Followers

Sunday, January 21, 2018

மீண்டும் மீண்டும் மூக்குடைப்படும் பாண்டே!

மீண்டும் மீண்டும் மூக்குடைப்படும் பாண்டே!

ரங்கராஜ் பாண்டே:

ஆண்டாள் பிறப்பை குறித்து சந்தேகம் எழுப்பும் உங்களைப் போன்றவர்கள் ஏசுவின் பிறப்பை பற்றியோ அல்லாஹ்வின் உண்மைத் தன்மையைப் பற்றியோ கேள்வி எழுப்புவதில்லையே ஏன்?

சுபவீரபாண்டியன்:

இது சம்பந்தமாக பலமுறை பதில் அளித்து விட்டேன். பார்பனர் மற்றும் பார்பனர் அல்லாதவரின் பிரச்னையை மத மோதலாக மாற்ற உங்களை போன்றவர்கள் முயற்சித்துக் கொண்டே உள்ளீர்கள். கடவுள் இல்லை என்றால் அது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் என்பது சாதாரண அறிவுடையவருக்கும் பொருந்துமே...

ரங்கராஜ் பாண்டே:

அப்படியானால் மற்ற மதங்களை விடுத்து இந்து மத கடவுள்களை மட்டும் விமரிசிப்பதேன்?

சுபவீர பாண்டியன்: இஸ்லாமிய மதமோ, கிருத்துவ மதமோ என்னை சூத்திரன் என்று எனது பிறப்பை இழிவாக்கவில்லை. இந்து மத வேதங்களும், இதிகாசங்களும் என்னை சூத்திரன் என்று பழித்துரைக்கவில்லையா? எனது பிறப்பை இழிவாக்கும் இந்து மதத்தை விமரிசிப்பதுதானே சரியாக இருக்கும்.

(வழக்கமாக பாண்டேயிடம் இதற்கும் பதில் இல்லை.) :-)








3 comments:

A.Anburaj Anantha said...

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள அசுத்தங்கள் சுத்தம் செய்யப்பட பின்னர் தான் பிராணாயாமமும், தியானமும் எளிதல் கைகூடும். நாடிகள் (நரம்புகள்) அசுத்தம் நிறைந்து இருக்குமானால், வாயுவானது நாடிகளில் நுழைவது கடினம்.

எனவே, பிராணாயாமம் பயில்வதற்கு முன்னர் நாடிகள் சுத்தப்படுத்தப் பட வேண்டும். நாடி சக்தி பிராணாயாமம் பயில்வதற்கு அடிப்படை ஆகும்.

நாடிகளை இரண்டு வழிகளில் சுத்தப்படுத்த முடியும். அவையாவன; சாமனு, நிர்மனு, சாமனு என்பது, பீஜ மந்திரத்தினால் மூளையைச் சுத்தப்படுத்துதல். நிர்மனு என்பது உடலை சுத்தப்படுத்துதல்.

ஒரு தியான நிலையிலோ, சுலபமான முறையிலோ அமர்ந்து முதுகெலும்பை நேராக நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இடது கை முழங்காலிலும், வலது கை மூக்கின் மேலும் இருக்க வேண்டும். கட்டை விரல் மூக்கின் வலது புறமும், நான்காவது ஐந்தாவது விரல்கள் இடது புறமும் இருக்க வேண்டும். சுட்டு விரலையும், நாடி விரலையும் மடக்கிக் கொள்ள வேண்டும். மூக்கை அழுத்தித் திருப்பாமல், எலும்புப் பகுதியை மட்டும் அழுத்திக் கொண்டு சுவாசத்தில் ஈடுபட வேண்டும்.

முதலில் இடது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு பின்னர் அதே நாசி வழியாக நீண்ட உள்மூச்சை இழுக்க வேண்டும். அப்போது வலது நாசி துவாரம் மூடப்பட்டிருக்க வேண்டும்.

பின்னர் இடது நாசியை மூடிக் கொண்டு வலது நாசித் துவாரம் வழியே மூச்சை வெளியிட வேண்டும். பின்னர் வலது நாசி வழியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின்னர் நாசி வழியே மூச்சை வெளியிட வேண்டும். இது ஒரு தடவை என கணக்கிட வேண்டும்.

இந்த சுவாச முறையில் உள்மூச்சு வெளிமூச்சு இரண்டும் மிகவும் மெதுவாக நடக்க வேண்டும். சப்தம் எதுவும் உண்டாக்காமல் பயிற்சி செய்ய வேண்டும். உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. அதிகாலை அல்லது பின் மாலை நேரம் இதற்கு ஏற்ற காலமாகும்.

ஏனெனில், சூரியனிடமிருந்து வரும் அல்ட்ராவயலட் கதிர்கள் உடலில் உள்ள ஆஷ்துமா, ஜலதோஷம், இருமல் இவற்றை விரட்டுகிறது. வைட்டமின் 'டி' சூரியகதிர்களில் உள்ள அல்ட்ராவயலட் கதிரில் உள்ளது.

நுரையீரல், இதயம், வயிறு ஆகியவை சுத்தமடையும். நுரையீரலின் சுவாசிக்கும் தன்மை அதிகப்படும். சுவாசம் சீரடையும். தியானத்திற்கு முன் நாடிசுத்தி செய்வதால், தியானம் எளிதில் கைகூடும்.

vara vijay said...

Suvanapriyan r u agreeing with subha v that there is no God.

Dr.Anburaj said...

How will they go on asserting that there is nothing Indian about India; that there was never anything called India at all; that there is today an India thanks to invaders like Aryans, Turks, Moghuls or the British; and thanks again to British that we are a nation….

Yes, the secular scholarship is in deep trouble. But they have a solid reason to feel assured that it will take decades for this truth to overcome the billions of pages of falsehood printed and circulated so far. For the grains of truth to emerge from this mountain of falsehood will take a life’s time.

Read more at http://www.patheos.com/blogs/drishtikone/2005/11/bbc-proves-vivekananda-right-after-century/#yc5HBDbVjAXqkPzE.99