Followers

Friday, November 30, 2012

காய்கறி விற்கும் ஆத்தாக்களை யாரும் நினைக்கவில்லையே!


காய்கறி விற்கும் ஆத்தாக்களை யாரும் நினைக்கவில்லையே!



எங்கள் கிராமத்தில் தினமும் அன்று பறித்த காய்கறிகள் காலையிலேயே வந்து விடும். நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கால் நடையாக ஒரு கூடையில் காய்கறிகளை போட்டு எங்கள் கிராமத்தில் பெண்கள் வியாபாரம் செய்ய வந்து விடுவர். வீடு வீடாக வந்து விற்கும் பெண்களும் உண்டு. சில பெண்கள் பள்ளிவாசலுக்கு பக்கத்தில் உள்ள இடத்தில் சாக்கை விரித்து போட்டு அதில் காய்கறிகளை பரப்பி விடுவர். சில பெண்கள் மார்கெட்டில் காய்கறி கடை வைத்திருக்கும் பாய்களிடம் பேரம் பேசி மொத்தமாக விற்று விட்டு அங்கேயே கறியையோ மீனையோ வாங்கிக் கொண்டு தங்கள் கிராமத்துக்கு செல்வதை தினமும் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம்.



இந்த பெண்கள் அதிக லாபமும் வைத்துக் கொள்வதில்லை. அந்த பெண்களிடம் போய் எனது தாயாரும் எனது மனைவியும் பேரம் பேசி காய்கறிகள் வாங்குவதை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருப்பேன். ஜவுளி கடைகளில் போய் அவன் சொல்லும் யானை விலை குதிரை விலை துணிமணிகளை ஒன்றும் பேசாது கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு வருபவர்கள் இந்த பெண்களிடம் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் மல்லுக்கு நிற்பதைப் பார்த்து சில நேரம் கடிந்து கொள்வதும் உண்டு. 'ஆத்தா...இன்னும் ரெண்டு தக்காளியை போடு' என்று அவர்கள் கெஞ்சுவதை பார்த்து எனக்குள் சிரித்து கொள்வேன்.

தற்போது இந்த பேரம் பேசுவதெல்லாம் இன்னும் சில நாட்களில் மறைந்து போய் விடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. வெளி நாட்டு கம்பெனிகளின் படையெடுப்பு நம் நாட்டு சில்லறை வியாபாரிகளை வெகுவாக பாதிக்கும் என்பதை பலரும் மறந்து விடுகிறோம். தற்போது இந்த பெண்களிடமிருந்து குறைந்த விலையில் அதிக சத்துள்ள காய்கறிகளை வாங்கி சாப்பிடுகிறோம். இயற்கை உரங்களாலேயே இந்த பெண்கள் அதிக லாபம் பார்க்காமல் சிறந்த காய்கறிகளை நமக்கு தருகிறார்கள். அவர்களும் குறிப்பிட்ட அளவு லாபத்தை பெற்றுக் கொள்கிறார்கள். மண் வளம் கெடக் கூடாது என்பதற்காக பூச்சி மருந்துகளை அளவுக்கதிமாக பயன்படுத்துவதில்லை. கிராமங்களில் கிடைக்கும் இயற்கை உரங்களை வைத்தே தங்களின் பயிர்களை செழிப்பாக்குகிறாரகள்.

இதே வெளி நாட்டு கம்பெனிகள் இதிலும் புக ஆரம்பித்தால் அவன் சொல்லும் பயிரைத்தான் பயிரிட முடியும். அதிக லாபம் பார்ப்பதற்காக கண்ட உரங்களையும் போட்டு மண்ணின் வளத்தையும் நாசமாக்கும் அபாயம் உண்டு. அவன் சொல்லும் விலையைத்தான் விவசாயியும் பின் பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவர். இதனால் விலைவாசி இன்னும் அதிக உயரத்தை அடையும் அபாயம் உள்ளது. மேலும் பன்னாட்டு கம்பெனிகள் அடி மாட்டு விலைக்கு விவசாய நிலங்களையே கபளீகரம் செய்து விடும் அபாயமும் உண்டு.

ஆனால் நம் மன்மோகன் சிங்குக்கோ, சிதம்பரத்துக்கோ இந்த ஏழை உழைப்பாளிகளை மனதில் கொள்ளாது கார்ப்பரேட் கம்பெனிகள் அரசுக்கு மொத்தமாக செலுத்தும் கப்பத் தொகையிலேயே இவர்களின் கவனம் இருக்கிறது.. அமெரிக்காவின் அழுத்தம் வேறு இவர்களை நம் நாட்டு மக்களை விட அமெரிக்க முதலாளிகளின் நலனையே அதிகம் பார்க்க சொல்கிறது.

கிராமங்கள் செழிப்பாக இருந்தால்தான் நகரங்கள் வளமாக இருக்க முடியும். தற்போது வயல் வெளிகளெல்லாம் வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருக்கிறது. அந்த ஊருக்கு சம்பந்தமே இல்லாத பெரும் பண முதலைகள் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி பல மடங்கு லாபத்தில் மனைகளாக போட்டு கொள்ளை அடிப்பதும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. மேலதிகமாக சில்லரை வியாபாரத்திலும் அந்நிய கம்பெனிகள் மூக்கை நுழைத்தால் சொல்லவே வேண்டாம்.

தற்போது பாராளுமன்றத்தில் இது சம்பந்தமாக பலத்த சர்ச்சை நடந்து வருகிறது. என்னைக் கேட்டால் வெளிநாட்டு கம்பெனிகள் இங்கு வருவது நமக்கு பெரும் இடையூறாகவே இருக்கும் என்பது என் கணிப்பு. கஞ்சியோ கூழோ சொந்த நிலத்தில் சொந்த மக்கள் பயிரிட்டு தனது சொந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாடே தொலை நோக்கில் சிறந்து விளங்கும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!




18 comments:

வலையுகம் said...

மிக அழகிய பகிர்வு
பிரேசிலில் வால்மார்ட் நுழைந்த பத்தே ஆண்டுகளில் தெருவோர காய்கறி அங்காடிகள் 27% சதவீத அளவுக்கு மூடப்பட்டிருக்கிறது. அர்ஜென்டினாவிலோ பத்தே ஆண்டுகளில் 30% சிறுகடைகள் இழுத்து மூடப்பட்டு, இந்தத் துறையின் வேலை வாய்ப்பு 26 சதவீத அளவிற்கு குறைந்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் சில்லறை வர்த்தகத்தில் 60 சதவீத அளவுக்கு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் கட்டுப்படுத்துகின்றன.

சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகை உண்டாக்கியுள்ள பாதிப்பைப் புரிந்து கொள்ள சிக்கலான புள்ளிவிவரங்கள் தேவையில்லை. தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சியிடம் கேட்டாலே விளக்கமாகச் சொல்வார். சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட வியாபாரம் குறைந்து போயுள்ள நிலையில் அதை ஈடுகட்ட மளிகை வியாபாரத்தோடு சேர்த்து செல்போன் ரீசார்ஜ், பால் பாக்கெட் போடுவது, தண்ணீர் விற்பது என்று நிறைய சிறு சிறு வேலைகளைச் செய்கிறார்கள். பேரங்காடிகளுக்கு அருகில் இருக்கும் சாதாரண அண்ணாச்சிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வியாபாரத்தில் பாதிதான் இன்று நடக்கிறது. வருமானமும், விற்பனையில் இலாபமும் கணிசமாக குறைந்திருக்கிறது.

உள்ளூர் அளவிலான காய்கனிச் சந்தையில் நுழையும் ரிலையன்ஸ், மொத்தமாக காய்கனிகளை வாங்கிச் செல்கிறது. மொத்த வியாபாரிகளுக்கு பத்து கிலோ இருபது கிலோ என்று விற்பதில் கிடைக்கும் லாபத்தை விட இதில் குறைந்த லாபமே கிடைக்கிறது என்றாலும், நீண்ட நேரம் அழுகிப் போகும் தன்மை கொண்ட பொருட்களோடு சந்தையில் அமர்ந்திருக்க வேண்டியதைத் தவிர்க்க வேறு வழியின்று குறைந்த லாபத்துக்கு ரிலையன்ஸிடம் விற்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். ஒன்றை கவனிக்க வேண்டும் – பலரும் சொல்வது போல் ரிலையன்ஸ் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நேரடிக் கொள்முதல் செய்வதில்லை. தேவைப்படும் போது கமிஷன் மண்டி ஏஜென்டுகளிடமிருந்தும் அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். இந்தளவுக்கு மொத்தமாக வாங்கும் அளவுக்கான சந்தையில்லாத சாதாரண அண்ணாச்சிகள் ரிலையன்ஸோடு போட்டியிட முடியாமல் ஏற்கனவே தவித்து வரும் நிலையில் அவர்களை வால்மார்ட்டுக்கு காவு கொடுக்கத் துடிக்கிறார் மன்மோகன் சிங்.

suvanappiriyan said...

சகோ ஹைதர் அலி!

மிக அழகிய முறையில் அன்னிய முதலீட்டினால் வரும் கேடுகளை விரிவாக விளக்கியுள்ளீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nasar said...

நம் நாட்டு அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா ??
மக்கள் நலனைவிட தன+தன கட்சி நலன் முக்கியம் என்று நினைப்பவர்கள்/செயல்படுபவர்கள் SO மத்திய அரசாங்கம் எந்த கட்சியாக இருந்தாலும், வால்மார்ட்டுக்கு "வால்" பிடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள் இதுல பொதுமக்களாகிய நம்மால்
எதுவும் செய்யமுடியாது ...நீங்க வேணும்னா பாருங்க நிச்சயமாக வால்மார்ட் ,கேரிபௌர் ,ஜியான்ட் வரத்தான் போகுது ....அதுசரி
KFC வந்தவுடன் கையேந்தி பவன் வியாபாரம் "டல்" ஆயிடுச்சா ???
ரிலையன்ஸ் , மோர் [MORE] வந்தவுடன், பெட்டிக்கடை/காய்கறி கடைக்காரர்கள் தலைல துண்டு போட்டு சும்மா உட்கார்ந்து விட்டாங்களா ??
உயர்ந்த தரம்/ குறைந்த விலை யார் கொடுத்தாலும் வரவேற்போமே ..
முன்பு தரமில்லாத கார்/மோட்டார் சைக்கிள்/மின்னணு சாதனங்கள்
இருந்தது ...இப்போ அப்படியா இருக்குது ...??
உள்ளூர் உற்பத்தியாளர்கள் / ஹோல் , ரீடைல் வியாபாரிகள் , நுகர்வோருக்கு தரமானதாகவும் , குறைந்தவிலைக்கும் கொடுத்தால் , அந்நியர்களை ஏன் "ரெட் கார்பெட்" விரிக்கபோறோம் ..???
வண்டிகள் விஷயத்தில் டாடா,ஹிரோ மற்றும் பஜாஜ் கம்பெனிகளிடம் நல்ல தரம் இருக்கிறபடியால் வெளிநாட்டு கம்பெனிகளிடம் போட்டி போட்டு முன்னிலை வகிக்குது இல்லேன்னா எப்பவோ வாஷ் அவுட் ........
போட்டி போடுவதற்கு சக்தி இருந்தால் எதுவொன்றும் நிலைக்கும் [அட பரிணாமம் ..!!??]
எதிலும் போட்டி இருந்தால் நுகர்வோருக்கு லாபம்+நன்மை ......
வால்மார்ட்காரன் கடை போடட்டும் நம்ம ஆட்களும் ஓரமா கடையபோட்டு அவனை விட குறைந்த விலைக்கு கொடுத்தானா பொது ஜனம் அந்த பக்கம் போகுமா ....??? அப்புறம் அவனே ஆட்டோமேடிக்கா US கு ஸ்ஸ்ஸ்ஸ் ஆய்டுவான் ....
நம்ம மக்கள் இந்த விஷயத்தில் ரொம்ப உஷார் பார்ட்டிங்க.......கவலைப்பட தேவையில்ல

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

அவசியமான பதிவு....சகோ.ஹைதர் அலியும் அற்புதமான கருத்துகளை தெரிவித்துள்ளார் ..

