Followers

Wednesday, April 04, 2012

'குன்பயகூன்' - அறிவியல் - ஏ.ஆர்.ரஹ்மான்!

6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.

2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.

19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.

كُن فَيَكُونُ குன்பயகூன் என்ற இந்த வார்த்தையை இறைவன் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்துகிறான். இறைவன் 'ஆகு' என்று சொன்னால் உடன் ஆகி விடும். இங்கு தனது வல்லமையை மனிதர்களுக்கு இறைவன் விளக்குகிறான். இன்றைய அறிவியல் இந்த வசனத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கிறது என்று பார்ப்போம்.

சிங்குலாரிட்டி என்பது என்ன?

'வினோதத் தன்மை' (SINGULARITY) என்பது நாம் அறிந்துள்ள அனைத்து அறிவியல் விதிகளும் தோற்கடிக்கப் படும் அல்லது பயன்படாத நிலையை அடையும் இடமே 'சிங்குலாரிட்டி' (வினோதத் தன்மை) ஆகும். பெரு வெடிப்பு எந்த மயிரிழை நேரத்தில் திடீரென நடைபெற்றதோ அந்தக் கணத்திற்குப் பின்னால் நிகழ்ந்த யாவும் நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு உட்பட்டவையாகும். ஆனால் அந்த கணத்திற்கு முன்னால் நிகழ்ந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளால் இயலவில்லை. தற்போது பேரண்டம் இயக்கப்படுகின்ற விதிகளையே நாம் அறிவோம். ஆனால் இந்த விதிகள் யாவும் பெரு வெடிப்புக்கு முன்னால் செயலற்றுப் போகிறது. மேலும் பெரு வெடிப்புக்கு முன் அது எப்படி நடைபெற்றிருப்பினும் அவற்றுக்கும் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே 'பெரு வெடிப்பு வினோதம்' (BIG BANG SINGULARITY) ஆகும்.

-'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்'(A BRIEF HISTORY OF TIME) பக்கம் 9

-அறிவியல் அறிஞர் ஹாக்கிங்.

இந்த இடத்தில் அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் கூற்றை சற்று சிந்தித்துப் பார்ப்போம். இந்த உலகின் காலம் தொடங்குவதே பெரு வெடிப்பில் இருந்துதான். பெரு வெடிப்பு என்று நிகழ்ந்ததோ அன்றிலிருந்துதான் காலம் தொடங்குகிறது. இதன் பொருள் பெரு வெடிப்புக்கு முன் காலம் இல்லை என்பது தெளிவாகிறது. பெரு வெடிப்புக்கு முன் அதை துல்லியமாக நிகழ்த்திக்காட்டியது யார்? என்ற கேள்வி இங்கு இயல்பாக நமக்குள் எழும்.

முன்பு 'பேரண்டம் என்றும் நிலையானது: மாற்றமில்லாதது: ஆதியோ அந்தமோ இல்லாதது: அது என்றென்றும் நிலைத்திருப்பது: அதற்கு ஒரு படைப்பாளன் தேவையில்லை:' என்றுதான் பல அறிஞர்களும் சொல்லி வந்தனர். 'மாறா நிலைக் கோட்பாடு' என்பதோடு இந்த கருத்து ஏறத்தாழ ஒத்து வரும். நாத்திகத்திற்கும் இந்த கருத்து வலு சேர்க்கும் விதமாக இருந்ததால் பலரும் இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர். அறிஞர் அரிஸ்டாட்டிலும் இந்தக் கருத்தை ஆதரித்தார்.

ஆனால் அறிஞர் ஐசக் நியூட்டன்(1672-1727) பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த பேரண்டம் இறைவன் என்ற ஒருவனின் துணையில்லாமல் உண்டாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். 'பிரின்ஸிப்பியர்' (Matthematical Principles Of Natural Philosophy) என்ற புகழ் பெற்ற நூலில் நியூட்டன் இந்த தகவலைத் தெரிவிக்கிறார். ஆனால் இந்த பேரண்டம் எவ்வாறு உருவானது? எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு அவரால் விடை காண முடியவில்லை.



இப்பேரண்டத்தின் வரலாற்றில் 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு கால கட்டம் இருந்துள்ளதாக அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு முன் அங்கு ஒரே ஒரு அணு 'ஒரு முழு முதல் அணு' இருந்ததாகவும் ஏதோ ஒரு காரணத்தால் வினாடியின் பல்லாயிரக்கணக்கான பகுதியில் ஒரு துளி நேரத்தில் அந்த அணு வெடித்துச் சிதறியதாகவும் கூறுகிறார்கள். அம்மாபெரும் வெடிப்பின்போது அந்த அணுவிலிருந்து கணக்கிட முடியாத பிரம்மாண்டமான ஆற்றல் வெளி வந்தது. பிறகு மெதுவாகப் படிப்படியாக அந்த ஆற்றலில் இருந்து விண்ணகப் பொருட்கள் யாவும் உருவாகின என லிமாயிட்டர் கருதுகிறார்.



பெரு வெடிப்பு நிகழ்ந்த நூறு வினாடிகளுக்குப் பிறகு டியூட்ரியம் எனும கன ஹைட்ரஜன் வாயுவின் மையக் கரு உருவாகி இருக்க வேண்டும் என்றும் அவை இணைந்து ஹீலியம் அணுவின் மையக் கரு உருவாகி இருக்கலாம். அவைகளிலிருந்து 'லிதியம்' மற்றும் 'பெரில்லியம்' போன்றவற்றின் தனிமங்கள் உருவாகி இருக்க வேண்டும். என்று அறிஞர் ஹாக்கிங் மேற்கண்ட புத்தகம் பக்கம் 124ல் கூறுகிறார்.

மேற்கண்ட தகவல்கள் பேரண்டம் அதன் துவக்க கட்டத்தில் விண்ணகப் பொருட்களாகிய காலக்சிகள், நடசத்திரங்கள், கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண் கற்கள் போன்ற எந்த பொருட்களுமே இல்லாத ஒரு சூன்ய நிலையிலேயே இருந்துள்ளதாக நாம் அறிகிறோம். பெரு வெடிப்புக்கு முன் மேற் கூறிய பொருட்கள் யாவும் முன்னரே தயாராக இருந்திருக்கவில்லை என்பதையும் இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இன்னொரு கேள்வியும் எழுகிறது. பெரு வெடிப்புக்கு முன் சூன்யமான அண்ட வெளியில் ஒன்றுமே இல்லை எனில் வெடித்த பொருள் எது என்பதாகும். இதற்கு ஹாக்கிங் 'பெரு வெடிப்பு நிகழ்ந்த போது இப்பேரண்டத்தின் பரிணாமம் பூஜ்யமாகும். அதன் வெப்பம் எல்லையற்றதுமாகும்' என்கிறார்.

-A Brief History of Time பக்கம் 123


பூஜ்யத்திலிருந்து அதாவது சூன்யத்திலிருந்து இம்மாபெரும் பேரண்டத்தை படைத்தது உருவாக்கியது யார்?

'விண்ணகத்தை நாம் வல்லமையைக் கொண்டு படைத்தோம்'
-குர்ஆன் 51:47

ஆம் இன்றைய அறிவியல் பெரு வெடிப்புக்கு முன்னால் திடீரென்று புறப்பட்ட ஒரு ஆற்றலின் மூலமே பெரு வெடிப்பு சாத்தியமானது என்பதை குர்ஆனும் மெய்ப்பிப்பதைப் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய உண்மையை வெகு சாதாரணமாக குர்ஆன் சொல்லிச் செல்வதை எண்ணி வியக்கிறோம். ஆற்றலின் வரைவிலக்கணம் கூட தெரியாத அன்றைய அரபுலகில் பிறந்த முகமது நபிக்கு இந்த உண்மைகள் எவ்வாறு தெரிய வந்தது?

-----------------------------------------------------------


குர்ஆனின் இந்த அருமையான வசனங்கள் இவ்வளவு அழகிய அறிவியல் விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்க நமது சூஃபி பிரியர்களில் சிலர் இதனை கவிதையாக வடிக்க அதை நம் ஏ.ஆர்.ரஹ்மானும் அருமையான பாடலாக கொடுத்துள்ளார். இசையும் பாடலும் சேரும்பொது அங்கு சிந்தனை அகன்று விடுவதைப் பார்க்கிறோம். 'குன்பயகூன்' என்ற வார்த்தையை இறைவன் ஏன் பயன்படுத்தினான்? அதன் அறிவியல் உண்மை என்ன என்பதெல்லாம் ரஹ்மானின் இசையோடு கூடிய பாடலில் நமமால் உணர முடியாது. ரஹ்மானின் இசையும் அப்பாடலின் ராகமும் தான் நம் மனதில் நிற்கும்.

//ஓ துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் //

இது போன்ற வார்த்தைகள் தர்ஹாவில் அடங்கியிருப்பவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்: நாம் கேட்கும் பல பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார் என்று நம்பி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

தர்ஹாவில் அடங்கியிருப்பவரின் சுய ரூபம் உங்களுக்கோ எனக்கோ தெரியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம். நித்தியானந்தாவைப் போல் மக்களுக்காக வெளிவேஷம் போட்டவராகவும் இருக்கலாம் உண்மை நிலை இறைவனுக்கே தெரியும்.

குர்ஆனில் வரக் கூடிய இந்த சொற்றொடரை தழுவி இந்த பாடல் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை இறைவனை நோக்கி பாடுவதாக சொன்னாலும் ஓரளவு அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் ஒரு தர்ஹாவுக்கு முன்னால் அமர்ந்து பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.



'உங்களின் இடத்திலே வந்து எனது தலையை வைக்கிறேன்' என்று மற்றொரு பாடலில் ரஹ்மான் பாடுகிறார். இறைவனைத் தவிர வேறு எவருக்கும் நமது தலையை கீழே வைக்கலாகாது என்பதை என்று ரஹ்மான் உணருவாரோ தெரியவில்லை.




============================================================


பதிவர் மலர் மன்னனைப் பற்றி பலரும் அறிந்திருப்போம். தமிழ் ஹிந்து மற்றும் திண்ணை வாசகர்களுக்கு அவர் நல்ல பரிச்சயம். இந்துத்வாவை தனது நரம்புகளிலெல்லாம் ஓட விட்டுக் கொண்டிருப்பவர். வர்ணாசிரமக் கொள்கையை இன்றும் ஆதரிப்பவர். இப்படிப்பட்டவர் முன்பு திண்ணையில் எழுதிய ஒரு வரியைப் படிப்போம்.

//‘கிருத்துவத்திலும் இசுலாத்திலும் ஆன்மிகம் என்பதே கிடையாது. அதாவது அம்மதங்கள் வெறும் வெத்துவேட்டுகள் என்றும் அம்மதங்களில் சேர்ந்தோர் நல்லவராகமாட்டார்கள்//

இது போன்ற ரீதியில்தான் அவரது பல கருத்துகளும் பின்னூட்டங்களும் இருக்கும். தற்போது இஸ்லாமியரிடத்தில் தவ்ஹீது பிரசாரம் அதிகமானதால் தர்ஹா வணக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. மூடப்பழக்க வழக்கங்கள் எல்லாம் ஒழிய ஆரம்பித்துள்ளன. இந்து மதத்துக்கு பெருத்த அச்சுறத்தலாக உள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம். மற்ற அனைத்தையும் இந்துத்வாக்குள் அடக்கி விட்டனர். மற்ற மதங்களைப்போல் இஸ்லாத்தையும் பத்தோடு பதினொன்றாக ஆக்க தர்ஹா வணக்கத்தை ஊக்கப்படுத்த தற்போது இந்துத்வா அதிக ஆர்வம் காட்டுகிறது. அதன் ஒரு வெளிப்பாடாக சமீபத்தில் மலர் மன்னன் வெளியிட்ட ஒரு பதிவின் ஒரு பக்கத்தைப் பார்ப்போம்.

//முகமதியம் ஸூஃபிகளை அங்கீகரிப்பதில்லை என்பதோடு அவர்களைச் சித்ரவதை செய்து கொல்லவும் செய்யும். எனது அனல் ஹக் கட்டுரையில் இதுபற்றி விரிவாகவே எழுதுகிறேன். ஸூஃபிகளைப் போற்றி வணங்கியது ஹிந்து சமூகம். ஹிந்துஸ்தானத்திற்கு வந்த பாதிப்பாலேயே முகமதியத்தைப் பரப்ப வந்த கரீப் நவாஸ் என்று பின்னர் அழைக்கப்பட்ட குவாஜா மொய்னுதீன் சிஸ்தி கூட ஒரு ஸூஃபி ஆகிவிட்டார். ஹிந்துக்கள் அவரைத் தம்மவராக வரித்துக் கொண்டனர். ராஜஸ்தான் அஜ்மீரில் உள்ள அவரது அடக்கத்தலம் சென்று வணங்கியுள்ளேன். ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துப் பாடிய ஜாவேத் அக்தர் எழுதிய க்வாஜா மேரே க்வாஜா என்ற பாடலை நான் கேட்டு உருகாத நாளே இல்லை.

ஸூஃபிகளை வணங்குதல் நமது சம்பிரதாயம். அவர்களை இழித்துப் பேசுவதும் கொடுமைப்படுத்துவதும் அடிப்படை வாத வஹாபிய முகமதியர் வழக்கம். ஸூஃபிகளும் சித்தர்களே. ஆனால் முகமதிய சட்டதிட்டங்கள் உள்ள இடங்களில் ஸூஃபிகளுக்கு இடமோ மரியாதையோ இல்லை.//

இந்துத்வாவாதி மலர் மன்னன் தர்ஹாவுக்காகவும் சூஃபி களுக்காகவும் எந்த அளவு வக்காலத்து வாங்குகிறார் பாருங்கள். அதாவது தர்ஹா வணக்கத்தை பிரபல்யப்படுத்தி குர்ஆனின் சட்டங்களை புறந்தள்ள வேண்டும் என்பதே இவர்களின் தற்போதய முக்கிய பணி. ஏனெனில் அந்த அளவு இஸ்லாமியரிடத்தில் தற்காலங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது இந்துத்வாவாதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. வர்ணாசிரமக் கொள்கை நொறுங்கி விழுவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதைத் தடுத்து நிறுத்த தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர். ஆனால் முடிவில் அவர்கள் அடையப் போவது தோல்வியே!

26 comments:

naren said...

நண்பரே,

தளம் பக்கம் வந்து ரொம்ப நாளாயிற்று -:)

பாவம் ஏ.ஆர்.ரஹ்மான், அவரை விட்டுவிடுங்கள், ப்ளீஸ்.
Big Bang to A.R.Rahman..ஆதிமுதல் அந்தம் வரை...நல்ல பதிவு.

