Followers

Tuesday, February 14, 2012

தேமதுரத் தமிழான திருமந்திரத்தில் நனைவோமா!

படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே””””””
-திருமூலர்-திருமந்திரம்


படமாடக் கோயில்: கோயிலில் உள்ள கடவுள் சிலை என்று பொருள் .
நடமாடக் கோயில்: அகத்தில் கடவுளைக் கொண்ட மனிதன் என்று பொருள் .

கோயிலில் உள்ள கடவுள் சிலைகளுக்கு
பலவிதமான வாசனை திரவியங்களைக் கொண்டு
பன்னீர் , இளநீர் , பால் , சந்தனம், விபூதி
போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம் .
சாமி சிலைகளை குளிப்பாட்டுகிறோம் .

பலவிதமான அணிகலன்களை அணிவிக்கிறோம்

கோயிலில் இருக்கும் சாமி சிலைக்கு உணவு படைக்கிறோம்

இவற்றையெல்லாம் கோயிலில் உள்ள சாமி சிலைக்கு செய்வதால் என்ன பயன்? இவற்றையெல்லாம் கல்லாக இருக்கும் சிலைக்கு செய்வதால் என்ன பயன்? ஒரு பயனும் இல்லை .
கோயிலில் உள்ள கடவுளுக்கு செய்வது வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழைக்கு சென்று சேர்வதில்லை. அதாவது நடமாடும் மனிதனுக்கு பயன் இல்லை என்கிறார் திருமூலர் .

நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே


உண்ண வழி இல்லாமல் தவிக்கும் ஏழைக்கு உணவு கொடுக்க வேண்டும்.
வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவருக்கு ,பொருளாதார உதவி செய்ய வேண்டும். வறுமையில் வாடும் ஓர் ஏழைக்கு உதவிகள் செய்ய வேண்டும்.




உண்ண உணவு இல்லாதவர்க்கு உணவு கொடுத்தால்;
உடுத்த உடை இல்லாதவர்க்கு உடுத்த உடை கொடுத்தால்;
இருக்க இடம் இல்லாதவர்க்கு இருக்க இடம் கொடுத்தால்;
அதை விட புண்ணியம் வேறு இல்லை. அதை விடுத்து சிலைகளுக்கு
செலவு செய்வதால் என்ன பயன்? என்று கேட்கிறார் திருமூலர். இவ்வளவு அழகாக சிறியவர்களுக்கும் விளங்கும் வண்ணம் இறை வழிபாட்டை போதித்திருக்க இன்று நாம் கடவுள் பெயரால் அழிக்கும் உணவுப் பொருட்கள் எத்தனை எத்தனை!

திரு மந்திரத்தை அருளிய திரு மூலரைப் பற்றி பல கதைகள் உலவுகின்றன. ஆனால் ஆதாரமான நூல்கள் அவரது வரலாறை உறுதியிட்டு கூறவில்லை. இவர் நந்தீசரின் சீடராக அறியப்படுகிறார். திருமந்திரம் கூட நமது தமிழ் மொழிக்கு அருளப்பட்ட வேதமாகக் கூட இருக்கலாம். ஒரு சில வசனங்கள் சிதைந்திருப்பது மனிதக் கரங்கள் புகுந்ததாகவும் இருக்கலாம். இறைவனே அறிவான். இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களை 'மந்திர மாலை' என்று அழைத்தனர். பிற்காலத்தில் அதன் பெயரை 'திரு மந்திரம்' என்று மாற்றி அதனை ஒன்பது பகுதிகளாக பிரித்தனர்.



'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்றும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் கூறும் மந்திரங்கள் தமிழகம் முழுதும் பிரபல்யம். தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல் முழு உலகுக்கும் அறிவுரை கூறும் நூலாக திரு மந்திரம் உள்ளது. குர்ஆன் பைபிள் வசனங்கள் பலவற்றோடு மிகவும் ஒத்துப் போகிறது.

-----------------------------------------------------------

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே! அதைப் பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு இதைப் பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.
-குர்ஆன் 2:271


2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் பயபக்தியுடையவர்கள்.
- குர்ஆன் 2:177


நூல்: முஸ்லிம் 5021
நபி அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒரு மனிதரிடம், ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே ஏன்? என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம்விசாரிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத்தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.

மேலும் ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.

இந்த மூன்றையும் நோக்குங்கால் இஸ்லாம் ஏழைகளுக்கு உதவுவதையே இறைவனுக்கு செய்யும் தொண்டாக போதிக்கிறது. இந்துக்களின் பாலாபிஷேகத்தைப் பார்த்த ஒரு சில முஸ்லிம்கள் நமக்கும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் உருவாக்கிக் கொண்டதுதான் கொடி ஏற்றம், சந்தனக் கூடு எடுத்தல். அங்கு தேர்: இங்கு சந்தனக் கூடு: அங்கு பாலாபிஷேகம்: இங்கு சந்தனாபிஷேகம்:

இரண்டு மதங்களுமே இது போன்று சாப்பிடும் பொருட்களை வீணாக்குவதை தடுக்கிறது. இப்படி பொருட்களை வீணாக்குவதை முகமது நபி வன்மையாக கண்டித்திருக்கிறார்.

-----------------------------------------------------------




அடுத்து கிறித்தவ மதத்தையும் பார்ப்போம். அங்கும் ஏழைக்கு செய்யும் ஊழியமே இறைவனுக்கு செய்யும் ஊழியமாக போதிக்கப்படுகிறது.

நூல் : பைபிள்
மத்தேயு : அதிகாரம் 25
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்

.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்.

திரு மந்திரத்தின் கருத்தும் திருக்குர்ஆனின் கருத்தும் பைபிளின் கருத்தும் எந்த அளவு ஒத்துப் போகிறது பார்த்தீர்களா!

முன்பு திண்ணையில் ஒரு இந்து நண்பர் 'நம் தமிழ் மொழியில் எவ்வளவோ அறிவுரைகள் கொட்டிக் கிடக்க எங்கோ இருக்கும் அரபு கலாசாரத்தை ஏன் தூக்கிப் பிடிக்கிறீர்கள்?' என்று கேட்டார். நல்ல கேள்வி: எனது முன்னோர்களான திராவிடர்கள் மிகச் சிறந்த கல்வியறிவும் மார்க்க அறிவும் பெற்றிருந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலாசார புரட்சியால் எனது முன்னோர்களின் நூல்கள் மறைக்கப்பட்டன: கொளுத்தப்பட்டன: எஞ்சிய திருக்குறள் திரு மந்திரம் போன்ற ஒன்றிரண்டு நூல்கள் மட்டுமே தற்போது நமது கைக்கு கிடைக்கிறது. திரு மநதிரத்தின் மேலும் அதிகமான பாகங்கள் நமது கைக்கு கிடைக்கவே இல்லை. போலி ஆன்மீகம் புகுந்ததால் எனது முன்னோர்கள் பூர்விகமான இந்து மதத்தை விட்டு இஸ்லாத்தை தழுவ நேரிட்டது. எனது மூதாதையர்களின் கலாசாரம் இன்று அழியாமல் இருந்திருக்குமானால் அது முழுக்க முழுக்க குர்ஆனை ஒட்டியே இருந்திருக்கும்.



இறைவனே அனைத்தும் அறிந்தவன்!

40 comments:

UNMAIKAL said...

ஒரே ஆண்டில் இந்தியாவில் மட்டும் 25 லட்சம் குழந்தைகள் மரணம் அடைகின்றனர்.

முதல் பிறந்த நாளைக் கொண்டாட முடியாமல் மரணம் அடையும் குழந்தைகள் இந்தியாவில் ஆயிரத்துக்கு 58 ஆகும். உலக அளவில் எடைக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளில் 35 விழுக்காடு இந்தியாவில்தான்.

போதிய சத்துணவு கிடைக்காத கொடுமையால் ஏற்படும் மரணம் இது. இந்த யோக்கியதை உள்ள இந்தியாவில், குத்துக்கல்லு சாமிக்கு 1001 லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம் என்றால், இதைவிட ஈவு இரக்கமற்ற குரூரமான செயல் வேறு உண்டா?

பால் சத்துள்ள உணவு அல்லவா! அதை நாசப்படுத்தலாமா?

இத்தகைய பேர்வழிகளை கொலைக் குற்றத்துக்குச் சமமாக மதித்துத் தண்டனை கொடுக்கவேண்டாமா?

பக்தியின் பேரால் - உற்பத்தி நாசம் என்ற கொடுமையல்லவா இது? அத்தியாவசியப் பொருள் நாசத் தடுப்புச் சட்டம் என்ன செய்கிறது? நன்கு குறட்டை விட்டுத் தூங்குகிறதோ!

கடவுளுக்கு பாலாபிசேகம் குடத்தில் என்றாலும் ஒரு குழந்தையின் தொண்டை நனைக்குமோ?!


CLICK TO SEE PICTURE

///////
புதுச்சேரி அருகே பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்ததாம். அப்போது 1001 லிட்டர் பால் ஊற்றி சாமிக்கு அபிஷேகம் செய்தனராம்.
////////


SOURCE: viduthalai.com.

NKS.ஹாஜா மைதீன் said...

அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ ..மூன்று மதத்திலும் சொல்லப்பட்ட ஒத்தகருத்துள்ள விசயங்களை விரிவாக அலசி உள்ளீர்கள்....நன்றி...

UNMAIKAL said...

Click and read

1. ////// அதாவது... பகவானுக்கு பசிக்கும். அவன் சாப்பிட்டால்தானே நமக்கு அனுக்ரஹம் செய்வான். பகவானுக்கும் பசிக்கும். குளிரும். திருஷ்டி படும். சளி பிடிக்கும். //////


2.. //////// க‌ர்த்தருக்கு "இவ்ளோ" படைக்க‌னுமாம். பைபிள். ரட்சிக்கும் கர்த்தர் தனக்கு படைக்க கட்டளையிட்ட உணவு லிஸ்ட்.. (MENU) இதோ!!!. படித்து சிந்தியுங்கள். பைபிள் கடவுளின் வார்த்தைகள். //////////

3. ////////
32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா? பிடிப‌ட்ட‌ கன்னிப்பெண்க‌ளிலும் அப‌கரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் கால்ந‌டைக‌ளிலும் கர்த்த‌ர் ஆணைப்படி க‌ர்த்தருக்குள்ள பங்கு.- பைபிள்
//////////

.

UNMAIKAL said...

Click and read


1.///////உணவை வீணாக்காதீர் அரபிகளே..! ///////


2.///////// மனதுக்குள் ஈட்டியிறக்கும் காட்சிகள்.
அரையும் குறையுமாகக் கடித்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் ஏழை குழந்தைகள் கூட்டம்.
/////////


.

Seeni said...

nanmaiyaana vishayaththai
therinthu konden'
iraivan inagalukku
nanmai seyvaanaaka!

கூடல் பாலா said...

நல்ல பதிவு !

R.Puratchimani said...

ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில சித்தர்களா ? :)

நீங்கள் இசுலாமிற்க்காக செய்யும் சேவை உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.
எனக்கு முரணான கருத்துக்களை எழுத இருக்கிறேன்....தெளிவு பெற்றால் நானும் உங்களோடு.....இல்லையேல்.... நீங்கள் என்னோடு மனிதம் மட்டும் வளர்க்க.....ரெடியா...? சரியா சகோ :)

suvanappiriyan said...

திரு புரட்சி மணி!

தாராளமாக உங்கள் கருத்தை வையுங்கள். எனது கருத்தில் பிழை இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

suvanappiriyan said...

கணிணி சற்று மக்கர் பண்ணுகிறது. சரியாகும் வரை எனது கருத்துகளை சற்று தள்ளி போடுகிறேன்.

வருகைபுரிந்து கருத்தைப் பதிந்த கூடல் பாலா, ஹாஜா மைதீன், சீனி, உண்மைகள், புரட்சி மணி போன்ற சகோதரர்களுக்கு நன்றிகள்.

Anonymous said...

அடபாவிங்களா உங்க மத வெறி ரொம்ப ரொம்பவே முத்தி போச்சு.

Anonymous said...

இப்படி மத வெறி பிடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுசனையும் கடிப்பீங்க. கோவை குண்டு வெடிப்பு மறந்து போகுமா?

Anonymous said...

உங்க மதம் சூப்பர் ஒக்கே.அதுக்காக அடுத்தவன் மதத்தை குறை சொல்லி தான் இஸ்லாம் டாப்பு டக்கர்ன்னு சொல்ல வேண்டியது இல்லை. உலகம் முழுக்க தெரியும் இஸ்லாம் எப்படி பட்ட மதம் என்று !!

சிராஜ் said...

நோ வோர்ட்ஸ் சகோ. கலக்குறீங்க. எங்கனால மொக்கை பதிவே தினமும் எழுத முடியல. இவ்வளவு ஆதாரங்கள், quotes வோட எப்படி தினம் ஒரு பதிவு போடறீங்கன்னு தெரியல. அல்லாஹ் உங்கள் அறிவை விசாலமாக்கட்டும்.

சிராஜ் said...

சாப்பாடு வேஸ்ட் பண்ணவே கூடாது சகோ. நான் திரும்ப திரும்ப சொல்வேன், உலகத்தில் வறுமைக்கு காரணம் மக்கள் தொகையோ இறைவனோ அல்ல. 700 கோடி மக்களுக்கு தேவையான அளவு உணவை இறைவன் படைத்தே உள்ளான். கண்டம், நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம் போன்ற பிரிவினைகளாலே அந்த உணவு அனைத்து மக்களையும் சென்று அடைவதில்லை.

உதாரணத்திற்கு இந்தியாவில் நூற்றுக்கணக்கான டன் உணவு தானியங்கள் வீணாக ஒவ்வரு வருடமும் அழுகிப் போகின்றது. ஆனால் இதே இந்தியாவில் பட்டினிச் சாவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எனில்,
இவற்றிற்கு உணவின்மை காரணமா? நிர்வாகத்த் திறமையின்மை காரணமா???

இது தெரிந்து தான் நபி ஸல் அவர்கள் சாப்பிடும் பொழுது ஒரு பருக்கை கூட வீணாக்காதீர்கள் என்று கூறினார்கள். நான் பெரும்பாலும் தட்டை வழித்தே சாப்பிடுவேன் சகோ. அதே போல் சாப்பிட்டு முடித்தவுடன் விரல்களில் இருக்கும் சாப்பாடையும் சாப்பிட்டுவிடுவேன். எவ்வளவு பெரிய ஸ்டார் ஹோடேலில் சாப்பிட்டாலும் இதை நான் பின்பற்றுவது உண்டு. நாகரிகம் என்ற போர்வையில் உணவை வீணாக்குவது இல்லை.

சிராஜ் said...

/* ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில சித்தர்களா ? :)

நீங்கள் இசுலாமிற்க்காக செய்யும் சேவை உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.
எனக்கு முரணான கருத்துக்களை எழுத இருக்கிறேன்....தெளிவு பெற்றால் நானும் உங்களோடு.....இல்லையேல்.... நீங்கள் என்னோடு மனிதம் மட்டும் வளர்க்க.....ரெடியா...? சரியா சகோ :) */

சகோ புரட்சிமணி,

நாங்க என்ன இஸ்லாத்தின் ஓனரா??? இல்ல எங்களுக்கு மட்டும் தான் அது சொந்தமா??? இது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது சகோ. உங்களுக்கும் தான். என்ன ஒரே வித்தியாசம்,
நீங்கள் அதை ஏற்று கொள்ளவில்லை. நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அவ்வளவே. உங்கள் கேள்விகளை போட்டுத் தாக்குங்கள். ஆனால் ஒன்று, எங்களுக்கு பதில் சொல்லத் தெரியாவிட்டாலும், அது எங்களின் அறிவின்மையே அன்றி இஸ்லாத்தின் பலவீனம் அல்ல. ஏனெனில், நீங்கள் நன்றாக ஆராய்ந்தால் இஸ்லாத்தில் பலவீனம் என்று எதையும் சொல்ல முடியாது.

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//நாங்க என்ன இஸ்லாத்தின் ஓனரா??? இல்ல எங்களுக்கு மட்டும் தான் அது சொந்தமா??? இது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது சகோ. உங்களுக்கும் தான். என்ன ஒரே வித்தியாசம்,
நீங்கள் அதை ஏற்று கொள்ளவில்லை. நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அவ்வளவே. உங்கள் கேள்விகளை போட்டுத் தாக்குங்கள். ஆனால் ஒன்று, எங்களுக்கு பதில் சொல்லத் தெரியாவிட்டாலும், அது எங்களின் அறிவின்மையே அன்றி இஸ்லாத்தின் பலவீனம் அல்ல. ஏனெனில், நீங்கள் நன்றாக ஆராய்ந்தால் இஸ்லாத்தில் பலவீனம் என்று எதையும் சொல்ல முடியாது.//



நான் புரட்சி மணிக்கு என்ன பதில் சொல்ல நினைத்திருந்தேனோ அதை நீங்களே சொல்லி என் வேலையை மிச்சப்படுத்தி விட்டீர்கள்.

பின்னூட்டம் இடுபவர்கள் திருமந்திரத்தில் உள்ள வரிகளுக்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பதையும் கவனியுங்கள். ராமாயணம் வேறு மொழியிலிருந்து மொழி பெயர்த்தவர்கள் தமிழ் மொழியில் அமைந்த திருமந்திரத்தை மக்களுக்கு மத்தியில் ஏன் கொண்டு வரவில்லை என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

suvanappiriyan said...

அனானி!

//அடபாவிங்களா உங்க மத வெறி ரொம்ப ரொம்பவே முத்தி போச்சு.//

இத்தனை காலம் இந்த உண்மைகளை எல்லாம் மறைத்ததற்க்காக நாங்கள் அல்லவா உங்களைப் பார்த்து கூற வேண்டும்?

//உங்க மதம் சூப்பர் ஒக்கே.அதுக்காக அடுத்தவன் மதத்தை குறை சொல்லி தான் இஸ்லாம் டாப்பு டக்கர்ன்னு சொல்ல வேண்டியது இல்லை. உலகம் முழுக்க தெரியும் இஸ்லாம் எப்படி பட்ட மதம் என்று !!//

இங்கு நான் இந்து மதத்தை குறை கூறவில்லையே! இஸ்லாம் சொல்லும் ஏக இறைக் கொள்கையைத்தான் இந்து மதமும் சொல்கிறது. ஆனால் பின்னால் வந்தவர்கள் தங்களின் சுய நலம் கருதி இநத உண்மைகளை மறைத்து விட்டதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன்.

suvanappiriyan said...

அன்புள்ள மயில்வாகனன்!

//அவரவர் மொழியிலேயே தூதரை இறைவன் அனுப்பியிருக்கிறார் என்றால், இந்தியாவில் நபிகள் பெருமானுக்கும் ஜீசஸ் க்ரைஸ்ட்டுக்கும் வேலை இருக்காதே..!//

//பின், தமிழ் அல்லது இந்திய மொழிகளுள் ஏதோ ஒன்றைத் தன் மொழியாகக் கொண்டு தோன்றியவர் தானே உங்களுக்கும் தூதராக் இருக்க முடியும்? நிச்சயமாக அவர் நபிகள் பெருமான் அல்லவே?//

'உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்.'
-குர்ஆன் 4:79

'மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும் உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும் நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும் அருளும் வந்து விட்டன.'
-குர்ஆன் 10:57

இந்த இரண்டு வசனங்களும் இது போல் இன்னும் பல வசனங்களும் அரபிகளே! என்று கூப்பிடாமல் அல்லது முஸ்லிம்களே என்றும் கூப்பிடாமல் 'மனிதர்களே' என்று பொதுவாக உலக மக்கள் அனைவரையும் பார்த்து கூறுகிறது. இனி தூதர்கள் வரப் பொவதில்லை. முகமது நபியே கடைசி தூதர். இவர் உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்ட்டவர். எனவே தான் குர்ஆன் முழு உலக மக்களையும் பார்த்து உபதேசிக்கிறது.

//“இறைவன், கடவுள், பாதுகாப்பவன்… என்றெல்லாம் ‘அல்லாஹ்’வை அழைக்கலாம்” என்கிறீர்கள். நானும் மறுக்கவில்லை. ஆனால், பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அழைக்கும்போது ‘அல்லாஹ்’வை’, ‘இறைவா..’ என்று எங்கும் அழைப்பதாகத் தெரியவில்லையே.//

உலக ஒற்றுமைக்காக என்று முன்பே கூறியிருக்கிறேனே! அதற்கு உதாரணமாக நமது தேசிய கீதம் 'ஜனகனமன' வையும் சொல்லியிருக்கிறேன். சவுதியில் சில நேரங்களில் மசூதியில் நானே தலைவராக நின்று தொழுகை நடத்தியிருக்கிறேன். என்னை பின் பற்றி சவுதி, எகிப்து, சூடான், பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டவர் பலரும் தொழுதிருக்கின்றனர். அங்கு அவர்கள் என்னை ஒரு தமிழனாக பார்க்கவில்லை. உலக முஸ்லிம்களில் ஒருவனாக பார்க்கின்றனர். இந்த ஒற்றுமை வர தொழுகையில் மட்டும் அரபியில் ஓதவும அழைப்பு கொடுப்பதை அரபியிலும் சொல்கிறோம். இது உலக ஒற்றுமைக்காகவே யொழிய அரபி மொழி சிறந்தது என்பதற்காக அல்ல.

//சிந்திக்கத் துணியும் ஒரு இஸ்லாமிய சகோதரரை இத்தளத்தின் மூலமாகச் சந்திக்கும் வாய்ப்பளித்துள்ள இறைவனுக்கு நன்றி..!//

கோபப்படாமல் கேள்வியும் பதிலையும் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றோர்களோடு கலந்துரையாட் வாய்ப்பளிக்கும் அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

செம்பியன் said...

//இத்தனை காலம் இந்த உண்மைகளை எல்லாம் மறைத்ததற்க்காக நாங்கள் அல்லவா உங்களைப் பார்த்து கூற வேண்டும்?//
அதான் உண்மை தெரிந்து விட்டது அல்லவா உடனே தாய் மதத்துக்கு திரும்பி வாருங்களேன். உடனே வர்ணாசிரம் போன்ற ஜல்லி எல்லாம் அடிக்க கூடாது. எங்களுக்கும் சரியத் சன்னி மேட்டர் தெரியுமுல்லா

என்ன இஸ்லாமாமாக இருந்தால் சவூதிக்கு போய் வேலை பார்க்கலாம் அதுவும் எத்தனை காலம். அங்கு கச்சா எண்ணெய் இருக்கு வரை. என்னதான் மாங்கு மாங்குன்னு அங்கு வேலை பார்தாலும் அங்க குடியுரிமை கிடைக்குமா??

இந்து மதம் உங்களை அழைக்கிறது. :)

இதுக்கு கேவலமாக கண்டபடி சம்பந்தம் இல்லாம எழுதுவீங்க . எழுதுங்க அதுக்கும் விவாதம் செய்வோம்

Anonymous said...

சிராஜ் அவர்களே
கோவை குண்டு வெடிப்பு என்ன அல்லா சொல்லி செய்தீர்களா??

ஏதோ இஸ்லாம் எல்லாத்துக்கும் அதார்ட்டி போல பேசுறீங்களே அதான் கேட்டேன்.

suvanappiriyan said...

திரு செம்பியன்!

//அதான் உண்மை தெரிந்து விட்டது அல்லவா உடனே தாய் மதத்துக்கு திரும்பி வாருங்களேன். உடனே வர்ணாசிரம் போன்ற ஜல்லி எல்லாம் அடிக்க கூடாது. எங்களுக்கும் சரியத் சன்னி மேட்டர் தெரியுமுல்லா//

தாய் மதத்துக்கு திரும்பினால் என்னை எந்த சாதியில் சேரத்துக் கொள்வீர்கள்? எந்த சாமியை நான் வணங்குவது? அடுத்து இந்து மதத்தின் தலைமை பீடம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையை ஒத்துக் கொள்ளுமா? நீங்கள் தான் ஒத்துக் கொள்வீர்களா? இதற்கெல்லாம் பதில் சொன்னால் நான் தாய் மதம் திரும்புவதைப் பற்றி யோசிக்கலாம்.

//என்ன இஸ்லாமாமாக இருந்தால் சவூதிக்கு போய் வேலை பார்க்கலாம் அதுவும் எத்தனை காலம். அங்கு கச்சா எண்ணெய் இருக்கு வரை. என்னதான் மாங்கு மாங்குன்னு அங்கு வேலை பார்தாலும் அங்க குடியுரிமை கிடைக்குமா??//

போச்சுடா.....சவுதிக்கு வருவதற்கு இஸ்லாமாக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு யார் சொன்னது? கணக்கெடுத்துப் பாரத்தால் முஸ்லிம்களை விட இந்துக்களே அதிகளவில் சவுதியில் உள்ளனர். அதிலும் 10 வருடம் 20 வருடம் என்று தங்கள் மனைவி மக்களோடு சந்தோஷமாக இருக்கின்றனர். இன்னும் உலகம் தெரியாமல் இருக்கீங்களே!

அடுத்து எனக்கு சொந்த நாடும் குடியுரிமையும் இருக்கும் போது நான் எதற்கு சவுதி அரசிடம் குடியுரிமைக்கு உரிமை கோர வேண்டும்.

மேலும் டாக்டராகவும் இன்ஜினியராகவும் சலுகை விலையில் படித்து விட்டு அமெரிக்கா இங்கிலாந்து கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியுரிமை பெற்று அங்கேயெ செட்டில் ஆவது ஒரு வகையில் தாய் நாட்டுக்கும் இழப்பல்லவா!

suvanappiriyan said...

அனானி!

// சிராஜ் அவர்களே
கோவை குண்டு வெடிப்பு என்ன அல்லா சொல்லி செய்தீர்களா??//

காந்தியை கொன்றதிலிருந்து மாலேகான் குண்டு வெடிப்பு மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு குஜராத் கலவரம் இவை அனைத்தும் இந்து தெய்வங்கள் செய்யச் சொன்னதா என்று மடத் தனமாக நான் கேட்க மாட்டேன். :-(

செம்பியன் said...

//தாய் மதத்துக்கு திரும்பினால் என்னை எந்த சாதியில் சேரத்துக் கொள்வீர்கள்? எந்த சாமியை நான் வணங்குவது? அடுத்து இந்து மதத்தின் தலைமை பீடம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையை ஒத்துக் கொள்ளுமா? நீங்கள் தான் ஒத்துக் கொள்வீர்களா? இதற்கெல்லாம் பதில் சொன்னால் நான் தாய் மதம் திரும்புவதைப் பற்றி யோசிக்கலாம்.//

நீங்களும் இந்து மதத்துக்கு திரும்ப வந்த பின்பு ஏன் சாதியில் சேர வேண்டும் எனக்கு சாதி இல்லை நான் ஒரு இந்து என வாழ் வேண்டியது தானே. பசவரப்பா முதல் பல உதாரணங்களை உங்களுக்கு காட்டலாம்.

இந்து மதத்தில் இஸ்லாம் போல தாடி வைத்து கொள்ள வேண்டும் , பெண்களுக்கு பர்கா போட வேண்டும் என்ற கட்டுபாடும் கிடையாது. உங்கள் சுதந்திரம் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . எந்த கடவுளையும் வழிபடலாம். சாதி மட்டும் தான் தடை என்றால் உங்களுக்கு விவரம் போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும்

அப்புறம் சவுதி மேட்டரு.

அதான் அங்க சேத்துகிட மாட்டங்கன்னு தெரிந்த பின்பு எதுக்கு அவங்களுக்கு ஜால்ரா. ஏதோ உள்ளூர்ல பிழைக்க முடியாம வெளியூர்ல குப்பை கொட்டிறீங்க அதுக்கு ஏன் இவ்வளவு சீன்??

ஏதோ அவனுங்க வேலை கொடுத்தால் இஸ்லாம் தான் பெரிசுன்னு பேச்சு வேற.

suvanappiriyan said...

உத்திரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ்ஆட்சிக்கு வந்தால் முசுலிம்களுக்கு 9 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறிவிட்டாராம்.

இது தேர்தல் விதிமுறைக்கு முரண்பட்டது என்ற பிரச்சினையைப் பூதாகரமாக்கி இருக்கிறது பி.ஜே.பி. அதற்குத் துணை போய்க்கொண்டு இருக்கிறது தேர்தல் ஆணையம்.
காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக் கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் அதனை விளக்கிப் பேசியதில் என்ன குற்றம் என்று தெரிய வில்லை.

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று சொன்னவுடன் பார்ப்பனீய பாரதீய ஜனதாவுக்குப் பச்சை மிளகாயைக் கடித்தது போன்ற எரிச்சல். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் - ஆகா, ஒரு மத்திய அமைச்சர் எப்படி இப்படிப் பேசலாம்? இது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது அல்லவா என்று உத்தம புத்திரர்கள் போல பூமிக்கும், விண்ணுக்கும் தாவிக் குதிக்கின்றனர்.

இதே பாரதீய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில், உத்தரப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் ராமன் கோவில் கட்டு வோம் என்று அறிவித்து இருக்கிறார்களே. அதைப் பற்றி தேர்தல் ஆணையம் ஏன் கண்டு கொள்ளவில்லை?

மதச்சார்பற்ற தன்மையுடைய இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்களே. இது மாபெரும் குற்றமில்லையா?

இதனை ஏன் தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை - பி.ஜே.பி.யை விளக்கம் கேட்கவில்லை?
-viduthalai 16-02-2012

செம்பியன் said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

செம்பியன் பின்னூட்டம் சில திருத்தங்களுடன்........

செம்பியன் said...
அப்புறம் குண்டு வெடிப்புகள் தொடர்பாக.

கோவை மும்பை ஏன் இரண்டு நாள் முன் நடந்த இஸ்ரேல் தூதரக ஊழியர் தாக்குதல் கூட யார் செய்தது.?

இந்து வெறியர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மிக சிலரே ஆனால் இஸ்லாமிய வெறியர்கள் மிக ஆபத்தானவர்கள் உங்களை போல ஆட்கள்.

அல்லா சொன்னார் என்று கேள்விபட்டால் விபரீதங்களை கூட யோசிக்காமல் எதையும் செய்பவர்கள்.
அனைத்து இஸ்லாமியர்களயும் குற்றம் சொல்ல வில்லை ஆனால் உங்களை போன்ற தீவிர இஸ்லாமியர்கள் என்றுமே ஆபத்தானவர்கள். சகிப்புதன்மை இல்லாதவர்கள்.

கர்நாடக சங்கீதம் பிடிக்கவில்லையா போகாமல் இருக்கலாம். பல பேர் அப்படி தான் செய்கிறார்கள். ஏன் அதிகாலையில் வரும் பாங்கு ஒலி கூடதான் பல பேருக்கு பிடிக்கவில்லை அமைதியாக அனுசரித்து செல்லவில்லையா?

ஆனால் நீங்கள் செய்தது என்ன? போய் அங்க பார்த்து கடைசியில் பார்பானியம் பித்தளை என்று எழுதியது தான் மிச்சம்,

இது தான் உங்களுக்கும் மற்ற ஆட்களுக்குமான வேற்றுமை.,

சகிப்புதன்மை இல்லாத ஆட்கள் என்றுமே ஆபத்தானவர்கள்..

புரிந்தால் சரி. இந்த பின்னோட்டம் வரவில்லை என்றால் கூட பரவாயில்லை உங்களை போன்ற ஆட்கள் மனிதனை நினை கடவுளை மற என்ற சொற்டொரை தந்தை பெரியார் சொன்ன வாக்கியத்தை நினைவில் நிறுத்தல் அவசியம்

கடவுளை நினைத்து போனால் கூட தவறில்லை ஆனால் மனிதத்தை மறந்து தவறுகள் பல செய்வது தான் ஆபத்தானது
9:32 AM

Anonymous said...

ஹலோ செம்பியன்,

ஒரு புறம் தாய் மதத்திற்கு திரும்பி வரச் சொல்கிறீர்கள்.

மறுபுறம், மனிதனை நினை கடவுளை மற என்று கூப்பாடு போடுகிறீர்கள்.

கொஞ்சம் புரிந்து எழுதினால் என்ன?

///ஆனால் உங்களை போன்ற தீவிர இஸ்லாமியர்கள் என்றுமே ஆபத்தானவர்கள். சகிப்புதன்மை இல்லாதவர்கள்.///

சகிப்புத்தன்மையின் இலட்சணம் உங்கள் எழுத்தில் பரிணமிக்கிறது.

- ismath

UNMAIKAL said...

ரயில் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ். மீது சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

புதுடில்லி,பிப்.16- 2007 ஆ-ம் ஆண்டு சம்சவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து 68 பேர் இறந்தனர். இந்த ரயில் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கமல் சவுகான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் குறித்து சி.பி.அய்.(எம்)-ன் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது:-

இவர் மத்திய பிரதேசத்தில் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக உள்ளார். அதனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கிறது. இந்துத்துவா பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது.

மேலும், 2008 இ-ல் மாலேகானில் நடந்த தாக்குதல், 2007-இல் அய்தராபாத் நகரின் ஒரு மசூதி மற்றும் அஜ்மர் ஷெரிப் தர்காவில் நடந்த தாக்குதல் ஆகியவற்றுக்கும் இந்த ரயில் விபத்துக்கும் தொடர்பு உள்ளது என கூறியுள்ளார்

SOURCE: http://viduthalai.in/headline/28096-2012-02-16-10-58-26.html#.Tzz5GOu4bbc.blogger
======================
.
.

சொடுக்கி 1. >>>>>
இந்தியாவின் உண்மையான தீவிரவாதிகள் ஒரு பார்வை
<<<<<<< கேளுங்க‌ள்.



சொடுக்கி 2. >>>> அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். - "இந்தியா டுடே" விடியோக்க‌ள் <<<<<<< கேளுங்க‌ள்.

.
.

tamilan said...

CLICK TO READ
.
.
1. /////// ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான். /////////
.
.
2. /////// இராமனா கடவுள்?? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்" . /////


3. //////// ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா? குதிரையுடன் உடலுறவா? அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள். /////


4. //////
பெண்குறி தொடும் ஆபாச பிள்ளையார் ? வல்லபை என்னும் பெண்ணின் குறியில் விநாயகரே தன் தும்பிக்கையை செலுத்தும் கேவலம்.
////////

5.
பன்றி புனிதம். பன்றியின் ஆண் பெண் குறிகள் “யாக மந்த்ரங்கள்” போன்றவை? .
//////

6. /////
பக்தையை சூறையாடிய கடவுள் விஷ்ணு. பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன். கடவுளை கற்சிலையாக்கிய பக்தை.
/////
.
.
.

R.Puratchimani said...

@ சகோ சிராஜ், சுவனப்பிரியன்,
தாங்கள் எனது கருத்தை வரவேற்பதில் மகிழ்ச்சி. எனக்கு என்ன ஒரு கவலை என்றால் நான் உண்மையை தான் சொல்லப்போகிறேன் என்றாலும் எங்கே அது பிற இசுலாமியர்களை புன்படுத்த்திவிடுமோ என்பதுதான். ஏற்க்கனவே அப்படிப்பட்ட கருத்துக்கள் எதிரொலிக்கின்றது. . அதனால் தான் சிறிது தயக்கம்.அதனால் தான் உங்களின் அனுமதியையும் பெற்றுகொள்கிறேன். அல்லா/இறைவன் விருப்பப்படும்போது உங்களை அழைக்கின்றேன். நன்றி

Anonymous said...

//எங்களுக்கு மட்டும் தான் அது சொந்தமா??? இது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது சகோ. உங்களுக்கும் தான். என்ன ஒரே வித்தியாசம்,
நீங்கள் அதை ஏற்று கொள்ளவில்லை. நாங்கள் ஏற்றுக்கொண்டோம்//
கிறிஸ்தவம் உலகம் எல்லாருக்கும் பொதுவானது தான் நீங்கள் தான் அதை ஏற்று கொள்ளவில்லை. இந்து சமயமும் உலகம் எல்லாருக்கும் பொதுவானது தான். நீங்கள் தான் அதை ஏற்று கொள்ளவில்லை.

//அடபாவிங்களா உங்க மத வெறி ரொம்ப ரொம்பவே முத்தி போச்சு.//

//இத்தனை காலம் இந்த உண்மைகளை எல்லாம் மறைத்ததற்க்காக நாங்கள் அல்லவா உங்களைப் பார்த்து கூற வேண்டும்?//
நாங்கள் மத வெறியுடன் இருந்திருந்தால் உங்கள் அல்லாவும் முகமதுவும் இந்த மண்ணில் கால் பதித்து இருக்கவே முடியாது சார். இன்றும் எங்களுக்கு மத வெறி இல்லாமல் இருப்பதால் தான் இந்த நாட்டில் இருந்து கொண்டே அரபு நாட்டவனின் கழிசடை மதத்தை உங்களால் ஊர் ஊராக பரப்ப முடிகிறது. அந்த இந்து மதம் மாறிவிட்டான். இந்த இந்து அல்லாவை ஏற்று விட்டன என்று பொது மேடையில் முழங்க முடிகிறது. மதம் மாறிய இந்துக்களை பொது இடத்தில் அவர்களது பழைய மதத்தை திட்ட வைக்க முடிகிறது. இதெல்லாம் எங்களுக்கு மதவெறி இன்னும் முற்றாமல் இருப்பதால் தான். அப்படி எங்களுக்கு முற்றியிருந்தால் உங்க நாற்ற கூட்டம் இருந்த இடம் தெரியாமல் பொத்தி கொண்டு இருந்திருக்கும் சவுதியில் பிற மதத்தவர்கள் இருப்பதை போல. மத வெறி பற்றி ஒரு மத வெறியனை கடவுளாக வைத்திருக்கும் கூட்டம் பேசுவது தான் விந்தை

Anonymous said...

Hello Anonymous,

///நாங்கள் மத வெறியுடன் இருந்திருந்தால் உங்கள் அல்லாவும் முகமதுவும் இந்த மண்ணில் கால் பதித்து இருக்கவே முடியாது சார்///

அன்றைய அரேபியாவில் உங்களைவிட மிகவும் மோசமான மதவெறி பிடித்தவர்கள்தான் வாழ்ந்தனர். பின்னால், அவர்கள் இஸ்லாமிய நெறியால் கவரப்பட்டார்கள்.

நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், உங்கள் பிள்ளை, குட்டிகளாவது ஏற்றுக்கொள்வார்கள் என்பது, வரலாறு சொல்லும் உண்மை.

