Followers

Sunday, December 02, 2012

சாதி பிரச்னை: தலித் உயிரோடு எரிப்பு!

சாதி பிரச்னை: தலித் உயிரோடு எரிப்பு!

ராஜ்கோட்: ஜூனாகத் தாலுகாவில் உள்ள உனா என்ற நகரில் ஒரு தலித் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளார். இதற்கு காரணமாக சொல்லப்படுவது சாதி விட்டு சாதி காதல் செய்ததுதானாம். இந்த இளைஞர் காதலித்த பெண் வோறொரு சாதியை சேர்ந்தவர். அந்த பெண் கடந்த மூன்று நாட்களாக காணவில்லையாம். பெண் தரப்பினர் கோபமாக வந்து பையனின் தகப்பனிடம் அவரது மகனை ஒப்படைக்கும்படி கூறியிருக்கின்றனர். அவரும் மகனை அந்த கும்பலிடம் பயந்து போய் தந்திருக்கிறார். வீட்டின் உள்ளே அந்த இளைஞனை பூட்டி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியிருக்கிறது அந்த வெறி கொண்ட கூட்டம்.



கிட்டத் தட்ட நம் ஊர் தர்மபுரி சம்பவத்தை ஒத்திருக்கிறது இந்த நிகழ்வும். சாதி பற்று சாதி வெறி இந்த அளவு இருக்கும் போது காதலை ஏன் ஆதரிக்கிறீர்கள்? அல்லது பெண்களை அதிகம் வெளியில் விடாமல் பாதுகாப்போடு வைத்திருங்கள். தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் இவர்களை கொலை செய்து எதை சாதிக்கப் போகிறீர்கள்? இன்று அந்த இளம் உயிர்கள் எந்த இன்பத்தையும் அனுபவிக்காமல் சென்று விட்டதே! அந்த பெண்ணும் சாதி வெறியர்களால் கொல்லப்ட்டிருக்கலாம். அல்லது தலித் மக்களால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்.

இந்த கொலையோடு பிஜேபி எம்எல்ஏவும் சம்பந்தப்பட்டுள்ளதாக பையனின் தகப்பனார் குற்றம் சாட்டுகிறார். முன்பு நடந்த நிலத் தகராறில் கோபம் கொண்டு காதல் விவகாரத்தை வைத்து வஞசம் தீர்த்து கொண்டார் என்கிறது தலித்களின் தரப்பு.

பிஜேபியினர் 'ராம ராஜ்ஜியம்' என்ற கோஷத்தை அவ்வப்போது வைக்கின்றனர். ராம ராஜ்ஜியம் என்றால் அது இப்படித்தான் இருக்குமோ!

http://timesofindia.indiatimes.com/city/rajkot/Dalit-youth-burnt-alive-in-Junagadh/articleshow/16390556.cms

http://www.indianexpress.com/news/dalit-youth-burnt-alive-in-una-family-blames-bjp-mla/1002923

http://www.samachar.com/Dalit-youth-burnt-alive-in-Una-family-blames-BJP-MLA-mjpoNeafdeg.html

------------------------------------------------------


சாதி விட்டு சாதி திருமணம் செய்ததால் கவுரவ கொலை செய்யப்பட்டு சடலமாக கிடக்கும் காதல் ஜோடிகள். அதிலும் இவர்கள் ஒரே சாதியில் கோத்திரம் மாறி காதலித்து விட்டார்களாம். என்று ஒழியும் இந்த சாதி வெறி?

------------------------------------------------------


துப்புறவு தொழிலாளியின் பின்னால் அரபுகளும் மற்ற நாட்டுக்காரர்களும் அவரை தலைவராக ஏற்று இறைவனை வணங்குவதை பார்க்கிறோம். இந்த காட்சியை அரபு நாடுகளில் சர்வ சாதாரணமாக பார்க்கலாம். நம் ஊரில் தோட்டி என்று அவர்களை ஒரு சாதியாக ஒதுக்கி விடுகிறோம். ஒரே இந்து மதத்தில் சாதி சாதி விட்டு திருமணம் பண்ணினால் கவுரவ கொலை பண்ணி விடுகிறோம். அதே அரபு நாடுகளில் அந்த துப்புறவு தொழிலாளியை இறைவனை வணங்க தலைவராக நிறுத்தி அவருக்கு கொடுக்கும் கண்ணியத்தையும் பார்க்கிறோம்.

திருடாமல் பொய் சொல்லாமல் உழைத்து சம்பாதிக்கும் எந்த உழைப்பும் இழிவு அல்ல என்பதை நிரூபிக்கிறது இது போன்ற நிகழ்வுகள்.

24 comments:

mohamed said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ்,
சகோ சுவனப்பிரியன்

தன இனத்தை சார்ந்தவனையே சாதி என்ற பெயரால் தள்ளி வைக்கும் மக்களுக்கு நீங்கள் இறுதியாக பதிந்திருக்கும் அந்த புகைப்படம் ஒரு சரியான பாடம்.


ஒரே கம்பனியில் பணிபுரியும் தன் கீழ் நிலை தொழிலாளியை பின்பற்றி இறைவனை வணங்கும் உயர்நிலைப் பதவியில் இருக்கும் பணியாளர்கள் படம் அருமை.அதற்க்கு காரணம் இறைவனின் முன்னாள் அனைவரும் சமம் என்று போதிக்கும் இறைக் கோட்பபாடு.கடவுள் நம்பிக்கை மனிதனின் முன்னேற்றத்திற்கு பயன்பட வேண்டுமே ஒழிய ஒரு குறிப்பிட்ட மனித சமுதாயத்தை இழிவுப் படுத்த பயன் படுமாயின் அது நிச்சயமாக இறைவனுடைய வழிகாட்டுதலாக இருக்காது.

mohamed said...

அப்புறம் உங்கள் பதிவுகளை ஏன் இப்பொழுது தமிழ் மனதில் இணைப்பதில்லை.

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

ஆக்கப்பூர்வமான பதிவு ...!!! மனிதர்களிடம் எதில்தான் வேறுபாடு இல்லை..

* இந்தியா பாகிஸ்தான் எனும்போது நாட்டு வெறி ,

* சரி இந்தியாவுக்குள்ளையாவது ஒற்றுமையாக இருப்பார்களா..?? அதிலும் மதவெறி !!!

* மத ஒற்றுமையும் கிடையாது ..அதிலும் ஜாதி வெறி.!!!

* ஜாதிகளிக்குள்ளும் ஒற்றுமை இல்லை..அங்கும் கோத்திரம் வெறி ...!!!

சிந்திக்க மாட்டார்களா..???

நன்றி !!!

semmalai akash said...

இந்த கொடுமைகளுக்காகவே உலகம் இந்த வருடமே அழிந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ முஹம்மத்!

//தன இனத்தை சார்ந்தவனையே சாதி என்ற பெயரால் தள்ளி வைக்கும் மக்களுக்கு நீங்கள் இறுதியாக பதிந்திருக்கும் அந்த புகைப்படம் ஒரு சரியான பாடம்.//

இந்த நிலை இந்து மதத்திலும் ஏற்பட வேண்டும். ஆனால் அது ஏற்படுமா என்பது கேள்விக் குறியே! ஏனெனில் நாளாக நாளாக தலித்களின் மீதான வன் கொடுமைகள் அதிகரிக்கிறதேயொழிய குறைந்த பாடில்லை.

//அப்புறம் உங்கள் பதிவுகளை ஏன் இப்பொழுது தமிழ் மனதில் இணைப்பதில்லை. //

சினிமா நடிகைகளின் அங்கங்களை விவரிக்கும் பதிவுகள், பெண்களை ஈவ் டீசிங் செய்த பதிவுகள், சினிமா செய்திகள், என்றெல்லாம் நான் எழுதுவதில்லையாம். எனது பதிவுகள் அதிகமாக மதம் சம்பந்தமாக இருக்கிறதாம். தமிழ் ஓவியா, இக்பால் செல்வன், சார்வாகன், தருமி, கோவி கண்ணன் எல்லாம் எதைப் பற்றி எழுதுகிறார்கள்? அவர்களின் அனைத்து பதிவுகளும் பெரும்பாலும் மதத்தை முன்னிலைப் படுத்தியே இருக்கும். எனவே தற்போது எனது பதிவுகளை திரட்டுவதை நிறுத்தி வைத்துள்ளனர். ஓட்டுக்காகவோ, மகுடத்துக்காகவோ எழுதுபவனல்ல நான் என்பதை அவர்களுக்கு விளக்கி கடிதம் எழுதி விட்டு தற்போது எனது பதிவுகளை நான் இணைக்க முயற்சிப்பதில்லை. தினமும் வழக்கமான பார்வையாளர்களை விட 100 அல்லது 150 குறைகிறது. அதைப் பற்றி கவலையில்லை. குறைவான பேர் படித்தாலும் படிக்கும் ஒரு சிலரை சிந்திக்க வைத்தாலே அதுவே போதுமானது.

உண்மைகள் சிலருக்கு சில நேரம் கசக்கவே செய்யும்.

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!


//* இந்தியா பாகிஸ்தான் எனும்போது நாட்டு வெறி ,

* சரி இந்தியாவுக்குள்ளையாவது ஒற்றுமையாக இருப்பார்களா..?? அதிலும் மதவெறி !!!

* மத ஒற்றுமையும் கிடையாது ..அதிலும் ஜாதி வெறி.!!!

* ஜாதிகளிக்குள்ளும் ஒற்றுமை இல்லை..அங்கும் கோத்திரம் வெறி ...!!!

சிந்திக்க மாட்டார்களா..???//

சிந்திக்க வேண்டும். அதற்காககத்தான் இந்தப் பதிவு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ செம்மலை ஆகாஷ்!

//இந்த கொடுமைகளுக்காகவே உலகம் இந்த வருடமே அழிந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.//

உங்களின் வருத்தம் புரிகிறது. அதற்காக உலகம் அழிய வேண்டாம். நாம் நமது பிரசாரத்தை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் நமது நாட்டில் மாற்றம் வந்தே தீரும்.

இது தொடர் கதையானால் தலித் மக்கள் அனைவரும் இஸ்லாத்தை நோக்கி வருவதை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாமல் போய் விடும்.

Unknown said...

//இது தொடர் கதையானால் தலித் மக்கள் அனைவரும் இஸ்லாத்தை நோக்கி வருவதை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாமல் போய் விடும்.//

இந்த பதிவோட அர்த்தம் இது தானா?

UNMAIKAL said...

காலேஜ் போனா காதலிக்கலாம்

"நீ ஸ்கூல் படிக்கப் போறியா?

காலேஜ் படிக்கப் போறியா?"

இது டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தையிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி கேட்ட கேள்வி.
ஆனால் அதற்கு அந்த குழந்தை "நான் காலேஜ்தான் போவேன்" என்று கூறியது.

அண்ணாச்சியும் விடாமல் " ஏன் காலேஜ் போகணும்?" என்று கேட்க, "காலேஜ் போனா லவ் பண்ணலாமே" என்று சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னது அந்த குழந்தை.

இதை சொல்லிக்கொடுத்தது பக்கத்து வீட்டு அங்கிள் என்றும் சொன்னது.

பிஞ்சு மனதில் நஞ்சு

யுகேஜியோ, ஒன்னாவதோ படிக்கும் அந்த குழந்தை உலகம் முழுவதும் பார்க்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று பெற்றோர்கள் முன்னிலையில் இதனை சொன்னதுதான் அதிர்ச்சியான விசயம்.

குழந்தை சொல்வதைக் கேட்டு பெற்றோர்கள் சிரிக்கும் ரியக்சனையும் போடுகின்றனர்.

இதில் யாரை குற்றம் சொல்ல முடியும்.

மழலை பருவத்தில் காதல் பற்றி பேசும் குழந்தைகளையா?

அல்லது பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்தவர்களையா?

அப்பங்காரனும்… மாமன்காரனும்….

இதை விட ஒரு படி மேலே போய் மற்றொரு குழந்தை பேசியது.

வீட்டில் அந்த குழந்தையின் அப்பாவும், தாய்மாமாவும் சிகரெட் பிடித்துக்கொண்டு மது அருந்தியிருக்கின்றனர்.

பின்னர் கட்டிபுரண்டு சண்டை போட்டிருக்கின்றனர்.

இது அந்த குழந்தையில் மனதில் பதிந்துவிட்டது.

அதை டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் பேசும் போது எங்க அப்பங்காரனும், அம்மாவோட அண்ணங்காரனும் சிகரெட் புடிச்சிட்டு.... டிரிங்க்ஸ் சாப்டுட்டு சண்டை போடுவாங்க என்று கூறியது வேதனையின் உச்சம்

குழந்தைகளை திட்டும் பெற்றவர்கள்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் அனைவரும் தங்களை பெற்றோர்கள் திட்டுவதாக தெரிவித்தனர்.

அதுவும் சொல்லி வைத்த மாதிரி வெளியில போ... சனியனே, என் கண் முன்னாடி நிற்காதே என்றும் அப்பா திட்டுவதாக கூறினர்.

பெற்றோர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

அறிவுப்பூர்வமான நிகழ்ச்சியாக மாறுமா?

வீட்டில் நடக்கும் பெர்சனல் விசயங்களை இப்படி உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருக்கிறது சுட்டிக் குட்டீஸ் நிகழ்ச்சி.

குழந்தைகளுக்கு என்று பல தனித்திறமைகள் உள்ளன.

அவற்றை வெளிப்படுத்தும் விதமான கேள்விகளை கேட்பதை விட்டுவிட்டு அப்பா, அம்மா சண்டை போட்டா யார் ஜெயிப்பாங்க?

காலேஜ் போனா காதலிக்கலாம் போன்ற தேவையற்ற கேள்விகளை ஏன் கேட்கிறார் இமான் அண்ணாச்சி என்றுதான் தெரியவில்லை.

ஊடகங்கள்தான் காரணம்

மழலைகள் கூட காதலைப்பற்றி பேசுவதற்கு காரணம் ஊடகங்கள்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

1980, 1990களில் சினிமாக்களின் மூலம் வெட்டவெளிச்சமாக்கப்பட்ட காதல் இன்றைக்கு தொலைக்காட்சிகளின் மூலம் நடுக்கூடத்தில் அனைவரின் பார்வைக்கும் வருகிறது.

இதனால்தான் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது நர்சரி பள்ளிகளில் படிக்கும் மழலைகள் கூட இன்றைக்கு காதலைப் பற்றி பேசுகின்றனர்.

காதல் பாடல்களை வரி மாறாமல் மனப்பாடம் செய்து பாடுகின்றனர்.

இதற்குக் காரணம் ஊடகங்கள்தான் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.

SOURCE:http://tamil.oneindia.in/movies/television/2012/12/annachi-programme-creates-new-controversy-165653.html#slide23585

suvanappiriyan said...

திரு ஜெய்சங்கர்!

