Followers

Thursday, April 06, 2017

ராம நவமி எப்படி நடக்கிறது பாருங்கள்!





ராம நவமி எப்படி நடக்கிறது பாருங்கள்!

இந்துக்களின் பண்டிகை. அதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளட்டும். அதில் மற்ற மதத்தவர்கள் பாதிக்கப்படும் போதுதான் அதனை விமரிசிக்க வேண்டியதாக உள்ளது. இந்த ஊர்வலத்தில் ஆயதங்களோடு வலம் வருபவர்களில் 10 சதம் கூட பார்பனர்கள் இருக்க மாட்டார்கள். ராமனை காட்டி, பசுவைக் காட்டி போலி மத வெறி ஊட்டி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை அழிவின் விளிம்பில் கொண்டு சென்றுள்ளது இன்று இந்துத்வா.

கோயம்பத்தூர் கலவரத்தில் முஸ்லிம்களை வெட்டியது, அவர்களின் சொத்தை கொள்ளையடித்தது பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட அருந்ததியின மக்களே! பிரியாணி அண்டாவை திருடிச் சென்றதாகட்டும், உபியில் குஜராத்தில் இஸ்லாமியர்களை கொலை செய்வதிலாகட்டும் அனைத்து மட்டத்திலும் ஈடுபடுவது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களே. பார்பனர்கள் கலவரத்தை தூண்டும் காரணிகளை கண்டு அதனை செயல்படுத்துவது மட்டுமே. வேலை முடிந்தவுடன் 'நீ சூத்திரன் வெளியே போ' என்று விரட்டியும் விடுவார்கள்.

தமிழகத்தில் அனைத்து இஸ்லாமிய கிராமங்களை ஒட்டியும் ஒரு சேரியும் இருக்கும். அங்கெல்லாம் அரிஜன மக்கள் சகல சவுகரியங்களோடு வாழ்கின்றனர். அந்த சவுகரியம் ஓரு அக்ரஹாரத்திலோ அல்லது ஒரு வன்னிய, தேவர் கிராமத்திலோ அவர்களால் பெற முடியாது. இருந்தும் பார்பன சூழ்ச்சியானது அந்த மக்களின் கண்களை கட்டி இஸ்லாமியருக்கு எதிராக அணி திரள வைக்கிறது.

பார்பனியம் என்னதான் முயற்சித்தாலும் இஸ்லாத்தின் ஈடுபாட்டை கொஞ்சமும் முஸ்லிம்களிடமிருந்து குறைத்து விட முடியாது. ஆனால் விட்டில் பூச்சிகளாக பார்பனிய வலையில் வீழ்ந்து கருகும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் அறியாமையை எண்ணி நம்மால் வருந்தத்தான் முடியும்.

பார்பனிய குழந்தைகளை நன்றாக வளர்த்து படிக்க வைத்து டாக்டராகவும் இன்ஜினியராகவும் ஆக்கி அமெரிக்கா ஐரோப்பா என்று அனுப்பி விடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கைகளில் ராமனின் பெயராலும் பசுவின் பெயராலும் ஆயுதங்களை கைகளில் கொடுத்து குற்றப் பரம்பரையாக மாற்றுகின்றனர். பார்பனியத்தின் சூழ்ச்சியை இந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் என்று உணருகிறார்களோ அன்று தான் அவர்களுக்கு விடிவு காலம்.

No comments: