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டோர்களுக்கென நிதியளிக்க வலியுறுத்தினார். இது போன்ற செயல்களெல்லாம் அவரது எளிமையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

கருணாநிதியிடம் 'ஃபாதர்...ஃபாதர்' என்று அன்பொழுக பழகினாலும் கனிமொழி விஷயத்திலும் ராஜா விஷயத்திலும் தான் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக கூறிய அந்த நேர்மையையும் இங்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அத்வானி, நரேந்திர மோடி, வாஜ்பாய், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களோடு ஒப்பிடும் போது மிக உயர்ந்த இடத்தில் உயர்ந்து நினைக்கிறார் சோனியா காந்தி. அவரது சேவையால் நம் நாடு மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்து வல்லரசாக மாற வாழ்த்துவோம்.

டிஸ்கி: இந்த பதிவை அமைச்சர்கள் சிதம்பரமோ, வாசனோ பார்த்து விட்டு சோனியா அம்மையாரிடம் சொல்லி எம்பி சீட்டோ, எம்எல்ஏ சீட்டோ சுவனப்பிரியனுக்கு வாங்கி கொடுத்தால் புண்ணியமாக போகும். பின்னே...நானும் கோடிகளில் புரண்டு பணம் பண்ண வேண்டாமா? எத்தனை காலத்துக்குத்துததான் ஒரு கம்பெனியில் மாத சம்பளத்துக்கு பொட்டி(கணிணி) தட்டிக் கொண்டு இருப்பது? :-)

33 comments:

Anonymous said...

இலங்கை விவகாரத்திற் தலையிட இந்தியர் எவருக்கும் உரிமையில்லை. இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர், ஐதராபாத், திரிபுரா, அசாம், நாகலாந்து என்று எத்தனையோ நாடுகள் இருக்கின்றன. முதலில் அவற்றுக்கெல்லாம் விடுதலை வழங்கட்டும். அப்படியில்லாமற் பேசுவதற்கு இந்தியாவிற்கு எந்தவொரு தகுதியும் இல்லை.

- வள்ளுவன்

suvanappiriyan said...

திரு வள்ளுவன்!

//இலங்கை விவகாரத்திற் தலையிட இந்தியர் எவருக்கும் உரிமையில்லை.//

இதை அனைத்து இலங்கைத் தமிழர்களையும் ஒட்டு மொத்தமாக சொல்லச் சொல்லுங்கள். இதனால் பல வகைகளில் இந்தியா பிரச்னைகளில் இருந்து விடுபடும்.

அடுத்து இலங்கை தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பிட்டு சொல்லக் கூடிய தலைவர்கள் என்று ஒருவரும் உயிருடன் தற்போது இல்லை. ஆதிக்க போட்டியால் ஒருவரை யொருவர் சுட்டுக் கொண்டு இன்று தலைவர்களே இல்லாத நிலையில் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். இதில் இந்தியாவையும் கைகழுவி விட்டால் மேல் மட்டத்தில் பேச ஒருவரும் இல்லை என்ற நிலைதான் உருவாகும். இதனால் இலங்கைத் தமிழர்கள் ராஜபக்ஷே கொடுக்கும் நிர்பந்தத்திற்கு அடி பணிய வேண்டி வரும். இந்திய துணையோடு செல்வதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு என்பது எனது கணிப்பு.

Anonymous said...

அன்புடன் சுவனப்பிரியன்,

//இதை அனைத்து இலங்கைத் தமிழர்களையும் ஒட்டு மொத்தமாக சொல்லச் சொல்லுங்கள்//

உலகில் எங்கும் நடைபெற இயலாத ஒன்றைச் சொல்லச் சொல்கிறீர்கள். எந்த இடத்திலும் ஒட்டு மொத்த சனமும் அரசியலில் எதனையும் ஆதரித்ததாகவோ எதிர்த்ததாகவோ வரலாறு கிடையாது.

பிரபாகரன் இருந்தபோது அவர் இலங்கைத் தமிழர்களின் ஒருமனதான தலைவராக இருக்கவேயில்லை. அவர் விடுதலைப் புலிகள் இயங்கியபோது இருந்த ஏனைய இயக்கங்களை நசுக்கி எத்தனையோ அப்பாவித் தமிழர்களைப் புதைகுழிக்கு அனுப்புவதையே வேலையாகக் கொண்டிருந்தார். இப்போதுதான் அரசியல் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களால் நன்கு சிந்திக்க முடிகிறது. இலங்கையில் ஒன்றுபட்ட (தனித்த) அரசியல் தலைமை இல்லாதது போலவே, உலகிலுள்ள எந்த நாட்டிலும் இல்லை. தமிழகத்திலும் இல்லை.

எனினும், தமிழனுக்கென்று ஒரு நாடு வேண்டுமாயின், அது இலங்கையின் வடக்கு கிழக்கைச் சேர்ந்தோருக்கு மாத்திரம் என்பது போற் கதைப்பது சுயநலவாதிகளின் வேலை. வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களைவிடச் சற்றே குறைந்தாலும் ஏராளமான தமிழர்கள் -மொத்த இலங்கைத் தமிழரிற் கிட்டத்தட்ட 40% பேர்- கொழும்பிலும் மலையகத்திலும் உள்ளனர். இது இலங்கை வாழ் முஸ்லிம்களின் விடுத்து. முஸ்லிம்களையும் சேர்த்தால், வடக்கு-கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட இருமடங்குக்கும் கூடுதலானோர் ஏனைய பகுதிகளில் உள்ளனர். இந்நிலையில், இலங்கையின் மொத்த தமிழ்ப் பேசுவோரின் தொகையில் அரைவாசியினர் இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் அரைவாசிக்கும் மேற்பட்ட நிலத்தைத் தனிநாடாக்கக் கோருவது எந்த வகையில் நியாயம்? அதாவது, மொத்த மக்கட்டொகையில் வெறுமனே 12% பேர் தங்களுக்கென்று கிட்டத்தட்ட 60% நிலப்பரப்பைக் கோருவது சரியா? அத்துடன், தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்காத தமிழர்கள் ஏராளமாக வடக்கு-கிழக்கிலும் உள்ளனர். உதாரணமாக, கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் வாக்களித்தவர்கள், டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சியின் ஆதரவாளர்கள் போன்றோரைக் கூறலாம். யாழ்ப்பாணத்தில் ஏராளமானோர் -எல்ரீரீஈ பயங்கரவாதிகளின் போராட்டம் இடம்பெற்ற வேளையிலும் கூட- ஈபிடிபி ஆதரவானோராகவே இருந்துள்ளதுடன் இன்றும் உள்ளனர். ஈபிடிபிக்கும் புலிப் பயங்கரவாதிகளுக்கும் ஏற்கனவே கடும் பகை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்நிலையில், இலங்கையைத் துண்டாட நினைப்பது எந்த வகையில் நியாயம்? நாங்கள் அதனை எதிர்க்கிறோம்.

