Followers

Tuesday, April 11, 2017

ஓட்டிங் மெஷினில் தாராளமாக தில்லு முல்லுகள் செய்யலாம்!

ஓட்டிங் மெஷினில் தாராளமாக தில்லு முல்லுகள் செய்யலாம்!

நேற்று செந்தில் அவர்களின் நேர்காணலை புதிய தலைமுறையில் பார்க்க நேர்ந்தது. அதில் கிடைத்த சில தகவல்களை வரிசையாக பார்க்கலாம்.

1.அமெரிக்கவில் உள்ள மிக்ஷிகன் பல்கலைக் கழகம் இந்தியாவில் பயன்படுத்தப் படும் ஓட்டிங் மெஷின் நம்பகத் தன்மை அற்றது என்று ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளது.

2.பாஜக தலைவர் அத்வானி 10 ஆண்டுகளுக்கு முன்பு 'ஓட்டிங் மெஷினில் பல தில்லு முல்லுகள் செய்யலாம்' என்று ஆதாரங்களோடு புத்தகமே வெளியிட்டுள்ளார்.

3. எம்1, எம்2, எம்3 என்று தயாரிக்கப்படும் இந்த ஓட்டிங் மெஷினை தயாரிப்பவர்கள் மைக்ரோ சிப்ஸை காப்பி பண்ணி குறிப்பிட்ட கட்சி வெற்றி பெற ஓத்துழைக்க முடியும்.

4. ஆந்திராவில் ஒரு தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 300க்கு மேல் ஓட்டு விழுந்தது. தெலுகு தேசம் கட்சிக்கு 3 ஓட்டு பதிவானது. சந்தேகமடைந்து அந்த கிராமத்து மக்களை நேரிடையாக சென்று விசாரித்ததில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எவருமே ஓட்டளிக்கவில்லை என்று கூறினர். அனைவருமே தெலுங்கு தேசத்துக்கே வாக்களித்துள்ளனர். இதுவும் நிரூபிக்கப்பட்டது.

5. சமீபத்தில் உபியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு சுயேட்சை வேட்பாளர் போட்டியிட்டுள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் 100க்கு மேல் ஓட்டளித்துள்ளனர். ஆனால் இவருக்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. எனது ஓட்டும் மாயமாகியுள்ளது என்று புலம்புகிறார்.

6. கணிணி வளர்ச்சியடைந்த அமெரிக்கா போன்ற நாடுகள் ஓட்டிங் மெஷினின் விபரீதத்தை உணர்ந்து அதனை ஓரங்கட்டி விட்டன.

7. 2019ல் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக 2000 கோடி செலவில் புதிதாக ஓட்டிங் மெஷின் தயாரிக்கப்படுகிறதாம். மோடிக்கு ஆதரவாக இதுவும் மாற்றப்படலாம் என்பதால் 16 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.


நீதித் துறையையே மோடியும் அமீத்ஷாவும் வளைத்து போட்டு தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெறும் போது தேர்தல் கமிஷனில் உள்ள இந்துத்வா சிந்தனை உள்ளவர்களால் மோடிக்கு சாதகமாக பணியாற்ற வாய்ப்புள்ளது. எனவே இனி வரும் காலங்களில் ஓட்டிங் மெஷின் முறையை முற்றாக ஒழித்து விட்டு பழைய முறையான வாக்குச் சீட்டு முறைக்கே மாறுவோம். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும். போராட்டமும் தொடங்க வேண்டும்.


No comments: