Followers

Friday, April 12, 2019

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் நாட்டை பிளவு படுத்தி விடும் - துஷார் காந்தி

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் நாட்டை பிளவு படுத்தி விடும் - துஷார் காந்தி
காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாவின் 150 வது பிறந்த தினம் போர்பந்தரில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் பேசிய காந்தியின் பேரன் துஷார் காந்தி 'ஆர்எஸஎஸின் ஒரு சில செயல்பாடுகள் நன்றாக இருந்தாலும், அதன் கொள்கைகளில் நான் முற்றிலும் மாறுபடுகிறேன். ஆர்எஸ்எஸின் சித்தாந்தமானது நமது நாட்டை பிளவு படுத்தி விடும். மஹாத்மா காந்தியை கொலை செய்தது கோட்சே. ஆனால் இன்று வரை கோட்சேயை ஒரு தியாகியாக பார்க்கிறது ஆர்எஸ்எஸ். காந்தியை கொலை செய்தது கோட்சே என்பது நிரூபணமாகி தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ள, கோட்சே யை இயக்கியது ஆர்எஸ்எஸ் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனது புத்தகத்தில் இதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்'
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
13-04-2019


No comments: