Followers

Monday, December 03, 2012

ராகுல் ஜோஸி கொலை: காரணம் பஜ்ரங்தள், பிஜேபி!!


ராகுல் ஜோஸி கொலை: காரணம் பஜ்ரங்தள், பிஜேபி!!


போபால்: ராகுல் ஜோஸி முன்னால் பஜ்ரங் தள் தீவிர உறுப்பினர். பஜ்ரங் தளத்தினரின் தீவிரவாத செயல்களில் வெறுப்புற்று அதிலிருந்து விலகுகிறார் ராகுல் ஜோஸி. என்எஸ்யுஐ என்ற மாணவர் அமைப்பில் சேர்ந்து தனது பணியை தொடர்கிறார். பொறுக்குமா இந்துத்வாவுக்கு. இவரது பழைய நண்பர்கள் திரும்பவும் இந்துத்வாவில் ஐக்கியமாக வற்புறுத்தியுள்ளனர். ஆனால் ராகுல் மசியவில்லை.

கோபம் கொண்ட பஜ்ரங்தளத்தினர் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அதோடு விடாது கெரசினை அவர் உடலில் ஊற்றி தீ வைத்துள்ளனர். உடல் முழுக்க வெந்த நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார் ராகுல். நான்கு நாட்கள் மருத்துவர்கள் கடுமையாக போராடியும் ராகுலை காப்பாற்ற முடியவில்லை.



செப்டம்பர் 4 ந்தேதி ராகுலின் உயிர் மருத்துவ மனையில் பிரிகிறது. இறப்பதற்கு முன் பிஜேபியின் மாணவர் அமைப்பான ஏவிபிபியும் பஜ்ரங் தளத்தினரும் சேர்ந்து தன்னை அடித்து தன்மேல் கெரசின் ஊற்றியதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.. இவரது மரண வாக்கு மூலத்தின் படி சம்பந்தப்பட்ட பஜ்ரங் தளத்தினரையும் பிஜேபி மாணவர் அமைப்பிலும் நான்கு பேரை காவல் துறை கைது செய்துள்ளது. ராகுல் வீட்டுக்கு ஒரே பிள்ளை. தங்களது ஒரே பிள்ளையையும் இந்துத்வாவின் வெறிக்கு பலி கொடுத்து சோகத்தில் உள்ளனர் பெற்றோர்.

என்எஸ்யுஐ யின் தலைவர் ரோஹித் சௌத்ரி பத்திரிக்கையாளர்களிடம் சொல்லும் போது 'ஆர்எஸ்எஸின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதும் அதன் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்தி பரிஷத்தின் செயல்கள் எந்த விதத்தில் இருக்கும் என்பதற்கு இந்த கொடூர கொலை சிறந்த உதாரணம். நாங்கள் கவர்னரை சந்தித்து இந்துத்வ அமைப்புகளை தடை செய்யச் சொல்லி மனு கொடுக்கப் போகிறோம்' என்றார்.

பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில்தான் இந்த நிலை. சிறிது ஆள்வதற்கு வாய்ப்பளித்தாலே இந்த ஆட்டம் போடும் இந்துத்வா நாளை முழு இந்தியாவையும் இவர்கள் கையில் கொடுத்தால் இன்னும் என்னவெல்லாம் ஆட்டம் போடுவார்களோ! ஒரு அமைப்பிலிருந்து விலகி வேறொரு அமைப்பில் சேர்வது கெரசின் ஊற்றி கொளுத்தும் அளவுக்கு மாபாதக செயலா என்ன? இந்துத்வாவின் கோர முகம் நமது நாட்டை இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ!

இவ்வளவு பப்ளிக்காக நடந்த இந்துத்வாவின் கொலையை பற்றி தினமலரோ தினமணியோ எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

http://articles.timesofindia.indiatimes.com/2012-09-05/bhopal/33615027_1_nsui-student-betul-district-bajrang-dal-activists

http://www.dayafterindia.com/detail.php?headline=content&catid=3826



14 comments:

Adirai Iqbal said...

