Followers

Sunday, April 14, 2019

மாட்டின் பெயரை சொல்லி மற்றொரு உயிர் பலி!

மாட்டின் பெயரை சொல்லி மற்றொரு உயிர் பலி!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது கும்லா மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ள ஜூம்ரோ கிராமத்தில் வசித்து வருபவர் அத்ரானீஸ் குஜூர். இவர் வளர்த்து வந்த எருது ஒன்று சுகவீனத்தால் இறந்து விட்டது. இறந்த மாட்டின் உடலை கிராமத்தினர் சமைப்பதற்காக அறுத்துள்ளனர்.
அருகில் உள்ள ஜெய்ராகி கிராமத்திலிருந்து ஒரு சில பசு குண்டர்கள் வந்து இறந்தது பசு என்று வாதிட்டுள்ளனர். அதன் பிறகு மாட்டை அறுத்துக் கொண்டிருந்தவர்களை சராமாரியாக அடிக்க ஆரம்பித்துள்ளனர். நான்கு பேரை பிடித்து காவல் நிலையத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். அடி தாங்காமல் ஒருவர் இறந்துள்ளார். மற்ற மூன்று பேரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர் கிருத்தவர். மிருகத்துக்காக இன்னும் இந்த நாட்டில் எத்தனை உயிர்களை காவு வாங்குவதாக முடிவெடுத்துள்ளனர் இந்துத்வாக்கள்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
14-04-2019

No comments: