Followers

Saturday, December 08, 2012

ஃபிரான்ஸில் 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள் !

ஃபிரான்ஸில் 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள் !

MARSEILLE, FRANCE // Between 100 and 150 new mosques are being built in France as Europe's biggest Muslim community seeks to end the controversial practice of people praying in the street because of a lack of places of worship. Mohammed Moussaoui, president of the Muslim Council of France (CFCM), said the projects were at various stages, from design to near-completion. France is estimated to have up to seven million Muslims out of a total population of 65 million.



(ஃப்ரான்சில் அமைந்துள்ள புகழ் பெற்ற மசூதிகளில் சில....)

ஐரோப்பாவின் மிகப் பெரிய முஸ்லிம் சமூகத்தைக் கொண்ட ஃபிரான்ஸில், மக்கள் வீதிகளில் தொழாமல் தடுக்க 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு வருகிறது. பள்ளிகளில் போதுமான இட வசதி இல்லாமல் வீதியில் முஸ்லிம்கள் தொழுகிறார்கள். இதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையில் ஃபிரான்ஸ் அரசாங்கம் இறங்கியுள்ளது.

ஃபிரான்ஸ் முஸ்லிம் கவுன்சில் (CFCM) தலைவர், Mohammed Moussaoui இதுபற்றிக் கூறியுள்ளதாவது:

திட்டங்கள் பல்வேறு நிலைகளில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. சில பள்ளிகள் வடிவமைப்பிலும் சில பள்ளிகள் முடியும் நிலையிலும் உள்ளது. ஃபிரான்ஸில் மொத்த மக்கள் தொகையான 65 மில்லியன் மக்களில் ஏழு மில்லியன் முஸ்லிம்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான பணம் ஃபிரான்ஸ் நாட்டில் வாழும் முஸ்லிம்களிடமிருந்தே அதிகமாக வருகிறது. வெளிநாட்டில் இருந்து குறைவாகவே உதவி தொகை வருகிறது என்று ரமளானை முன்னிட்டு RTL என்ற பிரெஞ்சு வானொலி நிலையத்திற்கு பேட்டி அளித்த Moussaoui தெரிவித்தார்.

பள்ளிவாசல்களில் இடப் பற்றாக்குறை காரணமாகவே வீதியில் முஸ்லிம்கள் தொழும் நிலை ஏற்படுவதாக அவர் கூறினார்.

Marseille , ஃபிரான்சின் இரண்டாவது பெரிய முஸ்லீம் சமூகத்தை கொண்டிருக்கும் நகரம். இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாக முஸ்லிம் மக்கள் வசிக்கிறார்கள் அதாவது 250,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த நகரத்தில் ஒரு பெரிய மசூதி தேவை என பரவலான கருதப்படுகிறது.

பதினோரு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ரோம் (ROME) நகரத்தில் 2000 பேர் தொழும் அளவுக்கு பிரமாண்டமான பள்ளிவாசல் ரமலானின் திறக்கப்பட்டது.இந்த பள்ளியை எழுப்புவதர்க்கும் அரசியல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் நெருக்கடி ஏற்படத்தான் செய்தது.

Dalil Boubakeur, பாரிஸ் கிராண்ட் மசூதியின் இமாம் கூறுகையில் ஃபிரான்ஸில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை 2000 த்திலிருந்து இரு மடங்காக ஆக்க வேண்டும் என்று கூறுகிறார்.மேலும் பிரெஞ்சு ஜனாதிபதியான சர்கோசியும் பள்ளிகள் அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள La Croix என்ற தினசரி செய்தித்தாள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு ரமலான் வாக்கெடுப்பில் ரோமன் கத்தோலிக்கர்களை விட ஃபிரஞ்சு முஸ்லிம்களின் நம்பிக்கை நடைமுறையில் மிகவும் அதிகம் என்று தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்களை கத்தோலிக்கர்கள் என்று கூறிக் கொள்கின்றனர் ஆனால் அவர்களுடைய மத சடங்குகளில் 15 % மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்று சென்ற வருடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.

பிரெஞ்சு முஸ்லிம்களில் 1994 ஆம் ஆண்டு 60% மக்கள் மட்டுமே ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றார்கள் எனவும் தற்போது 71% மக்கள் நோன்பு நோர்கிரார்கள் என்பதாகவும் அந்த செய்தித்தாள் தெரிவிக்கிறது.

"ரமலான் என்ற நடைமுறை மதம் சம்பந்தமாக மட்டும் இல்லாமல் கலாசார முக்கியத்துவம் வாய்ந்தாதாக இருக்கிறது.ரமளானை அனைவராலும் கண்ணியமாக பார்க்கப்படுகிறது.இந்த நடைமுறையை நம்பாதவர்களாக இருந்தாலும் ரமளானை மதிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று Franck Fregosi, என்ற ஒரு இஸ்லாமிய முன்னணி ஃபிரஞ்சு ஆய்வாளர், செய்தித்தாளுக்கு தெரிவித்தார்.

http://www.thenational.ae/news/worldwide/europe/france-building-more-than-100-mosques

http://www.facebook.com/ekkin.saleem

நன்றி தமிழாக்கம் செய்த பதிவாக்கிய சகோ சலீமுக்கு!

தனது நாட்டு மக்கள் ரோட்டோரத்தில் தொழுகிறார்களே என்று கவலைப்பட்டு அரசு புதிய பள்ளிகளை கட்ட அனுமதியளிக்கிறது. நமது நாட்டில் பல ஆண்டுகள் கம்பீரமாக வீற்றிருந்த பாபரி மசூதியை இடித்து தரை மட்டமாக்குகிறது ஒரு கயவர் கூட்டம். அந்த கயவர் கூட்டத்தின் தலைவன் இந்த நாட்டு உள்துறை மந்திரியாகவும், துணை பிரதமராகவும் ஆக முடிகிறது. இது தான் நமது நாட்டுக்கும் ஃபிரான்சுக்கும் உள்ள வித்தியாசம்.

-----------------------------------------------------

இங்கிலாந்தைச் சார்ந்த இந்திய வம்சாவளி தாயார் தனது மகன் குரான் படிக்கவில்லை எனக் கூறி அடித்துக் கொடுமை செய்து வந்துள்ளாள். ஒரு கட்டத்தில் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சோர்வுற்ற அந்த ஏழு வயது குழந்தையைக் கொன்று விட்டதாக இந்த செய்தி சொல்கிறது. குழந்தை இறந்ததற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா என்பது தீவிர விசாரணைக்குப் பிறகே தெரிய வரும். ஏனெனில் தான் பெற்ற குழந்தையை ஒரு தாய் வேத புத்தகத்தை மனனம் செய்ய வில்லை என்ற ஒரே காரணத்துக்காக கொன்றிருப்பாளா என்பது விவாதத்திற்குரிய விஷயம். ஒரு கால் அந்த தாய் மன நலம் பாதிக்கப்பட்டவளாக இருக்க வாய்ப்புண்டு.

ஏனெனில் குர்ஆனின் மீது மதிப்பும் மரியாதையும் எப்போது வரும்? அது இறைவனால் அருளப்பட்டது. அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இறப்புக்குப் பிறகு நல்ல வாழ்வு கிட்டும் என்ற நோக்கிலேயே பலரும் குர்ஆனை மனனம் செய்வதிலோ அதனை பின் பற்றுவதிலோ ஆர்வம் செலுத்துகின்றனர். அந்த குர்ஆனை மனனம் செய்யாததால் தனது குழந்தையை ஒரு தாய் கொன்றால் அது அந்த குர்ஆனுக்கே எதிரானது. பின் வரும் வேத வசனத்தை ஆழமாக படித்துப் பாருங்கள்..

'அறிவில்லாமல் மடமையின் காரணமாக தமது குழந்தைகளைக் கொன்றவர்களும் இறைவனின் பெயரால் இட்டுக் கட்டி இறைவன் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர். வழி கெட்டனர். நேர் வழி பெறவில்லை.'
குர்ஆன் 6:140

அறிவில்லாமல் மடமைத்தனமாக அந்த பெண் தனது குழந்தையை கொன்றுள்ளார். இறைவனின் வேதத்தை மனனம் செய்யவில்லை என்ற காரணத்தை இட்டுக் கட்டி சொல்லியுள்ளார். (அல்லது செய்தி சேகரிப்பவர்கள் இட்டுக் கட்டியிருக்கலாம்) குர்ஆனை மனனம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. பொருள் தெரியாமல் குர்ஆனை ஓதியதால் வந்த கிறுக்குத்தனமான பக்தி இது.

எனவே குறை குர்ஆனிலோ இஸ்லாத்திலோ இல்லை. இஸ்லாத்தை விளங்காத அந்த மூடப் பெண்ணிடம்தான் தவறு இருக்கிறது. (இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில்) குர்ஆனை சரியாக விளங்காமல் தனது குழந்தைக்கு பாடம் எடுக்க கிளம்பி விட்ட இந்த பேதைப் பெண்ணை என்னவென்பது? தற்போது இந்த செயலால் அந்த குழந்தை சொர்க்கத்துக்கு செல்லவும் இந்த பேதைப் பெண் நரகத்துக்கு செல்லவும் காரணமாகி விட்டது. குர்ஆன் எதற்காக அருளப்பட்டது? அது சொல்லும் செய்தி என்ன? அதற்கு மரியாதை எந்த வரையறைக்குள் செலுத்த வேண்டும் என்பதை மனித குலம் உணர வேண்டும். அந்த முயற்சியை மற்ற மக்களுக்கு முஸ்லிம்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

http://naijagists.com/muslim-mother-killed-son-for-failing-to-learn-quran/

19 comments:

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

//ஐரோப்பாவின் மிகப் பெரிய முஸ்லிம் சமூகத்தைக் கொண்ட ஃபிரான்ஸில், மக்கள் வீதிகளில் தொழாமல் தடுக்க 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு வருகிறது//

மாஷா அல்லாஹ்.

அந்த குழந்தை குறித்து படிக்கும்போது மனம் வெதும்புகின்றது. எப்படியெல்லாம் முட்டாள்கள் இருக்கின்றார்கள் என்பதும் புலப்படுகின்றது. இறைவன் அந்த குழந்தைக்கு சுவர்க்கத்தை தந்தருள்வானாக...

VANJOOR said...

அருட்கொடையாம் தொழுகை

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி
உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்
இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற
உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,
நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது
நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து
"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.

ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '
என கூறுகிறார்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன.

அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள்.

திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


வாஞ்சையுடன் வாஞ்சூர்.
**********

எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!!

மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும்,

மழையிலும், பனியிலும், வெயிலிலும்,

ஊணத்திலும், நலத்திலும்,

பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும்,

பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……

அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.

ஓ மானுடனே! சிந்திப்பாயா ?

உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள்.

பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான்.



கீழே உள்ள‌ சுட்டியை
சொடுக்கி

>>>** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.** <<<

.
.

UNMAIKAL said...

ஒரு தகவலுக்காக.

பவர்கட், இருட்டில் சமைத்தாலும் வெளிச்சம் கொண்டு சோதித்த பிறகே உண்ணுங்கள்.

'பவர் கட்'டுக்கு நடுவே சமையல்...

சாம்பாரில் மிதந்த பாம்பு...ஷாக்கில் நிலைகுலைந்த பெண்!


சென்னை: சென்னை அருகே மின்சாரத் தடை காரணமாக இருட்டில் சமையல் செய்தார் ஒரு பெண். சாம்பாரை வைத்து அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி வீட்டாருக்கு சாப்பாடு பரிமாறினார்.

அடுத்த நாள் காலையில் சாம்பார் இருந்த பாத்திரத்தைப் பார்த்தபோது, அதில், பாம்பின் எலும்புக் கூட கிடந்ததைப் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தவர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து தெளியாமல் பித்துப் பிடித்தவர் போல காணப்படுகிறார்.

சென்னை அகருகே வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கம்மாள். 47 வயதான இவர் டிசம்பர் 4ம் தேதி மாலை 7 மணியளவில் சமையல் செய்துள்ளார்.

அப்போது மின்சாரம் இல்லை. 2 மணி நேர மின்வெட்டு என்பதால் இருட்டிலேயே சமையல் செய்து முடித்தார். சாதம் வைத்து, சாம்பார் வைத்தார். பின்னர் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பாடு பரிமாறினார். வீட்டாரும் சாப்பிட்டு முடித்தனர்.

அடுத்த நாள் காலை எழுந்த மங்கம்மாள் பாத்திரங்களைக் கழுவ உட்கார்ந்தார். அப்போது சாம்பார் பாத்திரத்தை எடுத்த அவர் அதில் நீளமான ஒரு எலும்புக் கூடு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதை வெளியில் எடுத்துப் பார்த்தபோது அது பாம்பின் உடல் என்று தெரிய வந்தது.

தகவல் தெரிந்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து விட்டனர். அவர்களில் சிலர் இது நல்ல பாம்பின் எலும்புக் கூடு என்று கூறவே மங்கம்மாள் பெரும் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்து விட்டார்.

உடனடியாக அவரை டாக்டரிடம் கூட்டிச் சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு பாம்பின் விஷம் ஏறியிருக்கலாம் என்று கூறவே உடனடியாக திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது உடலில் பாம்பு விஷம் ஏறவில்லை என்பது தெரிய வந்தது.

இருப்பினும் தொடர்ந்து வாந்தி எடுத்தபடியும், மயங்கிய நிலையிலும் இருந்தார் மங்கம்மாள். இதையடுத்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கூட்டி வந்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பாம்பு விஷம் அவரைத் தாக்கவில்லை, மாறாக புட் பாய்சன் ஆகியுள்ளது என்று கூறி அதற்குச் சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் மங்கம்மாளின் பயம் இன்னும் போகவில்லை. பாம்பை நினைத்து பித்துப் பிடித்தவர் போலவே காணப்படுகிறார்.

மங்கம்மாள் ஏற்கனவே காது கேளாத பெண்மணி ஆவார். தற்போது பாம்பைச் சமைத்து சாப்பிட்டு விட்டதால் அந்த பயம் அவரை கடுமையாக பாதித்துள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அவருக்கு பயம் தெளியாவிட்டால் மன நல மருத்துவப் பரிசோதனைக்கு அவரை அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

SOURCE:http://tamil.oneindia.in/news/2012/12/09/tamilnadu-housewife-left-paranoid-after-seeing-snake-in-sambar-165964.html

suvanappiriyan said...

சலாம் சகோ ஆசிக்!

//அந்த குழந்தை குறித்து படிக்கும்போது மனம் வெதும்புகின்றது. எப்படியெல்லாம் முட்டாள்கள் இருக்கின்றார்கள் என்பதும் புலப்படுகின்றது. இறைவன் அந்த குழந்தைக்கு சுவர்க்கத்தை தந்தருள்வானாக...//

குர்ஆனை சரியாக விளங்காததால் வந்த குளறுபடிகள் இவை. அல்லது அந்த தாய் மனநலம் பாதிக்கப்பட்டவளாக இருக்க வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.//

தொழுகையின் பலன்கள் குறித்து மிக அழகிய பகிர்வை தந்தமைக்கு நன்றி!

Anonymous said...

புதுடில்லி: காஷ்மீர் மற்றும் பயங்கரவாதிகள் பிரச்னை தீர, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த தெற்காசிய ஊடகங்கள் கமிஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், "காஷ்மீர் பிரச்னைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் இந்திய பாகிஸ்தான் பிரிவினை என்பதே ஒரு கள்ளத்தனமான நடவடிக்கை. இரு நாட்டு கொள்கை என்பதை நான் எப்போதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். பாகிஸ்தானை ஒரு சட்டபூர்வமான நாடாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். காஷ்மீர் பிரச்னைக்கு ஓரே நிரந்தர தீர்வு, மீண்டும் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் ஒன்றிணைவதே. மத்தியில் வலிமையான, மதச்சார்பற்ற, நவீன கால மனப்பான்மை கொண்ட அரசு அமைய வேண்டும்.

நான் சொல்கிறேன் இந்தியாவில் 90 சதவீதம் பேர் முட்டாள்கள். உங்களுக்கெல்லாம் தலையில் மூளை என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. டில்லியில் வெறும் ரூ. 2 ஆயிரத்தில் ஒரு ஜாதி மோதலை ஏற்படுத்தி விடலாம். வழிபாட்டுத்தலம் என்று கூட பார்க்காமல் சிலர் இதை செய்யத் தயாராக இருக்கின்றனர். இதை நம்பி பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கின்றனர். இந்த மோதலுக்குப்பின்னால் சில விஷமிகள் இருப்பதை அவர்கள் உணர்வதேயில்லை.

கடந்த 1857ம் ஆண்டுக்கு முன்னால் வரை இந்தியாவில் ஜாதி, இன மோதல்கள் இல்லை. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக உள்ளது. மிகவும் கசப்பான உண்மையை நான் உங்களுக்குச் சொல்கிறேன் இந்தியாவில் உள்ள மக்களில் 80 சதவீதம் பேர் மத வெறியர்களாக உள்ளன. இது எவ்வாறு நடந்தது. இதற்கு காரணம் ஆங்கிலேயர்களே. அவர்களின் வருகைக்குப்பின்னரே நாட்டில் மத மோதல்கள் அதிகரித்தன. இந்தியர்களை மத ரீதியாக பிரித்தால் மட்டுமே தங்களால் இந்நாட்டை ஆளமுடியும் என்ற ஆங்கிலேயர்களின் சதியே இந்த மோதல்களுக்கு காரணம். நமது முன்னோர்கள் இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளை கற்றனர். ஆனால் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள், இந்தி இந்துக்களுக்கு என்றும், உருது முஸ்லிம்களுக்கு என்றும் பிரித்து, இருவருக்குமிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டனர். இந்தியர்களாகிய நாம், இந்த விளையாட்டெல்லாம் நம்மை முட்டாளாக்க செய்யப்பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கசப்பான விஷயங்களை நான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=602372

semmalai akash said...

ரொம்ப நல்லது. நமது சகோதரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே!

சிராஜ் said...

நல்ல பகிர்விற்கு நன்றி அண்ணன்....

Anonymous said...

//தனது நாட்டு மக்கள் ரோட்டோரத்தில் தொழுகிறார்களே என்று கவலைப்பட்டு அரசு புதிய பள்ளிகளை கட்ட அனுமதியளிக்கிறது. நமது நாட்டில் பல ஆண்டுகள் கம்பீரமாக வீற்றிருந்த பாபரி மசூதியை இடித்து தரை மட்டமாக்குகிறது ஒரு கயவர் கூட்டம். அந்த கயவர் கூட்டத்தின் தலைவன் இந்த நாட்டு உள்துறை மந்திரியாகவும், துணை பிரதமராகவும் ஆக முடிகிறது. //

ஹஹா ஹா , உலகில் தாங்கள் மட்டுமே யோக்கியர்கள் மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் காபிர்கள், என்று சொல்லிக்கொண்டு திரியும் ஒரு கூட்டம் இருக்கிறது, அந்த கூட்டத்தினர் ஆட்சி செய்யும் நாடுகளில் பிற மதத்தவர், வாயையும், கையையும் பொத்தி கொண்டு தான் நடக்க வேண்டும், வெளிப்படையாக தங்கள் மதத்தை பின்பற்ற கூட உரிமை கிடையாது. ஏன் இப்படி என்று கேட்டால், 'அதற்கெல்லாம் ஒத்துக்கொண்டு தானே" போகிறீர்கள் என்று சில சுவன பிரியர்கள் சால்ஜாப்பு சொல்வார்கள். அனால் பெரும் நகைச்சுவையாக தங்களை மத வெறி இல்லாதவர்கள் என்றும் சொல்லிகொல்வார்கள். ஒருபக்கம் தங்கள் மதத்தையும் பரப்புவார்கள். இவர்களை பற்றி யாரும் விமர்சனம் செய்யகூடாது . மீறி செய்தால் ஓன்று அவர் உயிரை இழக்க வேண்டி இருக்கும் அல்லது கை கால்களை இழக்க வேண்டி இருக்கும். ஆனால் இவர்கள் எல்லா மதங்களையும் தெய்வ நம்பிக்கைகளையும் விமர்சனம் செய்வார்கள், யார் இவர்களுக்கு இந்த சிறப்பு அதிகாரத்தை கொடுத்தது என்று தெரியவில்லை. வெட்ககேடு இவர்களால் காபிர் நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளில் தான் சொகுசாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அந்த நாடுகளுக்கு அவ்வபோது குண்டும் வைப்பார்கள்,

பிற மதங்களையோ நம்பிக்கைகளையோ கடுகளவு கூட மதிக்காத ஒரு கூட்டம் தனது மதத்தை எல்லாரும் தூக்கி பிடிக்க வேண்டும் எதிர் பார்க்கிறது, என்ன நியாயம் இது. எங்கள் நாடுகளில் பிற மதங்கள் வர கூடாது, ஆனால் நாங்கள் எல்லா நாடுகளிலும் வருவோம், எங்கள் மதத்தை பரப்புவோம், ஆஹா, அற்புதமான நியாயம் அல்லவா. இவர்கள் உலகிற்கு என்ன நன்மைகளை செய்து கிழித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் உலகம் இஸ்லாமிய மயம் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவ்வளவு அல்லாவின் பிள்ளைகளை வைத்து கொண்டே இவர்களின் அட்டூழியம் தாங்க வில்லை. இன்னும் இவர்கள் மேலும் பரவினால்.... அம்மாடி.. உலகம் எப்படி தாங்கும்..


//இது தான் நமது நாட்டுக்கும் ஃபிரான்சுக்கும் உள்ள வித்தியாசம்.//

காபிர்களின் நாடு, கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள மதசார்பற்ற நாடு, ஆனால் பிற மதத்தவர்களையும் மதிக்கிறார்கள்,
சவூதி என்று ஒரு நாடு இருக்கிறது, வெட்க கேடு, பிற மதத்தவர் வெளிப்படையாக தங்கள் கடவுளை வணங்க கூடாதாம்,

என்ன மூஞ்சிய வச்சிக்கிட்டு நீங்க எல்லாம் மத சார்பின்மை மத வெறி பற்றி பேசுறீங்க. ஒரு ஓட்டை மசூதியை இடித்தவர்கள் கயவர்கள் என்றால் பிற மதத்தவர்களை, காபிர்கள் என்றும் அவர்களுக்கு மத சுதந்திரம் கூட கொடுக்காத உங்கள் கூட்டத்தை திட்டுவதற்கு கேவலமான வார்த்தை எதாவது இருக்கிறதா?