//இந்த பதிவோட அர்த்தம் இது தானா?//

யாராவது எங்காவது இஸ்லாத்துக்கு வந்து விட்டால் கூப்பாடு போடாமல் இது போன்ற சாதி பூசல்களை தீர்க்க முயற்சியுங்கள். இந்த பதிவு சாதி பகைமையின் கோர முகத்தைக் காட்டுகிறது. இது தொடர்ந்தால் என்ன விளைவு என்பதையும் இந்த பதிவு சொல்கிறது.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//அண்ணாச்சியும் விடாமல் " ஏன் காலேஜ் போகணும்?" என்று கேட்க, "காலேஜ் போனா லவ் பண்ணலாமே" என்று சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னது அந்த குழந்தை.//

பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றி!

UNMAIKAL said...

PART 1. தேவனின் திருச்சபை! மாபியாக்களின் கருப்பை!!
by வினவு, December 3, 2012


நான் சர்ச்சுக்குச் செல்லும் இளம் கத்தோலிக்கப் பெண்களுக்குச் சொல்லிக் கொள்வது இது தான்,

உங்கள் பாவ மன்னிப்பை எந்தப் பாதிரியிடமும் அறிக்கையிடாதிருங்கள்

“மூடப்பட்ட அந்தக் கழிவறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரலும், அதனுடன் ஒரு பெண்ணின் விசும்பலும் கேட்டது.

நாங்கள் அந்த அறையின் கதவை உடைத்துத் திறந்த போது கண்ட காட்சி இதயத்தை நொறுக்குவதாய் இருந்தது.

ஒரு கன்னியாஸ்திரி தனக்கு அப்போது தான் பிறந்திருந்த பச்சைக் குழந்தையை கழிவறையின் பீங்கான் கோப்பைக்குள்ளே திணித்துக் கொண்டிருந்தாள்.

குழந்தையின் கால்களிரண்டும் கோப்பையின் வெளியே துடித்துக் கொண்டிருந்தன.
அந்த அறையின் தரையெங்கும் இரத்தத் துளிகள் …”
கேரளத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரியான சகோதரி மேரி சாண்டியின் சுயசரிதையான “நன்ம நிறஞ்சவளே ஸ்வஸ்தி” எனும் நூலில் இருந்து…

67 வயதான மேரி சாண்டி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே தனது கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து விட்டவர்.

சுமார் நாற்பதாண்டுகள் கத்தோலிக்கத் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்துள்ளார்.

அவரது 13வது வயதிலிருந்து துவங்கிய நெடும் பயணம் அது.
நாற்பதாண்டு கால ‘இறைப்பணியில்’ தான் சந்தித்த அருவெறுப்பான தருணங்களை இப்போது தனது சுயசரிதையின் ஊடாக முன்வைத்துள்ளார்.

மேரியின் நூல் கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் மலிந்து விட்ட பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது.

பாதிரிமார்களால் வல்லுறவுக்குக் கட்டாயப்படுத்தப்படும் அப்பாவிக் கன்னியாஸ்திரிகளின் கதைகள் நம்மைத் திகைப்புக்குள்ளாக்குகின்றன என்றால்,

பாலியல் ரீதியிலான முறைகேடான உறவுகள், நிதி முறைகேடுகள் போன்றவற்றைப் பொது நியதியாக ஏற்றுக்கொண்ட பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பற்றிய விவரணைகள் சாமானிய வாசகர்களுக்கு நிச்சயம் ஆச்சர்யமூட்டும்.

கேரளத்துக்கு வெளியிலிருக்கும் பொது வாசகர்களுக்கு வேண்டுமானால் இந்தக் கதைகளை அதிசயமாய்த் தோன்றலாம் – ஆனால், கேரளம் இவற்றையெல்லாம் பலமுறை கேட்டுப் பழகிவிட்டது.

இதற்கு முன்பே சகோதரி ஜெஸ்மியின் “ஆமென் – ஒரு கன்னியாஸ்திரியின் வாழ்க்கை வரலாறு” என்கிற நூலும், பாதிரியார் ஷிபு கலம்பரம்பிலின் “ஒரு வைதிகண்டே ஹ்ருதயாத்மா” என்கிற நூலும் இதே போன்ற விஷயங்களைக் கையாண்டுள்ளன.

இதில் ஜெஸ்மியின் “ஆமென் – ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு” இன்றளவும் திருச்சபையால் செரிக்க முடியாத கடப்பாறையாய் உருத்திக் கொண்டிருக்கிறது.

அதிலிருந்து சில வரிகள் -
“நெருக்கியபடி என்னருகே உட்கார்ந்து கொண்ட அருட்தந்தை, மூச்சடைக்க வைப்பது போல என்னைப் பலமாகக் கட்டிப் பிடித்தார்.

அவரது பிடியிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள நான் முயற்சி செய்வதற்கிடையே என் மார்பகங்களைப் பற்றியபடி அவற்றைக் காட்டித் தரும்படிக் கேட்டார்.

என்னைப் பலவந்தமாகப் பிடித்து உட்கார வைத்து விட்டுக் கேட்டார்: ‘உன்னுடைய வாழ்க்கையில் இதுவரை நீ ஏதாவதொரு ஆண்மகனைப் பார்த்திருக்கிறாயா?’

இல்லையென்று தலையசைத்தேன். உடனே தன்னுடைய ஆடைகளைக் களைந்தார்” – பக்கம் 103.

ஜெஸ்மியின் நூல் வெளியான சமயத்தில் அது உண்டாக்கிய அதிர்வலைகள் கேரளத்தில் மட்டுமல்ல, நாடெங்குமுள்ள கத்தோலிக்கர்களிடையேயும் எதிரொலித்தன.

கத்தோலிக்கத் திருச்சபை மலக்குட்டையில் மூழ்கித் திளைக்கும் ஆபாசக் காட்சிகள் ஜெஸ்மியின் நூலெங்கும் விரவிக் கிடந்தன.

முகத்தில் வழிந்த மலத்தைத் துடைத்துக் கொண்ட திருச்சபை, ஜெஸ்மியை பைத்தியகாரி என்றும், சூனியக்காரி என்றும் சாத்தானால் வழி நடத்தப்படுகிறாரென்றும் கதைகளைப் புனைந்து பார்த்தது.

ஆயினும், இன்றளவும் அதில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளின் மேல் எந்த விசாரணையும் நடத்தவில்லை;

அப்படியொன்றைச் செய்ய வேண்டும் என்கிற முனைப்பு கூட இல்லாத திமிர்த்தனத்தையே திருச்சபை வெளிப்படுத்தியது.

ஜெஸ்மி மற்றும் மேரியின் நூல்களில் வருகின்ற மதகுருமார்கள் பலரும் எந்த தடுமாற்றமோ குற்றவுணர்வோ இன்றி பாலியல் முறைகேடுகளிலும்,

நிதி முறைகேடுகளிலும் ஈடுபடுவதும்,

அது கேள்விக்குள்ளாகும் போது அதிகார வர்க்கத் திமிருடன் கையாள்வதும் ‘நம்பிக்கை உள்ள’ கிருஸ்தவர்களிடையே கடும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளன.

CONTINUED ..

UNMAIKAL said...

