Followers

Wednesday, January 31, 2018

இந்துவுக்கு நீதி வழங்கிய இஸ்லாமிய நீதிபதிகள்!


மலேசியாவில் கோலாலம்பூரை சேர்ந்தவர் இந்திராகாந்தி. இவருக்கு மூன்று பிள்ளைகள்.. ஒன்பது ஆண்டுக்கு முன் இவர் கணவர் இஸ்லாத்துக்கு மதம் மாறிவிட்டார்.

அதோடு தன் மூன்று பிள்ளைகளையும் இஸ்லாத்துக்கு மாற்றிவிட்டு.. பெயரையும் அரசு கெசட்டில் பதிவு பன்னி இருக்கிறார்.. இதை எதிர்த்து தாயார் இந்திரா வழக்கு தொடுத்தார்... நேற்று உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ச்சில் விசாரணை முடிந்து தீர்ப்பு வந்தது.

அதன்படி.."பிள்ளைகளை தந்தை மட்டும் தன்னிச்சையாக இஸ்லாத்தில் மாற்றியது செல்லாது என்றும்.. மதம் மாறவேன்றுமென்றால் தாயாரின் சம்மததோடு பெற்றோர் இருவரும் கருத்தொற்றுமை ஏற்பட்டு முடிவு செய்ய வேண்டும்.. ஒருவர் மட்டும் எடுக்கும் முடிவை ஏற்று கொள்ள முடியாது"  என்று தீர்ப்பு சொல்லி பிள்ளைகள் தாயோரோடு சேர்க்க உத்தரவு போட்டு விட்டனர்.

இதில் கவனிக்கவேண்டியது.. மலேசியா இஸ்லாமிய நாடு..வழக்கை விசாரித்த நீதிபதிகள் இஸ்லாமியர்கள்... ஆனாலும் நீதியை நிலை நாட்டியுள்ளனர்.

வலுக்கட்டாயமாக யாரையும் இஸ்லாத்தில் இணைக்க இயலாது
என்பதை..எடுத்து சொல்லி இருக்கின்றனர்.

-
இஸ்மாயில்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்-குர்ஆன் ஸூரா அல்-மாயிதா= 5:8)


13 comments:

Dr.Anburaj said...


wonders of Tamil Literature-

உங்களுக்கு இசைப் பயிற்சியும் உண்டோ? 7 பண்களும் 11 இசைக் கருவிகளும்

உங்கள் சொற்களில் நடம் புரிகின்றனவே!

துத்தம் கைக் கிள்ளை விளரி தாரம்

உழை இளி ஓசை பண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கையோடு

தகுணிதம் துந்துபி தாளம் வீணை

மத்தளம் கரடிகை வன் கை மென் தோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)

அத்தனை விரவினோடாடும் எங்கள்

அப்பன் இடம் திருவாலங்காடே

Dr.Anburaj said...


காஷ்மீரில் படுகொலைக்கு பயந்து இந்தியாவின் பிற பகுதிகளில் உள்நாட்டு அகதிகாக வாழும் இந்துக்களின் நிலை என்று தேறும்?

பாக்கிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி கார்கில் புகழ் பா்வேஸ் இந்தியாவிற்கு எதிராக காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளை சுதந்திர போராட்ட வீரா்கள் என்று புகழ்ந்தார்.அவரைப் போலவே காஷ்மீா் சட்டமன்ற உறுப்பினா் அசீஸ் அகமது மிர் ” காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்படும் பயங்கரவாத காடையா்கள் அனைவரும் தியாகிகள் மற்றும் சகோதரா்கள் என்று அவா்களது மரணத்தை சாதனையாக பிரச்சாரம் செய்வது தவறு என்று அறிவித்துள்ளார்.அதற்கு மத்திய அமைச்சா் ஜிநேந்திர சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கம் போல் முஸ்லீம் இயக்கங்கள் கள்ள மௌனம் காத்து வருவது பச்சை தேசத் துரோகம்.

