Followers

Sunday, June 29, 2014

பசு வதை பற்றி சில கருத்துக்கள்!

திரு தாயுமானவன்!

//ஒன்றை மட்டும் கூறுகிறேன். என்னதான் கூப்பாடு போட்டாலும் இந்து மதம் கோ மாமிசத்திற்கு எதிரானது என்று கூறுவது சகிக்கவொன்னாத வரலாற்று மோசடி. வேத காலத்தில் பசு மாமிசம் உண்டதர்க்கான ஆதாரம் வேதத்தில் தொடங்கி ஆயுர்வேத மருத்துவம் முதல் மனு தர்மம் வரை நிறையவே இருக்கின்றது. நிலைமை இப்படி இருக்கும் போது பசு மாட்டின் இறைச்சியை தடை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் முதல் இங்கிருக்கும் ராமகோபாலன் வரை கூப்பாடு போட்டு புனித பசுக்களாக தங்களை காட்டி கொள்வது தான் வரலாற்று நகை முரண்..//

ஒரு இந்துவாக இருந்து கொண்டு மிக அருமையான வாதத்தை வைத்துள்ளீர்கள். இதையே நான் சொன்னால் 'நீ எப்படி சொல்லப் போயிற்று' என்று சாரங்க் சண்டைக்கு வருவார்.

உலகில் ஆயிரக்கணக்கான உயிர்கள் உள்ளன. எல்லா உயிர்களையும் சமமாக பாவிப்பவர் அனைத்து உயிர்களையும் மாமிசத்துக்காக வெட்டுவதை எதிர்ப்பார். அது என்ன பசு மாமிசத்துக்கு மாத்திரம் ஒரு எதிர்ப்பு? நீங்கள் சொல்வது போல் வேத காலம் தொட்டு பசு வேள்விக்காக கொல்லப்பட்டுள்ளது. அதெல்லாம் தவறு என்று ஃபத்வா கொடுக்கப் போகிறீர்களா?

மேலும் மனிதன் உணவுக்காக அறுக்கும் விலங்குகள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவையே. உலகம் முழுக்க பெரும்பாலான மக்கள் இதனையே விரும்பி சாப்பிடுகின்றனர். இவற்றின் எண்ணிக்கை எங்காவது குறைந்துள்ளதாக நீங்கள் படித்திருக்கிறீர்களா? மேலும் மேலும் இவற்றின் எண்ணிக்கை பெருகிக் கொண்டுதானே இருக்கிறது. உணவுக்காக அறுக்கப்படாத சிங்கம், புலி போன்றவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இது விநோதமாக இல்லையா? தினமும் கோடிக்கணக்கான ஆடுகளும், மாடுகளும், கோழிகளும் உணவுக்காக வெட்டப்படுகிறது. இவை எல்லாம் ஒரே நாளில் நின்று போனால் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து சுற்றுப்புற சூழலை கெடுக்கவும் செய்யும். ஆஸ்திரேலியாவில் கங்காருகள் அதிகரித்து சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை விளைவித்ததால் பெரும் எண்ணிக்கையிலான கங்காருகளை அந்த அரசாங்கம் சுட்டுக் கொன்றது.

எனவே உங்களுக்கு பசு மாடானது தெய்வம் என்றால் உங்கள் அளவில் அதனை புனிதப்படுத்திக் கொள்ளுங்கள். கோசோலைகளை அமைத்து கிழட்டுப் பசுக்களை பராமரியுங்கள். அதை விடுத்து பசு மாமிசம் சாப்பிடுபவர்களை வன்முறையைக் கொண்டு தடுக்க நினைப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

1 comment:

Anonymous said...

அதேபோல நோன்பு இருப்பது உங்களுக்கு கடமை என்றால் அதை உங்களோடு வைத்து கொள்ளுங்கள், மற்றவர்கள் உண்டால் ஏன் கப்பலேற்றி ஊருக்கு அனுப்புகிறீர்கள் ?