PART 2. தேவனின் திருச்சபை! மாபியாக்களின் கருப்பை!!
by வினவு, December 3, 2012


திருச்சபை எனும் மாபெரும் இயந்திரத்தினுள் மக்களுக்குச் சேவை செய்வது, இயேசுவின் சுவிசேஷத்தை பிரசங்கிப்பது என்கிற ‘தூய’ நோக்கங்களுக்காக நுழையும் ஜெஸ்மி, மேரி, கலம்பரம்பில் போன்ற அப்பாவி ஆட்டுக்குட்டிகள் ஒரு கட்டத்தில் சகிக்க முடியாமல் வெளியேறியாக வேண்டும்

அல்லது அனைத்தையும் இயேசுவின் திருநாமத்தினாலே சகித்துக் கொண்டு இதயமற்ற அந்த இயந்திரத்தின் நட்டு போல்டுகளாய்ச் சுருங்கி விட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்-

வேறு வாய்ப்புகள் ஏதும் இவர்களுக்கில்லை.

திருச்சபை எனும் இந்த இயந்திரத்துக்கு அதிகளவில் உதிரிபாகங்களை சப்ளை செய்யும் பின்நிலமான கேரளத்திலிருந்து இது போன்ற நூல்கள் அதிகம் வெளியாவது புரிந்து கொள்ளத்தக்கதே.

கேரளத்திலிருந்து மட்டும் சுமார் 1,85,000 பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் உருவாகியுள்ளனர்.

இதில் சுமார் 1,35,000 பேர் கேரளத்துக்கு வெளியே ‘தேவ காரியத்தில்’ ஈடுபட்டு வருகிறார்கள்.

கத்தோலிக்க திருச்சபை ஊழியர்களில் மட்டும் சுமார் 15 சதவீதம் மலையாளிகள் என்கிறது அவுட்லுக் பத்திரிகை அளிக்கும் புள்ளிவிவரம்.

“பாவமன்னிப்பிற்காக பாதிரியிடம் போகாதீர்கள்” – சகோதரி மேரி சாண்டி

உலகளவில் நிறுவனமயப்பட்ட மதம் எனும் வகையில் கிருஸ்தவம் ஒரு பிரம்மாண்டமான இயந்திரமாய் இருக்கிறது.

கத்தோலிக்கர்கள் மெத்தடிஸ்டுகள், லுத்தரன்கள் மற்றும் பெந்தெகொஸ்தே சபையினர் என்று சகல கிருஸ்தவ நிறுவனங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் இவர்களின் வருடாந்திர பட்ஜெட் சுமார் ரூ. 7.5 லட்சம் கோடிகள்.

சுமார் 40 லட்சம் முழுநேர ஊழியர்களையும், 13,000 நூலகங்களையும், 22,000 பத்திரிகைகளையும், சுமார் 1800 தொலைக்காட்சி சேனல்களையும், 1500 பல்கலைக்கழகங்களையும், 930 ஆராய்ச்சி நிறுவனங்களையும் இவர்கள் நடத்துகிறார்கள்.

ஆண்டு தோறும் சுமார் 400 கோடி துண்டுப் பிரசுரங்களையும், நூல்களையும் வெளியிடுகிறார்கள்.

மக்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லாத வரம்பற்ற அதிகாரமும், ஆளும் வர்க்கங்களுடனான நெருங்கிய ஐக்கியமும் காரணமாக இவர்கள் தங்களை இயேசுவுக்கும் மேலாக நிறுவிக் கொண்டுள்னர்.

தம் வாழ்நாளை ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான கலகங்களோடும்,

தொழுநோயாளிகளோடும் கழித்து, யூதர்களிடையே சமூக சீர்திருத்தங்கள் கோரி, இறுதியாக சிலுவையில் மரித்துப் போன வெகுளித்தனமும், வெள்ளந்தித்தனமும் நிரம்பிய ஏசு எனும் வரலாற்று மனிதன் என்றோ ஒரு நாள் தனது பெயரால் இப்படியொரு மிருகத்தனமான நிறுவனம் எழுந்து நிற்கும் என்று கற்பனை செய்திருப்பானா?

ஐசுவரியவானை மறுத்து லாசருவுக்காகவும் – அதிகாரத்தை எதிர்த்து சாமானியர்களுக்காகவும் – வலுத்தவர்களைப் புறக்கணித்து எளியவர்களுக்காகவும் நின்ற ஒரு எளிய மனிதனான இயேசுவின் நாமத்தோடு பிற்காலத்தில் ‘கிறிஸ்து’ என்கிற வால் ஒட்டிக்கொண்டதைத் தொடர்ந்த ஈராயிரம் ஆண்டுகளின் வளர்ச்சி இது.

மூன்றாம் உலக நாடுகளில் கிருஸ்தவர்களின் சமூக வாழ்க்கை கிருஸ்தவ மத நிறுவனங்களோடு தவிர்க்கவியலாதபடி பின்னிப் பிணைந்துள்ளது.

அவர்களின் பிறப்பு, வாழ்வு, திருமணம், இறப்பு என்று சகலத்திலும் திருச்சபை நேரடியாகத் தலையிடுகிறது.

பதினான்காண்டுகளுக்கு முன்பே திருச்சபையிலிருந்து விலகும் மேரி சாண்டி, சொந்தமாய் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தை நடத்த முற்படுகிறார்.

திருச்சபை தொடர்ச்சியாக அவருக்கு இடைஞ்சல்களை உருவாக்குகிறது.

அவருக்கு கிருஸ்தவர்கள் எவரும் வீடு அளிக்க முடியாதபடி செய்கிறது.
ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை ஆதரவற்ற அந்தக் குழந்தைகளோடு இடம் விட்டு இடம் மாறவேண்டிய சூழலை உருவாக்குகிறது.

ஜெஸ்மியையும், ஷிபு கலம்பரம்பிலையும் அவர்களது குடும்பத்தாரே புறக்கணிக்கும்படி செய்துள்ளது.

திருச்சபையின் வழிகாட்டுதல்களை மீறும் எவருக்கும் புதைக்கச் சுடுகாடு கூட கிடைக்காது என்பதால், அந்தத் தடிக்கம்பின் அதிகாரத்திலிருந்து விசுவாசிகளை எப்பேர்ப்பட்ட தேவனாலும் காப்பாற்றமுடிவதில்லை.

CONTINUED ….

UNMAIKAL said...

PART 3. தேவனின் திருச்சபை! மாபியாக்களின் கருப்பை!!
by வினவு, December 3, 2012


கத்தோலிக்கத் திருச்சபை போன்ற கார்ப்பரேட் பாணியில் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக இல்லாமல்,

குடிசைத் தொழில் போன்று ஆங்காங்கே பரவியுள்ள பெந்தெகொஸ்தே சபைகளிலும்

இவாஞ்சலிக்கல் ஊழியங்களில் ஈடுபடும் கிருஸ்தவ நிறுவனங்களிலும் அதிகார பீடங்களில் இருப்பவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் இதே போலத்தான் கையாளப்படுகின்றன.

வின்சென்ட செல்வகுமார் தமிழ்நாட்டின் பெந்தெகொஸ்தே வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்ட ஊழியக்காரர்.

அவர் கிருஸ்தவ ஊழியத் தொழிலைத் துவங்கிய காலத்திலிருந்து அவருடன் உடனிருந்த சொந்தக்காரர்களே சமீபத்தில் அவரிடமிருந்து விலகி வந்ததோடு, அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.

அவரது சொந்த வளர்ப்பு மகனே முன்னின்று குற்றம் சாட்டியிருந்தார்.

தனது ஆதரவாளர்களிடையே கையும் மெய்யுமாகப் பிடிபட்ட நிலையிலும்,

தன் மீதான குற்றச்சாட்டுகளை எளிதில் புறம் தள்ளிய வின்சென்ட், ஏஞ்செல் தொலைக்காட்சியில் தோன்றி அதற்கு சப்பைக்கட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளார்.

