Followers

Thursday, May 26, 2011

புணரமைக்கப்படும் எகிப்தின் எரிந்த சர்ச்சுகள்!




சில நாட்களுக்கு முன்பு எகிப்தில் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் கலவரம் நடந்ததை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். என்னோடு பணியிலிருக்கும் எகிப்தியரிடம் 'சர்ச்களை முஸ்லிம்கள் எரிப்பது தவறல்லவா? இது இஸ்லாத்துக்கு எதிரல்லவா?' என்று கேட்டேன். உடன் அவர் 'முஸ்லிம்களும் கிறித்தவர்களும் பல காலமாக சகோதரர்களாக பழகி வருகின்றனர். இந்த காரியங்களை செய்வது மொசாத்தும், சி.ஐ.ஏ யும். ஏனெனில் எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி மலர்ந்தால் இஸ்ரேல் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். ஹமாஸூக்கு உதவி எகிப்திலிருந்து தாராளமாக கிடைக்கும். ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்த போது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் அனுசரணையாக நடந்து கொண்டார். அது போன்ற ஆட்சியைத்தான் இஸ்ரேலும் விரும்புகிறது. இஸ்லாமிய ஆட்சி வந்தால் கிறித்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்ற செய்தியை இஸ்ரேல் இதன் மூலம் உலகுக்கு தெரிவிக்க முனைகிறது' என்றார்.

'இதற்கு என்ன ஆதாரம்?' என்றேன். 'தங்கள் மேல் சந்தேகம் வராத அளவுக்கு காரியங்களை கச்சிதமாக முடிப்பவர்கள் இஸ்ரேலியர்கள். அங்குள்ள சகோதர கிறித்தவர்களுக்கும் இது தெரியும். மொசாத்தின் உளவாளிகளாக எங்கள் நாட்டவர்களே பலர் செயல்படுகின்றனர்' என்றார். யூத மூளை எதையும் செய்யத் துணியும் என்று நினைத்துக் கொண்டேன்.

எரிக்கப்பட்ட சில சர்ச்சுகள் தற்போது ஆளும் அரசால் புணரமைக்கப் படுகிறது என்ற செய்தியை இன்றைய அரப் நியூஸில் பார்த்தேன். சர்ச்சை புதிதாக புணரமைப்பதில் அதிகம் ஆர்வத்துடன் முஸ்லிம்களே கலந்து கொண்டனர். செயின்ட் மேரீஸ் சர்ச் ஒரு இஸ்லாமியரால் சரி செய்யப்படுவதைத்தான் மேலே பார்க்கிறீர்கள். 'தி அரப் காண்ட்ராக்டர்ஸ்' என்ற மிகப் பெரும் நிறுவனம் முஸ்லிம்களைக் கொண்டே சர்ச்சை சரி செய்யும் வேலையில் இறங்கியுள்ளது.

தற்போது சர்ச்சில் வேலை செய்து வரும் அப்துல் அஜீஸ் என்ற நபர் கூறும் போது 'சர்ச்சை சிலர் எரித்தார்கள் என்ற செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. சர்ச்சை எரித்தது காட்டுமிராண்டித் தனம்' என்கிறார். ஆளும் ராணுவ அரசு சர்ச்சை எரித்தவர்களில் பலரை கைது செய்துள்ளது. அவர்களிடம் தற்போது விசாரணையும் நடந்து வருகிறது.

தற்போதய ராணுவ அரசு சர்ச்சை புதுப் பொலிவுடன் கொண்டு வர ஒரு மில்லியன் டாலரை செலவிடுகிறது. இது போன்ற செய்கை அங்குள்ள கிறித்தவர்களை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நான்கு மாடிகளைக் கொண்ட செயின்ட் மேரிஸ் சர்ச் புகழ் வாய்ந்த ஒன்றாகும். எகிப்தின் மக்கள் தொகையில் 10 சதவீதம் கிறித்தவர்கள் உள்ளனர்.

-தகவல் உதவி: அரப் நியூஸ்

896. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள் மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப் பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களுக்கு அதற்கு மறுநாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

3443. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன். இறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலராவர். அவர்களின் மார்க்கம் ஒன்றே.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதே நபிமொழி அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வேறொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Volume :4 Book :60

3446. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அளித்து அவளை (தானே) மணமும் முடித்தார் எனில் அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும். ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என்னை நம்பினால் அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும், ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானார்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பானாயின் அவனுக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.
என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :60

7542. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' வேதக்காரர்கள் (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) கூறுங்கள்: அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் யஅகூபின் சந்ததியினருக்கும் அருளப்பட்டதையும் மற்றும் மூஸாவுக்கும், ஈசாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவருக்கம், அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். (திருக்குர்ஆன் 02:136)182
Volume :7 Book :97

3700. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்.

