Followers

Monday, July 02, 2012

அலை அலையாய் சத்தியத்தை நோக்கி…….

கிருத்தவ மிஷினரிகளைப் போல திட்டமிட்ட பிரசாரம் எதுவும் இல்லை. எந்த இலவசங்களும் வழங்கப்படுவதில்லை. சவுதி அரேபியாவிலிருந்தோ அல்லது மற்ற எந்த வளைகுடா நாடுகளிலிருந்தோ பண உதவி பெறுவதில்லை. நாடு முழுக்க இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிரசாரம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. சில இந்துத்வ வாதிகள் கோவில்களிலும் பொது இடங்களிலும் மசூதிகளிலும் குண்டுகளை வைத்து விட்டு அதற்கு கச்சிதமாக முஸ்லிம்களையே கைது செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்க இஸ்ரேலிய நாசகார திட்டங்களால் உலகம் முழுக்க இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற பிரசாரம் ஊடகங்களால் பரப்பப்படுகிறது. இந்தியாவில் அரசு நலத் திட்டங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அரசு வேலை வாய்ப்புகளிலும் திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு சிறந்த எதிர்காலம் இந்தியாவில் இருக்க முடியாது என்ற எண்ணமே பலரது எண்ணமாக இருக்கிறது.

இவ்வளவு இடர்பாடுகள் இருந்தும் அத்தனையையும் தூரமாக்கி இன்று சத்திய இஸ்லாத்தை ஏற்று வந்திருக்கும் இந்த புதிய முகங்களை இருகரம் நீட்டி அரவணைப்போம். நம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்போம். பூர்வீக சொந்தங்கள் இவர்களை ஏசுவார்கள்: தூற்றுவார்கள்: அத்தனையையும் எதிர் நோக்கியே இன்று புதிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களை நம்முடைய உடன்பிறப்புகளாக நினைக்க வேண்டும். திருமண உறவுகளை அவர்களோடு ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமூட்ட வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகளை செல்வந்தர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தையல் மிஷின், ஆட்டோ ரிக்ஷா, வட்டியில்லாத கடன் என்று அனைத்து தரப்பு உதவிகளையும் அந்த மக்களை நோக்கி திருப்பி விட வேண்டும்.

படித்து விட்டால் தீண்டாமையும் சாதி வெறியும் தணிந்து விடும் என்று நினைத்திருந்தோம். ஆனால் முன்பு இருந்ததை விட சாதி வெறி படித்தவர்களிடம்தான் அதிகம் இருப்பதை இணைய விவாதங்களில் பார்த்து வருகிறோம். எனவே ஆரியர்களால் புகுத்தப்பட்ட இந்த வர்ணாசிரம முறையை தகர்க்கும் ஒரே வழி: மிக இலகுவான வழி: வன்முறையற்ற வழி: இஸ்லாம்தான் என்றால் மிகையாகாது.

இந்த கணக்கெடுப்பு கடந்த ஒரு மாதத்தியது. அதிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இஸ்லாத்தை தழுவியவர்களின் கணக்கெடுப்பு இது. கணக்கில் வராமல் மற்ற அமைப்புகள் மூலமும் அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். தவ்ஹீத் ஜமாத் மூலம் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளதால் தர்ஹா வணக்கம், தாயத்து, பல தெய்வ வணக்கம், தீண்டாமை என்று மூடப் பழக்கங்களை விட்டும் தூரமாக்கப்படுவர். ஒரு வருடம் இஸ்லாமிய கல்லூரியில் சேர்க்கப்பட்டு இஸ்லாத்தின் அடிப்படையையும் தொழிற் கல்வியையும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுவர். கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து ஏக இறைவனை வணங்கி மூடப்பழக்கங்களை தூரமாக்கி சிறந்த முஸ்லிம்களாக இவர்கள் வாழ வாழ்த்துவோம். நம் தமிழகத்தின் தீராத தலைவலியாய் இருக்கும் தீண்டாமை எனும் அரக்கனை ஒழிக்கும் இது போன்ற முயற்சிகளுக்கு நம்மால் ஆன ஆதரவை தருவோம். திரு மூலர் அருளிய திருமந்திரம் கூறும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் மூதாதையர் மார்க்கத்தை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் இவர்களை அன்போடு அரவணைப்போம்.
-----------------------------------------------------------------------------------
1.




1.வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 5-6-2012 அன்று Phd படித்த கல்லூரி பேராசிரியர் விவேகானந்தம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்கள். இவர் குர்ஆனை நன்கு ஆராய்ந்த பிறகு இஸ்லாத்தை ஏற்றுள்ளது குறிப்பிடதக்கது.

-----------------------------------------------------------------------------------
2.



2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் கிளையில் கடந்த 8-6-2012 அன்று தீபா என்ற பெண்மணி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும் தனது பெயரை ஆயிஷா என மாற்றிக் கொண்டார்கள். அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

------------------------------------------------------------------------------------

3.



3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் 20/05/12 அன்று காரைகாலில் இன்பமேரி என்ற சகோதரி இஸ்லாத்தை தன வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டு நஜ்மா என்று பெயர் மாற்றம் செய்துகொண்டார் .அல்ஹம்துலில்லாஹ்.

------------------------------------------------------------------------------------
4.தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 27-5-2012 அன்று பாண்டியராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சைஃபுல்லாஹ் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

4.


-------------------------------------------------------------------------------------



5.திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 19.05.2012 அன்று சங்கர நாராயணன் என்ற சகோதரர் இஸ்லாமிய மார்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை சதாம் ஹுசைன் என்று மாற்றிக்கொண்டார்.
இந்த சகோதரருக்கு சகோதரர் மவ்லவி ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்புகளையும் இந்தக் கொள்கையை ஏற்பதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் சோதனைகள் போற்றவற்றையும் எடுத்துரைத்தார்கள்
மேலும் அவருக்கு இஸ்லாம் சம்பந்தமான நூல்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

5.


------------------------------------------------------------------------------------



6.நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளையில் கடந்த 18-05-2012 அன்று மூர்த்தி என்ற சகோதரர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

6.

------------------------------------------------------------------------------------



7.கரூர் மாவட்டத்தில் கடந்த 8-5-2012 அன்று சந்திரசேகர் என்ற சகோதரர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் எனது தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். இவர்களுக்கு நம் கொள்கைச் சகோதர்கள் மூலம் ஏகத்துவ பிரச்சார டிவிடிக்கள் மற்றும் நூல்கள் வழங்கி இஸ்லாத்தை கொள்கைகள் விளக்கிக் கூறிப்பட்டது.

7.


------------------------------------------------------------------------------------




8.சிவஙக்கை மாவட்டம் இளையாங்குடி கிளையில் கடந்த 4-5-2012 அன்று சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் குடும்தார்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் சகோதரர் அப்துல்லாஹ் இரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றது குறிப்பிடதக்கது. இவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.


8.


------------------------------------------------------------------------------------



9.விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கிளையில் கடந்த 4-5-2012 அன்று 66 வயதான பழனி சுப்பு என்ற பெரியவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்! அவருக்கு புத்தகம் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

9.


------------------------------------------------------------------------------------



10.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையில் கடந்த 31-04-2012 அன்று சிவா என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

10

-------------------------------------------------------------------------------------

படங்கள் குறிப்புகள் உதவி:tntj.net

29 comments:

Anonymous said...

எல்லாப் புகழும் இறைவனுக்கு
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு

- வள்ளுவன்

Nizam said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)சகோதரா, அருமையான பணி. நான் வேலை செய்யும் ஒரு ஏழ்மையான நாட்டில். இங்கு பிரெஞ் பேஸ் இருக்கிறாது. இங்கும் பல ரணுவத்தினார் மற்றும் பெரிய அதிகாரிகள் மசூதிகளுக்கு சென்று ஐயத்தை போக்கி குடும்பம் குடும்பாக இஸ்லாத்தை ஏற்றுகொள்கின்றானர். எல்லாப் புகழும் இறைவனுக்கு

suvanappiriyan said...

ஒலிம்பிக் தீபத்தை ஏந்த இங்கிலாந்தில் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் ஒரு தமிழ் மாணவர்

ஆரம்பித்து விட்டது ஒலிம்பிக் ஜுரம். ஜூலை மாதத்துக்காக இப்போதே உலகம் முழுக்க விளையாட்டு ஆர்வலர்கள் தேவுடு காக்கத் தொடங்கிவிட்டார்கள்.


ஒலிம்பிக்கின் தாய்வீடான கிரேக்கத்தில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, இவ்வாண்டு போட்டி நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு சில வாரங்கள் முன்பே வந்து சேர்ந்துவிட்டது. ஒலிம்பிக்கை வரவேற்கும் முகமாக நல்வரவு சொல்லி, இங்கிலாந்தில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் போட்டிக்கான வரவேற்பு வீடியோ காட்சி கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டபோது, உலகம் முழுக்க அதைக் கண்டவர்களுக்கு (குறிப்பாக தமிழர்களுக்கு) பெரும் ஆச்சரியம். வணக்கம் என்கிற தமிழ்ச் சொல்லே முதலில் ஒலிம்பிக்கை வரவேற்கிறது. அதற்குப் பின்னர் வணக்கத்துக்கு ஈடான பொருள் தரக்கூடிய மற்ற மொழி வாசகங்கள் ஒலிக்கின்றன. லண்டன் ஒலிம்பிக் போட்டி, விளையாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறப்போகும் நிலையில், முதல் வரவேற்பே தமிழில் ஒலிப்பது நம் மொழியின் பாரம்பரிய வளத்துக்கும், பழமைக்கும் கிடைத்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.


தற்போது ஒலிம்பிக் தீபம் இங்கிலாந்து முழுக்க பரபரப்பாக வலம் வந்துகொண்டிருக்கும்போது, தமிழர்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ள இன்னொரு நற்செய்தியும் கிடைத்திருக்கிறது. ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்னர் போட்டிக்கான தீபத்தை ஏந்த தேர்வு செய்யப்பட்டிருப்பவர்களில் தமிழ் மாணவரும் ஒருவர். இருபத்தோரு வயதான முருகேசுப்பிள்ளை கோபிநாத், இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் மல்லாவியைச் சேர்ந்தவர். இங்கிலாந்தின் நியூகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறார்.



ஒலிம்பிக் தீபம்: சில குறிப்புகள்

பண்டைய ஒலிம்பிக்கில் தீபம் ஏற்றப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் இருப்பதையடுத்து, நவீன ஒலிம்பிக்கில் முதன்முறையாக ஆம்ஸ்டர்டாமில் 1928ல் நடந்த ஒலிம்பிக்கில் இருந்து தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.


போட்டிகள் தொடங்குவதற்கு சில மாதங்கள் முன்பாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரேக்கத்திலிருந்து, போட்டி நடைபெறும் நாட்டுக்கு தீபம் எடுத்துச் செல்லப்படுவது சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிறகு அந்தத் தீபத்தை அந்த நாட்டின் முக்கிய மனிதர்கள் ஏந்தி நாடு முழுக்க வலம் வருவர். இந்தத் தொடர் ஒலிம்பிக் தீப ஓட்டம், ஒலிம்பிக் தொடக்க விழா அன்று நிறைவடையும்.


இந்த முறை கிட்டத்தட்ட 90 வடிவங்களைப் பரிசீலித்து, தற்போதிருக்கும் வடிவம் ஒலிம்பிக் தீபமாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. அலுமினியத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்தீபத்தில் 8,000 ஓட்டைகள் இடம் பெற்றிருக்கின்றன. இங்கிலாந்தில் எழுபது நாட்களில் எட்டாயிரம் கைகள் ஏந்தி, எட்டாயிரம் மைல் பயணிக்கப் போகும் தீபம் என்பதாலேயே, எட்டாயிரத்துக்கு வடிவத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது.

--

Best regards,


ASHRAF

suvanappiriyan said...

சலாம் சகோ நிஜாம்!

//அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)சகோதரா, அருமையான பணி. நான் வேலை செய்யும் ஒரு ஏழ்மையான நாட்டில். இங்கு பிரெஞ் பேஸ் இருக்கிறாது. இங்கும் பல ரணுவத்தினார் மற்றும் பெரிய அதிகாரிகள் மசூதிகளுக்கு சென்று ஐயத்தை போக்கி குடும்பம் குடும்பாக இஸ்லாத்தை ஏற்றுகொள்கின்றானர். எல்லாப் புகழும் இறைவனுக்கு //

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ வள்ளுவன்!

//எல்லாப் புகழும் இறைவனுக்கு
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

George said...

//கிருத்தவ மிஷினரிகளைப் போல திட்டமிட்ட பிரசாரம் எதுவும் இல்லை. எந்த இலவசங்களும் வழங்கப்படுவதில்லை. சவுதி அரேபியாவிலிருந்தோ அல்லது மற்ற எந்த வளைகுடா நாடுகளிலிருந்தோ பண உதவி பெறுவதில்லை. நாடு முழுக்க இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிரசாரம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது// அப்படியா! நீங்கள் பிரச்சாரம் ஏதும் செய்வதில்லையா? உங்கள் தாவா கூடாரங்களில் உணவு உண்டுவிட்டு பல் குத்திக்கொண்டா இருக்கிறீர்கள்? நீங்கள் பல் குத்திக்கொண்டு இருந்தா இடங்களில் இவர்கள் எல்லாம் உங்களை தேடி வந்து உங்கள் மதத்தில் இணைந்து கொண்டார்களா. வேடிக்கையாக இருகிறதே. கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டும் சுவனப்பிரியன். கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்வதும் நற்செய்தி கூட்டங்கள் நடத்துவதும். உலகம் அறிந்த விசயமாயிற்றே. ஆனால் உங்கள் கூட்டம் செய்கிறதே தாவா பிரச்சாரம் அது யாருக்கும் தெரியாது என்றா நினைக்கிறீர்கள். சவூதி அரசாங்கம் இஸ்லாமிய வளர்ச்சிக்கும் மசூதிகள் கட்டுவதற்கும் எந்த உதவியும் செய்வதில்லையா? பச்சை குழந்தைகளிடம் இதை சொல்லலாமே. கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் ஒத்து கொள்கிறேன். நீங்கள் தாவா பிரசாரம் செய்வதில்லை என்று, உங்கள் மதத்தை பற்றி எந்த விளம்பரமும் செய்வதில்லை என்று உங்களால் சத்தியம் செய்து கூற இயலுமா அல்லது தாவா என்ற ஒன்றே உங்கள் இஸ்லாமில் இல்லை என்று கூற முடியுமா.
//இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்க இஸ்ரேலிய நாசகார திட்டங்களால் உலகம் முழுக்க இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற பிரசாரம் ஊடகங்களால் பரப்பப்படுகிறது.//
உங்கள் கூட்டத்தினரில் தீவிரவாதிகள் யாரும் இல்லையா? எப்போது இருந்து எல்லாரும் அஹிம்சை வாதிகளாக மாறினார்கள்.

//இந்தியாவில் அரசு நலத் திட்டங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அரசு வேலை வாய்ப்புகளிலும் திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.//
உங்களை விட குறைந்த எண்ணிக்கையில் தான் கிரிஸ்தவர்கள் இருக்கிறோம். நாங்கள் இந்த மாதிரி புலம்பல்கள் புலம்பவில்லையே. திறமை உள்ளவர்கள் பல அரசு வேலைகளிலும் கல்வியிலும் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறோம். எனக்கு தெரிந்தவரை முஸ்லிம்கள் படிக்க கூடாது, வேலை கிடையாது என்று எந்த இந்திய அரசாங்கமும் சட்டமும் போடவில்லை. அறிவிப்பும் இல்லை. உங்களுக்கு உங்கள் மதமும் முகமதுவும் முக்கியமாக இருந்தால் அதற்கு அரசாங்கமா பொறுப்பு. நல்ல வேடிக்கைதான். இந்துத்துவ வாதி என்று சொல்லப்படும் திரு .வாஜ்பாய் கூட முஸ்லிம்கள் படிக்க கூடாது என்று தனது ஆட்சியில் எந்த தடையும் கூறவில்லை. நீங்கள் படிக்கவில்லை என்றால் அதற்கு அரசாங்கமா பொறுப்பு. ஒருவேளை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் குரானையும் ஹதீஸ்களையும் பாடமாக வைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா.

//வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகளை செல்வந்தர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தையல் மிஷின், ஆட்டோ ரிக்ஷா, வட்டியில்லாத கடன் என்று அனைத்து தரப்பு உதவிகளையும் அந்த மக்களை நோக்கி திருப்பி விட வேண்டும்.//
ஏதோ கிறிஸ்தவர்கள் இலவசங்களை கொடுகிறார்கள் என்று கூறினீர்களே நீங்கள் செய்யும் இந்த செயல்களுக்கு பெயர் என்ன. இதையே தான் கிறிஸ்தவர்கள் செய்கிறார்கள். நீங்கள் செய்தால் சரி நாங்கள் செய்தால் தப்பா? என்ன சார் நியாயம் இது.

பைபிளில் இருந்து காப்பி அடித்த புத்தகம் தானே குரான். அதை பின்பற்ற்பவர்கள் தானே நீங்கள் வேறு எப்படி இருப்பீர்கள்

Anonymous said...

“உயர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சகதோழர்களுக்காக ஆற்ற வேண்டிய அரும்பணிகள் அநேகம் தெளிவாகவும் குறிப்பாகவும் உள்ளன. ஆனால் அவர்களோ மாறாக ”உங்களுடைய தேவைகள் என்ன? நீங்கள் ஏன் திருப்தி ?” என ஏளனமாகவும் கேலியாகவும் கேட்கும் நிலைதான் உள்ளது. நாங்கள் வேண்டுவது என்ன? நாங்களும் உங்களை போல மனித இனம்தானே? எங்களைப் போல நீங்களும் உங்கள் விருப்பத்திற்கு மாறாக கலாச்சாரம் என்கிற பெயரால் மாற்று வகுப்பினரின் ஆதிக்கத்தின் பிடியில் நீண்ட காலம் சிக்கி சீரழிந்து போனால் நீங்கள் என்ன விரும்புவீர்கள்? உங்களைச் சுரண்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் குழந்தைகள் அறிவுப்பசியால் வாடும் போது, தாகத்தால் வாடும் போது, ஆன்மிக உணர்வுடன் தேடும் போது கல்விசாலை, பொதுநீர்நிலை, கிணறு, கோவில் போன்ற பொதுநல வாய்ப்புகள் மறுக்கப்படும் போது என்ன செய்வீர்கள்?

நாங்கள் கற்களோ பாறைகளோ அல்ல. எங்களுக்கும் ஆசாபாசங்கள் இருக்காதா? எங்களுக்கும் தேச பெருமையூனூடே பேரும் புகழும் அடைய வேண்டும் என்கிற உணர்ச்சிகள் இருக்காதா? நாங்கள் எத்தனை கொடுமைகளையும், துன்பங்களையும், சுரண்டல்களையும், அவமானங்களையும், அல்லல்களையும் அனுபவிப்பது? எங்கள் தேசாபிமானத்தை நீங்கள் சிதைத்திருக்கிறீர்கள். அவமதிப்புகளை அளவில்லாமல் எங்கள் மீது குவித்து எங்கள் தன்மானமே அழியும் அளவுக்கு ஆக்கியிருக்கிறீர்கள். … யாருடைய பரிவோ பரோபகாரமோ எங்களுக்கு தேவை இல்லை. நாங்கள் பெற விரும்புவது சமூக முன்னேற்றம், அரசியல் எழுச்சி, பொருளாதார உயர்வு… தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது.”

- எம்.சி.ராஜா அவர்கள்

naren said...

நண்பரே..

இப்படி இப்படி அலை அலையாய் வந்தால்....சுவனத்தில் இடப் பற்றாக்குறை மற்றும் பொருள் LOL -:) பற்றாக்குறை வந்துவிட போகுது. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். சுவனத்தில் பஞ்சம் என்று, துனியாவுக்கு தெரிந்தால் கேவலம்.

அலை திரும்பவும் கடலுக்கே திரும்பி வரும்.

பெரியவர் வாஞ்ஜூர் பாய், நலமாக இருக்கிறாரா? ஒரு மாதமாக பதிவுகள் காணோம் மறுமொழிகளும் காணோம்.

suvanappiriyan said...

நண்பர் நரேன்!

//இப்படி இப்படி அலை அலையாய் வந்தால்....சுவனத்தில் இடப் பற்றாக்குறை மற்றும் பொருள் LOL -:) பற்றாக்குறை வந்துவிட போகுது. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். சுவனத்தில் பஞ்சம் என்று, துனியாவுக்கு தெரிந்தால் கேவலம்.

அலை திரும்பவும் கடலுக்கே திரும்பி வரும்.//

தனது படைப்பான நரேனுக்கு இப்படி எல்லாம சந்தேகம் வரும் என்று இறைவனுக்கு முன்பே தெரியுமல்லவா? எனவே தனது அடியானின் சந்தேகத்தை உங்களை படைத்த இறைவன் எப்படி தீர்க்கிறான் என்று பாருங்கள்.

'உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் சொர்க்கத்துக்கும் முந்துங்கள். அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. இறைவனையும் அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே இறைவனின் அருட்கொடை. '
-குர்ஆன் 57:21

சொர்க்கத்தின் பரப்பளவு என்பது நமது பூமியையும் வானத்தையும் சேர்த்தால் எந்த அளவு இருக்குமோ அந்த அளவு என்று இறைவன் கூறுவதால் இதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. தாராளமாக நல் அமல்களை செய்தால் இறைவன் நாடினால் உங்களுக்கும் இடமுண்டு.

//பெரியவர் வாஞ்ஜூர் பாய், நலமாக இருக்கிறாரா? ஒரு மாதமாக பதிவுகள் காணோம் மறுமொழிகளும் காணோம்.//

இறைவன் அருளால் நலமாக இருக்கிறார். எனது பதிவுகளுக்கு தொடர்ந்து ஓட்டும் அளித்து வருகிறாரே! தொடர் வேலை காரணமாக இணையத்துக்கு சற்று ஓய்வு கொடுத்திருக்கலாம். இன்ஷா அல்லாஹ் சிறந்த பதிவுகளோடு வருவார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு ஜார்ஜ்!

// நீங்கள் தாவா பிரசாரம் செய்வதில்லை என்று, உங்கள் மதத்தை பற்றி எந்த விளம்பரமும் செய்வதில்லை என்று உங்களால் சத்தியம் செய்து கூற இயலுமா அல்லது தாவா என்ற ஒன்றே உங்கள் இஸ்லாமில் இல்லை என்று கூற முடியுமா. //

கிறித்தவர்களைப் போல் திட்டமிட்ட பிரசாரம் செய்வதில்லை என்றுதான் சொன்னேனேயொழிய தாவா பிரசாரமே இல்லை என்று சொன்னேனா? கன்னியாஸ்திரிகளை இந்த ஊருக்கு இத்தனை நாள் என்று முறை வைத்து அனுப்புகிறீர்கள். இந்து, இஸ்லாமியர் வீடுகளில் திடீரென புகுந்து பிரசாரத்தை ஆரம்பித்து விடுகிறீர்கள். அமெரிக்கா ஐரோப்பாவிலிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் மாதா மாதம் கிறித்தவ மத வளர்ச்சிக்கென்று இந்தியா வருகிறது. பல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளி நாட்டு உதவியோடு நடத்தப் படுகிறது. கிறித்தவ பள்ளி கல்லூரிகளிலும் உங்கள் பிரசாரத்தை விடுவதில்லை. பஸ்ஸில் பயணித்தாலும் அங்கும் வந்து நோட்டீஸ்களை கொடுத்து பிரசாரத்தை ஆரம்பித்து விடுகிறீர்கள்.

இப்படியான திட்டமிட்ட பிரசாரங்கள் முஸ்லிம்களிடம் கிடையாது என்றே சொல்ல வந்தேன். முஸ்லிம்கள் அவர்களுக்குள்ளே மார்க்க விளக்கம் என்று நடத்திக் கொள்வார்கள். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற ஒரு நிகழ்ச்சிதான் மாற்று மதத்தவர்களுக்காக நடத்தப்படுகிறது. அதில் விரும்பியவர் வந்து அமரலாம். அரை மணி நேரம் தொலைக் காட்சிகளில் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிறது. இவை அனைத்தும் முஸ்லிம்களிடம் வசூல் பண்ணியே நடத்தப் படுகிறது. சவுதி அரேபியா எங்காவது மசூதி கட்டுவதற்கு வேண்டுமானால் ஜாக் என்ற அமைப்பின் மூலம் பண உதவி தருவார்கள். அதுவும் சொற்ப தொகையே. கிறித்தவ மதத்தோடு ஒப்பிடும்போது இந்த உதவிகள் மிக அற்பமே!

//நாங்கள் இந்த மாதிரி புலம்பல்கள் புலம்பவில்லையே. திறமை உள்ளவர்கள் பல அரசு வேலைகளிலும் கல்வியிலும் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறோம்.//

அதற்கு காரணம் சுதந்திர போராட்டக் காலத்தில் சில மார்க்க அறிஞர்களுக்கு தேச பக்தி முற்றி போய் 'ஆங்கிலம் படிப்பது ஹராம். அரசு வேலைகளை உதறி விட்டு போராட்டத்தில் குதியுங்கள்' என்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையிலும் அறிவிப்பு செய்தார்கள். இந்த மடத்தனமான அறிவிப்பைக் கேட்டு வேலையையும் படிப்பையும் இழந்தோம். அந்த தவறை தற்போது உணர்ந்து இன்று படிக்கவும் அரசு வேலை பெறுவதிலும் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளோம். இன்னும் 10 வருடத்தில் நிலைமை தலைகீழாக மாறும். கொஞ்சம் பொறுத்திருங்கள்.

//ஏதோ கிறிஸ்தவர்கள் இலவசங்களை கொடுகிறார்கள் என்று கூறினீர்களே நீங்கள் செய்யும் இந்த செயல்களுக்கு பெயர் என்ன. இதையே தான் கிறிஸ்தவர்கள் செய்கிறார்கள். நீங்கள் செய்தால் சரி நாங்கள் செய்தால் தப்பா? என்ன சார் நியாயம் இது. //

இஸ்லாத்தை ஏற்றால் இந்த இலவசங்களைத் தருகிறோம் என்று சொல்வது தவறான அணுகுமுறை. எதையும் எதிர்பார்க்காமல் அனைத்தையும் உதறி விட்டு முஸ்லிமாக மாறி தனி மரமாக நிற்கும் அவர்களை முஸ்லிம்கள் அரவணைக்க வேண்டும் என்கிறேன். ஏனெனில் கிறித்தவர்களைப் போல் திட்டமிட்ட அமைப்புகள் சொல்லிக் கொள்ளும் படியாக எதுவும் இல்லை. தற்போது தவ்ஹீத் ஜமாத் அந்த குறையை ஓரளவு பூர்த்தியாக்கி வருகிறது. பணத்துக்காக மதம் மாறினால் அவனிடம் கொள்கை இருக்காது என்பது எனது கணிப்பு.

//பைபிளில் இருந்து காப்பி அடித்த புத்தகம் தானே குரான்.//

அப்படியா....சொல்லவே இல்ல......:-)

காப்பி அடித்த புத்தகம் என்று நீங்கள் கூறும் பைபிள் வருடாவருடம் காலத்துக்கு ஏற்றவாறு திருத்திய பதிவாக வருவது ஏனோ?

நீங்கள் காப்பியடிக்கப்பட்டதாக சொல்லும் குர்ஆன் முஹமது நபி காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதன்படி ஒரு வரி கூட மாறாமல் இன்று வரை உள்ளதே. நீங்கள் வைக்கும் வாதத்தில் உங்களுக்காவது நம்பிக்கை இருக்கிறதா? :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

லக்னோ:புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாததால், அதிர்ச்சியடைந்த மணமகள், தன் தாய் வீட்டிற்கே திரும்பிச் சென்ற சம்பவம், உ.பி., மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. தன்னார்வ அமைப்பின் மூலம், கழிப்பறை கட்டிய பின்னரே, தன் கணவருடன் வாழ, மணமகள் சம்மதம் தெரிவித்தார்.

உ.பி., மாநிலம், கோரக்பூர் அடுத்த, மகாராஜ் கஞ்ச் விஷ்ணுபூர் கிராமத்தை சேர்ந்தவர் அமர்ஜித். சமீபத்தில், இவருக்கும், பிரியங்கா பாரதி என்பவருக்கும், திருமணம் நடந்தது.

கழிப்பறை எங்கே?:புகுந்த வீட்டிற்கு சென்ற பிரியங்கா, கழிப்பறை எங்கே என்று, தன் கணவரிடம் கேட்டுள்ளார். நாங்கள் எல்லோரும், திறந்த வெளியில் தான் சென்று வருகிறோம்; நம் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்றார். அதிர்ச்சியடைந்த பிரியங்கா, தன் கணவரிடம், கழிப்பறையை கட்டிய பின், என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள் எனக்கூறி விட்டு, அங்கிருந்து, தன் பிறந்த வீட்டிற்கே சென்று விட்டார். இதனால், அமர்ஜித் வீட்டில், எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. பின், இந்த தகவல் எல்லோருக்கும் தெரிய வரவே, அந்தக் கிராமத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, "சுலாப்' என்ற தன்னார்வ அமைப்பு, பிரியங்காவின் வேண்டுகோளை ஏற்று, கழிப்பறையை கட்டித்தர முன்வந்தது.

திறப்பு விழா:சமீபத்தில், இந்தக் கழிப்பறையின் திறப்பு விழா, மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, அந்தக் கிராமமே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. பிரியங்கா பாரதியைப் போலவே, ஜோதி என்பவரும், கழிப்பறை இல்லாத வீட்டில் குடியிருக்க மாட்டேன் என குரல் எழுப்பியதை அடுத்து, இப்பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
-DINAMALAR
02--7-2012

:-)

சிராஜ் said...

சலாம் அண்ணன்,

தமிழகத்தில் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்தியதில் பெரும் பங்கு அண்ணன் பிஜெ வை சேரும்.. அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டம். நல்ல பகிர்விற்கு நன்றி சகோ.

சிராஜ் said...

/* இப்படி இப்படி அலை அலையாய் வந்தால்....சுவனத்தில் இடப் பற்றாக்குறை மற்றும் பொருள் LOL -:) பற்றாக்குறை வந்துவிட போகுது. */

ஹி..ஹி..ஹி.. உலகத்தில இருந்த எல்லா குரங்கும் மனுசன் ஆன பிறகும் இன்னும் இந்த பூமில இடம் இருக்குல்ல...அது மாதிரி அங்கயும் இருக்கும்...

உண்மை என்னன்னா... சொர்கத்தில் இடப்பிரச்சனை வராது. அங்க சொர்ப்ப பேர்கள்தான் இருப்பார்கல்.. பட் நரகம்??? அங்க தான் கடவுள் இல்லைனு சொல்லும் பெரும்பாலானோர் இருப்பார்கள்..

ஆகவே சகோ நரேன்.. நீங்கள் சொர்க்கதில் இருக்கும் இட பற்றாக்குறையை பற்றி கவலை பட வேண்டாம். மாறாக நரகத்தில் இருக்க போகும் கூட்டத்தை பற்றி கவலை படுங்கள் LOL :)))))))).... அங்க ஒரு இடத்த முன்கூட்டியே புக் பண்ணி வச்சிகங்க. வசதியா இருக்கும்... ROFL

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//தமிழகத்தில் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்தியதில் பெரும் பங்கு அண்ணன் பிஜெ வை சேரும்.. அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டம். நல்ல பகிர்விற்கு நன்றி சகோ.//

தவ்ஹீதின் வளர்ச்சிக்கு இறைவன் சிலரை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறான். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

//அங்க ஒரு இடத்த முன்கூட்டியே புக் பண்ணி வச்சிகங்க. வசதியா இருக்கும்... ROFL//

'அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே காரணம்'
-குர்ஆன் 9:6

எனவே உண்மை என்னவென்று விளங்காமல் இருக்கும் இவர்களுக்காக நாம் பிரார்த்தித்து நரகத்திற்கு பதிலாக சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல ஆசைப்படுவோம் சகோ.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திருவண்ணாமலை: பால் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியபோது, சமூக சேவகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக கொலையாளி இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிங்கமுக தீர்த்த குளம் எதிரே வசிப்பவர் ராஜ்மோகன் சந்திரா(53), இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.இன்று அதிகாலை பூனைகளுக்கு பால் வாங்க அருகே உள்ள பால் பூத்திற்கு ராஜ்மோகன் சந்திரா, தன் மொபட்டில் சென்றார். பால் வாங்கி கொண்டு காலை 6மணி அளவில் வீட்டுக்கு புறப்பட்டார்.சிங்கமுக தீர்த்த குளம் எதிரே மறைந்திருந்த ஒரு கும்பல், திடீரென மொபட்டில் வந்த ராஜ்மோகன் மீது மிளகாய் பொடியை தூவினர்.

இதனால் நிலை குலைந்த அவர் மொபட்டிலிருந்து கீழே விழுந்தார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய மர்ம கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார். எஸ்.பி., ரம்யா பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.பல்வேறு போலீசார், வக்கீல்கள் மற்றும் அதிகாரிகள் மீது இவர் பொது நல வழக்கு தொடர்ந்திருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரை வைத்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் போளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்னிலையில், திருவண்ணாமலை அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த சந்திரசேகரன்(29), வட ஆண்டாப்பட்டை சேர்ந்த முருகன்(32), ஆகியோர், கொலை செய்ததை ஒப்புகொண்டு, நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-Dinamalar
02-07-2012

Anonymous said...

//இன்னும் 10 வருடத்தில் நிலைமை தலைகீழாக மாறும். கொஞ்சம் பொறுத்திருங்கள்.//

So why do you still ask for reservation?

suvanappiriyan said...

Anony!

//So why do you still ask for reservation?//

சுதந்திரம் கிடைத்ததிலிருந்து முஸ்லிம்களுக்கு கடந்த 50 வருடங்களாக உரிய பிரதிநிதித்துவம் ஆட்சியாளர்களால் தரப்படவில்லை. எனவே முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் தற்போது தனி ஒதுக்கீடுகள் கிடைத்து வருகின்றன. இது இன்னும் அதிகப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஒரு 10 வருடத்துக்கு பிறகாவது மற்ற சமூகங்களைப் போல் பொருளாதாரத்தில் சம நிலையை அடைய முடியும். அனைத்து சமூகத்துக்கும் அவரவர் விகிதாச்சார அடிப்படையில் பணியில் அமர்த்துவதுதான் சமூக நீதியாகும்.

Anonymous said...

இஸ்லாமில் தாமே விரும்பி மதம் மாறுவதற்கு நாம் ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவித்தது இல்லை .. ஆனால் அதே போல இஸ்லாமில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் ... அவர்களை அடித்து உதைத்து துன்புறுத்துவது நியாயமில்லை தானே !!!

அதே போல இஸ்லாத்தில் மதம் மாற விளம்பரங்கள் செய்யப்படுவதில்லை என்பதும், இஸ்லாமிய நாடுகளில் இருந்து பொருள் உதவி வருவதில்லை என்பதும் உண்மையில்லை என்பதும் உண்மை ... !!!

இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பார்கள்.. மனித மனம் எப்போதுமே அப்படித் தான் !!! இக்கரையில் இருந்து அக்கரைக்கு போவோரை நாம் தடுக்கப் போவதும் இல்லை. அக்கரையில் இருந்து இக்கரைக்கு வருவோரை அங்கும் தடுக்காமல் இருந்தால் அனைத்தையும் வரவேற்றுக் கொள்ளலாம் ... !

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//அதே போல இஸ்லாத்தில் மதம் மாற விளம்பரங்கள் செய்யப்படுவதில்லை என்பதும், இஸ்லாமிய நாடுகளில் இருந்து பொருள் உதவி வருவதில்லை என்பதும் உண்மையில்லை என்பதும் உண்மை ... !!!//


நான் சொல்ல வந்ததை நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டீர்கள். முஸ்லிம்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் முற்றிலுமாக வரவில்லை என்று நான் சொல்லவில்லை. கிறித்தவ மதத்தோடு ஒப்பிடும் போது வெகு சொற்ப தொகையே இஸ்லாமியர்கள் பெருவதை நாம் அறிய முடியும். அரசு அறிக்கை தந்துள்ளதையும் பாருங்கள்.