இது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரத்யேகமான அணுகுமுறை இல்லை – உலகெங்கும் இதே போன்ற அணுகுமுறைகளைத் தான் திருச்சபைகள் பின்பற்றி வருகின்றன.

கிருஸ்தவ மதம் ஆளும் வர்க்க நிறுவனமாக மாறியது தொட்டு, நாளது வரையிலான நீண்ட வரலாற்றுக்கு இணையாக அந்த நிறுவனங்களுக்கு உள்ளே நடந்த முறைகேடுகளின் வரலாறும் உள்ளது.

கள்ளக் காதலில் இருந்து நிதிமுறைகேடுகள் வரை நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டே பரமண்டலத்திற்குள் நுழைந்த போப்பாண்டவர்களின் பட்டியல் மிக நீண்டது.

இந்தப் பட்டியலில் சமீபத்திய சேர்க்கை வாத்திகன் அரச வங்கியில் போப்பின் நேரடிப் பார்வையின் கீழ் நடந்த மாபெரும் நிதி மோசடி.

ஐரோப்பா மற்றும் உலகமெங்கும் இயங்கும் கிரிமினல் கும்பல்களுக்கும்,

நிழலுலக மாஃபியா கும்பல்களுக்கும் பணப்பரிவர்த்தனை மையமாக வாத்திகன் வங்கி திகழ்ந்துள்ளது.

தற்போது நிழல் உலகத் தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பண சுழற்சிக்கு எதிரான அமைப்பு (Financial action Task force on Money laundering) வாத்திகன் வங்கியைக் கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது.

மாஃபியாக்களின் வங்கி என்றே அறியப்படும் வாத்திகன் வங்கியின் பெயர் – “மத நடவடிக்கைகளுக்கான நிறுவனம்” (The institue for the works of the religion)
சுமார் 6 பில்லியன் நிதிக் கையிருப்பைக் கொண்டுள்ள இந்த வங்கி, 2010ஆம் ஆண்டு மட்டும் சுமார் 55 மில்லியன் யூரோக்களை போப்புக்கு இலாபமாக ஈட்டிக் கொடுத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் வாத்திகன் அரசாங்கத்தின் இரகசியமான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஜியான்லுகி நுஸ்ஸி என்பவர் “பதினாறாம் பெனடிக்டின் இரகசிய ஆவணங்கள்” எனும் தலைப்பில் விரிவான நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

தற்போது மேற்குலகில் போப்பின் திருட்டுத்தனங்களும் சூடான தலைப்புகளில் ஒன்றாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

விவகாரம் இந்தளவுக்கு முற்றி முடைநாற்றமெடுக்கத் துவங்கிய பின்னும் கூட, நிதி மோசடியின் மூலகர்த்தாவான போப்பிடமோ அவருக்கு அடுத்த நிலையிலிருப்பவர்களிடமோ எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

மாறாக, நுஸ்ஸியிடம் அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களைக் கொடுத்தது யார் என்கிற கோணத்தில் விசாரித்து வரும் வாத்திகன் போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் போப்பின் சமையல்காரரைக் கைது செய்துள்ளனர்.

மதம் நேரடியாக ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்தால் காட்சிகள் எப்படியிருக்கும் என்பதற்கு வாத்திகனே சாட்சி –

இங்கே போப்பாண்டவரே முகமூடியணிந்த திருடனாகவும்,

சீருடையணிந்த போலீசாகவும்,

அங்கியணிந்த நீதிபதியாகவும்,

ஒளிவட்டம் பொருத்திய மீட்பராகவும் சகல பாத்திரங்களிலும் களமிறங்கிக் கலக்குகிறார்.

12 வருடங்களுக்குப் பிறகு திருச்சபையிலிருந்து விலகுகிறார் பாதிரியார் ஷிபு கலம்பரம்பில்.

நிறுவனத்தின் பிரமாண்டமும், அந்த பிரமாண்டம் அளிக்கும் மமதையும், ஆளும் வர்க்கத்தோடான நெருக்கமும், அந்த நெருக்கம் அளிக்கும் அதிகாரமும், கேள்வி முறையின்றிப் பின்பற்ற கையறு நிலையிலிருக்கும் மக்கள் கூட்டமும் மத பீடங்களைத் தரையிலிருந்து ஒரு சில அடிகளுக்கு மேல் மிதக்க வைக்கிறது.

CONTINUED ….

suvanappiriyan said...

புனை பெயரில்!

//இது தான் நிதர்சனம். வெளிநாட்டுக்காரர்களை ஒரு பிணைப்பால் அடிமையாக்கும் நிலையே ஹஜ் யாத்திரை. அவர்களுக்கு அது பற்றி தெரிவதால் தான் அவர்கள் அதை ஒரு கடமை என்று நினைப்பதில்லை.//

அடுத்த தவறான புரிதல். இந்தியாவின் முஸ்லிம் மக்கள் தொகை 35 கோடி என்றால் அதில் 20000 ஆயிரம் அல்லது அதற்கு கூடுதலாகத்தான் சவுதி அரசு அனுமதிக்கிறது. அதே போல் சவுதியில் மொத்த மக்கள் தொகையில் 2 சதமே அனுமதிக்கப்படுகின்றனர். உள்ளூரில் இருக்கும் நான் ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் ஹஜ் செய்ய முடியும். மதிலும் இரண்டாவது முறை செய்ய அதிக பணமும் கட்ட வேண்டும். கூட்டத்தை கூடிய வரை குறைக்க இந்த ஏற்பாடுகள். சட்டங்களை தளர்த்தினால் வருடா வருடம் ஹஜ் செய்யும் சவுதிகளின் எண்ணிக்கை அதிகமாகும். வெளி நாட்டவர்களுக்கு இதனால் பிரச்னை. எனவேதான் சவுதி அரசு கட்டுப்பாடுகளை விதித்து தனது நாட்டு மக்களை வருடந்தோறும் ஹஜ் செய்வதை தடுத்து வருகிறது.

இந்த ஹஜ்ஜினால் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்' என்ற புரிதலுக்கு வருகின்றனர்.

UNMAIKAL said...

PART 4. தேவனின் திருச்சபை! மாபியாக்களின் கருப்பை!!
by வினவு, December 3, 2012


சகல திசைகளிலும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளால் தாக்கப்படும் மக்கள் ஜனநாயக உணர்வற்ற விசுவாசிகளாய்,

அநீதியை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக,

தேவ விசுவாசத்தின் ஊடாய் சகலத்தையும் சகித்துக் கொண்டு செல்பவர்களாய் பயிற்றுவிக்கப் படுகிறார்கள்.

தொட்டறியத்தக்க பொருளாதாயக் காரணிகளை முன்னிட்டு ஏற்படும் பாடுகளைச் சகித்துக்கொண்டு,

தேவ சமூகத்தில் கண்ணீர் மல்க பிரார்த்திப்பதே மேன்மை என்பதாக கற்றுத் தரப்படுகிறார்கள்.

அதுவே தியாகம் என்பதாகப் புரியவைக்கப் படுகிறார்கள்.

கையறு நிலையில் நிர்க்கதியாய் நிற்கும் மக்களின் அறியாமையே மத நிறுவனங்களின் திமிருக்கு விளைநிலமாய் இருக்கிறது.

இது ஒரு விநோதமான உலகம்.

இங்கே கொலைகாரனே ஜீவகாருண்யவாதி.

திருடனே மீட்பன்.

கொள்ளைக்காரனே வள்ளல்.

நாலாந்தர பொறுக்கி தான் முதல்தர ‘போதகர்’.

இந்த உலகத்துக்குள் இயேசுவின் ‘அழைப்பை’ ஏற்று நுழையும் மேரி சாண்டி, ஜெஸ்மி போன்றவர்கள் எதார்த்தத்தை பிரத்யட்சமாய்த் தரிசிக்கும் அந்தத் தருணங்கள் எப்படியிருந்திருக்கும்?

இது தான் அறம் என்று அவர்கள் நம்பிய விழுமியங்கள் சில்லுச் சில்லாக நொறுங்கித் தகர்ந்து விழும்போது எப்படி உணர்ந்திருப்பார்கள்?

அதை அவர்களது வாழ்க்கை வரலாற்று நூல் விரிவாகச் சொல்கிறது.

அவுட்லுக் பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் மேரி, அதன் இறுதியில் இவ்வாறு சொல்கிறார் -

“பல நல்ல பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் – அதே நேரத்தில் தவறானவர்களும் இருக்கிறார்கள்.

நான் சர்ச்சுக்குச் செல்லும் இளம் கத்தோலிக்கப் பெண்களுக்குச் சொல்லிக் கொள்வது இது தான்,

உங்கள் பாவ மன்னிப்பை எந்தப் பாதிரியிடமும் அறிக்கையிடாதிருங்கள்..”

தனது சொந்த அனுபவத்தின் காரணமாக, இளம் பெண்கள் கத்தோலிக்கத் திருச்சபையை நம்பவேண்டாம் என்கிறார் மேரி.

சாதி ஆதிக்கம் நிறைந்திருக்கும் திருச்சபையை தலித்துகள் நம்பவேண்டாம் என்று தமது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு தலித் பாதிரியார் கூறக்கூடும்.

கருப்பின மக்கள் வெள்ளையினப் பாதிரியை நம்பவேண்டாம் என்று கருப்பினப் பாதிரி சொல்லுவார்.

திருச்சபைக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் நிர்வாகத்திலிருக்கும் பாதிரிகளை நம்பவேண்டாம் என்று எச்சரிக்கை செய்வார்கள்.

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மேரி அல்லது ஜெஸ்மியைப் பொருத்தவரை பாலியல் முறைகேடுகளில் ஈடுபடாமல், துறவு நிலை பேணும் பாதிரிகளும் கன்னியாஸ்திரீகளும் நல்லவர்களே.

ஒழுக்கம், அறம் என்பனவற்றை பாலியல் ஒழுக்கம், நிதிக் கையாடல் செய்யாமை போன்ற குறிப்பிட்ட சில பண்புகளோடு மட்டுமே தொடர்பு படுத்திப் பார்ப்பதும், திருச்சபை உள்ளிட்ட ஒரு நிறுவனத்தின் யோக்கியதையை, அந்நிறுவனத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில நபர்களின் குணநலன்களை மட்டுமே வைத்து மதிப்பிடுவதும்தான் இதில் மையமான பிரச்சினை.

ஒழுக்கம், அறம் குறித்த கோட்பாடுகளின் சமூகப் பாத்திரத்தை விலக்கி விட்டு, அதாவது அவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் வர்க்க நலனை மறைத்துக் கொண்டு, முடிந்தவரை அவற்றைப் பூடகமாக்குவதன் மூலம், வர்க்க சுரண்டலுக்கு நியாயம் கற்பிப்பதுதான் மத நிறுவனங்கள் ஆற்றிவரும் பாத்திரம்.

தமது கோடானு கோடி விசுவாசிகள் பஞ்சப்பராரிகளாய்,

பன்றிகள் மேயும் குடிசைகளுக்குள் உழலும் போது,

அவர்களுக்காய் தேவ சமூகத்தில் கண்ணீர் மல்க மன்றாடுவதாய்ச் சொல்லிக் கொள்ளும் திருச்சபைப் பாதிரிகள் வாழும் வாழ்க்கை எத்தகையது?

ஒரு சாதாரண சி.எஸ்.ஐ பாதிரியின் துவக்க சம்பளமே சுமார் முப்பதாயிரம்.

தங்குமிடம் இலவசம், உண்ணும் உணவு இலவசம். மனைவிக்கு வேலை, பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை இலவசம், மருத்துவச் செலவுகளை விசுவாசிகள் கவனித்துக் கொள்வார்கள் –

இதற்கும் மேல் வரும்படியாகத் தனிப்பட்ட ஜெபக் கூட்டங்களில் வசூலாகும் தொகையும் இவர்களுக்கே.

கத்தோலிக்கப் பாதிரியார்களின் வாழ்க்கை வசதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

CONTINUED ….

UNMAIKAL said...

PART 5. தேவனின் திருச்சபை! மாபியாக்களின் கருப்பை!!
by வினவு, December 3, 2012


இவர்களுக்குப் படியளக்கும் மக்கள் வறுமையிலும்,

துன்பத்திலும் உழன்று கொண்டிருக்கும் போது பாதிரிமார்கள் உல்லாச வாழ்க்கை வாழ்வது தீயொழுக்கம் என்று கூறி எந்த யாரும் திருச்சபைகளில் இருந்து வெளியேறியதில்லை.

ஏனென்றால் அந்த உல்லாச வாழ்க்கையை அறம் கொன்ற செயலென்று அவர்கள் யாரும் கருதியதில்லை, அவ்வாறு கற்பிக்கப் பட்டதுமில்லை.

போப்பாண்டவரின் வங்கி மோசடியைப் பற்றியும்,
அவர்கள் கடந்த காலங்களில் கள்ளக்காதல்களில் ஈடுபட்ட கிசுகிசுக்களையும் எழுதி மாயும் ஐரோப்பிய ஊடகங்கள்,

இரண்டாம் உலகப் போரின்போது பாசிசத்தை திருச்சபை ஆதரித்து நின்றதும், பற்றியும்,

இன்று அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களை மவுனமாக அங்கீகரிப்பதும் அறம் கொன்ற செயல் என்று சாடுவதில்லை.

இன்றைய உலகமே போராட்டங்களின் உலகமாய் இருக்கிறது.

அமெரிக்காவின் வால் வீதியில் துவங்கி ஸ்பெயினின் தெருக்களிலும்,

கிரீஸின் நகரங்களிலும் மக்கள் தங்களைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.

இந்தியாவில் அந்நிய முதலீட்டை எதிர்த்து வணிகர்கள்,

கல்வி தனியார்மயத்தை எதிர்த்து மாணவர்கள்,

விளைச்சலுக்கு விலை கேட்டு விவசாயிகள்,

வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து பழங்குடியினர்,

அணுவுலையை எதிர்த்து மீனவர்கள் என்று திரும்பிய திசைகளிலெல்லாம் போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது.

இந்தப் புவிப்பரப்பே மக்களின் வாழ்க்கைக்கான போராட்டங்களினால் கொதிநிலையிலிருக்கும் போது திருச்சபைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

யார் பக்கம் நிற்கின்றன?

தங்களது சொத்துகளையும் சுகபோக வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக,

அவற்றைத் தமக்கு அருளிய ஆளும் வர்க்கங்களின் அயோக்கியத்தனங்களை நியாயப்படுத்துகின்றன அல்லது மறைக்கின்றன

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்கா பரலோகம் மட்டும்தான் என்பது போலவும்,

இகலோகப் பிரச்சினைகளில் தங்களுக்குத் தொடர்பில்லாதது போலவும் பம்மாத்து செய்கின்றனர்.

ஒழுக்கம் என்பதை தனிநபர் விவகாரமாகச் சுருக்கி,

அந்த ஒழுக்கத்தின் வாழ்விடத்தையும் தொடையிடுக்குகளுக்குள் சுருக்கி,

துறவு என்ற ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கி,

அந்தத் துறவுக்கு, கண்கள் கூசுமளவுக்கு ஓர் ஒளிவட்டத்தை உருவாக்கிக் காட்டுவதன் நோக்கமே,

மத நிறுவனங்களின் இருண்ட பக்கத்தை மறைப்பதுதான்.

இந்த இருட்டுக்குள்ளே தான் மேரி குறிப்பிடும் ‘நல்லவர்கள்’ உலவுகிறார்கள்.

ARTICLE SOURCE: http://www.vinavu.com/2012/12/03/church-scandals/

THANKS TO “VINAVU. COM”

mohamed said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

திரு வெங்கடாசலம்!

//திருவள்ளுவர் கடவுளை ஒருவன் தினமும் வணங்கவேண்டும் என்றோ அன்றாடம் பூஜை மற்றும் பிற சடங்குகளில் ஈடுபடவேண்டும் என்றோ கூறவில்லை.//

'பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீத்தார்
இறைவன் அடிசேரா தார்'
குறள் 1:10

இறைவனின் திருவடிகளை மனதில் பதித்து அவனை நினைத்து வாழும் அன்பர்களே பிறப்பு இறப்பு எனும் கொடிய அலைகள் மோதும் கடலை நீந்திக் கரை சேர்வார். மற்றவர் இறைவன் அருள் இல்லாததால் துன்பமெனும் கடலில் மூழ்கி சிரமத்தை எதிர் கொள்வர்.

//தவறு செய்தால் கடவுள் நிச்சயம் தண்டனை கிட்டும் என்பது போன்ற கருத்துக்கள் எதுவும் திருக்குறளில் இல்லை.//

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
குறள் 15:146

காம வெறியால் கள்ள தொடர்பு கொண்டு ஒழுகும் கயவனிடம் பகை, பாவம், பயம், பழி ஆகிய நான்கும் ஒருங்கே வந்து சேரும். இதனால் இம்மை மறுமை ஆகிய இரு வகை பயனையும் இழத்தல் உறுதி என்கிறார் வள்ளுவர்.

//மற்ற மதங்களைப்போல ஆனல் அவற்றிலிருந்து அடிப்படையில் வேறுபட்ட மதம் என்று இருந்து இருக்க வேண்டும்//

அடிப்படையில் வேறுபடவெல்லாம் இல்லை. இந்த உலகில் நற்கருமங்கள் புரிந்து இறைவனை வணங்கி உயிரினங்களிடத்தில் அன்புடன் நடந்து கொலை, பொய், திருட்டு, விபசாரம் போன்றவற்றிலிருந்து விலகி தூய வாழ்வு வாழும் ஒருவனுக்கு மறுமை வாழ்வு சுகமாக இருக்கும் என்பதைத்தான் பல குறள்களில் வள்ளுவர் கூறுகிறார். இதைத்தான் உலக மதங்களும் சொல்கின்றன. எனவே எல்லா வேதங்களுக்கும் அடிப்படை ஒன்றுதான்.

Anonymous said...

mohamed said...

//ஓட்டுக்காகவோ, மகுடத்துக்காகவோ எழுதுபவனல்ல நான் என்பதை அவர்களுக்கு விளக்கி கடிதம் எழுதி விட்டு தற்போது எனது பதிவுகளை நான் இணைக்க முயற்சிப்பதில்லை.//

நானும் அவர்களின் சேட்டைகளை பற்றி கேள்விப் பட்டேன்.அல்ஹம்துலில்லாஹ் நீங்கள் எடுத்தது சரியான முடிவுதான் சகோ.நம் சகோக்கள் அனைவரும் இந்த தமிழ் மனதை புறக்கணிக்க வேண்டும்.பேசாம அவர்கள் தமிழ் மனம் என்ற பெயரை மாற்றி வைத்து கொள்ளலாம்.

suvanappiriyan said...


திரு மலர் மன்னன்!

//ஆஃப்ரிக்க கறுப்பின இஸ்லாமியர்கள், ஆசிய மாநிற இஸ்லாமியர்கள், ஷியாக்கள் அதில் செல்ல அனுமதி உண்டா என்று தெரிவித்தால் நல்லது.//

இந்த வருடம் ஹஜ் பயணம் மேற் கொண்ட எனது உறவினர் இந்த ரயிலை பயன்படுத்தியதாக சொன்னார். மிக வசதியாக இருந்ததாம். சீசன் டிக்கெட் போல ஒரு முறை எடுத்து விட்டால் அதை காட்டி ஏழு நாட்களும் பயணிக்கலாம். இங்கு நிறத்துக்கோ, மொழிக்கோ, நாட்டுக்கோ, பிரிவுக்கோ எந்த தடையும் இல்லை.

//அதேபோல் பொதுவில் நடைபெறும் கூட்டு உண்ணலில் ஆஃப்ரிக்கக் கறுப்பின, ஆசிய மாநிற இஸ்லாமியர் தட்டுகளிலிருந்து அரபிகள் எடுத்து உண்பது உண்டா என்று தெரிவித்தால் தெளிவு பிறக்கும்.//

இங்கு சவுதி அரசு சார்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குர்ஆன் வகுப்பு நடக்கும். அரபி மொழியும் பயிற்றுவிக்கப்படும். இதில் அதிகமாக ஆப்ரிக்க கறுப்பு இனத்தவர், இந்தியா, பாகிஸ்தான், பங்களாNதுஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருப்பர். ஆசிரியர்களாக சவுதிகள் உண்டு. பார்வையாளர்களாக ஆர்வத்தில் சில சவுதிகளும் வருவதுண்டு. வகுப்பு முடிந்தவுடன் அரவு செலவில் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்படும். பெரிய தட்டில் நான்கு பேர் உட்காருவோம். சிலர் அரபுகளாகவும், ஆப்ரிக்கர்களாகவும், ஆசியர்களாகவும் பிரிந்து உட்காருவர். இதனை கவனிக்கும் சில சவுதிகள் ஆட்களை மாறி உட்கார சொல்வார்கள். அதுபோல் ஒரு சவுதி, ஒரு ஆப்ரிக்கன், ஒரு பானிஸ்தானி, ஒரு இந்தியன் என்று ஒரு தட்டில் ஒன்றாக உட்கார வைப்பார். பல முறை இவ்வாறு நான் சாப்பிட்டுள்ளேன்.

சவுதி அமைச்சர் இளவரசர் தலாலின் தம்பி எங்களோடு ஒரு முறை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளார். நான் கொடுத்த லெக்சரும் சவுதி டிவியிலும் ஒளிபரப்பானது..

http://www.quranreading.com/blog/ramadan/get-prepared-to-gather-blessings-in-ramadan/
http://www.youtube.com/watch?v=5t9hLoqFdJM

//ஹஜ்ஜுக்குச் சென்று வந்த சில லப்பைகள் சொன்னதால்தான் கேட்கிறேன்.//

லெப்பை, ராவுத்தர் என்றால் அரபுகள் சிரிப்பர். ஏனெனில் அப்படி ஒரு பிரிவு இஸ்லாத்திலேயே கிடையாது. இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷில் மட்டுமே இந்த சொல்லாடல். ஆதியில் இந்துவாக இருந்து மதம் மாறியதால் அங்குள்ள பழக்கம் இங்கும் வந்திருக்கலாம். நம் தமிழகத்திலேயே தப்லீக் ஜமாத் நடத்தும் கூட்டத்தை நீங்களும் சென்று அங்கு எவ்வாறு சாப்பிடுகிறார்கள் என்று பார்கலாம்.

