Followers

Showing posts with label மன மாற்றம். Show all posts
Showing posts with label மன மாற்றம். Show all posts

Saturday, August 19, 2017

கேரள மலப்புரத்தில் 1000 பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்!


கேரள மலப்புரத்தில் 1000 பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்!

மத்திய அமைச்சரும், பா..,வைச் சேர்ந்தவருமான, ஹன்ஸ்ராஜ் அஹிர், தெலுங்கானா தலைநகர், ஐதராபாத்தில் நேற்றுகூறியதாவது:கேரளாவில், முதல்வர்பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, மலப்புரம் மாவட்டம், மத மாற்ற மையமாக திகழ்கிறது. ஒரு மாதத்தில், 1,000 பேர், மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.சமீபத்தில், மலப்புரம் சென்றேன்; அப்போது, மாவட்ட உயரதிகாரி, தலைமை செயலர் ஆகியோருடன், மத மாற்ற விவகாரம் பற்றி பேசினேன். மலப்புரத்தில் நடக்கும் மத மாற்றம் குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, கேரள அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.

தினமலர்
20-08-2017


அமீத்ஷாவின் உருட்டல் மிரட்டல், மோடியின் உறுமல், ஆர்எஸ்எஸ் குண்டர்களின் வெட்டு குத்து இத்தனையையும் மீறி 1000 பேர் மதம் மாறியிருக்கிறார்கள் என்றால் இந்து மதத்தில் 'சிஸ்டம் சரியில்லை' என்று பொருள். பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரையும் கீழாக நடத்துவதும் பார்பனர்களை ஏதோ தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் போலவும் பில்டப் கொடுத்தால் சுய மரியாதை உள்ளவன் எப்படி இந்து மதத்தில் தொடர்வான்? 'நோய் முதல் நாடி' என்று வள்ளுவர் சொல்வது போல் உண்மை காரணம் என்ன என்று ஆராய்ந்து அதனை தீர்க்க முயல வேண்டும். அதை விடுத்து மோடியும் அமீத்ஷாவும் மாநில அரசுகளை உருட்டி மிரட்டுவதால் ஒரு பலனும் விளையப் பொவதில்லை. மாறாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வரவே செய்வார்கள்.  

Tuesday, August 08, 2017

இஸ்லாத்துக்கு மாற எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை!

இஸ்லாத்துக்கு மாற எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை!

கரூர் மாவட்டம் தோகைமலை தெற்குத் தெருவில் ஹோட்டல் நடத்திவரும் மனோகரன் என்பவர், தனது மகன்களான ராமமூர்த்தி மற்றும் மீனாட்சிசுந்தரம் இருவரையும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த, ஏற்கெனவே இஸ்லாமிய மதத்துக்கு மாறிய சுரேஷ் என்கிற அப்துல் ரஹ்மான் மூளைச்சலவை செய்து, மதமாற்றம் செய்துவிட்டதாக கரூர் மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகார் கொடுத்தார். அதில். 'தோகைமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம், நடவடிக்கை இல்லை. எங்க பகுதியில் உள்ள மசூதியில் உள்ள இஸ்லாமியப் பெரியவர்களும், எங்க பசங்களை 'மசூதிக்கு வர வேண்டாம்'னு சொல்லிட்டாங்க. அப்படினா, எங்க மகன்களை மதம் மாத்துனது எதுவும் பயங்கரவாத கோஷ்டியா என்பது தெரியவில்லை. நீங்கதான் எனது மகன்களைப் பழையபடி மீட்டுத் தரணும்" என்று கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

மனோகரன் புகார் கொடுத்த அன்றே, அதே தோகைமலைப் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் தன் பங்குக்கு கலெக்டரிடம், 'அய்யா அந்த சுரேஷ், என் மகன் சரவணக்குமாரையும் ஸ்லாமிய தத்துக்கு மாத்திட்டார். என் மகனையும் நீங்கதான் மீட்டுத் தரணும்' என்று கண்ணீரும் கம்பலையுமாக புகாரை நீட்டினார். இந்தச் செய்தியை விகடன் இணையதளத்தில் செய்தியாகப் பதிந்திருந்தோம். 

இந்நிலையில் இந்தச் செய்தி பரபரப்பாக, மதமாற்றிய காரியதரிசியாக குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் என்கிற அப்துல் ரஹ்மான், நேற்று எட்டு மணி போல், சரவணக்குமார், மீனாட்சிசுந்தரம் மற்றும் ராமமூர்த்தி ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு கரூர் பிரஸ் கிளப் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம்,

"நான் அவர்களை மூளைச்சலவை எல்லாம் செய்து மதமாற்றம் செய்யவில்லை. அவர்கள் மூவரும் தாங்களாக விருப்பப்பட்டுதான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியிருக்கிறார்கள். நானும் இஸ்லாமியம் பிடித்து, தன்னிச்சையாகத்தான் மதம் மாறினேன். அதுபோல்தான், இவர்கள் மூவரும் இஸ்லாமிய மதம் பிடித்துப்போய், மதம் மாறியிருக்கிறார்கள். என்மீது எந்தத் தவறும் இல்லை. நான் ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். தேவையில்லாமல் என்மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். அவர்களிடமே கேளுங்கள், நான் அவர்களை மூளைச்சலவைசெய்து, மதம் மாற்றினேனா என்று" என்பதோடு ஒதுங்கிக்கொண்டார்.
 



தகவல் உதவி
விகடன்
09-08-2017

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. 

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2 : 256) 

மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று அல்லாஹ் கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் இணைத்தே சொல்கிறான். வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது என்பதே அந்தக் காரணம். சத்தியம் எது? அசத்தியம் எது? என்று தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. ஆகையால் இஸ்லாம் என்ற சத்தியத்தை யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் இலகுவாகப் புரிந்த கொள்ளலாம். இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. 





Friday, January 15, 2016

கிரிஷ் என்ற இளைஞரின் வாழ்வை மாற்றிய இஸ்லாம்!



இந்து மதத்தில் ஆழ்ந்த பிடிப்புடையவர் சகோதரர் கிரிஷ். ஆன்மீக தேடலினால் பல மதங்களையும் ஆய்வு செய்தார். தனது பூர்வீக இந்து மதத்தின் ஆணி வேர் இஸ்லாம் என்பதை தேடலில் தெரிந்து கொண்டார். சனாதன தர்மத்தை போதிக்கும் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். தனது பெயரையும் முஹம்மது இஷாக் என்று மாற்றிக் கொண்டார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது அழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். சென்ற 2014 ஆம் ஆண்டு மெக்கா சென்று ஹஜ் பயணத்தையும் முடித்துள்ளார்.

இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்றவுடன் அவர்களின் முகத்தில் ஒரு தெய்வீககலை தொற்றிக் கொள்வதை பார்த்து பிரமிக்கிறோம். இறை மார்க்கமல்லவா!

இவருடைய வாழ்வு இம்மையிலும் மறுமையிலும் சிறப்பாக அமைய நாமும் பிரார்த்திப்போமாக!

தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்காமல் இருக்க மாட்டான்.

(அல்குர்ஆன் : 9:32)

Sunday, July 12, 2015

'சலீம்' திரைப்படம் மூலம் இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரர்!





முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் எண்ணத்தை சலீம் திரைப்படம் மாற்றியது! இஸ்லாத்தை ஏற்ற இளைஞர் !

திருச்சியை சேர்ந்த நண்பர் வீடியோ சிராஜின் மகன் ஜாவித் தஃவாவில் ஆர்வமுள்ள சகோதரர்! அவர் நேற்று போன் செய்து எனது நண்பருக்கு தஃவா செய்து வருகிறேன் ! நீங்கள் கொஞ்சம் அவரோடு பேசினால் நன்றாக இருக்கும் என்றார் !

சரி இப்தாருக்கு அழைத்து வாருங்கள் என்றேன் ! வரமுடியவில்லை கொஞ்சம் லேட்டாகும் என்றார்! பரவாயில்லை இரவுத் தொழுகைக்கு முன் அழைத்து வாருங்கள் என்றேன் ! சுமார் 8.30 மணியளவில் வந்தார்கள்!

வந்தவரிடம் ஊர்.பெயர் . தொழில் எல்லாம் விசாரித்து விட்டு அவருக்கு ஏகத்துவம் , தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் ஐந்து கடமைகளில் கட்டமைக்கப் பட்டுள்ள இஸ்லாம் குறித்து விரிவாக எடுத்துரைத்து விட்டு, இணை வைப்பைக் குறித்து எச்சரித்து விட்டு இஸ்லாத்தை பின்பற்றினால் இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் பலன்கள் குறித்து விளக்கினேன் !

விரிவாக விளக்கி விட்டுஇதுதான் இறைவனால் அருளப்பட்ட சரியான வழி என்பதை ஒப்பக் கொள்கிறீர்களா ? என்று கேட்டதும் ஆம் இதுதான் உண்மை என்றார் ! இதை ஏற்றுக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடையலாம் எந்த நஷ்டமும் எனும் போது என்ன தயக்கம் ?

மனிதன் மனிதனாக வாழ இதுதான் வழி எனில் இதுதான் நீங்கள் செல்லவிருக்கும் இலக்குக்கான இறுதி வாகனம்! இதைத் தவற விட்டால் உங்களின் இலக்கை அடைய முடியாது ! இந்த வாகனத்தில் என் தந்தை ஏறவில்லையே நான் எப்படி ஏறுவது ? என் தாத்தா இந்த வாகனத்தை பார்த்ததே இல்லையே ? இந்த வாகனத்தில் ஏறி பயணித்தால் என் ஊர் என்ன சொல்லும் ? என்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் என்ன சொல்லும் ? என்று பார்த்துக் கொண்டிருந்தால் வண்டி போய் விடுவது போல் வாழக்கை முடிந்து போய் விடும் ! நிச்சயமில்லாத இந்த உலகில் எதற்காக அதைத் தள்ளிப் போட வேண்டும்?

இல்லை ! நான் இப்போதே ஏற்றுக் கொள்கிறேன் என்று கலிமாவை மொழிந்து சுமார் பத்து மணியளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் ! அல்ஹம்து லில்லாஹ் !

பின்னர் இஸ்லாத்தின் பக்கம் முதல் ஈர்ப்பு எப்படி வந்தது ? என்று கேட்ட போது சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டிர்களே ? என்றார் !

இல்லை சொல்லுங்கள் என்றதும் சலீம் படம் பார்க்கும் வரைக்கும் பத்திரிகைகள், தொலைகாட்சிகள் சொல்வது போல் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றுதான் எண்ணி இருந்தேன் !

ஆனால் அந்தப் படத்தைப் பார்த்த பின் என் கருத்தை மாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் இஸ்லாத்தை அறிந்து கொள்ளவேண்டும் எனும் ஆவலும் ஏற்பட்டது ! அப்போது தான் நண்பர் ஜாவித் முலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டேன் ! இன்று தங்களால் இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்வியல் நெறி என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டேன் என்றார் ! அல்ஹம்து லில்லாஹ் !

இது அவனுடைய நேர்வழி அதை தான் நாடியோருக்கு வழங்குகிறான் ! இது இறைவனின் ஒளி ! அதை உங்கள் உள்ளத்தில் ஏற்றி விட்டான் ! இனி அது பிரகாசிக்கும் ! உங்களின் செயல்கள் இனி ஒளிமயமாகும் ! அந்த ஒளி உங்களை சுற்றி உள்ள மற்றவர்களையும் ஈர்க்கும் என்று கூறிய போது அவரது முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது! அல்ஹம்து லில்லாஹ் !

[குறிப்பு: சினிமா நம் மக்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து அதை தஃவாவுக்கு பயன்படுத்த வேண்டும் எனும் கருத்துக்கு இச்சம்பவம் வலுச்சேர்க்கிறது!]

-செங்கிஸ் கான்

Saturday, July 04, 2015

நடிகர் விக்னேஷ் இஸ்லாத்தை ஏற்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்!





இஸ்லாத்தை ஏற்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நடிகர் விக்னேஷ் என்கின்ற அபூபக்கர் சித்தீக்!

"ரங்கூன்", "போடா ஆண்டவனே", "நம்ம பக்கம்" போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விக்னேஷ் எனும் இளம் நடிகர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இளம் நடிகர் விக்னேஷ் அவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு திருக்குர்ஆன் வழங்கியதாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

வாங்கிச் சென்ற குர்ஆனை கதவைத் தாழிட்டு படித்து வந்து இருக்கிறார். ஒருநாள் கதவை மறந்து தாழிடாமல் படித்த போது அவருடைய தாய் வந்து பார்த்து கத்திக் கதறி வீட்டில் பிரச்சனையாகி விட்டது.

ஒரு கட்டத்தில் ஆம் நான் முஸ்லிமாகி விட்டேன். அதன் படித்தான் வாழப் போகிறேன் எனக் கூற தாயும் தந்தையும் வீட்டை விட்டு வெளியேறு எனச்சொல்ல, என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் போன் செய்தார்.

"நான் தவறான வழியில் செல்லவில்லை என முடிந்தவரை பெற்றோரை சமாதானம் செய்து பாருங்கள். முடியாத பட்சத்தில் வந்து விடுங்கள், இறைவன் இருக்கிறான் இலட்சக்கணக்கான என்னைப்போன்ற உங்கள் உடன் பிறவாத சகோதரர்கள் இருக்கிறோம்" எனக் கூறியதும் "இல்லை அங்கு இருக்க முடியாது நான் வந்து விடுகிறேன்" என இன்று காலை வந்து விட்டார்.

ஏற்கனவே குடும்பத்தை விட்டு வந்து இங்கு தங்கி உள்ள இரு திண்ணைத் தோழர்கள் நம்மோடு உள்ளார்கள் அவர்களோடு தங்கிக் கொள்ளலாம் என பள்ளியில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தோம்.

பொறியியல் படித்துள்ள தனக்கு தன்மானத்துடன் வாழ எனக்கு ஒரு உடனடி வேலை தேவை என்றார். இன்ஷா அல்லாஹ் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளோம்...

கொண்ட கொள்கைகைக்காக குடும்பத்தைத் துறக்கும் முஹாஜிரீன்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்! அல்ஹம்துலில்லாஹ்...

(குறிப்பு : முன்பாகவே அவர் நமது மதரஸாவில் கலிமா சொல்லி விட்டார், அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதை வெளியிடாமல் குர்ஆன் வழங்கியதாக மட்டும் செய்தி வெளியிட்டு இருந்தோம், ஆனால் இறைவனின் நாட்டம் நாம் வழங்கிய குர்ஆன் அதை வெளிப்படுத்தி விட்டது)
தகவல் -செங்கிஸ் கான்

Tuesday, June 23, 2015

கணவனை இழந்த எனக்கு இஸ்லாம் தான் பாதுகாப்பு!





கணவனை இழந்த எனக்கு இஸ்லாம் தான் பாதுகாப்பு!

இளையான்குடி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி தற்போது சென்னையில் வசிக்கிறார் !

இளையான்குடி மேல் நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்ததால் சிறு வயதில் இருந்தே இஸ்லாத்தின் மீது ஈர்ப்பு இருந்தது ! ஆனால் குடும்ப சூழல் காரணமாக திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின் கடந்த ஆண்டு கணவனை இழந்து தற்போது ஒரு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது ! இஸ்லாம் எனக்கு பாதுகாப்பு உணர்வை தருமா ? இது குறித்து சிலரிடம் பேசினேன் ! எனக்கு திருப்தி இல்லை ! அப்போது உங்களிடம் பேசுமாறு உங்களது எண்ணைத் தந்தார்கள்!

நீங்கள் நேரில் வாருங்கள் என நம்பிக்கை வார்த்தைகளால் அழைப்பு விடுத்தோம்! நேற்று மாலை வந்த அவருக்கு இஸ்லாம் மகளிருக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்து எடுத்து கூறியவுடன் தானும் தனது 11வகுப்பு படிக்கும் மகனும், 9வது படிக்கும் மகளும் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக கலிமாவை மொழிந்தார்! அல்ஹம்து லில்லாஹ்!

பாதுகாப்பு குறித்து இனி நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை! இப்போது இறைவனின் பாதுகாப்பு உள்ளது! என்னோடு சேர்ந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் உங்கள் சகோதரர்கள் ஆகிவிட்டோம் ! இனி அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை! உங்களிடம் கண்ணியத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் ஆடையை வாங்கி தருகிறேன் ! இது இந்த சகோதரனின் அன்பளிப்பு என பர்தாவை வாங்கி கொடுத்ததும் உடனே அணிந்து வந்தார் ! அல்ஹம்து லில்லாஹ்!

அவருக்கு குர்ஆனையும் வழங்கினோம்!

சகோதரிக்கு தனது பாதுகாப்பை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் !

by-செங்கிஸ்கான்

Tuesday, April 14, 2015

நக்ஸல்பாரி தலைவர் டி என் ஜோய் இஸ்லாத்தை தழுவினார்!



நக்ஸல் இயக்கத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான டி என் ஜோய் தூய இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். சென்ற திங்கட்கிழமை முக நூல் மூலமாக தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

'எனது தந்தையார் எனக்கிட்ட பெயர் ஜோய். இன்று இஸ்லாத்தை ஏற்றவுடன் நான் வைத்துக் கொண்ட பெயர் நஜ்மல் பாபு. பாபரி மசூதி இடிப்புக்குப் பின் இந்து மதத்தில் இந்துத்வாவின் கை ஓங்கி வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு வித அச்சத்துடன் வாழ்கின்றனர். நான் எந்த இஸ்லாமிய இயக்கத்திலும் சேரப் போவதில்லை. தனித்தே இயங்குவேன்' என்று கூறுகிறார்

1970 லிருந்து நக்ஸல் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் ஜோய் எமர்ஜென்ஸி நேரத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். தீவிரவாத பாதையிலிருந்து விலகி அன்பையும் பண்பையும் போதிக்கும் தூய இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட ஜோய் என்ற அஜ்மலை இரு கரம் நீட்டி அரவணைப்போம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா
14-04-2015

Wednesday, March 18, 2015

அமெரிக்காவின் டொமினிக் எஸ்லே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.





'பல விஷயங்கள் எனது வாழ்வில் நடந்து விட்டன. எனது 22 வருட கால வாழ்வை வீணாக இழந்து விட்டேன். இன்று சொர்க்கத்துக்கு செல்லும் வழியை அறிந்து கொண்டேன்.. அல்லாஹூ அக்பர்'

-டொமினிக் எஸ்லே தனது ட்விட்டர் தளத்தில்....

"Many things happened in my life, and I've been lost for 22 yrs. Today I've found my guidance to paradise. #AllahuAkbar"

https://twitter.com/DominiqueEasley/status/576475323182678017

அமெரிக்காவின் பிரபல விளையாட்டு வீரர் டொமினிக் எஸ்லே சென்ற வாரம் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். வழக்கமாக இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பலர் தங்களின் கருத்துக்களையும், ஆதரவையும், வசவுகளையும் சரமாரியாக கொடுத்து வருகின்றனர். எதைப் பற்றியும் கவலைபடாமல் டொமினிக் தனது வாழ்வியலை இஸ்லாமாக ஆக்கிக் கொண்டார். அவரது வாழ்வு சிறப்பாக அமைய நாமும் நமது பிரார்தனையை இறைவனிடத்தில் வைப்போம்.

Sunday, March 15, 2015

முன்பு ஷ்யாம் தற்போது 'ஆசாத்' - விடுதலை பெற்றவன்!



ஒரு மாதத்துக்கு முன்பு இவரது பெயர் ஷியாம் சிங். தற்போது இவரது பெயர் 'ஆசாத்'. அருமையான பெயரை தேர்ந்தெடுத்துள்ளார். ஆசாத் என்ற பெயரை தமிழ் படுத்தினால் 'விடுதலை' என்ற பொருளைக் கொடுக்கும். சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை பெற்றதால் 'ஆசாத்' என்ற பெயர் மிகப் பொருத்தமாக உள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ளது மீரட் மாவட்டம். பக்பாத் என்ற இடத்துக்கு அருகில் உள்ள கோவிலில் ஷியாம் சிங் கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்கவில்லை. இந்த கோவிலானது யாதவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அனுமதி மறுத்தால் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வேன் என்று வாதிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் இவரையும் இவரது குடும்பத்தவரையும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக சொல்லி வழக்கு பதிவு செய்துள்ளது.

கோவிலின் பூசாரி ஷியாமுக்கு வழிபட உரிமை தர முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் வெறுப்புற்ற அவர் இஸ்லாத்தை தற்போது தழுவியுள்ளார். இவரைத் தொடர்ந்து 100க்கு மேற்பட்டவர்கள் இஸ்லாத்தை தழுவ தயாராகி வருகின்றனர். கிராமத்தில் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் ஊரை காலி செய்து விட்டு நேபாளுக்கோ அல்லது பாதுகாப்பான ஊர்களுக்கோ சென்று விடலாமா என்ற யோசனையில் உள்ளார்.

தன்னை கோவிலில் வழிபட அனுமதிக்காததை எதிர்த்து பிரதமர், கலெக்டர், தாசில்தார் என்று வரிசையாக மனுக்களை அனுப்பியுள்ளார். இந்துத்வா ஆட்சியில் தலித்களுக்கு நியாயம் கிடைக்குமா? எனவே இவருக்கு எந்த ஒரு பதிலும் அரசிடமிருந்து இதுவரை வரவில்லை.

ஆனால் ஆர்எஸ்எஸிலிருந்து சிலர் வந்து 'இஸ்லாத்துக்கு மாறி விட வேண்டாம். நிலைமை சரியாகும்' என்கிறார்களாம். கலவரம் செய்ய, வீடு கொளுத்த, கொலை செய்ய பிறகு ஆர்எஸ்எஸூக்கு ஆள் கிடைக்காமல் போய் விடுமே. எனவே ஓடி வந்து இஸ்லாத்துக்கு மாறி விடாதீர்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

'நான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்கிறேன். ஆனால் இந்து கோவிலுக்குள் அனுமதி மறுத்தால் பிறகு எனக்கு இந்து மதத்தில் என்ன வேலை? வேறு மதத்துக்கு மாறுவதாக சொன்னாலும் 'நாங்கள் சரி செய்கிறோம். அவசரப்பட வேண்டாம்' என்கின்றனர். எத்தனை காலத்துக்கு எங்களை இவ்வாறு ஏமாற்றப் போகிறீர்கள்?' என்று காட்டமாக கேட்கிறார் ஷ்யாம் சிங்.

தகவல் உதவி

தி ஹிந்து ஆங்கில நாளிதழ்
14-03-2015

http://www.thehindu.com/news/national/other-states/denied-temple-access-dalit-converts-to-islam/article6991578.ece#comments

Monday, March 02, 2015

மனதில் பல சோகங்கள் குடி கொண்ட தருணம்!



மனதில் பல சோகங்கள் குடி கொண்ட தருணம்!

எதிர்பாராமல் சில நேரங்களில் சிலரின் சந்திப்பு நம் மனதில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு சென்ற வெள்ளிக் கிழமை எனக்கு எற்பட்டது. அந்த நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

'நீங்க தான் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரரா?'

'ஆமாம் பாய்!'

'எந்த ஊரு?'

'..............'

'ஓ... எப்படி இருக்கீங்க?'

'ரொம்பவும் மன உளைச்சலில் இருக்கிறேன் பாய்'

'ஏங்க இப்படி? சந்தோஷப்படறத விட்டுட்டு கவலைபடறீங்க?'

'நான் மட்டும் நேர் வழில இருந்தா போதுங்களா? என் மனைவியும் குழந்தைகளும் வர வேண்டாமா?'

'ஓ..... அதச் சொல்றீங்களா? அது நாளடைவில் சரியாகி விடும். கவலையை விடுங்க'

'இல்ல பாய்! எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. ரொம்பவும் ஆச்சாரமான குடும்பம்'

'அப்படியா? முன்பு நீங்க எந்த சாதி'

'........ அதிலும் என் மனைவி குடும்பம் ரொம்பவும் ஆச்சாரமான குடும்பம்'

'நீங்க மாறினது அவங்களுக்கு தெரியுமா?'

'போன வருடம் உம்ரா போயிருந்தேன். மக்கா மதினா எல்லாம் போனதுல நம்பிக்கை இன்னும் உறுதியாயிடுச்சு. உம்ரா டிரஸ்ஸோட போட்டோவை ஃபேஸ் புக்குல போட்டேன். அன்றிலிருந்து ஊர்காரர்களிலிருந்து மனைவி வரை ஒரே டார்ச்சர். இதனாலேயே முக நூல் கணக்கையே முடக்கி விட்டு ஃபேஸ் புக் பக்கமே போறதில்ல'

'பிள்ளைங்க எத்தனை?'

'ரெண்டு பேர்'

'என்ன வயசு? அவங்க என்னா சொல்றாங்க?'

'10 வயது. எட்டு வயது. ரெண்டு பெருமே எங்கிட்ட இன்றைக்கு வரைக்கும் சந்தோஷமாத்தான் பேசுறாங்க. 'இஸ்லாத்துல சேர்ந்துட்டியாப்பா! போட்டோல்லாம் பார்த்தேன். நல்லாருக்குப்பா' என்று சொன்னான் பையன். ஆனால் மனைவியோ நான் யாரையோ திருமணம் செய்து கொள்வதற்காகத்தான் மாறி விட்டதாக அபாண்டமாக சொல்கிறார்.'

'அப்படியா சொல்றாங்க?'

'ஐயோ அதத்தாங்க என்னால தாங்கிக்க முடியல. என் மனைவி மேல நான் உயிரையே வச்சிருக்கேன் பாய். 40 வயதுக்கு மேல் நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணி என்னத்த சாதிக்கப் போறேன்? இப்படி அபாண்டமா பழி சுமத்தறாங்களே! சிகரெட் குடிக்கிறேனா? தண்ணி அடிக்கிறேனா? விபசாரம் பண்றேனா? எதுவும் இல்லாமல் என் வேலை உண்டு. என் மார்க்கம் உண்டு என்று போய்க்கிட்டு இருக்கிறப்போ இது போன்ற பிரச்னைகள் வந்தால் நான் என்ன செய்வது?'

'நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். பேசாம தொழுது கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள். இறைவன் யாருடைய மனங்களையும் மாற்றக் கூடியவன்.'

'அதத்தான் பாய் நான் டெய்லி செஞ்சுகிட்டு இருக்கிறேன். ஆனால் நாளாக நாளாக அந்த நம்பிக்கை அருகிக் கொண்டே போகிறது. சாப்பிட உக்கார்ந்தா சாப்பிட மனசு வரல... தூங்க போனா தூக்கம் சரியா வர்ரதுல்ல.'

'ஆரம்பத்துல எல்லோருக்கும் நடக்கும் பிரச்னைகள் தான் இதெல்லாம். சிக்கலில்லாமல் இந்த பிரச்னைகளிலிருந்து மீள்வதில்தான் உங்களின் திறமை இருக்கிறது. உங்கள் மனைவிக்கு குழந்தைகளுக்கு செலவுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருங்கள். அது உங்கள் மீது கடமை.'

'ஆம். அதெல்லாம் அனுப்பிக் கொண்டுதான் இருக்கேன். எப்படியாவது என் மனைவி என்னை புரிஞ்சுக்கிட்டா அது போதும். ஒரு நல்ல வழிக்கு கூப்பிட்டா ஏன் இதனை புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க என்று ஆச்சரியமா இருக்கு'

'உங்களுக்கு தெரியுது. அவங்களுக்கு அது தெரியணுமே! அவ்வளவு ஈஸியா அதெல்லாம் நடந்துடாது. இத்தனை வருடம் பழகிய கலாசாரத்தை உதறி விட்டு வருவதென்பது எல்லோராலும் முடியாது. அதற்கு சற்று காலம் பிடிக்கும்'

மேலும் நிறைய தனது மனக் குறைகளை பேச முனைந்தார். ஆனால் எனக்கு நேரமாகி விடவே அவரிடம் செல் நம்பரைக் கொடுத்து விட்டு "ஏதும் தேவைகள் இருந்தால் என்னை அழையுங்கள். என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். நானும் உங்களின் மன அமைதிக்காக பிரார்த்திக்கிறேன்" என்று கூறி விட்டு நடையைக் கட்டினேன். இவரது குடும்ப பிரச்னைகள் சுமூகமாக முடிய நீங்களும் பிரார்தியுங்கள் சகோ.....

மறு நாள் வரை அவருடைய பிரச்னைகள் தான் எனது மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தன. பல தலைமுறைகளுக்கு முன்னால் எங்களது பெற்றோர்களும் இதே போன்ற அவச் சொற்களையும், பிரச்னைகளையும், மன உளைச்சல்களையும் சந்தித்திருப்பார்களே என்று என் மனம் பல நூறு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது. இந்த கணிணி யுகத்திலேயே இவ்வளவு பிரச்னைகளுக்கு இவர் முகம் கொடுக்கிறாரே! வாகன வசதி கூட இல்லாத அந்த நாட்களில் ஒரு கலாசாரம் விட்டு இன்னொரு கலாசாரத்துக்கு ஒட்டு மொத்தமாக மாறும் போது என்னவெல்லாம் கொடுமைகளை சந்தித்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே சென்றேன். எனது முன்னோர்களின் தியாகங்களை நினைத்து மெய் சிலிர்த்தது. அவர்கள் அன்று இட்ட விதை முளைத்து பூவாகி காயாகி இன்று கனிந்துள்ளது.

ஆனால் இன்றைய முஸ்லிம்களில் பலர் இதன் அருமை தெரியாது, தங்களின் முன்னோர்களின் தியாகத்தை மதிக்காது சினிமா கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றம் அமைத்துக் கொண்டும், மது, மாது, சூது என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஐந்து நேரத் தொழுகையும் கூட இல்லாமல் தான்தோன்றித்தனமாக சுற்றித் திரிவதைப் பார்கிறோம். சவுதியில் கூட ஜூம்ஆ தொழுகைக்குக் கூட போகாமல் ரெம்மி விளையாடிக் கொண்டிருப்பவர்களை நாம் எவ்வாறு அழைப்பது? இது போல் வாழ்க்கையை வீணாகவும் விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டவர்கள் இந்த சகோதரனின் மன உளைச்சலை சற்றே நினைத்துப் பார்பார்களாக! எப்படிப்பட்ட மார்க்கத்துக்கு நாம் சொந்தக்காரர்கள் என்ற உண்மை ஓரளவாவது புரியும். இஸ்லாம் வகுத்தளித்த நன்மை தீமைகளை பகுத்தறிந்து நிரந்தர வாழ்வினை சுகமாக்க நாம் எல்லோரும் முயற்சிப்போமாக!

'நம்பிக்கைக் கொண்டோர் யார் என்றால் இறைவனைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். இறைவனின் வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.'
-குர்ஆன் 8:2

Monday, February 09, 2015

உயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன? -2



'ஆன்மாக்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் இறைவன் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளது'
குர்ஆன் 39: 42


இந்த வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மைகளை மனிதர்களுக்கு கூறிக் கொண்டுள்ளது.

உடலில் உறவாடும் உயிருக்கும் ((Life) அந்த உயிருக்குச் செறிவூட்டி செம்மைப்படுத்தும் ஆன்மா(Soul) வுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை திருகுர்ஆன் அழகுற எடுத்துக் காட்டுகிறது. அல்லாஹ் ஆன்மாக்களை அவை மரணிக்கிற நேரத்திலும் இன்னும் தூக்கத்தில் அவை மரணிக்காத நிலையிலும் கைப்பற்றுகிறான்.

உறங்கும்போது நமக்கு கிளினிகல் மரணம் (Clinical Death) என்ற சம்பவம் நடப்பதில்லை. உயிர் மட்டும் உடலில் தங்கி இருக்கிறது. ஆனால் ஆன்மா இறைவனிடம் சென்று விடுகிறது. அதாவது உடலை விட்டு அது பிரிந்து விடுகிறது. உயிர் உடலை விட்டுப் பிரியும்போது கிளினிகல் மரணம் (Clinical Death) நிகழ்கிறது. அதாவது உயிரோட்டம் நின்று, உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலை (Clinical Death) சம்பவிக்கிறது. அப்போதும் ஆன்மா இறைவன் வசமாகிறது.

குர்ஆனின் இந்தக் கருத்து 10 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டானிய உளவியல் பேராசிரியர் ஒருவரின் கவனத்தை ஈர்த்தது. அவர் அந் நாட்டு, உளவியல் வல்லு நர்கள் சங்கத்தின் (British Psychologists Society) தலைவர். அவர் பெயர் டாக்டர் ஆர்தர் ஆலிசன் (Dr.Arthur Alison) அவர் தூக்கம், மரணம், கனவு போன்ற அதீத மனோ தத்துவ செயல்பாடுகள் (Para Psychology) குறித்து ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். அவரின் ஆய்வு முடிவுகள் (Datas) அன்றைய உளவியல் வல்லுநர்களின் கருத்துகளுக்கு முரண்பட்டிருப்பதைக் கண்டார். அம்முடிவுகளை அக்கருத்துகளைக் கொண்டு அவரால் விளக்க முடியவில்லை. அதனால் பல்வேறு மத நூல்களைப் படிக்கத் தொடங்கினார். அவற்றில் ஏதேனும் விடை கிடைக்குமா? என்று அலசினார். அந்தத் தேடுதல் வேட்டையில் அவர் கண்டதுதான் மேற்கண்ட 39:42 குர்ஆன் வசனம். குர்ஆனின் கருத்து மின்னணு (Electronic) கருவிகள் மூலம் அவர் கண்ட ஆராய்ச்சி முடிவுகளை அப்படியே கொஞ்சமும் பிசகாமல் விளக்கியது. பரவசமடைந்த பேராசிரியர் திருகுர்ஆனின் விளக்கத்தில் மெய் சிலிர்த்துப் போனார். அந்த வசனம் இப்படி முடிகிறது. "நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு உறுதியான பல சான்றுகள் இருக்கின்றன".

இதன்படி அந்த அறிஞர் உண்மையைக் கண்டார். சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தனது பெயரை அப்துல்லா எலிசன் என்றும் மாற்றிக் கொண்டார். டாக்டரின் ஆய்வுகள் நமக்கு சொல்ல வருவது நாம் உறங்கும்போது உடலில் உயிர் இருக்கிறது. ஆனால் ஆன்மா இல்லை. உயிர் பிரியும் போது உடலில் இரண்டும் இல்லை.

---------------------------------------------

இனி இந்து மதக் கருத்துக்குள் நுழைவோம். மரணித்த உடலை எரியூட்டும்போது ஆன்மா உடலை விட்டுப் பிரிகிறது என்ற இந்து மதத்தின் ஒரு சிலரின் வாதம் குர்ஆனின் கருத்துப் படியும் அறிவியல் ஆய்வுகளின் படியும் தவறாகும். மறு உலக வாழ்வை தவறாக புரிந்து கொண்டு மறு பிறவி என்ற கோட்பாட்டை வலிந்து தமிழர்கள் தலையிலும் கட்டி விட்டனர். :-) வாழும் கலை ரவி சங்கர் மறு பிறவி தத்துவத்தை மறுக்கிறார். பண்டைய தமிழ் நூல்களும் மறு பிறவி என்று எதுவும் கிடையாது என்று கூறுகிறது. இது பற்றி முன்பு பத்திரிக்கையில் வந்த சம்பவத்தை நினைவு கூர்வோம்.

இங்கிலாந்தில் ஒரு மூத்த ஹிந்து குடிமகன் அந் நாட்டு நீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கொன்றை 2009-ல் மேல் முறையீடு (Appeal) செய்திருந்தார். அவர் பெயர் தேவேந்தர் காய் (Devender Ghai) 70 வயதான அவர் 1958-ல் கென்யா எனும் ஆப்ரிக்க நாட்டிலிருந்து அங்கு போய் குடியேறியவர். அவர் குடியிருந்து வரும் New Castle என்ற நகரின் மாநகராட்சி மன்றத்திற்கு (City Council) மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தாம் இறந்த பின் தம் உடலை ஹிந்து மத ஆச்சாரப்படி திறந்த வெளியில் (Open Air) எரியூட்டுவதற்கு அனுமதிக்கும்படிக் கேட்டிருந்தார். ஆனால் அவர் கோரிக்கையை அம்மன்றம் நிராகரித்து விட்டது. அதனால் அவர் லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அவர் அந்த வழக்கில் கீழ்வருமாறு வாதிட்டார். இறந்த பின் புனித வேள்வி நெருப்பில் தகனமாகும் உடலிலிருந்து எனது ஆன்மா விடுவிக்கப்படுவதுடன் மறுபிறப்பு எனும் உயர் நிலையை அடையும் என்று ஒரு ஹிந்து என்ற முறையில் நான் நம்புகிறேன். எப்படி (கிரேக்க) புராணக் கதையில் ஃபீனிக்ஸ் ((Phoenix-பறவை) எரிந்த பின் தீ நாக்குகளிலிருந்து (Flames) எழும்பி மறு படியும் உருப்பெற்று வந்ததோ அதுபோல் எனது இந்த முறையீடு மத உணர்வுகளைத் தூண்டக் கூடியது என்பதை நான் மறுக்கவில்லை. அதுவும் குறிப்பாக இறப்பு என்பது நம்மோடு முடிந்து போய்விடுகிறது என்ற கருத் தோட்டத்தைப் பரவலாக நம்புகின்ற மக்கள் வாழும் ஒரு நாட்டில் இந்த வழக்கு இங்கிலாந்தில் ஒரு மாதிரி வழக்கு (A Test Case) என்று கருதப்பட்டது. மேலும் மரணித்த மனித உடலைப் போக்கி அழிக்கும்(Disposing off) வழி முறையைப் பற்றி சுவையான ஒரு விவாதத்தையும் எழுப்பியிருந்தது.

-(செய்தி : ஹிந்து நாளிதழ் (25.03.2009)

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?

இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.

ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.

இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.

'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்

மேற்கண்ட ஆதாரங்கள் மறு பிறவி என்பது இந்து மதமே ஒத்துக் கொள்ளாத ஒரு கோட்பாடு என்பதை விளங்குகிறோம்.

--------------------------------------------

Invited to the First Islamic International Conference on the Medical Inimitability in the Quran held in Cairo in 1985, Dr. Alison presented two papers:

The first paper was: “the psychological and spiritual methods of therapy in the light of the Holy Quran”,
The second paper was: “sleep and death in the light of the Quranic verse 39:42″ which he presented in association with Dr Muhammad Yehya.

Hearing the numerous Quranic facts presented in the conference, Dr Alison uttered the “Shahadah” and embraced Islam at the concluding session of the event.

In an interview given to the Arabic-weekly, he narrated the story of his conversion to Islam saying:

“During the conference on Medical Inimitability in the Qur’an, I could realize that the difference was great. Then I was convinced that Islam is the most proper religion that befits my inborn nature and conduct. In the heart of my hearts I had felt that there is a God controlling the Universe. He is the Creator.”

“Therefore, when I studied Islam, I found that it did not conflict with reason and science. I believe that is the revealed religion from the one and only God. As I witnessed the truth, I uttered the two testimonies. The moment I uttered it, I was overwhelmed by a strange and ineffable feeling mingled with ease, comfort and satisfaction.”

தகவல் உதவி:
http://aliaalifali.blogspot.com/2010/02/blog-post.html
http://annajaath.com/archives/7140
http://www.themodernreligion.com/convert/convert_Scientists.htm