2008-2009 ஆண்டில் மட்டும் 20088 அமைப்புகள் பதிவு செய்யப்பட்ட அரசு சாராத சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் பெற்ற நன்கொடை ரூ 10802.6 கோடியாகும். இவற்றில் ஓரிரு அமைப்புகள் தவிர அனைத்தும் கிருத்துவ மதமாற்றம் செய்யும் அமைப்புகளாகும். இதில் குறிப்பிடத்தக்க விசயம் தமிழகத்தில் பலம்பெற்று இயங்கும் வொர்ல்டு விஷன் என்ற அமைப்பு மிக அதிகமான நன்கொடைகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாம் மத்திய அரசு தரும் புள்ளி விபரங்களாகும். ஒவ்வொரு அமைப்பும் வருடந்தோறும் எத்தனை கோடிகள் பெறுகின்றன என்ற விபரங்களை துல்லியமாக புள்ளி விபரங்களை மத்திய அரசு வைத்துள்ளது. கணக்கில் வராதது இதை விட இரண்டு மடங்கு என்றும் சொல்கின்றனர். இந்த அளவு முஸ்லிம்களுக்கு பணம் மத மாற்றத்துக்காக வருவதில்லை. இதை மத்திய அரசும் அறிந்தே வைத்துள்ளது.

அடுத்து பணத்தை காட்டி அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி மத மாற்றம் செய்வதையும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. கொள்கையை விளங்கி ஏற்படும் மாற்றம்தான் நிலையான மாற்றமாக இருக்கும்.

Anonymous said...

கஷ்மீர்:15 குழந்தைகளை மதம் மாற்றியதை ஒப்புக்கொண்டார் பாதிரியார்
20 Nov 2011

ஸ்ரீநகர்:கஷ்மீரில் 15 முஸ்லிம் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியதை ஆல் இந்தியா செயிண்ட்ஸ் சர்ச்சின் பாதிரியார் ஒப்புக்கொண்டுள்ளார்.

கஷ்மீரின் முதன்மை முஃப்தியின் தலைமையிலான உயர்மட்ட அறிஞர்கள் சபையின் முன்னால் கடந்த மாதம் பாஸ்டர் சி.எம்.கன்னா இதனை ஒப்புக்கொண்டுள்ளார். கஷ்மீரில் மதமாற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதாக இவர் மீது புகார்கள் எழுந்ததை அடுத்து உயர்மட்ட சபை பாதிரியாரிடம் விசாரணை மேற்கொண்டது.

முதலில் இதனை ஒப்புக்கொள்ள மறுத்த பாதிரியார் பின்னர் ஆதாரங்களை ஆஜர்படுத்தியதை தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை முதன்மை முஃப்தி முஹம்மது பஷீருத்தீன் தெரிவித்துள்ளார். மதமாற்றம் செய்த 15 குழந்தைகளின் விபரங்கள் அடங்கிய பட்டியலை அளிக்க பாதிரியார் ஒப்புக்கொண்டுள்ளதாக முஃப்தி கூறினார்.

மதமாற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தன்னுடன் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பிரமுகர்கள் இருப்பதாக பாதிரியார் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபை இவ்விவகாரம் தொடர்பாக உடனடியாக தீர்மானம் மேற்கொள்ளும் என முதன்மை முஃப்தி அறிவித்துள்ளார். -inneram

suvanappiriyan said...

திரு இந்தியன்!

// @suvanappiriyan

You have also not apologized for the death and destruction of Hindus and their temples by your Islamic mob.//

தமிழகத்தில், சேர, சோழ,பாண்டியர் என மூவேந்தர்கள் ஆண்டனர். அவர்கள் கட்டிய கோவில்கள், வெட்டிய குளங்கள், செதுக்கிய சிற்பங்கள், பொறித்த கல்வெட்டுகளைப் பார்க்கின்றோம். அவர்களைப் பற்றிய புறநானூற்றுப் பாடல்களைக் கேட்கின்றோம். ஆனால், அவர்கள் வாழ்ந்த வீடுகள் எங்கே? தடயமே இல்லையே? ஏன்? தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிய ராஜராஜன், தனக்காக ஒரு சிறு மாளிகையையாவது கட்டி இருக்க மாட்டானா? அந்த மாளிகை எங்கே?
இந்தக் கேள்விகளை எழுப்பி, அதற்கான விடைகளைத் தேடியபோது கிடைத்த செய்திகள் வருத்தத்தை அளித்தன. ஆம்; பண்டைக்காலத்தில், ஒரு மன்னன் போரில் வெற்றி பெற்றால், தோற்றவருடைய வீட்டைத் தரைமட்டமாக இடித்துத் தகர்த்து, கழுதைகளைக் கொண்டு உழுது, எள் மற்றும் ஆமணக்குச் செடிகளை அங்கே நட்டு விடுவார்களாம். அதாவது, போரில் தோற்றவர் இவ்விதம் இழிவுபடுத்தப்படுகின்றார். அதற்குப் பிறகு அந்த இடத்தில் வேறு யாரும் குடியிருக்க மாட்டார்கள்.

தோற்றவர்கள் கட்டிய கோவில்கள் ஊர்களை அழிப்பதும் அந்த கால வழக்கம். இதற்காக இன்று யார் யாரிடம் சென்று மன்னிப்பு கேட்பது? இது அன்றைய கால அரச முறை. தவறு இருதரப்பிலுமே நடந்தள்ளது.மாலேகானில் குண்டு வைத்த சாது பிரக்யாசிங் சார்பாக இந்தியன் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அது சரியான வாதமாகுமா? குஜராத்தில் நடந்த கலவரம் சில வருடங்கள் முன் நடந்தது. இதற்காக முஸ்லிம்களிடம் இந்தியன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வது சிறு பிள்ளைத் தனம் இல்லையா?.

எனவே இந்துவோ முஸ்லிமோ யாராக இருந்தாலும் அது ஒரு உயிர். அதை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. போர்க்களங்களில் கூட மாற்று மத மதகுருமார்கள், பெண்கள், சிறுவர்களைக் கொல்லக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடுவதைப் பார்க்கிறோம். எனவே அநியாயம் எங்கு நடந்தாலும் அதை முதலில் எதிர்ப்பவன் நானாகத்தான் இருக்கும்.

//I believe in Islam there is no place for Muslim ladies in heaven.//

நீங்கள் நம்புவதெல்லாம் இஸ்லாம் ஆகாது. குர்ஆனின் கட்டளைகள்தான் இஸ்லாமாக முடியும்.

‘அவர்களும் அவர்களின் பெற்றோர் மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்க சோலைகளில் நுழைவார்கள்.’
-குர்ஆன் 13:23

இந்த வசனம் அழகிய முறையில் தனது மனைவி குழந்தைகளோடு சொர்க்கம் புகுவதாக சொல்லியும் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது. இப்பொழுது தக்கியா பிரசாரம் பண்ணுவது இந்தியனாகிய நீங்களே!

suvanappiriyan said...

திரு புனை பெயரில்!

//உலகமனைத்தும் ஒரே ஆண்டவன் என்றால் அவன் ஏன் ஒரு ஊரில் மட்டும் வணக்கப்பட செல்ல வேண்டும்..?//

'அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும் பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் மக்காவில் உள்ளதாகும்.'
-குர்ஆன் 3:96

இறைவனை வணங்க உலகில் முதன் முதல் உண்டாக்கப்பட்ட ஆலயம் கஃபாவாகும். எனவேதான் அது சிறப்பு பெறுகிறது. உலக மக்களுக்கு ஒரு ஒருமைப்பாடு வர வேண்டும் என்பதற்காக அதன் திசையை நோக்கி தொழுமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது. உலக மக்கள் அனைவரும் வருடத்தில் ஒரு முறை கூடுவதால் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற பொது நிலைப்பாட்டுக்கு நாம் வருவதைக் காண முடியும். ஆப்ரிக்கன், ஐரோப்பியன், அமெரிக்கன், ஆசியன் என்ற நிற மொழி இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுக்கு வருவதற்காகவே இந்த ஏற்பாடு.

வசதி உள்ளவர்கள் மட்டுமே தனது வாழ்நாளில் ஒரு முறை மெக்கா செல்ல வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. மற்ற நாட்களில் அவன் தமிழகத்தில் தொழுவதும் இறைவனால் மிகச் சிறப்பாக அங்கீகரிக்கப்படுகிறது.

'மஸ்ஜிதுல் ஹராமை(கஃபாவை)அதன் அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்'
-குர்ஆன் 22:25

இந்த வசனத்தின் படி உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான இடம் கஃபா. அங்கு சென்று பார்த்தால் வெளிநாட்டவர்களின் ராஜ்ஜியமே கொடி கட்டிப் பறப்பதை பார்க்கலாம். தமிழ் நாட்டுக்காரனும், ஆப்ரிக்க நாட்டுகாரனும், அமெரிக்கனும் தனது சொந்த பூமியாகவே நினைத்து பிரார்த்தனையில் ஈடுபடுவான்.

//இந்த காலத்தில் கடத்தல் ஹவாலா… தாவூத்பாய் வகையறாக்களை இஸ்லாம் இயக்கங்கள் ஏன் கண்டிப்பதில்லை..?//

2ஜி ஊழல் ராஜா, முஸ்லிம்களை கொன்ற நரேந்திர மோடி, சாது பிரக்யா சிங், பங்கு சந்தை ஊழல் மன்னன் ஹர்ஷத் மேத்தா போன்றோர்களை நீங்க்ள ஏன் கண்டிப்பதில்லை என்று நான் கேட்டால் நீங்கள் சிரிக்க மாட்டீர்களா? எனவே எவனோ ஒரு இஸ்லாமிய பெயர் தாங்கி தேச துரோக செயலில் ஈடுபட்டால் அதற்கு இஸ்லாமோ முஸ்லிம்களோ எவ்வாறு காரணமாக முடியும்? அவர்களை தண்டிக்க வேண்டியது அரசாங்கமே! தனி மனிதர்களோ இயக்கங்களோ அல்ல. எதிர்ப்பை வேண்டுமானால் பதியலாம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேச துரோக செயலில் எந்த முஸ்லிமாவது ஈடுபட்டால் அதை கண்டித்து பலமுறை அறிக்கை விடுகிறது. ஆனால் அதனை பத்திரிக்கைகள் வெளியிடுவதில்லை. அவர்களின் இணைய தளங்களில் பல முறை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

suvanappiriyan said...

கராச்சி : இஸ்லாமிய நாடான பாகிஸ்‌தானில், பள்ளி மாணவர்களுக்கு இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை சுலோகங்கள் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றுள்ளது ஆட்கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களால் தினம் தினம் திணறிவரும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்து மதம் தொடர்பான நிகழ்ச்சி எவ்வித பிரச்னையும் இல்லாமல் நடைபெற்றுள்ளது அனைவரும் வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.
-dinamalar
03-07-2012

Unknown said...

சகோ நரேன்.. நீங்கள் சொர்க்கதில் இருக்கும் இட பற்றாக்குறையை பற்றி கவலை பட வேண்டாம். மாறாக நரகத்தில் இருக்க போகும் கூட்டத்தை பற்றி கவலை படுங்கள் LOL :)))))))).... அங்க ஒரு இடத்த முன்கூட்டியே புக் பண்ணி வச்சிகங்க. வசதியா இருக்கும்... ROFL/////

சகோ.சிராஜ்
இந்த கருத்தை உங்களுக்கு சொல்ல முடியுமா என்பதை பற்றி கொஞ்சம் சிந்திக்கவும்.
சொர்க்கம், நரகம் இரண்டும் இறைவனின் கைகளிலே உள்ளது.

suvanappiriyan said...

சகோ மனிதன்!

//சகோ.சிராஜ்
இந்த கருத்தை உங்களுக்கு சொல்ல முடியுமா என்பதை பற்றி கொஞ்சம் சிந்திக்கவும்.
சொர்க்கம், நரகம் இரண்டும் இறைவனின் கைகளிலே உள்ளது.//

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். ஒருவர் சொர்க்கவாதியா நரகவாதியா என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Flavour Studio Team said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..
அருமையான பகிர்வு ஜசாக்கல்லாஹ்.. :)

////I believe in Islam there is no place for Muslim ladies in heaven.///

சகோ இந்தியன் இந்த திருமறை வசனங்களை படித்து விட்டு தன தவறான எண்ணத்தை மாற்றி கொள்வார் என நம்புகிறேன்.!

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 40:40)

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:124)


ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம். (அல்குர்ஆன் 16:97)

"உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்'' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) (அல்குர்ஆன் 3:195)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 33:35)

George said...

//கிறித்தவர்களைப் போல் திட்டமிட்ட பிரசாரம் செய்வதில்லை என்றுதான் சொன்னேனேயொழிய தாவா பிரசாரமே இல்லை என்று சொன்னேனா?...............................பஸ்ஸில் பயணித்தாலும் அங்கும் வந்து நோட்டீஸ்களை கொடுத்து பிரசாரத்தை ஆரம்பித்து விடுகிறீர்கள்.//
திட்டமிட்ட பிரச்சாரம் செய்வதில்லை என்றால் எப்படி பிரச்சாரம் செய்கிறீகள். திட்டம் ஏதும் போடாமல் திடீரென்று எதாவது தெரு மூலையில் கூட்டம் நடத்தியோ அல்லது வீடுகளுக்குள் திடீர் என்று திட்டம் இடாமல் புகுந்தோ பிரச்சாரம் செய்கிறீர்களா. ஆக மொத்தத்தில் மதமாற்றம் செய்வதை ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் செய்யும் பிரச்சாரத்திற்கும் கிறிஸ்தவர்கள் செய்யும் பிரச்சாரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக கூட்டங்கள் நோட்டீஸ் கொடுப்பது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். நீங்கள் செய்வது பெரிய அளவில் வெளியில் தெரியாமல் நடக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். நீங்கள் செய்வதும் மத மாற்றம் தான் கிறிஸ்தவர்கள் செய்வதும் மத மாற்றம் தான். இதில் கிறிஸ்தவர்கள் எப்படி கெட்டவர்கள் ஆனார்கள் நீங்கள் எப்படி நல்லவர்கள் ஆனீர்கள். கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சொல்லும் தகுதி முஸ்லிம்களுக்கு எப்படி சார் வந்தது. நீங்கள் கிறிஸ்தவர்களிடம் பிரச்சாரம் செய்வதில்லையா இந்துக்களை உங்கள் வலையில் விழ வைப்பதில்லையா. எரிகிற கொள்ளியில் எல்லாமே ஒன்று தான் சுவனப்ரியன். இதில் நாங்கள் யோக்கியர்கள் கிறிஸ்தவர்கள் தான் கெட்டவர்கள் என்ற ரீதியில் நீங்கள் சொல்வது தான் நகைச்சுவையாக இருக்கிறது.
மதமாற்றம் செய்வது என்பதே கயமை தனம் தான் அதை யார் செய்தாலும். இதில் கிறிஸ்தவர்களை பார்த்து நீங்கள் விரல் நீட்டுவது ............ முடியல
//இப்படியான திட்டமிட்ட பிரசாரங்கள் முஸ்லிம்களிடம் கிடையாது என்றே சொல்ல வந்தேன். முஸ்லிம்கள் அவர்களுக்குள்ளே மார்க்க விளக்கம் என்று நடத்திக் கொள்வார்கள்//
என்ன சொல்ல வருகிறீர்கள், பிரச்சாரத்தை நாங்கள் எங்களுக்குள்ளே தான் வைத்து கொள்வோம் பிறரிடம் செய்ய மாட்டோம் என்றா? அப்படி என்றால் உங்கள் தாவா அமைப்புகள் மூலமாக முஸ்லிம்களுக்கு உள்ளேயே அழைப்பு விடுத்து கொள்கிறீர்களா? நல்ல வேடிக்கை.
// 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற ஒரு நிகழ்ச்சிதான் மாற்று மதத்தவர்களுக்காக நடத்தப்படுகிறது. அதில் விரும்பியவர் வந்து அமரலாம்.//
அதை உங்களுக்கு பிடித்த இஸ்லாமிய அறிஞர் என்று கூறிக்கொள்ளும் பீஜே நடத்துகிறார் என்று வேண்டுமானால் கூறி கொள்ளுங்கள். 'மானுட வசந்தம்' என்றும் வேறு பல பெயர்களிலும் இஸ்லாமை விளக்குகிறோம் என்ற பெயரில் பலர் நடத்தும் நிகழ்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஜாகிர் நாயக் கூட மத ஒற்றுமை ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் தான் நடத்தும் கூட்டங்களில் எல்லாம் பலரை இஸ்லாமியர்களாக மாற்றி கொண்டு தான் இருக்கிறார். சொல்வதை கொஞ்சம் பொருத்தமாக சொல்லுங்கள்.
//அரை மணி நேரம் தொலைக் காட்சிகளில் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிறது. இவை அனைத்தும் முஸ்லிம்களிடம் வசூல் பண்ணியே நடத்தப் படுகிறது.//
அரை மணி நேர நிகழ்ச்சி மட்டுமா முஸ்லிம்களால் நடத்தப்படுகிறது? சிறுகுழந்தை கூட இதை கேட்டால் சிரிக்குமே. ஜாகிர் நாய்க் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நடத்துவதை அப்படியே மறைத்து விட்டீர்களே. எங்கள் ஊர் கேபிள் சானல்களில் மூன் டிவி, என்றும் இஸ்லாமிக் சேனல் என்றும் வருகிறதே அதெல்லாம் காபிர்கள் நடத்துவதா? கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களிடம் வசூல் பண்ணிதான் தொலைக்காட்சிகளும், நிகழ்ச்சிகளும் நடத்துகிறார்கள். உங்களிடமா வந்து வசூல் செய்கிறார்கள். அவர்கள் மதம் அதற்கு அவர்கள் கொடுக்கிறார்கள் உங்களுக்கு என்ன வந்தது அதனால்.

George said...

//அதற்கு காரணம் சுதந்திர போராட்டக் காலத்தில் சில மார்க்க அறிஞர்களுக்கு தேச பக்தி முற்றி போய் 'ஆங்கிலம் படிப்பது ஹராம். அரசு வேலைகளை உதறி விட்டு போராட்டத்தில் குதியுங்கள்' என்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையிலும் அறிவிப்பு செய்தார்கள். இந்த மடத்தனமான அறிவிப்பைக் கேட்டு வேலையையும் படிப்பையும் இழந்தோம்.//
சுதந்திரம் கிடைத்து அறுபதாம் ஆண்டு விழாவை கொண்டாடிவிட்டோம் சுவனப்பிரியன். இன்னும் அதே பல்லவியை பாடிக்கொண்டு இருக்காதீர்கள். சுதந்திர போராட்ட காலத்தில் நீங்கள் படித்தீர்களா இல்லையா என்பதல்ல தற்போது உள்ள பிரச்சனை. தற்காலத்தில் உங்களை எந்த அரசாங்கம் படிக்க வேண்டாம் என்று சொன்னது. எந்த பள்ளி கல்லூரியில் இஸ்லாமியர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது என்பதே எனது கேள்வி. திறமை உள்ள பலர் பல விதங்களில் முன்னேறி கொண்டு தான் இருக்கிறார்கள். அடிக்கடி பொதுக்கூட்டங்கள் நடத்தி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறீர்களே. முதலில் நீங்கள் படிக்க வந்தால் தானே இட ஒதுக்கீட்டில் உள்ள இடத்தை நிரப்ப முடியும்.
//இன்னும் 10 வருடத்தில் நிலைமை தலைகீழாக மாறும். கொஞ்சம் பொறுத்திருங்கள்.//
எப்படி? இன்னும் 10 வருடத்தில் சுவ்தியை போல இந்தியாவையும் மாற்றி விடுவீர்களோ.
//இஸ்லாத்தை ஏற்றால் இந்த இலவசங்களைத் தருகிறோம் என்று சொல்வது தவறான அணுகுமுறை. எதையும் எதிர்பார்க்காமல் அனைத்தையும் உதறி விட்டு முஸ்லிமாக மாறி தனி மரமாக நிற்கும் அவர்களை முஸ்லிம்கள் அரவணைக்க வேண்டும் என்கிறேன்.//
கிறிஸ்தவர்களும் அப்படிதான் செய்கிறார்கள். கிறிஸ்தவர்களாக மாறுபவர்களுக்கு தேவையானதை செய்து அரவணைக்கிறார்கள். இதில் என்ன குற்றம் கண்டீர்கள்.

////பைபிளில் இருந்து காப்பி அடித்த புத்தகம் தானே குரான்.//

அப்படியா....சொல்லவே இல்ல......:-)//

நீங்கள் கேட்கவே இல்லை.
பைபிளில் இருக்கும் பெரும்பாலான கருத்துக்களும் கதா பாத்திரங்களும் தானே குரானில் இருக்கிறது. அதனை காப்பி அடிக்கப்பட்ட புத்தகம் என்று சொல்வதில் என்ன தவறு.

//காப்பி அடித்த புத்தகம் என்று நீங்கள் கூறும் பைபிள் வருடாவருடம் காலத்துக்கு ஏற்றவாறு திருத்திய பதிவாக வருவது ஏனோ?//
முகமது அவரது காலத்தில், அவரது அச்சகத்தில் அச்சடித்த குரான் புத்தகத்தையா நீங்கள் இன்றும் படித்து வருகிறீர்கள். எந்த காலத்துக்கு ஏற்றவாறு பைபிள் திருத்திய பதிப்பாக வந்தது. எந்த வார்த்தைகள் மாறி வந்தது கொஞ்சம் சொல்ல முடியுமா. அப்படியே மாறி இருந்தாலும் எனது ஒரே கேள்வி "அது எப்படி இருந்தா உங்கள் கூட்டத்திற்கு என்ன வந்தது"

George said...

//இன்னும் 10 வருடத்தில் நிலைமை தலைகீழாக மாறும். கொஞ்சம் பொறுத்திருங்கள்.//
எப்படி? இன்னும் 10 வருடத்தில் சவூதி அரேபியாவை போல இந்தியாவையும் மாற்றி விடுவீர்களோ.