///மத வெறி பற்றி ஒரு மத வெறியனை கடவுளாக வைத்திருக்கும் கூட்டம் பேசுவது தான் விந்தை///

உலகத்திலுள்ள எல்லாக் கூட்டத்திற்கும், தங்களின் கூட்டம் உள்பட, கடவுள் ஒருவனே!

அப்படி உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுளை, நீங்கள் மத வெறியனாகப் பிரஸ்தாபிப்பதுதான், விந்தையிலும் விந்தை.

- Ismath

Anonymous said...

//அன்றைய அரேபியாவில் உங்களைவிட மிகவும் மோசமான மதவெறி பிடித்தவர்கள்தான் வாழ்ந்தனர். //
நாங்கள் மோசமான மத வெறியர்களாக இருந்திருந்தால் உங்கள் கூட்டம் இன்றைக்கு இந்தியாவில் இருந்திருக்காது. முகமது தனது மத வெறியால் பிற மதங்களை ஒழித்தது போல் உங்கள் கூட்டமும் காணாமல் போயிருக்கும். இன்றைக்கும் நாங்கள் மத வெறி இல்லாமல் இருப்பதால் தான் உங்களை போன்றவர்களால் இவ்வளவு தைரியமாக இந்துக்களை விமர்சிக்க முடிகிறது மத மாற்றம் செய்யவும் முடிகிறது. அப்படி மத வெறி இல்லாத உங்கள் கூட்டம் சவுதியில் ஒரு இந்து கோவிலோ அல்லது கிறிஸ்தவ தேவாலயமோ கட்ட சம்மதியுங்களேன்
//நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், உங்கள் பிள்ளை, குட்டிகளாவது ஏற்றுக்கொள்வார்கள் என்பது, வரலாறு சொல்லும் உண்மை.//
மாறுதல் ஒன்றே மாறாதது, உங்கள் கூட்டம் என் போன்றவர்களின் பிள்ளை குட்டிகளால் பிற் காலத்தில் விரட்டி அடிக்கப்பட்டாலும் ஆச்சர்யபடுவதர்கில்லையே.

//பின்னால், அவர்கள் இஸ்லாமிய நெறியால் கவரப்பட்டார்கள்.//
அவர்கள் இஸ்லாமிய நெறியால் கவரப்படவில்லை. இஸ்லாமிய வெறியால் அழிக்கப்பட்டார்கள். என்னுடைய மதத்திற்கு வந்தால் உனக்கு சொர்க்கத்தில் சூப்பர் பிகர்களை தருவேன் என்பது எத்தனை உயர்ந்த நெறி. அதுபோல் என்னுடைய மதத்தை விட்டு விலகினால் உன்னை கொல்வேன் என்பது எவ்வளவு அன்பு நிறைந்த வார்த்தைகள். இந்த நெறியாலா கவரப்பட்டார்கள்!
//உலகத்திலுள்ள எல்லாக் கூட்டத்திற்கும், தங்களின் கூட்டம் உள்பட, கடவுள் ஒருவனே!அப்படி உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுளை, நீங்கள் மத வெறியனாகப் பிரஸ்தாபிப்பதுதான், விந்தையிலும் விந்தை.//
கடவுள் என்பவன் ஒன்று தான். ஆனால் நான் ஏற்று கொண்ட கடவுள் அல்லா அல்ல. உங்களுடைய கடவுளை என்மேல் திணிக்க வேண்டாம். உங்களுடனே வைத்து கொள்ளவும். அல்லா என்பவர் உங்கள் கூட்டத்திற்காக முகமதுவினால் உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம். அல்லா என்பவர் உங்களுக்கு மட்டுமே கடவுள் மற்றவர்களுக்கு அல்ல. அப்படி அல்ல எல்லாருக்குமே கடவுள் அவனை வணங்கு என்று நீங்கள் கூறினால், சிவனும் எல்லாருக்கும் கடவுள் தான் அவரை நீங்களும் வணங்குங்கள் என்று நான் கூறுவேன். அதற்கு நீங்கள் தாயாரா?

//பின்னூட்டம் இடுபவர்கள் திருமந்திரத்தில் உள்ள வரிகளுக்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பதையும் கவனியுங்கள். //
திருமந்திரம், பைபிள் குரான் எல்லாம் ஒரே கருத்தை கூறுவதாக சொல்கிறீர்கள். திருமந்திரத்தில் இருந்தும் பைபிளில் இருந்தும் முகமது காப்பி அடித்தது இதில் நன்றாக தெரிகிறது. தன் பூர்விக சொத்துகளுடன் இஸ்லாம் வரும் முன்பே சொத்துரிமை பெற்று பெரும் செல்வந்தராக வாழ்ந்து விதவையான ஒரு பெண்மணியை இஸ்லாம் வரும் முன்பே விதவை திருமணம் செய்து விட்டு. 'இஸ்லாம்தான் முதலில் சொத்துரிமை கொடுத்தது, விதவை திருமணத்தை ஆதரித்தது என்று கட்டுக்கதை பரப்பியவர்தானே திரு முகமது.குரான் என்பதே ஒரு காப்பி பேஸ்ட். இன்று படங்களை ரீமேக் செய்வது போல் பிற இறைவேதங்களின் காப்பி ரீமேக் தன் குரான்.

--- Anandhan

Anonymous said...

Mr Anonymous,

///இன்றைக்கும் நாங்கள் மத வெறி இல்லாமல் இருப்பதால் தான் உங்களை போன்றவர்களால் இவ்வளவு தைரியமாக இந்துக்களை விமர்சிக்க முடிகிறது மத மாற்றம் செய்யவும் முடிகிறது.///

உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட சகோதரர்கள், இஸ்லாத்தைப்பற்றி கன்னா பின்னா என்று திட்டி உலகெங்கும் விமர்சிப்பதால்தான், இஸ்லாம் இன்னும் வளர்ந்து கொண்டு போகிறது. நாங்கள் உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

இஸ்லாத்தைப் போன்று, இந்து மதத்தையும் விமர்சிக்கத் தொடங்கினால், இந்து மதம் இருப்பதுகூட கேள்விக்குறியே! அதனால்தான் என்னவோ, இந்துமதத்தை திட்டி யாரும் விமர்சிப்பதில்லை.

///என்னுடைய மதத்திற்கு வந்தால் உனக்கு சொர்க்கத்தில் சூப்பர் பிகர்களை தருவேன் என்பது எத்தனை உயர்ந்த நெறி. அதுபோல் என்னுடைய மதத்தை விட்டு விலகினால் உன்னை கொல்வேன் என்பது எவ்வளவு அன்பு நிறைந்த வார்த்தைகள். இந்த நெறியாலா கவரப்பட்டார்கள்!///

சூப்பர் பிகரா? அப்படி என்றால் என்ன? ஒன்றுமே புரியவில்லை.

நீங்கள் சொல்லும் அன்பு நிறைந்த வார்த்தைகளைச் சொன்னால், ஐயோ விட்டால் போதும் என்று தலை தெறிக்கவல்லவா ஓடுவார்கள்.

தன் மதத்தை விட்டவன் கொல்லப்படுவான் என்றால், யார் அம்மதத்தை தழுவுவான்?

///இஸ்லாம்தான் முதலில் சொத்துரிமை கொடுத்தது, விதவை திருமணத்தை ஆதரித்தது என்று கட்டுக்கதை///

இப்படிப்பட்ட கட்டுக்கதைகளான சொத்துரிமைச் சட்டங்களை மேற்கின் நீதிமன்றங்கள்கூட ஏற்று தீர்ப்பளிப்பதைப் பார்க்கும்போது, உங்களைப்போல் எனக்கும் மனம் கொதிக்கிறது.

- Ismath

Anonymous said...

Mr Anonymous,

///நாங்கள் மோசமான மத வெறியர்களாக இருந்திருந்தால் உங்கள் கூட்டம் இன்றைக்கு இந்தியாவில் இருந்திருக்காது. ///

நீங்கள் அன்று மோசமான மத வெறியர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான் எமது ஆசையும்.

ஆனால், நீங்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை என்பதை நினைக்கும்போது, முஸ்லிம்கள் இந்தியாவில் சிறுபான்மையாக இருக்கிறார்களே என்ற கவலை நமக்கு.

///உங்கள் கூட்டம் என் போன்றவர்களின் பிள்ளை குட்டிகளால் பிற் காலத்தில் விரட்டி அடிக்கப்பட்டாலும் ஆச்சர்யபடுவதர்கில்லையே.///

உங்கள் பிள்ளைகள் அப்படி அறிவீனர்களாக நடந்து கொள்ளமாட்டார்கள். சத்தியத்தை தேடுபவர்களாக இருப்பார்கள்.

அப்படி நடந்துகொண்டாலும், விரட்டி அடிக்கப்பட்டவர்கள், அகதிகள், அனாதைகளுடந்தான் தேவன் இருப்பார்.

அவர்கள் யாமிருக்கப் பயமேன் என்று உறுதியுடன் இருப்பார்கள்.


///அப்படி அல்ல எல்லாருக்குமே கடவுள் அவனை வணங்கு என்று நீங்கள் கூறினால், சிவனும் எல்லாருக்கும் கடவுள் தான் அவரை நீங்களும் வணங்குங்கள் என்று நான் கூறுவேன். அதற்கு நீங்கள் தாயாரா?///

வழிபடக் கூடியவருக்கு இருக்கும் தன்மைகள், சிவனுக்கும் இருந்தால், நமக்கேன் ஆட்சேபனை?

- Ismath

Anonymous said...

//இஸ்லாத்தைப் போன்று, இந்து மதத்தையும் விமர்சிக்கத் தொடங்கினால், இந்து மதம் இருப்பதுகூட கேள்விக்குறியே! அதனால்தான் என்னவோ, இந்துமதத்தை திட்டி யாரும் விமர்சிப்பதில்லை. //
அசிங்கத்தை பார்த்தால் காரி உமிழ்வதும், அனாச்சாரங்களையும் திருட்டு தனத்தையும் கண்டால் திட்டி விமர்சிப்பதும் சகஜம் தானே. ஆனால் நல்லவற்றையும், சிறந்தவைகளையும் அப்படி விமர்சிக்கவோ, திட்டவோ தேவை இல்லையே. அதனால் தான் இந்து மதத்தை யாரும் திட்டவோ விமர்சிக்கவோ செய்வதில்லை.

//உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட சகோதரர்கள், இஸ்லாத்தைப்பற்றி கன்னா பின்னா என்று திட்டி உலகெங்கும் விமர்சிப்பதால்தான், இஸ்லாம் இன்னும் வளர்ந்து கொண்டு போகிறது.//
நிஜமாகவே இஸ்லாம் வளர்ந்து கொண்டு போகவது கண்கூடாக தெரிகிறது. உலகம் முழுவதும் வன்முறையும் தீவிரவாதமும் அதிகரித்து வருவதை கண்கூடாக பார்த்த பின்னும் எப்படி இஸ்லாம் வளர்வதை ஒத்து கொள்ளாமல் இருக்க முடியும்
//சூப்பர் பிகரா? அப்படி என்றால் என்ன? ஒன்றுமே புரியவில்லை.//
(56:21. விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
56:22. (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
56:23. மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
56:24. (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.)
உங்கள் அல்லதானே சொல்லி இருக்கிறார் இதை. நித்ய சுவன கன்னிகைகளை சுவனத்தில் ஏற்பாடு செய்து தருவதாக. பூலோகத்தில் இப்படி பெண்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு ஒரு பெயர் உண்டு அது எனக்கு மறந்து விட்டது உங்களுக்கு நினைவு வருகிறதா

Anonymous said...

//தன் மதத்தை விட்டவன் கொல்லப்படுவான் என்றால், யார் அம்மதத்தை தழுவுவான்?//
இந்த ஹதீஸை படித்த பிறகு உங்கள் கொலைகார மதத்தை விட்டு விடுவீர்கள் என்று நினைக்கிறேன்

6923. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப்பக்கத்திலும் இன்னொருவர் என் இடப்பக்கத்திலும் இருந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். (என்னுடன் வந்த) அவ்விருவரும் (நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் அரசாங்கப் பதவி அளிக்குமாறு) கோரினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அபூ மூஸாவே' அல்லது 'அப்துல்லாஹ் இப்னு கைஸே!' என்றார்கள். நான், 'சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தம் மனத்தில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை; இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியவும் செய்யாது' என்று சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக் கொண்டிருந்த பல்துலக்கும் குச்சியினை இப்போதும் கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. நபி(ஸல்) அவர்கள், 'பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி 'கொடுப்பதில்லை' அல்லது 'ஒருபோதும் கொடுக்க மாட்டோம்'. எனவே, 'அபூ மூஸாவே' அல்லது அப்துல்லாஹ் இப்னு கைஸே' நீங்கள் யமன் நாட்டிற்கு (ஆளுனராக)ச் செல்லுங்கள்' என்றார்கள்.
(அவ்வாறே அபூ மூஸா(ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றார்கள்.) பிறகு அபூ மூஸா அவர்களைப் பின்தொடர்ந்து முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை (யமன் நாட்டுக்கு) நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் அபூ மூஸா(ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்கு தலையணை ஒன்றை அபூ மூஸா(ரலி) அவர்கள் எடுத்து வைத்து 'வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)' என்றார்கள். அப்போது அபூ மூஸா(ரலி) அவர்களின் அருகில் ஒருவர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, 'இவர் யார்?' என்று முஆத்(ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூ மூஸா(ரலி) அவர்கள் 'இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தைவிட்டுவெளியேறி) யூதராம்விட்டார்' என்றார்கள். (மீண்டும் அபூ மூஸா(ரலி) அவர்கள் முஆத்(ரலி) அவர்களிடம்) 'அமருங்கள்' என்று கூறினார்கள். அதற்கு முஆத்(ரலி) அவர்கள், 'இல்லை. அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரணதண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்)' என்று மூன்று முறை சொன்னார்கள். எனே, அவருக்கு மரண தண்டனையளிக்கும் படி (அபூ மூஸா(ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார்.

உங்கள் கூட்டத்தின் உலக மகா அறிஞரே சொல்கிறார் உங்கள் மத நிறுவனர் அல்லா ஒரு தனது மதத்தை விடுபவரை கொல்லவேண்டு என்று சொல்லி இருப்பதாக - வீடியோவில் பாருங்களேன்
http://www.youtube.com/watch?v=JRl5c-xPVA0

//இப்படிப்பட்ட கட்டுக்கதைகளான சொத்துரிமைச் சட்டங்களை மேற்கின் நீதிமன்றங்கள்கூட ஏற்று தீர்ப்பளிப்பதைப் பார்க்கும்போது, உங்களைப்போல் எனக்கும் மனம் கொதிக்கிறது.//

முகமதுவிற்கு வஹீ வரும் முன்பே நடை முறையில் இருந்த பழக்கங்களை இஸ்லாம்தான் கொண்டு வந்தது என்று முகமது சொல்லிவிட்டு சென்றதை பார்த்து உங்களை போலவே எனக்கும் மனம் கொதிக்கிறது. ஆனால் அதை மறுக்காமல் நீங்கள் வேறு எதையோ கூறி அதனை ஒத்துக்கொண்டது மகிழ்ச்சியையே அளிக்கிறது.

Anonymous said...

//நீங்கள் அன்று மோசமான மத வெறியர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான் எமது ஆசையும்.

ஆனால், நீங்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை என்பதை நினைக்கும்போது, முஸ்லிம்கள் இந்தியாவில் சிறுபான்மையாக இருக்கிறார்களே என்ற கவலை நமக்கு.//

ஓ, உங்களை இந்த நாடு முழுக்க பரவ விட்டிருக்க வேண்டுமோ. சரி நாங்கள் மத வெறியர்கள் என்பது உங்கள் கூற்று என்றால். உங்கள் மார்க்கம் ஆரம்பித்த சவூதி அரேபியாவில் நான் ஒரு இந்து கோவில் கட்டி வழிபடலாம் என்று நினைக்கிறேன். மதவெறி சாதி வெறி இல்லாத அல்லாவின் பிள்ளைகள் அதற்கு அனுமதி தரலாமே.
இந்தியாவில் சிறுபான்மை இனமாகவாவது இருக்கிறீர்களே. ஆனால் மதவெறி இல்லாத அல்லாவின் பிள்ளைகளின் நாட்டில் பிற மதத்தவர்களை அனுமதிக்கவே இல்லையே. இதற்கு பெயர் என்ன மத கிறுக்கா?
//உங்கள் பிள்ளைகள் அப்படி அறிவீனர்களாக நடந்து கொள்ளமாட்டார்கள். சத்தியத்தை தேடுபவர்களாக இருப்பார்கள்.

அப்படி நடந்துகொண்டாலும், விரட்டி அடிக்கப்பட்டவர்கள், அகதிகள், அனாதைகளுடந்தான் தேவன் இருப்பார். //
நிச்சயமாக என் பிள்ளைகள் புத்திசாலிகளாகவே இருப்பார்கள். அவர்கள், தான் சார்ந்து இருக்கும் சமயத்தின் அனாச்சாரங்களையும் முட நம்பிக்கைகளையும், சாதி வேறுபாட்டையும் எதிர்ப்பவர்களாக அதற்கு எதிராக போராடுபவர்களாக இருப்பார்கள், முயற்சியாவது செய்வார்கள். அப்படி இல்லாமல் உங்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு "நாராயண குருவால் முடியவில்லை, பெரியாரால் முடியவில்லை, அம்பேத்கரால் முடியவில்லை" அதனால் தான் நாங்கள் கோஷ்டி மாறிவிட்டோம் என்று சப்பை காரணம் கூற மாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு நன்மையே எதிர்க்காலத்தில் செய்யும், காரணம் அவர்கள் நிறுவன மதத்தை பின்பற்றுபவர்கள் அல்ல.

//வழிபடக் கூடியவருக்கு இருக்கும் தன்மைகள், சிவனுக்கும் இருந்தால், நமக்கேன் ஆட்சேபனை?//
உங்கள் கடவுளுக்கு அந்த தன்மைகள் எல்லாம் இருக்கிறதா, அவரோட கடைசி வேதத்துக்கு முந்தைய வேதம் காணாம போய்ட்டுதாமே அது எங்க போச்சுதாம். அத கண்டு பிடிக்க சொல்லுங்கள்

Anonymous said...

Mr Anonymous,

///நிஜமாகவே இஸ்லாம் வளர்ந்து கொண்டு போகவது கண்கூடாக தெரிகிறது.///

உண்மை உங்களுக்கே தெரிகிறது. ஏன் தயக்கம் இஸ்லாத்தில் நுழைவதற்கு?

///உங்கள் அல்லதானே சொல்லி இருக்கிறார் இதை///

நீங்கள் குறிப்பிட்ட வசனங்களில் சூப்பர் பிகர் என்ற சொல் இல்லை. நீங்கள் தப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.

///இந்த ஹதீஸை படித்த பிறகு உங்கள் கொலைகார மதத்தை விட்டு விடுவீர்கள் என்று நினைக்கிறேன்///

விமர்சிப்பதற்காகவாவது ஹதீஸ்களை படிக்கிறீர்கள். சந்தோசம்.

இந்த ஹதீஸ் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் அறிந்ததுதான். ஆனால், ஏனோ துரதிஷ்டவசமாக யாரும் இந்த மார்க்கத்திலிருந்து மீளுவதில்லை. இதுதான், உங்களது ஆழ்ந்த கவலை? அப்படித்தானே!

விசேடமாக, இந்த மார்க்கத்தைத் தழுவுபவர்களும் குறிப்பாக மேற்கிலுள்ளவர்கள், இப்படிப்பட்ட ஹதீஸ்களை ஆய்வு செய்தே இஸ்லாத்தை ஏற்கின்றனர்.

இந்த மார்க்கத்திலிருந்து விலகுபவர்கள், கொல்லப்படுவார்கள் என்ற ஹதீஸை சொல்லும் தாங்கள், இந்த மார்க்கத்திலிருந்து விலகுவதற்கும் உரிமை இருக்கிறது என்ற ஹதீஸ்களையும் திரட்டிச் சொன்னால், என் போன்ற பாமரர்கள் படித்து தெளிவடையலாம். நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

///நிச்சயமாக என் பிள்ளைகள் புத்திசாலிகளாகவே இருப்பார்கள். அவர்கள், தான் சார்ந்து இருக்கும் சமயத்தின் அனாச்சாரங்களையும் முட நம்பிக்கைகளையும், சாதி வேறுபாட்டையும் எதிர்ப்பவர்களாக அதற்கு எதிராக போராடுபவர்களாக இருப்பார்கள், முயற்சியாவது செய்வார்கள்.///

இப்படித்தான் இருக்க வேண்டும். உங்களின் எண்ணங்கள் நிறைவேற, என் வாழ்த்துக்கள்!

///அவரோட கடைசி வேதத்துக்கு முந்தைய வேதம் காணாம போய்ட்டுதாமே அது எங்க போச்சுதாம். அத கண்டு பிடிக்க சொல்லுங்கள்///

அப்படியா? முந்தைய வேதமா? காணாமல் போய்விட்டதா?

- Ismath

Anonymous said...

//உண்மை உங்களுக்கே தெரிகிறது. ஏன் தயக்கம் இஸ்லாத்தில் நுழைவதற்கு?//

தீவிரவாதம் வளரும் உண்மை நான் மறுக்கவில்லை, ஆனால் அதில் நுழையும் ஆசை எனக்கு இல்லை. நீங்கள் அதில் இருப்பது உங்கள் விருப்பம், நான் மக்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன் மாக்கள் கூட்டத்தில் சேர விரும்பவில்லை.

//நீங்கள் குறிப்பிட்ட வசனங்களில் சூப்பர் பிகர் என்ற சொல் இல்லை. நீங்கள் தப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.///

நீங்கள் நல்ல சொல்லை சொல்லை சொல்லி அல்லா கூட்டி கொடுக்கும் விதத்தை விளக்கலாமே

//இந்த மார்க்கத்திலிருந்து விலகுவதற்கும் உரிமை இருக்கிறது என்ற ஹதீஸ்களையும் திரட்டிச் சொன்னால், என் போன்ற பாமரர்கள் படித்து தெளிவடையலாம். நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.//

நானும் தேடி பார்த்தேன், அப்படி எந்த உரிமையும் விலகுவதற்கு கொடுக்கப்படவில்லை, நீங்கள் உண்மையான முஸ்லிம்தானே, அப்படி ஒன்று இருந்தால் சொல்லுங்களேன்

//அப்படியா? முந்தைய வேதமா? காணாமல் போய்விட்டதா? //
அத நான் சொல்லலைங்க, அல்லாதான் புலம்பினாராம் அவரோட கடைசி வேதத்துல, என்னோட பழைய வேதம் எல்லாம் மனித கரம் பட்டு காணாம போச்சி அத காப்பாத்த முடியாம நான் வெட்டியா இருந்துட்டேன் என்று
இது கூட தெரியாம நீங்கள் என்ன முஸ்லிம், ஒருவேளை நீங்களும் காபிர் கூட்டத்தில் சேர்ந்து விட்டீர்களோ, உங்கள் அல்லா சொன்ன பல விஷயங்கள் உங்களுக்கு தெரியாமல் உள்ளதே

-- Anandan --