A terrorist is just a terrorist: Jitendra Singh on PDP MLA's comment
Jan 12, 2018
JAMMU: Union minister Jitendra Singh on Friday tried to play down the "Kashmiri militants are martyrs" remarks of a PDP MLA, calling it a "stray comment" and said the government was firm on its stand against terrorism.
Aijaz Ahmed Mir stoked a controversy yesterday when he described Kashmiri terrorists shot dead in encounters with security forces as "martyrs" and "brothers" and also cautioned against glorifying their killings.
"If a stray comment is made by a stray person, it is not to be given any importance. But as far as we are concerned, a terrorist is a terrorist and a terrorist only," Singh told reporters here in reply to a question seeking his reaction over the remarks.
"Terrorism is to be dealt in the way terrorism is dealt. We have zero tolerance against terrorism and government is clear on this stand and will continue to follow this stand," he said.
The Union minister said such comments amount to disrespecting the nation's security forces.
"By saying anything, terrorist cannot be a martyr and by making such an apologetic statement about terrorists, who engineer terrorist acts, amounts to disrespecting security forces," said Singh.
Full report at:
https://timesofindia.indiatimes.com/india/a-terrorist-is-just-a-terrorist-jitendra-singh-on-pdp-mlas-comment/articleshow/62479392.cms
--------


Dr.Anburaj said...



உறுதியான இந்து பெண்மணி இந்திரா.
உனக்கு எனது வணக்கங்கள்
வந்தனங்கள்.
வாழ்க நீ.
இந்து பெண்களுக்கு தாங்கள் ஒரு முன்உதாரணம்.

Dr.Anburaj said...

அன்பென்று கொட்டு முரசே — மக்கள்

அத்தனை பேரும் நிகராம்.

இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு

யாவரும் ஒன்று என்று கொண்டால் ’’ (பாரதி)

‘’யாதும் ஊரே, யாவரும் கேளிர்‘’ (உறவினர்) என்ற கொள்கையை உடையவன் நான். ஆயினும் வெளிநாட்டு ‘’அறிஞர்களும்’’(?!?!), உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன். ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்தபின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

திராவிடர்கள் பிராமணர்களே ! பிராமணர்கள் திராவிடர்களே !!

திராவிடர்கள் யார்? தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன!!

ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு” என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?

சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்!

நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே!

Rahul_Dravid

Dr.Anburaj said...

கிரிக்கெட் ஆடும் திராவிடன்

கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராஹுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது? ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர். கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிராமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.

இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.

உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்!.

இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்துள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்! அது சரியல்ல. உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை, அவர் தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.

Dr.Anburaj said...

திராவிடாசாரியா

அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்.:

பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.

(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன்”கர்நாடக” என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது)

அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ:

திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.

திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.

திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்

திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.

நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.

தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை — திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.

தென் இந்தியாவில் இருந்து வடக்கே போன எல்லோரையும் ”மதறாசி” ( மெட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள்!!இதுபோலத்தான் திராவிடன் என்பதும்.

Dr.Anburaj said...

தமிழ் நாடு — திராவிடம் அல்ல!!!!!

இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை!!!.இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை. இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?

தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது (தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் ‘’இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்!!

தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.இதே போல தெற்கிலிருந்து சென்ற பிராமணர்களுக்கு திராவிட் — என்று பெயர்.

திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை. பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை. திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிக்கும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லவே இவ்வளவும் எழுதினேன்.

Dr.Anburaj said...

வெளிநாட்டு ‘’அறிஞர்கள்’’ மேலும் பல வியப்பான விஷயங்களைச் சொல்லி குழப்பத்தை உண்டக்கிப் ,பிளவை உண்டாக்கப் பார்க்கின்றனர். தமிழன் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து வந்தவன். அவனுடைய மொழிக்கும் துருக்கிய மொழிக்கும், பின்லாந்துகாரர் மொழிக்கும் தொடர்பு உண்டு என்றும் வாதிக்கின்றனர். ஒருபக்கம் சிந்து வெளியில் இருந்து ஆரியர்கள் அடிக்குப் பயந்து ஓடிவந்தவன் என்றும் மறுபக்கம் எங்கோ உள்ள பின்லாந்துகாரனுடன் உறவு கொண்டவன் என்றும் சொல்லிக் குழப்புகின்றனர். தமிழர்களோ, ”நாங்கள் குமரிக்கண்டவாசிகள்” — என்று எந்த ஆதாரமும் இல்லாமல் பேசிவருகின்றனர்.

Dr.Anburaj said...

ஆநிரை கவர்தல்

ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போரைத் துவக்குவது எப்படி? ரிக்வேதத்திலும் மஹாபாரதத்திலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் ஒரே முறையைத் தான் பாடி இருக்கிறார்கள். எல்லை கடந்து போய் மாடு திருடுங்கள், மோதல் வரும்— இதுதான் ரிக் வேத காலத்திலிருந்து சேர சோழ பாண்டிய மன்னர் வரை கையாண்ட உத்தி. இமயம் முதல் குமரி வரை ஒரே உத்தி. ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்குப் பின்பற்றப்பட்ட உத்தி. ரிக்வேதத்திலும் சங்கத் தமிழ் பாடல்களிலும், பாகவதத்திலும், மஹா பாரதத்திலும் ‘’ஆநிரை கவர்தல்’’ உள்ளது.

ஆரியர்கள் வேறு, திராவிடர்கள் வேறு என்றும் இருவருக்கும் வெவ்வேறு கலாசாரம் இருந்தது என்றும் பொய்மை வாதம் பேசியோருக்கு இந்த உண்மை ‘’சம்மட்டி அடி’’ கொடுக்கும். இது ஒரு வாதம் மட்டும் அல்ல. இமயம் முதல் குமரி வரை பாரதம் ஒன்றே, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றே என்று நிரூபிக்க ஆணித்தரமான வாதங்களைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

தோற்றுப் போன மன்னர்களின் நிலத்தை, கழுதைகளை ஏரில் பூட்டி உழும் வழக்கத்தை கலிங்க மன்னன் காரவேலனும் புறநானூற்று மன்னனும் பின்பற்றியதை ‘’கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’’ என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன். வடக்குத் திசை புனிதமானது; இமயமும் கங்கையும் புனிதமானது என்பது புறநானூற்றிலும் காளிதாசன் கவிதையிலும் இருப்பதையும் பல கட்டுரைகளில் குறிப்பிட்டேன்.

மஹாபாரதத்தில் விராட பர்வத்தில் ஆநிரை கவர்தல் வருகிறது. மத்ஸ்ய தேச மன்னன் விராடனின் அரண்மனையில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் (கரந்துறை வாழ்க்கை) செய்கின்றனர். த்ரிகர்த்தா படைகள் திடீரென்று தாக்கி ஆநிரைகளைக் கவர்ந்து விராட மன்னனையும் கைது செய்து விடுகின்றனர். 13 ஆண்டுகள் வனவாசம் முடிந்தவுடன் பாண்டவர் ஐவரும் அவர்களுடைய உண்மை ஸ்வரூபத்தைக் காட்டி படைகளுடன் சென்று விராடனை விடுதலை செய்கின்றனர். அவன் தனது மகள் உத்தராவை அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்குக் கொடுக்கிறான்.

Dr.Anburaj said...

உண்மை என்ன? உலகில் வேறுபாடு இல்லாத இடங்களும் இல்லை, இனங்களும் இல்லை. ஒரே தகப்பனுக்கும் தாய்க்கும் பிறந்த பிள்ளைகளிடம் எவ்வளவு வேறுபாடு? இதில் ஆரியன் யார், திராவிடன் யார்?

இவ்வளவு எழுதினார்களே, வெளிநாட்டு அறிஞர்கள், உலகில் வேறு எங்காவது இந்த இன விஷத்தை ஊற்றினார்களா? இந்த விஷம விதைகளை விதைத்தார்களா? அவர்களுக்குத் தெரியும் தமிழன் ஒருவன் தான், 1500 வருடங்களுக்கு இடைவிடாமல் சண்டை போட்ட ஒரே இனம் என்று. தமிழ் இனம்.— சேர சோழ பாண்டியர்கள் போல— ஒருவனை ஒருவன் அழித்த இனம் இது என்பதால் பிரிவினை வித்தை விதைக்க அருமையான விளை நிலம் என்று கண்டுகொண்டார்கள்.

ஆரியப் பூனை எது? திராவிடப் பூனை எது?

‘’ஆயிரம் வருடம் அன்பிலா அந்நியர் ஆட்சி’’ என்று பாடிய பாரதி, ஒரு கருத்தைப் பூனைக் குட்டி உதாரணத்தால் சொல்கிறார்:

வெள்ளை நிறத்தொரு பூனை— எங்கள் வீட்டில் வளருது கண்டீர்;

பிள்ளைகள் பெற்றதப் பூனை— அவை பேருக் கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி— கருஞ் சாந்து நிறமொரு குட்டி

பாம்பு நிறமொரு குட்டி— வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி



எந்த நிறமிருந்தாலும்— அவை யாவும் ஒரே தரமன்றோ?

இந்த நிறம் சிறிதென்றும்— இஃது ஏற்றமென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்—அதில் மானுடர் வேற்றுமை இல்லை;

எண்ணங்கள் செய்கைகள் எல்லாம்—இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்

—- மஹா கவி சுப்ரமண்ய பாரதி

நான் போடும் விடுகதை என்ன வென்றால் இதில் எது ஆரியப் பூனை? எது திராவிடப் பூனை? எது மங்கோலியப் பூனை? எது முண்டா இனப் பூனை ?

வெள்ளைக்காரன் கையில் இப்பாடல் கிடைத்தால் ஒரு ஆரிய திராவிடப் பிரச்சனையைக் புகுத்தி பி.எச்டி. வாங்கி விடுவான். அதிலும் அதில் கருப்பு நிற திராவிடப் பூனைதான் பழையது…. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் வாளொடு முன் தோன்றியது —மிக புத்திசாலியானது… இது போய் எலியைப் பிடிக்காது…. எலியே இதன் வாயில் வந்து விழுந்துவிடும் என்று எல்லாம் எழுதி… பேசி….. உலகத் தமிழ் நாட்டில் பொன்னாடை, பட்டம், இலவச பிளேன் டிக்கெட், ஹோட்டல் ரூம் ஆகிய எல்லாம் வாங்கிவிடுவான். உண்மை என்னவென்றால்

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்—அதில் மானுடர் வேற்றுமை இல்லை என்று பாரதி சொன்னதே.

ஆதி காலத்தில் இந்தியா முழுதும் ஒரே கலாசாரம், ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே பண்பாடு இருந்தது. வெளிநாட்டுப் படை எடுப்புகளால், வியாபாரத்தால், இனக் கலப்புகளால் கொஞ்சம் கொஞ்சமாக இது மாறியது. ஆங்கிலத்தில் ஒரு வழக்கு உள்ளது; Change is inevitable = ‘’மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது’’. இன்று திருவள்ளுவர் உயிருடன் வந்து ஒரு திருக்குறள் புத்தகம் விலைக்கு வாங்கினால் அவரால் அதைப் படிக்கமுடியாது. ஏனெனில் அவர் கால எழுத்து வேறு, இப்போது நான் எழுதும் தமிழ் எழுத்து வேறு. எல்லாம் மாறிவிட்டன.

Dr.Anburaj said...

சாகும் வரை உண்ணாவிரதம்

மஹாத்மா காந்தியால் மிகவும் பிரபலமான ஒரு வழக்கம் உண்ணாவிரதம். அவரே பல முறை சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கி பின்னர் கைவிட்டும் இருக்கிறார். இது இன்று நேற்று துவங்கியதல்ல.
பல சமண முனிவர்கள் இப்படி உயிர் துறந்தனர். சமணர்கள் இதை சல்லேகனம் என்று அழைப்பர்.

ராமாயணம் ,மஹாபாரதத்தில் இது இருக்கிறது. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இது உண்டு. பாரத நாடு முழுதும் வட திசையை புனித திசை என்று கருதியதை ஏற்கனவே ‘’வடக்கே தலை வைக்காதே’’ என்ற எனது கட்டுரையில் எழுதி இருக்கிறேன். வடக்கு நோக்கி உண்ணா நோன்பு இருந்து உயிர் துறத்தல் நாடு முழுதும் உண்டு.

சோழன் கரிகால் பெருவளத்தானோடு, சேரமான் பெருஞ்சேரலாதன் பொருதியபோது புறப்புண் ஏற்பட்டு நாணி வடக்கிருந்தான். அவனை கழாத் தலையார் பாடிய பாடலில் (புறம் 65)

‘’மறத்தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன்’’ என்றும்

மிகப் புகழ் உலகம் எய்தி, என்றும்

‘’புறப்புண் நாணி, வடக்கிருந்தோனே’’ என்று வெண்ணிக்குயத்தியாரும் (புறம் 66) பாடுகின்றனர்.

கோப்பெருஞ் சோழனை அவனுடைய மகன்கள் எதிர்த்தபோது, எயிற்றியனார் என்னும் புலவர் சொற்படி, நாட்டை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்தார்.

அவருடைய ஆரூயிர் நண்பர் புலவர் பிசிராந்தையார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை. ஆயினும் சோழன் எதிர்பார்த்தது போலவே பிசிராந்தையாரும் சாகும் வரை உண்ணா நோன்பில் கலந்து உயிர்நீத்தார்.
பொத்தியார் என்ற புலவரும் உயிர்நீத்தார். (புறம் 214 முதல் 223 வரை) பாரியின் மரணத்துக்குப் பின், புலவர் கபிலரும் வடக்கிருந்து உயிர்நீத்தார்.

ராமாயணத்தில்………..

வடக்கிருத்தலை, பிராயோபவேச விரதம் என்று வடமொழியில் சொல்லுவர். ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் (56-ஆவது சர்க்கம்) அங்கதன் உண்ணாவிரதம் இருந்ததைக் காண்கிறோம். சீதையை எங்கும் தேடியும் காணாத அங்கதன் இப்படிச் செய்தான். ஆனால் வட திசை நோக்காதபடி, கிழக்கு திசை நோக்கி தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு, தர்ப்பையைப் பரப்பி உண்ணாவிரதம் இருந்தான். இருந்தபோதிலும் தர்ப்பையை எல்லோரும் பயன்படுத்துவதால் இது நாடு தழுவிய ஒரு வழக்கம் என்பது சொல்லாமலே விளங்கும்.

குமாரில பட்டர் என்ற மாமேதை புத்தமத ரகசியங்களை அறிவதற்காக பொய் சொல்லிவிட்டார். வேதம் படித்துவிட்டு பொய் சொன்னதற்குப் பிராயச்சித்தமாக பஞ்சாக்னியில் உயிர் துறந்தார். உடலின் நாலு பக்கமும் உமியைக் குவித்து, நாற்புறமும் தீயை ஏற்றி மேலே சூரியன் தஹிக்க, ஐந்து அக்னியில் உடலைச் சிறிது சிறிதாகக் கருக்கி உயிர்த் தியாகம் செய்தார். இதற்கு மன வலிமையும், உடல் வலிமையும் எவ்வளவு தேவை என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

Dr.Anburaj said...

யுதனேசியா’ Uthanesia என்னும் கருணைக் கொலை பற்றி தற்காலத்தில் பத்திரிக்கைகளில் நிறைய படிக்கிறோம். யாரேனும் தீராத நோயில் நீண்டகாலம் கஷ்டப்பட்டால், அவர் இருப்பதைவிட போவதே மேல் என்று அவரை மேலுலகத்துக்கு அனுப்பிவைப்பது பல நாடுகளில் சட்டபூர்வம் ஆக்கப்பட்டுவிட்டது. அன்பின் காரணமாக ஒரு வகைப் பறவையும் இப்படி செய்கிறது! தான் பெற்ற குஞ்சுகளையே அது கொன்றுவிடுகிறது.

அமெரிக்காவில் மாக்கிங் பர்ட் mocking- bird – என்னும் பறவை வகை உண்டு. இவை கிளி, மைனா போல தான் கேட்ட ஒலிகளை அப்படியே செய்துகாட்டி விகடம் செய்யும் பறவை வகை.

இது பற்றிய அதிசயச் செய்தி இதோ:–

ஆர்ச்சிபால்ட் ரட்லெட்ஜ் என்பவர் எழுதுகிறார்: “நான் சிறுவயதில் படு சுட்டிப்பயல். அமெரிக்காவில் கரோலினாவில் வசித்தபோது பறவைகளைக் கூண்டில் அடைத்துப் போட்டு மகிழ்வேன். ஒரு மாக்கிங் பறவை வகையைப் பிடித்து கூண்டில் போட்டால் வாழ்நாள் முழுதும் அதன் இசையைக் கேட்டு மகிழலாம் என்று குஞ்சு ஒன்றைப் பிடித்துக் கூண்டில் அடைத்தேன். என்ன அதிசயம் பாருங்கள்! மறு நாள் அதன் தாய் வந்து அதற்கு உணவு ஊட்டியது.

அட நமக்கு இனி செலவும் இல்லை; கவலையும் இல்லை! ஒரு தாய் கவனிப்பது போல நாம் கவனிக்க முடியாது. அன்பைத் தடைப் போட்டுத் தடுக்கும் தாழ்ப்பாள் கிடையாதே என்று எண்ணினேன்.

அந்தோ பரிதாபம்; இரண்டாவது நாள் கூட்டில் உள்ள பறவையைக் கொஞ்சுவதற்காக எட்டிப் பார்த்தேன். அது இறந்து கிடந்தது. எனக்கு மிகவும் வருத்தம்.ஆனால் காரணம் தெரியவில்லை.

புகழ்பெற்ற அமெரிக்க பறவையியல் நிபுணர் ஆர்தர் வெய்ன் என்பவரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார்: மாக்கிங் பறவை வகைப் பறவைகள் தங்கள் குஞ்சுகள் கூண்டில் அடைக்கபட்டால், அதற்கு விஷமுள்ள பழங்களைக் கொண்டுவந்து ஊட்டிக் கொன்றுவிடும். ஏனெனில், தனது அன்பிற்கினிய குஞ்சுகள் இப்படி அடைபட்டு, சித்திரவதைப் படுவதை அவைகளின் தாய் விரும்புவதில்லை” என்றார்.

பறவைகளிடமிருந்துதான் மனிதன் கருணைக் கொலையைக் கற்றுக் கொண்டானோ?

ASHAK SJ said...

அய்யோ பாவம், வடிவேலு ஒருபடத்தில் தன்னைத்தான் துரத்துகிறார்கள் என்று முடியும் வரை ஓடுவார், ஒடடமுடியாத போது நின்றுகொண்டு வெட்டுங்கடா வெட்டுங்கடான்னு சொல்வார் அதுபோலத்தான் காஸ்மீர் ஹிந்து பண்டிட்டுகள் எங்கே முஸ்லிம்கள் தங்களை கொன்றிடுவார்களோ என்று எண்ணி வெளியேறிவிட்டார்