Followers

Monday, May 21, 2012

அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!



சூசன் பஷீர்! இதுதான் இந்தப் பேறு பெற்ற பெண்மணியின் பெயர். அண்மையில் அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரை வியப்பில் ஆழ்த்திய முஸ்லிம் பெண் இவர்! இவருக்கு என்ன நிகழ்ந்தது? இஸ்லாத்தைத் தழுவும் அமெரிக்கப் பெண்மணிகள் அனைவருக்கும் நிகழ்ந்துவரும் சோதனைகள்தாம் இவருக்கும் நிகழ்ந்தன.

‘The Kansas City Star’ என்ற பத்திரிக்கை தரும் தகவல்களின்படி, இப்பெண் கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான AT&T யில் முக்கியப் பொறுப்பில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார்.

2005 ஆம் ஆண்டில் இவர் இஸ்லாத்தைத் தழுவியபோது, வடக்குக் கான்சாஸ் சிட்டியில் வசித்துவந்தார். அப்போது முதல் தொடங்கியதுதான், இவருக்கு எதிரான religious discrimination என்னும் மதப் பாகுபாட்டுத் தொல்லைகள்! இருப்பினும் என்ன? ஈமானின் உறுதியால் எதிர்நீச்சல் போட்டுவந்தார் சூசன்.

உடலை முழுவதுமாக மறைத்து, தலைச்சீலை (headscarf) அணிந்துதான் அலுவலகத்திற்கு வந்து தனது பணியை முறையாகச் செய்துவந்தார். இவருக்கு எதிரான தொல்லைகள், இவர் இஸ்லாத்தைத் தழுவச் சில மாதங்கள் முன்பிருந்தே தொடங்கிவிட்டனவாம். அதற்கு முன், இவருடைய சிறப்பான சேவைகளுக்காக AT&T நிறுவனம் இவருக்குப் பல பாராட்டுச் சான்றுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளதாக அறிகின்றோம்.

ஆனால், எப்பொழுது இவர் முஸ்லிமாக மாறி, ‘ஹிஜாப்’ அணிந்து வேலைக்குச் செல்லத் தொடங்கினாரோ, அன்று முதல் இவருடன் பணியாற்றியவர்கள் இவரைப் பார்த்துக் கேலியும் கிண்டலும் செய்யத் தொடங்கினராம். கண் சாடையால் ‘that thing on her head’ என்று கூறிச் சிரித்து மகிழ்ந்தனராம்.

“என்னைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது! அதிர்ச்சியுற்றேன்! இதற்கு முன் நான் எப்படியெல்லாம் உடலின் பெரும் பகுதிகள் தெரிய உடை அணிந்து வந்தபோதெல்லாம் இது போன்ற கிண்டல்கள் இல்லை! கண் சிமிட்டல்கள் இல்லை! குத்தலான பேச்சுகள் இல்லை! யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை, என் உடையைப் பார்த்து! இப்போது இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் முழு உடலையும் மறைத்து உடையணிந்தபோது…..?” என்று வியக்கிறார்; வேதனைப் படுகிறார்.

சகோதரி சூசனின் அலுவலக மேஜை மீது, தலையை மறைத்த தோற்றத்தில் கன்னி மேரியின் படமும், அதனுடன் பைபிளின் வசனம் ஒன்றும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது! அந்த வசனத்தையும் தோற்றத்தையும் பார்க்கும்போதெல்லாம், சூசனுடன் பணியாற்றும் பெண்களும் ஆண்களும் கேட்கும் கேள்வி, அவரை வேதனைப் பட வைக்கிறது! “ஏண்டி! நீ தீவிரவாதியா? இந்தக் கட்டடத்தை வெடி வைத்துத் தகர்க்கப் போகிறாயா? Towel-headed Terrorist!” திட்டித் தீர்த்தார்கள்.

மார்ச் 2008 வரை பொறுத்துப் பார்த்தார் சகோதரி சூசன். அதன் பின்னர், Equal Employment Opportunity Commission என்ற சட்டப் பாதுகாப்புத் துறையிடம் தன் முறையீட்டை வைத்தார். அந்தத் துறையும் தனது புலனாய்வைத் தொடங்கிற்று. இதன் பிறகே, எதிரி ஏவுகணைத் தாக்குதல்கள் கடுமையாயின! இதையொட்டி நிகழ்ந்ததுதான் climax எனும் உச்ச கட்டச் சோதனை! அதுவே சூசனை வன்மையாக இயக்கிற்று!

சூசனின் மேலதிகாரி ஒரு நாள் அவரருகில் வந்து நின்று, ஆத்திரத்துடன் அவருடைய ஹிஜாபைப் பிடித்திழுத்தார்! அவ்வளவுதான்! பெண் சிங்கம் கர்ஜிக்கத் தொடங்கிற்று! AT&T நிறுவனத்தை எதிர்த்துக் குரலெழுப்பினார் சகோதரி சூசன் பஷீர்!
“இந்த மேலதிகாரியைப் பணி நீக்கம் செய்யவேண்டும். அல்லது என்னை இந்த அலுவலகத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றவேண்டும்.” நியாயமான கோரிக்கை. இவற்றுள் ஒன்றும் நிகழவில்லை. ஆண்டுச் சம்பளம் 70,000 டாலர் கிடைத்துவந்த தனது பணியைத் தொடர மனமின்றி, ஒன்பது மாதங்கள் வீட்டில் இருந்துவிட்டார் சூசன். அதன் பின் ஒரு நாள் அலுவலகம் வந்தவருக்கு, தன்னையே பணி நீக்கம் செய்த எழுத்தாணை ஆயத்தமாக இருந்தது!

அடுத்து சூசன் செய்தது, நீதிமன்ற முறையீடு! இதைச் செய்துவிட்டு, அமெரிக்காவின் கடைக்கோடிக்குப் போய், ‘ஆன்கரேஜ்’ என்ற ஊரில் ஒரு சிறு பணியில் அமர்ந்து, தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

“என்னைப் பணி நீக்கம் செய்ததுகொண்டு, தான் விரும்பிப் பணி செய்துவந்த ஊழியர் ஒருத்தியை இழந்துவிட்டது, AT&T நிறுவனம். நான் எனது வேலையை விட விரும்பவில்லை. ஏனெனில், அவ்வளவுக்கு என் பணியை ஆர்வத்துடன் செய்துவந்தேன். எனக்கே ஓர் ஆத்ம திருப்தி, நான் எனது நாட்டு முன்னேற்றத்தில் என் பங்களிப்பை முறையாகச் செய்கிறேன் என்று. இப்போது அந்த மோசமான நிர்வாகத்தின்கீழ் வேலை செய்யவில்லை என்பதுகொண்டு, நான் மகிழ்கின்றேன்.

ஆனால், எனது நாட்டின் பொருளாதாரச் செலவினங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், எனது வாழ்க்கையை எத்துணைப் போராட்டத்துடன் மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று நினைக்கும்போது, என் இதயம் கணக்கிறது.” வேதனைப்படுகிறார் சகோதரி சூசன் பஷீர்.

வெந்த புண்ணில் வேல் பாய்வது போன்று, அவருடைய இல்லற வாழ்விலும் விரிசல் கண்டுள்ளது! ஆம், கணவர் பஷீரிடமிருந்து விவாக ரத்துக் கோரி இப்போது விண்ணப்பமும் செய்துள்ளார் சூசன்!

வந்தது ‘ஜாக்சன் கவுன்டி’ நீதித் துறையின் சட்டத் தீர்ப்பு! AT&T நிறுவனம் சகோதரி சூசனுக்கு ஐந்து மில்லியன் டாலர் இழப்புத் தொகை கொடுக்கவேண்டும்! அது மட்டுமன்று. சூசன் இழந்த வேலைக்குப் பகரமாக அந்த நிறுவனம் 1,20,000 டாலர் சூசனுக்குக் கொடுக்க வேண்டும்; இது தவிர, வழக்கறிஞருக்குக் கொடுக்கவேண்டிய தொகை பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்!

AT&T இத்தீர்ப்பை எதிர்த்து மறு முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளது. அது தோல்வியடைந்து, இறுதி வெற்றி உண்மைக்கே என்று நாமனைவரும் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோமாக!

நன்றி :அதிரை, tntj tabuk maa.

--------------------------------------




அசத்தும் எகிப்திய மாணவி ஆயிஷா முஸ்தபா...

எகிப்தை சேர்ந்த 19-வயது மாணவியான ஆயிஷா முஸ்தபா, விண்வெளி ஓடங்களுக்கான புதிய உந்து யுக்தியை (Propulsion device) கண்டுபிடித்துள்ளார். தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்காக காப்புரிமையையும் பெற்றுள்ளார்..! மாஷாஅல்லாஹ். சகோதரி ஆயிஷாவின் இந்த கண்டுபிடிப்பானது, விண்வெளி பயணங்கள் பாதுகாப்பானதாக, எளிதாக, விலை குறைவானதாக, வேகமானதாக அமைய வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சுப்ஹானல்லாஹ்.....இது குறித்து மேலும் படிக்க...

இது குறித்த லிங்கை கொடுத்து விளக்கமளித்த அஹமது ஆஷிக், முஹம்மது ஆஷிக்குக்கு நன்றி!


http://thenextweb.com/africa/2012/05/18/19-year-old-girl-in-egypt-invents-a-spacecraft-propulsion-device/

23 comments:

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
இறைவன் நம்பிக்கையாளர்களுடன் என்றுமே இருப்பான்,வெற்றியும் தருவான்.

Asalamsmt said...

Maashaallah!

Anonymous said...

ஓ இறைவா! எம் சகோதரி சூசனுக்கு நல்வாழ்வை வழங்குவாயாக! ஆமீன்.

- வள்ளுவன்

Anonymous said...

ஓ ஆயிஷா முஸ்தபா! வாழ்க வளமுடன் நீ பல்லாண்டு!

- வள்ளுவன்

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மத் ஷஃபி!

//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
இறைவன் நம்பிக்கையாளர்களுடன் என்றுமே இருப்பான்,வெற்றியும் தருவான்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ அசலாம் சலாமத்!

//Maashaallah!//

சலாம் சகோ வள்ளுவன்!

//ஓ இறைவா! எம் சகோதரி சூசனுக்கு நல்வாழ்வை வழங்குவாயாக! ஆமீன்.

- வள்ளுவன்//

//ஓ ஆயிஷா முஸ்தபா! வாழ்க வளமுடன் நீ பல்லாண்டு!

- வள்ளுவன்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அதிரை சித்திக் said...

மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்

விதமான கண்டுப்பிடிப்புகளை .கண்டுப்பிடித்தவர்

யாராக இருந்தாலும் பாராட்ட வேண்டும் என்ற பக்குவம்

மனித சமுதாயத்தில் குறைந்து விட்டது ..குறிப்பாக

ஊடகம் ஒருசாரார் கையில் மாட்டிகொண்டு ஓர வஞ்சகம்

செய்கிறது ..சாதனையாளர் ஆயிசாவிற்கு என் வாழ்த்துக்கள்

இஸ்லாத்தை ஏற்று பல இன்னல்களை சந்தித்த சூசன் பசீர்

அவர்கள் வாழ்வில் வெற்றி கிடைக்க துஆ செய்வோம் .

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
அறிய வேண்டிய தகவல்கள் கொண்ட அரியதொரு பதிவு..! நன்றி சகோ..!

//AT&T இத்தீர்ப்பை எதிர்த்து மறு முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளது.//-------ஹூம்... அங்கும் நம் நாட்டை போன்றே நொண்டிக்கால் நீதி அமைப்பு முறைதானா..?

'மரண தண்டனையிலே மட்டும்தான் மறுமுறையீடு செய்யலாம்' என்று நீதி முறையை மாற்ற வேண்டும்..! என்னைக்கி நீதி வந்து.. என்னைக்கி நஷ்ட ஈடு கிடைத்து... என்னைக்கி வாழ்ந்து... அடப்போங்கப்பா..!

ஆனாலும்....
வாழ்வின் ஒவ்வொரு கஷ்டத்துக்கும் பன்மடங்கு நன்மை சகோ.சூசனின் மறுமை கணக்கில் எகிறிக்கொண்டு உள்ளது என்று சகோ.சூசனுக்கு நன்கு தெரியும்..! அவர் முஸ்லிமாக இருப்பதால் மட்டுமே, இப்படி சோகத்திலும் மகிழ்ச்சியாக மனதை தேற்றிக்கொள்ள இயலும்..!

suvanappiriyan said...

//ஆகவே, “முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா?” என்ற கேள்விக்கும் விடை “இல்லை” என்றுதான் இருக்கும். ஏனெனில், முகம்மது வரலாற்றில் நிச்சயம் இருந்திருந்தால், அவரது இருப்பு ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட கேள்வியை கேட்பதற்கு எந்த விதமான அச்சுருத்தலும் நிச்சயம் இருக்காது. மேலும்//

எந்த ஒரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்காத இஸலாத்தின் ஆரம்ப அரிச்சுவடி கூட தெரியாதவர் எழுதிய ஒரு பிதற்றலுக்கு ஆஹா.. ஓஹோ என்ற பின்னூட்டம் வேறு. கட்டுரையை படித்து விட்டு என்னையறியாமல் சிரித்து விட்டேன். அந்த அளவு கோமாளித்தனமான வாதங்கள்.

முகமது நபி வாழ்ந்த வீடு மற்றும் அவர் பயன்படுத்திய வாள், செருப்பு முதலானவை கூட இன்றும் சவுதி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இவரது வருகையை அறிந்து மெக்கா சென்று நபியை பார்த்து இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை தாஜூதீன் என்று மாற்றிக் கொண்ட சேரமான் பெருமாள் கதையும் பொய்யா? நமது நாட்டிலேயே முகமது நபி காலத்தில் கட்டப்பட்ட சேரமான் மசூதி கொடுங்கலூரில் இன்றும் காட்சி தந்து கொண்டிருக்கிறதே!

முகமது நபி பல நாட்டு மன்னர்களுக்கும் எழுதிய கடிதங்கள் ஆவணமாக பாதுகாக்கப்படுகிறது. முகமது நபியைப் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அடங்கிய தொகுப்பு பல பாகங்களாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முகமது நபிக்கு இறக்கும் தருவாயில் எத்தனை நரை முடிகள் இருந்தது என்பது வரை நபித் தோழர்கள் குறிப்பெடுத்து வைத்துள்ளார்கள்.

முகமது நபி வாழ்ந்நததற்கான முக்கிய ஆதாரமே எங்களிடம் உள்ள குரான்தான். தோரா பைபிளில் வரும் சில வரலாறுகளின் பெயர்கள் ஒத்து வந்தாலும் சம்பவங்கள் முற்றிலும் மாறுபடுகிறது. குர்ஆன் பைபிளையும் தோராவையும் தழுவி எழுதப்பட வில்லை என்பதற்கு பல சான்றுகளை நானே பதிவாக இட்டுரிக்கிறேன். ஜாகிர்நாயக், பி.ஜெய்னுல்லாபுதீன் போன்ற அறிஞர்கள் எல்லாம் இதை விளக்கி பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2012/05/blog-post_05.html
இந்த பதிவில் குர்ஆன் எவ்வாறு தொகுக்கப்பட்டது என்பதை விவரமாக பார்க்கலாம்.

http://suvanappiriyan.blogspot.com/2012/05/blog-post_03.html

குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கான விவாதம் பற்றிய ஒரு தொகுப்பு

http://suvanappiriyan.blogspot.com/2012/03/blog-post_16.html

பைiபிலிலும் தோராவிலும் இல்லாத புதிய செய்திகள் குர்ஆனில் எப்படி வந்தது என்பதை விவரிக்கும் மற்றுமொரு பதிவு.

http://suvanappiriyan.blogspot.com/2012/02/blog-post_25.html

ஒரு இறைத் தூதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் முகமது நபி வருகையை ஏசுவே தனது சீடர்களிடத்தில் சொன்ன விதத்தையும் விவரிக்கும் ஒரு பதிவு.

http://suvanappiriyan.blogspot.com/2012/02/blog-post_23.html

முகமது நபிக்கு முன்பு அரபுகளுக்கு அனுப்பப்பட்ட இறைத் தூதர் சாலிஹ் வாழ்ந்த கிராமம் இன்றும் சவுதி அரசால் பாதுகாக்கப்பட்டு வருவதை விவரிக்கும் பதிவு.

இந்த கட்டுரையில் வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பெரிய அறிஞர்கள் எல்லாம் தேவையில்லை. நானே பதில் அளித்து விட முடியும். அந்த அளவு தெளிவாக ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

இந்த கட்டுரையை இந்து மக்களே நம்பப் போவதில்லை எனும் போது முஸ்லிம்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? :-)

(திண்ணை ஆசிரியர் குழு எடிட் செய்யாமல் வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கையில் நானும் பதிலளிக்கிறேன்.)

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆஷிக்!

//'மரண தண்டனையிலே மட்டும்தான் மறுமுறையீடு செய்யலாம்' என்று நீதி முறையை மாற்ற வேண்டும்..! என்னைக்கி நீதி வந்து.. என்னைக்கி நஷ்ட ஈடு கிடைத்து... என்னைக்கி வாழ்ந்து... அடப்போங்கப்பா..!//

ஹா..ஹா..ரொம்பவும் சலித்துக் கொள்கிறீர்கள். அந்த அளவு உலக நடைமுறையும் நமது நாட்டு சட்டங்களும் உள்ளன. இஸ்லாத்தை எதிர்ப்பதில் உலகம் முழுவதும் ஒரே நடைமுறையையே பின்பற்றுகின்றனர். இஸ்லாமிய எதிரிகள் இந்த உலகில் வெற்றி பெற்றாலும் மறு உலகில் அதற்கான தண்டனையை நிச்சயம் அனுபவித்தே தீர்வார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

suvanappiriyan said...

சலாம் சகோ அதிரை சித்திக்!

//மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்

விதமான கண்டுப்பிடிப்புகளை .கண்டுப்பிடித்தவர்

யாராக இருந்தாலும் பாராட்ட வேண்டும் என்ற பக்குவம்

மனித சமுதாயத்தில் குறைந்து விட்டது ..குறிப்பாக

ஊடகம் ஒருசாரார் கையில் மாட்டிகொண்டு ஓர வஞ்சகம்

செய்கிறது .//

சரியாக சொன்னீர்கள். ஊடகத் துறையில் நம்மவர்கள் இன்னும் அதிகமாக காலூன்ற வேண்டும். இவ்வளவு பணமும் வசதிகள் இருந்தும் தமிழக முஸ்லிம்களிடத்தில் ஒரு சிறந்த சேனலோ ஒரு சிறந்த தினசரியோ இதுவரை உருவாக்கப்படாதது வருந்தத்தக்க நிகழ்வு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

suvanappiriyan said...

//ஆகவே, முஸ்லீமல்லாதவர்கள் முகம்மதுவின் வாழ்நாளில் அவரைப் பற்றி என்ன சொன்னார்கள், அல்லது 60 வருடத்துக்கு பிறகு என்ன சொன்னார்கள்?
ஒன்றுமே இல்லை.//

கட்டுரையாளரின் அடுத்த பொய்.

மாற்றார் முகமது நபியை எவ்வாறு நடத்தினர் என்பதற்கு சில உதாரணங்கள்.