- வள்ளுவன்

Anonymous said...

//இதில் இந்தியாவையும் கைகழுவி விட்டால் மேல் மட்டத்தில் பேச ஒருவரும் இல்லை என்ற நிலைதான் உருவாகும். இதனால் இலங்கைத் தமிழர்கள் ராஜபக்ஷே கொடுக்கும் நிர்பந்தத்திற்கு அடி பணிய வேண்டி வரும். இந்திய துணையோடு செல்வதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு என்பது எனது கணிப்பு.//

இக்கருத்து ஓரளவுக்குச் சரியாகவே இருக்கின்றது. எனினும், நாட்டைத் துண்டாடும் கருத்துக்களை ஆதரிக்க முடியாது. ஒன்றுபட்ட இலங்கையினுள் நாம் எமது அரசியல் உரிமைகளைச் சரிவரப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

- வள்ளுவன்

Anonymous said...

சோனியா முஸ்லீம் என்று யாரோ தவறுதலாக சுகவனத்திற்கு சொல்லியிருக்கவேண்டும்.
சோனியா ஒரு கிறீஸ்தவர். தவறைத்திருத்திக்கொண்டு அவரை கேவலப்படுத்தி இன்னுமொரு
பதிவினை உடனடியாக வரையவும்

suvanappiriyan said...

கோவிக் கண்ணன்!

//சுவனப் பிரியன்,

பதிவில் கேட்டக் கேள்விக்கு பதிலைக் காணும், 'இங்கே பாருங்கள் ஆடு நனைகிறது...' என்று போட்டு இருக்கிறார்கள் என்று தினமல(ர்) தகவலை அள்ளித்தருகிறீர்கள்.

ஒருவேளை பதிவைப் படிக்காமலேயே போட்ட பின்னூட்டமோ.//

முகமது நபி பல திருமணங்கள் செய்தது ஏன்? என்பது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் பல முறை விளக்கியாகி விட்டது. எனவே தான் அந்த மேட்டரை தொடவில்லை.

நித்தியானந்தா என்பவர் இந்து மதத்தில் ஒரு பிரிவினரால் சாமியாராக மத குருவாக பார்க்கப்படுபவர். தான் சந்நியாகம் வாங்கி முற்றும் துறந்த முனிவன் என்று கூறிக் கொண்டு ரஞ்சிதாவோடு சள்ளாபத்தில் ஈடுபட்டதில் கையும் களவுமாக பிடி பட்டவர். 'பெண் வாசனையே இல்லாதவன்' என்று பொய் கூறியுள்ளார். ரஞ்சிதாவுடன் கள்ள தொடர்பில் ஈடுபட்டு விபசாரத்துக்கும் துணை போயுள்ளார். இந்த செய்திகளை மறைக்க பண பேரமும் பேசப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒருவர் மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டது நியாயமா என்பதுதான் எனது கேள்வி
இன்றுவரை தனது கூடவே வைத்திருக்கும் ரஞ்சிதாவின் எதிர்காலத்துக்கு உங்களின் பதில் என்ன? காலம் பூராவும் ஆசை நாயகியாக இருந்து விட்டு போக வேண்டியதுதான். இவருக்கு வாரிசுகள் உண்டானாலும் உலக நியதிப்படி நித்தியானந்தனின் வாரிசுகளாக கருதப்பட மாட்டார்கள். இவ்வளவு பிரச்னை உடைய ஒருவரை ஆன்மீக தலைவராக ஏற்கத்தான் வேண்டுமா என்பதே எனது கேள்வி.
.
உடனே இதற்கு முகமது நபியின் வரலாறை கொண்டு வருகிறீர்கள். முகமது நபி செய்து கொண்ட அனைத்தும் திருமண ஒப்பந்தங்கள். இதனால் திருமணம் முடிக்கப்பட்ட பெண்களுக்கோ அவர்களின் வாரிசுகளுக்கோ எந்த இழுக்கும் ஏற்படாது. முகமது நபியின் மனைவியர் அனைவருமே திருமணத்துக்கு பிறகு தங்களின் தகுதியை சமூகத்தில் உயர்த்திக் கொண்டதாகத்தான் வரலாறு. மேலும் சில பெண்கள் முகமது நபியை திருமணம் செய்ய விரும்பியும் அதற்கு உடன்படாமல் தனது தோழர்களுக்கு மணமுடித்து கொடுத்த வரலாறையும் பார்க்கிறோம்.

முகமது நபியை திருமணம் செய்ததால் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் உலக முடிவுநாள் வரை அன்னையாராக பார்க்கப்படுவர். இந்த பாக்கியம் உலகில் வேறு எந்த பெண்களுக்கும் கிடைக்காது.

ஒன்பது வயதில் திருமணம் முடித்த அன்னை ஆயிஷா பூப்பெய்தியவுடன்தான் நபியவர்களின் வீட்டுக்கு குடும்பம் நடத்த அனுப்பப்படுகிறார். தனது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவர்களே அறிவிக்கும் ஹதீதுகள் காணக் கிடைக்கின்றது. இல்லறம் சம்பந்தமான பல அறிவிப்புகள் அன்னை ஆயிஷா மூலமாகவே எங்களுக்கு கிடைக்கிறது. இந்த திருமணத்தால் மனித குலத்துக்கு கிடைத்த மிகப் பெரிய பயன் என்று இதனை கூறலாம்..

எனவே இந்த திருமணங்களை காட்டி நித்தியானந்தாவின் செயல்களை நியாயப்படுத்திக் கொள்வது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாகும்..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
இப்பதிவு ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணம்.

//பிரதமர் பதவி சில காரணங்களால் கிடைக்காமல் போனாலும்//

அப்படியா..? அக்காலத்தில் கிட்டத்தட்ட நான் டிவியில்தான் கண் வைத்து இருந்தேன். சோனியா நினைத்திருந்தால் பிரதமர் ஆகி இருக்க முடியும். ஆனால், எதிர்க்கட்சிகள் மூலமாக பல விசித்திரமான வழக்குகளை தம கட்சியும் ஆட்சியையும் சந்திக்க வேண்டி வருமே... அதனால் நிம்மதியாக ஆட்சி அமையாதே என்றுதான் பிரதமர் பதவியை அவர் துறந்தார் அல்லது தியாகம் செய்தார்.

இங்கே இன்னொரு அதிரடி திருப்பம். காங்கிரசின் பிரதமர் வேட்பாளர்கள் அவர் அத்தனை பேரையும் ஓரங்கட்டிவிட்டு மன்மோகன் சிங்கை நியமித்தாரே..! இந்த சாகச செயலுக்கும் அருமையான புத்திசாலித்தனமான பின்னணி ஒன்று உண்டு.

அதாவது, இந்திரா காந்தி ஒரு சீக்கிய காவலாளியால் கொலையுண்டபோது டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பது போல "ஒரு பெரிய மரம சாயும்போது நிலம் அதிரத்தான் செய்யும்" என்று குஜராத் இனப்படுகொலையில் நரேந்திர மோடி பேசியது போல போல பேசியுள்ளார். இது காங்கிரஸ் கொலையாளிகளுக்கு லைசன்ஸ் தந்தது போல ஆகி இன்னும் நிறைய அப்பாவி சீக்கிய மக்களை டில்லி, ஹிமாச்சல், உ.பி, பஞ்சாப் முழுக்க கொன்று குவித்தனர். சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக செய்தியில் படித்திருக்கிறேன்.

அந்த அழியாத கரை, பழிக்குப்பழி கொலைவெறி... இப்போது அமைச்சர் ப.சிதம்பரம் மீது செருப்பு வீசும் அளவுக்கு தணிந்து குளிர்ந்து உள்ளது என்றால்... அதற்கு காரணம் சோனியாவின் சமயோசித முடிவான ஒரு சீக்கியரை பிரதமர் ஆக்கியது..! பின்னே... இந்தியாவில் ஒரு சிறுபான்மை மதத்திலிருந்து பிரதமர் ஆக முடியுமா..? இதை செய்து காட்ட எண்ணம் வந்தது சோனியாவுக்கு என்றால் அவரம் வேறு ஒரு சிறுபான்மை மதத்தை சேர்ந்தவராக இருந்ததே காரணம்.

இப்போது நான் ஒரு கணம் எண்ணிப்பார்க்கிறேன் சகோ.

இதே நிலையில் பாஜக இருந்திருக்குமேயானால்... ஒரு முஸ்லிமை... குஜராத் இனப்படுகொலைக்கு பிராயச்சித்தமாக பிரதமர் ஆக்குமா..? எப்படி ஆக்கும்..? பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை பாராட்டி புத்தகம் எழுதினால் கூட போதுமே... எத்தனை சீனியராக இருந்தாலும் அது நீக்கும்.... கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து..! பாவம் ஜஸ்வந்த் சிங். உண்மையை எழுதினார்... தண்டனை பெற்றார்..!

ஏகப்பட்ட ஊழல்கள் ஒரு புறம் இருந்தாலும், நம் நாட்டின் கடந்த பத்து வருடமாக சிறுபான்மையினரின் ஓரளவுக்கு அமைதியான பாதுகாப்பான வாழ்வுக்கு ஒருவகையில் சோனியாவும் காரணம்.

இவர்கள்தான் ஹேமந்த் கர்கரேயை ஐரோப்பாவிலிருந்து அழைத்து வந்து ஆர் எஸ் எஸ் இன் ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு சதியை அம்பலப்படுத்தியது... இது ஒன்று போதுமே..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

"ஒரு பெரிய மரம சாயும்போது நிலம் அதிரத்தான் செய்யும்" என்று குஜராத் இனப்படுகொலையில் நரேந்திர மோடி பேசியது போல போல பேசியுள்ளார். ////===சொல்ல மறந்துட்டேன்.... இப்படி சொன்னவர் ராஜீவ் காந்தி...!

suvanappiriyan said...

டோண்டு சார்!

//முசல்மான்கள்தான் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். அது உங்கள் விதி. எங்கள் மதவிஷயங்களுக்கு வந்தால் இவ்வாறுதான் வாங்கிக் கட்டிக் கொண்டு போக நேரிடும்.//

உங்கள் மதமா! சொல்லவே இல்லே! இன்று வரை சாதி இருந்தே தீர வேண்டும் அதில் உயர்ந்தோர் தாழ்ந்தோரும் இருந்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நீங்கள் நித்தியானந்தாவுக்கு கொடி பிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

'பிரமணர்கள் மதம்' என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் சொல்லும் ஹிந்து மதத்தில் வேறு சாதிகள் என்று எண்ணிக்கையை கூட்டிக் காட்ட மட்டுமே பயன்படுத்திக் கொள்வீர்கள். கறிவேப்பிலையைப் போல. :-)

ராஜ நடராஜன் said...

சகோ!சுவனப்பிரியன்!பத்திரிகை செய்திகளின் சில உண்மைககளோடு உங்கள் கருத்தாக சிலவற்றை வெளிப்படுத்தியிருந்தாலும் பள்ளிக்கூட பாடம் படிக்கிற மாதிரியே இருக்கிறது பதிவு.அடுத்த முறை சகோ.ரஹீம் கசாலிகிட்ட பயிற்சி எடுத்துட்டு அரசியல் பதிவு போடுங்க:)

பிரபாகரன் மகன் இறந்து கிடந்ததை பத்திரிகைகளில் வந்த செய்தியாக உங்களையும் என்னையும் போல பார்த்து மனம் மாறி சோனியாவின் இறுதி நிமிட முடிவால் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றி விட்டதாக்கும்?

பிரியங்காவுக்கும்,நளினிக்குமிடையே நிகழ்ந்த பேச்சு வார்த்தை இன்னும் வெளியுலகம் அறியாத ரகசியம்.

மன்மோகன் சிங்கை சோனியா பிரதமராக்கியது சமயோசித புத்திதான்.இல்லாவிட்டால் இவ்வளவு அருமையான ரிமோட் அடிமை அவருக்கு எப்படி கிடைப்பார்:)

ராகுல் காந்தி ரோல்(ஸ் ராய்) மாடல்தான்.அதனால்தான் அவரோட தலைமையிலான அனைத்து தேர்தலும் காங்கிரஸ்க்கு ஊத்திகிச்சு.

இப்பவோ அப்பவோன்னு இருக்கும் காங்கிரஸ்க்கு அபிஷேக் சிங்வி இல்லாத இடத்துக்கு உங்களை சிபாரிசு செய்யலாம்:)

டிஸ்கி அருமை.

ராஜ நடராஜன் said...

பின்னூட்டம் படிச்சிட்டு முக்கியமான ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன்.

இந்த பதிவில் நித்யானந்தா எங்கே வந்தார்ன்னு பார்த்தா உங்களுக்கும் கோவி.கண்ணனுக்கும் ஏதோ கொடுக்கல் வாங்கல் மாதிரிய் தெரியுது.
பின்னூட்டங்கள் என்ன என்பதை வெளியிட்டால்தானே உங்கள் மறுமொழியின் பொருள் புரியும்.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!கருணாநிதியையும்,ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறீர்கள்.

