Followers

Friday, July 13, 2012

'ஈ'.....மற்றுமொரு விட்டலாச்சாரியா!

நேற்று வியாழக் கிழமையாதலால் நாளை விடுமுறை தானே என்று பக்கத்தில் இருக்கும் நண்பர் அன்வரின் ரூமுக்கு சென்றேன். அங்கோ படம் 'நான் ஈ' மும்முரமாக ஓடிக் கொண்டிருந்தது. பொதுவாக திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அருமையான ஓய்வு நேரங்களின் மூன்று மணி நேரத்தை அநியாயமாக விழுங்கி விடுவதால்...! இதுபோல் எதேச்சையாக சூழ்நிலை அமைந்தால் என்னதான் சொல்கிறார்கள் என்று அவ்வப்போது பார்ப்பதுண்டு. மிகச் சிறந்த மக்களின் பொழுதுபோக்கு சாதனமான இந்த திரைப்படத் துறையில் இன்னும் நாம் வளர வேண்டியது அதிகம் உள்ளது என்பதையே இந்த படம் எடுத்துக் காட்டுவதாக இருந்தது. மறு ஜென்மம் என்பது நிகழ சாத்தியமே இல்லை என்ற போதும் அதை அடிப்படையாக வைத்து கொலை செய்யப்பட்ட ஹீரோ 'ஈ' யாக மறு அவதாரம் எடுத்து வில்லைன கொல்வதாக படத்தை முடித்திருக்கிறார்கள்.



இதில் கிராஃபிக்ஸ் காட்சிகள் வேறு...எந்திரன் படம் கூட கிராபிக்ஸ் கலந்து எடுக்கப்பட்டாலும் அறிவியல் முன்னேற்றத்தையும் கலந்து எடுக்கப்பட்டதால் ஓரளவு தேறியது. ஓரளவு நம்பும்படியாகவும் இருந்தது. 'அனகொண்டா' போன்ற படங்கள் நிகழ்வுகளையும் அந்த குழு சந்திக்கும் பிரச்னைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இது போன்று அறிவியலையும் உண்மை நிகழவுகளையும் கிராஃபிக்ஸ் மூலமாக தந்தால் படம் பார்க்கவும் ஓரளவு ஆர்வத்தை தூண்டும். அதை விடுத்து முன்பு வரும் விட்டலாச்சாரியா படங்களைப் போல் மனிதன் ஈயாக மாறுவதும் ஹோமம் வளர்த்து அதை அழிக்க பருந்துகளை ஏவி விடுவதும் பார்க்க தமாசாக இருக்கிறது. 10 வயது 15 வயது சிறுசர் சிறுமியர்கள் ஆர்வத்தோடு பார்கலாம். கையாண்டிருக்கும் சில கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு வேண்டுமானால் பாராட்டலாம். மற்றபடி வழக்கமான ஒரு தமிழ்படம்தான்.

சிறந்த திரைப்படங்கள் என்பது சமூகத்தை புரட்டிப் போடக் கூடியதாக இருக்க வேண்டும். ஹாலிவுட் திரைப்படங்கள் எந்த அளவு தத்ரூபமாக காட்சிகளை அமைக்கிறார்கள். கதைகளை எந்த அளவு நேர்த்தியாக தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை எல்லாம் கணித்து நமது தமிழ்படங்களும் தங்களது பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு படம் பார்ப்பவர்கள் ஆபாசத்தை நாடாமல் நல்ல கருத்துள்ள படங்களை ஆதரிக்க வேண்டும்.

-----------------------------------------------------------------------

தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்!




திரைப்படங்களின் மூலம் பல நல்ல செய்திகளையும் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு இந்த காணொளிகள் சிறந்த உதாரணமாக திகழ்கிறது. ஒரு அரேபிய குடும்பத்து இஸ்லாமிய இளைஞன் எவ்வளவு ஜாலியாக தவறுகளை செய்து வருவதும் தனது தாயையும் அலட்சியம் செய்வதையும் மிக அழகாக காட்டியுள்ளனர். முடிவில் மனம் திருந்தி இறைவனிடம் தொழுது மன்னிப்பு கேட்டு தனது தாயிடமும் மன்னிப்பு கேட்டு திருந்துவதாக இந்த குறும்படம் அமைந்துள்ளது.

-----------------------------------------------------------------------



குர்பான் படத்தில் வரும் ஒரு அருமையான காட்சி. தீவிரவாதத்தை பரப்புவது யார்? தாலிபான்களை உருவாக்கியது யார்? ஈராக்கில் குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்றது யார்? என்று பல கேள்விகளை அமெரிக்க மாணவர்களிடம் கேட்டு அவர்களின் ஐயங்களை தீர்ப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. செய்ஃப் அலிகான் ஜிகாதுக்கு அழகிய முறையில் விளக்கமும் கொடுக்கிறார். சிறந்த இந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.

-----------------------------------------------------------------------



அமெரிக்காவில் சில இடங்களில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதத்தை ஏபிஸி நிறுவனம் குறும்படமாகவே எடுத்துள்ளது. ஒரு உணவு விடுதியில் ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு பொருட்கள் தர அந்த விடுதியின் பணியாளர் மறுக்கிறார். அதற்கு காரணமாக அவர் சொன்னது அந்த பெண் அணிந்திருந்த முக்காடு. 'எனது கஸ்டமர்களை பாதுகாக்க வேண்டும். நீ ஏதும் பாம் மறைத்து வைத்திருந்தால் எனக்கல்லவா பிரச்னை' எனகிறான் அந்த கிறுக்கன். அந்த பெண் மனது என்ன பாடு பட்டிருக்கும். அங்கு வந்த மற்ற அமெரிக்கர்களோ அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததையும் பார்க்கிறோம். 'தலை முக்காட்டை எடுத்து விட்டு வா.. பொருட்கள் தருகிறேன்' என்றதற்கு கடைசி வரை அந்த பெண் ஹிஜாபை நீக்காமலேயே அந்த கிறுக்கனோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இது போன்ற நிகழ்வுகள் இன்று அமெரிக்காவில் மிக சர்வ சாதாரணமாக ஆகி விட்டது. இந்த இடத்தில் யார் நம் கண்ணுக்கு தீவிரவாதியாக தெரிகிறார். கண்டிப்பாக அந்த பெண் அல்ல. பாசிச கருத்துகளை வெளியிடும் அந்த நிறுவனத்தின் சிப்பந்திதான் உண்மையான தீவிரவாதி.