பெரு வெடிப்பு கொள்கை, குரான் சொல்லப்பட்ட படைப்பு கொள்கை இருந்து எப்படி ஓத்து போகின்றது என்பதை பற்றி விரிவாக எளிமையாக பதிவு எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி

ராவணன் said...

எங்கள் ஊர் முனியாண்டி சாமியைத் தவிர்த்து வேறு எந்த இறைவனும் இருப்பதாக யாருக்கும் தெரியவில்லை.
அவர் ஒருவரே ஏக இறைவன்.

பெருவெடிப்பு..சிறு வெடிப்பு எல்லாம் அவரின் விளையாட்டே.

இறைவன் தூணிலும் இருப்பான்....
துரும்பிலும் இருப்பான் என்று இந்திய கதைகள் கூறுகின்றன.
உங்கள் ஏக இறைவன் எங்கே இருப்பார்?

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் ..சகோஸ்,
இதற்கு முன்பு கூட A.R.ரஹ்மான் ஐ டச் பண்ணி ஒரு பதிவு போட்டிங்க
அதற்கு நான் பின்னுட்டம் + ஒட்டு கூட போடவில்லை இப்பவும் அதே போல செய்ஞ்சு இருக்கீங்க ...!!
ஸுபி,மியூசிக் , ARR ...ETC, இதுகளையெல்லாம் போடுங்க பல்தியால(குப்பை)
சரி இங்கே த.ம திரட்டிய தவிர வேற திரட்டியில்லை அதுனாலே இப்போ "த.ம" ல பிளஸ் ஒட்டு போட்டிருக்கிறேன் இனிமேலும் "த.ம" இருந்தால் என் சார்பில் மைனஸ் ஒட்டு நிச்சயம் ....

ராவணன் said...

பிராமணர்களும் முஹமதியர்களும் ஒன்றே. இந்தியாவை சீர்குலைக்க வந்த தீய சக்திகள்.

தமிழ்நாட்டில் உங்கள் இருவரது பருப்பு வேகாது.

ராவணன் said...

பிராமணர்களும் முஹமதியர்களும் ஒன்றே. இந்தியாவை சீர்குலைக்க வந்த தீய சக்திகள்.

தமிழ்நாட்டில் உங்கள் இருவரது பருப்பு வேகாது.

suvanappiriyan said...

சலாம் சகோ நாசர்!

//இதற்கு முன்பு கூட A.R.ரஹ்மான் ஐ டச் பண்ணி ஒரு பதிவு போட்டிங்க
அதற்கு நான் பின்னுட்டம் + ஒட்டு கூட போடவில்லை இப்பவும் அதே போல செய்ஞ்சு இருக்கீங்க ...!!
ஸுபி,மியூசிக் , ARR ...ETC, இதுகளையெல்லாம் போடுங்க பல்தியால(குப்பை)
சரி இங்கே த.ம திரட்டிய தவிர வேற திரட்டியில்லை அதுனாலே இப்போ "த.ம" ல பிளஸ் ஒட்டு போட்டிருக்கிறேன் இனிமேலும் "த.ம" இருந்தால் என் சார்பில் மைனஸ் ஒட்டு நிச்சயம் ....//

சூஃபியிசம், ஏ.ஆர்.ரஹ்மான், தர்ஹா எல்லாம் குப்பை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கிறது. தெரியாத மக்கள் இதுதான் இஸ்லாம் என்று செல்ல ஆரம்பித்தால் இஸ்லாத்தின் ஆணி வேரான ஏக இறைக் கொள்கை அவர்களைப் பொருத்த வரையில் ஆட்டம் காண ஆரம்பித்து விடும். நன்மை என்று கருதி ஏன் தீமையை செய்து பாவத்தை சுமக்க வேண்டும்? இது தவறு என்று தெரிந்த நம்மைப் போன்றவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால் அவர்கள் செய்யும் தவறுக்கு அங்கீகாரம் கொடுத்தது போல் ஆகி விடும் அல்லவா?

//இப்போ "த.ம" ல பிளஸ் ஒட்டு போட்டிருக்கிறேன் இனிமேலும் "த.ம" இருந்தால் என் சார்பில் மைனஸ் ஒட்டு நிச்சயம் //

நான் முன்பே சொல்லியிருக்கிறேன். பின்னூட்டங்களையும் ஓட்டுக்களையும் எதிர்பார்த்து நான் எந்த பதிவையும் எழுதுவதில்லை. என் மனதுக்கும் இஸ்லாத்துக்கும் சரி என்று பட்டதை பதிவுகளாக இடுகிறேன். இதில் நீங்கள் பிளஸ் ஓட்டு குத்துவதோ மைனஸ் ஓட்டு குத்துவதோ உங்களின் விருப்பத்தைப் பொருத்தது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

நண்பர் நரேன்!

//பாவம் ஏ.ஆர்.ரஹ்மான், அவரை விட்டுவிடுங்கள், ப்ளீஸ்.
Big Bang to A.R.Rahman..ஆதிமுதல் அந்தம் வரை...நல்ல பதிவு.//

ஏ.ஆர்.ரஹ்மானை தர்ஹா வணக்கத்தை விட்டுவிடச் சொல்லுங்கள். அவரை நானும் விட்டு விடுகிறேன். :-)

//பெரு வெடிப்பு கொள்கை, குரான் சொல்லப்பட்ட படைப்பு கொள்கை இருந்து எப்படி ஓத்து போகின்றது என்பதை பற்றி விரிவாக எளிமையாக பதிவு எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.//

முயற்ச்சிக்கிறேன். இறைவன் நாட்டம் இருப்பின் பதிவாக இடுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ராவணன்!

//எங்கள் ஊர் முனியாண்டி சாமியைத் தவிர்த்து வேறு எந்த இறைவனும் இருப்பதாக யாருக்கும் தெரியவில்லை.
அவர் ஒருவரே ஏக இறைவன்.//

அப்படியா..... சொல்லவே இல்ல.:-)

அன்பே உருவான கடவுளை கையில் அருவா வெல்லாம் கொடுத்து ஏன் சார் சின்னபிள்ளைகளை பயமுறுத்துறீங்க..... எங்க வீட்டில நான் சிறு வயதில் சுட்டித் தனம் செய்தால் 'முனியாண்டி சாமிகிட்டே புடுச்சு கொடுத்துடுவேன்' என்று பயமுறுத்துவதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது.

சிராஜ் said...

/*ஆனால் முடிவில் அவர்கள் அடையப் போவது தோல்வியே! */

இன்ஷா அல்லாஹ்....
அதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிராஜ் said...

/* தமிழ்நாட்டில் உங்கள் இருவரது பருப்பு வேகாது. */

பருப்பு வேகாமத்தான் 15 % முஸ்லிம்கள் இருக்காங்களா சகோ ராவணன்????

பருப்பு இன்னும் நல்லா வெந்து இருக்கும் சகோ, நாங்கல்லாம் உண்மை முஸ்லிமா வாழ்ந்து இருந்தா. முஸ்லிம்கள் நிறைய பேர் இஸ்லாமிய
கொள்கைகள சரியா கடை பிடிக்காம மனம் போன போக்குல போனதால்தான் சரியா வேகல.

இறைவனின் மாபெரும் கிருபையால்
குறிப்பிட தக்க அளவு மாற்றங்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இளைஞர் களிடம். இதன் தாக்கத்தை நீங்கள் 30 வருடங்களில்
உணர்வீர்கள். அப்ப பருப்பு நல்லா வேகமா வேகும் சகோ. அவ்வளவு ஏன்??? நீங்களே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.

சொல்றது காமெடியா இருக்கா??? ஹி..ஹி..ஹி.. இஸ்லாமிய வரலாற்றை எங்களை எதிர்ப்பதர்க்காகவாவது படித்து பாருங்கள். யாரெல்லாம் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தார்களோ அவர்கள் தான் பின் நாட்களில் அதன் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துள்ளார்கள்.

உதாரணம் : 2 வது கலீபா உமர் ரலி மற்றும் அல்லாஹ்வின் போர் வாள் என்று அழைக்கப்பட்ட காலித் பின் வலீத்.

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//பருப்பு வேகாமத்தான் 15 % முஸ்லிம்கள் இருக்காங்களா சகோ ராவணன்????

பருப்பு இன்னும் நல்லா வெந்து இருக்கும் சகோ, நாங்கல்லாம் உண்மை முஸ்லிமா வாழ்ந்து இருந்தா. முஸ்லிம்கள் நிறைய பேர் இஸ்லாமிய
கொள்கைகள சரியா கடை பிடிக்காம மனம் போன போக்குல போனதால்தான் சரியா வேகல.

இறைவனின் மாபெரும் கிருபையால்
குறிப்பிட தக்க அளவு மாற்றங்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இளைஞர் களிடம். இதன் தாக்கத்தை நீங்கள் 30 வருடங்களில்
உணர்வீர்கள். அப்ப பருப்பு நல்லா வேகமா வேகும் சகோ. அவ்வளவு ஏன்??? நீங்களே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.//

ஆஹா.... அருமையான அதுவும் பக்குவப்பட்ட நிதர்சனமான பதில். ராவணன் வரும் காலத்தில் உண்மையை உணர்ந்து கொள்வார்.

பிராமணர்கள் அவர்களிடம் போட்ட ஆட்டத்தைப் பார்த்து உலக இறை மார்க்கங்களெல்லாம் இப்படித்தானோ என்ற தவறான புரிதலுக்கு வந்துள்ளார் ராவணன். இவரைப் போன்றவர்களுக்கு நமது மார்க்கத்தை இதுவரை கொண்டு செல்லாதது நம்மவர்களின் குற்றமும் கூட.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ சிராஜ்.

Nasar said...

சகோ ராவணன் அவர்களின் பின்னுட்டங்களை பார்த்தால், அவருடைய எந்த மண்டையிலும் (9 தல) மசாலா இல்லையென்றே தெரிகிறது ....
நாம சீரியசாக பின்னுட்டமிடும் போது, இதுபோல(ராவணன்) காமெடியும்
தேவை..SO, MR.ராவணன் சார் உங்க ஜோலிய இன்னும் நல்லா செய்ங்க ...
ஏன் முனியாண்டி சாமிய மட்டும் கூப்பிடுறீங்க ..!! மத்த சாமிங்க கோவிசுக்கபோறாங்க....ஓரவஞ்சனை செய்யாதீங்க ...
ஒருவேளை முனியாண்டி சாமி உங்க பாவரிட் சாமியோ !! போச்சுடா
சாமிகளிலும் பாவரிட் பார்க்கிற ஆசாமியா நீங்க !!??
எதுஎதில பாவரிட் பார்க்கிற விவஸ்தையே இல்லையா ..!!??
சரி சரி நடத்துங்க உங்க தர்பார .... ஆமா நீங்க பிலாக்கராமே ..!!??
விலாசத்த கொடுங்க, உங்க டமாஸ் எப்படி கீதுன்னு அங்க பார்க்கலாம் ... ரொம்ப டமாஸா கீது உங்கள பார்த்தா....ஹஹா ஹஹா ... .

Anonymous said...

//பெரு வெடிப்பு கொள்கை, குரான் சொல்லப்பட்ட படைப்பு கொள்கை இருந்து எப்படி ஓத்து போகின்றது என்பதை பற்றி விரிவாக எளிமையாக பதிவு எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.//

எதுக்கு? அண்ணன் ஸாரி சகோ எழுதுறத வைச்சே அவங்க டவுசரை உருவறதுக்கா? விவகாரம் புடிச்ச ஆளய்யா நீர்!

Anonymous said...

To Mr Suvanap piriyan

1.என்னங்க மூமின் இது குன்யகூன் என்றால் ஆகுக என்று சொன்னீங்க சரி

2.அப்புறம் சிங்குலாரிட்டி பற்றி விள்க்கினீர்கள்

3.இரண்டுக்கும் என்ன தொடர்பு?

4.குன்யக்கீன் என்னும் வார்த்தைக்கு சிங்குலாரிட்டி என அர்த்தம் உண்டு என சொல்ல வருகிறீர்களா?.

5.இதைதான் அல்லா சொல்ல வந்தார்,முகமது சொல்ல நினைத்து கூறிய‌து என்று சொல்கிறீர்களா?

6. சைத்தான் வழக்கம் போல் வசன‌த்தை மாற்றி விட்டானா? சிங்குலாரிட்டி க்குப் பதில் ஆகுக என்று மாற்றி விட்டானா?

7.தம்மாத்தூண்டு பூமிக்கு எதுக்கு இம்மாம பெரிய பிரபஞ்சம் இது குறித்து விள்க்க குரானில் வ‌சனம் உண்டா.அண்ணன் பீ .சே! மாதிரி நாடியதை செய்கிரான் என்று மட்டும் சொல்லக் கூடாது.(இது எப்புடி!)

8. இன்னும் பல் பிரபஞ்சக் கொள்கையில் தினமும் பல பெருவெடிப்பு நடந்து கிட்டே இருக்கிறது என்று காஃபிர் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இது காஃபிர்களின் சதியா?இந்த பலப்பல் பெருவெடிப்புகள் நடக்கிறதா? நடத்துவது யார் ? ஏன் எத்ற்கு?

9.ஒருவேளை வேற்று கிரகங்களில் உயிர்கள் உண்டா கேள்விக்கு அண்ணன் பீ.சே! வானத்தில் உள்ளோரும் என்று வருவதால் இருக்கிறார்கள் என்று அடித்து விட்டி விட்டார்? அவர்கள் மனிதர்களா இல்லை மல்க்குகளா?

10.எபோது ,எப்ப்டி ஜின்கள் இருப்பதை அறிவியல் காட்டி விள்க்குவீர்கள் என் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

11.ஹூரிகள்,கில்மான்கள் இவ்வுலகிலேயே இருக்க முடியும் என ஏதாவது பரிசோதனை முயற்சி செய்து பார்த்த அனுபவம் உண்டா?

ஜூவனப்பிரியன் இரசிகன்

suvanappiriyan said...

திரு அனானி!

//1.என்னங்க மூமின் இது குன்யகூன் என்றால் ஆகுக என்று சொன்னீங்க சரி

2.அப்புறம் சிங்குலாரிட்டி பற்றி விள்க்கினீர்கள்

3.இரண்டுக்கும் என்ன தொடர்பு?

4.குன்யக்கீன் என்னும் வார்த்தைக்கு சிங்குலாரிட்டி என அர்த்தம் உண்டு என சொல்ல வருகிறீர்களா?.

5.இதைதான் அல்லா சொல்ல வந்தார்,முகமது சொல்ல நினைத்து கூறிய‌து என்று சொல்கிறீர்களா?

6. சைத்தான் வழக்கம் போல் வசன‌த்தை மாற்றி விட்டானா? சிங்குலாரிட்டி க்குப் பதில் ஆகுக என்று மாற்றி விட்டானா?//

பதிவை இன்னொரு தரம் நன்றாக படித்தீர்கள் என்றால் 6 கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். சிங்குலாரிட்டி என்றால் என்ன என்று விளக்கியுமிருக்கிறேன். அறிவியலால் இன்று வரை பெரு வெடிப்புக்கு முன்பு இந்த பிரபஞ்சம் என்ன நிலையில் இருந்தது என்பதை விளக்க முடியவில்லை. திடீரென்ற ஒரு ஆற்றல் வெளிப்பட்டு பெரு வெடிப்பு நிகழ்ந்ததாக இன்றைய அறிவியல் கூறுகிறது. அந்த ஆற்றலுக்கு சொந்தக்காரன் அல்லாஹ் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். அத்தகைய ஆற்றலை தானே உண்டாக்கியதாக இறைவன் குர்ஆனில் கூறகிறான். இதைத்தான் இந்த பதிவும் சொல்கிறது.

//7.தம்மாத்தூண்டு பூமிக்கு எதுக்கு இம்மாம பெரிய பிரபஞ்சம் இது குறித்து விள்க்க குரானில் வ‌சனம் உண்டா.அண்ணன் பீ .சே! மாதிரி நாடியதை செய்கிரான் என்று மட்டும் சொல்லக் கூடாது.(இது எப்புடி!)//
அவர்கள் நின்றும் அமர்ந்தும் படுத்த நிலையிலும் இறைவனை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். 'எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன்: எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக' என்று அவர்கள் கூறுவார்கள்.

-குர்ஆன்: 3:191

சூரியனும் சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன. மரங்களும் செடி கொடிகளும் அவனுக்குப் பணிகின்றன. அவன் வானத்தை உயர்த்தினான். நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள் என்று தராசையும் நிறுவினான்.
-குர்ஆன் 55: 5,6,7,8

மேற்கண்ட இரண்டு வசனங்களில் இருந்து எதையுமே வீணுக்காகப் படைக்கவில்லை என்று இறைவன் குர்ஆனில் கூறுகிறான். பூமியை மடடும் படைத்திருந்தால் இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நிலை நிறுத்த முடியாது. அதை பேலண்ஸ் செய்வதற்காக மற்ற கோள்களின் அவசியம் ஏற்படுகிறது. எனவே அவற்றை படைத்து தராசை நிறுவி சரி செய்துள்ளதாக இறைவன் கூறகிறான். இன்னும் நாம் கண்டுபிடிக்காத பிரபஞ்சங்கள் நிறைய உண்டு. இவை எல்லாம் மனிதனின் அறிவுத் திறனை வளர்க்க இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகளாகும். இனி வரும்காலங்களில் மற்ற கோள்களின் தேவை ஏற்படலாம். மனிதன் கண்டபிடிப்புக்கு எல்லை ஏது?

//8. இன்னும் பல் பிரபஞ்சக் கொள்கையில் தினமும் பல பெருவெடிப்பு நடந்து கிட்டே இருக்கிறது என்று காஃபிர் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இது காஃபிர்களின் சதியா?இந்த பலப்பல் பெருவெடிப்புகள் நடக்கிறதா? நடத்துவது யார் ? ஏன் எத்ற்கு?//

இனிமேல் எந்த வெடிப்புகளும் பிரபஞ்சத்தில் நடக்காது என்று குர்ஆனில் எங்கும் சொல்லவில்லையே! அப்படி தற்போது நடப்பதும் ஏக இறைவனின் செயலே!

போதிவர்மா said...

உங்கள் கொட்டம் அடக்காது விடமாட்டோம் போதி புகழ் ஒங்குக.

suvanappiriyan said...

திரு அனானி!

//9.ஒருவேளை வேற்று கிரகங்களில் உயிர்கள் உண்டா கேள்விக்கு அண்ணன் பீ.சே! வானத்தில் உள்ளோரும் என்று வருவதால் இருக்கிறார்கள் என்று அடித்து விட்டி விட்டார்? அவர்கள் மனிதர்களா இல்லை மல்க்குகளா?//

உயிரினங்கள் வேற்று கிரகங்களிலும் உண்டு. ஆனால் அவை பூமியில் உள்ள உயிரினங்கள் போல் இருக்காது. மற்ற கோள்களின் தட்ப வெப்ப நிலையை தாங்க்க கூடிய சக்தி வாய்ந்தவைகளாக அந்த உயிரினங்கள் இருக்கும். இது பற்றி முன்பு ஒரு பதிவே எழுதியிருக்கிறேனே!

//10.எபோது ,எப்ப்டி ஜின்கள் இருப்பதை அறிவியல் காட்டி விள்க்குவீர்கள் என் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.//

குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல நண்பரே! எந்த சலனமும் இல்லாமல் போகிற போக்கில் ஆங்காங்கே அருமையான அறிவியல் துணுக்குகளை அலட்சியமாக தெளித்து விட்டு செல்வது குர்ஆனின் நடை. இது முகமது நபி கற்பனையாக கூறியிருக்க முடியாது என்பதை நிரூபிக்கவே இது போன்று ஒரு சில விளக்கங்களை அறிவியலோடு பொருத்துகிறோம்.

மலக்குகளையும் ஜின்களையும் பார்த்துதான் ஒருவன் இறை நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த பூமி வானம் கோள்கள், உயிரினங்கள் இவற்றை எல்லாம் ஒருவன் சிந்தித்தாலே இறைவனின் ஆற்றலை உணர்ந்து கொள்ள முடியும்.

இப்பொழுதே பார்க்க ஆசையிருந்தால் மரணிப்பவருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கும். அது வரை பொறுமையாக இருங்களேன்.

//11.ஹூரிகள்,கில்மான்கள் இவ்வுலகிலேயே இருக்க முடியும் என ஏதாவது பரிசோதனை முயற்சி செய்து பார்த்த அனுபவம் உண்டா?//

குர்ஆன் தெளிவாக இவை அனைத்தும் சொர்க்கத்தில் தரப்படுவதாக சொல்கிறது. சொர்க்கத்தை நீங்களும் அடைய நம் முன்னோர்களின் மார்க்கமான 'ஒன்றே குலம் ஒருவனே தேவனுக்கு' வந்து விடுங்கள். பிறகென்ன...அருமையான சாப்பாடு: அருமையான துணைகள்: நிரந்தர இன்பத்துக்கு நீங்கள் தயாராக வேண்டாமா? இதற்காக இந்த உலகத்தில் வாழும் நாட்களில் இறைவனின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். வட்டி, பொய், களவு, கொலை, விபசாரம், போன்ற பெரும் பாவங்களை தவிர்த்து ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுதும் வந்தால் அனைத்து சுகங்களையும் சொர்க்கத்தில் பெறலாம். குர்ஆன் அதற்கு உத்தரவாதம் தருகிறது.

'நான் ரெடி! நீங்க ரெடியா?' :-)

suvanappiriyan said...

// 7.தம்மாத்தூண்டு பூமிக்கு எதுக்கு இம்மாம பெரிய பிரபஞ்சம் இது குறித்து விள்க்க குரானில் வ‌சனம் உண்டா.//

There are many other balances established on earth for the continuity of life:

For instance, if the surface gravity were stronger than its current value, the atmosphere would retain too much ammonia and methane gasses, which would mean the end of life. If it were weaker, the planet’s atmosphere would lose too much water, and life on earth would be impossible.
The thickness of the earth’s crust constitutes another one of the delicate balances in the earth. If the earth’s crust were thicker, too much oxygen would be transferred from the atmosphere to the crust and this would have severe effects on human life.
If the opposite were true, that is, if the earth’s crust were thinner, volcanic and tectonic activity would be too great to permit life on earth.

Another crucial balance for human life is the ozone level in the atmosphere. If it were greater than its current value, the surface temperatures would be too low. If it were less, surface temperatures would be too high, and there would be too much ultraviolet radiation at the surface.

In fact, the absence of even a single of these balances would set the end to life on earth. However, God has created the universe with infinite wisdom and power and designed the earth specially for human life. Despite this fact, the majority of people lead their lives in total ignorance of these events. In the Qur’an, God reminds people of His blessings in the 13th verse of Surat al-Fatir:
It is sufficient look at millions of dead planets in space in order to understand that the delicate balances required for life on earth is not a result of random coincidences. The conditions essential for life are too complicated to have been formed “on their own” and at random, and these conditions are specially created for life alone.
These balances we have briefly described so far are only a few of the millions of intricate, interrelated balances and orders established so that people can live in peace and safety on the earth.

Examining only a part of the balances and harmony on the earth is enough to comprehend the superior being of God and grasp the existence of a planned creation in every detail of the universe. It is no doubt impossible for a person or any other living being to build such an enormous balance and order. Nor are the components of this order such as atoms, elements, molecules, and gasses capable of establishing an order based on such intricate and extremely delicate calculations and measurements, and such fine tunings. This is because activities like planning, ordering, arranging, calculating, and proportioning can only be realized by beings that possess wisdom, knowledge and power. The Exalted Being Who orders, plans and balances the entire universe to be fit for life of human beings on a planet like earth and Who sustains it with dramatically delicate measures and balances is God, Who has Infinite Wisdom, Knowledge and Power.

In the Qur’an, it is stated that those people who are able to realize these facts are only “people with intelligence”:
“In the creation of the heavens and the earth, and the alternation of night and day, there are Signs for people with intelligence: those who remember God, standing, sitting and lying on their sides, and reflect on the creation of the heavens and the earth: ‘Our Lord, You have not created this for nothing. Glory be to You! So safeguard us from the punishment of the Fire.” Holy Q’uran[Al-i-’Imran 3:190-191]

God has created the universe with infinite wisdom and power and designed the earth specially for human life.

suvanappiriyan said...

நண்பர் போதி தர்மன்!

//உங்கள் கொட்டம் அடக்காது விடமாட்டோம் போதி புகழ் ஒங்குக.//

அடக்க நினைத்தவர்களெல்லாம் குர்ஆனுக்கும் முகமது நபிக்கும் முன்னால் அடங்கியதாகத்தான் வரலாறு. அந்த நேரம் உங்களுக்கும் சிக்கிரமே வர பிரார்த்திக்கிறேன். அதாவது ஏக இறையை ஏற்க பிரார்த்திக்கிறேன்.

'மக்கள் உங்களுக்கு எதிராக திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. 'எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்: அவன் சிறந்த பொறுப்பாளன்' என்று அவர்கள் கூறினர்.

-குர்ஆன் 3:173

Anonymous said...

//பெரு வெடிப்பு கொள்கை, குரான் சொல்லப்பட்ட படைப்பு கொள்கை இருந்து எப்படி ஓத்து போகின்றது என்பதை பற்றி விரிவாக எளிமையாக பதிவு எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.//

முயற்ச்சிக்கிறேன். இறைவன் நாட்டம் இருப்பின் பதிவாக இடுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!//////


சகோ இப்படி நீங்கள் குரானின் அறிவியல் உண்மைகளை இப்படி இறை மறுப்பாளருக்கும் சேர்த்து தெரியும் வண்ணம் எழுதி வருவது எமக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. மேற்குலகின் காபிர் விஞ்ஞானிகள் (விஞ்ஞானிகள் என்றாலே பத்திகிட்டு எரியுது. என்ன தகிரியமிருந்தால் குரானுக்கெதிராக பரிணாமக் கோட்பாட்டை கண்டுபிடித்து பரப்புவானுகள், சைத்தான் கி பச்சோ)காட் பார்டிக்கிளை கண்டுபிடிச்சோம், பிக்பாங்க் என நேரில் கண்டது போல் பீலா விடுவது தாங்கள் அறிந்ததே. ஆனால் குரானில் உலகம் தோன்றிய ரகசியத்தை இறைவன் வெளிப்படுத்தியுள்ளதை விஞ்ஞானிகள் அறியமாட்டார்கள் ஏனெனில் அவர் அஞ்ஞானிகள். அந்த ரகசியங்களை இறைவனின் வார்த்தையான குரானிலிருந்து கண்டறிந்து நோபல் பரிசு வாங்கி விஞ்ஞானிகளுக்கு பல்பு தரும் ஒரே லட்சியத்துடன் உழைத்து கொண்டிருக்கிறேன், இன்ஷா அல்லாஹ். அதுக்கு முன்னால் இணையத்தில் குரானில் வெளிப்படுப்பட்டுள்ள அறிவியல் குறித்து எழுதிவரும் அறிஞர் பெருமக்களான தாங்களும் மற்ற மார்க்க எழுத்தாளர்களும் இவற்றினை குறித்து எழுதவேண்டாம் என கேட்டுக்கொள்ளகிறேன்.

இப்போது எமது பெயரைக்கூட வெளியிட விரும்பயில்லை. அதனால் அநாநமஸ் பின்னூட்டமிடுகிறேன். ஒருநாள் உலகின் ஆரம்பம் குறித்துத்தான செய்தி குரானிலிருந்து கிட்டும். அப்போது எமது பெயரும் வெளிவரும். அகில உலகமும் அந்நாளில் புனித நகரினை நோக்கி மண்டியிடும். இது நடக்கத்தான் போகிறது, இன்ஷா அல்லாஹ்.

suvanappiriyan said...

சகோ அனானி!

//(விஞ்ஞானிகள் என்றாலே பத்திகிட்டு எரியுது. என்ன தகிரியமிருந்தால் குரானுக்கெதிராக பரிணாமக் கோட்பாட்டை கண்டுபிடித்து பரப்புவானுகள், சைத்தான் கி பச்சோ)காட் பார்டிக்கிளை கண்டுபிடிச்சோம், பிக்பாங்க் என நேரில் கண்டது போல் பீலா விடுவது தாங்கள் அறிந்ததே.//

பரிணாமக் கோட்பாடு என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை அல்ல. இன்று வரை எப்படியாவது நிரூபித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் பல விஞ்ஞானிகளுக்கு பரிணாமக் கோட்பாடு வெறும் பீலா என்பது தெரியும்.. தெரிந்தும் ஏன் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே! உண்மையை ஒத்துக் கொண்டால் பல அரசாங்கங்கள் ஆராய்ச்சிக்காக கொடுக்கும் பல கோடி டாலர் மான்யத்தை நிறுத்தி விடும். இதற்காக ஆராய்ச்சியில் ஈடுபடும் பல விஞ்ஞானிகள் வேலை இழக்க நேரிடும். எனவே இவர்கள் அரசை ஏமாற்ற அங்கொன்றும் இங்கொன்றுமாக பல படிமங்களை சேகரித்து தங்கள் கற்பனைக்கேற்ப ஒட்டிக் கொள்வார்கள். இப்படியே அவர்களின் காலமும் ஓடுகிறது. பாவம் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா! :-)

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உலக முடிவு நாள் வரையில் அவர்களால் பரிணாமக் கோட்பாட்டை நிரூபிக்க முடியாது.

