Followers

Friday, April 07, 2017

அமெரிக்காவில் மற்றொரு இந்தியர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் மற்றொரு இந்தியர் சுட்டுக் கொலை!

வாஷிங்டன் நகரில் உள்ள பெட்ரோல் ஸ்டேஷனில், விக்ரம் ஜர்யால், 26, என்ற பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இந்தியர், கிளார்க்காக பணிபுரிந்தார். முகமூடி அணிந்து வந்த 2 பேர், விக்ரமிடமிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது ஒரு கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சுஷ்மா டுவிட்டரில் கூறுகையில், வாஷிங்டன்னில் இந்தியாவை சேர்ந்த விக்ரம் ஜரியால் சுட்டு கொல்லப்பட்டது குறித்த தகவல் வந்துள்ளது . 26வயதாகும் விக்ரம், 25 நாட்களுக்கு முன்னர் தான் அமெரிக்கா சென்றார். தனது குடும்ப நண்பரின் பெட்ரோல் ஸ்டேசனில் பணிபுரிந்த அவரை, கடந்த 6ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அங்கு வந்த இரண்டு மர்மநபர்கள், துப்பாக்கியால் சுட்டு அவரிடமிருந்த பணத்தை பறித்து சென்றனர். மார்பில் குண்டுபாய்ந்ததால் விக்ரம் உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமைப்பினருடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம் . சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது. விரைவில் குற்றவாளி பிடிபடுவார். இவ்வாறு சுஷ்மா தெரிவித்துள்ளார்.

தினமலர்
08-04-2017

நாகரிக முதிர்ச்சி அடைந்ததாக பீற்றிக் கொண்டு உலகை குற்றம் சொல்லும் அமெரிக்க அரசு முதலில் தனது மக்களுக்கு பாடம் எடுக்கட்டும்.

No comments: