Followers

Sunday, May 19, 2019

என்று தணியும் இந்த சாதி வெறி!

என்று தணியும் இந்த சாதி வெறி!
தாழ்த்தப்பட்டவர் என கூறி வெளியேற்றியதால் திருவாரூர் கோயில் கோபுரத்தில் ஏறி சிவனடியார் தற்கொலை முயற்சி
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தேவாரம் பாடிய சிவனடியார் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் கோயில் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமை பீடமாகவும், முக்தியளிக்கும் தலமாகவும் இருந்து வருகிறது. திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானை சேர்ந்த முத்தரசன் (34) என்பவர் இந்த கோயிலில் சிவத்தொண்டு செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மூலவரான வன்மீகநாதர் சன்னதியில் அமர்ந்து தேவாரம் பாடியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட கோயிலின் அர்ச்சகர் ஒருவர் இந்த இடத்தில் நீ வந்து தேவாரம் பாட கூடாது என அவரை வெளியேறும்படி கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே கோயில் ஊழியர் ஒருவர் மூலம் சிவனடியார் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால், தேவாரம் பாட அனுமதி மறுக்கப்படுகிறது என்றும், தனக்கு ஏற்பட்ட அவமானம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும் கூறி சிவனடியார் முத்தரசன் நேற்று கோயிலின் மேற்கு கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்த திருவாரூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிவனடியாரை சமாதானம் செய்து கீழே இறக்கினர்.
இதனையடுத்து சிவனடியாரை தரக்குறைவாக பேசியும், கோயிலை விட்டும் வெளியேற்றிய அர்ச்சகர் மற்றும் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோயிலில் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக சிவனடியார் வெளியேற்றப்பட்டதையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் உதவி
தினகரன்
20-05-2019

ஹெச்.ராஜாவும், இல கணேசனும் இந்த அர்ச்சகருக்காக குரல் கொடுப்பார்களா?


5 comments:

Dr.Anburaj said...

ஹெச்.ராஜாவும், இல கணேசனும் இந்த அர்ச்சகருக்காக குரல் கொடுப்பார்களா?

இந்துக்களை நேசிக்கும் இருவரும் நிச்சயம் குரல் கொடுப்பார்கள். திருக்கோவில் நடைமுறைகளில் அரசு சில மாற்றங்களை கொண்டுவர இயலாது செயலற்றுபோய் உள்ளது.முறையான சமய கல்வி இந்துக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்து சமய வாழ்வின் அனைத்து அம்சங்களும் அய்ந்து காலத்திற்கு ஒவவாத நடைமுறைகள் நிறுத்தப்பட வேண்டும்.
இது இந்துக்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனை.அரேபிய அடிமைகள் இதில் தலையிடுவது தேவையற்றது.1600 வருடத்திற்கு முந்தையகாட்டறவிகளைப் பின்பற்றும் முஸ்லீம்கள் இந்து சமூகம் சார்ந்த விஷயங்களில் நீதிபதியாக இருக்க முடியாது.

Dr.Anburaj said...


பாக்கிஸ்தானுக்கு நெருக்கமான அரபிக்கடல் பகுதியில் எண்ணெணய்வளம் கொட்டிக்

கிடக்கிறது.இம்ரான்கான் எடுத்து அதைவிற்று உலகிரேயே பணக்கார நாடாக பாக்கிஸ்தான்

மாறிவிடப்போகின்றது என்று சுவனப்பிரியன் அண்டப்புளுகு பளுகினாா். எந்த எண்ணெய்வளமும் அங்கு இல்லை என்று முடிவானது.அறிவித்தவா் தங்களின் தீன் சகோதரா்
ஜனாப்.அல்ஹாஜி.இம்ரான்கான் - பிரதமா் பாக்கிஸ்தான்.

ஆனால் மண்ணைத்தவிர வேறுஏதும் இல்லை என்று தெளிவானது.

suvanappiriyan said...

//இது இந்துக்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனை.அரேபிய அடிமைகள் இதில் தலையிடுவது தேவையற்றது.//

ஹா..ஹா... எங்கள் மூதாதையரும் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்து பார்பனர்களுக்கு அடிமைபட்டு கிடந்தவர்கள்தானே... எனது பூர்வீக மதத்தை பற்றி என்னை தவிர வேறு யார் உரிமை கொண்டாட முடியும்.

பார்பனிய ஆக்டோபஸ் பிடியில் சிக்கித் தவிக்கும் அன்பு ராஜ் போன்ற சூத்திரர்களுக்காக நான் பரிதாபம் மட்டுமே பட முடியும்.

Dr.Anburaj said...

இலங்கையில் குண்டுவைத்து நாசம் செய்த சண்டாளன் பார்ப்பனனா? பாக்கிஸ்தானில் பெரும் காடைத்தனங்களுக்கு காரணமாக இருப்பவன் பார்ப்பனனா? பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷ்யிலும் அப்பாவி இந்துக்களை இனப்படுகொலை செய்பன் பார்பனனா ? இல்லையே அரேபபிய துலுக்க காடையர்கள்தான் உலகிற்கு பெரும் அசு்சுருத்தலா நாசகார சக்தியாக பாழாக்கி வருகின்றார்கள். உலகிற்கு ஆபத்து இசுலாம் -அரேபிய காடையர்கள் வழிதான்.பார்ப்பனார்கள் அந்ணர்கள்.அறவழி நிற்பவர்கள். அரும்பெரும் தியாகங்களை தாய் நாட்டிற்காகச் செய்து வருபவர்கள். அரேபிய காடையர்கள் இந்தியாவை -இந்துஸ்தானத்தை கொளளையடிக்க வந்தவா்கள்.கொள்ளையடித்தவர்கள்.கொள்ளையடித்து கொழுத்தவர்கள்.

Dr.Anburaj said...

இந்துக்கள் யாருக்கும் அடிமையில்லை.சுதந்திரமானவன். தாங்கள்தான் அரேபியனுனுக்கு அடிமையாக மூளையை தொலைத்து விட்டு முட்டாளாக வாழந்து வருகின்றீர்கள். இதில் பெரிய பீற்றல் வேறு.