----------------------------------------------------------------------


சென்னை,ஜூலை 12-

சென்னை விருகம்பாக்கம் பாலலோக் தனியார் பள்ளியில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முஸ்லிம் பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்தார். ஆனால் தேர்வு அறைக்குள் பர்தாவுடன் வரக்கூடாது என்று ஊழியர்கள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

ஆனால் பர்தாவை அகற்ற அந்த பெண் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் எடுத்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்கலாம். உடை விஷயத்தில் தலையிடகூடாது என்று அந்த பெண் காரசாரமாக வாதம் செய்தார்.

ஆனால் தேர்வு மைய ஊழியரோ பர்தா அணிந்து தேர்வு எழுதினால் நீங்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் விவாதிப்பது எப்படி தெரியும்? என்று கூறி உள்ளே அனுமதிக்க மறுத்தார். இதனால் சிறிது நேரம் பரபப்பு ஏற்பட்டது. நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னரே பர்தா அணிந்தபடியே அவர் தேர்வு ஏழுத அனுமதிக்கபட்டார்.

-விடுதலை
--------------------------------------------------------------------

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யா; திருச்சியைச் சேர்ந்த ஜெயா; வேதாரண்யம் வட்டம், வண்டல் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா; பழனி அருகிலுள்ள க.கலையமுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா; தஞ்சை மாவட்டம் வடசேரியைச் சேர்ந்த சதுரா; இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 17 வயதான திருச்செல்வி; திண்டுக்கல் அருகேயுள்ள புள்ளக்காடுபட்டியைச் சேர்ந்த சங்கீதா; மானாமதுரை வட்டம் கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவக்குமார்; தண்டாரம்பட்டு வட்டம், ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான துரை; ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான இளங்கோ; கோவை மாவட்டத்திலுள்ள சோமனூரைச் சேர்ந்த அருந்ததியினரான சிற்றரசு; திருவாரூக்கு அருகேயுள்ள அரிதுவார்மங்கலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவாஜி இவர்கள் அனைவரும் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காகக் கொல்லப்பட்டவர்கள். கடந்த நான்காண்டுகளில் நடந்து பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ள கௌரவக் கொலைகளின் எண்ணிக்கையே இத்தனை இருக்கிறது என்றால், அம்பலத்துக்கு வராமலும், போலீசாரால் அமுக்கப்பட்டும் மறைக்கப்பட்ட கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை எத்துனை இருக்கக்கூடும்?


பொள்ளாச்சி நகரையடுத்துள்ள பூவலப்பருத்தி கிராமத்தில் ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் செருப்பு அணிந்து கொண்டு செல்லக்கூடாது என்ற தீண்டாமை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதன் சாட்சியம்

http://www.vinavu.com/2012/07/13/casteist-tn/

17 comments:

suvanappiriyan said...

புனை பெயரில்!

//Divorce is not a criminal offence, ONLY having more wives IS. I pity for you Su Pi//

More wives is not a criminal offence, only having "sinna veedu" is. I pity for you punai peyaril. I pity for the sisters also. :-(

suvanappiriyan said...

ஸ்மிதா!

//Piriyan,
U say muslim do not have the media to air their views. What are the rich muslims like the nawab of Arcot doing? They can help. //

ஆற்காடு நவாபே ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தாலும் பெரும்பான்மையினரை பகைத்துக் கொண்டு பத்திரிக்கையை வெற்றிகரமாக நடத்தி விட முடியாது. விளம்பரங்களை வைத்தேதான் தினமணி, தினமலர், தினகரன் போன்ற பத்திரிக்கைகள் ஓட்டப்படுகின்றன. தினசரி ஆரம்பித்த அப்துல் சமதின் 'மணிச்சுடர்' தற்போது மூடும் தருவாயில் உள்ளது. இதுதான் இன்றைய நிலைமை. ஆனால் வருங்காலம் சிறப்பாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட்டுள்ளோம்.

//Talking of divorce rates being low among muslims, it is a generalised statement. Most muslim women put up with the atrocities committed on them & are afraid to come out openly.//

தமிழகத்தில் எங்கள் கிராமத்தில் ஐயாயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கிறோம். எனக்கு கருத்து தெரிந்த நாள் முதலாக எங்கள் கிராமத்தில் நடந்த விவாகரத்து என்பது ஒன்றே ஒன்றுதான். அதுவும் அந்த பெண் கள்ள தொடர்பு வைத்தது நிரூபிக்கப்பட்டதால் ஜமாத் முன்னிலையில் விவாகரத்து பெறப்பட்டது. மற்ற எந்த விவாகரத்தும் எனக்கு கருத்து தெரிந்து நடைபெறவில்லை. இதுதான் தமிழகம் முழுவதும். தற்போதய சூழ்நிலையில் பிடிக்காத கணவனோடு வாழ்வது சாத்தியமே இல்லை. யாரும் எந்த பெண்ணையும் மிரட்டுவதும் இல்லை.

அடுத்து உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் விவாகரத்தில் முதல் 10 இடங்களை பெற்ற நாடுகள் பட்டியலை கொடுத்துள்ளேன். அதில் ஒரு முஸ்லிம் நாடு கூட வரவில்லை என்பதை எனது பதிவில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள். உலகம் முழுவதுமே இதுதான் நிலைமை.

http://suvanappiriyan.blogspot.com/2012/05/10.html
http://www.siliconindia.com/news/general/10-Countries-With-the-Highest-Divorce-Rates-nid-117138-cid-1.html

suvanappiriyan said...

ஸ்மிதா!

//Talking of divorce rates being low among muslims, it is a generalised statement. Most muslim women put up with the atrocities committed on them & are afraid to come out openly.//

மிரட்டப்படுவதற்கு எந்த ஆதாரத்தையும் நீங்கள் சமர்ப்பிக்கவில்லை.

கணவண் / மனைவி விவாகரத்தில்… தமிழகத்திற்கே முதலிடம்….

தமிழகம்… இந்தியாவில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், அது பெருமமைப்படக்கூடிய விஷயமல்ல.. ஏனெனில் 8.2 சதவீதம் கணவன் மனைவியர் விவாகரத்துப் பெற்று முதலிடம், 4 சதவீதம் பெற்று டெல்லி கடைசி இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடங்களை கேரளா, ஆந்திரா, கர்நாடாக மாநிலங்கள் பெற்றுள்ளது.

விதவை/மனைவியை இழந்தவர்/விவாகரத்து பெற்றவர்/தனித்து வாழ்பவர்களின் ஆண்களின் தொகையில் 14.5 சதவீதம் தமிழகம், 14.2 சதவீதம் கர்நாகடமும் பெற்றுள்ளது. மேற்குவங்கத்தில் மேற்கண்ட புள்ளிவிபரங்களில் பெண்கள் 6 மடங்கு ஆண்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளனர்.

.. நன்றி. டைம்ஸ்ஆப்இந்தியா, 5.4.2012
இதற்கெல்லாம் காரணமாக அலசப்படுவது:
1 ) மேற்கத்தியர்கள் நம் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைபட்ட காலங்கள் போய் நம் நாட்டில் விவாகரத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புற்றுநோயை போல பரவிவருகிறது.
2 ) குடும்பங்களில் வாழ்ந்த முதியவர்கள் இன்று தெருக்களிலும், காப்பகங்களிலும் வாழ்கிறார்கள்
3 ) பிள்ளைகள் பெரியவர்களின் அரவணைப்பிலும், வழிகாட்டுதளிலும் வளர்ந்து பண்பாளர்களாகவும், நாட்டு பற்று மிக்கவர்களாகவும் உருவான காலம் போய் இன்று முறையான வளர்ப்பில்லாமல், தடம் மாறி, சீரழியும் அவலங்கள் நடைபெறுகிறது.
4 ) நாட்டின் பொருளாதாரத்தை தாங்கும் இளையஞர்கள் இன்று தரம் தாழ்ந்த பெண்களின் பொய் வழக்குகளால் சிக்கி சிறை சாலைகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள்.
5 ) மேற்கத்திய மோகத்தால் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் நடக்கும் கலாச்சார சீரழிவுகள்.
6 ) பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் பெண்களும், ஆண்களும் காம போதையில் மிதந்து தங்கள் கல்வியை, பொறுப்புகளை, எதிர்காலத்தை தொலைக்கும் அக்கிரமங்கள் பரவலாக்கப்பட்டுள்ளது.
7 ) நாட்டில் காம போதையை ஏற்படுத்தி, மயங்கி கிடக்கும் காதலர்களிடம் கொள்ளையடிக்கும் பன்னாட்டு வியாபார சக்திகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது.
8 ) மேற்கத்திய உடை மற்றும் அழகுசாதன பொருட்களின் அமோக விற்பனையால் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவு பொருளீட்டி வருகின்றன. சொந்த நாட்டில் தொழில் முனைவோரும், நாட்டு பாரம்பரியங்களும் உருத்தெரியாமல் அழிந்து வருகின்றன.
இத்தகைய சட்டங்களை இந்த மண்ணில் பிறந்த, தேச பற்று மிக்க உண்மையான இந்திய குடிமகனுக்கு ஆதரிக்கும் எண்ணம் இருக்காது.
ஆனால் இத்தகைய அநியாய சட்டங்கள் அரங்கேருவதற்க்கு யார் காரணம் ? அதனால் ஆதாயம் அடைபவர்கள் யார்? யார் ?
நிச்சயமாக வர்த்தக நோக்கம் கொண்ட திருடர்களான பன்னாட்டு நிறுவனங்களும் , ஊழல் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தான்.

அஞ்சா சிங்கம் said...

மறு ஜென்மம் என்பது நிகழ சாத்தியமே இல்லை என்ற போதும்...................///////////////////

அப்படியா அடடே அப்போ சொர்க்கம் நரகம் மட்டும் எந்த அறிவியல் அடிப்படையில் சாத்தியம் நண்பரே ...........
ரொம்ப சிலாகிச்சி எழுதுவீங்களே அதான் கேட்டேன் ...........நம்பிக்கை அப்ப்டீன்ன எல்லாருக்கும் பொது உங்க நம்பிக்கை மட்டும் ஒசதின்னா எப்படி பாஸ் .....................

suvanappiriyan said...

அஞ்சா சிங்கம்!

////அப்படியா அடடே அப்போ சொர்க்கம் நரகம் மட்டும் எந்த அறிவியல் அடிப்படையில் சாத்தியம் நண்பரே ...........
ரொம்ப சிலாகிச்சி எழுதுவீங்களே அதான் கேட்டேன் ...........நம்பிக்கை அப்ப்டீன்ன எல்லாருக்கும் பொது உங்க நம்பிக்கை மட்டும் ஒசதின்னா எப்படி பாஸ்//

சொர்க்கம் நரகம் என்று ஒன்று உள்ளதை இறந்து போனவர் வந்து சொன்னால்தான் நம்மால் இந்த உலகத்தில் நிரூபிக்க முடியும். அது நடைமுறை படுத்த முடியாத ஒன்று. நானோ நீங்களோ இறந்தவுடன்தான் இதனை நிரூபிக்க முடியும். ஆனால் மறுஜென்மம் என்பது அவ்வாறு அல்ல. இந்த உலகிலேயே நாம் வாழும் நாளிலேயே காணக் கூடியதாக இருக்கும். அப்படி எதுவும் நிகழ்ந்ததாக ஒரு செய்தி கூட இதுவரை வந்ததில்லை. சில டிவி நிகழ்ச்சிகளில் முன்பே தயாரித்து வைத்த செட்அப்பான சில மறுபிறவி நிகழ்ச்சிகள் ஒளி பரப்பப்படுகின்றன. அது உண்மையும் அல்ல.

போன ஜென்மத்தில் பிறந்தவர்கள் தான் அடுத்த ஜென்மம் எடுக்கின்றனர் என்பது அறிவுக்கு பொருந்தாத கூற்று .உதாரணத்திற்கு இப்போது நாட்டின் மக்கள் தொகை ஐநூறு கோடி என கொள்வோம் .சில நூறு ஆண்டுகளுக்கு முன் மிகவும் குறைவு .சரி மிருகம் மனிதன் எல்லாம் சேர்த்து ஒரு நூறு கோடி என வைத்து கொள்வோம் .அடுத்து அந்த நூறுகோடி அழிந்து மறு ஜென்மம் எடுத்தால் மறுபடி அதே நூறு கோடிதான் இருக்கணும் .ஆனால் இன்று உலகில் உள்ள உயிரினங்கள் ஆயிரம் கோடி ..

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என பாடினார் அது அவர் காலத்து மக்கள் தொகை என்றால் அந்த தொகை மறுஜென்மம் எடுத்தால் இன்றளவும் முப்பது கோடியாகதானே இருக்க வேண்டும் .ஆனால் இன்று இந்திய மக்கள் தொகை நூறு கோடிக்கும் அதிகம் .ஆக புதிதாக உயிர்கள் தோன்றுகிறது ..

சரி இதை இன்னொரு கோணத்தில் ஆராய்வோம் ..போன ஜென்மத்தில் கெட்டது செய்தவன் இந்த ஜென்மத்தில் விலங்குகளாகவும் தாழ்ந்த ஜாதியாகவும் பிறக்கிறான் ,போன ஜென்மத்தில் நல்லது பண்ணியவர்கள் இந்த ஜென்மத்தில் நல்ல பிறவிகளாக பிறக்கின்றான் என்றால் தாழ்ந்த ஜாதிகாரனும் , விலங்குகளும் தான் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோம் என்பதை அறிந்தால் தான் அதே பாவங்கள் இந்த ஜென்மத்தில் தொடராமல் அடுத்த ஜென்மத்தில் நல்ல பிறவிகளாக பிறக்கக முடியும் ..இதோ இந்த உயர் ஜாதிக்காரன் என்ன நல்லது செய்து இன்று இப்படி நல்ல பிறவியாக பிறந்தான் என எப்படி தாழ்ந்த ஜாதிக்காரன் தெரிந்து கொள்ள முடியும் ??.சரி மனிதனாக பிறக்க நாம் என்ன நல்லது செய்யவேண்டும் என்பது விலங்குகளுக்கு எப்படி தெரியும் ??

ஆக மறுஜென்மம் என்பது அறிவுக்கு புறம்பான ஒன்று.

இந்த மறுஜென்ம நம்பிக்கையால் சுற்று சூழலுக்கு ஏற்படும் சிரமங்களையும் சற்று பார்ப்போம்.

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு பாசன ஆதாரம் பவானிசாகர் அணை. இங்கிருந்து செல்லும் கீழ்பவானி வாய்க்கால் 200 கி.மீ நீளம் கொண்டது. வாய்க்காலில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து வந்துள்ளன. பெரும்பாலும் கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்தவர்கள் உடல்கள்தான் வாய்க்கால்களில் மிதப்பது வழக்கம். கீழ்பவானியிலோ, புத்தாடை உடுத்தப்பட்ட சடலங்கள் அதிகளவில் மிதப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல்களுக்கு புத்தாடை மாட்டி யார் இங்கு தள்ளிவிடுவது என்று விசாரித்ததில் கிடைத்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் வசிக்கும் ஒரு தரப்பு மக்களிடையே வினோத, விபரீத நம்பிக்கை ஒன்று உள்ளது. இறந்தவரது உடலை குளிப்பாட்டி, சடங்குகள் செய்து புத்தாடை அணிவித்து, வாய்க்காலில் வீசி மீனுக்கு உணவாக போட்டால் மறுஜென்மம் நல்லதாக இருக்கும் என்பது இவர்கள் நம்புகிறார்கள். இறந்தவர்களது உடல்களை இவர்கள் புதைப்பதோ, எரிப்பதோ இல்லை. அலங்கரித்து, பாடையில் தூக்கிவந்து, வாய்க்காலில் வீசிவிடுகின்றனர். இவ்வாறு செய்தால், அந்த ஆத்மாக்கள் பேயாக அலையாது என்றும் நம்புகிறார்கள்.
வாய்க்கால்களில் ஆண், பெண் சடலங்கள் மாலையுடன் மிதப்பது அதிர்ச்சியாகவும் பீதி ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. குறிப்பாக புங்கம்பாடி பகுதியில்தான் இவை அதிகம் கரை ஒதுங்குகின்றன.

Anonymous said...

ஈ இன்னும் பார்க்கவில்லை .. பார்க்கவும் தோன்றவில்லை ..

அமெரிக்காவில் முஸ்லிம்கள் எப்படி நடத்தப் படுகின்றார்கள் என்ற நிகழ்ச்சியை ஏற்கனவே தொலைக் காட்சியில் பார்த்ததுண்டு .. நீங்கள் சொன்னது போல அந்த பணியாள் உண்மையான பணியாள் அல்ல.. அந்த பெண்ணும், பணியாளும் நடிகர்கள் .. மக்கள் எவ்வாறு ரியாக்ஸன் செய்கிறார்கள் என்பதை அறிய செய்யப்பட்ட ஒரு நாடகம் .. அவற்றில் பல அமெரிக்கர்கள் முஸ்லிம் பெண்ணுக்காக ஆதரவுக் கொடுத்ததையும், சிலர் அழுதே விட்டனர் .. அமெரிக்கர்கள் பலர் நினைப்பது போல கெட்டவர்களும் இல்லை , மோசமானவர்களும் இல்லை.. மனிதாபிமானம் கொண்டவர்களே அங்கும் அதிகம் உள்ளனர் என்பதை விளக்கவே இந்த நிகழ்ச்சி !!!

மறுபடியும் சரியாக காணொளியை காணத் தவறி விட்டீர்கள் சகோ.

நிச்சயம் நான் அங்கு இருந்தாலும் அப்பெண்ணுக்கு ஆதாரவாகவே குரல் கொடுப்பேன். ஒருவரின் அடையாளங்களை வைத்து பிரித்துப் பார்ப்பது தவறான செயல், கொடுமையான மனித குற்றமாகும் ... !!!

Anonymous said...

சொர்க்கம் நரகம் உண்மை எனில் .. ஏன் மறு ஜென்மம் உண்மையாக இருக்கக் கூடாது சகோ.

நீங்கள் கொடுத்த விளக்கத்தைப் பார்க்கும் போது சாகிர் நாயக்கே தேவலை என்று தோன்றுகின்றது..


உலகில் உள்ள உயிர்களை எப்படி ஆயிரம் கோடி என கணக்கிடுகின்றீர்கள் .. ஒவ்வொரு பாக்டீரியாக்களும் உயிர் தான் .. பூச்சிக்கள், செடி, கொடி மனிதன், விலங்கு என பலவகை உயிர்கள் உண்டு.. அவற்றை கணிப்பது இயலாத காரியம் ...

ஏன் ஒரு பாக்டீரியா மனிதனாக மறுஜென்மம் எடுக்கக் கூடாதா ... ஹிஹி !!!

மறு ஜென்மம் உண்மையா பொய்யா என எனக்குத் தெரியாது .. அறிவியல் நிரூபணமும் இல்லை .. சிலர் ஆய்வில் இறங்கி உள்ளனர்.. அப்படி நிரூபிக்கும் வரை நம்ப போவதில்லை . இது சொர்க்கம் நரகத்துக்கும் பொருந்தும் ..

suvanappiriyan said...

சகோ இக்பால் செல்வன்!

//நிச்சயம் நான் அங்கு இருந்தாலும் அப்பெண்ணுக்கு ஆதாரவாகவே குரல் கொடுப்பேன். ஒருவரின் அடையாளங்களை வைத்து பிரித்துப் பார்ப்பது தவறான செயல், கொடுமையான மனித குற்றமாகும் ... !!! //

அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்று சொன்னதற்கு நன்றி! உடை விஷயத்தில் அணிபவரின் முடிவுக்கே விட்டு விட வேண்டும். மற்றவர்கள் தலையிடுவது தேவையில்லாத பிரச்னையைத்தான் உண்டு பண்ணும்.

//உலகில் உள்ள உயிர்களை எப்படி ஆயிரம் கோடி என கணக்கிடுகின்றீர்கள் .. ஒவ்வொரு பாக்டீரியாக்களும் உயிர் தான் .. பூச்சிக்கள், செடி, கொடி மனிதன், விலங்கு என பலவகை உயிர்கள் உண்டு.. அவற்றை கணிப்பது இயலாத காரியம் ...//

ஒரு தோராயமாக சொல்லப்பட்ட எண்ணிக்கைதான் அது.

//மறு ஜென்மம் உண்மையா பொய்யா என எனக்குத் தெரியாது .. அறிவியல் நிரூபணமும் இல்லை .. சிலர் ஆய்வில் இறங்கி உள்ளனர்.. அப்படி நிரூபிக்கும் வரை நம்ப போவதில்லை . இது சொர்க்கம் நரகத்துக்கும் பொருந்தும் ..//

மறு ஜென்மம் சாத்தியமில்லை என்பதற்கு ஆதாரங்களை கொடுத்துள்ளேன். மறுஜென்மம் உண்மையானால் உயிர்களின் பெருக்கம் அதிகரிக்கக் கூடாது. ஆனால் இன்று வரை அனைத்து உயிரினங்களும் அதிகரித்தே வந்துள்ளன. போன ஜென்ம பாவத்தினால் இந்த ஜென்மத்தில் கஷ்டப்பட்டால் அந்த நபருக்கு எதனால் என்பது விளங்கினால்தான் இந்த ஜென்மத்திலாவது நேர்மையானவாக நடப்பான். அவ்வாறு எவருக்குமே இந்த ஜென்மத்தில் பிறந்ததற்கான காரணம் தெரியவில்லை. எனவே இங்கும் மறுஜென்ம கான்செப்ட் ஒத்து வரவில்லை.

ஆனால் சொர்க்கம் நரகம் என்பது இறந்தவர்கள் மட்டுமே அனுபவிக்க கூடிய ஒன்று. இதை இந்து மதமும் உறுதிப்படுத்துகிறது. மறு வாழ்வு என்பதனை மறு ஜென்மம் என்று தவறாக விளங்கியதால் வந்த குளறுபடி இது.

உங்களின் இன்றைய பதிவில் கூட சைனாக்காரன் கங்கை மாசு பட்டதை அறுவறுப்பாக கூறியதாக பதிவிட்டிருந்தீர்கள். மறு ஜென்மத்துக்காக உடலை கங்கையில் விடுவதால்தான் அதிக மாசுபடுவதாக சொல்கின்றனர். எனவே இங்கும் மறு ஜென்ம நம்பிக்கை சுற்றுச் சூழலை மாசுபடுத்தகிறது.

Anonymous said...

//உடை விஷயத்தில் அணிபவரின் முடிவுக்கே விட்டு விட வேண்டும். மற்றவர்கள் தலையிடுவது தேவையில்லாத பிரச்னையைத்தான் உண்டு பண்ணும்.//

இந்தக் கருத்தில் எனக்கு ஒரு சில உடன்பாடுகள் இல்லை .. அதாவது உடை அணிபவரின் விடயத்தில் அவரின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும் எனில் - சில இஸ்லாமிய நாடுகளில் பிகினி அணிந்து செல்ல விடுவார்களா ? என்ற கேள்வியும் எழும் .. ஒவ்வொரு நாட்டுக்கும் உடை விடயங்களில் ஒருக் கொள்கை இருக்கின்றது .. அந்தக் கொள்கைகளை மீறாமல் உடை அணிந்துக் கொள்ளலாம் என்பது தான் எனதுக் கருத்து ..

அதன் படி ஹிஜாப் அணிவது அவரவர் விருப்பமே !!! ஆனால் புர்கா, நிஹாப் அணிவது உடன்படாதவை .. மனிதனின் அடையாளமே அவனது முகம் தான், அந்த முகத்தை மறைக்கும் படி உடை அணிவது சரியான முறை இல்லை ...

Anonymous said...

//மறு ஜென்மம் சாத்தியமில்லை என்பதற்கு ஆதாரங்களை கொடுத்துள்ளேன். மறுஜென்மம் உண்மையானால் உயிர்களின் பெருக்கம் அதிகரிக்கக் கூடாது. ஆனால் இன்று வரை அனைத்து உயிரினங்களும் அதிகரித்தே வந்துள்ளன. //

நீங்கள் உயிரினம் என்று மனிதனையும் மனிதன் வளர்க்கும் கால்நடைகளை மட்டும் கருதுவதால் ஏற்பட்ட மயக்கமே இது .. உயிரினங்கள் ஒவ்வொன்றும் அதிகரித்து வரவில்லை, மாறாக ஒரு சிலது அழிந்து இல்லாமல் போய்விட்டன, ஒரு சிலது பெருகி வருகின்றன ... மறு ஜென்மம் இல்லை என்பதற்கு தாங்கள் கொடுக்கும் இந்த வாதம் சரியாகப் படவில்லை .. ஏனெனில் பல விலங்குகளின் தொகை உலகம் முழுதும் குறைந்து தான் வருகின்றன.. பல தாவரங்கள், மரங்கள் போன்றவை குறைந்து தான் வருகின்றன.. மனிதன் மட்டுமே ( இன்னும் ஒரு சில விலங்குகள் ) பெருகி வருகின்றான் ஆகவே அழிந்த தாவரங்களும், விலங்குகளும் ஏன் மனிதனாக பிறந்திருக்கக் கூடாது என தோன்ற செய்கின்றன ...

// போன ஜென்ம பாவத்தினால் இந்த ஜென்மத்தில் கஷ்டப்பட்டால் அந்த நபருக்கு எதனால் என்பது விளங்கினால்தான் இந்த ஜென்மத்திலாவது நேர்மையானவாக நடப்பான். அவ்வாறு எவருக்குமே இந்த ஜென்மத்தில் பிறந்ததற்கான காரணம் தெரியவில்லை. எனவே இங்கும் மறுஜென்ம கான்செப்ட் ஒத்து வரவில்லை. //

இதில் பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன ... இந்து மதத்தில் ஒருவனது கர்மவினைக்கு ஏற்ப பிறப்புகள் எடுப்பான் என்றெல்லாம் கூறி இருக்கின்றார்கள் .. ஆனால் பௌத்த / சமண இதில் இருந்து பல்வேறு மாறுபாடான கருத்துக்களைக் கூறுகின்றன .. அதாவது ஒரு மனிதன் பாவம் செய்வதால் மட்டும் மறு பிறப்பு எடுக்கின்றான் என்றெல்லாமல் .. பௌத்த / சமண கர்மவினைகள் கழிக்கப்படாமல் விடுவதால் மறு ஜென்மம் எடுக்கின்றான் என்றெல்லாம் ஒவ்வொரு சித்தாந்தம் ஒவ்வொரு விதமாக கூறிவருகின்றன.. அதாவது மனிதன் மீண்டும் மனிதனாகக் கூட பிறக்கலாமாம் ... ஆன்மா என்ற ஒரு விடயத்தை அறிவியல் நிரூபிக்கும் வரையில் இது வெறும் தியரிகளாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன் ..

// சொர்க்கம் நரகம் என்பது இறந்தவர்கள் மட்டுமே அனுபவிக்க கூடிய ஒன்று. இதை இந்து மதமும் உறுதிப்படுத்துகிறது. மறு வாழ்வு என்பதனை மறு ஜென்மம் என்று தவறாக விளங்கியதால் வந்த குளறுபடி இது. //

சுவர்க்கம், நரகம், மட்டுமில்லாமல் பலவித உலகங்கள் இருப்பதாக இந்திய தத்துவங்கள் கருதுகின்றன.. இந்திய தத்துவங்கள் கருதுவதால் மட்டும் அவை உண்மை என்பதை ஏற்க வேண்டியதில்லை ... மறு வாழ்வு / மறு ஜென்மம் இரண்டும் வெவ்வேறானவை .. இங்கு குழப்பங்கள் எதுவும் இல்லை .. மத்தியக் கிழக்கில் எழுந்த யூத மதங்கள் ( கிருத்தவம் / இஸ்லாம் / அகமதியா / பகாய் ) போன்றவைகளின் கான்சப்ட் மனிதன் பிறப்பான் கடவுள் சொன்னப்படி வாழ்ந்தால் மீண்டும் நித்திய வாழ்வு கிடைக்கும், இல்லை எனில் நரகத்தில் அழிந்துவிடுவோம் என்பது தான்..

அப்படியானால் விலங்குகளுக்கு ஏன் மனிதனாக பிறக்கும் வாய்ப்பை கடவுள் வழங்கவில்லை .. மனிதனுக்கு மட்டும் ஸ்பெஸல் கவனிப்பா .. விலங்குகள் இறந்த பின் அவை என்னவாகும் .. அவை சொர்க்கம் போகுமா ? நரகம் போகுமா ? சொர்க்கம் போகும் எனில் அவை கடவுள் சொன்னபடியா வாழ்ந்தது .. நரகம் செல்லுமானால்.. அதற்கு சிந்திக்க கற்றுக் கொடுக்காதது எவன் குற்றம் .. இரண்டும் இல்லை எனில் ஏன் இந்த ஓரவஞ்சனை கடவுள் செய்கின்றார்.. விலங்குகளும் உயிரல்லவா ? பாக்டீரியா, மரங்களும், செடிகளும் உயிர்கள் அல்லவா ..

ஆகவே பௌத்தம் / சமணம் என்ன நினைத்தது எனில் ஒவ்வொரு உயிரும் ஸ்பெஸல் தானே ... ஆகவே அதுகள் மனிதனாக பிறப்பெடுப்பான் .. அவன் நல்ல வழியில் வாழ்ந்து பிறப்பறுக்கா விட்டால் .. மீண்டும் மீண்டும் மனிதனகாவே பிறப்பான் என்ற ஒரு கான்சப்டுக்கு வந்தார்கள். ( எல்லாம் உண்மை என்று நம்பத் தேவை இல்லை ) ...

அப்படி பார்த்தால் சொர்க்கம் நரகம் என்பதுக் கூட பொய் தானே ! என்று முடிவுக்கு வந்திவிடலாம் ..

Anonymous said...

// மறு ஜென்மத்துக்காக உடலை கங்கையில் விடுவதால்தான் அதிக மாசுபடுவதாக சொல்கின்றனர். எனவே இங்கும் மறு ஜென்ம நம்பிக்கை சுற்றுச் சூழலை மாசுபடுத்தகிறது.//

உண்மை தான் .. ஆனால் இங்கு பிரச்சனை மறு ஜென்மத்தால் எழவில்லை, மாறாக இந்துக்கள் கங்கையில் கரைவதால் பாவம் போகும் என்ற முட்டாள் தனத்தால் எழுந்தது .. பௌத்தமும் /சமணமும் மறுஜென்மத்தை ஏற்கின்றன .. ஆனால் அவர்கள் யாரும் கங்கையில் கரைவதில்லை .. எந்தவொரு பௌத்த நாடுகளிலும்( இலங்கை முதல் ஜப்பான் வரை) இப்படியான அசுத்தங்களை நீங்கள் காண முடியாது ... ஆக பிரச்சனை மறு ஜென்மத்தல் எழுந்தவை அல்ல .. என நான் நினைக்கின்றேன் !!!

Unknown said...

///அப்படியா அடடே அப்போ சொர்க்கம் நரகம் மட்டும் எந்த அறிவியல் அடிப்படையில் சாத்தியம் நண்பரே//
!!
//சொர்க்கம் நரகம் என்று ஒன்று உள்ளதை இறந்து போனவர் வந்து சொன்னால்தான் நம்மால் இந்த உலகத்தில் நிரூபிக்க முடியும். அது நடைமுறை படுத்த முடியாத ஒன்று. நானோ நீங்களோ இறந்தவுடன்தான் இதனை நிரூபிக்க முடியும்.//

சொர்க்கம், நரகம் அறவியல் அடிப்படையில் சாத்தியமா என்று கேட்டால். இது என்னங்க பதில். என்ன சொல்ல வரிங்க இந்த பதில் மூலமா. இறந்த உடன்தான் சொர்க்கம் நரகம் என்பதை நிருபிக்க முடியும் என்றால் இது வரை நிருபிக்காத ஒன்றை வைத்து ஊரை ஏமாற்றி கொண்டு இருகிறீர்களா. சொர்க்க நரகம் பத்தி யாராவது செத்து போனவங்க உங்களிடம் வந்து சொன்னாங்களா
அப்படி இல்லாமல் இது நம்பிக்கை சார்ந்த விசயம் என்றால், மற்றவர்களின் முன்ஜென்ம, மறுஜென்ம நம்பிக்கையை தவறு என்று சொல்ல நீங்கள் யார். மத்தவங்க நம்பிக்கையை பற்றி எழுதும்போது மட்டும் பக்கம் பக்கமாக எழுதணும், உங்கள் நம்பிக்கையை கேள்வி கேட்டால் இரண்டே வரியில் புரியாத வகையில் எதாவது உளறி முடித்து விட வேண்டும் அப்படி தானே. சொர்க்கம் நரகம் எந்த வகையில் சத்தியம் என்பதை முடிந்தால் விளக்கிவிட்டு முன்ஜென்மம், மறுஜென்மம் பற்றி பேசுங்கள்.

suvanappiriyan said...

திரு ஆனந்தன் கிருஷ்ணன்!

//சொர்க்கம் நரகம் எந்த வகையில் சத்தியம் என்பதை முடிந்தால் விளக்கிவிட்டு முன்ஜென்மம், மறுஜென்மம் பற்றி பேசுங்கள். //

சொர்க்கம் நரகத்தைப் பற்றி இஸ்லாம் மட்டும் சொல்லவில்லை. கிறித்தவ மற்றும் இந்து மத வேதங்களும் சொர்க்கம் நரகத்தைப் பற்றி பேசுகின்றன.

அதேபோல் மறுபிறவி பற்றி இந்து மத வேதங்கள் எதுவும் மேற் கோள்களை காட்டவில்லை என்றும் மறுஉலகைத்தான் மறு பிறவி என்று சிலர் தவறாக விளங்கிக் கொண்டனர் என்று சில இந்து மத அறிஞர்கள் கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.

மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் 'புனர் ஜென்மம்', 'பர்லோக்' என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.

1)'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்

ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்கக் கூடியவர்களே நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்ப கொண்டு வரப் படுவீர்கள்.
21 : 35 - குர்ஆன்

2)ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்

பய பக்தி உடையவர்களுக்காக சொர்க்கம் சித்தப் படுத்தப் பட்டுள்ளது.
3 : 133 -குர்ஆன்
மறுமையில் இவர்களை நொக்கி நீங்கள் உங்கள் மனைவி மார்களுடன் மகிழ்ச்சியுடன் சுவனத்துக்குள் நுழைந்து விடுங்கள் என்று கூறப்படும்.
43 : 70 -குர்ஆன்

3) சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்

இறைவனை அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் தரப்படும். அதில் மாற்றமடையாத தண்ணீரைக்கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் பொகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும்இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடத்திலிருந்து மன்னிப்பும் உண்டு.
47 : 15 - குர்ஆன்
இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற் செய்தி.கீழ்பகுதியில்ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்.
57 : 12 - குர்ஆன்

4). யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
4 : 5 : 5 - ரிக் வேதம்

கெட்டவர்கள் நரகத்தில் வீழ்த்தப் படுவார்கள்
11 : 106 - குர்ஆன்
நரகம் மிகக் கெட்ட தங்கும் இடமாகும்.
67 : 6 - குர்ஆன்

5). நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.
- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

Anonymous said...

//சொர்க்கம் நரகத்தைப் பற்றி இஸ்லாம் மட்டும் சொல்லவில்லை. கிறித்தவ மற்றும் இந்து மத வேதங்களும் சொர்க்கம் நரகத்தைப் பற்றி பேசுகின்றன.//

May be that (quoting from religions) is enough proof for you.
But that is not enough proof for me.

Thats called individual differences.

So, we dont have to agree whether "punar jenmam" exists or not. Its just your point of view. Not necessarily correct. Simple. Dont complicate life :)

விழித்துக்கொள் said...

suvanapiriyanin eppodhum pol oru vazhakkamaana madhasaarbulla padhivu

Unknown said...

//சொர்க்கம் நரகத்தைப் பற்றி இஸ்லாம் மட்டும் சொல்லவில்லை. கிறித்தவ மற்றும் இந்து மத வேதங்களும் சொர்க்கம் நரகத்தைப் பற்றி பேசுகின்றன.//
மறுக்கவில்லை. ஆனால் சொர்க்கம் நரகம் இருப்பதை பற்றி அறிவியல் ஆதாரத்தையோ, தடயங்களையோ காட்ட எங்களால் முடியாது. அதே நேரத்தில் இம்மை வாழ்வை விட மறுமை வாழ்வையே முஸ்லிம்கள் விரும்ப வேண்டும் என்று சொர்க்கத்தை பற்றிய வழிகாட்டல் இஸ்லாமில் பெருமளவில் உள்ளது. அறிவியல் அடிப்படையில் மறுஜென்மம் என்ற கூற்று சாத்தியம் இல்லை என்பதை போலவே சொர்க்கம் நரகம் என்பதும் அறிவியல் ரீதியாக சாத்தியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். மத புத்தகங்கள் சொல்வதை புறந்தள்ளிவிட்டு அறிவியல் ரீதியாக சொர்க்கம் நரகம் என்பது சாத்தியமா? என்பதை கூறுங்கள். மறுமை வாழ்க்கையே மறுஜென்மமாக கூறப்படுவதாகவே வைத்துக்கொள்வோம் அந்த மறுமை வாழ்கை எந்த வகையில் அறிவியல் ரீதியாக சாத்தியம்.

suvanappiriyan said...

//நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். மத புத்தகங்கள் சொல்வதை புறந்தள்ளிவிட்டு அறிவியல் ரீதியாக சொர்க்கம் நரகம் என்பது சாத்தியமா? என்பதை கூறுங்கள். மறுமை வாழ்க்கையே மறுஜென்மமாக கூறப்படுவதாகவே வைத்துக்கொள்வோம் அந்த மறுமை வாழ்கை எந்த வகையில் அறிவியல் ரீதியாக சாத்தியம். //

உதாரணத்திற்கு குர்ஆனை எடுத்துக் கொள்வோம். குர்ஆனின் 80 சதவீதமான அறிவியல் சார்ந்த வசனங்கள் தற்காலத்தில் விஞ்ஞானத்தால் ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதை ஆராய்ந்து ஐரோப்பா அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திலே நுழைந்த வண்ணம் உள்ளனர்.

நிரூபிக்கப்படாத 20 சதவீதமான வசனங்கள் என்று எடுத்துக் கொண்டால் அவை சொர்க்கம் நரகம் பற்றியும் இறைவன் தன்னைப் பற்றியும் கூறும் கருத்துகளாகும். தற்போது ஹிக்ஸ் போஜான் பற்றி பரவலாக படித்திருப்பீர்கள். இறைவன் இல்லாமல் இந்த உலகம் உருவாகியிருக்க முடியாது என்ற நிலைக்கு பரவலான அறிவியல் அறிஞர்கள் வந்து விட்டனர். மீதம் இருப்பது சொர்க்கம் நரகம் பற்றிய வசனங்கள்தான். நான் முன்பே கூறியது போல் இறந்தவர்கள்தான் அதனை அனுபவிக்க முடியும். இப்படி கடவுள் இருப்பதை நம்பி நற்காரியங்கள் உலகில் செய்து வருவதால் நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன்.