Followers

Thursday, November 15, 2012

குறட்டை பிரச்னையை சமாளிப்பது எப்படி?


'நாசமாப் போச்சு! இன்னைக்கு நான் தூங்கினாப்பலதான்! இறைவா! என் தலையில இப்படியா எழுதனும்!'
(மாலை மலரில் வந்த கார்டூனை மாடலாக வைத்து வரைந்தேன்.)
--------------------------------------------------------

குறட்டை பிரச்னையை சமாளிப்பது எப்படி?

ஒரு முறை எனது அலுவலகத்துக்கு ஒரு பஞ்சாயத்து வந்தது. பாகிஸ்தானி இந்த பிரச்னையை கொண்டு வந்தவன். அவனது ரூமில் உத்தர பிரதேசத்தைச் சார்ந்த ஒருவன் மிக அதிக குறட்டை விடுவானாம். பாகிஸ்தானிக்கு சிறிய சத்தம் வந்தாலும் தூக்கம் வராது. எனவே சில நேரங்களில் தூரத்தில் இருக்கும் அவனது அண்ணன் ரூமில் சென்று தூங்கச் சென்று விடுவானாம். தான் மெஷினில் நின்று வேலை செய்வதால் தனக்கு தூக்கம் அவசியம் என்றும் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் என்னிடம் சொன்னான். 'இதில் நான் தலையிட முடியாது. நமது பாஸிடம் சொல்லி முயற்சிக்கிறேன்' என்று சொல்லி அனுப்பி விட்டேன். இரண்டு நாட்களுக்கு பிறகு எனது பாஸ் அந்த இருவரையும் அலுவலகத்துக்கு அழைத்தார். பிரச்னைகளை காது கொடுதது கேட்டார்.

பாஸ் சிரித்துக் கொண்டே சொன்னதாவது 'தூங்கிய பிறகு ஒரு மனிதன் இறந்த சவத்தைப் போன்றவன். விழித்திருக்கும் போது ஏதேனும் தவறுகள் செய்தால் அதனை நான் தட்டிக் கேட்க முடியும். தூங்கும் போது வரும் பிரச்னைக்கு நானும் எதுவும் செய்ய முடியாது. இது இறைவன் புறத்திலிருந்து வருவது. இதற்கு நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. இதற்கு நிரந்தர மருத்துவமும் இல்லை. இரண்டு வாரம அனுசரிதது தூங்கிக் கொள். அதன் பிறகு தனியாக அறை சரி செய்து கொடுக்கிறேன்' என்று சொன்னவுடன் சமாதானமாகி சென்றான் அந்த பாகிஸ்தானிய நண்பன். சொன்னபடி இரண்டு வாரத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் அந்த உத்தர பிரதேசத்து நபருக்கு தனி அறை கொடுக்கப்பட்டது.

இது உலகம் முழுவதும் உள்ள பிரச்னை. அமெரிக்காவில் இதனால் நிறைய விவாகரத்துகள் நடந்து வருகிறதாம். சோறு அதிகம் சாப்பிடுவதும் மது அதிகம் உட்கொள்வதும் குறட்டை வருவதற்கு முக்கிய காரணங்களாக சொல்கின்றனர்.

----------------------------------------------------------

மாலை மலரில் ஒரு மருத்துவர் குறட்டை சம்பந்தமாக தரும் விளக்கதை இனி பார்ப்போம்.

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.
முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

சிகிச்சை முறை:

குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.

அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.

முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.

இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.

அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.

ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

http://www.maalaimalar.com/2011/01/26125828/medical-uses.html


17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இத்தனை இருக்கா...! குறட்டையே தேவலை போல...

இருந்தாலும் விளக்கத்திற்கு நன்றி...

suvanappiriyan said...

திரு திண்டுக்கல் தனபாலன்!

// இத்தனை இருக்கா...! குறட்டையே தேவலை போல...//

பக்கத்தில் தூங்குபவர்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகம் குறட்டை விடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நல்லது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

ம்ம்ம் ....குறட்டையை வைத்து கோல்ட் மெடலா...??? நல்ல பதிவு சகோ.

