Followers

Wednesday, April 26, 2006

பூமியின் எடை குறைந்து வருகிறது!

பூமியின் எடை குறைந்து வருகிறது!

'அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம்'
-குர்ஆன் 50;4

'அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்'
-குர்ஆன் 71;17

மேற்கண்ட இரண்டு வசனங்களின் மூலம் மனிதர்களால் பூமி குறைகிறது என்ற உண்மை சொல்லப் பட்டிருக்கிறது.இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.

பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாலும் அதற்குரிய எடை வெளியிலுருந்து கிடைப்பதில்லை. பூமியுடைய எடை குறைந்து தான் அது மனிதனாக,மிருகங்களாக,மரங்களாக, மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.

இப்படியே முளைக்கின்ற,வளருகின்ற எல்லாப் பொருட்களுமே தங்களின் எடையை பூமியிலிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.

எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் படைத்த போது இருந்த எடை தான் இருக்கும்.இதற்கு மாற்றமாக பூமியின் எடை கூடினால் பவியீர்ப்பு விசையின் தாக்கம் குறைந்து மற்ற கோள்களோடு மோதும் அபாயமும் உண்டு. மனிதன் குரங்கு போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் மூலம் மண்தான் என்ற உண்மையும் வெளியாகிறது. பரிணாமத் தத்துவம்(மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தான் -டார்வின்) பொய் என்பதும் இதிலிருந்து விளங்குகிறது.

அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளர்கின்றன என்ற அறிவியல் உண்மையை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே விளக்கியதன் முலம் இது இறைவனின் வேதம்தான் என்பது நிரூபணம் ஆகிறது.

'மனிதர்களுக்கு தங்குமிடமும் ஒப்படைக்கப் படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்துக்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்'

-குர்ஆன்6:98

இந்த வசனத்தில் கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும் ஒப்படைக்கப் படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப் படக் கூடிய இடம் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் ஒப்படைக்கப் படும் இடம் என்று தேர்ந்தெடுத்து பயன் படுத்தியிருக்கின்ற வார்த்தை மிகப் பெரிய உண்மையைச் சொல்கிறது.

மனிதன் இந்த உலகில் சின்னஞ் சிறிய அளவில் பிறப்பெடுக்கிறான். அவன் பிறப்பெடுத்த போதுஇருந்த அளவை விட பலப் பல மடங்கு பெரிதாக வளர்ந்து பின்னர் மரணிக்கிறான். அவன் பிறப்பெடுக்கும் போது இருந்த அந்த எடை பல மடங்கு பெரிதாக எப்படி ஆனது என்றால் இந்த மண்ணிலிருந்து சத்துக்களை அவன் பெறுவதால் தான் ஆனது.

மண்ணிலிருந்து உற்பத்தியாகின்ற தானியங்கள்,பருப்புகள்,இன்ன பிற சத்துக்களைப் பெற்று தன்னைப் பெரிதாக்கிக் கொண்டு பூமியின் எடையை மனிதன் குறைத்தான். அய்ம்பது கிலோ எடையுள்ள ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் இவன் வாழ்வதனால் மண்ணிலிருந்து அய்ம்பது கிலோ குறைந்து விட்டது என்பது பொருள். எங்கிருந்து இந்த அய்ம்பது கிலோ எடையைப் பெற்றிருக்கிறானோ அதனை அங்கே அவன் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்கப் படும் இடம் என்று சொன்னால் இவன் பூமிக்கு உடமையான ஒரு பொருளாக இருக்கிறான்.ஏனெனில் அங்கிருந்துதான் இவன் எடுக்கப் பட்டிருக்கிறான் என்பது கருத்து.மனிதன் பூமியிலுள்ள பொருளை நேரிடையாக ச் சாப்பிடுவதில்லை. மண் வேறு பொருளாக மாறி அதனை மனிதன் சாப்பிட்டு தன் உடலை வளர்த்துக் கொண்டான் என்ற தத்துவத்தை உள்ளடக்கி ஒப்படைக்கப் படுகின்ற இடம் என்ற சொல்லை இறைவன் மிகப் பொருத்தமாக பயன் படுத்தியிருக்கிறான். இதுவும் ஒரு அறிவியல் உண்மை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

Thanks Mr P. Jainullabdeen.

10 comments:

மகேஸ் said...

உங்களின் எடை என்னவென்று கேட்டால் என்ன சொல்வீர்கள். 70 கிலோ என்று சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

உடனே நான் ரத்தத்தையும் சேர்த்தா அல்லது சேர்க்காமலா என்று கேட்டால்
என்னை அடிக்க வருவீர்கள் தானே? :))

அது போல பூமியின் எடை என்பது மண்ணின் எடை மட்டுமல்ல. மண், நீர், காற்று அதில் உள்ள உயிர்கள் போன்றவற்றின் கூட்டு எடையே ஆகும். அந்த எடை என்றும் மாறாதது.

//அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளர்கின்றன என்ற அறிவியல் உண்மையை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே விளக்கியதன் முலம் இது இறைவனின் வேதம்தான் என்பது நிரூபணம் ஆகிறது. //


தொட்டணைத் தூரும் மணற்கேணி மாந்தற்குக்
கற்றனைத் தூரும் அறிவு

குறளில் எழுத்துப் பிழைகள் இருந்தால் வெண்பா எழுதும் கொத்தனார் மன்னிக்கவும்.

இது அனைவருக்கும் புரியும் குறள். இதனை நான் சொல்லும் விதமாகவும் உரை எழுதலாம்.

"மண்ணைத் தோண்டினால் தண்ணீர் வரும். இதனை 2000 வருடங்களுக்கு முன்பே வள்ளுவர் கூறியுள்ளார். எனவே வள்ளுவர்தான் கிணற்றைக் கண்டுபிடித்தவர் என்று நான் சொன்னால் உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா?"

அய்யா, நான் ஏற்கனவே சொன்னது தான், விளக்கம் கொடுக்கிறேன் என்று சொல்லி மிகைப்படுத்தாதீர்கள்.

suvanappiriyan said...

அய்யா மகேஷ்!


ஒரு சில படித்தவர்கள் கூட 'குரங்கிலிருந்து பரிணாமம் பெற்று மனிதன் உருவானான்' என்று பொய்யான சித்தாந்தத்தை நம்பி வருகின்றனர். அதனை பரப்பியும் வருகின்றனர்.

பிரம்மத்தின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன்,பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்று நம் இந்தியாவில் கதை விட்டுக் கொண்டிருந்த காலத்தில் 'பூமியின் எடை குறையாது' 'மனிதர் அனைவரும் மண்ணில் இருந்தே படைக்கப் பட்டனர்' போன்ற அறிவியல் உண்மைகளை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப் படிக்க தெரியாத முகமது நபி எப்படி கூற முடியும்? என்ற சிந்தனை உங்களுக்கு வரவில்லையா?

மகேஸ் said...

//ஒரு சில படித்தவர்கள் கூட 'குரங்கிலிருந்து பரிணாமம் பெற்று மனிதன் உருவானான்' என்று பொய்யான சித்தாந்தத்தை நம்பி வருகின்றனர். அதனை பரப்பியும் வருகின்றனர்.//
படத்தவர்கள் என்பதால் தான் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்று மனிதன் உருவானான் என்று கூறுகிறோம். அதனை பரப்பியும் வருகின்றோம்.
நீங்கள் மதத்தை மட்டுமே நம்புகிறீர்கள். நாங்கள் மதத்தில் சில தவறான விசயங்கள் சொல்லப் பட்டிருந்தால், அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருந்தால், அறிவியியலை
ஏற்றுக் கொள்கிறேன் அது தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு.

மேலும் ஒரு விசயம் திடீரென ஏன் பிராமணர், சூத்திரர் என் விசயத்தை திசை திருப்புகிறீர்கள். அதெல்லாம் என்னிடம் நடக்காது.

suvanappiriyan said...

திரு கனகவேலன்!

இப்பொழுது நாம் பார்க்கும் குரங்குகள் மற்றெரு குரங்கிலிருந்து தான் பிறக்கின்றன. இப்படியே பின்னோக்கிப் பல ஆயிரம ஆண்டுகள் போனால் முடிவில் ஒரு ஜோடி குரங்கு மிஞ்சும். அந்த ஜோடி குரங்கும் இது போன்ற இன்ன பிற உயிரனங்களும் அந்த நிலையில் மண்ணிலிருந்து இறைவன் உண்டாக்கியதாக குர்ஆன் கூறுகிறது. அதைத் தான் இன்றைய அறிவியலும் மெய்ப்பிக்கிறது.

மகேஸ் said...

//அதைத் தான் இன்றைய அறிவியலும் மெய்ப்பிக்கிறது.//

அறிவியியல் எங்கே மெய்ப்பிக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

suvanappiriyan said...

திரு ஸ்ரீநிதி!

குரங்கிலிருந்து மனிதன் படிப்படியாக பரிணாமம் பெற்று முதல் நிலை,இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்ற இறுதி கட்டத்துக்கு வந்து இன்று மனிதனாகி இருக்கிறான் என்பது உங்கள் வாதம். அப்படியானால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த விலங்குகளின் எலும்புக் கூடுகள் இன்று நம்மிடத்தில் உள்ளது. அது போன்று மேற் சொன்ன நிலைகளில் ஏதேனும் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா? நானும் பரிணாமம் சம்பந்தமாக எத்தனையோ புத்தகங்களைப் படித்து விட்டேன். எல்லாமே அப்படி இருக்கலாம, இப்படி இருக்கலாம் என்ற அனுமானங்கள் தான் வைக்கப் படுகிறது.

பூமியின் எடை குறைந்தாலோ, கூடியாலோ விண் வெளியில் உள்ள மற்ற கோள்களின் ஈர்ப்பு விசையில் மற்றும் ஓடும் பாதையில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றோடொன்று மோதக் கூடிய அபாயம் உள்ளது என்ற உண்மையை குர்ஆன் சொல்வதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளேன். இதை விடுத்து பூமியின் எடை எவ்வளவு? என்று சிறு பிள்ளளைத் தனமாக கேட்டு வாதத்தை திசை திருப்புகிறீர்கள். பூமியின் எடையை தற்போதுள்ள வசதியையும், அறிவையும் கொண்டு அறிவியலார் கண்டு பிடிக்க முயலட்டும். அப்படி பூமியின் எடை கிடைத்து அதில் ஏதேனும் மாற்றங்கள் கிடைத்தது நிரூபிக்கப் பட்டால், அந் நேரம் குர்ஆனின் வாக்கு பொய் என்று நானும் ஒத்துக் கொள்கிறேன்.

மேலும் குர்ஆனை நான் மூடத்தனமாக பின் பற்றுகிறேனா? அல்லது நீங்கள் தான் டார்வின் அனுமானத்தை மூடத் தனமாக பின் பற்றுகிறீர்களா? என்பதை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

suvanappiriyan said...

திரு மகேஷ்!

ஜான் நம்ஸ்லே எழுதிய க்ளாரெண்டன் பதிப்பகம் ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள 'தி எமெண்ட்ஸ்' (மூன்றாம் பதிப்பு- 1998) வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவல் கூறுவதாவது :

70 கிலோ கிராம் எடையுள்ள ஒரு மனிதனின் உடம்பில் 58 தனிமங்கள் பல்வேறு அளவுகளில் உள்ளது. இந்த தனிமங்களின் மூலம் மண் என்று அறியப்பட்டுள்து. அவை என்னென்ன தனிமங்கள் என்பதை 'மனிதன் குரங்கிலிருந்தா பிறந்தான்' என்ற வேறொரு பதிவில் சென்று பாருங்கள். அனைத்து தனிமங்களையும் வரிசையாக பட்டியலிட்டுள்ளேன்.

suvanappiriyan said...

திரு கனக வேலன்!

//எந்த இடத்தில் குரான் அப்படி சொல்லியிருக்கிறது?//

'மனிதர்களே!மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்கு தெளிவு படுத்துகிறோம்: உங்களை மண்ணால், பின்னர் விந்தால், பின்னர் கருவுற்ற சினை முட்டையால் பின்னர் முழுமைப் படுத்தப் பட்டதும், முழுமைப் படுத்தப் படாததுமான தசைக் கட்டியால் படைத்தோம்! நாம் நாடியதைக் கருவறையில் குறிப்பிட்ட காலம் வரை நிலைப் பெறச் செய்கிறோம். பின்னர் உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்'

குர்ஆன் - 22 : 5

'பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்'

குர்ஆன் - 36 :36

மேற் கண்ட இரண்டு வசனங்களிலும் உங்கள் கேள்விக்கு பதில் இருக்கிறது. அறிவியல் துறையில் மிகப் பெரும் வல்லுனர் ஒருவர் தன் அறிக்கையை சமர்ப்பிப்பது போல் அல்லவா மேற் சொன்ன குர்ஆன் வசனம் அமைந்துள்ளது!

மு. மயூரன் said...

குரங்கிலிருந்து மனிதன் பரிணாமமடைந்தான் என்பது டாவினிசத்தை சரியாக விளங்கிக்கொள்ளாமல் கூறப்படும் மேலோட்டமான விளக்கம் மட்டுமே.
டாவினிசத்தின் பல கூறுக்ள் பொய்ப்பிக்கப்பட்டு நவ டார்வினிசம் உருவாகியிருக்கிறது. பரிணாமக்கோட்பாடு மேலும் வளர்த்தெடுத்துச்செல்லப்படுகிஅது.
பிரச்சனை என்னவென்றால்,

"படைப்பின்" போது இறைவன் ஒரு ஜோடி மாட்டை, மனிதனை மீனை எல்லாம் படைத்து (அதுவும் ஒரு நாளில்) பூமியில் உலாவ விட்டான் என்று ஒரு அபாண்டமான கற்பனையை அறிவியல் உண்மையாக்க முயன்றுகொண்டிருப்பது சிரிப்பையே வரவழைக்கிறது.

டார்வினால் தொடக்கிவைக்கப்பட்ட பரிணாம உரையாடலின் சாரம்,

சடத்துவ மூலப்பொருட்களிலிருந்து படிப்படியாக பரிணாம அடுக்குகளினூடாக உயர் நிலை உயிரினங்கள் உருவாகி வந்திருக்கிறது என்பதுதான்.

படைப்பு கொள்கைக்கு முரண்னான புள்ளி, சடத்துவ மூலங்களிலிருந்தே உயிரினங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் பரிணாமமடைந்து உருவாகிவந்துள்ளன. இந்த பரிணாம செயல்முறை இப்பொதும் நடந்தவண்ணமே உள்ளன. என்பதுதான்.

மனிதப்பரிணாமத்தின் பல்வேறு நிலைகளில் எச்சங்கள் ஏராளமாக கண்டறியப்பட்டுள்ளன.
அத்தோடு மிக அண்மைக்காலத்தில் பரிணாமமடைந்த உயிரினங்களைக்கொண்ட தீவு ஒன்றைப்பற்றிய நிகழ்ச்சி ஒன்றினை டிஸ்கவரி அலைவரிசையில் பார்த்தேன்.


உங்களால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒற்றை புத்தகத்தை நம்பி இவ்வளவு வாதிக்க முடியுமானால்,


மற்றவர்களையும் விஞ்ஞான முறைகளினூடாக வளர்த்தெடுக்கப்பட்டுவரும் டார்வினிசத்தை மேற்கோள்கோள் காட்டுபவர்களை ஒரேயடியாக முட்டாள்கள் என்று சொல்ல உங்களுக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது.

எல்லா மொழிகளிலும், எல்லா மக்கள் குழுமத்தினரிடத்திலும், எல்லா பழங்குடிகளிடத்திலும் அதிசயிக்கத்தக்க அறிவியல் உண்மைகள் அடங்கிய நூல்களும், தகவல்களும் உள்ளன.

அவை மனிதரால் உருவாக்கப்பட்ட, மனித முயற்சியால் கண்டறியப்பட்ட பல உண்மைகளின் தொகுப்பு.

அத்தகைய அறிவுப்பெட்டகங்கள் எல்லாம் கடவுளால் அருளப்பட்டவை அல்ல.
அப்படி சொல்வது நீங்கள் மனிதர்களை இழிவுபடுத்துவதற்கு சமம்.

suvanappiriyan said...

திரு மயூரன்!

//டாவினிசத்தின் பல கூறுக்ள் பொய்ப்பிக்கப்பட்டு நவ டார்வினிசம் உருவாகியிருக்கிறது.//

பிறகு நவ டார்வினிஷம் பொய்யாக்கப் பட்டு நவ நவ டார்வினிஷம் வரப் போகிறது என்கிறீர்களா? :-((

//புள்ளி, சடத்துவ மூலங்களிலிருந்தே உயிரினங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் பரிணாமமடைந்து உருவாகிவந்துள்ளன. இந்த பரிணாம செயல்முறை இப்பொதும் நடந்தவண்ணமே உள்ளன. என்பதுதான்.//

எங்கு நடந்திருக்கிறது? எந்த நாட்டில்? அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள். நானும் டார்வின் கோட்பாட்டை ஒத்துக் கொள்கிறேன்.

//அத்தோடு மிக அண்மைக்காலத்தில் பரிணாமமடைந்த உயிரினங்களைக்கொண்ட தீவு ஒன்றைப்பற்றிய நிகழ்ச்சி ஒன்றினை டிஸ்கவரி அலைவரிசையில் பார்த்தேன்.//

அது எந்த நாடு என்ற விபரத்தை டிஸ்கவரி சேனல் மறைத்து விட்டதா? உண்மையில் பரிணாமம் நடந்திருந்தால் அல்லவா நேரம,காலம்,நாடு போன்றவற்றை வெளியிட முடியும். சமீபத்தில் பிபிசியிலும் ஒரு டாக்குமெண்டிரியில் பரிணாமத்துக்கு ஒரு ஆதாரம் கிடைத்து விட்டது என்றனர். நானும் ஆவலோடு பார்த்தேன். ஒரு விஞ்ஞானியின் கருத்து 'இப்படி இருக்கலாமோ' என்று கோடிட்டு காட்டியதைத்தான் மிகப் பெரிய ஆதாரம் என்று சொன்னதைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. இதற்கு எந்த ஆதாரத்தையும் அந்த விஞ்ஞானியால் சமர்ப்பிக்கவும் முடியவில்லை. இனியும் முடியாது.

//உங்களால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒற்றை புத்தகத்தை நம்பி இவ்வளவு வாதிக்க முடியுமானால்,//

குர்ஆனின் கருத்துக்கள் வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்ததல்ல!மனிதன் உலகில் தோன்றிய ஆதாம் ஏவாளிலிருந்து இன்றைய முகமது நபி வரை அவ்வப்போது மனித இனத்துக்கு இறைவன் கொடுத்த அறிவுரைகளின் கடைசி தொகுப்பே குர்ஆன்.பல மொழிகளிலும் பல நாடுகளிலும் இதே கருத்துக்கள் இறைவனால் சொல்லப் பட்டுள்ளன. ஒரே ஒரு வித்தியாசம் அதில் மனிதனின் கருத்துகளும் இறைவன் பெயரால் ஏற்றப் பட்டு விட்டன. குர்ஆன் அத்தகைய இடைச்செருகலுக்கு ஆளாகாமல் பாதுகாக்கப் பட்டுள்ளது.

//அத்தகைய அறிவுப்பெட்டகங்கள் எல்லாம் கடவுளால் அருளப்பட்டவை அல்ல.
அப்படி சொல்வது நீங்கள் மனிதர்களை இழிவுபடுத்துவதற்கு சமம்.//

'மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நிங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.'

-குர்ஆன் 49 :13

உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்று வழி தோன்றல் என்ற சகொதரத்துவத்தை அம்பலப் படுத்துகிறது குர்ஆன். இதைத்தான் இன்றைய அறிவியலும் உறுதி செய்கிறது. குழப்பத்தின் மொத்த உருவமாக இருப்பது டார்வினின் கொள்கை. இன்னும் பலமுறை டார்வின் கோட்பாடுகளை படித்து பாருங்கள். படிக்க படிக்க உங்களுக்கு குழப்பம் தான் மிஞ்சும். தெளிவு கிடைக்காது. மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதுதான் மனிதனை இழிவு படுத்துவதாகும்.