Followers

Thursday, December 24, 2020

சைவம் அசைவம் - ஓர் அலசல்!

 


7 comments:

Dr.Anburaj said...

இசுலாத்திற்காக உயிரைக் கொடுத்தால் அது தியாகம் என்று போ---போ---போற்றுகிறோம்.

அதுபோல்தான் அசைவஉணவுகள் கருணைக்கு அணை எல்லை போடுகின்றது. இவ்வளவுதான்.

சைவ உணவு சாப்பிட்டு பாழாய் போனவன் யாரும் இல்லை.அசைவ உணவில் நன்மை இருக்கலாம். நிச்சயம் இருக்கும். ஆயுள் வேத வைத்திய முறையில் மிருகங்களின் சுப்பு பரிந்துரைக்கப்படுகிறது. அசைவ உணவில் கருணை இல்லை. கருணை யின் வீச்சு அதிகரிக்கும் போது கொஞ்சபோ் அப்படி வாழ்ந்தால் என்ன என்று நினைத்து வாழ்ந்தால்

இந்த மேடை பேச்சாளனுக்கு என்ன குறைந்து போய் விடும்.

சைவஉணவு உண்டு மலம் கழித்தால் ---சற்று பிந்தி கழித்தாலும் --- நாற்றம் வராது.
அசைவஉணவு சாப்பிட்டு சற்று பிந்தி விட்டால் ---- நாற்றம் சகிக்க முடியாது.சைவ உணவு உண்டால் மலச்சிக்கல் --- வராது என்றேச் சொல்லலாம்.

மேலும் வெளி காற்றில் உள்ள கிருமிகளின் தாக்கம் அசைவ உணவில் அதிகம் இருக்கும்.
சிலை வணக்கம் செய்யாதவா்கள் ஈமான் கொண்டவா்கள் முஸ்லீம்கள் ---உண்மையான மதத்திற்குச் சொந்தக்காரர்கள் -----என்றெல்லாம் மனிதன் தன்னை மாா் தட்டிக் கொள்கிறான்.பெருமிதம் அகங்காரம் ஆணவம் கொள்கிறான். அதுபோல் சைவ உணவு உண்பவனும் கருணை மிகந்த வாழ்க்கை வாழ்கிறேன் என்று ஒரு பெருமித உணா்வு கொள்கிறான். உணவுக்கும் மனிதனின் ஆளுமைக்கும் சம்பந்தம் இல்லை என்கிற இவரது வாதம் தன்னிச்சையானது. மேலை நாடுகளில் சைவ உணவு உண்பர்கள் அதிகரித்து வருகின்றார்கள்.
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.திருமந்திரம் - 481.
தாயின் உதிரத்தில் விந்து சேர்கையில் தாயின் வயிற்றில் மலம் மிகுந்தால் மந்தபுத்தி கொண்டதாகவும் தாயின் உதிரத்தில் விந்து சேர்கையில் சிறுநீர் மிகுந்து இருந்தால் ஊமையாகவும் தாயின் உதிரத்தில் விந்து சேர்கையில் இரண்டும் மிகுந்தால் கண்ணில்லை தாயின் உதிரத்தால் வரும் குழந்தைக்கே.

பின்குறிப்பு - தாயின் உடலின் மலங்கள் குழந்தையை பாதிக்கும்.

Dr.Anburaj said...

மாதா உதரம்
பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பாடல் எண் : 31
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே .

கலவிக் காலத்தில், தாயது வயிற்றில், நீங்கற் பாலதாகிய மலம் நீங்காது தங்கியிருக்குமாயின், அவள் வயிற்றில் தந்தையிடமிருந்து வந்து கருவாய்ப் பொருந்திய குழவி, மந்த புத்தி உடையதாய் இருக்கும். நீங்கற் பாலதாகிய நீர் நீங்காது அவள் வயிற்றில் தங்கியிருக்குமாயின், குழவி ஊமையாகும். மலம், நீர் இரண்டுமே நீங்கற்பாலன நீங்காது தங்கியிருக்கின், குழவி குருடாகும்.

When at the time of union,
The mother`s bowels are heavy exceeding,
A dullard will be born;
If urine exceeds,
A dumb will be born;
If both exceed,
A blind will be born;
Thus is it for the infant born
The mother`s condition according

Dr.Anburaj said...

பாடல் எண் : 33
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடும்
கொண்டநல் வாயுஇரு வர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே .

கலவிக் காலத்தில் மூச்சுக் காற்று இருவர்க்கும் வலம், இடம் என்னும் வகையில் ஒருவகையிலே, ஓரளவிலே இயங்குமாயின், தங்கிய கருச் சிதையாது மேற்கூறியவாறு குழவி ஆணும், பெண்ணுமாய் நிலைபெறுதலோடு, அழகாயும் இருக்கும். அவ்வாறின்றி அவர்க்கு மாறி மாறி இயங்கின், தங்கிய கரு பின் நிலைபெறாது அழியும்.

If in Male and Female breath runs
In measure equable,
The infant born will exceeding handsome be;
When in both breath rhythm falters,
No Conception will there be.

Dr.Anburaj said...

திருமந்திரம் -பாடல் எண் : 32
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே

கலவிக் காலத்தில் கணவனுக்கு மூச்சுக்காற்று வலமூக்கின் வழி இயங்கிக் கொண்டிருப்பின், குழவி ஆணாய் அமையும். இடமூக்கின் வழி இயங்கிக்கொண்டிருப்பின், குழவி பெண்ணாய் அமையும். இருவழியிலும் மாறி மாறி இயங்கிக் கொண் டிருப்பின் குழவி அலியாய் அமையும். இவை நிற்க, கருத் தங்கும் காலத்தில் தாய் வயிற்றில் கீழ்ப்போகும் காற்றுப் போக்கப் படாமல் தடுக்கப்பட்டு மேலெழுந்து பாயுமாயின், இரண்டு கரு தங்கும்.

If breath flows leading on nostril right,
The infant born will a male be;
If on the nostril left,
A female will be born;
If the descending current Apana,
Opposes the ascending current Prana,
Twins there shall be;
If in measure equal the breath rhythm runs,
Through nostrils right and left,
Hermaphrodite shall be the baby born.

Dr.Anburaj said...

பாடல் எண் : 27
மாண்பது வாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண்பெண் அலியென்னுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான்அச் சோதிதன் ஆண்மையே .

மாட்சிமையோடு கருப்பையுள் வளர்கின்ற கருவைச் சிவபெருமான் செய்வது, `ஆண், பெண், அலி` என்னும் மூவகை அச்சாக. அவ்வச்சுக்கள் அமைவது, மாதா பிதாக்களின் உடற் கூறாகிய காரணப் பொருட்கு ஏற்பவாம். அவற்றிற்கெல்லாம் தக்கவாறே அப்பெருமான் தனது ஆற்றற் பதிவைச் செய்கின்றான்.

The seed of life,
As a steady flame in womb burns
It takes shape one of three
Male,
female and hermaphrodite;
How the father and mother at union were,
Even so He printed the sex,
Righteous indeed was that Luminous One.
- - - - - - - -- - - - - - - - -
பாடல் எண் : 28
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்;
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே .

கலவியால் கருப்பையுள் கலக்கும் பொருள்களில் ஆண்மகனது வெண்டுளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி ஆணாகும். பெண்மகளது செந்துளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி பெண்ணாகும். இரண்டும் சமமாய் இருக்கின் பிறக்கும் குழவி அலியாகும். அதுவன்றி, மிகுந்துள்ள வெண்டுளியில் உயிராற்றல் மிக்கிருக்குமாயின் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் அரசாளுதற்கும் உரியவனாவான். அவ்வாறன்றி மிகுந்திருக்கும் செந்துளியில் அழிக்கும் ஆற்றல் மிக்கிருக்குமாயின் பதிந்த கருப் பயனின்றி அழிந்தொழியும்.

The masculine flow dominates,
the infant is male born,
The feminine dominates,
the infant is female born;
When the two are in force equal,
a hermaphrodite is born;
When masculine flow gushes in plenty,
The infant born will sway the world entire;
When masculine flow is scanty,
Naught indeed conception is.

Dr.Anburaj said...

பாடல் எண் : 9
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திட
ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே

இரவும், பகலும் இடைவிடாது தன்னையே தம் அன்பிற்கு உரியவனாகக் கொண்டு, அன்பு செய்கின்ற அன்பர்களைச் சிவபெருமான் நன்கறிவன். ஆதலால், ஞானத்தைப் பெற்று அன்பினால் வசமிழந்து நின்றமையால், அவன் எங்களிடையே வந்து எங்களைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

The Lord God knows them who,
by night and day,
Seat Him in heart`s core,
and in love exalted adore;
To them wise with inner light,
actionless in trance,
He comes,
and,
in close proximity,
stands before.
பாடல் எண் : 7
மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாம்மொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே .

பொழிப்புரை :

மௌன நிலை கைவரப் பெற்றோர்க்குப் பரமுத்தி உண்டாகும். அதற்கு முன்னே பரசித்திகள் உளவாம். நாதத்தின் பிணிப்பும் விட்டொழியும். இறைவனது ஐந்தொழில்களில் இறுதிய தாகிய அருளால் தொழிலும் நிகழ்ந்து, அவை அனைத்தும் இயற்றப் பட்டு முடியும்.,

Mauna`s Emanations

They that have mastered the Divine
Mauna (Silence),
Shall reach the very bliss of Mukti;
And all Siddhis of themselves seek them
Into the Silent Word* would in perfection evolve;
Mastering Mauna thus,
They shall gain the power
For the five divine acts to perform
Creation, Preservation, Dissolution,
Obfuscation and Grant of Grace.

Dr.Anburaj said...

திருமந்திரம் பாடல்களை வாசகர்கள் அறிய வெளியிட்டமைக்கு

நன்றி.வாழ்க.

இந்துமதத்திலும் இனிய ,ஆழமான, ஞான, அறிவியல் ,கருத்துக்கள் உள்ளது என்பதை முஸ்லீம்கள் அறிய வேண்டும். அறிவார்கள்.