Followers

Tuesday, May 08, 2012

காஷ்மீர் மாநிலத்திலிருந்து பெண் ஐஏஎஸ்!

முக்கிய அறிவிப்பு:

இன்று கழுகு தளத்தில் சென்று இஸ்லாமியர்கள் பெயரில் மைனஸ் கள்ள ஓட்டுக்களைப் போட்டு அந்த பதிவை தமிழ்மண மகுடத்திலிருந்து இறக்கி எனது பதிவில் வந்து அதே போல் கள்ள பிளஸ் ஓட்டுக்களைப் போட்டு மகுடத்தில் ஏற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் மற்ற பதிவர்களும் வாசகர்களும் இஸ்லாமிய பதிவுகளின் மீது காழ்ப்புணர்வு கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி விளக்கி தமிழ் மணத்துக்கும் கடிதம் எழுதியுள்ளேன். ஒரு பதிவு வாசகர்களை அதிகம் சென்றடைவது அந்த பதிவின் நம்பகத் தன்மையினாலும் எழுதுபவரின் எழுத்து திறமையினாலுமே ஆகும். இது போன்ற குறுக்கு வழிகளை நானோ மற்ற எந்த இஸ்லாமிய பதிவர்களோ இதுவரை செய்ததில்லை: இனியும் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

புரிதலுக்கு நன்றி!






காஷ்மீர் மாநிலத்தின் ஈஸ் அஸ்கர் என்ற 25 வயது இள மங்கை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு

'அகில இந்திய அளவில் நடக்கும் ஒரு தேர்வில் வெற்றி பெறுவது என்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்கு தெரியும். அதுவும் கடந்த 20 வருடங்களாக முழு காஷ்மீரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெண் என்ற வகையில் பாதுகாப்பும் முக்கியததுவம் பெறுகிறது. எனது பெற்றோரும் எனது உறவினர்களும் நான் இந்த நிலையை அடைய மிகுந்த உறு துணையாக இருந்துள்ளனர்.” என்றார்.

கேள்வி: காஷ்மீரைப் பொறுத்தவரை மேல் படிப்புக்கு செல்வது என்பது மிகுந்த சிரமமான ஒன்று என்று சொல்லப்ட்டு வருகையில் உங்களின் இந்த முன்னேற்றம் எதைக் காட்டுகிறது?

பதில்: “நான் மட்டும் அல்ல. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் காஷ்மீருக்கும் இந்திய நாட்டுக்கும் திறம்பட பணியாற்றவே விரும்புகின்றனர். லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஸ்ரீநகர் என்று அனைத்து பிரதேச மக்களும் தற்போது படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கொடுத்தால் கண்டிப்பாக தங்களின் திறமையினால் முன்னுக்கு வருவார்கள்.”

காஷ்மீரில் நிலை கொண்டுள்ள நமது ராணுவம் எவ்வளவு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பதை ஒரு ராணுவ வீரரே தரும் ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பார்ப்போம்.

-----------------------------------------------------------

இந்திய அரசு அந்த மக்களின் கசப்புகளைப் போக்கி சன்னம் சன்னமாக ராணுவத்தையும் திரும்ப அழைத்து அந்த மக்களின் அன்பைப் பெற முயற்ச்சிக்க வேண்டும். எனது கம்பெனிக்கு அருகில் வேலை செய்து வரும் காஷ்மீரியோடு நிறைய பழகியிருக்கிறேன். பாகிஸ்தான் மேல் அவனுக்கு பயங்கர கோபம். தனது நாடு இந்த நிலைககு சென்றதற்கு முழு காரணம் பாகிஸதானியர்களே என்பான். இந்தியாவின் மீது எப்போதும் ஒரு மரியாதையை அவனது பேச்சில் பார்க்க முடியும். ஆனால் இந்திய ராணுவத்தின் மீது கடுமையான கோபத்தை அவனது பேச்சில் பார்த்திருக்கிறேன். பல நேரங்களில் நமது ராணுவமும் தங்களது உயர் அதிகாரிகளை குஷி படுத்தவும், பதவி உயர்வுக்காகவும் எதையும் செய்ய துணிந்து விடுகின்றனர். உதாரணத்திற்கு அப்சல் குருவின் தற்போதய வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்.

தற்போது தூக்கு கயிறுக்காக காத்திருக்கும் அப்சல் குருவை பகடைக் காயாக பயன் படுத்தி நாடாளுமன்ற தாக்குதலுக்கு பின்னால் நின்றது “STF” எனும் (SPECIAL TASK FORCE) காஷ்மீர் சிறப்புக் காவல் படைதான். அப்சல் குருவை இந்த பணிக்காக பயன்படுத்திக் கொண்ட சிறப்புக் காவல்படை அதிகாரியின் பெயர் திராவிந்தர் சிங். இவர் காஷ்மீர் சிறப்புக் காவல் பிரிவில் டி.எஸ்.பி என்ற துணை காவல் துறை கண்காணிப்பாளர் பொறுப்பில் சம்பவம் நடந்தபோது இருந்தவர். தற்போது இந்த சிறப்புக் காவல் பிரிவுக்கு (SPECIAL OPERATION GROUP) SOG என்று மாற்றியுள்ளார்கள்.

கஷ்மீரில் இயங்கும் இந்த எஸ்.டி.எஃப் என்ற சிறப்புக் காவல் படையை (CRACK COMMANDO FORCE) என்றே எழுத்தாளர்கள் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு இவர்களின் அக்கிரமம் கஷ்மீரில் கொடி கட்டிப் பறக்கும். தாங்கள் நடத்த நினைக்கும் எந்த காரியத்துக்கும் முஸ்லிம்களையே கருவிகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

டி.எஸ.பி திராவிந்தர் சிங் முஹம்மது என்பவரை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் சென்றிட வேண்டும் என அப்ஸலை கட்டாயப் படுத்தியுள்ளார். இந்த முஹம்மது என்பவர் நமது நாடாளு மன்ற தாக்குதலின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர். இதே டி.எஸ்.பி திராவிநதர் சிங்தான் முஹம்மதுக்கு ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தந்திட வெண்டும் என்று கட்டாயப் படுத்தியுள்ளார். அத்தோடு நிற்கவில்லை முஹம்மதுக்கு ஒரு கார் வாங்கித் தந்திடவும் அப்ஸலைப் பணித்துள்ளார்.

அப்ஸல் எழுதிய கடிதம் ஒன்றில் தனக்கும் எஸ்டிஎஃப் என்ற நாடாளு மன்றத் தாக்குதலின் நாயகர்களுக்கும் எவ்வளவு நெருக்கமான தொடர்புகள் இருந்தன என்பதை நிரூபிக்க ஓர் மறுக்க முடியாத ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றார். அதுதான் அவரது செல்போன். 'என்னுடைய செல் போனை எடுத்துப் பாருங்கள். நாடாளு மன்றத் தாக்குதலுக்கு முன் நான் எத்தனை முறை காஷ்மீர் சிறப்புக் காவல் படையினரிடம் பேசி இருக்கின்றேன் என்பது தெளிவாகத் தெரிந்திட வரும். அலைபேசி எண்களை நீதி மன்றம் கவனமாகக் கவனிக்குமானால் அதில் எஸடிஎஃப் என்ற கஷ்மீர் சிறப்புக் காவல்படையின் எண்கள் தெரிய வரும். எஸ்டிஎஃப் என்ற கஷ்மீர் சிறப்புக் காவல்படை என்னை இந்த ஈனச் செயலில் பலிகடாவாக்கி விட்டது. இந்த மொத்த கிரிமினல் நடவடிக்கையும் சிறப்புக் காவல் படையினர் மற்றும் சிலரால் திட்டமிட்டு இயக்கப்பட்டுள்ளது. சிறப்புக் காவல்படையினரைத் தவிர மேலும் சிலர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சிறப்பக் காவல் படையினருக்கு இதில் நிச்சயமாக முக்கியப் பங்குண்டு. நாடாளு மன்ற தாக்குதலில் நான் தாராளமாக ஈடுபடலாம். வழக்கில் எனது பங்கை பலவீனப்படுத்தி விடுவோம். அதனால் நான் சில நாட்களுக்குப் பிறகு வெளியே வந்து விடலாம் என எனக்கு உறுதி தந்தார்கள். மறுத்தால் எனது குடும்பத்தைப் பூண்டோடு அழித்து விடுவோம் என்றார்கள்.'

ஆதாரம்: “afzals letters as preserved and published by society for the protection of detainees and prisoners righ” milli gazzete 1-15nov 2006.

'நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதி மன்றத்தில் அப்ஸல் தனது தரப்பு நியாயங்களையும் வாதங்களையும் எடுத்து வைத்திட சரியான வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை. மேலும் தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக எந்தவித நேரடி சாட்சியமும் இல்லை. எனவே முஹம்மது அப்ஸலுடைய வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று (ராம்விலாஸ் பஸ்வான் தலைவராக உள்ள) லோக் ஜன சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

(தி ஹிந்து 23-11-2011)

நமது நாட்டு பாராளுமன்றத்தை தனது சொந்த முயற்சியில் சில கோரிக்கைகளுக்காக வேண்டி அப்சல் குரு தாக்கியிருந்தால் தூக்கில் தொங்க விட தகுதியானவனே! இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நடந்த உண்மை என்ன?

சில நாட்கள் பாகிஸ்தான் கள்ளத்தனமாக சென்று வந்ததுதான் அப்சல் செய்த குற்றம். இதனால் பிடி பட்டு தண்டனை அனுபவிக்கிறார். இவரை கைது செய்த சாக்கை வைத்து நமது பொலீசாரும் ராணுவமும் ஒரு இந்திய பிரஜயிடம் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைத்தான் நர்ம் மேலே பார்த்தோம்.

தங்களின் பதவி உயர்வுக்காகவும், அப்போதய ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளின் நிர்பந்தத்திற்க்காகவும் இப்படி ஒரு ஈனச் செயலை தனது குடிமகனின் மேல் ஒரு அரசு செயல்படுத்துமானால் அந்த அரசு மக்கள் அரசாகுமா! கேவலம் திரும்பவும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அற்ப நோக்கத்திற்காக ஒருவனின் வாழ்வையே சூன்யமாக்கி விட்டார்களே! இதற்கு காரணமானவர்களின் வாழ்வு சிறக்குமா? அஃப்ஸல் குரு வைக்கும் வாதத்தில் உண்மையிருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலை குனிய வேண்டிய நிகழ்வு இது.

--------------------------------------------------

இந்திய ராணுவத்தின் சில நடவடிக்கைகள்:

காஷ்மீரில் பரவலாக பலமுறை பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் ஒன்றான சித்திசிங்புரா படுகொலைகளுக்குப் பிறகான கொலைகள். அது உலக அளவிலான பரபரப்பான விவகாரமாக உருவெடுத்தது. அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் புது தில்லிக்கு வருவதற்கு சற்று முன்பு ஏப்ரல் 20, 2000 இரவில் சித்திசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் இந்திய ராணுவ சீருடை அணிந்த ‘அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்களால்’ கொல்லப்பட்டனர். (இந்திய பாதுகாப்புப் படைகள்தான் படுகொலைக்குக் காரணம் என்று காஷ்மீரில் பலர் சந்தேகப்பட்டார்கள்). ஐந்து நாட்களுக்குப் பிறகு பத்ரிபால் என்ற கிராமத்துக்கு வெளியில் எஸ்ஓஜியும் ராணுவத்தின் கிளர்ச்சி எதிர்ப்புப் பிரிவான 7வது ராஷ்டிரிய ரைபிள்சும் கூட்டு நடவடிக்கையில் 5 பேரை கொன்றார்கள். அந்த ஆட்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த வெளிநாட்டுத் தீவிரவாதிகள் என்றும் அவர்கள்தான் சித்திசிங்புராவில் சீக்கியர்களைக் கொன்றவர்கள் என்றும் அடுத்த நாள் காலையில் அறிவித்தார்கள். உடல்கள் எரிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இருந்தன. (எரிக்கப்படாத) அவர்களது ராணுவ சீருடைகளுக்கு உள்ளே, சாதாரண சிவிலியன் உடைகள் இருந்தன. கடைசியில் அவர்கள் அனைவரும் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள் என்றும், சுற்றி வளைக்கப்பட்டு இரக்கமில்லாமல் கொல்லப்பட்டவர்கள் என்றும் தெரிய வந்தது.

இன்னும் சிலவும் உண்டு: அக்டோபர் 23, 2003 அன்று ஸ்ரீநகரின் அல் – சபா நாளிதழ், ஒரு ராணுவ முகாமைத் தாக்க முயற்சித்தபோது தங்களால் கொல்லப்பட்ட ‘பாகிஸ்தானி போராளி’ என்று ராஷ்டிரிய ரைபிள்சினரால் சொல்லப்பட்டவரின் படத்தை வெளியிட்டிருந்தது. குப்வாராவைச் சேர்ந்த பேக்கரி தொழில் செய்யும் வாலிகான், படத்தைப் பார்த்து விட்டு அது இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜிப்சி வண்டியில் வந்த படை வீரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தன் மகன் பாரூக் அகமது கான் என்று அடையாளம் கண்டு கொண்டார். ஒரு ஆண்டுக்குப் பிறகு, ஒரு வழியாக, அவரது உடல் தோண்டி வெளியில் எடுக்கப்பட்டது.

ஏப்ரல் 20, 2004 அன்று, லோலாப் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டிருந்த 18வது ராஷ்டிரீய ரைபிள்ஸ் படையினர், ஒரு கடும் சண்டையில் நான்கு வெளிநாட்டு போராளிகளைக் கொன்றதாக தெரிவித்தார்கள். அந்த நான்கு பேரும் ஜம்முவிலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்டு குப்வாராவுக்கு ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட சாதாரண தொழிலாளர்கள் என்று பின்னர் தெரிய வந்தது. அனாமேதய கடிதம் ஒன்று தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் குப்வாராவுக்குப் போய் உடல்களை வெளியில் எடுக்க ஏற்பாடு செய்தார்கள்.

நவம்பர் 9, 2004 அன்று ராணுவம் ஜம்முவின் நக்ரோதாவில் 47 சரணடைந்த ‘போராளிகளை’ பத்திரிகையாளர்களுக்கு முன் காட்டியது. XVI படை அணியின் ஜெனரல் கமாண்டிங் ஆபிசரும் ஜம்மு காஷ்மீர் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீசும் உடன் இருந்தனர். அவர்களில் 27 பேர் வேலையில்லாத ஆட்கள் என்றும் போலி பெயர்களும் போலி அடையாளங்களும் கொடுக்கப்பட்டு, இந்த நாடகத்துக்கு ஒத்துழைத்தால் அரசு வேலை கிடைக்கும் என்று ஆசை காட்டப்பட்டவர்கள் என்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை பின்னர் கண்டறிந்தது.

காஷ்மீரில் நமது ராணுவம் நடந்து கொள்ளும் விதம் பற்றி மேலும் அறிய

http://suvanappiriyan.blogspot.com/2009/01/blog-post_15.htm
http://suvanappiriyan.blogspot.com/2008/12/blog-post_14.html
http://www.vinavu.com/2011/10/28/afzal-guru/

மேற்கண்ட இடுகைகளுக்குச் செல்லுங்கள்.

22 comments:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

கஷ்மீரின் உண்மை பக்கங்களை வெளியிட்டமைக்கு நன்றி ...

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 to 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள் . அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

அதிரை சித்திக் said...

தற்போதைய உலக அரசியல் ..நய வஞ்சக தன்மை கொண்டதாக உள்ளது

ஒரு நாட்டினை சீர் குலைக்க ..எந்த பாவமும் அறியாத மக்களை

கொன்று குவிப்பது இனவெறி கொண்டு அழிப்பது எல்லாம் ..,உலகில்

சாதாரணமாக நடக்கிறது .., தனி நாடு கேட்பது..., கேட்க வைப்பது

இவை இரண்டுமே மக்களை கொத்து கொத்தாக அளிக்க மட்டுமே

உதவும். இனவாதம் என்றுமே மனித இனத்தை மேம்படுத்தாது ..,

பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் ,அரசு ..,,இந்தியா மீது கொண்டுள்ள வன்மம்

நேரடியாக மோதாமல் காஸ்மீர் மாநில மக்கள் மீது பிரிவினை

வாதத்தை புகுத்தியமை யால் இந்திய ராணுவத்தின் அடக்குமுறைக்கு

அம்மாநில மக்கள் ஆளாக நேர்ந்தது ..அதன் காரண மாக அங்குள்ள

இளைஞர்கள் இந்தியா மீதே வெறுப்புற செய்து விட்டது

காஷ்மீரத்து இளம் பெண்மணி I .A .S ..,தேர்வில் வெற்றி பெற்றதும்

இந்தியா மண்ணிற்கு சேவை செய்வேன் என பேட்டிஅளித்த செய்தி

என் காதில் தேனாய் பாய்ந்தது ..,காஸ்மீர் மக்களின் உணர்வு இந்தியன்

என்ற உணர்வுதான் என்பதை பாசிச உணவுள்ளவர்கள் புரிந்து கொள்ள

வேண்டும் ..,இது போன்ற நிகழ்வுகள் நடப்பதை பாகிஸ்தானோ

ஹிந்து இன வெறி புடிதவர்களோ விரும்ப மாட்டார்கள் ..,

இந்தியா முன்னேற வேண்டும் என்ற இந்திய முஸ்லிம்களும்

நல்லெண்ணம் கொண்ட இந்தியா மக்களும் வரவேற்பார்கள் ..,

சங்கு said...

சுவனபிரியன்

குறைந்த நேரத்தில் மகுடத்தை எட்டி விட்டீர்கள் .... வாழ்த்துக்கள் ...

இந்த பதிவின் ஓட்டுக்களில் பெரும் பங்கு எடக்கு மடக்கு தள நிர்வாகிகளுக்கும் உண்டு ..[ நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன ...]

புது பிரச்சனை ஆரம்பம் .....

//தீராத மனச்சுமை இறக்கி வைக்கிறேன்....
எடக்கு மடக்கு சில நாட்களாக பதிவு போடவில்லை அதன் காரணம் தொழில்ரீதியாக நண்பர்கள் பல இடங்களுக்கு
செல்ல வேண்டியிருந்ததாலும், கடுமையான பணிச்சுமை காரணமாக பதிவிட முடியவில்லை மீண்டும் ஒரு பதிவிட காரணம் பதிவுலகில் நிலவி வந்த
கடுமையான மதச்சண்டை. //


ஒட்டு வேட்டை ஆரம்பம் .........

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவிற்கு நம் பெயரில் மாற்றம் செய்து கள்ள வோட் குத்தும் ஆள் (ஆட்கள்) வோட் போட்டிருக்கின்றனர்.

இதுவரை பதிவாகியுள்ள வோட்களில்

rabbanii carbonffriend mustaquee1515@gmail.com suvanapppiriyan PeerMhdd AMINAA29 askabt.islamm@gmail.com hajamydheeen gulaam nayagan_12 peermohamed.mm@gmail.com mohaaashik hussainaamma abdulhakkimm

இவையாவும் கள்ள வோட்களே. ஆக இதுவரை பதிவாகியுள்ள 18 பிளஸ் வோட்களில் 14 கள்ள வோட்கலே. இம்மாதிரியான அங்கிகாரத்தால் ஒரு பயனும் இல்லை.

மகுடம் வோட் etc குறித்தெல்லாம் நீங்கள் சட்டை செய்யாதவர் என்று போதிலும் தற்போது இதனை பார்த்ததனால் சொல்கின்றேன். இதுகுறித்து தமிழ்மனத்திடம் கூறி அந்த வோட்களை நீக்க சொல்லவும்.

வஸ்ஸலாம்..

Aashiq Ahamed said...

அதுபோல, நான் நினைப்பது சரியென்றால், இது குறித்து ஒரு முஸ்லிம்கள் எதிர்ப்பு பதிவு வரலாம். இந்த பதிவில் விழுந்துள்ள பிளஸ் வோட்களை சுட்டி காட்டி காமெடி/குழப்பம் பண்ண முயற்சிக்கலாம். ஆகையால் சுவனப்பிரியன் அண்ணன், உடனடியாக இது குறித்து தமிழ்மனத்திடம் கூறி நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள். இன்ஷா அல்லாஹ்

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//rabbanii carbonffriend mustaquee1515@gmail.com suvanapppiriyan PeerMhdd AMINAA29 askabt.islamm@gmail.com hajamydheeen gulaam nayagan_12 peermohamed.mm@gmail.com mohaaashik hussainaamma abdulhakkimm //

இந்த கள்ள ஓட்டு கும்பலின் நோக்கம் மேலும் மேலும் தமிழ்மண நிர்வாகத்துக்கு சிக்கலை கொடுத்து பிரச்னையை அதிகப்படுத்த வேண்டும் என்பதே! எந்த ஐடிக்கள் கள்ள ஓட்டுகள் என்பது நமக்கே தெரியும் போது தமிழ்மண நிர்வாகமும் இதனை கவனிக்கும். தனியாக நானும் நிர்வாகத்துக்கு எழுதுகிறேன். இந்த கள்ள ஐடிக்களை தமிழ் மண நிர்வாகம் நீக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

கடுகு தளம் 21 வாக்கு பெற்று மகுடத்தில் இருக்கும் போது நான் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 17 வாக்குகளை மட்டுமே பெற்ற எனது பதிவு எவ்வாறு மகுடத்துக்கு வந்தது? இதுவும் குழப்பமாக இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

//கடுகு தளம் 21 வாக்கு பெற்று மகுடத்தில் இருக்கும் போது நான் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 17 வாக்குகளை மட்டுமே பெற்ற எனது பதிவு எவ்வாறு மகுடத்துக்கு வந்தது? இதுவும் குழப்பமாக இருக்கிறது.//

மகுடத்தில் இருக்கும் பதிவு அதிக மைனஸ் வாங்கினால் இறங்கி விடும் என்று நினைக்கின்றேன். நம் பெயரில் மாற்றம் செய்து கள்ள வோட் குத்தும் அந்த ஆள்/ஆட்கள் hussainaamma, suvanapppiriyan, abdulhakkimm, peermohamed.mm@gmail.com, mohaaashik, hajamydheeen, AMINAA29 இந்த கள்ள முகவரிகளில் கழுகு பதிவிற்கு மைனஸ் குத்தி அவர்களை கீழிறக்கிவிட்டு தற்போது உங்கள் பதிவை மகுடத்தில் ஏற்றி இருக்கின்றார்கள்.

நீங்கள் இது குறித்து விரைவாக தமிழ்மணத்திற்கு எழுதவும். மேலும் இந்த பதிவின் தொடக்கத்தில் இதுகுறித்து முக்கிய செய்தி போல தெரியப்படுத்தி விடவும்...

suvanappiriyan said...

திரு சங்கு!

//சுவனபிரியன்

குறைந்த நேரத்தில் மகுடத்தை எட்டி விட்டீர்கள் .... வாழ்த்துக்கள் ...//

வாழ்த்துக்களில் கள்ள ஓட்டு மன்னர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் இதற்காக நிறைய உழைக்கிறார்கள். :-)

suvanappiriyan said...

சலாம் சகோ அதிரை சித்திக்!

//காஷ்மீரத்து இளம் பெண்மணி I .A .S ..,தேர்வில் வெற்றி பெற்றதும்

இந்தியா மண்ணிற்கு சேவை செய்வேன் என பேட்டிஅளித்த செய்தி

என் காதில் தேனாய் பாய்ந்தது ..,//

உங்களைப் போலவே எனக்கும் அந்த செய்தி தேனாக இனித்தது. இத்தனை கொடுமைகளையும் நமது ராணுவமும் ஆட்சியாளர்களும் செய்தும் இன்றும் நமது நாட்டுக்கு விசுவாசமாக இருந்து வரும் காஷ்மீரிகள் உண்மையிலேயே போற்றுதலுக்குரியவர்கள். அவர்களை திறம்பட பயன்படுத்திக் கொள்வது நமது ஆட்சியாளர்களின் கைகளில்தான் இருக்கிறது.

suvanappiriyan said...

சகோ திருவாளப்புத்தூர் முஸ்லிம்!

//கஷ்மீரின் உண்மை பக்கங்களை வெளியிட்டமைக்கு நன்றி ...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

முட்டாப்பையன் said...

சங்கு said...

சுவனபிரியன்

குறைந்த நேரத்தில் மகுடத்தை எட்டி விட்டீர்கள் .... வாழ்த்துக்கள் ...

இந்த பதிவின் ஓட்டுக்களில் பெரும் பங்கு எடக்கு மடக்கு தள நிர்வாகிகளுக்கும் உண்டு ..[ நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன ...]

புது பிரச்சனை ஆரம்பம் .....

//தீராத மனச்சுமை இறக்கி வைக்கிறேன்....
எடக்கு மடக்கு சில நாட்களாக பதிவு போடவில்லை அதன் காரணம் தொழில்ரீதியாக நண்பர்கள் பல இடங்களுக்கு
செல்ல வேண்டியிருந்ததாலும், கடுமையான பணிச்சுமை காரணமாக பதிவிட முடியவில்லை மீண்டும் ஒரு பதிவிட காரணம் பதிவுலகில் நிலவி வந்த
கடுமையான மதச்சண்டை. //


ஒட்டு வேட்டை ஆரம்பம் .........

12:50 AM/////////

ஹலோ சங்கு.நீர் எண்ணத்ததான் கிழிக்கீரிரோ?
நாங்க எங்க பதிவுக்கே வோட போடுரதில்லை.
இதை எத்தனை வாட்டிதான் சொல்லுறது?
இப்படி போட முடிந்தால் நாங்கள் மகுடதிர்க்கு வர வேண்டுமே.?
ஏன் வருவதில்லை?

இதுவரை எங்க பதிவை பார்த்ததில்லை போல.
போய் நல்ல கண் டகுட்டர் பார்த்து எழுத்து புரியவில்லை
அப்படின்னு சொல்லி அப்படியே உங்க மூளையையும்
வேற டாக்டர் இடம் காட்டவும்.

வந்துட்டாரு கமெண்ட் போட.
இதை எந்த தனம் என்று நீயே முடிவு பண்ணிக்கவும்.

மேலும்
இன்றைய எங்க பதிவில் எங்க கமெண்ட் உனக்காக.

முட்டாப்பையன் said...

Blogger Ramani said...

tha.ma 2//////

நன்றி ரமணி.
ஆனால் நாங்கள் யாருக்கும் வோட் போடுவதில்லை.மொய்க்கு மொய்.
நஹி.

ஹி.ஹி.
May 9, 2012


ஏதும் புரியலைன்னா "அங்க" உக்கார்ந்து யோசிக்கவும்.

அது என்னையா எல்லாரும் நாங்கதான் எடக்கு மடக்கு டீம்னு
சொல்லிக்கிட்டு திரிஎறீங்க?

தடி எடுத்த எல்லாரும் தண்டால்காரன் ஆக முடியாது.

சங்கு உனக்கு மட்டும் எப்படியா செய்தி வந்துச்சி?
பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய
இன்டர்போல் ஆபீபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிப்சர் ஆ இருக்கீங்க?

Anonymous said...

தங்கமணி says:
May 7, 2012 at 4:54 pm

//மதுரை ஆதினம் நிருபர்களிடம் பேசும்போது, ஒரு சாதிச்சர்டிபிகேட்டை எடுத்துக்காட்டினார். இதுதான் நித்தியின் சாதிச்சர்டிபிகேட். திருவண்ணாமலை ராஜசேகரன் ஒரு சைவ் வேளாளர் என்பதாகும். //
அப்படிப்பட்ட மதுரை ஆதீனத்தை ஏன் இவ்வளவு காலம் திகவினரும் திமுகவினரும் ஆதரித்து வந்தார்கள்?

Kavya says:
May 8, 2012 at 5:38 am

தி க, தி மு க, பெரியார் இவர்களெல்லாம் பிறப்பதற்கு/உருவாவதற்கு முன்பே மதுரை ஆதினம் சம்பந்தரால் தொடக்கப்பட்டு விட்டது. அவருக்குப்பின் சைவப்பிள்ளைகளால் நடாத்தப்பட்டு வருகிறது. இப்போது இருக்கும் ம்டாதிபதி 249வது பட்டம். என்றுமே சைவைப்பிள்ளைகள்தான் அம்மடாதிபதிகள். இப்படியிருக்க, திக, திமுகவினர் மேல் எப்படி ஆதினங்களில் சாதீயத்தைப்போட முடியும்? அப்படியே அவர்கள் எதிர்த்தால், நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை? அவர்கள் எதிர்த்தால், நீங்கள் என்ன சொல்வீர்கள் தெரியுமா? நாத்திகர்களுக்கு இங்கென்ன வேலை? இவர்கள் ஏன் எங்கள் மதத்தில் தலையிடுகிறார்கள்? இசுலாமியர்களிடம் வாலாட்டுவார்களா? கிருத்துவர்களிடம் வாலாட்டுவார்களா? என்பீர்கள். சிதம்பரம் பூஜாரிகள் விசயத்தில் அப்படித்தானே கேட்டீர்கள் ?
போகட்டும். அரசியல்வாதிகள் சாதிகளைப்பிடித்துக்கொண்டிருப்பது தங்களின் தற்கால நலத்திற்காக. ஒரு குறிப்பிட்ட சாதி இன்று எண்ணிக்கையில் குறைவாக இருந்து வாக்கு வங்கியாக இல்லாமல் இருக்க, இன்னொன்று எண்ணிக்கை மிகக வாக்குவங்கியாக இருக்கும்போது அரசியல்வாதி பின்னதைத் தூக்கிக் கொண்டாடி தனக்குவேண்டியதைப்பெற்றுக்கொள்வான். முன்னது எண்ணிக்கையில் கூடும்போது காட்சிமாறும். எனவே அரசியல்வாதியின் சாதிப்பற்றும் காதலும் சந்தர்ப்பத்துக்குத் தக்க. அது நிரந்தரமன்று.