மனிதாபிமானம் உடையவர்
அமானிதம் பேணுபவர்
வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவர்
எளியோருக்கும், சிரமத்தில் தவிப்போருக்கும் உதவுபவர்
விருந்தினரை உபசரிப்பவர்
உயர் பண்பு, சிறந்த ஒழுக்கமுடைய நற்பண்பாளர்
”நம்பிக்கையாளர்”
இப்படி உயர் பண்புகளைக் கொண்டவராக நபியவர்கள் திகழ்ந்தார்கள். இது நபியவர்களை அறிந்த மக்காவில் வாழ்ந்த மக்களின் கருத்தாகும். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் நம்பி ஒப்படைத்தப் பொருட்களைத் திரும்பப் பெற முடியாத அக்காலத்தில் நபியவர்களிடம் கொடுத்துப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படி மக்கள் தமது பொருட்களை நம்பி ஒப்படைத்துத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
ஒரு சம்பவம்:
முகமது நபி அவர்கள் ஒரு மலைக்குன்றின் மீதேறி, மக்காவின் மக்களையும், மற்றும் மக்கள் தலைவர்களையும் மலையடிவாரத்துக்கு அழைத்தார்கள். அழைத்து, அவர்களிடம் ”இந்த மலைக்கப்பால் உங்களைத் தாக்குவதற்கு ஒரு படை வருகிறது என்று நான் கூறினால் அதை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள். ”ஆம் நம்புவோம்” என்று அந்த மக்களும் தலைவர்களும் பதிலளித்தனர். (கருத்து) இச்சம்பவத்திலிருந்து மக்களும் தலைவர்களும் – நபித்துவ வாழ்வுக்கு முன் – நபியவர்களை ”உண்மையாளர்” என்று ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது தெளிவு.
பொதுவாக, எந்த மனிதரையும் அவரின் இயல்பான நடைமுறை வாழ்க்கையைக் கவனித்து வந்தால் அதைக் கொண்டு அவரின் பண்புகளைக் கணித்து விடலாம். ஒருவரை உண்மையாளர் அல்லது பொய்யர் என்று சொல்வதற்கு அவரின் செயல்பாடுகள் கண் முன்னே நிகழ்கிறது என்பதால் கணிப்பது எளிது.

முகமது நபி அவர்களை ”உண்மையாளர்” என்று கூறிய அதே மக்கள் பின்னர் ”பொய்யர்” என்று உரைத்தது நபியவர்களின் ஆன்மீகக் கொள்கையை நோக்கியே தவிர, நடை முறை வாழ்க்கையில் நபியவர்கள் யாரையும் ஏமாற்றிப் பொய்யுரைத்தாகக் கொள்வது தவறு. நபியவர்களை பொய்யர், குறிகாரர், சூனியக்காரர், பைத்தியக்காரர், இட்டுக்கட்டுபவர் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது அந்த மக்களின் அறியாமை என்று அடித்து கூறி
விடலாம். ஏனெனில்,
ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இது போன்ற தங்களுக்கு அறிவில்லாதவற்றையே அம்மக்கள் பொய் என்று கூறினர். நபியவர்களை பொய்யரென்று கூறிய அதே வேளையில் பொய்யர் என்பதை நிரூபிக்க எவ்வித சான்றுகளையும் சமர்ப்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு கொள்கையை நம்பாதது வேறு, அந்தக் கொள்கையை பொய்யென்று உரைப்பது வேறு.

முந்தையதில் அது பற்றிய அறிவு இல்லாததால் அதை நம்பவில்லை. பிந்தையதில் அது பற்றிய எந்த அறிவுமின்றி அதைப் பொய்யென்று பொய்யுரைப்பது. இந்த அறியாமை அன்றைய விமர்சகர்களிலிருந்து இன்று வரை நீடிக்கிறது நாளையும் இது தொடரும்.
(ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இவற்றை முஸ்லிம்கள் நன்கு அறிந்து கொண்டு தான் இஸ்லாத்தை நம்பிக்கை கொள்கிறார்களா? என்று இங்கு கேள்வி எழலாம். இவற்றைக் கண் கூடாகக் காண்பதற்கான அவகாசம் இருக்கிறது என்பது தான் இஸ்லாத்தின் பதில்)

http://www.badriseshadri.in/2008/10/581-644.html

முகமது நபியின் எதிரியாக இருந்த உமர் எவ்வாறு இஸ்லாத்தை தழுவி பின்னர் சிறந்த ஜனாதிபதியாக வாழ்ந்தார் என்பதை விவரிக்கும் பத்ரியின் பதிவு

VANJOOR said...

.
.
Click >>>>
இதெல்லாம் நம்ம நாட்டிலே தான். பாருங்கள். இந்தியாவில் அரசியல் அமைதி நிலவ இப்படியான திருமணம் தேவை !!!
இஸ்லாத்தில் சாதி இல்லை
<<<<< TO READ.
.
.

UNMAIKAL said...

முஸ்லிம் இளைஞர்கள் சித்ரவதை:

மதுரை போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் எம்.எல்.ஏ. அறிவிப்பு


மதுரை, மே.22-

முஸ்லிம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்து வரும் மதுரை போலீசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக ராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஜவாருல்லா தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், ராமநாதபுரம் எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் ஜவாருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாநகர் பகுதியில் கேட்பாரற்று கிடந்த சைக்கிளில் வெடிகுண்டு வெடித்தது. ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்பே இல்லாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மதுரை மாநகர போலீசார் சித்ரவதை செய்து வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மதுரையில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறி ஆர்.எஸ்.மங்கலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் சாதிக்பாட்சா, மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சையத் மீரா, சையத் இப்ராம், ஹக்கீம், சுல்தான் அலாவுதீன் மற்றும் எங்களது கட்சியை சேர்ந்த கற்குவேல் ஆகியோரை விசாரணை என்ற பெயரில் மதுரை மாநகர போலீசார் கடுமையான மன உளைச்சல் மற்றும் உடல்ரீதியான தொந்தரவுக்கு ஆளாக்கி உள்ளனர்.

