Followers

Tuesday, December 02, 2008

சீரா என்ற பெயரில் ஒரு போலி இஸ்லாமியர்!




சீரா என்ற பெயரில் ஒரு போலி இஸ்லாமியர்!

சமீப காலமாக சீரா என்ற பெயரில் பதிவுகள் எழுதி வரும் ஒரு பதிவரை நாம் அனைவரும் அறிவோம். இவருக்கு கொடுக்கப்பட்ட வேலை நடு நிலையான இந்து மக்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவது. தனக்கு கொடுக்கப்பட்ட இந்த வேலையை மிகவும் திறமையாக இந்த நபர் செயல்படுத்தி வருகிறார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பொய்யயான செய்திகளை வெளியிடுவது. இதன் மூலம் ஹிந்துக்களை உசுப்பி விட்டு இஸ்லாமியருக்கு எதிராக பின்னூட்டம் வாங்க வேண்டியது. அவர்கள் மனத்தில் இஸ்லாத்துக்கு எதிரான எண்ணங்களை விதைப்பது என்று தன் வேலையை இந்த நபர் அருமையாக செய்து வருகிறார்.

//ஆனால் இன்று காங்கிரசும் அதே பாப்பனிய பயங்கரவாத பாஜக வழியில் பாகிஸ்தானை மிரட்டுவதை கண்டு மதச்சார்பற்ற இந்தியர்களும் முஸ்லீம்களும் கடும் கோபத்தில் உள்ளார்கள். கம்யூனிஸ்டு ஏ பி பரதன் ஏற்கெனவே அப்படிப்பட்ட தவறான பாதையில் சென்று பாகிஸ்தானை மிரட்டும் வேலையெல்லாம் வைத்துகொள்ளவேண்டாம் என்று காங்கிரஸை எச்சரித்திருந்தார்.//- சீறா.

//வறுமையில் வாடும் ஏழை முஸ்லீம்களிடமிருந்து பிடுங்கிய பணத்தை வைத்து இப்படி ஊதாரி செலவு செய்ய திட்டம் போட்ட இந்து பாசிச பாஜக அரசுக்கும், அந்த திட்டத்தை செயல்படுத்திய இந்து பாசிச காங்கிரஸ் அரசுக்கும் வித்தியாசம் என்ன?//-Seera

//நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலவினை இரண்டாக உடைத்து விட்டதை ஸஹீஹ் அல் புகாரியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படியிருக்கையில், ஏற்கெனவே நிலவுக்கு ஆம்ஸ்ட் ராங் ஆகியோரை அனுப்பியதாக அமெரிக்கா கூறியதை இஸ்லாமியர் சந்தேகக்கண்ணுடனேயே பார்த்தார்கள்.

அது பிறகு பெரிய ஏமாற்றுவேலை என்று அமெரிக்கர்களாலேயே புட்டு புட்டு வைக்கப்பட்டது. உண்மையில் நிலவுக்கு யாரும் போகவும் இல்லை, அதனுக்கு யாரும் துணைக்கோள் அனுப்பவும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது

ஆகவே நாம் பார்ப்பது அரை நிலவுதான். அந்தபக்கத்து நிலவு உடைத்து ஹிராம் மலைக்கு அப்பால் விழுந்துவிட்டது என்பதே ஸஹீஹ் அல் புகாரி கூற்று. (பாகம் 5, அத்தியாயம், 58, எண் 208, 209, 210, 211) (பாகம் 4, அத்தியாயம் 56, எண் 830, 831, 832)//-Seera


இதே மாதிரியான உளரல்களை இவரின் ஒவ்வொரு பதிவிலும் காணலாம். விபரம் அறிந்த பதிவர்கள் இந்த கோமாளியின் செய்கையை கண்டு சிரித்து விட்டு சென்று விடுகின்றனர். ஆனால் இவரை முஸ்லிமாக நினைத்துக் கொண்டு கோபமாக இவருக்கு இன்னும் பின்னூட்டம் அளித்து வரும் சக பதிவர்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.

விருத்த சேதனமும் செய்து கொண்டு கையில் 'இஸ்மாயில்' என்றும் பச்சை குத்திக் கொண்டு காந்தியைக் கொன்றவர்கள் இதுவும் செய்வார்கள். இதற்கு மேலும் செய்வார்கள்.

13 comments:

Anonymous said...

வேண்டுமென்றே இந்த மாதிரி மதப் பெயர்களைப் பொய்யாக வைத்துக் கொண்டு வெறுப்பேற்றும் விஷமிகளைக் கட்டுப் படுத்த வேண்டும்.
தமிழ்மண நிர்வாகத்தில் மூவர் குழு ஒன்று ஏற்படுத்தி அந்தக் குழுவில் அனைவரும் பதிவு செய்யலாம்.
பெயரிலியாக எழுதுபவர்களுக்கும் எண்கள் கொடுக்கலாம்.
பெயரிலியாக எழுதலாம் ஆனால் பெயர் மாற்றம் வன்மத்திற்காகப் பயன் படுத்தலாமா?பெயரிலே வேண்டாமென்றால் கூடப் பரவாயில்லை.

Anonymous said...

இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் பழைய பல்லவியே பாடிக் கொண்டிருப்பீர்கள்? கையில் சிவப்பு கயிறு கட்டுக் கொண்டு என்ற புது உதாரணத்தை சொல்லுங்களேன். 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்று புலம்பும் உங்களைப் போன்றோர்களை சொல்லணும். உலக மகா உத்தமர்களய்யா நீங்கள்.

Anonymous said...

போலி இஸ்லாமியர் பதிவு பற்றி நண்பர் ஒருவருடன் சென்ற மாதமே சொல்லி இருந்தேன். அவரும் நண்பர்களிடம் எச்சரிக்கிறேன் என்றார். ஏன் அலர்ட் இல்லாமல் இருந்தீர்கள் என்று தெரியவில்லை.

சுவனபிரியனும் சுப்ரமணியனும் என்றும் அபுமுகையை வம்பிலுத்தும் எழுதிய பதிவுகளில் இருந்தே உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டாமா ?

- ஒரு சிங்கை பதிவர்

suvanappiriyan said...

சிங்கை அனானி!

//சுவனபிரியனும் சுப்ரமணியனும் என்றும் அபுமுகையை வம்பிலுத்தும் எழுதிய பதிவுகளில் இருந்தே உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டாமா ?//

ஆகா! உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன்தான் இந்த அம்பி என்னையும் விட்டு வைக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி!

suvanappiriyan said...

அனானி!

//இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் பழைய பல்லவியே பாடிக் கொண்டிருப்பீர்கள்? கையில் சிவப்பு கயிறு கட்டுக் கொண்டு என்ற புது உதாரணத்தை சொல்லுங்களேன். 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்று புலம்பும் உங்களைப் போன்றோர்களை சொல்லணும். உலக மகா உத்தமர்களய்யா நீங்கள்.//

உண்மை ஒருநாள் 'மாலிகான்' போல் வெளிவரத்தானே போகிறது. அப்பொழுது யார் யோக்கியர் யார் அயோக்கியர் என்பது தெளிவாகத் தெரிந்து விடும். அது வரை பொறுமையுடன் இருங்கள் அனானி.

suvanappiriyan said...

//வேண்டுமென்றே இந்த மாதிரி மதப் பெயர்களைப் பொய்யாக வைத்துக் கொண்டு வெறுப்பேற்றும் விஷமிகளைக் கட்டுப் படுத்த வேண்டும்.
தமிழ்மண நிர்வாகத்தில் மூவர் குழு ஒன்று ஏற்படுத்தி அந்தக் குழுவில் அனைவரும் பதிவு செய்யலாம்.
பெயரிலியாக எழுதுபவர்களுக்கும் எண்கள் கொடுக்கலாம்.
பெயரிலியாக எழுதலாம் ஆனால் பெயர் மாற்றம் வன்மத்திற்காகப் பயன் படுத்தலாமா?பெயரிலே வேண்டாமென்றால் கூடப் பரவாயில்லை.//

தமிழ்மணம் நிர்வாகம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அசோக் said...

//சீரா என்ற பெயரில் ஒரு போலி இஸ்லாமியர்!

சமீப காலமாக சீரா என்ற பெயரில் பதிவுகள் எழுதி வரும் ஒரு பதிவரை நாம் அனைவரும் அறிவோம்.//

அவர் எழுதும் அனைத்தும் ....

Anonymous said...

இந்த சீரா என்பவன் சகோதரர் அபூமுஹையை வம்பிழுக்கும் போதே சந்தேகப்பட்டேன். அதே போல் உணர்வு இதழ் விடுதலைக்கு மறுப்பு எழுதியதை இவன் மீள் பதிவு செய்து கொண்டிருந்தான். அதே போல் இவனுடைய பின்னூட்டங்களில் பாக்கிஸ்தானிடம் அனு ஆயுதங்கள் இருப்பதால் இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாது என்று சீண்டி சாதாரனமாக பதிவுகள் படிக்கும் இந்து சகோதரர்களை தூண்டிக்கொன்டிருந்தான். இவர்கள் மாதிரி ஆட்களை பற்றி ஏற்கனவே அமுக எச்சரிக்கை செய்திருந்தது. இதே வித்iதையை தான் தமிழ்மனி என்ற பெயரில் பார்ப்பனமனி எழுதியயை தோலுரித்து காட்டி இருந்தார் சம்பூகன் என்ற நண்பர். இதே போல் தான் திண்னையில் சூபி முகம்மது என்ற பெயரில் ஒருவர் எழுதிக்கொண்டிருந்ததை சகோதரர் வஹ்ஹாபி தோலுரித்து காட்டி இருந்ததார்.இவர்கள் விசயத்தில் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

suvanappiriyan said...

அசோக்!

//அவர் எழுதும் அனைத்தும் ....//

வார்த்தையை முடிக்காமல் விட்டால் நாம் எவ்வாறு புரிந்து கொள்வது. :-)

suvanappiriyan said...

அபு சிதாரா!

//இவர்கள் விசயத்தில் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

உலக தீவிரவாதமும் போலி மதசார்பின்மையும்: தமிழச்சியின் பகுத்தறிவிற்கு அவரே விட்டு கொண்ட ஒரு சவால் ?

http://www.veeran.co.cc/2008/12/blog-post_01.html

Anonymous said...

தமிழச்சியும் விரைவில் கைது செய்யப்படலாம்


http://www.veeran.co.cc/2008/12/blog-post_01.html

Unknown said...

சீரா என்பவன் முன்பு சரவனா ஸ்டோரின் "இதயம் பேசுகிறது"வில் வேலை செய்து விட்டு, அது மூடியப்பிறகு தற்போது ""துக்ளக்""கில் குப்பை கொட்டிக்கொண்டுள்ளான் இது அறிய முடிகிறது....!