இந்த பதிவுக்கு நம்ம ராவணன் பின்னூட்டம் இட்டால் எப்படி இடுவார்..!!!

" அண்ணாச்சி....ரெண்டு ஆண் வந்ததால வேற ரூம் குடுத்துட்டாரு.. இதே புருஷன் பொண்டாட்டி வந்தா அவங்களுக்கும் தனி ரூம் ஏற்பாடு பண்ணி கொடுதுருவாரோ...!!!

நம்ம முனியாண்டி சாமியே தேவலை ... முனியாண்டி முனியாண்டி ...(அபிராமி அபிராமி )"

நன்றி !!!

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் ...சகோ
நமக்கு உறங்கும் போது வாய் வழியாக சௌண்டு வர்றதில்லை
பேக் சைடுல தான் DTS கணக்கா சௌண்டு வருது ராத்திரிலே ...!!!
இதுக்கு என்ன வைத்தியம் பண்ணலாம் பாய் ...!!??
சைலேன்செர் போருந்திக்கொள்ளலாமா ..!!?? ஆவ ஆவ்வ் ....

semmalai akash said...

முன்பெல்லாம் குறட்டையை மட்டும் விட்டுக்கொண்டிருந்த்தவர்கள், இப்போது கூடவே வாய் பினாத்தவும் ஆரம்பித்துவிட்டார்கள். செம சிரிப்பா இருக்கும். இருந்தாலும் இதில் இவ்ளோ சிரமங்கள் இருக்கிறது என்பதை இப்போதுதான் உணர்கிறேன்.

suvanappiriyan said...

திரு ஆகாஷ்!

//முன்பெல்லாம் குறட்டையை மட்டும் விட்டுக்கொண்டிருந்த்தவர்கள், இப்போது கூடவே வாய் பினாத்தவும் ஆரம்பித்துவிட்டார்கள். செம சிரிப்பா இருக்கும். இருந்தாலும் இதில் இவ்ளோ சிரமங்கள் இருக்கிறது என்பதை இப்போதுதான் உணர்கிறேன்.//

இதனால் சவுதியில் பல இடங்களில் பெரும் பிரச்னைகளெல்லாம் உண்டாயிருக்கின்றன. தூங்கிய பிறகு அந்த நபருக்கு எதுவும் தெரியாது என்பதால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலை.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//ம்ம்ம் ....குறட்டையை வைத்து கோல்ட் மெடலா...??? நல்ல பதிவு சகோ.//

வாழ்நாளில் பலர் சந்திக்கும் இது மிக முக்கியமான பிரச்னை. :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ நாசர்!

//நமக்கு உறங்கும் போது வாய் வழியாக சௌண்டு வர்றதில்லை
பேக் சைடுல தான் DTS கணக்கா சௌண்டு வருது ராத்திரிலே ...!!!
இதுக்கு என்ன வைத்தியம் பண்ணலாம் பாய் ...!!??
சைலேன்செர் போருந்திக்கொள்ளலாமா ..!!?? ஆவ ஆவ்வ் ....//

ஹா..ஹா....

சவுண்டு இல்லாம வந்தாதான் மற்றவர்களுக்கு பிரச்னை. எனவே கவலையை விடுங்கள்.

உருளைக் கிழங்கு போன்ற கேஸ் சம்பந்தமான உணவுகளை தவிர்த்துப் பாருங்கள். ஓரளவு குறையலாம்.

மதி said...

நல்ல தகவல்கள்

இதற்கு பொருத்தமான யு டுயுப் http://www.youtube.com/watch?v=5bBmIhOxxmk&feature=related

Enjoy!!!

Unknown said...

கருஞ்சீரக எண்ணையை நாசித் துவாரத்தில் சிறிது தேய்த்துவிட்டு உறங்கினால் குறட்டை வராது என்று சிலர் சொல்கிறார்கள்.

இது எந்தளவு உண்மை என்று தெரியாது.

முயற்சித்துப் பார்க்கலாம்.

Unknown said...

கருஞ்சீரக எண்ணையை நாசித் துவாரத்தில் சிறிது தேய்த்துவிட்டு உறங்கினால் குறட்டை வராது என்று சிலர் சொல்கிறார்கள்.

இது எந்தளவு உண்மை என்று தெரியாது.

முயற்சித்துப் பார்க்கலாம்.

ராவணன் said...

அண்ணாச்சி தூங்கும் போது விடும் குறட்டையால் பக்கம் இருப்பவருக்கே பாதிப்பு.

ஆனால் விழித்திருக்கும்போது குறட்டை விடுபவர்களால் இந்த உலகிற்கே பாதிப்பு.

UNMAIKAL said...

பாலஸ்தீன போராளிகளான ஹமாஸை நச்சுப்பூச்சி என குறிப்பிடும் கோடங்கி இக்பால் செல்வன் எனப்படும் நச்சுப்பூச்சி சரித்திரத்தை முறையாக முழுமையாக படிக்கட்டும்.

இக்பால் செல்வன் எனப்படும் நச்சுப்பூச்சி பலவாறாக பல பதிவுகளில் தன் காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் சேர்த்து செய்து வரும் ஜகதாளபுரட்டு திரிப்புகள் நாளுக்கு நாள் மிகுந்து வருவதை கவனித்துக்கொண்டு தான் வருகிறோம்.

----------------------------------

ஹமாஸ் - (Harakat Al Muqawamah AlIslamiyah)

ஹரக்கத் அல் முக்காவாமா அல் இஸ்லாமியா (Harakat Al Muqawamah AlIslamiyah) என்கிற நெடும்பெயரின் எளிய சுருக்கம்தான் ஹமாஸ் (Hamas).

அதிகம் படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லத்தக்க மிகப்பெரிய பண்டிதர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் அமைப்பு இது.

பாலஸ்தீனின் விடுதலைக்காக மட்டும், இஸ்ரேலுக்கு எதிராக மட்டும் செயல்படும் ஓர் அமைப்பு.

பாலஸ்தீனுக்கு வெளியே ஹமாஸுக்குத் தீவிரவாத இயக்கம் என்று பெயர்.

ஆனால் பாலஸ்தீனுக்குள் அது ஒரு போராளி இயக்கம் மட்டும்தான்.

யூதர்களின் அராஜகங்கள் அனைத்துக்கும் ஒரு தடுப்புச் சக்தியாக விளங்கக்கூடியவர்கள் என்கிற அறைகூவலுடன் (ஹமாஸின் முழுப்பெயரின் நேரடியான அர்த்தமே இதுதான்) பாலஸ்தீன் விடுதலைப் போரில் ஹமாஸ்

ஆனால் எந்த இயக்கத்திலும் படித்தவர்கள் கிடையாது. அல்லது அரைகுறைப் படிப்பு. எந்த ஒரு விஷயத்தையும் உள்ளார்ந்து யோசித்து, அலசி ஆராய்ந்து செயல்படக் கூடியவர்களாக அப்போது யாரும் இல்லை.

ஹமாஸின் பலமே, படித்தவர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் என்பதுதான்.

லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டக்கூடிய பல மிகப்பெரிய கட்டுமான வல்லுநர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், தத்துவ ஆசிரியர்கள், முன்னாள் ராணுவத் தளபதிகள், மதகுருக்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஹமாஸை வழி நடத்தத் தொடங்கினார்கள்.

இத்தனை பெரிய ஆட்களுக்கெல்லாம் துப்பாக்கி தூக்குவதைத் தவிர, வேறு யோசனையே வராதா என்று ஒரு கணம் தோன்றலாம்.

இந்தியா போன்ற பிரச்னைகள் அதிகமில்லாத தேசத்தில், அதிலும் குறிப்பாக ஜனநாயக தேசத்தில் அமர்ந்துகொண்டு, பாலஸ்தீன் பிரச்னையைப் பார்க்கும்போது, சில விஷயங்கள் இப்படித்தான் அந்நியமாகத் தோன்றும்.