ஒருபக்க சார்பு

இதில் போலீசாரின் சித்ரவதை தாங்க முடியாமல் சையத் மீரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

அண்ணாநகர் பகுதியில் 4 நாட்களாக கேட்பாரற்று கிடந்த சைக்கிள் குண்டை கண்டுபிடிக்க முடியாத மதுரை போலீசார் ஒருபக்க சார்பு விசாரணையை நடத்தி முஸ்லிம் இளைஞர்களை குறி வைத்து விசாரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஆர்ப்பாட்டம்

திருவாதவூரில் இருந்து புதூர் டெப்போவுக்கு வந்த பஸ்சில் இருந்த டிபன்பாக்ஸ் குண்டு, மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் வெடித்த குண்டு ஆகிய குற்றங்களில் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியவில்லை.

உண்மை குற்றவாளிகளை தப்பவிட்டு முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். போலீசாரின் இந்த ஒருசார்பு நடவடிக்கை தொடர்ந்தால் மாநிலம் முழுவதும் மதுரை போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=732025&disdate=5/22/2012&advt=2

ஆத்மா said...

நல்ல பதிவு...இப்படி நிறைய பெண்மனிகளும் ஆண்களும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.அல்லாஹ் அவர்கள் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக..

suvanappiriyan said...

சகோ சிட்டுக் குருவி!

//நல்ல பதிவு...இப்படி நிறைய பெண்மனிகளும் ஆண்களும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.அல்லாஹ் அவர்கள் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக.. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Raja said...

ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு சும்மாவா சொன்னங்க ...வந்த வேலைய மறுபடியும் ஆரம்பிச்சாச்சு ..அப்புறமென்ன தமிழ்மணம் முழுக்க உங்களுக பதிவ தொங்க விடவேண்டியதுதான்....அடிச்சு அடுங்க..வாழ்த்துக்கள்

suvanappiriyan said...

சகோ ராஜா!

//ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு சும்மாவா சொன்னங்க//

ஒரு வாரத்துக்குப் பிறகு இப்போதான் என் பதிவு மகுடத்தில் ஏறியுள்ளது. அது பொறுக்கல்லயா!

//அடிச்சு அடுங்க..வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//முகம்மது மறைந்ததாக கூறப்படுவது கிபி 632இல்.
ஆதாரப்பூர்வமாக கருதப்படும் முதல் ஹதீஸ்கள் வாய்வழிச் செய்திகளாக சேர்க்கப்படுவது 220 ஆண்டுகள் கழித்து.. கிபி 810இல்தான் புகாரியே பிறக்கிறார்.
810இல் முகம்மதுவுடன் கூட இருந்தவர்கள் யாருமே இருந்திருக்க முடியாது. அந்த காலத்தில் சராசரி வாழ்நாளே 40 வருடங்களாகத்தான் இருந்திருக்கும். ஆகவே எத்தனை தலைமுறைகள் கடந்து சென்றிருக்கும் என்று கணக்கு போட்டுகொள்ளுங்கள்.
அதுதான் இங்கே பேசப்படுகிறது.//


மீண்டும் தவறான புரிதல். இமாம் புகாரி ஹதீதுகளை எழுதவில்லை. ஏற்கெனவே எழுதப்பட்டு தோல்களிலும், எலும்புகளிலும், மரப் பட்டைகளிலும் பல ஹதீதுகள் பாதுகாக்கப்பட்டிருந்தன. பல ஹதீதுகள் வாய் வழியாகவும் கேட்கப்பட்டு பதியப்பட்டன. யாரோ சொன்னதை எல்லாம் நபி மொழியாக பதிய மாட்டார்கள். அதற்கான இலக்கணமும் உண்டு. அவற்றையும் பார்ப்போம்.

“ஹதீஸ் கலை” என்பது ஆழ்ந்த அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய செய்திகளல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படைச்செய்தி இதுதான்.
1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.
2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.
3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர்பு விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.
4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.
5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.
6. மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.
7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல நினைவாற்றலுடன் இருந்து பிற்காலத்தில் நினைவாற்றலில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.
8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.
9. மொழி, இனம், பாரம்பரியம், மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.
10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.
11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனமாகும்.
12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.
13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
14. தமது கருத்தை நியாயப்படுத்துவதற்காக அல்லது நம்ப வைப்பதற்காக ஆதாரமில்லாது கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் பலவீனமாகும்.
இப்படி ஏராளமான வழிகளில்-மொழிகளில் -பலகீனமாக வரும் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.
சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 7:36).
என்ற இறைக் கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கித் தள்ளிவிட்டனர். எனவே ஹதீஸ்கலை மேதைகள் தரம் பிரித்து நம்பத்தகுந்தவை-என்று அடையாளம் காட்டப்பட்ட ஹதீஸ்களையே நாம் ஏற்க வேண்டும்.
(குறிப்பு: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸான், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது)

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபித் தோழர்களின் வரலாறுகள் இன்றும் ஆவணங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு முன்னேற்ப்பாட்டோடு நபி மொழிகள் தொகுக்கப்பட்டிருக்க எங்கிருந்து உங்களுக்கு குழப்பம் வருகிறது?

suvanappiriyan said...

சகோ காவ்யா!

//குலசேகர ஆழ்வாரின் காலமெது சாரங்க? ஆதாரத்தோடு சொல்லவும்//-Kavya

//ஆக முஹம்மதின் காலத்தில் ஆழ்வாரோ அவரது தந்தை திடவரதரோ தான் ஆண்டிருக்க வேண்டும். ஆழ்வார் சங்கரர் சம காலம் பற்றி நீங்கள் தேடினால் கூட நெட்டில் விஷயங்கள் கிடைக்கலாம்//- சாரங்

ஆக காவ்யா கேட்ட கேள்விக்கு நம்பகமான பதிலை சாரங்கால் தர முடியவில்லை. :-) நாம் கொடுக்கும் செய்தி இந்திய அரசால் தொல் பொருள் ஆய்வினரால் தொகுக்கப்பட்ட செய்தி.

சேரமான் பெருமாளின் நெருங்கிய உறவினரான திரு ராஜா வலைய தம்புரான் சேரமான் பெருமாளைப் பற்றியும் அவர் முகமது நபியை சந்தித்ததைப் பற்றியும் கொடுத்த பேட்டியை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

The 87-year-old Raja Valiyathampuram of Kodungallur in Central Kerala is a descendant of King Cheraman Perumal, the first Indian to embrace Islam in the early 7th century. Talking to him is like talking with history. In the following interview taken by A U Asif (right in the picture) in Ernakulam………,.

http://www.iosworld.org/interview_cheramul.htm
ஆங்கில பத்திரிக்கையான ஹிந்து தரும் செய்தியை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
http://www.hindu.com/2005/07/23/stories/2005072306490500.htm

காணொளியாக திரு சலீம் தரும் செய்தியையும் இந்த சுட்டியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

http://www.youtube.com/watch?v=BU2duvVicuI

அவர் ஓமானில் எந்த இடத்தில் அடக்கப்பட்டுள்ளார் என்பதை விக்கிபீடியா அழகாக தொகுத்து தருகிறது. கீழே அதன் சுட்டியில் சென்று விபரங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D

இத்தனை ஆதாரங்களையும் தூரமாக்கி விட்டு சாரங் சொல்லும் செய்தியை நாம் நம்ப வேண்டுமாம். :-)

கல்கியில் தொடர்கதையாக வந்த கண்ணதாசன் எழுதிய 'சேரமான் காதலி' நாவலை படித்ததுண்டா சாரங். இதுவரை படிக்கவில்லை என்றால் லைப்ரரியில் தேடிப் பார்த்து கண்ணதாசன் சொல்லும் சில செய்திகளையும் தெரிந்து கொள்ளவும். :-)

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//அரபிய ஆவணங்களிலும், பழம்பொருள் ஆய்வுகளிலும் எந்த இடத்திலும் குரான் பற்றிய குறிப்பே இல்லை. அது முதன் முதலில் 691இல்தான் அந்த குறிப்பு வருகிறது. அதாவது முகம்மது குரானை சொல்ல ஆரம்பித்ததாக கூறப்படுவதிலிருந்து 80 வருடங்களுக்கு பிறகு!//

கட்டுரையாளர் எந்த அளவு விபரமற்று குர்ஆனை விமரிசிக்க வந்து விட்டார் என்பதை இந்த லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.


http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/thokukkappatta-varalaru

//இந்த குரான் வசனமே (dome of rock கல்வெட்டு) அரபு ராணுவம் தங்கள் அருகாமை நாடுகளை குரானில் அடிப்படையில் உந்தப்பட்டு ஆக்கிரமிக்க கிளம்பி 60 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்படுகிறது. இதுவே முதல் வரலாற்று ரீதியான குரான் வசன கல்வெட்டு.//

முகமது நபி காலத்திலேயே மரப்பட்டைகளில் எலும்புகளில் தோல்களில் எழுதப்பட்டு முகமது நபி காலத்திலேயே சரிபார்க்கப்பட்டு பிறகு உஸ்மான் காலத்தில் அந்த பிரதியும் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த பல தோழர்களை அழைத்து ஓத வைத்து சரிபார்க்கப்படுகிறது. பலரிடம் 5 அத்தியாயம் சிலரிடம் எட்டு அத்தியாயம் என்று இருந்ததை எல்லாம் ஒன்றாக்கி மனனம் செய்தவர்களை வைத்து சரி பார்த்து அது பல பிரதிகள் எடுக்கப்படுகிறது. அதில் இரண்டு ரஷ்யாவிலும் துருக்கியிலும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை எல்லாம் தெரிந்து கொண்டே மறைத்து பொய்களை இந்த கட்டுரையாளர் புகுத்தியுள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் பலரால் வைக்கப்பட்டு அது பொய் என்று நிரூபிக்கப்பட்டும் உள்ளது. புதிதாக படிப்பவர்களுக்காகவே இதனை இங்கு பதிக்கிறேன்.

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//அது என்ன ஹலால் பீர், பாட்டுல்ல தொறக்கும் போது பிஸ்மி சொல்லணுமோ?//

ஹி..ஹி..பிஸ்மி சொல்லி தடுக்கப்பட்ட ஒரு பொருளை சாப்பிடுவதும் ஹராம்தான். நான் சொல்ல வந்தது போதை நீக்கப்பட்ட பீர். இங்கு சவுதியில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும். பீருக்குரிய அதே டேஸ்டுடன் ஆனால் போதை நீக்கப்பட்டு உங்களுக்கு தருகிறார்கள். வெயில் நேரங்களில் அவ்வப்போது நானும் குடிப்பதுண்டு. ஆல்கஹால் நீக்கப்பட்ட அந்த பீரைப் பற்றி மேலதிக விபரத்தை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

http://en.islamtoday.net/artshow-409-3342.htm

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//இது 87 வயதானவர் சொன்ன பழங்கதை. இதில் அவர் நம்பிக்கையைத்தான் பேசுகிறாரே தவிர வரலாற்றை அல்ல//

. 87 வயதானவர் சொல்வதை ஒதுக்க வேண்டும் என்று ஏதும் சட்டம் உள்ளதா? அதிலும் சேரமான் பெருமாளின் வழி வந்தவரே இந்த வளைய தம்புரான். இந்து மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சிறந்த இந்துவாக இன்றும் வாழ்ந்து வருபவர். இந்த விஷயத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

அடுத்து வரலாறு பதியப்படுவதே அதிகமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்கு பிறகுதான். சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகள் அதிகமாக வழியாக வழியாக முன்னோர்கள் சொல்லி வந்தவையே! கல் வெட்டுகள் மூலம் நாம் வரலாறுகளை அறிந்து கொள்வது மிகச் சொற்பமே. இது எல்லா வரலாறுகளுக்கும் பொருந்தும். திருவள்ளுவரைப் பற்றிய உண்மையான வரலாறே இன்று வரை நமக்கு கிட்டவில்லை. சிலர் அவரை சமணர் என்றும், சிலர் பிராமணர் என்றும், சிலர் பவுத்தர் என்றும் சிலர் அவரை திராவிடர் என்றும் இஷ்டத்துக்கு அழைத்துக் கொள்கிறார்கள். திருவல்லிகேணியில் பிறந்ததாகவும் நம்புகிறோம். நம்பகமான கல்வெட்டோ, ஓலைச்சுவடியோ கிடைக்காத போது வாய் வழிச் செய்தியே முக்கியத்துவம் பெறுகிறது. அரபு வரலாறுக்கும் இந்திய வரலாறுக்கும் இது பொருந்தும். உங்கள் கருத்துக்கு எதிராக இருப்பதாலேயே இந்த ஆதாரங்களை மறுக்க முடியாது.

நீங்கள் ஒத்துக் கொள்ளாததாலேயே வரலாறும் மாறி விடாது. சேரமான் சகோதரர்கள் கட்டிய பல மசூதிகள் இன்றும் கேரளாவில் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.

//எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் கிபி 632இல் இறந்துவிட்டவராக கூறப்படும் முகம்மது செய்த அதிசயத்தை எப்படி பார்த்திருக்க முடியும்?
சுவனப்பிரியரால் எல்லாம் முடியும் என்று தெரிகிறது!//

ராஜ ராஜ சோழனின் தங்கை குந்தவை இஸ்லாமிய மதத்துக்கு மாறியதை மறைக்க அவரது வரலாறையே திரிக்கவில்லையா? இவர் பேரில் பல கட்டுக் கதைகளை நம் முன்னோர்கள் விதவிதமாக புனையவில்லையா? நமது வரலாற்றை தொடர்ந்து படித்து வந்தால் பல அரசர்களது வரலாறு நூற்றாண்டுகள் வித்தியாசப்படுகிறது வரலாற்று ஆய்வாளர்களால். முறையான ஆய்வுகள் செய்யப்பட்டால் பல உண்மைகள் வெளி வரும். தற்போது ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது.

//இதுவரை நீங்கள் கொடுத்த ஆதாரத்திலேயே மிகச்சிறந்தது கண்ணதாசன் எழுதிய சேரமான்காதலிதான். அசைக்க முடியாத ஆதாரம்.//

கண்ணதாசனுக்கும் இந்த வரலாறு தெரிந்ததால்தான் தனது கதையின் முடிவில் சேரமான் பெருமாள் இஸ்லாமிய மதத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டதை கோடிட்டுக் காட்டுவார். இதையும் நீங்கள் நம்பவில்லை என்பதால் உங்களை நான் வற்புறுத்தப் போவதில்லை.
.