பின் //இந்திய துணையோடு செல்வதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு என்பது எனது கணிப்பு// என்றும் சொல்கிறீர்கள்.

தமிழகம் சாராத இந்திய துணை என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்?

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//அந்த அழியாத கரை, பழிக்குப்பழி கொலைவெறி... இப்போது அமைச்சர் ப.சிதம்பரம் மீது செருப்பு வீசும் அளவுக்கு தணிந்து குளிர்ந்து உள்ளது என்றால்... அதற்கு காரணம் சோனியாவின் சமயோசித முடிவான ஒரு சீக்கியரை பிரதமர் ஆக்கியது..! பின்னே... இந்தியாவில் ஒரு சிறுபான்மை மதத்திலிருந்து பிரதமர் ஆக முடியுமா..? இதை செய்து காட்ட எண்ணம் வந்தது சோனியாவுக்கு என்றால் அவரம் வேறு ஒரு சிறுபான்மை மதத்தை சேர்ந்தவராக இருந்ததே காரணம்.//

இந்த விவகாரத்திலும் இந்த அம்மையார் மிக சமயோஜிதமாகவே காய்களை நகர்த்தியிருக்கிறார். மறந்த ஒரு பாயிண்டை நினைவுபடுத்தியமைக்கு நன்றி!

Anonymous said...

ஏண்டா ...சோத்துக்கு பஞ்சமா ? இதுக்கு பேசாம பிச்ச எடுக்க வேண்டியது தானே?
எப்படியாவது நானும் ஒரு ரவுடிதான் சொல்ல முயற்சி பண்ணுற ...

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//பிரபாகரன் மகன் இறந்து கிடந்ததை பத்திரிகைகளில் வந்த செய்தியாக உங்களையும் என்னையும் போல பார்த்து மனம் மாறி சோனியாவின் இறுதி நிமிட முடிவால் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றி விட்டதாக்கும்?//


உங்களையும் என்னையும் போல அவரும் ஒரு சராசரி மனிதர்தானே!

//பிரியங்காவுக்கும்,நளினிக்குமிடையே நிகழ்ந்த பேச்சு வார்த்தை இன்னும் வெளியுலகம் அறியாத ரகசியம்.//

பலர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் என்ன ரகசியம் பேசி விட முடியும்? அப்படியே இருந்தாலும் தமிழ் ஆர்வலர்கள் சென்று நளினியிடமிருந்து உண்மையை வெளிக் கொணர முடியுமே! ஏன் செய்யவில்லை?

//ராகுல் காந்தி ரோல்(ஸ் ராய்) மாடல்தான்.அதனால்தான் அவரோட தலைமையிலான அனைத்து தேர்தலும் காங்கிரஸ்க்கு ஊத்திகிச்சு.//

இந்த தோல்விகள் வருங்கால பிரதமரை இன்னும் பக்குவப் படுத்தும்.

//தமிழகம் சாராத இந்திய துணை என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்?//

கருணாநிதி ஜெயலலிதா வைகோ தவிர்த்து நேரிடையான சோனியா காந்தியின் தலையீட்டைத்தான் குறிப்பிட்டேன். தமிழக தலைவர்கள் இலங்கை பிரச்னையை ஓட்டை குறி வைத்து காய் நகர்த்துவதால் ஒரு முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.

//டிஸ்கி அருமை.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ராஜ நடராஜன் said...

//உங்களையும் என்னையும் போல அவரும் ஒரு சராசரி மனிதர்தானே!//


போர்ப்ஸ் கணக்கு காட்டுறீங்க.டைம்ஸின் ஆதாரம் காட்டுறீங்க.அப்புறம் நம்மைப் போல் சராசரி மனிதர்ன்னு ஒப்பீடு வேற செய்றீங்க

நல்லாயிருக்குது கதை:)

suvanappiriyan said...

உங்கள் புரிதல் எந்த அளவு தவறானது என்பதை அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஆதாரபூர்வமான ஹதீதைப் பார்த்து தெளிவு பெறுங்கள்:

இஸ்லாத்துக்கு முன்னர் ஜாஹிலிய்யாக் காலம் என்றழைக்கப்படும் மௌட்டீக கால அரேபியாவில் பெண்கள் மிகவும் இழிவானவர்களாகவே கருதப்பட்டனர். அவளது உரிமைகள் பறிக்கப்பட்டன; ஆண்களின் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கேளிக்கைப் பொருளாகவே கருதப்பட்டு வந்தாள். ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் முடிக்கக் கூடிய ஒரு கீழ்த்தரமான நிலையே காணப்பட்டது. இதனை நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விபரிக்கிறார்கள்:


“அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.


முதல் வகை, இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.


இரண்டாம் வகைத் திருமணம், ஒருவர் தம் மனைவியிடம் நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள் என்று கூறிவிட்டு அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளை விட்டும் அந்தக் கணவன் விலகியிருப்பான். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்ற வரை கணவன் அவளை ஒரு போதும் தீண்ட மாட்டான். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாள் எனத் தெரிய வந்தால், விரும்பும் போது அவளுடைய கணவன் அவளுடன் உடலுறவு கொள்வான். குலச் சிறப்பு மிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற அற்ப ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஹ்’ (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.


மூன்றாம் வகைத் திருமணம், பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்று கூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகிச் சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். இப்போது எனக்குக் குழந்தை பிறந்து விட்டது’ என்று கூறிவிட்டு அவர்களில் ஒருவனை நோக்கி ‘இவன் உங்கள் மகன் இன்னாரே’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.


நான்காம் வகைத் திருமணம், நிறைய மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள்.


இந்தப் பெண்கள் விலை மாதர்களாவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்துக் குழந்தை பிறந்தால் அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்று கூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை – பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் தந்தை எனக் கருதிய ஒருவருடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது.


சத்திய மார்க்கத்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது இன்று மக்களின் வழக்கிலுள்ள முதல் வகைத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்” [புகாரி: 5127].

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப் பிரியன்,

இலங்கை பிரச்சனை பற்றி பேசி இருக்கிறீர்கள்.. வரவேற்கிறேன்... இரு நாடுகளுக்கு இடைப்பட்ட விவகாரத்தில் நீங்கள் சொன்னது ஒன்றும் சாத்தியம் இல்லாத விஷயம் இல்லை...
தமிழகத்தில் ஆட்சில் இருந்த/இருக்கும் இரண்டு அரசும் ஓரளவுக்கு மேல் எங்களாலா செய்ய முடியாது, மத்திய அரசு தான் ஆவணம் செய்ய வேண்டும் என்று கூறும் நிலையில்.
நீங்க கூறி உள்ளது அருமையான யோசனையே... இது பற்றி, இலங்கை பிரச்சனையில் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்..

மற்றபடி நபிகள் நாயகம் திருமணம் பற்றி பதில் அளித்து உள்ளீர்கள்...சாரி சகோ...வேலையற்ற வேலை செய்கிறீர்கள்....
ஒரு நாளைக்கு ஒருவர் வந்து கேள்வி கேட்பார்..ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருப்பீர்களா?????? ஏற்கனவே உள்ள பதிவோட லிங்க் கொடுத்து படிச்சுகங்கன்னு
சொல்லி சிம்பிள் லா முடிச்சிடுங்க சகோ....மேலும் இங்கு கேள்வி கேட்கும் யாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து கேட்க வில்லை...
இதையும் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்....

சிராஜ் said...

சகோ ராஜ நடராஜன்,

நல்லா இருக்கீங்களா??? இலங்கை பிரச்சனைக்கு யாருமே தேவை இல்லை சகோ...
அவங்களே முடிச்சுகுவாங்க... போற போக்கு அப்டி தான் தெரியுது.....
பதிவுலகில் இருக்கும் சொற்ப பேரை வைத்து முடிவு செய்ய முடியாது தான்...
பட் இருந்தாலும், பொறுமை அற்று இருந்தால் நிலைமை இன்னும் சிக்கல் ஆகுமே ஒழிய தீராது....

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//மற்றபடி நபிகள் நாயகம் திருமணம் பற்றி பதில் அளித்து உள்ளீர்கள்...சாரி சகோ...வேலையற்ற வேலை செய்கிறீர்கள்....//

இதற்காக மெனக்கெட்டு டைப் செய்து கொண்டிருப்பதில்லை. ஏற்கெனவே உள்ள பதிலை காப்பி பேஸ்ட்தான் செய்கிறேன். புதிதாக தளத்துக்கு வருபவர்களுக்கு உபயோகமாக இருக்குமே என்றுதான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

ஆத்மா said...

பல விடயங்களை தெரிந்து கொண்டேன்......

suvanappiriyan said...

நித்தியானந்தா சம்பந்தமாக தினமலரில் வந்த சில பின்னூட்டங்கள்.

RAJESHKANNA - riyadh,சவுதி அரேபியா
2012-04-30 11:46:05 IST Report Abuse
மதம் மதம்னு ஏன்யா குதிக்றீங்க. முடி இருக்குறவன் அள்ளி முடியுறான். நித்திய பாருங்க, எவ்ளோ முடி. நீளமா இருக்கு. ஆனால் ஒன்னு மட்டும்யா எப்படி இருந்த இந்து மதம் இவங்கள்ட படுற பாடு இருக்கே ம்ம் முடியல அழுதுடுவேன். வேணாம் அழுதுடுவேன் ... விட்ருங்கப்பா

Mahesh Gm - Mumbai (Bombay),இந்தியா
2012-04-30 11:54:33 IST Report Abuse
ஒரு இந்து என்று சொல்ல எனக்கு வேதனையாக உள்ளது ............

Common Man - Madurai,இந்தியா
2012-04-30 15:18:49 IST Report Abuse
இது போன்ற சம்பவங்களை, மனிதர்களை காணும்போது நான் மேலும் மேலும் திடமாக எனக்குள் சொல்லிகொள்வது, "வணக்கத்திற்குரியவன் ஏக இறைவன் மட்டுமே அவன் மாபெரும் கருணையாளன், தனிப்பெரும் கிருபையாளன்." மேலும் "அவன் எல்லா தவறுகளையும் மன்னிக்க கூடியவன் ஒன்றை தவிர - அந்த ஏக இறைவனுக்கு இணை வைப்பது, அதாவது தகுதி இல்லாததையும், இல்லாதவனையும் கடவுளாக நம்புவது, வணங்குவது..." "இறைவா, உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே உதவி கேட்கிறோம், எங்களுக்கு நீ நேரான வழியை காண்பித்து அருள்வாயாக, அவ்வழி நெறிதவறி போகதவர்களின் வழி, உன் கோபத்திற்கு உட்படாதவர்களின் வழி ...." இந்த கருத்தை நிராகரிபவர்களால் தான், சமூகத்தில் நித்தியானந்த போன்ற போலி சாமியார்கள் உருவாகிறார்கள்...........

jeyam - Srivilliputtur,இந்தியா
2012-04-30 15:36:48 IST Report Abuse
மனசாட்சி இல்லாமல் யாரும் பேசக்கூடாது. நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நாம் அனுபவிக்காமல் விடுவோமா? என்பதை யோசித்துவிட்டு பிறகு கமெண்ட் அடிக்க வேண்டும். பக்கத்து வீட்டில் விழுந்த புதையல் ஒருநாள் நம்ம வீட்டிலும் விழும் என்று காத்திருப்போம்.

இமயவரம்பன் - delhi,இந்தியா
2012-04-30 14:44:50 IST Report Abuse
யோவ் நித்தி காசு இருந்தா காக்கா கூட கலர் ஆயிடும்னு நிரூபிச்சுடியேயா ?? பாத்து சூதானமா நடந்துக்கோ . மதுரை காரைங்க கொண்டே புடுவாய்ங்க

siva - chennai,இந்தியா
2012-04-30 12:37:16 IST Report Abuse
உண்மையில் தமிழன் மடையன் என்பது மீண்டும் மீண்டும் அரசியல் மற்றும் ஆன்மீகவாதிகளால் நிரூபிக்க படுகிறது.. எதாவது ஒரு கட்சி கூட தொடர்பு இல்லாமல் ஒரு ஆன்மீகவாதியும் இல்லை .. ஆன்மீகவாதிகள் உண்மையில் நேர்மையாக இருந்தால் கட்சி தொடர்பில்லாமல் இருப்பார்கள்..அதே போல் பணம் இல்லாத சாமியார்களை பரதேசி என்று மக்களும் சீண்டுவதில்லை.. எல்லாம் கால கொடுமை..நடப்பது தமிழ் சங்கம் இருந்த மதுரை என்று என்னும்போது கொஞ்சம் அதிகம் வேதனை வருத்தம் கோபம்.. மக்கள் வழக்கம் போல் சினிமா சீரியல் இன்டர்நெட் அன்று தங்கள் பொழுதுபோக்குகளில் களம் களிக்கலாம்..