//ஆனால் குரானில் உலகம் தோன்றிய ரகசியத்தை இறைவன் வெளிப்படுத்தியுள்ளதை விஞ்ஞானிகள் அறியமாட்டார்கள் ஏனெனில் அவர் அஞ்ஞானிகள். அந்த ரகசியங்களை இறைவனின் வார்த்தையான குரானிலிருந்து கண்டறிந்து நோபல் பரிசு வாங்கி விஞ்ஞானிகளுக்கு பல்பு தரும் ஒரே லட்சியத்துடன் உழைத்து கொண்டிருக்கிறேன், இன்ஷா அல்லாஹ். அதுக்கு முன்னால் இணையத்தில் குரானில் வெளிப்படுப்பட்டுள்ள அறிவியல் குறித்து எழுதிவரும் அறிஞர் பெருமக்களான தாங்களும் மற்ற மார்க்க எழுத்தாளர்களும் இவற்றினை குறித்து எழுதவேண்டாம் என கேட்டுக்கொள்ளகிறேன்.//

இப்படி உண்மையை போட்டு உடைத்து விட்டால் இஸ்லாம் வேகமாக பரவி விடும் என்று அச்சம் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் இந்த குர்ஆன் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானது அன்று. உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. எனவே நீங்கள் மட்டும் நோபல் பரிசு என்ற பல்பு வாங்குவதை விரும்பவில்லை. உலக மக்கள் அனைவருக்கும் அதை பகிர்ந்து கொடுக்க விரும்புகிறேன். காஃபிர் விஞ்ஞானிகள் பல்பு வாங்கினாலும் அவரும் எனது சகோதரர்தானே! :-)

//இப்போது எமது பெயரைக்கூட வெளியிட விரும்பயில்லை. அதனால் அநாநமஸ் பின்னூட்டமிடுகிறேன். ஒருநாள் உலகின் ஆரம்பம் குறித்துத்தான செய்தி குரானிலிருந்து கிட்டும். அப்போது எமது பெயரும் வெளிவரும். அகில உலகமும் அந்நாளில் புனித நகரினை நோக்கி மண்டியிடும். இது நடக்கத்தான் போகிறது, இன்ஷா அல்லாஹ்.//

இந்த பின்னூட்டத்தை ஹாஸ்யமாக நினைத்து நீங்கள் வெளியிட்டாலும் பின்னாளில் உண்மையிலேயே குர்ஆனின் உண்மை உங்களுக்கு தெரிய வரலாம். அப்போது உண்மையிலேயே நோபல் பரிசு என்ற பல்பும் வாங்கலாம். அது இறைவனின் சித்தம். வாழ்த்துக்கள்.

Anonymous said...

//இந்த பின்னூட்டத்தை ஹாஸ்யமாக நினைத்து நீங்கள் வெளியிட்டாலும் பின்னாளில் உண்மையிலேயே குர்ஆனின் உண்மை உங்களுக்கு தெரிய வரலாம். அப்போது உண்மையிலேயே நோபல் பரிசு என்ற பல்பும் வாங்கலாம். அது இறைவனின் சித்தம். வாழ்த்துக்கள்.//

நீங்களுமா இப்படி? எமது தியரியை விளக்கும் போது எமது நண்பர்கள்தான் சிரித்துவிடுவார்கள் என பார்த்தால் அல்லாஹின் அருளாசி பெற்றவரான தாங்களும் ஹாஸ்யம் என சொல்லிவிட்டீரே. ஐயகோ! நானோ, சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு என போய்க்கொண்டே இருக்கிறேன்.

ஆனாலும் வாழ்த்துக்கு நன்றி. உமது வாழ்த்துடன் எல்லாம் வல்லோனின் கருணையுமிருந்தால் எதுவும் நடக்கும். அல்லாஹு அகபர்!

naren said...

நண்பர் சுவனப்பிரியன்,

உங்களை பார்த்தால் பெருமையாக இருக்கின்றது. இந்த பதிவை தமிழ்நாட்டு மக்கள் தான் படிக்கிறார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் சர்தாரியே படிக்கிறார் என்று அறிந்தவுடன் மெய்சிலிர்த்து போனேன்.

சூஃபிஸம் எதிராக பதிவு போட்டவுடன் பொங்கி எழுந்து அஜ்மீர் தர்காவுக்கு ஒரு படையுடன் பயணமே மேற்கொண்டுள்ளார். ஒரு வேளை சூஃபிஸம் பார்ப்பனர்களின் சதி என்று உங்கள் பதிவு மூலம் தப்பாக புரிந்து கொண்டுள்ளார் போலும். அப்படி அல்ல அது இஸ்லாமியர்களின் சதி என்று காட்ட வந்திருப்பார் போலும். தப்பான மொழிப்பெயர்ப்பை அளித்துள்ளார்கள்.

வார்த்தைகளால் விவரிக்கமுடியாத Great spiritual experience என்று சொல்லி 5 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார் (மிஸ்டர்10% க்கு இது ஒரு டிப்ஸ்).

அப்படி என்னத்தான் இருக்கு என்று அஜ்மீருக்கு ஒரு நடை போய்ட்டு வந்திரவேண்டியதுதான்.

suvanappiriyan said...

சகோ நரேன்!

//வார்த்தைகளால் விவரிக்கமுடியாத Great spiritual experience என்று சொல்லி 5 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார் (மிஸ்டர்10% க்கு இது ஒரு டிப்ஸ்).//

'தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து இத்தூதரான முஹம்மத் உண்மையாளர் என்று விளங்கி நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு இறைவன் எவ்வாறு நேர்வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்துக்கு இறைவன் நேர்வழி காட்ட மாட்டான்'
-குர்ஆன் 3:86

இறை சட்டத்தை இறை வசனத்தை கொண்டுதான் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை இது என்று விளங்கியும் இறைவனுக்கு இணை வைக்கும் செயலை ரஹ்மான் செய்தாலும் ஆஷிப் சர்தாரி செய்தாலும் தவறுதான். விளங்கிய கூட்டம் தவறு செய்தால் இறைவன் அதிக கோபம் அடைகிறான்.

//அப்படி என்னத்தான் இருக்கு என்று அஜ்மீருக்கு ஒரு நடை போய்ட்டு வந்திரவேண்டியதுதான்.//

'இறைவா! அவர்கள் உயிரிப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!' என்று சாத்தான் கேட்டான். 'குறிப்பிட்ட நேரம் வரும் நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்.' என்று இறைவன் கூறினான்.

'என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் தீமைகளை அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் வழி கெடுப்பேன்' என்று கூறினான்.

-குர்ஆன் 15:36,37,38,39

மசூதிகளில் ஒரு நாளைக்கு ஐந்து முறை 'இறைவனை தொழ வாருங்கள்' 'வெற்றியின் பக்கம் வாருங்கள்' என்று பலமுறை அழைப்பு விடுத்தாலும் இந்த காதில் வாங்கி மற்ற காது வழியாக விட்டு விடுகிறீர்கள்.

ஆனால் அஜ்மீர் தர்ஹாவிலோ நாகூர் தர்ஹாவிலோ யாரும் அழைப்பதில்லை. 'தர்ஹாவுக்கு தொழ வாருங்கள்' என்று ஸ்பீக்கரில் அழைப்பும் கொடுப்பதில்லை. இதற்காக அமைப்புகள் எதுவும் பிரசாரத்திலும் ஈடுபடுவதில்லை. ஆனாலும் பாருங்கள் ஒரு முறை அஜ்மீருக்கு போய் தரிசனம் செய்ய வேண்டும் என்று உங்கள் மனம் சொல்கிறதல்லவா! இங்குதான் சாத்தான் வெற்றி பெற்று விட்டான்.

'பூமியில் தீமைகளை அழகாக்கிக் காட்டுவேன்' என்ற சாத்தானின் சபதம் நரேன் மூலமாக நிறைவேறுவதை எண்ணி வியக்கிறேன். குர்ஆனின் வாக்கு நரேன் மூலமாக ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

suvanappiriyan said...

http://www.inneram.com/news/central-east-news/18-years-without-salary-tamilan-rescued-from-saudi-arabia-4240.html


சவூதியில் கடந்த பதினெட்டு வருடங்களாக அடிமையாகவும், அநாதரவாகவும் அலைகழிக்கப்பட்ட அப்பாவி தமிழகத் தொழிலாளி ஒருவருக்கு ஒருவழியாகத் தீர்வு கிடைத்துள்ளது.

சவூதியின் ஹைல் மாகாண ஆளுநர் இளவரசர் சவூத் பின் அப்துல் முஹ்சின் என்பவருடைய தலையீட்டால் பெரியசாமி என்னும் அந்தத் தமிழர் கஃபீல் எனப்படும் பொறுப்பாளரிடமிருந்து 85,000 ரியால்களை ஒட்டுமொத்தச் சம்பளமாகப் பெற்று ஊர்திரும்ப வழி ஏற்பட்டுள்ளது. ஜெத்தாவிலுள்ள இந்தியத் துணை தூதரகத்தில் அவருக்கான இத்தொகையை ஷாம்லி காவல் நிலையத்தார் ஒப்படைத்துள்ளனர்.

45 வயதான பெரியசாமியை துன்பத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்க உதவிய ஹைல் மாகாண கவர்னருக்கு இந்திய கான்சல் ஜெனரல் ஃபைஸ் அகமது கித்வாய் வெளிப்படையாக தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். "ஹைல் மாகாண கவர்னரின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், பெரியசாமி தன் துன்பச்சுரங்கத்தின் முடிவில் ஒளியைப் பார்த்திருக்க முடியாது," என்று ஃபைஸ் அஹமது சொன்னார்.

நன்றியறிவித்தலின் அடிப்படையில் ஹைல் மாகாண கவர்னருக்கு ஒரு தனிப்பட்ட கடிதத்தை அனுப்ப உள்ளதாகவும் ஃபைஸ் அகமது கூறினார். "ஷாம்லி காவல்நிலைய அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கடிதம் வழங்கப்படும்"

தமிழ்நாட்டின் காரைக்குடியைச் சேர்ந்த பெரியசாமி சவூதி அரேபியாவுக்கு வேலைக்காக வந்த போது, எல்லோரையும் போல அவருக்கும் கனவுகள் இருந்தன.1994ல் ஆடு மேய்க்கும் வேலைக்கு வந்தவருக்கு, கல்யாணமாகி ஒரேஒரு வருடம் தான் ஆகியிருந்தது.

கஃபீல் எனப்படும் அந்தப் பொறுப்பாளரின் பொறுப்பற்ற தனத்தால் கடந்த 18 வருடங்களாக சம்பளமோ, விடுமுறையோ கிடைக்கவேயில்லை பெரியசாமிக்கு. மன அழுத்தத்தால் ஒருமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

பெரியசாமியின் அவலநிலைக்குத் தீர்வு ஒரு சவூதிக்காரர் மூலம் வந்தது. மனிதாபிமானமிக்க அந்த மற்றொரு சவூதிக்காரர் பெரியசாமியின் நிலையை ஹைல் கவர்னர் இளவரசர் சவூத் இப்னு அப்துல்முஹ்சின் கவனத்திற்கு எடுத்துச்சென்றார். இந்தியத் தூதரக அதிகாரி தட்சினா மூர்த்தியும் சக இந்தியச் சகோதரனான பெரியசாமிக்காக உதவ முன்வந்தார்


கவர்னரின் ஆணைகளின் படி விசாரணைக்குப் பின்னர், அந்தப் பொறுப்பாளர் ஊதியம் மற்றும் விமான ச் சீட்டை செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் ஊதியங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் பெரியசாமியை உடனடியாக இந்தியா திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தப் பொறுப்பாளர் ஒரு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை . இறுதியாக தனக்கு சுமார் ஒரு இலட்சம் ரியால் வரவேண்டியது இருந்தும் 85,000 கிடைத்தால் போதும் என்று பெரியசாமி தெரிவித்ததன் பேரில் அத்தொகையை பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜெத்தா துணைத் தூதரகம் தமிழ்நாட்டில் பெரியசாமி குடும்பத்தாருடன் தொடர்பை ஏற்படுத்தியது."ஜெத்தாவில் உள்ள சில சமூக ஊழியர்கள் எங்களுக்கு அவர் குடும்பத்தார் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க உதவினர்.பெரியசாமியின் இளைய சகோதரர் கண்ணப்பன் ஊரில் அவரை வரவேற்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார் என்று துணைத் தூதர் ஃபைஸ் அகமது கூறினார்.

மேலும் இந்திய சமூகஊழியர்கள் சிலர் இந்தியா செல்லும் பெரியசாமிக்கு உதவ 30,000 சேகரித்து உதவுகின்றனர்.

கடவுச் சீட்டும் இல்லாத பெரியசாமிக்கு இந்திய தூதரகம் ஒருவழிப் பயணத்திற்கான சிறப்பு அனுமதி அட்டையை வழங்கியுள்ளது


Read more about சவூதி: 18 வருடங்கள் சம்பளமில்லாமல் அடிமையாகவும் அநாதரவாகவும் இருந்த தமிழர் மீட்கப்பட்டார். at www.inneram.com

suvanappiriyan said...

திரு தருமி!

நன்றாக எழுதிக் கொண்டு வரும்போதே இடையில் காமெடியாக ஏதாவது பதிவு எழுத முடிவெடித்தால் வஹாபி, தீவிரவாதம், தாடி, முக்காடு என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதாவது எழுதி விடுகிறீர்கள். நாத்திகம் வீழ்வதையும் இஸ்லாம் மலர்வதையும் கண்டு பொறுக்காமல் கோபம் வரும்போது இது போன்ற பதிவுகள் வருவது இயற்கையே! தவ்ஹீத் வளர்ச்சியினால் இன்று தமிழகத்தில் மட்டும் எந்த திட்டமிட்ட பிரசாரமும் இல்லாமல் தினமும் இரண்டு மூன்று இந்து கிறித்தவ நண்பர்கள் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம் உள்ளனர். சென்ற பதிவுகளில் ஊர், புகைப்படம் முதற்கொண்டு வெளியிட்டுள்ளேன். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பாவை பற்றி சொல்லவே வேண்டாம். அசுர வேகத்தில் இஸ்லாம் வளர்ந்து வருகிறது.

டார்வினுக்கும் நாத்திகத்துக்கும் இனி அவ்வளவாக எதிர்காலம் சுபிட்சமாக இருக்காது. உங்களுக்கு கசந்தாலும் உண்மை அதுதான்.

சூஃபியிசம் என்பது இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையையும் அத்வைதத்தையும் இந்து புராணங்களையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை. அதை தனி மதமாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். இஸ்லாத்தில் அதனை நுழைக்க முடியாது. கிறித்தவத்தையும் பவுத்தத்தையும் எப்படி இந்து மதத்தின் ஒரு பிரிவாக ஆரியம் ஆக்கியதோ அதுபோல் இஸ்லாத்தையும் ஆக்கி அழிக்க நினைக்கின்றனர். அது நடக்காத ஒன்று என்ற உண்மையை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.