UNMAIKAL said...

நலத்திட்டங்களின் "சராசரி" செலவிலும் பாரபட்சம் :

முஸ்லிம் ரூ.138/-,

எஸ்.சி.ரூ.1280/-,
எஸ்.டி.ரூ.1400/-.


Monday, 03 December 2012 15:14

DEC3, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களின்படி,

மத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் "10 ல் 1 பங்கு" பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை, என்ற வேதனையான உண்மை தெரியவந்துள்ளது.


மஜ்லிஸ் கட்சியின் எம்.பி.யான அசதுத்தீன் உவைசி, மற்றும் கேரளாவை சேர்ந்த எம்.பி.க்கள் அனுராதன் சம்பத் மற்றும் பி.கே.பிஜூ ஆகியோர், சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு,

மத்திய சிறுபான்மை நல இணையமைச்சர் "நைனாங் எரிங்" எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், திடுக்கிடும் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.

மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப ஒவ்வொவொரு சமூகத்துக்காகவும் சராசரியாக (ஆண்டுக்கு) நபர் ஒருவருக்கு அரசு செய்யும் செலவுகள் குறித்த அந்த விவரத்தில்,

ஹிந்து சமூகத்தின் பல பிரிவினருக்கு செய்யப்படும் செலவுகளை விட முஸ்லிம்களின் மீது செலவழிக்கப்படும் தொகை மிகவும் குறைவாக உள்ளது.

ஹிந்து சமூகத்தின் "எஸ்.சி" பிரிவினருக்கு அரசு செய்யும் செலவு ரூ.1280/-,

"எஸ்.டி"க்களுக்கு ரூ.1400/-

ஆனால், முஸ்லிம்களின் மீது செலவழிக்கப்படுவதோ வெறும் ரூ.138/-

அதிலும், பெரும் தொகை "கல்வி உதவி"யாக (ஸ்காலர்ஷிப்) கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 12ம் ஐந்தாண்டு திட்டத்தில் முஸ்லிம்களின் நலன்களுக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை, எனவும் கைவிரித்துள்ளது அரசு.

முன்னதாக, முஸ்லிம்களின் நலன்களுக்காக அரசு, பத்து மடங்கு கூடுதல் தொகை ஒதுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி "திட்டக்கமிஷனுக்கு" பல கோரிக்கைகள் வைக்கப்பட்டும்,

"மாண்டேக் சிங் அலுவாலியா" அளித்த வாக்குறுதிகளுக்கு பிறகும், முஸ்லிம்களுக்கான திட்ட ஒதுக்கீட்டை அதிகரிக்காதது, கவலையளிப்பதாக உள்ளது.

மத்திய அரசு, முஸ்லிம் சமூகத்துக்காக பல நன்மைகளை செய்து வருவதாக "தம்பட்டம்" அடித்து வருவது "ஏமாற்று வேலை" என்பதும் புலப்பட்டு விட்டது.

http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/652--qq-138-1280-1400-

UNMAIKAL said...

இது நமக்கு ஏற்புடையதல்ல...

Monday, 03 December 2012 21:32

டிசம்பர் 2 அன்று பாமக சார்பில், சாதி, சமூக ஏற்றத்தாழ்வுகளை சீரமைக்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

தமுமுக உள்ளிட்ட சமூக அமைப்புகளுக்கு மேற்கண்ட தலைப்பில் நிகழ்வு நடக்கவிருப்பதாக கோ.க.மணி அவர்கள் அழைப்பு விடுத்தார்.

அழைப்பை ஏற்று தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா அவர்கள் பங்கேற்றார்கள்.

அங்கே தலித்துகளையும், பிராமணர்களையும் தவிர மற்ற அனைத்து சமூகங்களும் வருகை தந்திருந்தனர்.

அங்கு பேசப்பட்ட கருத்துக்களில் பல சமூக நீதிக்கும், நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்பதை உணர்ந்த குணங்குடி ஆர்.எம்.அனிபா அவர்கள், தனது மாற்றுக் கருத்துக்களை அங்கே பதி­­வு செய்திருக்கிறார்.

குறிப்பாக தலித்துகளின் இடஒதுக்கீட்டைப் பறிக்க வேண்டும் என சிலர் பேசியபோது அதை அவர் கடுமையாக ஆட்சேபித்திருக்கிறார்.

மேலும் திருண வயது வரம்பை 21 ஆக உயர்த்த அரசுக்குப் பரிந்துரை தீர்மானத்தை சிலர் முன்மொழிந்த போது, அது இஸ்லாமியர்களைக் கட்டுப்படுத்தாது என்ற இணைப்பு வார்த்தைகளை அதில் சேர்க்க கூறியிருக்கிறார்.

சாதி, சமூக ஏற்றத்தாழ்வுகளை சீரமைக்கும் ஆலோசனைக் கூட்டம் என அழைப்பு விடுக்கப்பட்டு, அங்கே தலித் மக்களுக்கு எதிரான கருத்துக்களும், தீர்மானமும் முன்மொழிந்தது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

சமூகங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளையும், இடைவெளிகளையும் ஏற்படுத்தும் எந்த முயற்சிகளையும் தமுமுக ஆதரிக்காது என்பது திட்டவட்டமாகும்.


நமக்கு பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் உள்ளிட்ட அனைவரின் தோழமையும் தேவை.

அதேநேரம் ஓரிரு சம்பவங்களை காரணம் காட்டி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிப்பதையோ அவர்களை தனிமைப்படுத்துவதையோ ஆதரிக்க முடியாது.

சர்ச்சைக்குரிய இடத்தில் சமூகநீதிக்கான கருத்தை வலுவாகப் பதிவு செய்த தமுமுகவை சமூக நீதியாளர்கள் பாராட்டினர்.

http://www.tmmk.info/index.php?option=com_content&view=article&id=2882:2012-12-03-16-09-06&catid=58:2009-10-11-12-42-41

suvanappiriyan said...

திரு ராம்!

//சுவனபிரியன், லப்பை என்போர் கடல் வணிகம் மூலம் மேற்கு நாடுகளில் இருந்து இங்கு குடி அமர்ந்தோர் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். அவர்கள் கடலோர பட்டினங்களிலேயே பல தலை முறையாக வசிப்பதையும் காணலாம். நீங்கள் அவர்கள் மதம் மாறியவர்கள் என்கிறீர்களா?//

கடற்கரையோரம் வந்து தங்கிய அரபுகள் மிக சொற்பமே! இங்குள்ள பெண்களை திருமணம் முடித்து இந்நாட்டு குடிமக்களாகவே ஆகி விட்டனர். மொத்த மக்கள் தொகையில் வெளி நாட்டிலிருந்து குடியேறிய அரபுகள் 2 சதவீதம் கூட தேறாது. ஆனால் இன்று இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை 20 கோடிக்கும் மேல். இவர்கள் எல்லாம் அரபு நாட்டு இறக்குமதியா?

புரோகித தொழில் செய்பவர்களை லெப்பை என்று அழைப்பர். மரக்கலங்களை செய்து கடல் வியாபாரம் செய்பவர்களை மரக்கலாயர் அதாவது மரைக்காயர் என்பர். குதிரை வியாபாரம் செய்பவர்களை ராவுத்தர் என்பர். இவை எல்லாம் தொழிலை குறிக்க அமைந்த பெயர்கள். திருமணம் போன்ற அனைத்து சம்பந்தங்களும் இவர்களுக்குள் நடந்தேறி வருகிறது. இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இங்கு கிடையாது.