Followers

Thursday, December 06, 2018

திருப்பதி ஏழுமலையானே புத்தரின் நின்ற கோலம் - ஆய்வு நூல்

திருப்பதி ஏழுமலையானே புத்தரின் நின்ற கோலம் என்று ஆய்வு செய்து மும்பையில் ஆய்வு நூல் வெளி வந்துள்ளது.
“Tirupati Balaji was a Buddhist Shrine” என்ற ஒரு நூல் வெளிவந்துள்ளது. மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் கே. ஜமனாதாஸ் F.R.C.S. என்பவர் எழுதியுள்ளார். இந்நூலைப் பற்றிய குறிப்புரை இதோ: Lord Venkateswara, the presiding deity on the famous Tirumali Hills, popularly known as Balaji of Tirupati, is an important Vaishnava Shrine of South India. The Nature of Lord Venkateswara has always been a matter of dispute for centuries. Some consider Him as Vishnu some as Siva, Some as Sakti, some as Skanda and some as Harihara. In fact it was an old Buddhist shrine, murthi itself being Buddhist; and it was taken over for Brahmanic worship during the general fall of Buddhism. He was a god of tribal Buddhist and was,Vaishnavized by saints and latter sanskritized and brahmanized by pundits to his present form. The weapons on Him are not original but provided at a latter date. How this was brought about, is explained with all historical and archaeological evidences. Cults of Vitthala of pandarpur, Jagannatha of Prui, Ayappa on Sabarimala etc., which were originally Buddhist are discussed and many other Buddhist shrines which were hinduized are described and the history of India in general and South India in particular, from seventh to tenth century, during the period of fall of Buddhism and rise of Brahmanic Tirupati, is traced.”
"வெங்கடாசலபதி கடவுள் இருக்கும் திருப்பதி கோயில் என்பது தென்னகத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவக் கோயிலாகும். வெங்கடாசலபதியின் வடிவம் பல நூற்றாண்டுக் காலமாகப் பிரச்சினைக்-குரியதாகவே இருந்து வந்திருக்கின்றது. சிலர் அந்தக் கடவுளை விஷ்ணு என்றும், வேறு சிலர் சிவா என்றும், சக்தி என்றும், ஸ்கந்தா என்றும், ஹரிஹரன் என்றும் பலவாறாகக் கருதுகிறார்கள். உண்மையிலேயே திருப்பதி கோயில் என்பது துவக்கத்தில் புத்தர் கோயிலாகவே இருந்தது; உள்ளே இருக்கும் மூர்த்தி சிலை என்பது புத்தபிரானே ஆவார்.
புத்த மார்க்கம் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்த போது, அது பார்ப்பனீயத்தால் தங்களுடைய வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றப்பட்டது.
புத்தர் கோயில் வைஷ்ணவ கோயிலாக இப் போதுள்ள தன்மையில் பார்ப்பன மயமாக்கப்பட்டது - அப்பொழுது இருந்த பார்ப்பனப் பண்டிதர்களால்!
தொல்பொருள் ஆய்வு, வரலாற்று ஆய்வு அடிப்படையிலே இந்தக் கருத்தை இந்நூலில் நூலாசிரியர் நிறுவியுள்ளார். பந்தர் பூர், பூரி செகந்நாதம், சபரிமலை அய்யப்பன் இவை யெல்லாமே ஒரு காலத்தில் புத்த விகார்களாக இருந்து பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
7ஆம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை புத்த மார்க்கம் வீழ்ச்சி அடைந்த கால கட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலும், சிறப்பாக தென்னிந்தியாவிலும், புத்த விகாரங்கள் எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளது பற்றி இந்நூல் விவரிக்கிறது."
இதற்கு என்ன பதில்? பாபர் மசூதிக்கு முன் ராமன் கோயில் இருந்தது; அதனால் அங்கு ராமன் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற இந்துத்வாவின் வாதப்படியே வந்தாலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் புத்த விகாரமாக இருந்ததே - அதன்படி ஏழுமலையான் கோயில் புத்த விகாரமாக மாற்றப்படுமா? தயார் தானா?


2 comments:

Dr.Anburaj said...

புத்த மதத்தை அடியோடு அழித்தவா்கள் முகலாயர்கள் என்று அண்ணல் அம்பேத்கார் அறிவித்துள்ளாா். இதை மறைக்க வேண்டாம்.மறுக்க முடியுமா ?
-------------------------------------------------------------------
முகலாய ஆட்சியாளா்கள் இந்து ஆலயங்களை இடித்தது ஒரு கலாச்சார பரிணாம வளாச்சி அல்ல. ஆக்கிரமிப்பு சிந்தனை.காபீா்களை ஒட்டுமொத்தமாக வேரோடும் வோ் அடி மண்ணுமாக அழிக்கும் genocide ஒரு நடவடிக்கையாகும்.
-------------------------------------------------------------------------------
புத்தமதத்தின் சிறந்த கருத்துக்களை இந்தியசமூகம் புத்தமதத்தவராக மாறாமலே ஏற்றுக்கொண்டது.பணம் அரசியல் விளையாட்டு காரணமாக புத்த சங்கங்கள் மடங்கள் ஊழலில் தங்களின் பெருமை இழந்து விட்ட நிலையில் மக்கள் வேறு ஒரு தலைமையை நோக்கி திசை மாறுவது இயற்கை. மேலும் புத்தரின் பல போதனைகள் அதிக எண்ணிக்கையில் மக்களால் பின்பற்ற இயலாதவை.எனவே பல மக்களுக்கு அதில் சலிப்பு ஏற்பட்டது.புத்தமதம் அழிய வில்லை.இந்து சமூகம் புத்தரை இந்துவாக இருந்து ஏற்றுக் கொண்டாா்கள். புத்தரின் படத்தை வீட்டில் வைகக மறுக்கும் இந்து இன்று யாரும் இல்லை. கௌதமரி்ன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய மறுக்கும் இந்து யாரும் இல்லை.

முஸ்லீம்களுக்கு புத்தருக்கும் என்ன உறவு ?

எனவே புத்த ஆலயங்கள் மீண்டும் சிவன் பெருமாள் ஆலயமாக மாறியிருப்பதையும் ஒப்பிட முடியாது.அது அக்கிரமம் அல்ல.இயல்பான கலாச்சார பரிணாமம்.

மண்டையில் ஏறினால் சரி.

Dr.Anburaj said...

ஜப்பானில் எனது தம்பி மகன் இயந்திரவியல் பொறியாளராகப் பணியாற்றி வருகின்றாா். அவர் இரண்டு வாரத்திற்கு ஒரு நாள் தவறாது 3 கிமீ தூரத்தில் உள்ள புத்த ஆலயத்திற்கு குடும்பத்தோடு சென்று வருகின்றாா்.அந்த புத்த ஆலயத்தின் பிட்ச மிகச் சிறந்த துறவொழுக்கம் கொண்டவா் என்றும் எனதுமகன் சொன்னதை கேட்கும் போது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.