Followers

Wednesday, July 11, 2012

ஐஃபா 2012ல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்ப் பேச்சு!

ஐஃபா 2012ல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்ப் பேச்சு!



ஐஃபா 2012 விருது வழங்கும் விழாவில் எல்லோரையும் ஆச்சிரியப்பட வைத்தது ரஹ்மானின் தமிழ் பேச்சு. ஒரு காலத்தில் தமிழர்கள் என்றாலே கிண்டலடித்துக் கொண்டிருந்த இந்தி திரைப்பட உலகம் இன்று ரஹ்மானின் இசைக்கு வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்தி பேசும் அதிகமான ஆட்கள் அமர்ந்துள்ள சபையில் 'நான் தமிழன்டா...' என்று உரத்து கூறிய ரஹ்மானின் மொழிப் பற்று தமிழ் ஆர்வலர்களால் கண்டிப்பாக பாராட்டப்படும். ஆனால் அங்கு அமர்ந்திருந்த பெரும்பான்மையான மக்களுக்கு தமிழ் தெரியாத போது வலிந்து தமிழ் பேசியது ஏற்புடையதா என்பது விவாதத்திற்குரிய விஷயம்.

------------------------------------------------

நபி அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உணர்வுள்ள முஸ்லிம் மேன்மையான அணுகுமுறையும், சிறந்த அறிவுடையவராகவும் இருப்பார். சபையில் மூன்று நபர் மட்டும் இருக்கும் நிலையில் ரகசியமாகவும் கிசுகிசுப்பாகவும் பேசுவது அவருக்குத் தகுதியல்ல. அதனால் அங்கு இருக்கும் மூன்றாம் நபரின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு அவருக்கு மனநெருக்கடியும் வெறுப்பும் தோன்றிவிடும். ஒருவரிடம் மட்டும் பேசியே தீரவேண்டும் என்ற நிலையிருந்தால் அந்த மூன்றாம் நபரிடம் அனுமதி பெற்று, அவரிடம் தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு, சுருக்கமாகப் பேசிட வேண்டும்.


இந்த நபி மொழி மூலம் மூன்று பேர் இருக்கும் சபையில் அனைவருக்கும் தெரிந்த மொழியிலேயே பொதுவான மொழியிலேயே பேசிட வேண்டும் என்று அறிகிறோம். ஏனெனில் மொழி தெரியாதவர் தன்னை பற்றி கிண்டலடிக்கிறாரோ என்று எண்ணி விடக் கூடாதல்லவா?

---------------------------------------------


தமிழ் மொழி பற்றியும் இறைத் தூதர் ஆதமைப் பற்றியும் இணையத்தில் படித்த செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். இது ஆதாரபூர்வமாக நபி மொழியா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.


“ஆதம் (அலை) அவர்கள் இந்தியப் பூமியில் ‘தஹ்னா’ எனும் இடத்தில் இறக்கப் பெற்றார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று ஸஈது இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

وعن الحسن البصري قال : أهبط آدم بالهند ، وحواء بجدة ، وإبليس بدستميسان من البصرة على أميال ، وأهبطت الحية بأصبهان . رواه ابن أبي حاتم .

கொழும்பு நகருக்கு 45 மைல் கிழக்காக அமைந்திருக்கும் மலைத்தொடரின் சிகரம் ஒன்று ஆதம் சிகரம் எனப்படுகின்றது. இதன் உயரம் 7352 அடியாகும்.

இதன் உச்சியிலுள்ள பீடபூமியில் மனிதக் காலடிச்சுவடு ஒன்று பதிந்துள்ளது. இப்பாதச்சுவடு இஸ்லாமிய - கிறித்தவ சமயத்தவர்களால் ஆதம் நபியினுடையதென்றும் பௌத்தர்கள்
புத்த பிரானுடையதென்றும், இந்துக்கள் சிவபிரானுடையதென்றும்’ சொல்லப்படுகிறது. இலங்கையின் பழைய வரலாறு கூறும் மகாவம்சம் சமணகூடம் என்கிறது. மார்க்கோபோலோ ஆதம் சிகரத்தின் உச்சியில் ஆதிமனிதன் ஆதமின் சமாதி இருப்பதாகக்
குறிப்பிடுவது ஆய்வுக்குரியது.

மனித இனத்தோற்ற வரலாற்றை ஆய்வுசெய்த அறிஞர்கள் பலரும் மனித குலத்தோற்றம் குமரிப் பெருநாட்டிலிருந்து (உலகம் தோன்றியபோது, இன்றைய குமரிமுனைக்குத்
தென்பகுதி ஒருபுறம் தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர் தீவு முதலியவற்றோடும், மறுபுறம் ஆஸ்திரேலியா, ஜாவா, சுமத்திரா, மலேயா முதலியவற்றோடும் இணைந்து பூமத்திய ரேகை வரை பரவி இருந்தது. விந்திய மலைக்கு அப்பால் சிந்து கங்கைச்
சமவெளியும், இமயமலை உள்ளிட்ட பகுதிகளும் கடலுக்குள் அமிழ்ந்திருந்தன. இத்தகைய பெருநிலப்பரப்பு குமரிக்கண்டம் எனப்பட்டது. நிலநூல் வல்லார் இதனைக் கோண்டுவானா
(Gonduvana) என்றும், உயிரியலார் லெமூரியா (Lemuria) என்றும் கூறுவர்.)

உலகம் தோன்றிய காலத்தில் குழம்பாக இருந்த மண் முதலில் குளிர்ச்சி அடைந்து அமைந்த நிலப்பரப்பு குமரி நாடு என்றும் இங்குதான் மனிதன் தோன்றி இருக்கக்கூடும் என்றும் ஸ்காட் எலியட் கருதுகின்றார். அவரது கருத்தை ஹெக்கல், தமிழறிஞர் இலக்குவனார் போன்றோர் வழிமொழிவதால் முதல் மனிதராகிய ஆதம் நபியின் தோற்றம் தென்தமிழ்நாடாகிய
குமரிநாடு எனத் தெளியலாம்.

குமரிப் பெருநாட்டில் வாழ்ந்த ஆதம்-ஹவ்வா தம்பதியர்க்கு ஆபில், காபில், சேத் (ஷீத்,சேது) என்னும் மூன்று ஆண்மக்கள் பிறந்தனர். ஷீத் மருவி காலப்போக்கில் சேது வாக மாறி விட்டதோ. அதுதான் தற்போதய சேது சமுத்திர திட்டமோ? இதற்கெல்லாம் சரியான ஆதாரம் இல்லை. இதன் உண்மை நிலையை இறைவனே அறிந்தவன்.

--------------------------------------------

புதுடில்லி, ஜூலை 11- ராமர் பாலத்தை பாதுகாக்க மத்திய அரசு தவறினால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மூத்த தலைவர் வி.கே. மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் சேது சமுத்திர திட்டப்பணிகள் துவங்கின. ஆனால் ராமர் பாலம் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், அதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என் றும் உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப் புகளும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து இதுபற்றி ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேது சமுத்திர திட்டப் பணிகளை நிறுத்தி வைத்த மத்திய அரசு மாற்றுப் பாதை குறித்து ஆராய நோபல் பரிசு வென்ற சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்சவுரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அண்மையில் அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து மத்திய அரசு இன்னும் இறுதி முடிவெடுக்க வில்லை. இன்னும் 8 வாரத்திற்குள் ஒரு முடிவு எடுத்து அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் வி.கே. மல்ஹோத்ரா கூறுகையில்,
ராமர் பாலம் விலை மதிப்பற்ற தேசிய பாரம்பரிய சின்னமாகும். அதனால் அதை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். ராமர் பாலத்தை தகர்க்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை என்று கூறும் ஆர்.கே.பச்சவுரியின் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரிக்க வேண்டும். மத்திய அரசு ராமர் பாலத்தை காக்க தவறினால் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம் என்றார்.

விடுதலை
11-07-2012






13 comments:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

SALAM,
நல்லப் பதிவு சகோ.

புதிய வரவுகள்:
வட்டியை தடுக்க 1st இத செய்யுங்க (வட்டியை ஒழிக்க முதல் அடி எடுத்துவைத்துளோம்),ரமலானே வருக -50வது பதிவு

உங்கள் கருத்தையும்,ஆலோசனையும் எதிர்நோக்கும் உங்கள் சகோ.

suvanappiriyan said...

சலாம்!

//புதிய வரவுகள்:
வட்டியை தடுக்க 1st இத செய்யுங்க (வட்டியை ஒழிக்க முதல் அடி எடுத்துவைத்துளோம்),ரமலானே வருக -50வது பதிவு

உங்கள் கருத்தையும்,ஆலோசனையும் எதிர்நோக்கும் உங்கள் சகோ.//

சிறந்த முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

suvanappiriyan said...

ஸ்மிதா!

//Get your history right. It was Jinnah who was adamant in forming Pakistan. Rajaji warned Gandhi in 1942 itself that JInnah would want to go seperately, but he was branded anti national for saying so.//

"ராஜாஜியின் வக்கீல் மூளை, தேசம் என்பது ஏதோ ஸ்தவர ஜங்கம சொத்து என்பதுபோல, சகோதரர்களுக்கிடையே மனவேற்றுமை வந்து விட்டால் பாகப் பிரிவினை செய்துகொள்வதுதான் உத்தமம் என்று அதன் பங்கிற்கு அனைவரையும் முந்திக்கொண்டு பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவும் தெரிவித்துவிட்டது! பாகப்பிரிவினை செய்துகொண்டு விட்டால் பங்காளிகளுக்கிடையே பகைமை மறைந்துவிடும், நல்லது கெட்டதுக்கு ஒன்று சேர்ந்துகொள்வார்கள் என்பது ராஜாஜியின் வாதம். அதற்குப் பரிசாக வரப் போகும் பாகிஸ்தானில் அவருக்கு ஓர் உயர் பதவி கொடுக்க ஜின்னாவும் தயாராக இருந்தார்! ராஜாஜிக்கும் திருவிதாங்கூர் திவான் சர் சி.பி. ராமஸ்வாமி அய்யருக்கும் உருவாகப் போகும் பாகிஸ்தானில் ஜின்னா பதவி நாற்காலிகளைத் தயாராகப் போட்டு வைத்திரு ந்தார்! அய்யருக்கு நாற்காலி போடக் காரணம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் பாகிஸ்தானத்துடன் இணைப்பேன் என்று அவர் மிரட்டியதற்காக! அய்யரின் முதுகெலும்பை முறித்துப் போட்டார், வல்லபாய் பட்டேல்!"
மலர் மன்னன் இதே திண்ணையில் முன்பு எழுதிய கட்டுரையில் தேசப்பிரிவினையில் ராஜாஜியின் பங்கு எந்த அளவு என்பதை அழகாக கொடுத்துள்ளார் பார்த்துக் கொள்ளுங்கள்..
http://dondu.blogspot.com/2006/01/blog-post_15.html
http://urpudathathu.blogspot.com/2006/01/blog-post_16.html
"இந்துஸ்தானத்தில் இந்துக்களே ஒரு தேசமாக இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் சிறுபான்மையினரே. ஒரே மண்ணில் வாழ்வதனாலேயே அவர்கள் அந்த தேசத்தவர்கள் ஆகிவிட மாட்டார்கள். முகம்மதியர்கள் அல்லது கிறிஸ்துவர்கள் இந்தியாவை தங்களின் புனித பூமியாக கருதுவதில்லை. அவர்களது புனிதபூமி அரேபியா, பாலஸ்தீனம் என்று தொலைதூரத்தில் உள்ளது... அவர்களது பெயர்களும் கண்ணோட்டமும் அந்நிய மூலத்தினைக் கொண்டுள்ளது.... இந்த சூரிய மண்டலத்தில் இந்துக்களாகிய நாம் நமக்கென்று ஒரு நாட்டைக் கொண்டிருக்க வேண்டும்"

-ஆர்.எஸ்.எஸ்ஸின் பிதாமகரான சாவர்க்கார்
இப்படி இந்த நாடு துண்டாடப்படுவதில் பலரும் அங்கம் வகித்து விட்டு பழிகளை முஸ்லிம்களின் மேல் மட்டும் போடுவது நியாயமா?
//I will tell u one more thing. There was a plebicite held at that time. 75% of the muslims wanted a seperate nation.//

தவறான வாதம். பிரிவினையின் போது வங்காளம் பஞ்சாப் போன்ற மாநிலங்கள்தன் பிரிந்ததே தவிர தமிழகத்திலோ அல்லது கர்நாடகா உபி டெல்லி என்று எந்த பிரதேசத்திலிருந்தும் மக்கள் பாகிஸ்தான் செல்லவில்லை. தங்களின் சொந்த மண்ணை விட்டு அவர்கள் எப்படி போவார்கள்? போனது பார்டரில் இருந்த மக்கள் மட்டுமே அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் சென்றனர். எனவே வரலாறை நீங்கள் நன்கு தெரிந்து கொண்டு பேசுவது நல்லது.

தியாகி திலகர் செய்த செயற்கரிய செயல்:

புனேயும் கோயம்புத்தூரும் இந்தியாவில் பிளேக் எனும் கொள்ளை நோய்க்குப் பேர் போனவை. எலிகளால்தான் இந்நோய் பரப்பப்படுகிறது என்பதால் எலிகளைக் கொல்ல 1918-இல் அரசு நடவடிக்கைகளை எடுத்தது. எலி விநாயகனின் வாகனம் என்று இந்து மதக் கதையைக் காட்டி மக்களைத் தூண்டி, அந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கொலை செய்ய வைத்தவர் திலக். கொலைகாரர்கள் சபேக்கர் சகோதரர்கள். இதற்காகத் தண்டனை பெற்றவர் திலக்.

திலகருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவரங்களை துர்காதாஸ் என்ற எழுத்தாளர் / ஆய்வாளர் from curzon to nehru and others என்ற தம் நூலின் 62-ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சிராஜ் said...

சலாம் அண்ணன்...

ஆதம் அலை கட்டிய முதல் பள்ளி மெக்காவில் உள்ள காபா அல்லவா???? அப்ப அதை சுற்றி தானே அவர் பிறந்து இருக்க வாய்ப்பு அதிகம்..

இது பற்றி தங்கள் கருத்து என்ன???

சிராஜ் said...

மூன்று பேர் இருக்கும் இடத்தில் இருவர் தனியாக பேசாதீர்கள் என்பது எவ்வளவு உண்மை.. மாஷா அல்லாஹ், மனிதனின் ஒவ்வொரு அசைவுகளிலும் தலையிடும் இஸ்லாம் உண்மையிலே ஒரு ஆச்சரியம் தான்..

சிந்திக்கும் மக்களுக்கு நிச்சயமாக இறைவன் ஏராளமான அத்தாட்சிகளை வழங்கியே உள்ளான்.. அனைவரும் நேர் வழி பெற்று சுவனம் செல்லக் கூடிய மக்களாக ஆக வேண்டும்... ஆமீன்...

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//ஆதம் அலை கட்டிய முதல் பள்ளி மெக்காவில் உள்ள காபா அல்லவா???? அப்ப அதை சுற்றி தானே அவர் பிறந்து இருக்க வாய்ப்பு அதிகம்..

இது பற்றி தங்கள் கருத்து என்ன???//

இருவரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டதாகவும் அன்னை ஹவ்வா அவர்களை தேடி அலைந்து முடிவில் மெக்காவை வந்தடைந்ததாக முன்பு படித்துள்ளேன். இது பற்றிய செய்திகள் ஆதாரபூர்வமான ஹதீதுகள் தானா என்பதை சரி பார்க்க வேண்டும். ஆதாரம் கிடைத்தால் பகிருகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Seeni said...

sir!

sethuvukku paathai amaiththathe-
bjp thaane...

'பசி'பரமசிவம் said...

ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்ப் பற்றும், அதைப் பிறர் அறியும் வகையில் பதிவு எழுதிய தங்களின் தமிழ்ப் பற்றும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நன்றி சுவனப்பிரியன்.

suvanappiriyan said...

சகோ சீனி!

//sethuvukku paathai amaiththathe-
bjp thaane...//

பி.ஜே.பி பண்ணுவது அரசியல். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு முனைவர் பரமசிவம்!

//ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்ப் பற்றும், அதைப் பிறர் அறியும் வகையில் பதிவு எழுதிய தங்களின் தமிழ்ப் பற்றும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஸ்மிதா!

//Piriyan,

Even for a moment admitting that islam is a “perfect” religion, why do right thinking muslims not say a word against fatwas, against the treatment meted out to salman rushdie, taslima nasreen & the islam terrorists who indulge in senseless killing?//

எதிர்ப்பை எவ்வாறு தெரிவிப்பது? முஸ்லிம்களிடம் சிறந்த ஊடகங்கள் இல்லாதது ஒரு குறை. பத்திரிக்கை துறை, சினிமா, தொலைக்காட்சி என்று எந்த இடத்திலும் முஸ்லிம்களின் உள்ள குமுறல் சரியாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படவதில்லை. ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி குண்டு வைத்தால் அவனது பெயர் அவனது மதம் முதற்கொண்டு பிரபல்யபடுத்தி அதற்கு கண் காது மூக்கு வைத்து ஒரு கதையை செட் செய்து விடுகின்றனர். இதுதான் தொடர்கதை.

டெல்லி இமாம் புகாரியின் பேச்சை 5 சதவீத இஸ்லாமியர் கூட கேட்பதில்லை. கடைசியில் அவர் காமெடி பீஸாகப் போனது வேறு கதை. :-)

//We have seen recently in the papers how a muslim divorced hi wife over the internet & this divorce was upheld by the deoband clergy. Another muslim divorced his wife over phone by uttering talaq thrice & this too was approved.
Islam sure keeps change with the times.//

இவை எல்லாம தவறு என்று எடுத்து சொல்லி வருகிறோம். மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. 'தலாக்..தலாக்..தலாக்' என்று மூன்று முறை ஒரே நேரத்தில் சொல்வது குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாகும். ஒரு தலாக் சொன்னால் பிறகு விருப்பப்பட்டால் கணவன் மனைவியாகவே வாழலாம். இரண்டு சொன்னாலும் வாழலாம். இதற்கிடையில் நான்கு மாதங்கள் உள்ளன. மூன்றாவது முறையும் அவன் தலாக் சொன்னால் அதன்பிறகுதான் உறவு முறியும். அந்த மக்களுக்கு இஸ்லாமிய சட்டத்தை விளக்க வேண்டும். இதற்கெல்லாம் காரணம் முஸ்லிம்கள் குர்ஆனை சரியாக விளங்காததுதான்.

'அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இறைவன் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான்.'
-குர்ஆன் 4:35

உடன் தலாக் சொல்லிவிடுங்கள் என்று கட்டளை இல்லை. அடுத்து விவாகரத்து செய்யப்பட்ட பெண் மறுமணம் புரிவதை தடுக்கவும் கூடாது.

'பெண்களை விவாகரத்து செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தமக்கு பிடித்த கணவனை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதை தடுக்காதீர்கள்'
-குர்ஆன் 2;232

தற்காலங்களில் இந்து மதம் கிறித்தவ மதங்களிலும் விவாகரத்து மிக அதிகரித்து விட்டதை பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். இந்து, கிறித்தவ மதங்களை விட இஸ்லாத்தில் விவாகரத்து குறைவாகவே நடக்கிறது.

Anonymous said...

இலங்கையின் ஆதம் பாதம் என்பது கற்பனையே !!! ஆதிக் காலங்களில் சமண / பௌத்தர்கள் அருகனை / புத்தனை சிலையாக வடிக்கும் வழக்கம் கொண்டிருக்கவில்லை. அவர்கள் பாதங்களை உருவகப் படுத்தியே வழிப்பட்டார்கள் ... !!!

_____________________________

பொதுச் சபையில் அவரவர் தெரிந்த மொழிகளில் பேசுவது தவறல்ல ... மொழிப் பெயர்க்க இக்காலத்தில் வசதி இருப்பதால் .. இரகசியங்களாக எதுவும் இருப்பதில்லை ... ரக்மான் செய்தது தவறாக எனக்குப் படவில்லை ... !!!

_____________________________

கோண்டுவனா என்படுவதும் தமிழாய்வாளர்கள் கூறும் குமரிக் கண்டமும் ஒன்றல்ல !!!

கோண்டுவனா எனப்படுவது வடதுருவ கண்டங்கள் ஒரே நிலப்பரப்பாய் இருந்தவை. இவற்றில் கடலில் மூழ்கியதாக இல்லை. பிரிந்தத்தாகவே கருதுகின்றோம்.

குமரி / லெமூரிய என்பது கடலில் மூழ்கியதாக கருதும் நிலப்பரப்பு ..

_____________________________

அதே போல ஷேத் = சேதுவானது என்பதும் கற்பனையே !!! சேது என்ற சொல்லானது வடமொழிச் சொல்லாகும்.. அதன் அர்த்தம் பாலம் என்பதுவே !!! இரண்டு சொற்களின் சொற் ஒற்றுமை காரணமாக எழுந்த மயக்கமே அது ...

_____________________________

பாக் நீரிணையில் இருக்கும் ஆதம் பாலம் எனப்படும் ராமர் பாலத்தை பாழ்படுத்துவது சுற்றுச் சூழல் கேடுகளை உண்டாக்க வல்லது. மன்னார் வளைக் குடாவில் இருக்கும் அரிய விலங்கினங்களை கொல்ல வாய்ப்புள்ளது என்பதால் அதனை நானும் எதிர்க்கின்றேன். ராமர் என்ற கதாப் பாத்திரம் தென்னிந்தியா வந்து பாலம் கட்டியது என்பதை நான் ஏற்கவில்லை .. உண்மையாகவும் கருதவில்லை ..

_____________________________

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//அதே போல ஷேத் = சேதுவானது என்பதும் கற்பனையே !!! சேது என்ற சொல்லானது வடமொழிச் சொல்லாகும்.. அதன் அர்த்தம் பாலம் என்பதுவே !!! இரண்டு சொற்களின் சொற் ஒற்றுமை காரணமாக எழுந்த மயக்கமே அது ...//

ஆதம் மலையைப் பற்றியும் மற்றும் சேது பாலத்தைப் பற்றியும் வரும் தகவல்களை நானும் நம்பவில்லை. ஏனெனில் வேறு சரித்திர ஆதாரங்களோ நபி மொழிகளோ இல்லாததால் நானும் நம்பவில்லை. கிடைத்த செய்தி நம்பகமானதுதானா என்று தெரிந்து கொள்வதற்காகவே பகிர்ந்தேன்.