நாசா வளைகுடா பிராந்தியத்தின் தலைவரான முஹம்மது இபுறாகிம் கூறும்போது 'மஜ்தா அப்ராஸ் வளைகுடா பகுதிகளில் சுற்றுச் சூழலை கண்காணிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டு அதில் வெற்றியும் பெற்றதற்காக இப்பதவியில் அமர்த்தப்படுவதாக' கூறினார்.

பதவி ஏற்பு விழாவில் அப்ராஸ் பேசும் போது 'எனது இந்த வெற்றிக்கு காரணமான மன்னர் அப்துல்லாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த வழிகாட்டியை இந்த நாடு பெற்றுள்ளது. பெண்கள் முன்னேற்றத்தில் மன்னர் அதீத அக்கறை காட்டுகிறார். பிரின்ஸ் நூரா பல்கலைக் கழகம் மூலம் இனி சவுதி பெண்கள் சமூகத்தில் சிறந்த இடத்தைப் பெற முடியும். மேலும் அதிகார மையமான சூரா கவுன்ஸிலிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாரத்தை பெண்களுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார் மன்னர். மேலும் எனது இந்த முன்னேற்றத்திற்கு பிரின்ஸ் துர்க்கி பின் நாஸரும் ஒரு காரணம். அவர் கேட்டுக் கொண்டதால்தான் சவுதி சுற்றுச் சூழல் அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு தலைவியாக இருக்கிறேன்.' என்றார்.
மேலும் மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தின் உயிரியல் பிரிவில் ஆசிரியராகவும் நுண்ணுயிரியியல், சுற்றுச் சூழல் என்று பல தலைப்புகளில் விரிவுரையும் ஆற்றியுள்ளார். ஜெத்தா பெண்கள் அமைப்பிலும், கேன்ஸர் சம்பந்தமான அல் ஈமான் குரூப்பிலும், எகிப்திய ஆராய்ச்சி சென்டரிலும், சவுதி எய்ட்ஸ் தடுப்பு அமைப்பிலும் உறுப்பினராக உள்ளார் மஜ்தா அப்ராஸ்.
நன்றி அரப் நியூஸ்
25-02-2012
எட்டு மணி நேரம் வேலை பார்க்கவே நமக்கு உலகத்து டென்ஷனும் வந்து விடுகிறது. இந்த பெண்மணி இத்தனை வேலைகளையும் சளிப்பில்லாமல் பார்ப்பது ஆச்சரியம்தானே!
முந்தய பதிவில் ஒரு அன்பர் இஸ்லாமிய ஆட்சி வந்தால் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் அமைதி போய் விடும் என்றும் பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்கு நான் சொல்லிக் கொள்வது.
பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, டுனீஷியா போன்ற எந்த நாடுகளும் இஸ்லாமிய ஷரீயாவை பின்பற்றவில்லை. அதன் ஆட்சியாளர்கள் மக்களை சுரண்டுவதிலும், தங்களின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எதையும் செய்யக் கூடியவர்களாகவுமே இருந்தனர். ஆட்சித் தலைமை மார்க்கப் பற்றுடன் இருந்தால் அதன் குடிமக்களும் மன்னனையொட்டி நேர்மையாக நடப்பர். நாட்டு மக்களும் சுபிட்சமாக இருப்பர். சதாமிலிருந்து கடாபியிலிருந்து அனைத்து தலைவர்களும் ஆடம்பர வாழ்விலும் சுகபோகங்களிலும் திளைத்தனர். நேரம் பார்த்து அமெரிக்காவுக்கு எண்ணெய் வயல்கள் மீது மோகம் வர நாட்டின் எதிர்ப்பாளர்களை பயன்படுத்திக் கொண்டு ஆட்சிகளையும் வீழ்த்தியது. ஆனால் அமெரிக்கா நினைத்ததற்கு மாற்றமாக புதிதாக ஆட்சியில் அமர்ந்த அனைத்து நாடுகளிலும் இஸ்லாமிய சட்டங்கள் பின் பற்றப்படுகின்றன. மக்களும் அதனை விரும்புகின்றனர். தங்களுக்கு அமைதியும் சுபிட்சமும் இஸ்லாமிய சட்டங்கள் மூலமாகத்தான் கிடைக்கும் என்று எண்ண ஆரம்பித்துள்ளனர். இனி வரும் காலங்களில் இந்த நாடுகளில் முழுமையான இஸ்லாமிய சட்டத்தால் அமைதி திரும்பும்.
சவுதி அரேபியாவில் கராமா என்ற அமைப்பு அல்வலீது பவுண்டேஷன் மற்றும் இளவரசி அமீரா துணையோடு 90000 டாலர் அன்பளிப்பில் தற்போது இயங்கி வருகிறது. முஸ்லிம் பெண் வழக்கறிஞர்களை உலக தரத்திற்கு உயர்த்துவதே கராமாவின் நோக்கம். உலக அளவில் மனித குலத்தின் கண்ணியம், மத சுதந்திரம், மத உரிமை, இஸ்லாமிய சட்டங்கள் போன்றவற்றில் முஸ்லிம் பெண்கள் சிறந்த இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இவ்வமைப்பு பாடுபடுகிறது. இந்த அமைப்பு வாஷிங்டனிலும் தனது கிளையை துவக்கியுள்ளது.
உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஓரளவு ஷரியத் சட்டத்தின் படி ஆட்சி நடைபெறும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இங்கு பெண்களுக்கு கல்வி கற்பதில், வேலைக்குச் செல்வதில் எந்த விதத்திலும் சவுதி அரசு தடை போடவிலலை. இஸ்லாமும் அதற்கு தடை போடவில்லை. ஆண்களை விட பெண்களே இன்று கல்வி கற்பதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். பெண்களுக்கு கல்வியைக் கொடுப்பதோடு அவர்களின் பாதுகாப்புக்கும் அரசு ஆவண செய்கிறது.
//The king’s latest announcement promised that women could vote in the next municipal elections, scheduled for 2015. Half of the municipal council’s seats are elected, and the other half are appointed by the government. The powers of the councils remain unclear and are not significant, though recent changes ensure that each municipal council can directly work with the local mayor and governor, and not only report to the minister of municipal and rural affairs in Riyadh.
The king also announced that women could become full voting members of the Shura Council, an appointed consultative body that has authority to review laws and question ministers but cannot propose or veto legislation and has no binding powers. In 2006 the Shura Council appointed six women as advisors, a number that has now risen to 12. //-BBC

2015ல் நடக்கவிருக்கும் தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமையையும் பெண்கள் பெற்றுள்ளனர். அதிகார மையமான சூரா கவுன்சிலிலும் அங்கததினர்களாயுள்ளனர் பெண்கள்.
நம் நாட்டில் என்ன செய்கிறோம். பெண் விடுதலை என்ற பெயரில் ஆணும் பெண்ணும் கல்லூரியிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் சேர விட்டதனால் பல இடங்களில் பிரச்னை. விபரம் தெரியாத இந்த கல்லூரி பருவத்தில் காதலில் விழுந்து தங்களின் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்பவர்களே அதிகம்.
வேலை பார்க்கும் இடங்களிலும் பெண்களுக்கு சில ஆண்கள் கொடுக்கும் டார்ச்சர் சொல்லி மாளாது. எனவேதான் இஸ்லாம் படிப்பதாக இருந்தாலும் வேலை பார்ப்பதாக இருந்தாலும் பெண்களையும் ஆண்களையும் தனித்தனியாக்கி விடுங்கள் என்கிறது. இதனால் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ என்ன பிரச்னை வந்து விடப் போகிறது?http://www.blogger.com/img/blank.gif அலுவலக நேரங்களில் பெண்களிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து மாறி தங்களது வேலையில் கவனத்தை செலுத்துவார்கள். கல்லூரிகளிலும் பெண்களின் பின்னால் சுற்றுவதை விட்டு விட்டு இவன் படிப்பில் கவனத்தை செலுத்துவான்.
உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக்கழகமான பிரினஸ் நூரா பல்கலைக் கழகத்தைப் பற்றி நான் முன்பு இட்ட பதிவு.
-------------------------------------------------------------
பெண் விடுதலை என்று கூறி நாம் பெண்களை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம் என்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த செய்தியை பார்ப்போம்.
ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார். பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).
இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.
மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்.
"இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில்மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
-dinamalar 23-02-2012
பேசாமல் அந்த கணவர்கள் சீட்டு குலுக்கிப் போட்டு மனைவியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
------------------------------------------------------------
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வாசலில், மகளை கழுத்தறுத்து கொலைமுயற்சி செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் வானமாதேவி பகுதியை சேர்ந்தவர் ஞானவள்ளி. இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் காதல் வயப்பட்டிருந்த நிலையில், இவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர்கள் உறவினர் பையனை நிச்சயம் செய்தனர். இதுதொடர்பாக, பெற்றோருக்கும், ஞானவள்ளிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு வந்த ஞானவள்ளியை, அவரது தந்தை கல்லூரி வாசலிலேயே கழுத்தை அறுத்தார். இதில், படுகாயமடைந்த ஞானவள்ளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு நிலவிவருகிறது. சிதம்பரம் போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Dinamalar 20-02-2012