ஆன்மிகவாதியின் சாதிகள் நிரந்தரமானவை. ஒரு குறிப்பிட்ட சாதியை அவன் நிரந்ந்தரமாகவே தூக்கி வைத்து, தலித்துக்களை நிரந்தரமாக கீழே தள்ளிவைத்துவிட்டான்.
எனவேதான் ஆதீனங்கள் சைவப்பிள்ளையையும் காஞ்சிமடம் தமிழ் அல்லது தெலுங்கு பார்ப்ப்னரையும் மட்டுமே மடாதிபதியாக்கும். இவர்களில் சாதியொழுக்கத்தை திகவால், தி மு கவால், பெரியாரால் மாற்றிவிடலாமென்பது கற்பனையில் கூட நடவாது..
எனவே சைவப்பிள்ளை திருவண்ணாமலை ராஜசேகரன் (நித்தி) மதுரை ஆதினமாகவும், வேலூருக்குப்பக்கத்தில் குக்கிராமத்தில் வாழும் ஒரு தெலுங்கு பிராமணர்குடும்பத்திலிருந்து சின்ன சங்கராச்சாரியாரும் (ஜெயேந்திரரின் ஜூனியர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அரசியல்வாதியைவிட ஆன்மிகவாதி ஆபத்தானவன் எனப்து என் கணிப்பு.

ராவணன் said...

அந்தப் பெண்மணியின் பின்னால் பின் லேடன் கும்பல் இருந்தாலும் இருக்கும்.

குண்டு வைக்கும் கும்பல் யாரையாவது உயர்வாக எழுதினால் அதை யாரும் நம்பமுடியாது.

சங்கு said...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

//முட்டாப்பையன் said...//

பெயரை சொல்லவும், எழுதவும் ரொம்ப நல்லா இருக்கு..

முட்டாப்பய முட்டாப்பய முட்டாப்பய

உங்களுக்கு ஏத்த ஒரு சில வார்த்தைகள்

நீங்க ஒரு மெழுகுவர்த்தி ... தன்னையே அழிச்சு அடுத்ததவங்களுக்கு ஒளியை கொடுக்கிறீங்க ...

முல்லைக்கு தேரையே கொடுத்தானாம் பாரி

ஊரான் ப்ளாக்கை வூட்டி வளர்த்தா தான் ப்ளாக்கு தானா வளரும்ன்னு நினைக்கிறது ..பகல்கனவு மாதிரி


உங்க பெயருக்கு ஏத்த மாதிரி கூட நீங்க யோசிக்க மாடிகிறீங்க


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கொஞ்ச காலம் கள்ள ஒட்டு எந்த பதிவுக்கும் விழல ...[ நீங்க ஓய்வு எடுத்துருபீங்க ] உங்க எடக்கு மடக்கு தளம் பார்த்தேன் ..

தீராத மனச்சுமை இறக்கி வைக்கிறேன்.

அந்த பதிவுல ரொம்ப வுருக்கமா எழுதிருந்தீங்க .... எங்களால பதிவு [கள்ள ஒட்டு ] போட முடியலன்னு

பதிவு இருக்க இடத்துல கள்ள ஒட்டு நு படிங்க .. இன்னும் நல்லா இருக்கும்

எடக்கு மடக்கு சில நாட்களாக பதிவு [கள்ள ஒட்டு ]போடவில்லை அதன் காரணம் தொழில்ரீதியாக நண்பர்கள் பல இடங்களுக்கு
செல்ல வேண்டியிருந்ததாலும், கடுமையான பணிச்சுமை காரணமாக பதிவிட[கள்ள ஒட்டு ] முடியவில்லை மீண்டும் ஒரு பதிவிட[கள்ள ஒட்டு ] காரணம் பதிவுலகில் நிலவி வந்த
கடுமையான மதச்சண்டை.

உங்கள் சீரிய பணிக்கு வாழ்த்துக்கள்

ஆகவே எடக்கு மடக்கு தல நிர்வாகிகளுக்கு நன்றி பல கோடி

..........................................

உங்களுக்கு ஆலோசனை சொல்லட்டா முட்டாப்பய

தமிழ்மண நிர்வாகி கிட்ட SURRENDER ஆயிடுங்க ....

............................

இத வச்சி ஒரு பதிவு போட்டுராத அம்பி .....

.........................

முட்டாப்பையன் said...

@ சங்கு

ப்ளாக் ஒனேர்க்கு இப்படியும் ஒரு பேர் இருக்கா.?
அண்ணே கொஞ்சம் அந்த கொண்டைய மறைங்க.
மேக்கப் சரி இல்ல பாருங்க.

முட்டாப்பையன் said...

@ சங்கு

எங்க கமெண்ட் எங்க பார்த்த?
எங்களை பற்றிய பேச்சு வரும்போதுதான் நாங்கள்
ஆஜராவோம்.புரிஞ்சுதா?

உனக்கு எதுவும் புரியலைன்னா நல்லா பள்ளம் பரிச்சி
அதுல உக்கார்ந்து (*)$*@&%*&*!)(*())(%*&^%&^@
பண்ணவும்.

முட்டாப்பையன் said...

இதற்க்கு மேல் சங்கு என்பவர் எங்கள் தளத்திற்கு அழைக்கபடுகிறார்.

நன்றி.வணக்கம்.

அதிரை சித்திக் said...

அன்புள்ள ராவணன் அவர்களுக்கு ..,

உங்கள் வயது எனக்கு தெரியாது ..

உலக அளவில் முஸ்லிம்கள் என்றாலே

சந்தேக கண்களோடு பார்க்கும் நிலை ..