பாவம் பிரான்ஸ் அரசு. இன்னும் அல்லாவின் பிள்ளைகளை சரியாக புரிந்து கொள்ளவில்லை, கூடிய விரைவில் ஷரியா கொண்டு வா, அல்லாவின் ஆட்சி கொண்டு வா, தனி நாடு தா என்று கொடி பிடிப்பார்கள் அப்போது செய்த தவறின் ஆழம் புரியும், ரோட்டில் மாளிகை கட்டி கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பது குண்டு வெடித்தால் தான் பிரான்ஸ் அரசுக்கு புரியும். ஏற்கனவே இங்கிலாந்து அனுபவித்து கொண்டு இருக்கிறது . விரைவில் பிரான்ஸ், அடுத்து எந்த நாடோ,

Anonymous said...

//தனது நாட்டு மக்கள் ரோட்டோரத்தில் தொழுகிறார்களே என்று கவலைப்பட்டு அரசு புதிய பள்ளிகளை கட்ட அனுமதியளிக்கிறது. நமது நாட்டில் பல ஆண்டுகள் கம்பீரமாக வீற்றிருந்த பாபரி மசூதியை இடித்து தரை மட்டமாக்குகிறது ஒரு கயவர் கூட்டம். அந்த கயவர் கூட்டத்தின் தலைவன் இந்த நாட்டு உள்துறை மந்திரியாகவும், துணை பிரதமராகவும் ஆக முடிகிறது. //

ஹஹா ஹா , உலகில் தாங்கள் மட்டுமே யோக்கியர்கள் மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் காபிர்கள், என்று சொல்லிக்கொண்டு திரியும் ஒரு கூட்டம் இருக்கிறது, அந்த கூட்டத்தினர் ஆட்சி செய்யும் நாடுகளில் பிற மதத்தவர், வாயையும், கையையும் பொத்தி கொண்டு தான் நடக்க வேண்டும், வெளிப்படையாக தங்கள் மதத்தை பின்பற்ற கூட உரிமை கிடையாது. ஏன் இப்படி என்று கேட்டால், 'அதற்கெல்லாம் ஒத்துக்கொண்டு தானே" போகிறீர்கள் என்று சில சுவன பிரியர்கள் சால்ஜாப்பு சொல்வார்கள். அனால் பெரும் நகைச்சுவையாக தங்களை மத வெறி இல்லாதவர்கள் என்றும் சொல்லிகொல்வார்கள். ஒருபக்கம் தங்கள் மதத்தையும் பரப்புவார்கள். இவர்களை பற்றி யாரும் விமர்சனம் செய்யகூடாது . மீறி செய்தால் ஓன்று அவர் உயிரை இழக்க வேண்டி இருக்கும் அல்லது கை கால்களை இழக்க வேண்டி இருக்கும். ஆனால் இவர்கள் எல்லா மதங்களையும் தெய்வ நம்பிக்கைகளையும் விமர்சனம் செய்வார்கள், யார் இவர்களுக்கு இந்த சிறப்பு அதிகாரத்தை கொடுத்தது என்று தெரியவில்லை. வெட்ககேடு இவர்களால் காபிர் நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளில் தான் சொகுசாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அந்த நாடுகளுக்கு அவ்வபோது குண்டும் வைப்பார்கள்,

பிற மதங்களையோ நம்பிக்கைகளையோ கடுகளவு கூட மதிக்காத ஒரு கூட்டம் தனது மதத்தை எல்லாரும் தூக்கி பிடிக்க வேண்டும் எதிர் பார்க்கிறது, என்ன நியாயம் இது. எங்கள் நாடுகளில் பிற மதங்கள் வர கூடாது, ஆனால் நாங்கள் எல்லா நாடுகளிலும் வருவோம், எங்கள் மதத்தை பரப்புவோம், ஆஹா, அற்புதமான நியாயம் அல்லவா. இவர்கள் உலகிற்கு என்ன நன்மைகளை செய்து கிழித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் உலகம் இஸ்லாமிய மயம் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவ்வளவு அல்லாவின் பிள்ளைகளை வைத்து கொண்டே இவர்களின் அட்டூழியம் தாங்க வில்லை. இன்னும் இவர்கள் மேலும் பரவினால்.... அம்மாடி.. உலகம் எப்படி தாங்கும்..


//இது தான் நமது நாட்டுக்கும் ஃபிரான்சுக்கும் உள்ள வித்தியாசம்.//

காபிர்களின் நாடு, கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள மதசார்பற்ற நாடு, ஆனால் பிற மதத்தவர்களையும் மதிக்கிறார்கள்,
சவூதி என்று ஒரு நாடு இருக்கிறது, வெட்க கேடு, பிற மதத்தவர் வெளிப்படையாக தங்கள் கடவுளை வணங்க கூடாதாம்,

என்ன மூஞ்சிய வச்சிக்கிட்டு நீங்க எல்லாம் மத சார்பின்மை மத வெறி பற்றி பேசுறீங்க. ஒரு ஓட்டை மசூதியை இடித்தவர்கள் கயவர்கள் என்றால் பிற மதத்தவர்களை, காபிர்கள் என்றும் அவர்களுக்கு மத சுதந்திரம் கூட கொடுக்காத உங்கள் கூட்டத்தை திட்டுவதற்கு கேவலமான வார்த்தை எதாவது இருக்கிறதா?

பாவம் பிரான்ஸ் அரசு. இன்னும் அல்லாவின் பிள்ளைகளை சரியாக புரிந்து கொள்ளவில்லை, கூடிய விரைவில் ஷரியா கொண்டு வா, அல்லாவின் ஆட்சி கொண்டு வா, தனி நாடு தா என்று கொடி பிடிப்பார்கள் அப்போது செய்த தவறின் ஆழம் புரியும், ரோட்டில் மாளிகை கட்டி கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பது குண்டு வெடித்தால் தான் பிரான்ஸ் அரசுக்கு புரியும். ஏற்கனவே இங்கிலாந்து அனுபவித்து கொண்டு இருக்கிறது . விரைவில் பிரான்ஸ், அடுத்து எந்த நாடோ,

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் ..சகோஸ்,
@ வாஞ்சூர் பாய் ..
நல்லா இருக்கீங்களா ..?? கொஞ்ச நாளா பதிவு பக்கமே காணோமே ..!!
முன்பு போல வேகம் இல்லியே ...தாங்கள் ஆரோக்கியமுடன் இருக்க தூவா செய்கிறேன் ....ஆமின் .
ஓ .........ஃபிரன்ச்
தல முக்காடுக்கு [ஹிஜாப்] தடை செய்கின்ற நாட்டில் 100,150 புதிய மசூதிகளா.....!!! மாஷா அல்லாஹ் ... IT'S IMPOSSIBLE TO STOP " ISLAM SPREADING " RAPIDLY IN WORLD.
தூற்றுவார் துற்றிக்கொண்டே இருக்கட்டும் ....நாம் அவர்களையும்,
இன்முகத்துடன் ஆரவனைத்துக்கொண்டு "சத்திய மார்கத்தின்" பால்
வழி நடப்போம் ...

suvanappiriyan said...

அனானி!

//பிற மதங்களையோ நம்பிக்கைகளையோ கடுகளவு கூட மதிக்காத ஒரு கூட்டம் தனது மதத்தை எல்லாரும் தூக்கி பிடிக்க வேண்டும் எதிர் பார்க்கிறது, //

பிற மதங்கள் என்று எதை சொல்கிறீர்கள்? இந்து மதத்தையா? அதில் உள்ள வர்ணாசிரமத்தையா? இந்த குளறுபடியின் பலனாகத்தானே சமீபத்தில் நடந்த தர்மபுரி கலவரமே! மனிதனுக்குள் ஏற்றத் தாழ்வுகளை கற்பிக்கும் இந்த மதம் வேண்டாம் என்றுதானே பல தலைமுறைக்கு முன்னால் எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இந்த நவீன யுகத்திலும் சாதி வெறி இன்னும் உங்களிடத்திலே குறையவில்லையே!

//என்ன மூஞ்சிய வச்சிக்கிட்டு நீங்க எல்லாம் மத சார்பின்மை மத வெறி பற்றி பேசுறீங்க. //

என்ன மூஞ்சிய வச்சுகிட்டு சவுதியிலும் இந்து மதத்தை பரப்ப வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்று நான் கேட்க மாட்டேன். ஏனெனில் உங்களைப் போன்ற இந்துத்வா வாதிகள் இந்து மதத்தில் மிக சொறபமே. நடுநிலை வாதிகளும் நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களும் அதிகம் நிறைந்தது இந்து மதம். சொற்ப எண்ணிக்கையினரான உங்களை வைத்து மற்றவர்களை நான் தவறாக எண்ண மாட்டேன்.

ஃப்ரான்ஸில் இஸ்லாம் வளர்ந்தால் பெண்கள் கண்ணியப் படுத்தப் படுவார்கள். ஒழுக்கமான சமூகம் உருவாகும். அந்த நாடும் சிறப்புறும். இடையில் இஸ்ரேலோ அமெரிக்காவோ தனது மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும்.

suvanappiriyan said...

சலாம் சகோ நாசர்!

//ஓ .........ஃபிரன்ச்
தல முக்காடுக்கு [ஹிஜாப்] தடை செய்கின்ற நாட்டில் 100,150 புதிய மசூதிகளா.....!!! மாஷா அல்லாஹ் ... IT'S IMPOSSIBLE TO STOP " ISLAM SPREADING " RAPIDLY IN WORLD.
தூற்றுவார் துற்றிக்கொண்டே இருக்கட்டும் ....நாம் அவர்களையும்,
இன்முகத்துடன் ஆரவனைத்துக்கொண்டு "சத்திய மார்கத்தின்" பால்
வழி நடப்போம் ... //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ செம்மலை ஆகாஷ்!

//ரொம்ப நல்லது. நமது சகோதரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே!//

கண்டிப்பாக ! இடப் பற்றாக் குறையினால் தெருக்களில் தொழாமல் பள்ளியின் உள் தொழும் வாய்ப்பு இனி கிட்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//நல்ல பகிர்விற்கு நன்றி அண்ணன்....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

VANJOOR said...

//Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் ..சகோஸ்,
@ வாஞ்சூர் பாய் ..
நல்லா இருக்கீங்களா ..?? கொஞ்ச நாளா பதிவு பக்கமே காணோமே ..!!
முன்பு போல வேகம் இல்லியே ...தாங்கள் ஆரோக்கியமுடன் இருக்க தூவா செய்கிறேன் ....ஆமின் .//


அன்பின் நாஸர்,

வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)

வ‌ய‌தின் தாக்க‌ம் ஆட்கொண்டு விட்ட‌து.

சீரான‌ வ‌ழியில் வ‌ள‌ர்ச்சி அடைந்துவ‌ரும் ந‌ம் ப‌திவ‌ர்க‌ளை எண்ணி ம‌கிழ்ச்சி அடைகிறேன்.

என் பொருட்டான‌ த‌ங்க‌ளின் 'துவா' வுக்கு என‌து ம‌னமார்ந்த‌ நன்றியை தெரிவிப்ப‌துட‌ன்,

த‌ங்க‌ள், த‌ங்க‌ள் குடும்ப‌த்தின‌ருக்கும் வ‌ல்ல‌ இறைவ‌னின் ந‌ல்லருளை நாடுகிறேன்.

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

UNMAIKAL said...

சகோதரனைச் சந்தேகப்படாதீர்கள்:

முஸ்லிம்களிடம் கமலஹாசன் அறிக்கை


ஞாயிறு, 09 டிசம்பர் 2012 19:48

முஸ்லிம்களிடம் கமலஹாசன் அறிக்கைவிரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் திரைப்படம் பற்றி கமலுக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்களும் சிறுபான்மை முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மூன்று பக்க அறிக்கை ஒன்றினை கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.

அதில் முஸ்லிம்களுக்கு விளக்கம் அளிக்கும் பகுதி இது:

விஸ்வரூபம் முஸ்லிம்களை தவறாகச் சித்தரிக்கும் படம் என்று ஒரு சில முஸ்லிம் அமைப்புகள் சந்தேகப்படுகிறதாம்.

இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர்.

அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது.

நான் விடமாட்டேன்.

சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.

அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது.

ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள்

எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள்.

அப்பெரும் விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.

SOURCE: www.inneram.com

UNMAIKAL said...

PART 1.மின்சாரத்தை விமானம் மூலம் கொண்டு வர முடியாது -

கருணாநிதி கடிதம்!


'உடனடியாக முதல்வரோ, மின் துறை அமைச்சரோ டெல்லி சென்று உரியவர்களோடு அமர்ந்து பேசி,

தமிழகத்தின் மின் தேவையைத்தீர்க்க உடனடியாக என்ன செய்யலாம் என்று கலந்தாலோசித்து முடிவு காண வேண்டும்.

பள்ளிகளிலே சில சிறு பிள்ளைகள் எதற்கெடுத்தாலும் ஆசிரியரிடம் புகார் செய்வதைப்போல,

“நான் உச்சநீதி மன்றம் போகிறேன், வழக்கு தொடுக்கிறேன்,” என்பது பிரச்சினையைத் தீர்க்க நிச்சயமாக உதவிடாது ''

என்று திமுக தலைவர் கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இங்குள்ள அ.தி.மு.க. அரசோ ஏற்கனவே இருந்த தி.மு. கழக அரசின் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப்பார்த்தது.

ஆனால் அதுகுறித்து நான் இரண்டு கடிதங்கள் விரிவாக எழுதிய பின், மத்திய அரசின் மீது பழியைச்சுமத்திட முற்பட்டார்கள்.

பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள்.

ஆனால் பிரதமர் பதில் எழுதவில்லை என்று கூறி, உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசின் மீது திட்டமிட்டுக்குறை கூறி வழக்கு தொடுத்தார்கள்.

உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வைத்த இந்த இரண்டு கோரிக்கைகளில் உபரி மின்சாரத்தை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்குவது என்பது சுலபமாக உடனடியாகத் தீர்க்கக் கூடிய ஒரு பிரச்சினை.

ஆனால் அந்த மின்சாரத்தை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரும் வகையில், மின் தடத்தை ஏற்படுத்தித்தரவேண்டுமென்ற கோரிக்கையை நினைத்தவுடன் செய்துவிட முடியாது.

இது பொறியாளர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

ஆனாலும் தமிழக அரசு இந்தக்கோரிக்கையை உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்தது.

டெல்லியிலிருந்து தேவையான அரிசியைக்கொண்டு வர வேண்டுமென்றால், ரெயில் மூலமாகக்கொண்டு வந்துவிடலாம்.

அவசர அவசியம் கருதி மருந்து பொருள்களைக் கொண்டு வரவேண்டுமென்றால் விமானம் மூலம் உடனடியாகக் கொண்டு வரலாம்.

ஆனால் டெல்லியிலிருந்து மின்சாரத்தை ரெயில் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ கொண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை.

மின்சாரத்தைக்கொண்டு வருவதற்கு என்று பிரத்தியேகமான கட்டமைப்பு முன்கூட்டியே உருவாக்கப்பட்டிருந்தால் அது உடனடியாக சாத்தியமாகும்.

மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சர் திரு. கே.சி. வேணு கோபால் அவர்கள் இந்தக் கோரிக்கை குறித்து விளக்கிக்கூறும்போது,

“மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வருவதற்கான மின் வழித் தடத்தில் பிரச்சினை உள்ளது.

தற்போதுள்ள மின்வழித்தடத்தில் கொண்டு வந்தால் கடும் மின்சார இழப்பு ஏற்படும்.

எனவே ராய்ப்பூர் வழியாக புதிய மின் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் புதிய மின் வழித்தடம் அமைக்கும் பணி வரும் 2014ஆம் ஆண்டு ஜனவரிக்குள் நிறைவு பெறும்” என்று சொல்லி அது அப்போதே ஏடுகளிலேயே வெளிவந்திருக்கிறது.

தமிழக அரசின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக்கழகத்தின் (டான் ஜெட்கோ) மூத்த அதிகாரி ஒருவரே ‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், “தேசிய மின் இணைவமைப்பிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்யவோ, தெற்கு மின் இணைவமைப்பின் வழியில் தற்போதுள்ள நெரிசல் நீங்கி சுலபமாவதற்கோ, 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தமிழகம் காத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நாம் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை செய்தி என்னவென்றால்,

டெல்லியிலிருந்து உடனடியாக தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு மத்திய அரசு முன் வந்தாலுங்கூட,

அந்த மின்சாரத்தைக்கொண்டு வருவதற்கான கட்டமைப்பு தற்போதுதான் உருவாக்கப்பட்டு வருகிறது,

அது முழுமையடைய 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தமிழக அரசு காத்திருக்க வேண்டும் என்பதுதான்.

கடுமையான மின் பிரச்சினை வரும் என்பதற்கான அறிகுறிகள் ஓராண்டுக்கு முன்பே தெரிந்திருந்தும் அதற்கான முன் முயற்சியில் அ.தி.மு.க. அரசு ஈடுபடவில்லை என்பதை மறந்துவிட முடியாது.



CONTINUED …

UNMAIKAL said...

PART 2 .மின்சாரத்தை விமானம் மூலம் கொண்டு வர முடியாது -

கருணாநிதி கடிதம்!


இதை மனதிலே கொண்டு தமிழக அரசு டெல்லியிலிருந்து மின்சாரத்தை வரவழைக்க எண்ணாமல்,

தமிழகத்திற்கு அருகிலே உள்ள மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, தமிழகத்திற்குத் தேவையான மின் சாரத்தை மத்திய அரசிடமிருந்து கூடுதலாகப்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதே சாலச்சிறந்ததாக இருக்கும்.

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத் திற்கு அதிலும் குறிப்பாக டெல்லியிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தற்போது இல்லை என்ற உண்மைகளை தமிழக அரசு தெரிந்து வைத்திருக்கிறதா?

அல்லது தெரியாத நிலையில் உச்ச நீதி மன்றம் சென்றிருக்கிறதா? என்றே தெரியவில்லை.

ஆனால் இதற்கிடையே தமிழ்நாட்டில் உள்ள சில நாளேடுகள் மத்திய அரசுதான் இந்த மின்சாரத்தை வழங்க மறுப்பதைப் போலவும்,

தமிழக அரசிடம் எந்தத்தவறும் இல்லை என்பதைப்போலவும்,

எப்படியாவது தமிழக அரசையும், குறிப்பாக தமிழக முதல்வரையும் எந்தப்பழியும் வந்து விடாமல் காப்பாற்றுகின்ற முயற்சியிலே ஈடுபட்டு, அவ்வாறே செய்திகளை தொடர்ந்து வெளியிடுகின்றன.

உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை விவகாரங்களை உள்ளே விரிவாக வெளியிட்டாலுங்கூட,

“தினமணி” நாளேடு தலைப்பில் “தமிழகத்துக்கு டெல்லி மின்சாரம் கிடையாது - உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்” என்று வெளியிட்டுள்ளது.

அதைப்போலவே “தினமலர்” நாளேடு தலைப்பில் “முடியாது - தமிழகத்திற்கு உபரி மின்சாரத்தை வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்” என்றும் வெளியிட்டுள்ளது.

“தினத்தந்தி” நாளேடோ “கூடுதல் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க இயலாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்” என்று வெளியிட்டுள்ளது.

இப்படி “கிடையாது”,“இயலாது” ,“முடியாது” -என்று மத்திய அரசு கூறியதாக பழி சுமத்தி

மாநில முதலமைச்சருக்கு துளி அளவு கெட்டப் பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கின்றன இங்குள்ள சில நாளேடுகள்!

எனவே மத்திய அரசுக்கு தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கக்கூடாது என்பது எண்ணமல்ல.

அந்த மின்சாரத்தை வழங்கினால், உடனடியாக அதை எடுத்துச்செல்ல வழியில்லை என்பதைத்தான் மத்திய அரசு தெரிவிக்கின்றது.

அதைத் தெரிந்து கொண்டுதான் மத்திய அரசு அந்த வழித்தடத்தை ஏற்படுத்தித் தரவேண்டுமென்றும் உச்ச நீதி மன்றத்திலே தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

மத்திய அரசுக்கும் அந்தக் கோரிக்கையை ஏற்பதில் சிரமம் இருக்காது.

ஆனால் அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டாலும், அது இன்று தொடங்கி நாளையே முடிவடைந்து விடுகின்ற ஒன்றா என்றால் நிச்சயமாக இல்லை.

அதனால் பயன் உடனடியாக தமிழகத்திற்குக் கிடைக்குமா என்றால் கிடைக்காது.

அதற்கு என்ன வழி?

மத்திய அரசுடன் பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சினை இது.

எனவே எதிலும் பிறரைக்குற்றம் சாட்டி தான் தப்பித்துக்கொள்ளும் போக்கிலிருந்து விடுபட்டு தமிழக முதலமைச்சர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்.

உடனடியாக முதல் அமைச்சரோ, மின் துறை அமைச்சரோ டெல்லி சென்று உரியவர்களோடு அமர்ந்து பேசி, தமிழகத்தின் மின் தேவையைத்தீர்க்க உடனடியாக என்ன செய்யலாம் என்று கலந்தா லோசித்து முடிவு காண வேண்டும்.

பள்ளிகளிலே சில சிறு பிள்ளைகள் எதற்கெடுத்தாலும் ஆசிரியரிடம் புகார் செய்வதைப்போல,

“நான் உச்சநீதி மன்றம் போகிறேன், வழக்கு தொடுக்கிறேன்,” என்பது பிரச்சினை யைத் தீர்க்க நிச்சயமாக உதவிடாது '' என்று தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

SOURCE: இந்நேரம் at www.inneram.com