Followers

Saturday, December 01, 2018

ஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரசு....

ஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரசு....
அப்துல் கஃப்பார் வயது 42. சீனாவின் உய்குர் மாகாணத்தை சேர்ந்தவர். நான்கு குழந்தைகளுக்கு தந்தை. 14.4 மில்லியன் டாலர்கள் இவரது சொத்து மதிப்பு. பல பள்ளி வாசல்களை கட்டியுள்ளார். பல தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் பற்று உடையவர். கம்யுனிஷ அரசுக்கு இவரது முன்னேற்றம் பெரும் பிரச்னையாக இருந்தது. எனவே இவரை பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.
சென்ற வருடம் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார் அப்துல் கஃப்பார். அரசு அனுமதித்த குழுவில் செல்லாமல் இவர் தனியாக தனது ஹஜ் பயணத்தை முடித்துள்ளார். இதனை காரணமாக காட்டி கம்யூனிஷ அரசு இவரை கைது செய்துள்ளது. இவர் மட்டுமல்லாது இவரது மனைவி, இவரது பிள்ளைகள் மற்றும் இவரது நண்பர்கள் மொத்தம் 50 பேரையும் கைது செய்துள்ளது சீன அரசு. தற்போது இவருக்கு மரண தண்டனை என்று நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இவரது மனைவி விசாரணைக் காலத்தில் சிறைச் சாலையிலேயே மரணத்தை தழுவியுள்ளார்.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது மரண தண்டனைக்கு உரிய குற்றமா? இவரது சொத்துக்கள் அனைத்தையும் கம்யூனிஷ அரசு பிடுங்கிக் கொண்டது. இது ஒரு பகல் கொள்ளை. இதைப் பற்றி உலக மீடியாக்களோ நமது இந்திய மீடியாக்களோ வாயைத் திறக்கவில்லை.
தங்கள் உயிரையும் இழக்க முஸ்லிம்கள் துணிவார்களேயொழிய சீனா, ரஷ்யாவிலேயே துடைத்தெறியப்பட்ட கம்யூனிஷ சித்தாங்களை தங்கள் வாழ்வியலாக எடுக்க மாட்டார்கள் என்பதை மட்டும் சீன அரசுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
தகவல் உதவி
rfa.org/english/news/


2 comments:

Dr.Anburaj said...

அரேபிய அடிமைத்தனத்தை சீன அரசு வெறுக்கின்றது. அரசின் சட்டதிட்டங்களை பிரஜைகள் பின்பற்ற வேண்டும். சவுதி அரேபியாவில் சட்ட மீறலுக்கு கொடும் தண்டனை விதிப்பதை எற்றுக்கொண்டு பாராட்டும் தாங்கள் சீன அரசின் செயலை கண்டிப்பது ஏன் ?

Dr.Anburaj said...

சீனாவில் பயங்கரவாத செயல்களில் நிறைய முஸ்லீம்கள் ஈடுபட்டு வருகின்றனா். மதரஸாக்களின் படிப்பவா்கள்தாம் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.பாக்கிஸ்தானில் மதரஸாக்களில் என்ன பாடம் கற்றுக்கொடுக்கப்படுகின்றதோ அதுதான் இந்தியாவிலும் மதரஸாக்களில் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. வினையே அதுதான். சீனாவில் தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கும் நிலை வராமல் அரசு தடுத்து வருகின்றது.குரான் கழிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம்.முஹம்மது மறக்கப்பட வேண்டிய ஒரு நபா்.