ஆயுதப்போராட்டம் தவிர வேறு எதுவுமே உபயோகப்படாது என்று, அத்தனை பேருமே அங்கே முடிவு செய்து களத்தில் இறங்கியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுவது, ஒவ்வொரு கட்டத்திலும் இங்கே அவசியமாகிறது.

ஏனெனில் பாலஸ்தீனிய அரேபியர்களின் எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் இஸ்ரேல் அரசோ, மற்ற தேசங்களின் அரசுகளோ, செவி சாய்க்கவே இல்லை என்பதுதான் சரித்திரம் சுட்டிக்காட்டும் உண்மை.

என்றைக்கு பிரிட்டன், பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் என்றொரு தேசத்தை உருவாக்குவது என்று முடிவு செய்ததோ, அன்றைக்கு ஆரம்பித்த சிக்கல் இது.

பாலஸ்தீனியர்களுக்கென்று பிரித்துக்கொடுக்கப்பட்ட மேற்குக்கரையையும் காஸாவையும் கூட இஸ்ரேல் அபகரித்தபோது, அதன் தீவிரம் அதிகமானது.

அந்தத் தீவிரக் கணத்தில் உதித்த இயக்கம்தான் ஹமாஸ்.


மேற்குக் கரையும் சரி, காஸாவும் சரி, பாலஸ்தீனிய அரேபியர்கள் வாழும் இஸ்ரேலின் எந்த மூலை முடுக்காயினும் சரி. பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்காக ஹமாஸ் தனியொரு அரசமைப்பையே வைத்திருந்தது.

சாலைகள் போடுதல், குடிநீர் வசதி செய்துதருதல், வீதிகளில் விளக்குகள் போட்டுத்தருதல், குப்பை லாரிகளை அனுப்பி, நகரசுத்திகரிப்புப் பணிகள் ஆற்றுதல் என்று ஹமாஸின் 'அரசாங்கம்' செய்த மக்கள் நலப்பணிகள் ஏராளம்.

பாலஸ்தீனிய அரேபியர்கள் ஹமாஸை எந்தளவுக்குக் கொண்டாடுகிறார்களோ, அதே அளவுக்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஹமாஸை அச்சமூட்டும் பயங்கரவாத இயக்கமாகத் தொடர்ந்து கண்டனம் செய்துவருகின்றன

எப்படி பாலஸ்தினியர்களிடமிருந்து சூழ்ச்சி வஞ்சனைகளால் பாலஸ்தீன் அபகரித்து பிடுங்கப்பட்டு இஸ்ரேல் என்று இல்லாத ஒரு நாடு உருவாக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அன்றிலிருந்து இன்றுவரை கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும் பாலஸ்தீனியர்களை பற்றியும் அவர்களுக்காக போராடும் ஹமாஸ் இயக்கம் பற்றியும் அறிந்துகொள்ள‌.


திரு. பா.ராகவன் எழுதிய “நிலமெல்லாம் ரத்தம்” 100 பகுதிகள் அடங்கிய தொடரை <<<<< இங்கு கிளிக் செய்து முழுமையாக படிக்கவும்.

ராவணன் said...

////இங்குள்ள மக்கள் அதிகம் சிந்திக்க தெரியாதவர்கள். சினிமாவை உண்மை என்று நம்புபவர்கள். எம்ஜிஆரை யோக்கியனாகவும் நம்பியாரை கெட்டவனாகவும் இன்றும் நம்பக் கொண்டிருப்போர் ஏராளம். எனவே தான் ஜெயலலிதா வரை முதல்வராக முடிகிறது. வேறு எந்த தகுதியும் தேவையில்லை. சினிமாவில் நல்லவனாக நடித்தால் தமிழகத்தை ஆள முடியும் என்ற நிலைதான் இன்று வரை உள்ளது.///

இப்படி சொன்னது நம்ம அண்ணாச்சிவாள்...

அங்குள்ள...அங்கிருந்த மக்களைப் போல் முட்டாள்களில்லை இங்குள்ள மக்கள்.