மேலும், கிராமப்புற அரபுகளுக்கும் நன்மையே புரியும்படியும் அவருக்கு நான் உபசேதம் செய்கிறேன். ஏனெனில்,அவர்களே பூர்விக அரபிகளும், இஸ்லாத்தின் அடிப்படையும் ஆவார்கள். அவர்களின் செல்வத்தில் மலிவானவை மட்டுமே எடுக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதரின் பொறுப்பிலும் இருப்பவர்க(ளான முஸ்லிமல்லாதவர்க)ளுக்கு அளிக்கப்படட் உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் (அவர்களின் எதிரிகள் அவர்களைத் தாக்க வரும் போது) அவர்களுக்குப் பின்னாலிருந்து அவர்களுக்காகப் போர் புரிய வேண்டுமெனவும், (காப்பு வரி விதிக்கும் போது) அவர்களின் சக்திக்கேற்பவே தவிர அவர்கள் சிரமத்திற்குள்ளாக்கப்படக் கூடாது என்றும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன்' என்று உமர்(ரலி) கூறினார்….

Volume :4 Book :62

இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
-5:116

8 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,

இதில் என் மனதை அரிக்கும் விஷயம் என்னவென்றால்... சர்ச் எரிக்கப்பட்ட செய்திகள் எந்த அளவு உலக ஊடகங்களால் பிரபலப்படுத்தப்பட்டனவோ அதில் பத்து சதவீதம் கூட இந்த புனரமைக்கப்படும் செய்திகள் வெளியே வராமல் பார்த்துக்கொண்டனர்.

அரபு முஸ்லிம் ஊடகங்கள் மட்டுமே சொல்கின்றன. இன்றைய உலகில் கிட்டத்தட்ட முக்கால்வாசி ஊடகங்கள் மொசாட் அதிகாரத்தில் யூதர்கள் கைவசம் உள்ளன.

அவர்கள் எந்த புனைவை உலகத்துக்கு சொல்ல நினைக்கிறார்களோ அதுதான் உலகத்தில் செய்தியாகிறது. அதுவே பின்னர் உண்மை என்றும் மக்கள் நம்ப ஆரம்பித்து விடுகின்றனர்.

எகிப்தில் மொசாட் செய்வதைத்தான் நம் ஊரில்... காந்தி சுடப்பட்டநாளிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். செய்து வருகிறது. இதன் ஊழியர்கள் பஞ்சாயத்து போர்டிலிருந்து பார்லிமென்ட் வரை உள்ளனர். பிளாக்கிளிருந்து பி.டி.ஐ வரை உள்ளனர்.

மக்களாகிய நாம்தான் உணர்ச்சிவசப்படாமல் மிக மிக எச்சரிக்கையாக சிந்தித்து,
அறிவுடன் மெய்ப்பொருள் கண்டு அதன்படி வாழ வேண்டியுள்ளது.

முக்கியமான இச்செய்தி நமக்கெல்லாம் ஒரு பாடம்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆஷிக்!

//எகிப்தில் மொசாட் செய்வதைத்தான் நம் ஊரில்... காந்தி சுடப்பட்டநாளிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். செய்து வருகிறது. இதன் ஊழியர்கள் பஞ்சாயத்து போர்டிலிருந்து பார்லிமென்ட் வரை உள்ளனர். பிளாக்கிளிருந்து பி.டி.ஐ வரை உள்ளனர்.//

நம் நாட்டில் காவி பயங்கர வாதிகள் நடத்தும் அனைத்து காரியங்களுக்கும் ஆலோசனை யூதர்களிடமிருந்தே பெறப்படுகிறது. அத்வானி இன்றும் கூட இஸ்ரேலுடன் தொடர்பு கொண்டிருப்பது நமக்கெல்லாம் தெரியும். பாரதீய ஜனதா ஆட்சி காலத்தில் அவர்களோடு பல தொடர்புகளும் அரசு மட்டத்தில் நடந்து ஸ்திரப்படுத்தப் பட்டது. மாலேகான் குண்டு வெடிப்பு, மக்கா மஸடஜித் குண்ட வெடிப்பு, ரெயில் குண்டு வெடிப்பு: எரித்தல் அனைத்தும் மூலத்தினை ஆராய்ந்து பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு இஸ்ரேல் சம்பந்தப்பட்டிருக்கும்.

இதை எல்லாம் முறியடிக்க தினசரி பத்திரிக்கை ஒன்று நமக்கு அவசியம். பொருளாதார வசதி, மற்றும் அனைத்து வசதிகள் இருந்தும் பாழாய்ப்போன ஈகோ நம்மவர்களை இன்றும் ஒரு சரியான பத்திரிக்கையை கொண்டு வர தடுக்கிறது. இணைய நண்பர்களாவது இதற்கு முயற்ச்சிக்கலாம்.

Anonymous said...

இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?
இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?

இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது.
அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்…

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.
அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் (PROFESSOR) இந்த சம்பவம் அமெரிக்காவின் உள்வேளை(PROFESSOR) என்றார்கள். ஸ்டீவ் ஜோன் என்ற (PROFESSOR) கூறுகிறார்: 19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சாத்தியம் இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது ஜெட் பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடிகுண்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அவ்வாறு சொன்னதால் அவர் வேளை நீக்கம் செய்யப்பட்டார்.
இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் பதில். விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. இரட்டை கோபுரத்தின் தூண்களை 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது. 10 நாட்கள் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எறிக்கும் என்றது. இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?

விமானம் வளைந்த விதத்தை பற்றி விமான ஓட்டுனர் பலரிடும் கேட்டால், பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது. ராணுவ விமானத்தை மட்டும் அவ்வாறு வளைக்க முடியும் என்கிறார்கள், என்பார்கள். (இதை யூத விமானியிடம் கேட்க கூடாது)
அடுத்து அவர்கள் சொல்லகூடிய முக்கிய தடையம் போன். பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை(!) வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா! நான்தான் மார்க் பீகம். அம்மா! நான் பேசுவது கேட்கிறதா? அம்மா!.. அம்மா!.. (mom I am mark beegham. Can you hear me. Mao! Mom!.) மொபைல் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கேளுங்கள், 32000 அடி உயரத்தில் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்று. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்: 4000 அடியில் .04 % நெட்வர்க்தான் கிடைக்கும். 8000 அடியில் .01% நெட்வர்க்தான் கிடைக்கும். 32000 அடியில் .006% நெட்வர்க்தான் கிடைக்கும். நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 0% என்றால் நெட்வர்க்கே கிடைக்காது, .006% என்றால்?

விமானம் விபத்துக்குன்டானால் முக்கிய தடையமாக கருதுவது அதன் கருப்புப்பெட்டி. ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டி இருக்கும். கருப்புப்பெட்டியானது 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அவ்வாறு இருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.
இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அழித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று காட்டிய ஊடகங்கள், அவர் அழித்த பேட்டியை காண்பித்ததா?. அல்-ஜஸிரா ஊடகத்தை தவிர.
ஒசாமா பின்லேடன் மீது அநியாயமாக பழியைப்போட்டது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை.

இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?
Source from: http://www.ibujdesign.com
http://kadayanalluraqsa.com/

Unknown said...

// ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை.//

அணானி ஆப்கானிஸ்தான்ல ஏது பெட்ரோல்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ சுவனப்பிரியன்,
தங்கள் கணிப்பு சரியே. மும்பை பயங்கரவாத சமயத்தில் கூட, ஒரு யூத குடியிருப்பில் நடந்த சண்டையில், அங்கே இருந்த அனைவரும் சுட்டுக்கொள்ளப்பட்டுவிட ஒரேயொரு பணிப்பெண்ணும் அங்கே சுடப்பட்ட யூத ராபியின் குழந்தையும் மட்டுமே மிஞ்சுவர். நினைவிருக்கிறதா..? அந்த பணிப்பெண் உடனேயே இஸ்ரேலுக்கு அனுப்பபடுவர் குழந்தையுடன், ஆனால் அவர் அதற்குப்பின்னர் என்ன ஆனார் என்பது மர்மம்..! அவர்க்குத்தான் தெரியும் என்ன நடந்தது என்று..! அவர் ஒரு ஐ விட்னஸ்..! எந்த கோர்டிலாவது விசாரித்தார்களா..?

அப்புறம் எகிப்து இன்று... காசா நுழைவு வாயிலை திறக்கபபோவதாய் அறிவித்திருக்கிறது. இஸ்ரேலுக்கு பேரிடி..!

suvanappiriyan said...

சகோ ஆஷிக்!

சரியாக சொன்னீர்கள். ஒரு குண்டு வெடிப்பை நடத்தி அதை முஸ்லிம்கள் செய்ததாக நம்ப வைத்து அதே முஸ்லிம்களை கைது செய்யும் உத்தி என்பது மொசாதின் வேலை. இந்தியாவில் நடக்கும் அனேக குண்டு வெடிப்புகளைப் பார்த்தே நாம் இதனை விளங்கிக் கொள்ளலாம்.

பம்பாய் தாஜ் ஹோட்டல் துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் நினைத்தது போல் முஸ்லிம்கள் மேல் பழி விழுந்தது. அதே சாக்கில் ஹேமந்த் கர்கரேயையும் போட்டுத் தள்ளியாகி விட்டது. அவரது மனைவி மோடி கொடுத்த பண முடிப்பை திருப்பி அளித்த சம்பவமே கொலையாளிகள் யார் என்பதை நமக்கு தெளிவு படுத்தும்.

வறுமையில் உழலும் ஒரு கிராமத்து பாகிஸ்தானியைப் பிடித்து 'உனக்கு ஐந்து லட்ச ரூபாய் தருகிறேன். உன் குடும்பத்தையும் நாங்கள் காப்பாற்றுகிறோம், உன்னை கைது செய்தால் தண்டனை அளிக்காமலும் காப்பாற்றுகிறோம்' என்று மூளை சலவை மொசாத் ஏஜண்டுகளால் செய்யப்படுகிறது. ஒரு உண்மையான முஸ்லிம் அந்த பணத்தை ஏஜண்டகளின் முகத்திலேயே தூக்கி எறிய வேண்டும். மார்க்க அறிவு இல்லாத இத்தகைய இளைஞர்கள் போலி முல்லாக்களால் ஏமாற்றப்பட்டு தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவை எல்லாம் ஒரு பாகிஸ்தானி என்னிடம் சொன்னவைகள்.

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மொசாத், சி.ஐ.ஏ வின் திட்டங்களை செயல்படுத்த சிறந்த களங்களாக உள்ளது. பின்லாடன் ராணுவ முகாம்களுக்கு அருகிலேயே சகல வசதிகளோடு தங்கியிருந்தது தெரிய வந்தும் பாகிஸ்தானின் உறவை விட அமெரிக்காவுக்கு மனது இல்லை. காரணம் சதி செயல்களை செயல்படுத்த பாகிஸ்தானின் உதவி அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. சரிந்திருந்த ஒபாமாவின் செல்வாக்கு உசாமாவின் கொலையால் அதிகரித்திருக்கிறது. இவை எல்லாம் நமக்கு பல உண்மைகளை விளக்கும்.

காரணம் சதி செயல்களை செயல்படுத்த பாகிஸ்தானின் உதவி அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. சரிந்திருந்த ஒபாமாவின் செல்வாக்கு உசாமாவின் கொலையால் அதிகரித்திருக்கிறது. இவை எல்லாம் நமக்கு பல உண்மைகளை விளக்கும்.

மொசாத் ஒர காரியத்தை செயல்படுத்த பல வருடங்கள் கூட காத்திருந்தது. அது பற்றிய பதிவுகளை பிறகு வெளியிடுகிறேன்.

suvanappiriyan said...

ஜெய் சங்கர்!

//அணானி ஆப்கானிஸ்தான்ல ஏது பெட்ரோல்//

இன்னும் சில ஆண்டுகளில் பெட்ரோல் திட்டுகள் அரபு நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் பக்கம் சென்று விடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. அடுத்து எரிவாயுவும் நிறைய கிடைக்கிறது. மிலிட்டரி கண்ட்ரோலில் உள்ள இடங்களில் ஒபியம் பயிரிடப்பட்டு மில்லியன் கணக்கில் லாபத்தை சம்பாதிக்கிறது அமெரிக்க ராணுவம். போதைப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ராணுவமே கடத்துகிறது. ஒரு லாபமும் இல்லை என்றால் அமெரிக்கா இதுவரை 3000 பேருக்கு மேல் இழந்தும் தனது படையை ஏன் வாபஸ் வாங்கவில்லை? உசாமா இறந்து விட்டார். இனி கடையை காலி செய்ய வேண்டியதுதானே! செய்ய மாட்டார்கள். ஏனெனில் போதைப் பொருள் மூலமாக பல மில்லியன்களை சம்பாதிக்கிறது ராணுவம். அது முடிந்தாலும் பூமிக்கடியில் உள்ள கனிம வளங்கள் அமெரிக்கர்களை அவ்வளவு இலேசில் வெளியேற்றாது.

suvanappiriyan said...

//இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?
இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?//

நீண்ட பின்னூட்டத்தை அளித்த அனானிக்கு நன்றிகள்!