இப்போது வால்மார்ட் வருவதருக்கு அரசு தரப்பில் கூறப்படும் வாதங்கள் தான் என்ன.??? எப்படி அரசு இதை நியாயப்படுத்துகிறது.???

suvanappiriyan said...

மலர் மன்னன்!

//முதலில் மெளல்விகளையும் மவுலானாக்களையும் ஒப்புக் கொள்ள வைத்தபின், அவர்களின் அங்கீகாரத்துடன் குரானுக்கும் ஹதீஸ்களுக்கும் விளக்கம் அளித்தால் போதும். தன்னிஷ்டத்துக்கு மனதில் தோன்றியபடியெல்லாம் விளக்கம் அளிக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை.//

மௌலவிகள் மௌலானாக்கள் என்ற கான்செஃப்டே இஸ்லாத்தில் கிடையாது. குர்ஆனிலோ ஹதீதிலோ இந்த அர்த்தத்தில் வார்த்தைகளும் கிடையாது. இதற்காக ஒரு மதரஸாவில் சேர்ந்து பாடம் படித்து பட்டம் பெற்றவர்தான் இஸ்லாத்தை பற்றி பேச வேண்டும் என்ற எந்த சட்டமும் இஸ்லாத்தில் கிடையாது. எனது கிராமத்தில் நான் சில மௌலவிகளிடம் கேட்ட கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. எங்கள் ஊர் பள்ளி வாசலில் நடந்த மூடப் பழக்கங்களை நண்பர்கள் துணை கொண்டு எதிர்த்தவன் நான்.

முகமது நபியிடம் பயிற்சி பெற்ற அவரது தோழர்கள் முறை வைத்து கொள்வார்களாம். ஒரு நாள் வேலைக்கு செல்வார்கள். மறுநாள் முகமது நபியோடு இருந்து இஸ்லாத்தை படிப்பார். மறுநாள் தங்கியிருந்தவரிடம் பாடம் படிப்பார். எனவே அறிஞர்கள் கூட்டம் என்று தனியாக ஒன்று கிடையாது. அனைவரும் உழைத்து சம்பாதிக்க வேண்டும். முகமது நபியே நூறு ஆடுகள் கொண்ட ஒரு ஆட்டுப் பண்ணையை வைத்திருந்தார். அதைக் கொண்டே தனது குடும்ப செலவுகளை பார்த்துக் கொண்டார். எனவே புரோகிதம் இஸ்லாத்தில் கிடையாது. புரோகிதர்களுக்கு தனி மரியாதை செலுத்துவதும் கூடாது. குர்ஆனையும் ஹதீதையும் நீங்களும் தெளிவுற படித்து தெரிந்து கொண்டால் இஸ்லாமிய பார்வையில் நீங்களும் ஒரு அறிஞரே.

//மவுல்விகளுக்கும் மவுலானாக்களுக்கும் தெரியவந்தால் ஒட்ட நறுக்கி விடுவார்கள்!//

தமிழகத்தில் மதரஸாவில் படித்து காலம் தள்ள முடியாது என்று தற்போது யாரும் மௌலவி ஆவதற்கு விருப்பப்படுவதில்லை. மதரஸாக்கள் அனைத்திலும் ஆங்கிலம், கணிணி, அறிவியல், கணிதம் போன்ற படிப்புகளை கொண்டு வர பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே பல மதரஸாக்கள் ஓரியண்டல் பள்ளிகளாக மாற்றம் அடைந்து குர்ஆன் ஹதீஸ் இரண்டு பாடங்களாகவும் மற்ற உலக கல்வி நான்கு பாடங்களாகவும் பிரிக்கப்பட்டு நடந்து வருகிறது.

வஹாபியம்(தவ்ஹீத்) அதிகம் வளர்ந்ததால் புரோகிதம் இன்று ஓடி விட்டது. எனவே யாரும் யாரையும் நறுக்க துணிய மாட்டார். கவலை வேண்டாம், :-)

suvanappiriyan said...

தி இந்து- 18.2.2002:

தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.

ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால்இஅவ்வூர் இந்து முன்ன ணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17)மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.

தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இரு வரும் ஒப்புக்கொண்டனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர்களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. ().

தென்காசி - ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டுவெடிப்பு :

அடுத்து எங்கள் பகுதியில் நடந்த ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டுவெடிப்பு. இரண்டு குழுக்களுக்குள் உள்ள பகைமையை மதக்கலவரமாக மாற்றி இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டாக்க முயற்சித்த இந்து முண்ணணியினர்கள்.

24-01-2008 ல் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இரண்டு ''பைப்'' வெடிகுண்டுகள் வெடித்தன. தென்காசி பேருந்து நிலையத்திலும் இதேபோன்ற குண்டுகள் வெடித்தன.

குண்டு வெடிப்புகள் நடந்தவுடனேயேஇ ஆர்.எஸ்.எஸ். இன் மாநிலத் தலைவரான மாரிமுத்துஇ தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளும் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும்இ இவர்கள்தாம் இக்குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என்றும்இ இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறினால்இ மாநிலம் தழுவிய தீவிர போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தார். குண்டு வெடிப்புகளுக்கு எதிராக பா.ஜ.க. அப்பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதோடுஇ முஸ்லீம்களுக்கு எதிரான கீழ்த்தரமான மதவெறிப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டது.

குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வந்த போலீசார்இ 04-02-208 தேதியன்று மூவரைக் கைது செய்தனர். இவர்கள்இ பாகிஸ்தானிலிருந்து கூலிக்கு அனுப்பப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளோஇ மாவோயிஸ்டுகளோ அல்ல. பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டேஇ இக்குண்டு வைப்புகளில் ஈடுபட்டவர்கள் இந்து முன்னணி பயங்கரவாதிகள்தாம்.

நிலத்தகராறில் கொலையுண்ட குமார் பாண்டியனின் அண்ணன் ரவி பாண்டியன், கே.டி.சி.குமார், நாராயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகளைக் கைது செய்துள்ள போலீசார் விசாரணைக்குப் பின் பாலமுருகன், முருகன் எனுமிருவரையும் கைது செய்துள்ளனர்.