Kartheesan - JEDDAH,சவுதி அரேபியா
2012-04-30 12:06:53 IST Report Abuse
நீ எப்படி இருந்தாலும் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு இருக்கிற ஒரே சந்தேகம் இதுதான். உன்னோட ஆன்மீக ஆராய்ச்சி முடிந்து விட்டதா? அல்லது எத்தனை காலம் இன்னும் தொடரும், அப்படி தொடர்ந்தால் புது அன்பர்களுக்கு அனுமதி உண்டா என்பதுதான்? வேறு எதை கேட்டாலும் பிரயோஜனமில்லை. அதனால் தயவு செய்து பதிலளிக்கவும். மேலும் ஒரு சிறு சந்தேகம், உங்கள் மேல் எப்பொழுதும் பெண் பக்தர்கள் மட்டுமே விழுந்து கட்டி தழுவி ஆன்மீக ஆராய்ச்சி செய்கிறார்கள், ஏன் ஒரு ஆண் மகனும் உங்களின் மேல் விழுந்து ஆராய்ச்சி செய்வதில்லை. தயவு செய்து விளக்கவும்.

Ovian said...

பலஸ்தீனியர்களுக்கு சொல்லுங்கள், அமெரிக்காவின் உதவியைப்பெற்று இஸ்ரேலின் கீழ் வாழச்சொல்லி..........

suvanappiriyan said...

புனை பெயரில்!

//பரம்சிவம், கோட்டைமேடு முஸ்லீம்கள், ராவுத்தர்கள், பணக்கார ஜவுளிக்கடை முஸ்லீம்கள் < தாழ்த்தப்பட்ட வகுப்பு சேர்ந்த முஸ்லீமை மணப்பார்களா…? அதை முதலில் சரி செய்யுங்கள்… புகுந்த வீடு நாறுது… இங்கு உயிரும், வேரும் தந்த பிறந்த வீட்டின் கருவறுக்காதீர்கள்//

என்னுடைய வகுப்புத் தோழன் செல்வராஜ் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன். பிகாம் பட்டதாரி. 4 வருடங்களுக்கு முன்பு வழியில் அவனை பார்த்து 'என்ன செல்வராஜ் சௌக்கியமா?' என்றேன். சுற்று முற்றும் பார்த்து விட்டு 'என் பெயர் அப்துல் அஜீஸ். உங்கள் ஊரில்தான் திருமணம் முடித்துள்ளேன். ஒரு குழந்தை இருக்கிறது.' என்றவுடன் ஆச்சரியப்பட்டுப் போனேன். பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் திருமணம் முடித்துள்ளது பிறகுதான் தெரிந்தது. பிறகு எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து காபி கொடுத்து அனுப்பினேன். தற்போது தன்னுள் எழுந்த மாற்றங்களை விலாவாரியாக சொன்னவுடன் ஆச்சரியப்பட்டேன். தீண்டத்தகாதவன் என்ற இழி சொல் நீங்கி உலக முஸ்லிம்களில் ஒருவனாக கம்பீரமாக பள்ளிக்கு தொழுக சென்றது இன்றும் என் மனதில் நிழலாடுகிறது. இப்படி எத்தனையோ நிகழ்வுகள். வன்முறை இன்றி தீண்டாமையை ஒழிக்க நம் முன் உள்ள ஒரே வழி இஸ்லாம்தான். கசந்தாலும் அதுதான் உண்மை.

suvanappiriyan said...

திரு ஓவியன்!

//பலஸ்தீனியர்களுக்கு சொல்லுங்கள், அமெரிக்காவின் உதவியைப்பெற்று இஸ்ரேலின் கீழ் வாழச்சொல்லி.........//.

ஏற்கெனவே பாலஸ்தீனியர் வசமிருந்த நாட்டை இஸ்ரேலியர் வஞ்சகமாக ஆக்கிரமித்து குடியிருப்புகளை கட்டி வருகின்றனர். அமெரிக்காவின் அரசியல் யூதர்களின் கையில் இருப்பதால் இஸ்ரேலுக்கு தலையாட்டுகிறது அமெரிக்கா. ஆனால் இலங்கை பிரச்னை அப்படியல்ல. தீர்க்க முடியாத அளவு சிக்கலானதும் அல்ல. பிரச்னைக்குரிய விடுதலைப் புலிகளின் செல்வாக்கு முற்றாக இல்லையாதலால் இந்திய இலங்கை ஐநாவின் நியாயமான ஒப்பந்தங்களை நிறைவேற்ற எந்த முட்டுக் கட்டையும் இல்லை.

Anonymous said...

Kavya says:
April 28, 2012 at 6:32 pm

கடைசிப்பத்தி பார்க்கவும்.

அஅனுசரிக்கப்படுவது இருவகை: 1. தமிழ்பார்ப்ப்னர்களால் 2. மற்றவர்களால்.

வருணத்துக்கும் சாதிகளுக்கும் தொடர்பில்லையென்பது இரண்டாம் வகையினருக்கு மட்டுமே பொருந்தும். முதல்வகையினர் தம்மை பிராமணர் எனவழைத்துக்கொண்டு வாழ்வதுமட்டுமல்லாமல், தமிழ்ச்சொல்லான பார்ப்ப்னர்கள் என்ற சொல்லை வெறுக்கின்றனர். அவர்களின் கூட்ட,மைப்பு தன்னை தமிழ் பிராமணர் சங்கம் (தாம்பிராஸ்) என்றுதான் தன்னை பதிவு செய்து நடாத்திக்கொண்டு வருகிறது, போன வாரம் தில்லித்தமிழ்ப்பார்ப்ப்னர்கள் குழந்தைகளுக்கு பூஜ்யசிரி காஞ்சி காம கோடி ஜயேந்திர சரசுவதி சுவாமிகள் முன்னைலையில் தில்லி காமாட்சியம்மன் திருக்கோயிலின் உபநயனம் நடைபெற்றது. வானமாமலை ஜீயர் வருகை தரும்போது மயிலாப்பூரிலும் திருவல்லிக்கேணியிலும் உபநயன விழாக்கள் பார்ப்பனர் குழந்தைகளுக்கு நடக்கும். எப்படி பாப்பிட்டிசம் ஒரு குழந்தையை கிருத்த்வனாக்குகிறதோ அப்படி இச்சடங்கு ஒரு குழந்தையை பிராமணர் ஆக்குகிறது. இப்படிப்பட்ட சடங்குகள் இந்து ஒரு ஜாதியினரை மட்டும் வருணத்தாலேயே வருவதாக வைத்துக்காட்டுகிறது. ஜீயரோ, பூஜ்யசிரி ஜயேந்திர சுவாமிகளோ மற்றவருக்கு இச்சடங்கை நடத்தமாட்டார். அஃதொரு அபச்சாரமாகும். ஏன்? வருண்த்தில் இவர்கள் மட்டுமே பிராமணர் என அங்கீகாரம் இச்சடங்கால் பெறவேண்டும். இது இவ்வாறிருக்க எப்படி தமிழ்பார்ப்ப்னர்கள் வருணத்தால் வரவில்லையென பேசமுடியும்?

மற்றவருக்கும் இந்துமதமுண்டு. சடங்குகளுமுண்டு. ஆனால் அவை ஏறக்குறை ஒன்றாகத்தான் இருக்கும். சில வேறுபாடுகள் இருக்கலாம். தாலி ஜாதிக்குஜ்ஜாதி வேறாகத்தான் இருக்கலாம். ஆனால் தாலிகட்டல் ஒன்றே. இல்லையா?

நாடார், முதலியார், செட்டியார், வன்னியர், பிள்ளை , இன்ன பிற ஜாதிப்பெயர்கள் கூட வருணத்தால் வரவில்லை. அதே வேளையில் தமிழ்பார்ப்பனர்களின் கூட்ட்மைப்பு த்ன்னை தமிழ்பிராமணர் சங்கமென்றும், மலர்மன்னன் தன் ஜாதியினரை பிராமணர்கள் என்றும், தினமலர் தம் ஜாதியினரை பிராமணர்கள் என்றும் அழைத்துக்கொள்ளக்காரணம் வருணத்துக்குத் தொடர்புடயோர் நாங்கள் என்று நினைத்து வாழ்வதாலே.
Reply

Anonymous said...

ஓவியன்,

இலங்கைத் திருநாட்டைத் துண்டாட நினைக்கும் கயவர்களுக்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது. அண்மையில் இலங்கைக்குப் பயணம் செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் "நான் இலங்கையன். இலங்கையனாகவே இறக்க விரும்புகிறேன்" என்று சம்பந்தன் ஐயா சொன்னதிலிருந்து அவரும் தனி நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்பது புலனாகின்றதல்லவா? பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரையும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரையுமான முழு இலங்கைத் திருநாடும் என்றும் ஒரே நாடாகவே இருக்க வேண்டும்.

- வள்ளுவன்

Ovian said...

அண்ணா, இலங்கையிலும் தற்போது தமிழர்கள் பெரும்பான்மையான பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், புத்தவிகாரைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தேறி வருகின்றன. இது ஒன்றும் புதிதல்ல, திரிகோணமலையின் வரலாற்றை படித்தாலே விளங்கும்.ஆகவே எனக்கு தெரிந்து இரு போராட்டங்களும் தாம் காலங்காலமாக வாழ்ந்த இடத்துக்கான போராட்டமே. பெரிய வேற்றுமை எதுவுமில்லை. விடுதலைப்புலிகள் தற்போது இல்லையென்றாலும் அவர்களது "பிரச்சனைக்குரிய மனோபாவமே பெரும்பாலான இலங்கைத்தமிழர்களிடம் இருக்கிறது. அத்தோடு தீர்மானங்களை நிறைவேற்ற எந்தவொரு முட்டுக்கட்டையும் இல்லையெனச் சொல்வது வேடிக்கையாயுள்ளது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட அதிகாரப்பரவலாக்கலையே தற்போது அமல்படுத்த முடியாது என இந்திய நாடளுமன்றக்குழுவின் விஜயத்தின் பின்னும் இலங்கை அரசு அறிவித்துள்ளது உங்களுக்கு தெரியுமா என தெரியவில்லை.

Anonymous said...

ஓவியன்,

உங்களது உள்ளக் குமுறல் புரிகிறது. உண்மையிலேயே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தமிழ்ப் பகுதிகளில் ஏற்படுத்துவது அரசாங்கம் செய்யும் தவறு. எனினும், போர் தொடங்குவதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்னிருந்தே யாழ்ப்பாணத்திலும் வடக்கின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த சிங்களக் குடும்பங்களும் இருக்கின்றனவே. அவர்கள் தமிழரிடையே சிறுபான்மையினராக வாழ்ந்தனர். போர் வன்மையாக நடைபெற்ற வேளையிலும் சில சிங்களக் கிராமங்கள் தமிழ்ப் பகுதிகளில் இருந்தன. அவர்களையெல்லாம் ஒரேயடியாகப் புறந்தள்ளிவிட வேண்டுமென்று கருணாநிதியின் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதாவது, இலங்கையில் இன்னும் துவேஷத்தை வளர்க்க வேண்டுமென்பது கருணாநிதி என்னும் கயவனின் நோக்கம். அரசியலுக்காக எதையும் செய்யத் துணிகின்றனர். அப்படியே இலங்கையின் வளங்களைக் களவெடுக்க வந்த இந்திய மீனவர்களை இலங்கைப் படையினரிடம் பிடித்துக் கொடுத்தவர்கள் வட மாகாண மீனவர்கள் தானே. அவர்கள் ஏன் சிங்களப் படையினரிடம் தமிழர்களைப் பிடித்துக் கொடுக்க வேண்டும்? இங்கு பிரச்சினை என்பது உண்மையில் ஒரு சிலரின் தனிப்பட்ட தேவை. தனி நாட்டுக் கோரிக்கை விடுப்போர் உண்மையிலேயே சுயநலவாதிகள். நன்கு சிந்தித்துப் பார்த்தால் இவ்வுண்மைகள் புரியும்.

suvanappiriyan said...

கோவி கண்ணன்!
//நான் கேட்டிருப்பது ஜைனப் திருமணம் பற்றி தான், முகமது தாம் வளர்ப்பு மகனின் மனைவி என்றே தெரிந்தும், குறைவான ஆடையில் ஜைனப்பைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு திருமணம் செய்து தவறிழைத்த தாழ்வு மனப்பாண்மையால் உணர்ந்தே பிற (திருமணம் ஆனா / ஆகாத) பெண்களுக்கு பர்தாவை வழியுறுத்தினார் என்றும் சொல்லுகிறார்கள்.//

குறைவான ஆடையில் ஜைனபை பார்த்ததாக எந்த ஹதீதுகளும் இல்லை. இஸ்லாமிய எதிரிகளால் களங்கம் சுமத்த வேண்டும் என்பதற்காக இட்டுக்கட்டப்பட்ட ஒன்று. ஆதாரமில்லாத செய்தி அது. இனி அந்த திருமணத்தைப் பற்றி பார்ப்போம்.

அத்தை மகளான ஜைனப் அவர்கள் சிறு வயது முதலே முகமது நபி அவர்களின் வீட்டில் வளர்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஜைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஜைனபப் பார்த்திருக்கின்றார்கள். 20 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். 25 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15 முதல் 30 வயது வரையிலான பல்வேறு பருவங்களில் ஜைனபைப் பார்த்துப் பேசிப் பழகி இருக்கிறார்கள்.
.
இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஜைனபின் அழகில் சொக்கிவிடாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 34 வயதை ஜைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 50 வயது வரை அவர்களுக்கு கதீஜா (ரலி) மனைவியாக இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியின் பால் தேவையிருந்தது. கதீஜா (ரலி) மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உன்மையானால் கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஜைனப்பை மணந்திருக்கலாமே! அதற்கு தடை எதுவும் இருக்க வில்லை. இன்னும் சொல்வதென்றால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தா (ரலி) அவர்களைவிட – அயிஷா (ரலி) அவர்களைவிட அதிக சிரத்தையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்து கொள்ள இவர்களுக்கல்லவா அக்கரை அதிகமிருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்க மட்டும் தான் இருந்தது.
.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) அவர்கள் விரும்பாதிருந்திருக்கலாம், அதன் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காதிருந்திருக்கலாம் அல்லவா? என்ற சந்தேகம் எழக்கூடும். அந்த சந்தேகத்தையும் பின் வரும் சான்று அகற்றி விடுகின்றது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஜைதை மண முடித்துக்கொள்ளுமாறு ஜைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) மறுத்து வீடுகிறார்கள். உடன் பின் வருமாறு இறை வசனம் இறங்கியது.....
.

suvanappiriyan said...

...'அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார். (அல் குர்ஆன் 33:36). இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஜைனப் (ரலி) அவர்கள் ஜைதை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கஸீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
.
இந்த நிகழ்ச்சியின் மூலம், ஆரம்பம் முதலே ஜைத் (ரலி) அவர்களை மணந்து கொள்ள ஜைனப் (ரலி) விரும்பவில்லை என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்கு பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காக தமக்கு விருப்பமில்லாத இன்னொருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஜைனப் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க முடியாது. ஜைது (ரலி) விவாகரத்துச் செய்ததும், ஜைனப்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ததும், ஜைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்து கொள்ள ஆரம்ப காலத்தில் மறுத்திருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்கின்றது.

ஜைத் (ரலி) அவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் முன்கோபியாக இருந்தார்கள். ஜைனப்பைத் திருமணம் செய்வதற்கு முன் உம்மு ஐமன் என்ற பெண்ணை ஜைத் (ரலி) திருமணம் செய்திருந்தார்கள். இவ்விருவருக்கும் 'உஸாமா' என்ற மகன் பிறந்தார். ஜைதைப் போலவே உஸாமாவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதன் பின்னர் ஜைத் (ரலி), ஜைனப்பைத் திருமணம் செய்தார். ஜைனபைத் தலாக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்முகுஸ்ஸூமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்முகுஸ்ஸூமையும் தலாக் கூறினார் ஜைத். அதன் பிறகு அபூலகபின் மகள் 'துர்ரா' என்பவரைத் திருமணம் செய்தார் (ஆதாரம் : அல் இஸாபா)

இந்த விபரங்களை இங்கே கூறுவதற்கு காரணம் ஜைத் (ரலி) அவர்களின் முன் கோபத்தை எடுத்துக் காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்தும், ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஜைத் (ரலி) அவர்கள் தொடர்ந்து தலாக் விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் முன் கோபத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
.
ஜைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்து ஜைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷிக் குலம் பற்றிய உயர்ந்த எண்ணம் இருந்தது. அவ்விருவருக்குமிடையே சுமூகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இவ்விருவரின் முரண்பட்ட இந்த சுபாவமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப்போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சண்டையும் சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போண்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார். ஆனாலும் அவர் தலாக் விடுவதாகக் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவது தான் அவ்விருவருக்கும் நல்லது. (தாம் திருமனம் செய்வதற்காக அல்ல) என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்ல தயங்குகிறார்கள்.

இதுதான் அங்கு நடந்த உண்மை நிகழ்வே ஒழிய நீங்கள் குறிப்பிடும்படி அரைகுறை ஆடையில் அவரை பார்த்து விட்டு திருமணம் முடிக்கவில்லை.

suvanappiriyan said...

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத் அருகில் உள்ளது தொடூர் கிராமம். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் - இளைஞர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டா டினர் (14.4.2012).

அண்ணலின் உருவம் பொறித்த கல்வெட்டு ஒன் றினையும் வைத்துள்ளனர்.
இதனைப் பொறுக்க முடியாத உயர்ஜாதி ஆண வக் கூட்டம் இரவோடு இரவாக அம்பேத்கருக்கு விழா நடத்திய இளை ஞர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் முனுசாமி எனும் தோழர் (வயது 38) மருத்துவ உதவி பலனின்றி மரணம் அடைந்துள்ளார் என்பது என்னே கொடுமை!
அடித்தவர்கள் சூத் திரர்கள் அடிபட்டவர்கள் பஞ்சமர்கள் என்பதுதானே சமூக நிலை? இந்த இரு வரும் இந்து மதம் என்ற சூளையில் விறகாகப் பயன் படுத்தப்படுபவர்கள்தானே.
பார்ப்பனீயம் திணித் துள்ள ஜாதி அடுக்குமுறை (Graded in Equality) பற்றி அண்ணல் எவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறி யுள்ளார்!
பறையன் பட்டம் ஒழியாமல் உன் சூத்திரப் பட்டம் ஒழியவே ஒழியாது என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எடுத்துக் கூறவில்லையா?
இந்தத் தலைவர்கள் எதற்காகப் பாடுபட்டார்கள் என்பதை அறிய வேண் டாமா? இவர்களின் அய ராத தொண்டின் காரண மாக ஏதோ ஒரு வகையில் பயன் பெற்றவர்கள் அந்தத் தலைவர்கள் எடுத்துச் சொன்ன கொள்கை களைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?
இன்னும் சொல்லப் போனால் இந்து மத சாத்திரப்படி பஞ்சமர்கள் நான்கு வருணத்துக்குள் (டீரவ ஊயளவந) கொண்டு வரப்படாததால் அசிங்கத் திலிருந்து தப்பித்து விட் டனர். நான்கு வருணத் துக்குள் சிக்கிய சூத் திரனோ, பிர்மாவின் காலில் பிறந்த ஜாதி ஆக்கப் பட்டான்! சூத்திரன் என் றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்றுதானே பொருள்?
இந்த யோக்கியதையில் உள்ளவர்கள், தமக்கு மேல் உயர் ஜாதிக்காரன் எனும் தன்மையில் சூத்திரர்களின் தலையில் காலை வைத்து அழுத்திக் கொண்டிருப் பவன் பக்கம் தன்மான உணர்வின் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் முகத்தை வெளிப்படுத் தாமல், தமக்கும் கீழே பஞ்சமர் இருக்கிறார் என்ற போலி பெருமையுடன், அவர்களைத் தாக்குவது அறிவுடையோர் செயலும் அல்ல - மனித உரிமைத் தன்மையும் அல்ல!
- மயிலாடன்
ViDuthalai

suvanappiriyan said...

டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:
இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம். இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.
நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம். - இரவீந்திரநாத் தாகூர்
-Viduthalai
27-04-2012