இவ்வளவு பப்ளிக்காக நடந்த இந்துத்வாவின் கொலையை பற்றி தினமலரோ தினமணியோ எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.//

பாக்கிஸ்தானில் நடந்த மலாலா யூசுப் பற்றி , அமெரிக்காவில் முடி வெட்ட மறுத்தவரைப்பற்றிஎல்லாம் பக்கம் பக்கமாக எழுதுவார்கள் . இந்தியாவிலே ஒரு முஸ்லிம் குண்டு வெடிக்கும் இடத்தில் இறந்துகிடந்தாலே அவன்தான் தீவிரவாதி என்று கட்டுரைகளாக எழுதி தள்ளுவார்கள் .

ஆனால் இந்துத்துவாவின் பெயரால் , ஜாதியின் பெயரால் நடக்கும் பயங்கரங்களை அது எத்தனை நிதர்சனமான உண்மையாக இருந்தாலும் சீண்டவே மாட்டார்கள் .

please visit : www.islamiyaarangam.blogspot.in

suvanappiriyan said...

புனை பெயரில்!

//‘நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்’ –> இது ஒரு ஜோக்… அரேபிய முஸ்லீம்கள் மற்ற மக்களை மிக மிக கீழாக நடத்துபவர்கள்.//

http://suvanappiriyan.blogspot.com/2012/12/blog-post.html

கழிவறை முதற்கொண்டு சுத்தம் பண்ணும் ஒரு பங்களாதேஷத்தவருக்கு பின்னால் அரபுகள் நிற்பதை இந்த லிங்கில் சென்று பாருங்கள். நம்மூரில் தோட்டி என்று அவப் பெயர் கொடுத்து சமூகத்திலிருந்து ஒதுக்குகிறோம். ஆனால் அரபு நாட்டிலோ இவரை தொழுகைக்கு தலைவராக நிறுத்தி மற்ற அரபுகள் பின்னால் நிற்பதை பாருங்கள். இந்த நிலை தமிழகத்தில் அதுவும் இந்து மதத்தில் சாத்தியமா? முதலில் கோவிலிலே சாமி கும்பிட அனுமதிப்பீர்களா? ஒரு தோட்டியை புரோகிதராக்கி அழகு பார்க்க நீங்களோ மலர் மன்னனோ தயாராவீர்களா?

suvanappiriyan said...

சகோ அதிரை இக்பால்!

//ஆனால் இந்துத்துவாவின் பெயரால் , ஜாதியின் பெயரால் நடக்கும் பயங்கரங்களை அது எத்தனை நிதர்சனமான உண்மையாக இருந்தாலும் சீண்டவே மாட்டார்கள் .//

உண்மைதான் சகோ! ஊடக பலம் இல்லாதது நம்மிடம் உள்ள பெரும் குறை. செல்வந்தர்கள் முயற்சித்து தின பத்திரிக்கைக்கு ஆவண செய்ய வேண்டும்.

இஸ்லாமிய அரங்க தளத்தையும் பார்வையிட்டேன். எனது பதிவுகளையும் இணைப்பதற்கு நன்றி. சிறந்த முயற்சி.

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

எண்ணக் கொடுமை காவி பயங்கரவாதிகள் சேட்டை நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டே வருகிறது.கண்டிப்பாக இந்தக் காவி பயங்கரவாதத்தை இந்தியாவில் தடை செய்யப் பட்ட அமைப்பாக இந்திய அரசு அறிவித்து அதில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த அணைத்து காவி பயங்கரவாதிகளையும் இந்திய அரசு கைது செய்ய வேண்டும்.இந்திய அரசு செய்யுமா??

suvanappiriyan said...

திரு க்ருஷ்ணகுமார்!

//அன்பார்ந்த ஹாஜி சுவனப்ரியன்,

ஹிந்துஸ்தானத்தில் பிறந்து தழைக்கும் அனைத்து சமயங்களிலும் தன் சமயத்தைப் பின்பற்றாதவர் மீளா நரகம் புகுவர் போன்ற கோட்பாடுகளைப் பார்க்க இயலாது.//

சில ஆண்டுகளுக்கு முன் இந்து மதத்தையும் குர்ஆனின் வசனங்களையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதினேன். தவறான நடத்தை உடையவர்களுக்கு நரகம் சித்தப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்து மத வேதங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. அதையே உங்களுக்கு பதிலாக தருகிறேன்.

1)'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்

ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்கக் கூடியவர்களே நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்ப கொண்டு வரப் படுவீர்கள்.
21 : 35 - குர்ஆன்

2)ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்

பய பக்தி உடையவர்களுக்காக சொர்க்கம் சித்தப் படுத்தப் பட்டுள்ளது.
3 : 133 -குர்ஆன்
மறுமையில் இவர்களை நொக்கி நீங்கள் உங்கள் மனைவி மார்களுடன் மகிழ்ச்சியுடன் சுவனத்துக்குள் நுழைந்து விடுங்கள் என்று கூறப்படும்.
43 : 70 -குர்ஆன்

3) சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்

இறைவனை அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் தரப்படும். அதில் மாற்றமடையாத தண்ணீரைக்கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் பொகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும்இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடத்திலிருந்து மன்னிப்பும் உண்டு.
47 : 15 - குர்ஆன்
இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற் செய்தி.கீழ்பகுதியில்ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்.
57 : 12 - குர்ஆன்

4). யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
4 : 5 : 5 - ரிக் வேதம்

கெட்டவர்கள் நரகத்தில் வீழ்த்தப் படுவார்கள்
11 : 106 - குர்ஆன்
நரகம் மிகக் கெட்ட தங்கும் இடமாகும்.
67 : 6 - குர்ஆன்

5). நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.
- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மத்!

//எண்ணக் கொடுமை காவி பயங்கரவாதிகள் சேட்டை நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டே வருகிறது.கண்டிப்பாக இந்தக் காவி பயங்கரவாதத்தை இந்தியாவில் தடை செய்யப் பட்ட அமைப்பாக இந்திய அரசு அறிவித்து அதில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த அணைத்து காவி பயங்கரவாதிகளையும் இந்திய அரசு கைது செய்ய வேண்டும்.இந்திய அரசு செய்யுமா??//

மத்திய அரசு இதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

திருநெல்வேலி: நெல்லையில் 12-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் இலத்தூர், நயினார் நகரைச் சேர்ந்த குமார் மகன் ஜெயசுகி (16). இவர் தென்காசியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியில் கம்ப்யூட்டரில் பயன்படுத்தபடும் யு.பி.எஸ்.யை உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை பள்ளி தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயசுகி, விஷம் குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக தலைமை ஆசிரியர் அந்தோணி பால்ராஜை தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

----------------------------

நெல்லை: காதல் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அடுத்த மாவடியைச்சேர்ந்த முத்துராஜ் (25), இவரது நண்பர் சதீஷ்(25). இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் சதீஷ் அரிவாளால் முத்துராஜை சரமாரியாக வெட்டினார். இதில் முத்துராஜ் இறந்தார். திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.

டிசம்பர் 04,2012
Dinamalar

UNMAIKAL said...

அப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள் : 40 நிமிட சந்திப்பில் பிரதமரிடம் சரமாரி கேள்வி!

Tuesday, 04 December 2012 03:07

DEC4, இந்தியாவில், "இந்தியன் முஜாஹிதீன்" அலுவலகம் எங்கே இருக்கிறது?

அதன் நிர்வாகிகள் யார் யார்? என்று சொல்ல முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகளால் பிரதமரை துளைத்தெடுத்தனர், எம்.பி.க்கள்.

அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் -

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும் -

பல ஆண்டுகள் சிறையில் கழித்தபின் நிரபராதிகள் என விடுவிக்கப்படுபவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கிடவும் -

பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட விஷயங்களுடன் 16 எம்பிக்களின் குழு நேற்று பிரதமரை சந்தித்தது.

ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் சென்ற குழு 2 பக்கங்களை மட்டுமே கொண்ட மனுவை கொடுத்துவிட்டு, தீவிர விவாதத்தில் ஈடுபட்டனர்.

ராம்விலாஸ் பாஸ்வான் :

2 வருடங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், அப்பாவிகள் விடுவிக்கப்பட்டு, வழக்கில் சிக்கவைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என அளித்த உத்தரவாதம் என்ன ஆனது?

ஒரு நேரத்தை "கெடு"வாக நிர்ணயித்து அதற்குள் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றார்.

பிரதமர் மன்மோகன்சிங் :

இம்முறை, இந்த விஷயத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பாமல், நானே - நேரடியாக கவனிக்கிறேன்.

மேலும், எதிர்காலத்தில் அப்பாவிகள் கைது செய்யப்படாமல் தடுக்கவும் - கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு - நிரபராதிகளின் மறுவாழ்வு - தவறான அதிகாரிகள் மீது நடவடிக்கை போன்றவைகளுக்கு வலுவான "மெக்கானிசம்" தயாரிக்கப்படும் என்றார்,பிரதமர்.

ராம்கோபால் யாதவ் :

உத்தரபிரதேச அரசு, அப்பாவிகளை விடுதலை செய்ய முயன்றால், இன்று இவர்களை விடுதலை செய்யும் நீங்கள், நாளை இவர்களுக்கு "பத்மபூஷன்" விருது கொடுப்பீர்கள், என "நீதிபதிகள் கமென்ட் அடித்து" அப்பாவிகளை விடுவிக்க மறுத்த செயலை சுட்டிக்காட்டினார்.

முஹம்மத் அதீப் :

முஸ்லிம்களை தீவிரவாத இயக்கங்களின் பெயர்களோடு தொடர்பு படுத்துவது, முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச சதி, இந்த சதிவலையில் இந்தியா விழுந்து விடக்கூடாது, என்றார்.

மணிசங்கர் அய்யர் :

அப்பாவிகளை பொய் வழக்குகளில் சிக்கவைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்.

பா.ஜ.க.வைத்தவிர, அனைத்துக்கட்சிகளின் எம்பிக்களும் இணைந்து சென்று முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்ததது, குறிப்பிடத்தக்கது.

SOURCE:http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/653--40-

====================

அப்பாவி முஸ்லிம்கள் கைது விவகாரம் :

மாநிலங்களவை முடங்கியது!


Tuesday, 04 December 2012 15:27

DEC4, அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து,

பல உறுப்பினர்களின் குரல்களும் ஓங்கி ஒலித்ததால் "மாநிலங்களவை" நடத்த முடியாமல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மாநிலங்களவை கூடியதும், முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து "சமாஜ்வாடி கட்சி" குரல் கொடுத்தது.

இதனால் சபையை நடத்தமுடியாமல் ராஜ்யசபையை ஒத்தி வைத்தார், ராஜ்யசபா தலைவரும் குடியரசு துணைத்தலைவருமான ஹமீத் அன்சாரி.

பிறகு, மீண்டும் சபை கூடியபோதும் சமாஜ்வாடி கட்சியினர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள்,

அப்பாவிகளின் கைது குறித்தும் - அவர்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தவண்ணம் இருந்ததால்,

சபையை நாள் முழுமைக்கும் ஒத்திவைத்தார் அன்சாரி.

முன்னதாக, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை இன்று காலை சந்தித்த சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் குறிப்பிடும்போது,

முஸ்லிம்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.

SOURCE:http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/655-2012-12-04-15-27-39

UNMAIKAL said...

மோடிக்கு அமெரிக்க விசா: அவர் இந்திய பிரதமர் ஆகலாம் என்பதாலும் நிராகரிக்கவும்!

Viruvirupu, Tuesday 04 December 2012, 06:54 GMT


“குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா வழங்காமல், நிராகரிக்கப்பட வேண்டும்” என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த 29-ம் தேதி எழுதப்பட்ட இந்தக் கடிதம், நேற்று மீடியாக்களுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது.

ஹிலாரி கிளிண்டனுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில்,

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற வன்முறைக்கும்,

மனித உரிமை மீறலுக்கும் மோடியின் அரசே காரணம்.

அதற்காக முறையான நீதி விசாரணை இன்னமும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், முதல்வர் மோடி அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மோடி இந்தியாவில் பிரதமர் ஆகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், வெளிநாட்டு தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்பதால் அவருக்கு விசா அளிக்க கூடாது எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

SOURCE:http://viruvirupu.com/2012/12/04/39372/

Unknown said...

சலாம் சகோ.அதிரை இக்பால்

//please visit : www.islamiyaarangam.blogspot.in //

நல்லதொரு திரட்டியை தந்ததற்கு நன்றிகள்...ஜஸாக்கல்லாஹ் !!!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//மேலும், மோடி இந்தியாவில் பிரதமர் ஆகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், வெளிநாட்டு தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்பதால் அவருக்கு விசா அளிக்க கூடாது எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ நாகூர் மீரான்!

//நல்லதொரு திரட்டியை தந்ததற்கு நன்றிகள்...ஜஸாக்கல்லாஹ் !!!//

http://ummathvoice.blogspot.in/

இது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தளம். இங்கும் சென்று பயனடையுங்கள்.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

//http://ummathvoice.blogspot.in/

இது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தளம். இங்கும் சென்று பயனடையுங்கள். //

அடடா...!!! எத்தனை எத்தனை திரட்டிகள்...! பார்ப்பதற்கே நேரம் போதாது ....பகிர்ந்தமைக்கு நன்றிகள்..ஜஸாக்கல்லாஹ் !

Anonymous said...

மதம் வேண்டுமானால்.... இஸ்லாத்தை தழுவுங்கள்... பெரியார்..!!

எனக்கு இந்தச் சர்க்காரைப் பற்றிக் கவலை இல்லை. வேறு எந்த சர்க்கார் வந்தாலும் கவலையில்லை. காந்தியார் சொல்வது போல் ராமராஜ்யம் வந்து ஒரு ஜதை செருப்பு (செருப்பின் பேரால்) 14 வருஷம் மாத்
திரமல்ல, 50 வருஷம் ஆண்டாலும் கவலையில்லை. ஆனால், உங்களைப் போல் இழிவும் கொடுமையும் படுத்தப்பட்ட மக்கள் இந்த பித்தலாட்ட அரசியலில் தலையிட்டு நசுங்கிப் போகக் கூடாது என்றுதான் மறுபடியும் சொல்லுகிறேன்.

உங்கள் சமூக வாழ்வில் சமத்துவம் வேண்டுமானால் நீங்கள் இந்தக் கணமே இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் பறையர், சண்டாளர் ஆகித் தீண்டப்படாதவர்கள் என்று ஆனதற்கு இந்து மதம் தான் காரணம். இந்து மதம் என்றால் பறையன், சூத்திரன், பிராமணன் இருக்க வேண்டும் என்பது தான் கருத்து இந்த பிரிவுகளை நிலைநிறுத்துவதுதான் இந்த மதத்தின் கொள்கையும் வேலைத் திட்டமும் ஆகும்.

உங்களைப் பொருத்த வரையில் அம்மதத்தில் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் இதை உடனே விட்டு விடுங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு மதம் வேண்டும் என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு இஸ்லாம் மதத்தைச் சிபாரிசு செய்கிறேன். பெளத்தர்களையும் பிற பெளத்தர்கள் என்றும் பெளத்த பறையர்கள் என்றும் மற்றவர்கள் சொல்லுகிறார்கள். பல பெளத்தர்கள் ஆதிதிராவிடர்களாகத் தான் இன்றும் கருதப்படுகிறார்க்ள்.

கிறிஸ்தவர்களிலும் பறை கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். பாதிரிகளே அப்படி கருதுகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு ஆள் எண்ணிக்கை தான் கவலையே தான் தவிர, சுயமரியாதையில் கவலை கிடையாது.

கிறிஸ்தவத்தில் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கும் சுயமரியாதை வேண்டுமானால் அதை விட்டு இஸ்லாமியர்களாகுங்கள் என்று தான் சொல்லி வருகிறேன். மற்றபடி "மோட்சத்தில்", "பாவமன்னிப்பிலோ" எந்த மதம் எப்படி இருந்தாலும் மனிதத் தன்மையில் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மதந்தான் பறைத் தன்மையை ஒழிக்கிறது. பறை துலுக்கன், பறை முகம்மதியர் கிடையாது. பார்ப்பன முஸ்லிம் கிடையாது. மனித முஸ்லிம் தான் உண்டு.

நீங்கள் அதில் விழுந்தாலொழிய 100 வருஷமானாலும் உங்கள் பறை தன்மை போகாது.

தோழர்களே! !இவை என் அபிப்ராயம். இவற்றைக் கேட்ட நீங்கள் உங்கள் புத்தி கொண்டு சிந்தித்து உங்களுக்கு சரியென்றபடி நடங்கள்.

(ஆம்பூரில் 4.7.1937 அன்று நடைப்பெற்ற ஆதிதிராவிடர்கள் மகாநாட்டில் தந்தை பெரியார் சொற்பொழிவு. - 'குடியரசு' இதழ் 16.7.1937)