ரவி பாண்டியனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ""தனது வீட்டில் அடுத்தடுத்து 3 பேர் பலியான போதிலும் இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை; போதிய ஆதரவும் கிடைக்கவில்லை. இப்படியொரு குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தால், இந்துக்கள் ஒன்றாகச் சேர்வார்கள் என்ற நோக்கத்தில் இக்குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதாக'' அவன் தெரிவித்துள்ளான்.

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//அவசியமான பதிவு....சகோ.ஹைதர் அலியும் அற்புதமான கருத்துகளை தெரிவித்துள்ளார் ..

இப்போது வால்மார்ட் வருவதருக்கு அரசு தரப்பில் கூறப்படும் வாதங்கள் தான் என்ன.??? எப்படி அரசு இதை நியாயப்படுத்துகிறது.???//

அரசு தரும் விளக்கத்தை பிறகு தருகிறேன். முதலில் வால்மார்ட் வந்தால் என்னவெல்லாம் நிகழும் என்பதற்கு சில உதாரணங்களை வினவு தளத்திலிருந்து தருகிறேன்.


டியான் டிவோய்:

“உள்ளூர் அரசு கல்லூரியில் படித்தேன். 4.0 கிரேட் சராசரி இருந்தது. வாழ்க்கை சிறப்பாகத்தான் போயக் கொண்டிருந்தது. திடீரென்று அப்பாவும் அம்மாவும் உடல் நிலை சரியில்லாமல் ஆனார்கள். வேலைக்குப் போக வேண்டி வந்தது. ஆரம்பிக்கும் போது பெருமையுடன்தான் ஆரம்பித்தேன். கூடுதல் நேரம் வேலை செய்வதற்கு சுணங்கியதில்லை. எப்போது பார்த்தாலும் ஆள் பற்றாக்குறையாகவே இருக்கும். விருப்பத்தோடு கூடுதல் நேரம் வேலை செய்வேன். பின்னர்தான் தெரிந்தது, ஆள் பற்றாக்குறை திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என்பதை”.

“எப்போதும் தாமதமாகத்தான் வீட்டுக்கு வர முடியும். குழந்தைகளை காலையில் எழுப்பி பள்ளிக்குத் தயார் செய்து கொண்டு விட்டு விட்டு வேலைக்கு வருவேன் 4 மணி நேரம்தான் தூங்கியிருப்பேன். மாலையில் கூடுதல் நேரம் வேலை செய்வேன். ஓவர் டைம் கிடைக்காது.”

“சம்பளம் வாங்கியதுமே உடனேயே வால்மார்ட்டிலேயே செலவழிப்பேன். ஆரம்பத்தில் வால்மார்ட்டின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தேன். ஆனால் அது கட்டுப்படி ஆகவில்லை. இன்சூரன்ஸ் பிரீமியம் கொடுக்க வேண்டும், ஏதாவது சிகிச்சைக்கு டாக்டரிடம் போனால் அவருக்கும் காசு கொடுக்க வேண்டியிருக்கும்”

---------------

எடித் அரானா என்ற பெண்ணுக்கு 2 பெண் குழந்தைபகள். வால்மார்ட்டில் 6 ஆண்டுகள் வேலை செய்தார்.

“வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்வதை உற்சாகமாக செய்தேன். ஓவர் டைம் கிடையாது. அரை மணி நேரம் இருக்கும் போது 5 கூடை நிறைய பொருட்களை அடுக்கி வைக்க வேண்டியிருக்கும். மலர்ந்த முகத்துடன் செய்ய வேண்டும். செய்தே தீர வேண்டும். உன்னால் முடியா விட்டால் வேறு ஆள் கிடைக்கிறது. நாம் ஆள் எடுத்துக் கொண்டேதான் இருக்கிறோம் என்று உனக்குத் தெரியும் என்பார்கள்”.

“மேலாளராக பதவி உயர்வு பெற விண்ணப்பித்தேன். என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் கிடைத்தது. அது அனைத்தையும் செய்து முடித்த பிறகு பதவி உயர்வு கிடைக்கவில்லை. மேலாளரிடம் கேட்ட போது, உன்னை போன்றவர்களுக்கு நிர்வாகத்தில் இடம் இல்லை என்றார். ஏன், நான் ஒரு பெண், நான் ஒரு கருப்பு என்பதாலா என்று கேட்டால் இரண்டையும் சரியாக சொல்லி விட்டாயே என்கிறார். “

suvanappiriyan said...

வெண்டி குய் – 21 வயது ஷான்ஷி மாகாணத்தை சேர்ந்தவர். விவசாயக் குடும்பம். காலையிலிருந்து இரவு வரை உழைக்கிறார்கள். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது வேலைக்கு வந்தேன். தொழிற்சாலையில் இருக்கும் நண்பர் மூலம் வேலைக்குச் சேர்ந்தேன். வென் ஈ ஹூனானை சேர்ந்தவர். பாதுகாப்புத் துறையில் வேலை செய்கிறார். இரண்டு பேரும் சேர்ந்து வாழ்கிறார்கள்.

வெண்டி காலை 7.30 முதல் இரவு 10 மணி வரை வேலை செய்ய வேண்டும். வென் யி இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை வேலை செய்கிறார்.

வெளியில் வாடகைக்கு அறை எடுத்து தங்குகிறார்கள். தொழிற்சாலை உணவு நன்றாக இருக்காது. தொழிற்சாலை அறையில் தங்கா விட்டாலும் மின்சாரம், தண்ணீருக்கு பிடிக்காவிட்டாலும், வாடகை பிடிப்பார்கள். தங்கினால் அறை வாடகை மட்டுமின்றி மின்சாரம், தண்ணீருக்கும் கட்ட வேண்டும்.

“நான் வேலை செய்யும் இடத்தில் மிகவும் புழுக்கமாக இருக்கும். என் உடல் வேர்வையால் நனைந்து போயிருக்கும். கண்காணிப்பாளர்கள் வரும் போது எப்படி பொய் சொல்ல வேண்டும் என்று கற்றுத் தருவார்கள். வாரத்துக்கு 7 நாட்கள் வேலை பார்த்தாலும் 6 நாட்கள் வேலை என்று சொல்ல வேண்டும். நனகு பொய் சொன்னால் பரிசு கிடைக்கும். இல்லா விட்டால் தண்டனை கிடைக்கும். பொய் தகவல்களை சொல்லும்படி மிரட்டுவார்கள்”

“இரவும் பகலும் வேலை பார்த்து ஒரு நாளைக்கு 3 டாலருக்குக் குறைவான வருமானம் பெறுகிறோம். எல்லோரும் இதே போலத்தான் வாழ்கிறார்கள்”

பங்களாதேஷ்

வங்கதேசத்தில் 1,89,000 பேர் வால்மார்ட் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். 5.30க்கு எழுந்து கைவிரல்களால் பல் தேய்த்து காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை வாரத்துக்கு 7 நாட்களும் வேலை செய்கிறார்கள். மணிக்கு 13 சென்ட் முதல் 17 சென்ட் வரை கிடைக்கிறது.

suvanappiriyan said...

சலாம் சகோ நாசர்!

//வால்மார்ட்காரன் கடை போடட்டும் நம்ம ஆட்களும் ஓரமா கடையபோட்டு அவனை விட குறைந்த விலைக்கு கொடுத்தானா பொது ஜனம் அந்த பக்கம் போகுமா ....??? அப்புறம் அவனே ஆட்டோமேடிக்கா US கு ஸ்ஸ்ஸ்ஸ் ஆய்டுவான் ....
நம்ம மக்கள் இந்த விஷயத்தில் ரொம்ப உஷார் பார்ட்டிங்க.......கவலைப்பட தேவையில்ல//

நாம் நினைப்பது போல் நிலைமை இல்லை. பெப்ஸி வந்து புகுந்தவுடன் நம் நாடடு காளி மார்க என்ன ஆனது. பெப்ஸியின் தரத்தைப் பற்றி சொல்லத் தேவையில்லை. விளம்பரத்தையும் ஆடம்பரத்தையும் வைத்து எல்லோரது வாயையும் அடைத்து விடுவார்கள்.

வால்மார்ட் போன்ற கார்ப்பரேட் சில்லறை வணிகர்கள் பொருட்கள் வாங்குவதையே உலகமயமாக்கியிருப்பவர்கள். வால்மார்ட்டில் விற்கப்படும் பால் பாக்கெட் ஆவின் பாலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விலை குறைவாக கிடைத்தால் ஆஸ்திரேலியாவிலிருந்து பதப்படுத்தப்பட்ட, டெட்ராபேக் பாலை விற்க ஆரம்பிப்பார்கள். காய்கறிகள், முட்டை போன்றவற்றை ஒப்பந்த பண்ணை முறையில் பணக்கார விவசாயிகள் அல்லது முதலாளிகளிடம் ஒப்படைத்து சிறு விவசாயிகளையும், குடிசைத் தொழில்களையும் ஒழித்து விடுவார்கள். அரிசி, பருப்பு, வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள், பழங்கள் கூட குறைந்த விலையில் வால்மார்ட்டின் தரத்துக்கு கிடைக்கக் கூடிய எந்த நாட்டிலிருந்தாவது இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும்.

இதனால் நமது நாட்டு குடிசைத் தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

UNMAIKAL said...

உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து

உயிருக்கு போராடிவரும்

சிறைவாசி அபுதாகிர் விடுதலைக்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்



கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து உயிருக்கு போராடிவரும் சிறைவாசி சகோதரர் அபுதாகிர்...

நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமாகிவருகிறது...

சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன...

கண்பார்வை வேகமாக குறைந்துவருகிறது...

வலதுகால் மூட்டுக்கு கீழ் கொப்புளங்கள் இரத்தமும் சீளுமாக அவருக்கு மிகுந்த வேதனையை தருகிறது.

உயிரின் இறுதி கட்டத்தில் இருக்கும். உயர் சிகிச்சைக்காக அவரை நீதி மன்றம் 90 நாள் பரோல் கொடுத்தும் அதை மதிக்காமல் தமிழக அரசு இன்னும் அவரை மருத்துவ் மனையில் வைத்து சிறை படுத்தி உள்ளனர்.

இதை கண்டித்து கோவையில் அணித்து முஸ்லிம் கூட்டமைப்பு என்ற பெயரில் கடந்து வெள்ளி மாலை (30 -11 -2012 ) 4 .30 மணியளவில் தமிழக அரசையும் , காவல் துறையும், பொய் தகவலை தொடர்து அளித்து வரும் உளவு துறையும் கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மிகவும் பிரம்மாண்ட முறையில் நடந்தது.

இதில் த மு மு க சார்பாக மாநில பேச்சாளர் கோவை ஜாகிர் அவர்களும் ம ம க சார்பாக கவுன்சிலர் சாதிக் அலி அவர்களும் உரையாற்றினார்.

பிறகு சிறுமான்மை அறக்கட்டளை, த மு மு க , பி எப் ஐ, ஜமாஅதே இஸ்லாமிக் ஹிந்த் , ம ம க, எஸ் டி பி ஐ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், வெல்பேர் பார்டி ஆப் இந்திய, இந்தியன் தௌ கித் ஜமாஅத் , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ( ம) போன்ற அமைப்புகளின் தலைவர்களும் உரையாற்றினார்.

இதில் சுமார் 4000 பேருக்கும் மேல் கலந்து கொண்டனர் . இந்த முஸ்லிம் கூட்டமைப்பு முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடக்கும் அணைத்து பிரிச்சனைகளிலும் ஒன்று கூடி நீதிக்காக போராடுவது இனி தொடரும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது ...

இந்த ஆர்ப்பாட்டம் கோவை காவல் துறையை பெரும் வியப்புடன் வியப்படைய செய்தது .....

புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

http://www.tmmk.info/index.php?option=com_content&view=article&id=2879:2012-12-01-13-46-49&catid=58:2009-10-11-12-42-41

UNMAIKAL said...

தர்ஹா சந்தனக் கூடுக்கு 40 கிலோ சந்தனைக் கட்டை இலவசமாம்!

முதல்வரின் உத்தரவை கண்டித்து TNTJ கண்டன அறிக்கை!



நாகூர் தர்காவில் சந்தனக்கூடு நடத்தும் நாளில் சமாதியில் சந்தன கட்டைகள் அரைத்து சந்தனம் பூசுவதற்கு நாகூர் தர்காவின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ். காமில் காதிரி முதல்வரை சந்தித்து சந்தன கட்டைகளை மானியமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்று சந்த கூடு நடக்கும் நாளில் மூன்று லட்சம் மதிப்புள்ள 40 கிலோ சந்தன கட்டையை இலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இல்லை.

தர்காக்களை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்பதே நபிகளார் காட்டித் தந்த வழிமுறையாகும்.

இதற்கு மாற்றமாக இஸ்லாத்தின் பெயரால் சந்தனக்கூடு விழாவுக்கு சந்தனகட்டைகளை வழங்கிய தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டிக்கிறது.

கண்டனப் போஸ்டர் வாசகம்

சமாதிக்கு சந்தனக்கட்டை வழங்கி இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


http://www.tntj.net/117446.html

suvanappiriyan said...

திரு மலர் மன்னன்!

//கணிதம், விண்வெளி இயல் எல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து அரேபியா வழியாக மேற்கே போனதால் எல்லாம் அரேபியாவிலிருந்து வந்ததாக எண்ணி விட்டார்கள். அவ்வளவு ஏன், மிளகுகூட அரேபியாவில் விளைவதாகத்தான் ஐரோப்பியர்கள் முதலில் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அரேபிய வணிகர்கள் மூலமாகச் சென்றதுதான் காரணம். அதன் பிறகுதான் விவரம் புரிந்தது.//

எனது தாய் நாட்டிலிருந்து இந்த அரிய பொக்கிஷங்கள் வணிகர்கள் மூலமாக அரபு நாடுகளுக்கு சென்றது என்ற உங்கள் வாதம் உண்மையாக இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அதனால் எனக்கு பெருமையே. இந்த அறிவை கிரகிப்பதற்கு ஒரு சமூகத்துக்கு அறிவு சார் சூழல் இருந்தாலே சாத்தியப்படும். இவை அனைத்தையும் அரபியில் மொழி பெயர்க்க அனைத்து துறைகளிலும் அரபுகள் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும். அரபுகளிடமிருந்து கடன் வாங்கிய ஐரோப்பியர்கள் அந்த அறிவை தங்களாதாக ஆக்கிக் கொண்டனர். எனவே இந்த கண்டு பிடிப்புகள் அனைத்திற்கும் உரிய பெருமை இந்திய நாட்டுக்கும், அரபு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் சமமாக பிரித்தளிக்க வேண்டும்.

தற்போது நாம் பயன்படுத்தும் ஒன்று, இரண்டு என்ற இலக்கங்கள் கூட அராபிய எண்ணுருக்கள் என்றுதான் நான் சிறு வயதில் பாடப் புத்தகங்களில் படித்துள்ளேன். பூஜ்யத்தை கண்டு பிடித்து அதனை இலக்கங்களில் முதன் முதலாக சேர்த்ததும் அராபியர்களே! எனவே இந்த முன்னேற்றங்களில் அனைத்து தரப்பு மக்களும் சரிசமமாக பங்கெடுத்து உள்ளனர். இதில் அரபு நாடுகள் அறிவியலுக்கு எதுவும் செய்யவில்லை என்பது தவறான வாதம் என்பது உங்களது பின்னூட்டத்தின் வாயிலாகவே வெளி வந்துள்ளது. நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//இதில் சுமார் 4000 பேருக்கும் மேல் கலந்து கொண்டனர் . இந்த முஸ்லிம் கூட்டமைப்பு முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடக்கும் அணைத்து பிரிச்சனைகளிலும் ஒன்று கூடி நீதிக்காக போராடுவது இனி தொடரும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது ...

இந்த ஆர்ப்பாட்டம் கோவை காவல் துறையை பெரும் வியப்புடன் வியப்படைய செய்தது .....//

//கண்டனப் போஸ்டர் வாசகம்

சமாதிக்கு சந்தனக்கட்டை வழங்கி இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.//

வருகைக்கும் சுட்டியைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு மலர் மன்னன்!

//ஹிந்து மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது ஐன்ஸ்டைன் கண்டுணர்ந்து பதிவும் செய்துள்ள உண்மை. இறைவன் சொக்கட்டான் ஆடுவதில்லை என்று அவர் சொன்னதும் இந்தப் பின்னணியில்தான்!//

இதையும் நான் மறுக்கவில்லை. ஏனெனில் இந்து மத வேதங்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இறைவனால் அருளப்பட்டது என்றுதான் நானும் பல பதிவுகளில் எழுதியுள்ளேன். இடையில் பல இடைச் செருகல்கள் நுழைந்து விட்டதை நாம் படிக்கும் போதே உணரலாம். மனிதர்கள் சமம் என்று சில இடங்களிலும். மனிதர்களில் ஏற்ற தாழ்வு உண்டு என்றும் சில இடங்களில் வரும். அதே போல் ஓரிறைக் கொள்கையை சொல்லும் இந்து மத வேதங்கள் மற்ற சில இடங்களில் இந்திரன் போன்ற பஞ்ச பூதங்களை இறைவனாக உருவகப்படுத்துவதையும் பார்க்கிறோம். இவை எல்லாம் பின்னால் வந்தவர்களின் இடைச் செருகல்கள் என்று விளங்கிக் கொள்ளலாம். சமீபத்தில் இறைவனால் அருளப்பட்ட பைபிளில் ஏசு சொன்ன கருத்துக்கு மாற்றமாக எத்தனை இடைச் செருகல்கள் அவரது சீடர்களால் புகுத்தப்பட்டுள்ளது என்பதை படிக்கும் போதே நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

உலக மூல மொழிகள் அனைத்திற்கும் வேதங்களும் தூதர்களும் வந்திருப்பதாக குர்ஆன் கூறுகிறது. நமது தமிழ் மொழிக்கும் வேதம் வந்திருக்கலாம். அது திருக்குறளாகவும் இருக்கலாம்.

UNMAIKAL said...

ஓரின சேர்க்கைக்கு இஸ்லாத்தில் ஆதரவு பெருகிவருவதாக "தந்தி TV" விஷமம்!.

Sunday, 02 December 2012 03:51

DEC 2, இன்றைய தினம் (02/12) காலை 8.30 மணிக்கு "தந்தி டிவி"யின் "360"- உலகை சுற்றி நிகழ்ச்சியில்,

"ஓரின சேர்க்கை"க்கு இஸ்லாத்தில் ஆதரவு பெருகிவருவதாக,

விஷமத்தனமான செய்திகளையும்-தவறான காட்சிகளையும் காண்பித்தது.

அதுமட்டுமல்லாமல், ஒரு பெரிய பள்ளிவாசலை காண்பித்து - அங்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் காட்சிகளை விரிவாக காண்பித்து,

அவர்கள் அனைவரும் ஓரின சேர்க்கையாளர்கள் என்றும்,

ஓரின சேர்க்கையாளர்கள் தங்களுக்கென்று தனியாக பிரம்மாண்டமான பள்ளிவாசலை கட்டி அதில் தொழுது வருவதாகவும் கூறுகிறது "தந்தி TV".

மானக்கேடான விஷயத்தை - இஸ்லாமியக்கொள்கைக்கு எதிரான கருத்துக்களை சொல்லி "விஷமத்தனம்" செய்துள்ளது "தந்தி TV"

மேலும், எங்கோ தொழுகை நடைபெறுவதை "ஓரின சேர்க்கையாளர் தொழுகை"யாக சித்தரித்து காட்சிகள் அமைத்துள்ளது.

"தந்தி TV"யின் தொலைபேசி எண்கள் : +914442907777, +9144442907789

SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/649--q-tvq-

suvanappiriyan said...

திரு மலர் மன்னன்!

//ஒரு சந்தேகம்: ஹஜ் கடமையாற்ற சவூதியில் விசேஷ ரயில் விடுகிறார்களே, அதில் அரபிகள் மட்டுந்தான் ஏறலாம் மற்றவர்களுக்கு அனுமதி இல்லையாமே, உண்மையா? உங்களுக்கு அதில் பயணிக்க அனுமதி உண்டா? அல்லது வேடிக்கை பார்க்க மட்டுந்தான் முடியுமா?//

பல தவறான புரிதல்களில் இதுவும் ஒன்று. முதல் வெள்ளோட்டம் விட்ட பொழுது மன்னர், மந்திரிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பயணித்தனர். அதன் பிறகு முழுக்க வெளி நாட்டினர் வசதிக்காகவே இந்த ஏற்பாடு. வருடந்தோறும் ஹஜ் செய்பவர்களில் 10 சதம் கூட சவுதிகள் இருக்க மாட்டார்கள். மக்கா மதினாவில் செய்யப்படும் அனைத்து வசதிகளும் வெளி நாட்டு ஹாஜிகளின் நலனைக் கருத்தில் கொண்டே செய்யப்படுகிறது. இதற்காக சவுதி அரசு வருடந்தோறும் பல மில்லியன் ரியால்களை செலவு செய்து வெளி நாட்டினருக்கு வசதி செய்து கொடுக்கிறது.

http://www.emirates247.com/news/region/muslim-pilgrims-to-ride-first-makkah-metro-2010-10-10-1.301747

//ஓர் அரேபியன் தட்டிலிருந்து நீங்கள் பிரியாணி எடுத்து உண்ண அனுமதிக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் தட்டிலிருந்து ஓர் அரேபியன் எடுத்து உண்ணமாட்டானாமே அதுவும் உண்மையா? போய் வந்தவர்கள் சொல்லக் கேள்வி//

அடுத்த தவறான புரிதல். எனது வீட்டுக்கு எனது ஓனர் சில நேரங்களில் வந்தால் ஆண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிட்டுள்ளோம். இது பல முறை நடந்துள்ளது. தொட்டால் தீட்டு என்று இன்றும் நம் நாட்டில் சொல்லி வரும் சூழலில் நான் கை வைத்த பிரியாணியை அவரும் அவர் கை வைத்த பிரியாணியை நானும் சாப்பிட்டுள்ளோம்.

இவ்வாறு ஒரே தட்டில் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை. விருப்பமில்லாதவர்கள் தனி தட்டிலும் சாப்பிடலாம். இவ்வாறு ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பொதும் சில ஒழுங்குகளை முகமது நபி கற்றுக் கொடுத்துள்ளார். ஓரத்திலிருந்து சாப்பிட வேண்டும். மற்றவர் முகம் சுழிக்கும் அளவுக்கு தட்டின் எல்லா இடத்திலும் கைகளை போட்டு துழாவக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் உண்டு.

suvanappiriyan said...

திரு மலர் மன்னன்!

//அரபி ஓர் இனிய மொழி. சொல்லாடலே கவிதை நடையாக இருக்கும். சாதாரணப் பேச்சுகூட குறியீடுகளால் நிரம்பியிருக்கும். நாம் சாதாரணமாக வாருங்கள், உட்காருங்கள் என்பதைக் கூட அழகான கவிதைபோலச் சொல்வார்கள். உருதுவில் உள்ள அழகே அரபியிலிருந்து வந்ததுதன் என்பது என் எண்ணம்.//

அரபியையும் பார்சி மொழியையும் கலந்து மொகலாயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய மொழி உருது. உருது மொழி தெரிந்தவர் அரபி மொழியை மிக இலகுவாக கற்றுக் கொள்ளலாம். எழுத்துக்களும் ஓரளவு ஒன்றாகவே வரும்.

