Followers

Monday, June 30, 2014

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

'இறைவனின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூதர்
ஆதார நூல்கள் புகாரி 2518, முஸ்லிம் 119


இந்த ஒரு நபி மொழியை நாம் சரியாக விளங்கிக் கொண்டால் பல பிரச்னைகளுக்குத் தீர்வைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களில் 80 சதமான பேர் உண்மையான இஸ்லாம் என்ன என்பதை விளங்காமல் பல பிரச்னைகளை தங்களுக்கும் தம்மைச் சார்ந்த சமூகத்துக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் அவர்கள் 'இவை எல்லாம் எங்களை சொர்க்கத்துக்கு கொண்டு சென்று விட்டு விடும்' என்று வேறு சொல்கிறார்கள்..

மேலே உள்ள நபி மொழியில் சில நல்லறங்களை நான் செய்யாமல் போனால் என்ன செய்வது என்ற கேள்விக்கு, மனிதர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பதிலை நாம் பார்க்கிறோம். ஷியாக்களுக்கும் சுன்னத் ஜமாத்துக்கும் பகை: இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகை: கிறித்தவர்களுக்கும், பவுத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகை: தவ்ஹீத் வாதிகளுக்கும் தர்ஹா வணங்கிகளுக்கும் பகை: என்று எங்கு நோக்கினாலும் பிரச்னைகளே!

முஸ்லிம்களை அழித்து அதன் மூலம் தாங்கள் மோட்சம் அடைந்து விடலாம் என்பது பெரும் பாலான இந்துத்வாவாதிகளின் நம்பிக்கை. இதற்கு அவர்களின் வேதங்களே தடையாக இருப்பதை ஏனோ இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை: முதலில் சக மனிதனை நிம்மதியாக வாழ வைத்தால்தான் நீ இறைவனை நெருங்க முடியும் என்று உலக மதங்கள் அனைத்துமே கூறுகிறது. ஆனால் மனித மனம் இதனை சிந்திப்பதில்லை. தலைவர்கள், இயக்கங்கள், குழுக்கள் என்ற பெயரில் அவரவர்க்கு தோதான வசனங்களை பிடித்துக் கொண்டு தினமும் ரத்தத்தை சிந்திக் கொண்டிருக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே! இவர்கள் நல்லது செய்யா விட்டாலும் சும்மா இருந்தாலே போதும்: பல பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடும். அதாவது உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாமில்லையா?

சக மனிதர்களை அன்போடும் பாசத்தோடும் நோக்குங்கள்: இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ யாராக இருந்தாலும் அவனும் ஆதமின் மகனே! அந்த பாசம் வந்து விட்டால் முறுகல் விலகும்: அன்பு பெருகும்: மனிதம் தழைக்கும்:

3 comments:

ஆனந்த் சாகர் said...

//மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!//

இது காபிர்களின் மத கொள்கை. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மனிதர்கள் எப்படிப்பட்ட இறை நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சேவை செய்யும்படி இஸ்லாம் சொல்கிறதா? இல்லையே! முகம்மதை ஏற்காதவர்கள் நரகத்திற்கு அனுப்பப்பட்டு நித்தியா காலம் நெருப்பில் எரிக்கப்படுவார்கள் என்று அல்லவா இஸ்லாம் கூறுகிறது? காபிர்களை கொல் அல்லது கொல்லப்பட்டு சொர்கத்திற்கு செல் என்றல்லவா இஸ்லாம் முஸ்லிம்களை ஏவுகிறது? இப்படிப்பட்ட மதம் மனிதனுக்கு தொண்டு செய்ய சொல்கிறது என்று கூசாமல் மோசடி செய்கிறீர்.

ஆனந்த் சாகர் said...

//'இறைவனின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூதர்
ஆதார நூல்கள் புகாரி 2518, முஸ்லிம் 119//

மற்றவர்களுக்கு என்பது மற்ற முஸ்லிம்களுக்கு என்று பொருள். காபிர்களுக்கு இது பொருந்தாது என்பது இஸ்லாத்தை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.

மனிதர்களின் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு எல்லா மனிதர்களையும் முஹம்மது நேசிப்பவராக இருந்தார் என்றால், பிறகு ஏன்அவர் எண்ணற்ற காபிர்களை திடீர் தாக்குதல்களின் மூலம் படுகொலை செய்தார்? அவர்களின் செல்வங்களை கொள்ளை அடித்தார்? அவர்களின் பெண்களை கைப்பற்றி கற்பழித்தார்? அவர்களின் சிறுவர்களையும் பெண்களையும் ஏன் அடிமையாக்கினார்?

மதினாவில் வாழ்ந்த பனு குறைழா என்ற யூத இனக்குழுவை முஹம்மது பல நாட்கள் முற்றுகை இட்டு அவர்கள் நிராயுதபாணியாக சரணடைந்த பிறகும் மதினாவில் பெரிய பள்ளத்தை வெட்டி அந்த இனக்குழுவை சேர்ந்த எல்லா ஆண்களையும்(600 முதல் 800 பேர்) ஒரே நாளில் தலையை வெட்டி படுகொலை செய்து அவர்களின் உடல்களை அந்த பள்ளத்தில் போட்டு அவர் மூடினார். பிறகு அவர்களின் செல்வங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அவர்களின் குழந்தைகளையும் பெண்களையும் அடிமை சிறைக்குள் தள்ளினார். இப்படிப்பட்ட கொடூரமான மிருகத்தை மனித நேயம் மிக்கவர் என்று மோசடி வித்தை காட்டுகிறீர்.

suvanappiriyan said...

//மற்றவர்களுக்கு என்பது மற்ற முஸ்லிம்களுக்கு என்று பொருள். காபிர்களுக்கு இது பொருந்தாது என்பது இஸ்லாத்தை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.//

அந்த ஹதீதில் முஸ்லிம்கள் என்று கூறப்படாமல் பொதுவாக மனிதர்கள் என்று வருகிறதே! அதில் நீர் வர மாட்டீரோ! மனிதனாக வாழ முயற்சித்தாவது பார்க்கலாமே ஆனந்த் சாகர்.

முகமது நபி அவர்கள் செய்த போர்கள் அனைத்துமே தற்காப்புக்கான ஒன்றே என்பதை இந்துத்வாவாதிகளும் அறிவார்கள்.