உங்கள் மனதளவில் இந்த அளவிற்கு முஸ்லிம்கள் மீது

வெறுப்பு வர காரணம் எதுவாகவோ இருக்கட்டும்

அதற்கு அப்பால் தங்களை நோக்கி நீங்க நல்ல இருங்க

என்று யாராவது வாழ்த்தினால் மனம் குளிர்வது தான்

இயற்கை ..அதே போன்று நம் கண் முன்னே நம் தாய்க்கு

பணிவிடை செய்ய மற்றவர் முயலும்போது நாம் அவர்களை

நேசத்துடன் பார்த்து புன்முறுவல் பூத்து நன்றி கூறுவோமே

அதுதான் நம் இயல்பு ..சில சமயங்களில் தாய் நம்மை அடிப்பாள்

அந்த நேரத்தில் நமக்கு கோபம் வரும் ஆனால் அது நிரந்தரமல்ல

தாய்க்கு சுக குறைவு ஏற்ப்பட்டு விட்டால் நாம் பதறிக்கொண்டு போய்

அம்மா என்ன ஆச்சு .., என்போமே அதே போன்று தான் ..காஷ்மீரத்து

இளம் மாணவியின் பேட்டி இந்தியாவிற்கு பணி செய்வேன் என்றது..,

பல பிரச்சனைக்கு காரணம் வசை பாடுவது தான் நல்ல விசயங்களை

பதிவு செய்வோம் நான் கூட சில காலம் தமிழூற்று என்ற மாத இதழுக்கு

ஆசிரியராய் செயல் பட்டு வந்தேன் ..,எத்தனை உள்ளங்கள் என் மீது

பரிவும் பாசமும் காட்டினர் ..எப்படி தமது தாய் மீது பாசம் காட்டுவோர்

நாம் பாசம் காட்டுவோமோ அது போன்று நம் நாட்டிற்கு நல்லது

செய்வேன் என்று சொல்லும் யாராக இருந்தாலும் ஏற்றுகொல்வோம்

ராமாயணத்தில் சொல்லப்பட்ட ராவணன் வில்லன் அல்ல நண்பன்

இராவணன் நல்லதை பகிர்வோம் நல்லதை நுகர்வோம்

suvanappiriyan said...

ஐயையோ....என்ன தருமி சார்! நிலைமை இப்படி போய்க்கிட்டு இருக்குது. :-(

According to Ucoi [the Union of Islamic communities in Italy] about 70,000 Italians converted to Islam.
Why on earth should 70,000 Italians want to convert to Islam. Surely they must be bonkers. Or perhaps as the old saying goes “if you can’t beat them join them”


http://my.telegraph.co.uk/riteman/riteway/16310026/70000-italians-convert-to-islam


நீங்க என்னத்த பதிவு எழுதி எங்களை எல்லாம் எப்போ நாத்திகர்களா மாத்த போறீங்களோ தெரியல....:-)

UNMAIKAL said...

.
.
CLICK >>>>
தமிழ்மணம், பதிவர்கள், வாசகர்கள் கவனத்திற்கு
<<<<< TO READ.
.
.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
இந்த கள்ள ஐடி பிரச்சினையை தமிழ்மணம் தலையிட்டால்தான் தீர்த்துவைக்க முடியும்.உண்மை சாகாது என்றாவது ஒரு நாள் வெளிவரும்.
கள்ள ஐடி பிரமுகர்களே நீங்கள் தொடர்ந்து உங்கள் பணியை செய்துகொண்டே இருங்கள் அப்பதான் உண்மை வெளிவரும்.பலநாள் திருடன்(கள்) ஒருநாள் அகப்பட்டே தீருவார்கள் என்ற மிகவும் பிரபலமான பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.
எடக்குமடக்கு தளத்தில் "தமிழ்சேட்டுபயன்" இவ்வாறு சொல்லிருக்கின்றார்.
/////////// தமிழ்சேட்டுபையன் said...
உங்கள் பெயரில் ஓட்டுபோட்டுவிட்டார்களா? படுபாவிகள் எப்படிப்பட்ட படுபாதக செயல்களை செய்துவிட்டார்கள் இந்த பாவிகள்....
அதுவும் பாருங்கள் குவைத்,துபாய்,சௌதிஅரேபியா,மஸ்கட், சார்ஜா இங்க பிளைட் ஏறிபோய் கமெண்ட் போட்டிருக்கிறார்கள் அவர்களின் ஐபி என் எல்லாம் இந்த நாட்டில் இருந்துதான் வந்துள்ளது!////////////
IP எண்கள் அவருக்கு தெரிந்திருக்கின்றதாம் அதை அவர் வெளிப்படையாக அறிவித்திருக்கலாமே?எவனும் மெனக்கெட்டு மைனஸ் ஓட்டுபோட காசு கொடுத்து இன்டெர்நெட் சென்டர் போகமாட்டானுங்க.தங்களுடைய வீட்டிலிருந்துதான் மைனஸ் ஓட்டுபோடுவானுங்க எனவே நீங்கள் கண்டெடுத்த‌ IP முகவரிகளை screenshot எடுத்துகொடுத்தால் நன்றாக இருக்கும்.அமீரகம் etisalat-ல் வேலை பார்க்கும் எனக்கு தெரிந்தவர்களை வைத்து என்னால் கண்டுபிடிக்கமுடியும்.தருகின்றீர்களா?screen shot-தான் கொடுக்கனும் குருட்டான்போக்குல ஏதாவது IP address கொடுக்ககூடாது ok.

Anonymous said...

Kavya says:
May 10, 2012 at 11:07 am

தமிழ்நாட்டு இந்து மதம் மேற்சாதிகளின் ஆதரவாலும் அரவணைப்பாலுமே பிழைத்தது. இன்றும் அப்படித்தான். தமிழ்நாட்டு இந்துமதம் என்றால் காட்டுத்தெய்வங்களை வழிபடும் கிராமத்து மக்களின் மதத்தை நான் குறிப்பிடவில்லை. பெருந்தெய்வ வழிபாட்டைப்பேணும் வைதீக இந்து மதமும் அவ்வழிபாட்டோடு தங்கள் தெயவங்களை இணைத்துக்கொள்ளும் வழிபாடுகளுமே ஈண்டு குறிக்கப்படுகின்றன.

மேற்சாதிகள் என்றேன். ஏன்? அவர்களின் பணமும் அவர்களின் மரியாதைகளும் மடங்கள், கோயில்களுக்குத் தேவை. இஃதெல்லாம் தவறென்று சொல்லவில்லை. ஆனால் விளைவுகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றுதான் சொல்கிறேன். என்ன விளைவுகள்? சாதிகள் போற்றப்படுகின்றன். தம் மதம் பிழைப்பதற்காக ‘சாதிகளின் அவசியம்’ என்ற் கட்டுரை தந்திரமாக திண்ணையில் போடப்படுகிறது. தம் மதம் பிழைப்பதற்காக மனிதர்கள் சாதிகளுக்குள் க்ட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு அவசியமாகிறது என்று அரைவாதம் வைக்கப்படுகின்றது.

அரைவாதம்? ஆம். ஒரு அரை மதத்துக்கு வேண்டப்படும் சாதிகள். இன்னொன்று மனிதர்களுக்கு வேண்டப்படுவது. மலர்ம்னனனின் கட்டுரையின் உட்பொருள் முத்லரையை மறைத்து அதற்கு மேற்பூச்சாக மற்ற அரையைப் பூசிமெழுகி நம்மை ஏமாற்றுவதாகும்.

ஆதினங்கள் சைவப்பிள்ளைகளுக்காக; காஞ்சி மடம் ஐயர்களுக்காக. மற்ற் மடங்கள் அவர்கள் வாரிசுகளை அவர்கள் ஜாதிகளுக்குள்ளேயே தேடுகின்ற்ன. கீழ்ச்சாதிகள் இப்படி மடம் வளர்ப்பதில்லை. அவர்கள் மதம் அன்றாடங்காய்ச்சி மதம். சேரிகளில் மாரியம்மன் கோயில்களைப்பார்த்திருப்பீர்கள். அஃதுஆண்டுமுழுவதும் மூடித்தான் கிடக்கும். அதன்பூஜாரி அன்றாடம் கூலி வேலை செய்ய தம்மின மக்களோடு காலை சென்று மாலை திரும்புவர்தான். கொடை விழாக்களில் போதுமட்டுமே அக்கோயில் நடை திறந்திருக்கும். அந்நாட்கள் அப் பூஜாரி வேலைக்குச்செல்வதில்லை. மற்ற ஏதாவது விசேசமென்றிருந்தால் மட்டுமே நடை திறக்கப்படும். எனவே பணம் என்பது ஒரு பொருட்டன்று அங்கே. அவர்களுக்குப்புரவலர்கள் தேவையில்லை. பணம் எங்கு ஒரேயடியாகச் சேர்கிறதோ அங்கு மனிதம் அழிகிறது என்றான் ஆங்கிலக்கவி கோல்டுசுமித்து தன் ‘காலியான கிராமம்’ என்ற பாடலில்.’Where wealth accumulates, men decay” Oliver Goldsmith in his poem ‘Deserted Village’

பெருந்தெய்வக்கோயில்கள் படாடோபஅரங்குகளாக‌ மாறும்போது பணம் தேவைப்படுகிறது. கோயில்கள் பெரிதாக ஆக, அதை வைத்து ஆட்சிசெய்ய ஆட்களும் பணமும் தேவை. எனவே இவர்கள் பணக்காரர்களுக்கு பட்டம் கட்டுகிறார்கள். பணக்காரர்கள் எல்லாம் மேற்சாதிகள்தானே? எனவே மேற்சாதிகளிலிருந்தே ம்டாதிபதிகளும் வருகிறார்கள்.

மன்னன் தெய்வத்தைவிட மேலானவன் என்ற , மன்னன் சொன்னதைப்பின்பற்றி இறைவனை இழிவுபடுத்தும் வேலைதான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். நேற்றோடு முடிந்தது மதுரைக்கு வந்து 6 நாட்கள் கள்ளழகர் ஊர்வலம் வருகிறார்.. ஜமீன்கள், மிட்டா மிராசுகள், பெரும் தன்வந்தர்கள், சேதுபதி மஹாராஜா, சாப்டூர் ஜமீன் இவர்களின் வாரிசுகள் (அனைவரும் மண்டகப்படிதாரர்கள் எனவழைக்கப்படுகிறார்கள்). இவர்கள் ஆங்காங்கே டெண்டு போட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு டெண்டாக திருமால்- 18 மைல்கள் பயணம் செய்து – அந்த டெண்டுகளுக்குள் நுழைந்து அவ்ர்களின் முன் கள்ளழகர் மண்டியிடுவது போல ஜோடிக்கிறார்கள். கோவிந்தா கோவிந்தா என்ற் கோஷம் விண்ணைப்பிளக்க இறைவன் மேற்சாதிகளின் முன் தானிறங்கி அவர்களை வாழ்த்துகிறாராம். அவர்கள் கள்ளழகருக்கு ஏதாவது வசியமாகச்(வசதியாக) செய்வார்களாம். ‘கொஞ்சம் மேலே போட்டுக்கொடுங்க !’ என்று கேட்காத குறைதான். இதைச்செய்யச்சொன்னவன் திருமலை நாயக்கர். , ‘சைவத்தையும் வைணவத்தையும் இணைக்க நம்ம மன்னர் முயற்சி செய்கிறார்’ என்று சொல்லி கள்ளழகரை பத்துநாட்கள் பிச்சையெடுக்கவிட்ட்வர்கள் ஆர்?

மதுரை மீனாட்சி திருமணத்தைப்பார்க்க 2000 ரூ பாஸ் வாங்க் வேண்டும். இதுநாள் வரை திருப்பதி சாமிதான் பணக்கார சாமி என்று நினைத்திருநதேன். இங்கே வந்தபிந்தான் 2000 ரு பாஸ் அதுவும் பெரும் விஐபிகளுக்கு மட்டும்தான் என்று தெரிந்தவுடன், அட இம்மாம் பெரிய பணக்காரச் சாமியிது!’ என்று வியந்தேன். மீனாட்சி அம்மனைப்பிடிக்கும். அ கிரேட் ஃபெமினிஸ்ட் காடஸ். ஆனால் நாம பக்கத்திலே போகமுடியலையே!

நேற்று தமிழக் முதல்வர் சட்டசபையில் அறிவித்ததை இன்று நாளிதழ்களில் பாருங்கள் தோழர்களே: தஙக கார்டு 7 லட்சம் நன்கொடையாளருக்கு. 1 கோடி நன்கொடையாளர்களுக்கு பிளாட்டினம் கார்டாம். அக்கார்டு என்ன செய்யும்? அதை வைத்துக்கொண்டு கோயில் விழாக்களிலும் தரிசன‌த்துக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கு வாணாள் முழுவதும் முதல் வரிசையாம்.

பணம், பவர், மேற்சாதிகள் – இச்சேரில் கிடந்து உழன்று இன்பம் காண்கிறது இம்மதம். இச்சேற்றில் ஒரு துளியாகவே மலர்மன்னனின் கட்டுரையை நான் காண்கிறேன். சாதிகளின் அவசியம் அவர் மதத்துக்கு என்பதுதான் இறைச்சி (மறைபொருள்.)