//ஆனால் அதையே கருத்தில்கொண்டு அரேபியர் அனைத்தும் அறிந்த சான்றோர் எனக் கொண்டுவிட முடியுமா?//

ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு ஒரு கதையை எவரும் மொழி பெயர்த்து விடலாம். ஆனால் விஞ்ஞான கண்டு பிடிப்புகளை ஒருவர் மொழி பெயர்க்க முனைந்தால் விஞ்ஞானத்தில் ஓரளவாவது பரிச்சயம் இருக்க வேண்டும். இல்லை என்றால் மொழி பெயர்ப்புக்கு ஒரு அர்த்தமே இல்லாமல் போய் விடும். அடுத்து குர்ஆனையே எடுத்துக் கொள்ளுங்களேன். வெறும் வணக்கத்தை மட்டும் சொல்லவில்லை. கோள்களின் சஞ்சாரம். சூரியனும் நகர்தல். புவியீர்ப்பு விசை. மனிதனின் கரு உருவாதல். பெரு வெடிப்புக் கொள்கை என்று அனைத்து துறைகளையும் சர்வ சாதாரணமாக கையாள்கிறது குர்ஆன். அந்த காலத்திலேயே அந்த மக்கள் பலவற்றிற்கு பொருள் உணர்ந்து அதற்கு விளக்க உரையும் எழுதி வைத்துள்ளார்கள். எனவே அறிவில் குறைந்தவர்களாக அவர்களை எண்ண வேண்டாம். தற்போது பணம் வந்து விட்டதால் சிந்தனை குறைந்து விட்டது. எங்கு பொருளாதாரம் மித மிஞ்சி இருக்கிறதோ அங்கு மனிதனின் சிந்தனை மழுங்கடிக்கப்படும். அதுதான் தற்போது அரபுகளிடம் நடந்து வருகிறது. இநத நிலை வருங்காலத்தில் பெட்ரோல் குறைந்தால் மாறலாம் .

UNMAIKAL said...

முஸ்லிம் இயக்கங்களின் செயல்பாடுகளை முடக்க காங்கிரஸ் செய்யும் தந்திரமே அன்றிவேறில்லை.

இண்டலிஜன்ஸ் பீரோ (ஐ.பி)! தொடரும் சர்ச்சை!

Dec 02: அமெரிக்க வெள்ளை மாளிகையில் கறுப்பர் ஒருவர் (ஒபாமா) அதிபராக வந்தது போல் இந்தியாவின் பிராமண ஹிந்துத்துவா இண்டலிஜன்ஸ் பீரோவின் (ஐ.பி) தலைமை இயக்குநராக செய்யத் ஆஸிஃப் இப்ராஹீம் என்ற முஸ்லிம் ஒருவர் பதவி ஏற்றுள்ளார்.

பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் இருந்து செயல்படும் இண்டலிஜன்ஸ் பீரோ (ஐ.பி) யில் இதுவரை ஒரு முஸ்லீமுக்கு கூட தலைவர் பதவி அளிக்கப்பட்டதில்லை.

இந்தியாவின் 125 ஆண்டுகால வரலாறு மாறுகிறது என்ற முறையில் இதை பார்க்க முடியவில்லை.

முஸ்லிம்களும், சீக்கியர்களும் இந்தியன் இண்டலிஜன்ஸ் பீரோவில் வாய்ப்பளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டே வந்தனர்.

1993-ஆம் ஆண்டு வரை ஐ.பியிலும், ரா விலும் ஒரு முஸ்லிம் கூட அதிகாரியாக பணி நியமனம் செய்யப்படவில்லை.

கஷ்மீரில் மோதல் தீவிரமடைந்திருந்த காலக்கட்டத்தில் ஆஸிஃப், ஐ.பியின் கஷ்மீர் ஆபரேசன் டெஸ்கில் பணியாற்றியுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு இந்தியாவின் மதசார்பின்மை என்பது போலி என்கிற உண்மையை முஸ்லிம்கள் புரிந்து கொண்டார்கள்.

பாபர் மசூதி இடிப்பும் அதை தொடர்ந்து நடந்த கலவரங்களும் இந்தியாவில் முஸ்லிம்களை ஒரு பாதுகாபற்ற நிலைக்கு தள்ளியது.

உளவுத்துறை மற்றும் நீதி துறையின் முஸ்லிம் விரோத போக்கு மற்றும் ஹிந்துத்துவா சிந்தனை இவற்றின் காரணமாக
முஸ்லிம்களின் உரிமைள், பாதுகாப்புகள் கேள்விக்குறியானது.


இந்நிலையில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதே நேரம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாசிச ஹிந்துதுவாவுக்கு மாற்றாக பல முஸ்லிம் இயக்கங்கள் தோன்றின.

அவை முஸ்லிம்கள் பற்றி அப்பாவி ஹிந்து மக்களிடம் செயப்படும் முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை முறியடிக்க இரத்ததானம், மருத்துவ சேவை என்று தீவிர பொதுநல பணிகளில் ஈடுபட்டு வந்தன.

அவ்வியக்கங்கள் தங்களை போல் உரிமைகளை இழந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட, மதசார்பற்ற கட்சிகளோடும், இயக்கங்களோடும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களது உரிமைகளை வலுவாக கேட்கத் தொடங்கினர்.

மேலும் அவர்கள் அரசியல் ரீதியாக ஒருங்கிணையவும் தலைப்பட்டனர்.

இதனால் போலியாக மதசார்பின்மை பேசி சிறுபான்மை மக்களை ஏமாற்றி ஓட்டு பொருக்கி வந்த காங்கிரஸ் கட்சி, இந்த இயக்கங்களை, முஸ்லிம் அரசியல் கட்சிகளை முடக்க உளவுத்துறையில் ஒரு முஸ்லிமை கொண்டு வந்திருக்கிறது.

இனி எதை செய்தாலும் உளவுத்துறையின் தலைவர் முஸ்லிம்தானே என்று சொல்லிக்கொள்ள இலகுவாக இருக்கும் இல்லையா.

காங்கிரஸ் கட்சியின் அரசியல் சூதாட்டத்தின் புதிய வரவே ஐபி துறையில் செய்யத் ஆஸிஃப் இப்ராஹீம் என்கிற முஸ்லிம்.

இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி நடத்திய நாடகங்கள் பற்பல அந்த நாடகங்களின் ஒன்றே இந்த செய்யத் ஆஸிஃப் இப்ராஹீம்.

இவரை கொண்டே முஸ்லிம் இயக்கங்களின் செயல்பாடுகளை முடக்க காங்கிரஸ் செய்யும் தந்திரமே அன்றிவேறில்லை.


THANKS TO SOURCE: http://www.sinthikkavum.net/2012/12/blog-post.html