சினிமாவை உண்மை என்று நினைக்கும் மக்கள் பரவாயில்லை...யாரோ..என்றோ... எதையோ உளறியதை உண்மை என்று நினைக்கும் கும்பலை என்னவென்று அழைப்பது? விலங்கினும் கீழானவர்கள் என்றா?

இங்குள்ள மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்று கூற அண்ணாச்சிக்கு என்ன உரிமை? ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே இழிவு படுத்துவது நம் அண்ணாச்சியா?

இப்படித்தான் அண்ணாச்சி...
உங்களைப் போல் துப்பாக்கி படத்தினரும் ஏதோ சொல்லிவிட்டார்கள்.

இங்குள்ள மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்று கூறிய உங்களை எதிர்த்து போராட்டமா நடந்தது?

இங்குள்ள மக்கள் வன்முறையாளர்கள் அல்லவே.

suvanappiriyan said...

திரு ராவணன்!

//அண்ணாச்சி தூங்கும் போது விடும் குறட்டையால் பக்கம் இருப்பவருக்கே பாதிப்பு.

ஆனால் விழித்திருக்கும்போது குறட்டை விடுபவர்களால் இந்த உலகிற்கே பாதிப்பு.//

விழித்திருக்கும் போது குறட்டை விடக் கூடாது என்பதற்காகத்தான் உங்களை ஒரு நல்ல மருத்துவரை பார்க்க சொன்னேன். ஆனால் எனது பேச்சை நீங்கள் கேட்பதாக இல்லை. நான் என்ன செய்ய? :-)

//சினிமாவை உண்மை என்று நினைக்கும் மக்கள் பரவாயில்லை...யாரோ..என்றோ... எதையோ உளறியதை உண்மை என்று நினைக்கும் கும்பலை என்னவென்று அழைப்பது? விலங்கினும் கீழானவர்கள் என்றா?//

உங்களுக்கென்று உள்ள வேதத்தை பின்பற்றுபவர்களை இவ்வாறெல்லாம் விலங்குகள் என்று பழிக்காதீர்கள்? பிறகு ராமகோபாலன் உங்கள் மேல் கேஸ் போடப் போகிறார்! :-(

//இங்குள்ள மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்று கூற அண்ணாச்சிக்கு என்ன உரிமை? ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே இழிவு படுத்துவது நம் அண்ணாச்சியா? //

ஹி...ஹி...அந்த கூட்டத்தில் எனது குடும்பமும் வருமே! ஏனெனில் எங்கள் குடும்பத்திலும் திமுகவை ஆதரிக்கும் இரண்டு பேரும் அதிமுகவை ஆதரிக்கும் இரண்டு பேரும் சம அளவில் உள்ளனர்.

//இங்குள்ள மக்கள் வன்முறையாளர்கள் அல்லவே.//

இரண்டு வாரத்துக்கு முன்பு ராமநாதபுரத்தில் சாதி வெறியால் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளார்களே! சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் 300 க்கும் மேற்பட்ட குடிசைகள் கொளுத்தப்பட்டுள்ளதே! நீங்கள் செய்திகளை எல்லாம் பார்ப்பதேயில்லையா? அதிகம் குறட்டை விட்டாமல் இந்த ஊர் பக்கம் போய் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கலாமே!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//இக்பால் செல்வன் எனப்படும் நச்சுப்பூச்சி பலவாறாக பல பதிவுகளில் தன் காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் சேர்த்து செய்து வரும் ஜகதாளபுரட்டு திரிப்புகள் நாளுக்கு நாள் மிகுந்து வருவதை கவனித்துக்கொண்டு தான் வருகிறோம்.//

அவரை நாத்திக குரூப்புகளே சட்டை செய்வதில்லை. வர வர காமெடி பீஸாக மாறிக் கொண்டு வருகிறார். விட்டுத் தள்ளுங்கள்.

suvanappiriyan said...

சகோ யூசுஃப் இஸ்மத்!

//கருஞ்சீரக எண்ணையை நாசித் துவாரத்தில் சிறிது தேய்த்துவிட்டு உறங்கினால் குறட்டை வராது என்று சிலர் சொல்கிறார்கள். //

ஒரு கால் இதிலும் சரியாகலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!