Followers

Thursday, February 26, 2026

பாகிஸ்தானி அட்டா முஹம்மதுவிடம் பாபர் பள்ளி பற்றி கேட்கப்படுகிறது.




 



பாகிஸ்தானி அட்டா முஹம்மதுவிடம் பாபர் பள்ளி பற்றி கேட்கப்படுகிறது.

 

நெறியாளர்:

 

மண்ணை வணங்க மாட்டோம். ஏக இறைவனை மட்டுமே வணங்குவோம் என்கிறீர்கள். ஆனால் பள்ளிவாசல்களுக்கு பாபர் பள்ளி என்று வைத்து வணங்குவது ஏன்?

 

அட்டா முஹம்மது (பாகிஸ்தானி)

 

பாபர் பள்ளி, அலி பள்ளி, அபுபக்கர் பள்ளி என்று நாங்கள் பெயர் வைப்பது அடையாளத்துக்காக. 1000 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கும் போது குறிப்பிட்ட பள்ளியை அடையாளப்படுத்த ஏதாவது ஒரு அழகிய பெயர் தேவைப்படுகிறது.

 

அந்த பள்ளிவாசலுக்கு உள்ளே பாபருடைய சிலையோ, அலியுடைய சிலையோ இல்லை. ஏக இறைவனை மட்டுமே நாங்கள் பள்ளியில் வணங்குவோம். நபிகளைக் கூட வணங்க மாட்டோம். இது சிறு பிள்ளைகளுக்குக் கூட தெளிவாக விளங்கும்.

 

ஆனால் பாபர் பெயரைக் கேட்டாலே உங்களுக்கு எரிகிறது. ஏனென்றால் இந்த மண்ணில் சனாதனத்தை முடிவுக்கு கொண்டு வர ஆரம்ப வித்திட்டவர் பாபர். சனாதனவாதிகளின் கொட்டத்தை அடக்கியவர் பாபர். மக்கள் அனைவரையும் சமமாக பார்த்தவர். எனவே உங்களுக்கு பாபரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது'

 

 

 

 

 

 

 

No comments: