Followers

Monday, June 02, 2014

உபியில் மற்றொரு பெண் கற்பழிக்கப்பட்டு வாயில் ஆசிட் ஊற்றி கொலை!



(உபி முதல்வர் அலுவலகம் முன் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்)

உபியில் மற்றொரு பெண் கற்பழிக்கப்பட்டு வாயில் ஆசிட் ஊற்றி கொலை!

உத்தர பிரதேசம் பரேலி மாவட்டத்தில் பஹேரி என்ற இடத்தில் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டாக கற்பழிக்கப்பட்டுள்ளார். கற்பழித்த அந்த கொடியவர்கள் அந்த பெண்ணின் வாயில் வலுக்கட்டாயமாக ஆசிட்டை ஊற்றியிருக்கிறார்கள். அவரது முகத்திலும் அடையாளம் தெரியாதிருக்க ஆசிட்டை வீசியுள்ளனர். இன்று கிடைத்த பிரேத பரிசோதனையில் அந்த பெண் கற்பழிக்கப் பட்டிருப்பதும், ஆசிட் அவர் வாயில் ஊற்றப்பட்டிருப்பதும் நிரூபணமாகியுள்ளது. வலுக்கட்டாயமாக ஆசிட் அந்த பெண் வாயில் ஊற்றப்பட்டிருப்பதாக போலீஸ் அறிக்கையும் கூறுகிறது. இறந்த இந்த பெண்ணின் முகம் ஆசிட்டாலும் பெட்ரோலாலும் முழுவதுமாக சிதைந்துள்ளது. இதை செய்தவர்கள் மனிதர்கள்தானா? ஒரு மிருகம் கூட தனது இனத்தை இவ்வாறு இம்சிக்காதே! எப்படி இந்த கொடூரர்களுக்கு இவ்வளவு தைரியம் வருகிறது?

போலீஸ் அதிகாரி ரவீந்திர கௌர் தனது பேட்டியில் 'இந்த பெண் உத்தரகாண்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று நினைக்கிறோம். ஒரு போலீஸ் டீம் அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளது' என்கிறார்.

டெபுடி சூப்ரண்டன்ட் பஹேரி காலு சிங் கூறும் போது 'விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள்' என்கிறார்.

இனி கைது பண்ணி என்ன செய்ய? போன உயிரை இந்த பாவிகளால் திருப்பிக் கொடுக்க முடியுமா? குஜராத்தில் கௌசர்பீவியின் வயிற்றைக் கிழித்து அந்த குழந்தையையும் தீயில் வீசிய புண்ணிய நாடு நம் பாரத நாடு. அதன் தொடர்ச்சியாக சில நாள் முன்பு இரண்டு தலித் பெண்கள் கற்பழித்து தூக்கில் ஏற்றினர். அந்த சூடு அடங்குவதற்குள் இதோ இன்று மற்றொரு செய்தி. மத்திய அரசு மாநில அரசை நோக்கி 'வன் கொடுமை சட்டத்தை பிரயோகித்து குற்றவாளிகளை ஏன் கைது செய்யவில்லை?' என்று கேட்டுள்ளது. இளம் பெண்கள் வாழத் தகுதியில்லாத நாடாக நமது பாரதம் மாறிக் கொண்டுள்ளது.

தகவல் உதவி
டெக்கான் க்ரோனிக்கல்
02-06-2014



http://www.deccanchronicle.com/140602/nation-current-affairs/article/uttar-pradesh-woman-allegedly-gang-raped-forced-drink-acid-and

No comments: