Followers

Friday, June 13, 2014

மற்றுமொரு வன்புணர்வு - பெண் தூக்கிலிடப்பட்டாள்!

மற்றுமொரு வன்புணர்வு - பெண் தூக்கிலிடப்பட்டாள்!




சில நாட்களுக்கு முன்பு தான் இரண்டு பெண்களை உபி மாநிலம் பதுவான் மாவட்டத்தில் வன்புணர்வு செய்யப்பட்டு அந்த பெண்களை மரத்தில் தூக்கில் தொங்கவிட்டனர். அதே மாவட்டத்தில் இதே போன்ற சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. 45 வயது மதிக்கத்தக்க இந்த பெண் சென்ற செவ்வாய்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். ராணிப்பூர் என்ற கிராமத்தில் ஒரு மரத்தில் இவரது துப்பட்டாவையே தூக்கு கயிறாக மாற்றி கொடியவர்கள் அந்த பெண்ணை தூக்கில் ஏற்றியுள்ளனர். இந்த பெண்ணும் தலித் சமூகத்தை சேர்ந்தவரே!

ராணிப்பூர் போலீஸ் அதிகாரி சுனில் குமார் சிங் சொல்லும் போது 'இந்த பெண்ணையும் கற்பழித்து அதன் பிறகு இறந்தவுடன் மரத்தின் மேல் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். விசாரணையை முடுக்கி விட்டுள்ளோம். விஜய், ராஜூ, ஓங்கார், ராம் ஸ்வர்ப், நயீம் என்ற நான்கு பேரை கைது செய்துள்ளோம். ' என்கிறார்.

இந்த கொலையில் சாராய வியாபாரிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை செல்கிறது. ஹாமிர்பூர் என்ற கிராமத்தில் இதே போல் தனது கணவனின் விடுதலைக்காக காவல் நிலையம் சென்ற பெண் அந்த காவல் நிலையத்தின் காவல் அதிகாரியால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்த அளவு துணிச்சலாக கற்பழிப்புகளும் கொலைகளும் சர்வ சாதாரணமாக நடப்பது இந்தியர்களாகிய நமக்கு மிகப்பெரும் அவமானமாகும். சட்டம் இன்னும் கடுமையாக்கி தலித் கிராமங்களுக்கு தக்க பாதுகாப்பை தர வேண்டியது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரை அரபு நாட்டு பாணியில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டால் அடுத்த நாளே இந்த குற்றங்கள் காணாமல் போய் விடும். அது வரை குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை தைரியமாக அரங்கேற்றியே வருவர்.

ஒரே மதத்தை சார்ந்த தலித்களை இது போன்று கொடுமைபடுத்தினால் தங்களின் பாதுகாப்புக்காக சிலர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இங்கும் இந்துத்வா வந்து இஸ்லாத்துக்கு மாறாதே என்று சில இடங்களில் அடாவடி செய்கின்றனர். பிறகு அவர்கள் என்னதான் செய்வது என்பதை இந்துத்வாவாதிகள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
11-06-2014

No comments: