Followers

Tuesday, November 13, 2012

நல்லோர்களின் கோரிக்கை "குஜராத்தைக் காப்பாத்துங்க"....'!


"நான் இப்போ ரொம்ப உயரத்துல இருக்கேன்ல... இன்னும் கொஞ்சம் தூக்கிவுட்டீங்கன்னா டெல்லியையும் புடிச்சுடுவேன். அப்புறம் மனு தர்மத்தையே இந்திய சட்டமாக்கிடலாம்!என்ன! நான் சொல்றது சரிதானே!!"

------------------------------------------------------------

இந்து மதத்தின் மீது பற்றுள்ளவராக மோடி தன்னைக் காட்டிக் கொள்கிறார். உண்மையில் இவருக்கு இந்து மதத்தின் மீது பற்று இருந்திருந்தால் விவேகானந்தரைப் போல குன்றக்குடி அடிகளாரைப் போல், கிருபானந்த வாரியாரைப் போல் இந்து மதத்தில் சீர் திருத்தங்களை செய்ய முனைந்திருப்பார். சாதி வேற்றுமைகளை களையவும் மூடப் பழக்கங்களை ஒழிக்கவும் சட்ட திருத்தம் கொண்டு வந்திருப்பார். ஆனால் இவர் எடுத்ததோ இஸ்லாமிய எதிர்ப்பு. இதன் மூலம் அப்பாவி முஸ்லிம்களை தனது காவல் துறை மூலம் என்கவுண்டர் செய்து பல கொலைகளுக்கு காரணமாகியிருக்கிறார். கோத்ரா ரயில் எறிப்பு ஒரு விபத்து. அதனை முஸ்லிம்களின் மேல் பழி போட்டு 2000 முஸ்லிம்கள் இறக்க காரணமாயிருந்திருக்கிறார். பல கோடி சொத்துக்கள் நாசமாக காரணமாயிருந்தருக்கிறார். இவரது அமைச்சரில் ஒருவரே குற்றம் நிரூபிக்கப்பட்டு இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இர்ஷத் ஜஹானிலிருந்து ஷகாபுதீன் என்கவுண்டர் வரை தற்போது விசாரணையில் உள்ளது. ஐஏஎஸ் ஆபீசர் ஒருவரே இவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை வைத்த வண்ணம் உள்ளார். இவை எல்லாம் முறைப்படி விசாரணை நடக்க வேண்டும் என்றால் மோடியை கீழிறக்க வேண்டும். அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது வருகின்ற சட்டமன்ற தேர்தல்..

இதனை சொல்வதால் மோடியை பார்த்து முஸ்லிம்கள் அச்சமுறுவதாக எண்ண வேண்டாம். மோடியை போல் இன்னும் பத்து பேர் இந்திய அரசியலில் வந்தாலும் இஸ்லாத்துக்கு எந்த பங்கமும் வந்து விடப் போவதில்லை. ஏனெனில் இந்துத்வா இந்தியாவை ஆள ஆரம்பித்தால் பார்ப்பனர்ளைத் தவிர மற்ற சாதியினர் ஓரங்கட்டப் படுவர். இதனால் மனம் வெறுத்து அவர்களின் பார்வை இஸ்லாத்தை நோக்கியோ கிறித்தவத்தை நோக்கியோ திரும்பும். இந்துத்வாவின் ஒரு பகுதியாக சமீபத்தில் நடந்த தர்மபுரி வன்முறையையும், ராமநாதபுரம் வன்முறையையும் எடுத்துக் கொள்ளலாம். மேல் சாதியினர் இதில் ஈடுபட வில்லை என்றாலும் அவர்களால் தொகுத்து தரப்பட்ட இந்து மத ஸ்மிருதிகளே இந்த சாதி வெறிக்கும் வன்முறைக்கும் காரணம் என்பதை மறுக்க இயலாது. எனவே மோடி போன்ற இந்துத்வ வாதிகள் இஸ்லாமிய வளர்ச்சிக்கு ஒரு வகையில் உதவி செய்வதாகவே நினைக்கிறேன். :-)

மேல் சாதியினரின் திட்டமிட்ட பிரசாரத்தால் இன்று மோடி குஜராத்தை மிக செழிப்பாக வைத்திருப்பதாக பொய்யான செய்தி நாடு முழுவதும் பரப்பப்படுகிறது. ஆதிக்க சாதியினருக்கு இந்த உண்மை நன்றாக தெரிந்திருந்தாலும் மோடி இந்துத்வாவுக்கு வால் பிடிப்பவர் என்ற ஒரே குறிக்கோளின் அடிப்படையில் கண்ணை மூடிக் கொண்டு பொய்களை பரப்பி வருகின்றனர்.

ஆனால் குஜராத்தின் உண்மை நிலையோ வேறு விதமாக உள்ளது. நாட்டின் நலனில் மாநிலத்தின் முன்னேற்றத்தில் ஒட்டு மொத்த மக்களின் நிம்மதியான வாழ்வில் உண்மையான அக்கறை கொண்ட ஒரு சில நல்லுள்ளங்கள் மக்களிடம் தங்களின் கோரிக்கையை வைத்துள்ளனர். அதை அப்படியே தருகிறேன். ஊழல் என்று பார்த்தால் காங்கிரஸூம் பிஜேபியும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. எந்த ஆட்சி வந்தாலும் திருடாமல் இருக்க போவதில்லை. ஆனால் இந்துத்வா என்பது ஒரு சாராரை அழித்து மற்றொரு சாராரை வாழ வைப்பது. ஊழலை விட மதவெறி மிக அபாயகரமானது. அதற்கு தூபம் இடுபவர்களே நரேந்திர மோடி, அத்வானி போன்றவர்கள். காந்தி பிறந்த மண்ணில் இனியும் மோடியின் ரத்த வெறி பிடித்த ஹிட்லரின் ஆட்சி தொடரக் கூடாது. அது ஒட்டு மொத்த இந்தியாவின் இறையாண்மைக்கே வேட்டு வைத்து விடும். நேரம் இருப்பவர்கள் இதனை தமிழ்ப்படுத்தி வெளியிடவும். ஆஙகில இணைய தளங்களுக்கும் இந்த செய்தியை அனுப்பி அனைவரும் அறியச் செய்யவும். .

Elusive Propaganda of ‘Development’

Modi’s tall talks on ‘development’ deserves scrutiny. The ruling party is burdening the State Exchequer with liability of crores of rupees every day. Even through the R.T.I. route, it is difficult to arrive at the total of wasteful expenditure. The State’s debt as on 31st August 2011 was Rs. 1,13,939 crores (Rupees One Lac Thirteen Thousand and Nine Hundred Ninety Nine Crores). As per the Report of the Directorate of Economics and Statistics for the year 2011, per capita income of Gujarat is Rs. 63,961, which ranks at No. 9 among the 32 States of the country. As per the news published in the Times of India, there is not much difference as far as the rate of poverty alleviation is concerned. The average poverty alleviation rate for the country as a whole is 1.5 % per year where as it is 1.7 % in case of Gujarat. The percentage of poor people in the State is 23 which, speaks volumes about Gujarat Development model. Let us take a hurried look at some snap-shots of ‘Gujarat Development’.

• Only 43 % of households get water at their door steps in rural areas,
• 16.7 % villagers get clean water. Remaining 83 percent are left out.
• 20 % of the population have to walk long distances to fetch water,
• In the villages, 67 % families do not have toilet facilities,
• In 44 % of the villages, there is increased incidence of jaundice disease,
• 30 % of villagers are faced with malarial fever in epidemic proportion,
• 25% villages are affected by kidney stones
• 44.6% of the children below the age of 5 years are suffering from anemia,
• Gujarat ranks at No. 14 as regards infant mortality rate is concerned and ranks at No. 13 as far as children up to the age of 5 years are concerned.

In short after tall talks of ‘development’, Gujarat has been able to achieve 48 % target as far as Human Development Indices are concerned. Many other States are far ahead of Gujarat in HDI measures.

CAG Report on Gujarat for the year 2011

In this report, there are many startling details about corruption, mal-administration, clumsy and faulty administration, improper and imprudent misuse of Government funds etc. This report was tabled in the Assembly only at the last moment and that too after intervention of H.E. the Governor. No scope was left at all for debating the report in the State assembly. However this report of the CAG gives true and factual position :

• Funds allocated for education could not be utilized.

• Funds earmarked for education of the Dalits were not fully spent continuously for over three years.

• Government purchased gas at higher prices and then sold to Adani and Essar at cheaper prices.

• Gujarat State Petroleum Company Ltd. (GSPCL) in collaboration with Canada’s Global Resources Company ventured into business of drilling petroleum from Krishna - Godavari basin. In this partnership, Canadian Company had no share in the losses of GSPCL. Drilling in K-G Basin was a failure. Yet, the C.M. created a Media hype by riding a helicopter to the drilling rig. Though the entire effort incurred huge loss, the Canadian Company was given a ‘share in profit’, which never existed. Thus, poor tax-payer of the State was looted and a foreign company was handed over a huge bounty. It is believed that in this entire process, scam of over Rs. 5,000 crore had taken place.

• The Government, which boasts of being No. 1, has shown total lack of finance management. It has invested its own resources which fetch only 0.25 per cent interest per annum while it borrows at an annual rate of 7.69 per cent.

• As reported by the C.A.G. irregularities of Rs. 1100 crores are believed to have taken place in Sujalam Sufalam schemes.

• State’s revenue loss during the year 2008-09 was of Rs. 66 crores but the same increased to Rs. 6,966 crores during the year 2009-10. State’s revenue deficit in the year 2008-09 was Rs. 10,438 crores which rose to Rs. 15,074 crores in the year 2010-11. Do not these increases in losses point to incompetence on the part of the administration which boasts of being No. 1 in governance ?

• In the State’s public sector, loss of Rs. 4,216.53 crores was suffered and futile investment of Rs. 300.98 crores was made.

• In the CAG’s internal report, 25 pages have been devoted towards pollution in the State. Disastrous picture of pollution has been depicted making use of color slides and graphs. As many as 13 Effluent Treatment Plants (Central Effluent Treatment Plants) are not functioning as per the norms of the Pollution Control Board because of which natural sources of water have become polluted or contaminated. (The study reveals that this situation is prevailing for the last 10 years.) By the end of the year 2000, there were 3,000 large scale industrial units. At the end of the year 2010, the number has increased to 9,000. Substantial amounts of the Govt. money is spent for setting up the CETP and in spite of not getting desired outcome, no care or caution is exercised in adding new and more industries. This type of industrialization will cause huge damage to the environment about which the Government turns a Nelson’s eye.

The CAG report can bring out many skeletons from the cupboard. These can unveil the truth. In order to turn public scrutiny away from mismanagement and undesirable investment practices home the Government tries to attack the Central Government.

Narmada Project

This Government is squarely and fully responsible for severing or splitting up the relationship of irrigation from this project. For this Government, the Narmada Dam is a tourist spot. By allowing the lands to remain barren before the farmer is able to irrigate by laying the canal and make himself economically sound, this Government has dealt a death blow to the farmer. In the end, out of frustration and desperation, farmers are left to the mercy of the industrialists by disposing off their lands to the industrialists. Presently, large quantity of water is supplied to the industries. Drinking water is being supplied irregularly and in inadequate quantity and with deficiency or drawback in its quality or purity. It is indeed difficult to predict, as to when the network of canal and branch canal in the State will finally be operational.

Tendency of dismantling democratic structure in the State

The Government cares two hoots for democracy. This can be easily inferred from the following:

• State Assembly is convened for the minimum required number of days only.

• Ruling party MLAs are made to praise the C. M.

• Opposition is reportedly thrown out of the Assembly even on small pretext.

• Sincere IPS and other bureaucrats are harassed.

• Federal structure of the constitution is continuously eroded by various acts and speeches.

Centre - State relationship - matter of grave concern

There should be cordial and harmonious relationship between the Centre and the State. The Gujarat C.M. is constantly disparaging the Centre merely to gain political mileage. He instigates people of the entire State against the Centre. In his Gobbelian style, he embarks upon utter unbecoming loose talks and provides cheap entertainment to the public. This is the mark of a weak and delinquent politician. It is not at all proper to raise hue and cry that the entire Gujarat has been insulted. Such a drama enacted by the C. M. is reportedly challenged or countered. But the damage is done. This is a danger signal for future of India. Relationship between the Centre and the State holds a key for the unity and integrity of the nation.

Our Duty

It is necessary to convince and persuade the people about the true and factual information especially regarding the impact or wrong impression created by the elusive and misleading propaganda in the State. Issues such as “What development”, “whose development” and “development at whose cost” etc. need to be elucidated, explained and elaborated. The decline of Human Development Index in the midst of din and clamour of “No. 1 and First Ranker or Topper” bespeaks volumes for itself. In the face of issues such as water, lands and forests, incidents of farmers’ suicides, desperate conditions of fishermen, problems due to lack of cultivable lands to be made available to Adivasis for farming to which they are entitled, atrocities on Dalits, pitiable condition of salt workers, vulnerable condition of minorities, health and education related problems facing the women and the children, deteriorating condition of education, violation of Human Rights prevailing in Gujarat, we should voice dissent and also oppose anti-people policies and tendencies. Care and caution will have to be exercised so as to avoid wrong and needless division of votes by the opposition parties and the various institutions in the forthcoming elections, even by making efforts in persuading and counselling the parties and the candidates if felt so necessary. We will have to do the task of dispelling certain kind of indifference and apathy, which has been gripping / prevailing among people due to ill-conceived and elusive propaganda tactics. Adequate efforts shall be made to shake off feelings of indifference and distress among the public to see to it that pro-people Government is formed.

Lives of the people surviving on water, lands and forests are becoming difficult. Whether the farmer subsisting on agriculture, shepherds subsisting on Gauchar, landless animal keepers, coastal area’s fishermen surviving on fishery and Adivasis subsisting on forest produce are all reduced to poverty with open robbery of their sources of income and livelihood. Government aims at annihilating them all by pushing them into margin.

It is our humble request to every common man of the State that they can blow the winds of change and can make future of the State bright. Government authority is bent upon razing to ground the roots of your culture and civilization. You should all demonstrably show the strength of your solidarity. Given this situation, Government formed out of any of the party will listen to your woes of the State’s working and toiling community, people of different religions and different castes / classes may stay together in peace and harmony, all may become happier and prosperous with reciprocal exchange of each other’s culture and civilization.

Please beware and let us work together in unison to create or carve out Modism free Gujarat, enmity and hatred free Gujarat. In nutshell this will be a public movement for embellishing the fundamental values of peace, harmony and justice in Gandhi’s Gujarat, which, necessarily has to be Modism free Gujarat.

Chunibhai Vaidya(Gujarat Lok Samiti)
Indukumar Jani(Editor, Naya Marg)
J.S. Bandukwala (PUCL)
Girish Patel(Senior Advocate)
Shabnam Hasmi (Anhad)
Prakash N. Shah (Editor, Nirikshak)
Gautam Thaker (PUCL)
Rohit Shukla (Save Education)
Rajani Dave (Editor, Bhoomiputra)
Ila Pathak (Gujarat Women’s Federation)
Prof. Kishor Desai (I.A.C.)
Dr. Maherunissa Desai (Amawa)
Prof. Babubhai Desai (Satya Shodhak Sabha)
Manishi Jani (Gujarati Authors’ Orgn.)
Uttam Parmar (M.S.D.)
Father Cedric Prakash (Prashant)
Dhaval Mehta (Guj. Mumbai Rationalist Asso.)
Mahesh Pandya (Paryavaran Mitra)
Manan Trivedi (Anhad)
Prasad Chako (B.S.C.)
Jimmy Dabhi (B.S.C.)
Harinesh Pandya (Janpath)
Natubhai Shah (Van Sandesh)
Harshad Desai (Janpath)
Jayesh Patel (Student Leader)
Dilip Chandulal (Lok Andolan)
Ikram Baig Mirza (Jamate Islami Hind)
Vipul Pandya (Construction Labour Union)
Pankti Jog (RTI, Gujarat Initiative)
Kanti Tamaliya (Khet Vikas Parishad)
Mahendra Jethamalani (Pathey)
Mahadev Vidrohi (Abhikram)
Sagar Rabari (Gujarat Lok Samiti)
Meenakshi Joshi (Women’s Cultural Orgn.)
Bhavik Raja (Student Leader)
Manda Patel (Gandhi Peace Foundation)
Rutvik Makwana
Father William
Himmat Shah
Nikhil Sheth
Bhagvanbhai Hirabhai
Ratilal Jadav

News From
Gautam Thaker (General Secretary, PUCL & IRHA (Gujarat)

http://humanrightsindia.blogspot.com/2012/11/gujarat-civil-society-on-elections-2012.html

http://www.milligazette.com/news/4496-election-2012-free-gujarat-from-modism-gujarat-civil-society




36 comments:

UNMAIKAL said...

ஒரு உண்மை ரிப்போர்ட்

-குஜராத்:சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் 16 ஆயிரம் முஸ்லிம்கள் !


Monday, June 25, 2012

அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரேந்திர மோடியின் ஆசீர்வாதத்துடன் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலையில் அகதிகளாக்கப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களில் 16 ஆயிரம் பேர் இன்றும் தற்காலிக அகதிகள் முகாமில் வாழ்வதாக அரசு சாரா நிறுவனமான ஜன்விகாஸ் கூறுகிறது.

அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம், சாக்கடை வசதி எதுவும் இல்லாமல் முற்றிலும்
சுகாதாரமற்ற சூழலில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் விஷயத்தில் மோடி அரசு முற்றிலும் புறக்கணிக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.

குப்பை மேடுகளுக்கு அருகே 10 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், ஜன்விகாஸுடன் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

ஜன்விகாஸ் ஏற்பாடுச் செய்த இன்ஸாஃபி தகர்பர் என்ற நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்களது துயரமான வாழ்க்கையைக் குறித்து விவரித்தனர்.

தங்களின் புகார்களை கூட கேட்க அதிகாரிகள் தயாரில்லை என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாமா பானு அன்ஸாரி கூறினார்.

நிரம்பி வழியும் சாக்கடைகளில் கழிவு நீர் தங்களின் காலனிக்கு வருவதாகவும், சாக்கடையில் ஒரு குழந்தை சிக்கி இறந்ததாகவும், தொற்று நோய்களும், இதர நோய்களும் பரவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் எவரும் இல்லை என்பதை நம்பச்செய்ய முயற்சிக்கும் அரசு, உண்மைகளின் பால் கண்ணைத் திறக்கவேண்டிய நேரம் இது என்று பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்டீஸ்(பி.யு.சி.எல்) செயலாளர் ரோஹித் பிரஜாபதி தெரிவித்தார்.

தங்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் அகதிகள் காலனியில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

மூவ்மெண்ட் ஃபார் செகுலர் டெமோக்ரஸியின் பிரகாஷ் ஷா, ஜன்விகாஸ் சி.இ.ஒ விஜய் பார்மர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த இனப் படுகொலைகளில் அகதிகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களில் 10 ஆண்டுகள் கழிந்த பிறகும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் என்.ஜி.ஓக்கள், முஸ்லிம் ஜீவகாருண்ய அமைப்புகள் ஆகியன நிர்மாணித்த தற்காலிக மையங்களில் வசித்து வருகின்றனர்.

UNMAIKAL said...

மோடியின் ஊழல்

சிறுபான்மை இசுலாமியர்களைக் கொன்று குவித்தவர் நரேந்திர மோடி என்று ஜனநாயகவாதிகள் சொன்னால் அதற்கு பதில் சொல்லாமல் அவர் என்னமா நேர்மையா ஆட்சி நடத்துகிறார் தெரியுமா? என்பார் துக்ளக் சோ.

குஜராத் சென்று பேட்டி எடுத்தும் அவரது நிர்வாக திறமை(?) குறித்தும் துக்ளக்கில் தொடரும் எழுதுவார்கள்.

தனது நெருங்கிய நண்பனாக ஏற்றுக் கொள்வர். இப்படி துக்ளக் சோ அய்யர்வாள் தூக்கிப்பிடிக்கும் யோக்கியசிகாமணி நரேந்திர மோடியின் ஊழல் புராணம் வெளிவந்துள்ளது.

மோடியின் நிர்வாகச் சீர்கேட்டினால் 46 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குஜராத் மாநில அரசின் கணக்குத் தணிக்கைக் குழு கூறியிருக்கிறது.

நரேந்திர மோடி தனக்கு வேண்டப்பட்ட இரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டியுள்ளார்.

அதனால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான தணிக்கைக் குழுவின் யூகக் கணக்கையே ஊதிப் பெரிதாக்கிய பார்ப்பன ஊடகங்கள் மோடியின் ஊழலைப் பேசாமல் இருப்பது ஏன்?

உலகிலேயே 24 காரட் யோக்கியன் மோடிதான் என நீட்டி முழங்கும் சோ, குருமூர்த்தி, பா.ஜ.க. கும்பல் வாய்மூடி மவுனச் சாமியார்கள் ஆனது ஏன்?

இந்த யோக்கியர் இந்தியப் பிரதமர் ஆகி நாட்டையே கொலைக்களமாக்குவதோடு கொள்ளையடிக்கவும் வேண்டுமா?

SOURCE: http://www.unmaionline.com/new/45-unmaionline/unmai2012/may-01-15/859-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81.html

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//உலகிலேயே 24 காரட் யோக்கியன் மோடிதான் என நீட்டி முழங்கும் சோ, குருமூர்த்தி, பா.ஜ.க. கும்பல் வாய்மூடி மவுனச் சாமியார்கள் ஆனது ஏன்? //

மவுன சாமியார்கள் ஆனதன் காரணம் நமக்கு அறிந்ததே! இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் ராஜ்ஜியம் சரிந்து வருகிறது. இட ஒதுக்கீட்டின் பயனால் ஆதி திராவிடர் முதற கொண்டு சிறுபான்மையினர் வரை அதிகாரிகளாக வலம் வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த சுக போக வாழ்வை மோடி போன்றவர்களை முதல்வராக்கியோ அல்லது பிரதமராக்கியோ தங்களின் இழப்பை சரி கட்ட பார்க்கிறார்கள். ஆனால் மக்கள் விழிப்புடனேளே உள்ளனர். இந்த முறை மோடி கீழிறங்க வேண்டும். செய்த தவறுக்கெல்லாம் சட்டத்தின் மூலம் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

ஹுஸைனம்மா said...

Gujarat: Myth and reality

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் சுவனப்பிரியன்,
குஜராத் சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை நரேந்திர மோடியே மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கு தான் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அங்கே காங்கிரஸ் கட்சிக்கு வசீகர தலைவர் இல்லை. மேலும் குஜராத்தின் பிராந்திய ஊடகங்களை கிட்டத்தட்ட மோடி தன் வயப்படுத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும். எனவே மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் மோடிக்கு மட்டுமே கிடைக்கும் என்ற பிரச்சாரத்தை பிராந்திய ஊடகங்கள் முன்னெடுக்கும். மோடி எதிர்ப்பாளர்கள் எல்லாம் சிதறிய நிலையில் தான் இருக்கிறார்கள். எனவே மோடியின் வெற்றி என்பது அவருக்கு அருகில் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இத்தகைய வெற்றியின் மூலம் அவர் செய்த முஸ்லிம் இனப்படுகொலைகள் மறக்கடிக்கப்பட்டு விடும் என்று எவராவது நினைத்தால் அந்த நினைப்பு கானல் நீராகவே இருக்கும். மேலும் இந்த சட்டமன்ற வெற்றியின் மூலம் பிரதமர் என்ற இலக்கை நோக்கி மோடி அடியெடுத்து வைக்க நினைத்தால் அது அவருடைய அரசியல் வாழ்வின் படுபாதாளத்திற்கு இழுத்து செல்லும் ஆரம்பமாக இருக்கும். ஏனெனில் மோடியின் சித்து விளையாட்டுக்கள் குஜராத்தில் மட்டுமே செல்லுபடியாகும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

மோடி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வார் என்பதற்கு அவருடைய சமீபத்திய டிவிட்டர் கணக்குகளின் மோசடிகளே நமக்கு சாட்சியமாக இருக்கிறது. இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை எழுதிய செய்திகளை இந்த சுட்டியில் Bitter Twitter truth for Narendra Modi
(http://timesofindia.indiatimes.com/tech/social-media/Bitter-Twitter-truth-for-Narendra-Modi/articleshow/16976081.cms?) சென்று காணலாம். இவர் குஜராத் மாநிலத்தை முன்னேற்றியதாக அடித்து விடும் பொய்களை பற்றி அவ்வப்போது பிரண்ட்லைன் இதழ் முகப்பு கட்டுரைகளாகவே பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

காந்தி பிறந்த குஜராத்தை, இந்துத்துவா பரிசோதனை கூடமாக வைத்திருக்கும் மோடியிடமிருந்து மீட்டு மீண்டும் மதசார்பற்ற தேசத்தின் ஒரு மாநிலமாக மாற்ற கூடிய மீட்பர் இந்த சட்டமன்ற தேர்தலில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்த மீட்பர் வரும் வரை குஜராத்தின் மக்களுக்கு நவீன ஹிட்லர் ஆட்சி தான் என்பது விதிக்கப்பட்ட சாபக்கேடு என்று எண்ணிக் கொள்வோம்.

UNMAIKAL said...

தங்களுடைய உண்மை பெயரை மறைக்கும் குஜராத் முஸ்லிம்கள்!

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று குஜராத்தில் முஸ்லிம்கள் பற்றிய ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் வாழக்கூடிய முஸ்லிம்கள் தங்களுடைய உண்மை பெயரை மறைத்து ஹிந்து பெயர்களை பயன்படுத்துகிறார்கள்.

தங்களுக்கு வேலை கிடைப்பதற்காத்தான் இவ்வாறு அவர்கள் செய்கிறார்கள் என அந்தப்பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் இந்த செய்தியை அந்தப்பத்திரிக்கை தலையங்கமாக வெளியிட்டுள்ளது.

அதில் மெஹபூப் பதான் என்ற ஒருவரைப் பற்றிய செய்தி வெளியிட்டுள்ளது. தனக்கு வேலை கிடைப்பதற்காக தன்னுடைய பெயரை "ஜெயந்தி பத்தி" எனக் கூறிக்கொண்டு சூரத்தில் வேலை தேடியுள்ளார்.

ஒரு பணத்தகராறில் கொலை செய்யப்பட்ட பின்பு தான் அவரின் குடும்பத்தினர் மூலமாக அவர் ஒரு முஸ்லிம் என்றே தெரியவந்திருக்கிறது.

அந்தப் பத்திரிக்கையின் வெளியிட்ட அறிக்கையின்படி பத்தான் கொலை செய்யப்பட்ட பின்னர் தான் அவரைப் பற்றிய செய்தி தெரிவந்திருக்கிறது.

மண்டை உடைக்கப்பட்ட நிலையில் அந்த்ரோலி அருகே உள்ள ஓரு வயல்வெளியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பத்தானின் உடலை சவக்கிடங்கில் வைத்திருந்தனர். பின்னர் ஹிந்து முறைப்படி இறுதிச்சடங்கை நிறைவேற்ற இருந்தனர்.

இதற்கிடையில் பதானின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்ததாக தெரிகிறது.

யாருமே பதானின் உடலை பெற்றுக்கொள்ள முன் வரவில்லை என்ற செய்தியை படித்த பதானின் குடும்பத்தினர், தனது மகனாக இருக்கலாமோ என்றெண்ணி பதானின் மருமகன் இஃக்பால் காவல்துறையினரை தொடர்பு கொண்டுள்ளார்,

ஆனால் அதற்குள்ளாகவே பதானை ஹிந்து முறைப்படி இறுதிச்சடங்கை செய்து முடித்துள்ளனர்.

இருந்த போதிலும் காவல்துறையினர் பதானின் உடலை புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை வைத்து இஃக்பால் பதானை அடையாளம் கண்டுள்ளார்.

பதானின் குடும்பத்தினர் கூறும்போது, பதான் ஒரு பக்தியிள்ள முஸ்லிம் என்றும் தனக்கும் தன்னுடைய பிள்ளைகளுக்கும் வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் தன்னை ஒரு ஹிந்து போல் காட்டிக்கொண்டார் என்றும் கூறினர்.

"நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்கிறோம்! எங்களால் எதுவும் செய்துவிட முடியாது! அப்படியிருக்க காவல்துரறையினர் எப்படி அவரை ஹிந்து முறைப்படி இறுதிச்சடங்கை செய்தனர்? அவரை பிரேத பரிசோதனை செய்யும்போதே பிறப்பு உருப்பை வைத்து அவர் ஒரு முஸ்லிம் என்பதை தெரிந்து கொள்ளலாமே! என அவரது மகன் முஸ்தாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கதோதரா காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் வி.ஆர். மல்ஹோத்ரா கூறும்போது " நாங்கள் அவருடைய (பத்தான்) உடலை சவக்கிடங்கில் பல நாட்கள் வைத்திருந்தோம், ஆனால் யாருமே அவரது உடலை பெற்றுக்கொள்ள வரவில்லை. எனவே தான் அவரை ஹிந்து முறைப்படி இறுதிச்சடங்கை நடத்தினோ, அவர் ஒரு முஸ்லிம் என்று எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

சூரத்தில் பத்தானைப்போன்று பலரும் இவ்வாறு தங்களுடைய பெயரை மாற்றி கூறியுள்ளனர்.

பதானின் மகன் முஸ்தாக் தன்னுடைய பெயரை முகேஷ் என்றும் அவரது மகள் ஷாமினா, ஷர்மிளா என்று மாற்றிக் கூறியுள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் வெளியே தெரியவந்ததால் தங்களுடைய வேலை போய்விடுமோ என அஞ்சுகின்றனர்.

குஜராத்தில் முஸ்லிம்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கூட காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலைதான்

குஜராத்தில் முஸ்லிம்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கூட காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் குஜராத் ஒளிர்கிறது என்றும், வளர்ச்சி அடைந்த மாநிலங்களிலேயே குஜராத் முதலிடத்தில் இருக்கிறது என்றும், சிறந்த முதலமைச்சர் நரேந்திர மோடிதான் என்று பொய்யான தகவல்களை மீடியாக்கள் பரப்பி விட்டிருக்கிறது.

ஆனால் அங்கே வாழக்கூடிய முஸ்லிம்களின் நிலை மோசமாகிக்கொண்டிருக்கிறது.

எங்கே நாம் முஸ்லிம் என்று கூறினால் வேலைக்கிடைக்குமா? முஸ்லிம் என்று கூறினால் செத்துவிடுவோமே என்ற அச்சத்தில்தான் வாழ்கிறார்கள். மொத்தத்தில் புஸ்வானமாகிக்கொண்டிருக்கிறது குஜராத்!

செய்தி: முத்து

UNMAIKAL said...

PART 1. மோடியின் கரங்களில் விலங்கிடும் துணிச்சல் யாருக்கு?

கருப்பையில் இருந்து பாதுகாப்பாக சிசுவை வெளியே எடுக்கவேண்டிய ஒரு கைனோகாலஜிஸ்ட், கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி சிசுவை திரிசூலத்தில் குத்தியெடுத்து ஆனந்த நடனம் ஆடும் இரத்த வெறிப்பிடித்த கும்பலுக்கு தலைமை வகிக்கிறார்.

அந்த கொலைக்கார பெண்மணிக்கு மாநில மகளிர் மற்றும் சிசு நலத்துறை அமைச்சர் பதவி பரிசாக வழங்கப்படுகிறது.

மாநில முதல்வரும், அமைச்சர் பரிவாரங்களும், மத வெறிப்பிடித்த அதிகாரிகளும் இணைந்து கூட்டுப் படுகொலைகளுக்கு தலைமையேற்கின்றனர்.

கூட்டாக நடக்கும் பாலியல் வன்புணர்வுகளை போலீசார் கண்டு ரசிக்கின்றனர்.

ஆதாரங்களை எல்லாம் அழிக்கின்றனர்.

ஆவணங்களை மறைக்கின்றனர்.

சாட்சிகளை கொலைச் செய்கின்றனர்.

பணத்தை வாரியிறைத்து தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றனர்.

தங்களது கரங்களால் புரிந்த கர்ண கொடூரங்களை வாய் கூசாமல் பெருமையாக பகிரங்கமாக கூறுகின்றனர்.

சிலருக்கு மேலும் 500 முஸ்லிம்களை கொலைச் செய்வது பொழுதுபோக்கு. வேறு சிலருக்கோ முஸ்லிம் இளம் பெண்கள் வேண்டுமாம்.

இவர்கள் அனைவரும் நரேந்திர மோடி என்ற நரமாமிச உண்ணியின் சீடர்கள்.

குற்றங்களை புரிந்தது மட்டுமல்ல, கொடூரங்களின் ஆதாரங்களையெல்லாம் குழி தோண்டி புதைக்கவும் தங்களது கரங்களை பரிசுத்தமாக காட்டவும் இவர்கள் தயங்கவில்லை.


நான் குஜராத்தின் சர்வாதிகாரி மட்டுமல்ல, மத்திய அரசையும் ஆட்டிவைக்கும் மோசடி வித்தைக்காரன் என கூறி என்ன பலன்?

சத்தியத்திற்கும், நீதிக்கும் சில அடிப்படைகள் உள்ளன. இறைவனின் நீதியை எவராலும் தடுக்க முடியாது.

தர்மம் எப்பொழுதெல்லாம் தோல்வியை சந்திக்கும் சூழல் உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் மரண வியாபாரிகளுக்கு விலங்கிட சிலர் இவ்வுலகில் பிறக்கத்தான்
செய்வார்கள்.

பாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார, நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளையிலும் நீதியை நிலைநாட்டும் உறுதியுடன் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அவர்களில் ஒருவர் தாம் குஜராத் கூடுதல் முதன்மை நீதிபதி ஜோல்ஸ்னா யக்னிக். மற்றொருவர், முன்னாள் குஜராத் மாநில டி.ஜி.பி ஸ்ரீகுமார்.

அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை பதிவுச் செய்து பாதுகாத்த நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல்சர்மா கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார், 10 வருடங்கள் கழித்து நீதி நிலைநாட்டப்படும் என்று.

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அம்பலப்படுத்த டெஹல்கா இதழ் ஆபத்பாந்தவனாக வரும் என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் குஜராத் முஸ்லிம்களோ, பாதுகாப்பற்ற சூழலில் வாழும் இந்திய முஸ்லிம்களோ கற்பனையில் கூட எண்ணியிருக்கமாட்டார்கள்.

மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தால் விழிப்புணர்வு பெற்ற பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான தீஸ்டா ஸெடல்வாட் போன்றவர்கள் எவருக்கும் அஞ்சாமல் ஆற்றிய பணிகளை யாரும் விலைக்கொடுத்து வாங்கவில்லை.

எந்தவொரு முஸ்லிம் அமைப்புகளும் செய்ய இயலாத அர்ப்பணிப்புமிக்க காரியங்களை இவர்கள் செய்து முடித்தார்கள்.

உயிரை பணயம் வைத்து 6 மாத காலம் டெஹல்காவுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை நேரடியாக சந்தித்து பேட்டியெடுத்து உலகிற்கு அவர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்திய ஆஷிஷ் கேதான் என்ற பத்திரிகையாளரை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

போலீஸ், அரசு, அதிகார, நீதித்துறை, பத்திரிகைத் துறைகளிலும், குடிமக்களிலும் நேர்மையை இழக்காத காவியின் காரிருளில் சிக்காதவர்கள் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியமான விஷயம் தான்.

தனது அமைச்சரவையில் பணியாற்றிய கில்லர் டாக்டரும், இதர அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெள்ளந்தெளிவாக வெளியான பிறகும் மோடி ராஜினாமாச் செய்வார் என கருதுவது முட்டாள்தனமாகும்.

CONTINUED …..

UNMAIKAL said...

PART 2. மோடியின் கரங்களில் விலங்கிடும் துணிச்சல் யாருக்கு?

இந்த கொலையாளியின் ஆட்சியை தொடர அனுமதிப்பதா ராஜதர்மம்? என்பதே மனிதநேயம் கொண்ட இந்திய குடிமக்களின் கேள்வியாகும்.

இரத்தவெறிப் பிடித்த கொலைக்காரக் கும்பல்களின் தலைவன் என்று வெட்ட வெளிச்சமான பிறகும் பயங்கரவாதி என்ன தீவிரவாதியாக கூட மோடி கருதப்படவில்லை என்பது இந்த தேசத்திற்கே வெட்க கேடாகும்.

மன்னர்களின் ஆட்சியில் அவர்கள் புரிந்த கொலை, கொள்ளைகளுக்கு ஆதரவாக புகழ் பாடிய அரசவை கவிஞர்களை விட கேவலமாக மோடிக்கு புகழாரம் சூட்டும் ஊடகங்கள் இருக்கும் தேசத்தில் தாம் நாம் வாழ்ந்து வருகிறோம்.


தற்போதைய நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கின் தீர்ப்பும், இதற்கு முன்பு வெளியான நீதிமன்ற தீர்ப்புகளும் மோடி பதவி விலக தாராளம் போதுமானவையாகும்.

ஆனால், யாரும் இத்தகையதொரு கோரிக்கையை எழுப்பவில்லை.

குஜராத் மாநில மக்களோ, ஹிட்லரின் ஜெர்மனிக்கு சமமாக மோடியின் கொடூரங்களை கண்ணால் கண்டும் கூட மெளனம் சாதித்து வருகின்றனர்.

அவ்வளவு தூரம்
பாசிசம் பலரது உள்ளங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது.


ஆகையால் மோடிக்கு எதிரான குரல் குஜராத்தில் இருந்து எழும் என கருதவேண்டாம்.

கேசுபாய் பட்டேலும் ஸதாஃபியாவும் மோடிக்கு எதிராக குரல் கொடுப்பதன் பின்னணி அதிகாரப் போட்டியே தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிரானது அல்ல.

விசாரணை கமிஷன்களின் கண்டுபிடிப்புகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் மத்திய அரசுக்கு நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீராக்கவும், கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கவும் போதிய காரணம் இல்லையா?

குடிமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் மெளனம் சாதிப்பது ஏன்?

மிதவாத ஹிந்துத்துவா என்ற பாராட்டைப் பெறவும், ஹிந்துத்துவா வாதிகளின் வாக்குகளைப் பெறவும் தான் மன்மோகன்சிங்கும், சோனியாவும் மெளனம் சாதிக்கின்றார்கள் போலும்!

பாராளுமன்றத்தை முடக்கி பிரதமர் மன்மோகன்சிங்கின் ராஜினாமாவைக் கோரும் பா.ஜ.கவுக்கு எவ்வளவு தூரம் காங்கிரசு கட்சி அஞ்சுகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையா?

பாப்ரி மஸ்ஜித் இடித்துத் தள்ளப்பட்ட போது காட்டிய அதே மெளனத்தை குஜராத் இனப்படுகொலை வழக்குகளின் தீர்ப்பின் போதும் காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது.

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அளித்த தண்டனையில் பாடம் பெறாவிட்டால், வருகிற தேர்தலிலும் பழைய நிலைமையே உருவாகும்.

நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.கவின் முகம் அகோரமாக மாறும் வேளையில் அதனை மூடி மறைத்து நாட்டு மக்களின் கவனத்தை திசைத்திருப்ப பெங்களூர், ஹைதராபாத், நந்தத் ஆகிய இடங்களில் முற்றிலும் அப்பாவியான உயர்கல்விப் பின்னணிக் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கைது படலங்கள் முஸ்லிம் இனப்படுகொலையை நியாயப்படுத்த நடந்த முயற்சியே அன்றி வேறொன்றும் இல்லை.

இரண்டு செய்திகளையும் ஒரே நேரத்தில் மக்களை வாசிக்கச் செய்வதே சங்க்பரிவார்களின் நோக்கமாகும்.

இதனை ஆறுதலாக கொலைக்கார கும்பல்களை தாலாட்டி, சீராட்டி வளர்த்தும் பா.ஜ.க கருதுமானால் வரலாற்றில் மேலும் பின்னடைவை அவர்கள் எதிர்பார்க்கலாம்.

எஸ்.எம்.எஸ் வதந்தி உள்பட இந்தியாவில் நிகழும் அசம்பாவிதங்களுக்கு எல்லாம் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பழிசுமத்தி கைது செய்து அப்துல் நாஸர் மஃதனியைப் போல சிறைக் கொட்டகைகளில் அடைக்கும் மோடிக்கும்,

கர்நாடகாவின் பாசிச பாரதீய ஜனதா அரசுக்கும் காங்கிரஸ் கட்சியின் மெளன அனுமதி உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றமும், பொய்யென நிரூபணமாகும் வேளையிலும்,

முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என நீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகும் வேளையிலும்

இந்தியாவில் நிகழ்ந்த நாசவேலைகளில் சங்க்பரிவார பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமாகிறது.

ஆனாலும் காங்கிரஸ் கட்சியால் தனது ஆண்மைத் தன்மையை நிரூபிக்க முடியவில்லை.

CONTINUED ......

UNMAIKAL said...

PART 3. மோடியின் கரங்களில் விலங்கிடும் துணிச்சல் யாருக்கு?

தீஸ்டா ஸெடல்வாட் உள்ளிட்ட மனித உரிமைப் போராளிகளின் நீண்டகால போராட்டத்தின் இறுதியில் கிடைத்த வெற்றியே அஹ்மதாபாத் கூடுதல் முதன்மை நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு.

அதுமட்டுமல்ல கொடும் பயங்கரவாதியான பாபு பஜ்ரங்கி, தானே நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொன்றொழித்து,

கர்ப்பிணி தாயின் வயிற்றைக் கிழித்து சிசுவை திரிசூலத்தால் குத்தி எடுத்து தீயில் பொசுக்கியதை விவரித்த பிறகும்,

புலனாய்வு குழுக்களின் மேலிட கனவான்கள் சிலரின் தயவால் மோடிக்கு சிறைக்கு வெளியே சுதந்திரமாக நடமாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோத்ராவுக்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டியில் கரசேவகர்களை திட்டமிட்டு தீயில் பொசுக்கிவிட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.


பின்னர் 2002 பிப்ருவரி 27-ஆம் தேதி நள்ளிரவு கூட்டப்பட்ட உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் மதவெறி தலைக்கு ஏறியதாl மதம் பிடித்த யானையாக மாறிய நரேந்திர மோடி அடுத்து வரும் தினங்களில் ஹிந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்த அவகாசம் வழங்கி முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உண்மையை அம்பலப்படுத்தி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் தாக்கல் செய்தார்.

பட்டின் உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சஞ்சிவ் பட்டைப் போலவே காலம் கடந்தேனும் விவேக் ஸ்ரீவஸ்தவா, சதீஷ் சர்மா, ஹிமான்ஷு பட் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் குஜராத்தில் யதார்த்தத்தில் என்ன நிகழ்ந்தது என்ற உண்மையை உலகுக்கு அறிவித்தனர்.

இஹ்ஸான் ஜாஃப்ரி என்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி உள்பட 69 முஸ்லிம்கள் தீயிலிட்டு பொசுக்கி கொலைச் செய்யப்பட்ட குல்பர்கா சொஸைட்டி கூட்டுப் படுகொலை வழக்கிலும் மோடியின் பங்கினைக் குறித்து மேற்கூறிய போலீஸ் அதிகாரிகள் தங்களது பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை (200 பேர் கொலைச் செய்யப்பட்டதாக ஊர்மக்கள் கூறுகின்றனர்) கசாப்புச் செய்த காட்சியை மோடி நேரடியாக வந்து பார்த்து கொலையாளிகளை பாராட்டியதாக சம்பவத்தை நேரில் கண்ட சுரேஷ் என்பவர் கூறுகிறார்.

பாலியல் வன்புணர்வுக்கு பிறகு இளம் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் மரக்கட்டைகளை செருகியதும், கர்ப்பிணியின் வயிற்றை கிழித்ததும் நரோடா பாட்டியாவில்தான் அரங்கேறியது.

மூன்று தினங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று மோடியும், பாபு பஜ்ரங்கியும் நேரடியாகவே அனுமதி அளித்ததாக நேரில் கண்டவர்கள் டெஹல்காவிடம் தெரிவித்தனர்.

மோடியிடம் விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் மோடிக்கு நற்சான்றிதழை வழங்கினார்.

சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த குஜராத்தைச் சார்ந்த கீதா ஜோஹ்ரி, சிவானந்த் ஜா, ஆஷிஷ் பாட்டியா ஆகியோர் மோடியின் ஆதரவாளர்கள் ஆவர்.

இவர்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றதே மிகப்பெரிய அநீதமாகும்.

இந்த மோடியின் பக்தர்கள்தாம் அவரிடம் விசாரணையை நடத்தினார்கள்.

மோடியை குற்றவாளியாக அறிவிப்பதற்கு காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது.

மோடி குஜராத்தில் முதல்வராக தொடர்வதையே அவர்கள் விரும்புகின்றார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக மோடியிடம் விசாரணைச் செய்யப்படவில்லை.

இதனால் இந்தியாவில் எதுவும் சம்பவித்து விடவில்லை.

இதன் மூலம் மோடியை சுட்டிக்காட்டி இதர மாநிலங்களில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கவர்ந்துவிடலாம்
என்பதே காங்கிரஸின் திட்டமாகும்.

எனவே காங்கிரஸ் கட்சி மோடியை சிறையில் தள்ளும் என எதிர்பார்ப்பது கற்பனை உலகில் சஞ்சரிப்பது போன்றாகும்.

தற்பொழுது மிச்சமிருக்கும் கேள்வி என்னவெனில் “மோடியின் கரங்களில் விலங்கிட்டு அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடமையை நிறைவேற்றப் போவது யார்?” என்பதாகும். - அ.செய்யது அலீ.

SOURCE : http://www.thoothuonline.com/is-anyone-has-guts-to-arrest-modi/

suvanappiriyan said...

சலாம் சகோ ஷேக் தாவூத்!

//காந்தி பிறந்த குஜராத்தை, இந்துத்துவா பரிசோதனை கூடமாக வைத்திருக்கும் மோடியிடமிருந்து மீட்டு மீண்டும் மதசார்பற்ற தேசத்தின் ஒரு மாநிலமாக மாற்ற கூடிய மீட்பர் இந்த சட்டமன்ற தேர்தலில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்த மீட்பர் வரும் வரை குஜராத்தின் மக்களுக்கு நவீன ஹிட்லர் ஆட்சி தான் என்பது விதிக்கப்பட்ட சாபக்கேடு என்று எண்ணிக் கொள்வோம்.//

இந்த முறை அவ்வளவு சுலபமாக வெற்றியை தட்டிச் செல்ல முடியாது என்பதுதான் பலரின் கணிப்பு இருக்கிறது. அவரது கட்சி தலைவர்களே தனி கட்சி தொடங்கி ஓட்டை பிரிப்பதும் ஒரு காரணமாக சொல்கின்றனர். அப்படியே வெற்றி பெற்றாலும் அருதி பெரும்பான்மை கிடைக்காது. நூலிழையில்தான் தப்பிப்பார் என்கின்றனர் நோக்கர்கள். பொறுத்திருந்து பார்போம் என்ன முடிவு வருகிறதென்று.

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//Gujarat: Myth and reality//

வருகைக்கும் சுட்டியை பகிர்ந்தமைக்கும் நன்றி!

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

மோடி மதவாதி என்றால் நீங்கள் எல்லாம் யார்? மதவாதிகள் தானே?

குஜராத்தில் இருக்கும் மக்கள் தங்களை யார் ஆள வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை உள்ளவர்கள், அதனை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மோடி சரியாக ஆளவில்லை என்றால் தானே வீட்டூக்கு அனுப்பப்படுவார்.

குஜராத்தில் ஒன்றும் சவுதி போல தேர்தல் இல்லாத மன்னராட்சி இல்லை.

மதவாதம் என மோடியை சொல்ல மதவாதிகளுக்கு தகுதியில்லை.

மனு ஸ்ருமிதியை எதிர்க்கும் நீங்கள் ஷரியாவை எதிர்ப்பதில்லை, நாத்திகர்கள் இரண்டையும் வேண்டாம் என்கிறோம்.

குஜராத்தில் மதசார்பற்ற ஆட்சி வேண்டும் என்பவர் ,சவுதியில் அதே போல ஆட்சி வர வேண்டும் என ஏன் சொல்ல மாட்டேன்கிறீர்கள்?

UNMAIKAL said...

மாயா கோட்னானி: டாக்டர் ஆஃப் டெத்! - குஜராத்

அஹ்மதாபாத்:நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையில் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஒரு காலத்தில் நரேந்திர மோடியின் வலதுகரமாக செயல்பட்டவர்.

கைனோகாலஜிஸ்டாக பணியாற்றி அரசியலில் களமிறங்கியவர் நரோடாபாட்டியாவில் இருந்து 3 தடவை பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

2007-ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக பதவியேற்றார். கலவரத்தில் தொடர்பு இருப்பதால், அவரை அமைச்சராக நியமனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால், நரேந்திரமோடி அதனை புறக்கணித்து அவரை அமைச்சராக தொடர அனுமதித்தார்.

ஆனால், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மாயா கோட்னானியை கைது செய்ததன் மூலம் 2009-ஆம் ஆண்டு , அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த மாயா கோட்னானியை, தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.

விசாரணைக்கு ஒத்துழைக்க துவக்கத்தில் மறுத்த மாயா கோட்னானி, 2009-ஆம் ஆண்டு கீழ் நீதிமன்றத்தில் இருந்து முன் ஜாமீன் மனுவைப் பெற்றார்.

சிறப்பு புலனாய்வுக்குழு முன் ஜாமீனுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை அணுகியது.

உயர்நீதிமன்றம் கோட்னானிக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்துச் செய்தது. பின்னர் கைது செய்யப்பட்ட மாயா கோட்னானிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் அனுமதித்தது.

கடந்த தேர்தலில் 1,85,000 வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை அவர் பெற்றார்.

இதன் மூலம் எவ்வளவு தூரம் நரோடாபாட்டியா வகுப்புவாத வெறியில் ஊறித்திளைத்துள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஹிந்துக்களின் உணர்வுகளை தூண்டியவர் என்று மாயா கோட்னானி மீது குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், சம்பவம் நிகழ்ந்த 2002-ஆம் ஆண்டு மாயா, அமைச்சராக இல்லை என்று பா.ஜ.க சமாளிக்கும் பொழுது,

இனப்படுகொலையை கச்சிதமாக நிறைவேற்றியதற்கு பரிசாக மாயா கோட்னானிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்று காங்கிரஸ் கூறியது.

PART 1. இரட்டையர்கள்: மாயா கோட்னானி & அஜ்மல் கசாப் - - முத்துகிருஷ்ணன்

குஜராத்தில் 2002 ல் நடந்த நிகழ்வுகளை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அது நம் கால கட்டத்தின் மறக்க முடியாத நினைவு.

நாம் இந்தியப் பிரிவினையின்பொழுது நடந்த கலவரங்களைப் பற்றி மிக விரிவாக வாசித்திருந்தாலும், நம் காலத்தில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்டது இந்த மாபெரும் இனப்படு-கொலை.

இந்த இனப்படுகொலையை அரசாங்கம் தனது முழு பங்களிப்புடன், ஆசிர்வாதத்துடனும் நடத்தியது.

இது எப்படி எல்லாம் நிகழ்த்தப்பட்டது என்கிற உண்மையை இந்த உலகிற்கு அறிவித்தவர் தெகல்கா பத்திரிகையின் புலனாய்வு நிருபர் ஆஷிஷ் கேத்தன்.

அவர் ஆறு மாத காலம் குஜராத்தில் தங்கியிருந்து மெல்ல மெல்ல முன்நகர்ந்து சங் பரிவாரின் கொலைகார கூடாரங்களுக்குள் சென்றார்.

அங்கே இருந்து தொடங்கி அவரது பயணம் 60 மணி நேரம் உலகின் மிக முக்கிய காணொளி காட்சிகளைப் பதிவு செய்வதுடன் நிறைவு பெற்றது.

இன்று பிழைப்புக்காய் மாறடித்து, எந்த அறமும் இல்லாது ஊடகங்களை கழிவறைகளாக மாற்றும் பத்திரிகையாளர் மத்தியில் எந்த சமரசமும் இல்லாமல் ஆஷிஷ் கேத்தன் செய்தது ஒரு வாழ்நாள் சாதனை என்றால் மிகை இல்லை.

அவரது 60 மணி நேரப் பதிவுகளில் கொலைகாரர்கள், காவல்துறை உயரதிகாரிகள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், அரசு வழக்கறிஞர்கள் என பலர் தோன்றி தங்களின் வீரதீரச் செயல்களை விரிவாக வர்ணித்தார்கள்.

எப்படி சங்பரிவாரின் தொழிற்சாலைகளில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன,
எப்படி குஜராத் காவல்-துறை இதை எல்லாம் கண்டுகொள்ளாது பாதுகாத்தது, எப்படி
நரேந்திர மோடி இவர்களை எல்லாம் வழிநடத்தினார். . .


CONTINUED ……..

UNMAIKAL said...

PART 2. இரட்டையர்கள்: மாயா கோட்னானி & அஜ்மல் கசாப் - முத்துகிருஷ்ணன்

அவைகளை கண் இமைக்காமல் தங்களின் வீர வரலாற்றை காமிரா முன் வர்ணித்தார்கள்.

எப்படிக் கொலைகள் செய்தோம்,

எப்படி பாலியல் பலாத்காரம் செய்தோம்,

எப்படி காஸ் சிலிண்டர்களை வெடிக்கச் செய்தோம்,

இதற்கு எல்லாம் எப்படிப் பயிற்சி பெற்றோம்,

எப்படி ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வாளால் குத்தினோம்

என மேலும் மேலும் சொன்ன வாக்குமூலங்கள் இந்த தேசத்தை ஆட்சி செய்யத் துடிப்பவர்களுக்கு மேலும் பெருமையையே சேர்த்தது.

பாபு பஜ்ரங்கி பல கொலைகளைச் செய்துவிட்டு நான் அவர்களை எல்லாம் கொன்ற பிறகு மகாராணா பிரதாப் ஆக உணர்ந்தேன் என்கிறார்.

மதன் சாவல், தான் எப்படி காங்கிரஸ் எம்.பி இஷான் ஜாப்ரியைத் தரையில் எட்டி உதைத்து, அவரைத் துண்டு துண்டாக வெட்டி, உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினோம் என்பதைத் துல்லியமாகக் கூறுகிறார்.

இன்னும் மூன்று மணி நேரம் மட்டுமே உள்ளது காரியத்தை முடிக்க என்பதை எப்படிக் கொலைகாரர்களுக்குத் தெரிவித்தார் என்பதை மங்கிலால் ஜெயின் பரபரப்புடன் விவரிக்கிறார்.

இது வரலாறு காணாததாக இருக்க வேண்டும் என்று தங்களின் தலைமை எப்படி உத்தரவிட்டது என்பதைப் பதிவு செய்கிறார் தீபக் ஷா.


ராக்கெட் செலுத்தும் கருவியைத் தயாரித்ததை ஒரு விஞ்ஞானியைப் போல் விளக்கும் ஹரேஷ் பட்டுக்குப் பின்னர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி கொடுத்து அழகு பார்த்தார் நரேந்திர மோடி.

நாங்கள் கொடுத்த ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பார்த்து எங்கள் ஆட்களே திகைத்துப் போனார்கள் என்று மேலும் கூறுகிறார் ஹரேஷ் பட்.

எப்படி இந்த இனப்படுகொலையின்போது குஜராத் காவல்துறையினரின் கண்களும் வாயும் மூடப்பட்டிருந்தது என்கிறார் பாபு பஜ்ரங்கி.

நரேந்திர மோடி காவல்துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்தார் என்கிறார் வி.எச்.பி. தலைவர் ராஜேந்திர வியாஸ்.

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தபோது எப்படி கொலைகாரர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி இருந்தது என்பதைக் கூறுகிறார் திமந்த் பட்.

காவல் துறையினரே எப்படி 70-&80 பேரைக் கொன்றார்கள் என்பதை சுரேஷ் ரிச்சர்ட் நினைவு கூர்கிறார்.

என்னை வெளியே கொண்டு வர நரேந்திர மோடி மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார் என காலரைத் தூக்கி விட்டுச் சொல்கிறார் பாபு பஜ்ரங்கி.

இதே பாபு பஜ்ரங்கியைத்தான் நரேந்திர மோடி பல மாதங்கள் ராஜஸ்தானின் மௌண்ட் அபுபில் உள்ள பெரும் சொகுசு மாளிகையில் மறைத்து வைத்திருந்தார்.

இந்த அறையில் வாஜ்பாயி கவிதைகள் எழுதுவார் என் பது இங்கு கூடுதல் செய்தி.

கொலைகளைச் செய்தவர்கள் மீதான சில வழக்குகள் வலிமையற்றவை. கடவுளின் ஆசிர்வாதத்தால் சமாளித்தோம் என பெருமூச்சு விடுகிறார் மூத்த வழக்கறிஞரும் வி.எச்.பி. பொதுச்செயலாளருமான திலிப் திரிவேதி.

மேலும் நீதிபதி கே.ஜி.ஷா நம்முடைய ஆள், நீதிபதி நானாவதிக்குப் பணம்தான் குறி என்கிறார் குஜராத் மாநில வழக்கறிஞர் அரவிந்த பாண்டியா.

கோத்ராவில் ரயிலை எப்படி எரித்தார்கள்,

அதில் இருந்த கரசேவகர்களை எல்லாம் எப்படி நம் என் உயிர் தோழன் படத்தில் வரும் நாயகனைப் போல சங் பரிவார் ஆட்களே பலி கொடுத்தார்கள் என்பதையும்

ஆதாரங்களுடன் மிக துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார் ஆஷிஷ் கேத்தன்.

அதன் பின் சிலரைப் பிடித்து மிரட்டி எப்படி எல்லாம் தவறான வாக்குமூலங்களைப் பதிவு செய்து கோத்ராவின் மிகவும் மதிக்கத்தக்க இஸ்லாமியத் தலைவர்களை சிறையில் அடைத்தார்கள் என்பதையும் இந்த வீடியோ பதிவுகள் உறுதிப்படுத்தின.


காவல்துறையினர் அரசின் விருப்பம் போல் செயல்பட்டார்கள் என குஜராத் காவல்துறையின் முன்னாள் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமார் ஒரு உரையாடலில் தெரிவிக்கிறார்:

‘‘இந்த வாக்குமூலங்கள் எல்லாம் குஜராத் காவல்துறையினர் தங்களின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருக்க வேண்டியவை இல்லையா?

இவர்களை இப்படியே விட இவர்கள் என்ன ஜேப்படித்திருடர்களா?

இவர்கள் தத்துவங்களால் வழிநடத்தப்பட்டு இந்தக் கண்டத்திற்கே கேடு விளைவிக்கக்கூடியவர்கள்’’ என்று மிகுந்த ரௌத்திரத்துடன் எழுதினார் தெகல்கா ஆசிரியர் தருண் ஜே. தேஜ்பால்.


CONTINUED ……

UNMAIKAL said...

PART. 3 இரட்டையர்கள்: மாயா கோட்னானி & அஜ்மல் கசாப் - முத்துகிருஷ்ணன்.

இத்தனை பெரும் பொக்கிஷம் வெளியாகியும்

இந்தப் புலனாய்வை காங்கிரஸ் நிகழ்த்தியது என பா.ஜ.க.வும்,

குஜராத்தில் நரேந்திர மோடி வெற்றி பெற்றவுடன் இதனை மோடியேதான் திட்டமிட்டு செய்தார் என காங்கிரசும் மாறி மாறி சேற்றை வாரி இறைத்தன.

இந்த மொத்த சேறும், நீதிக்காக முகாம்களில் வருடக்கணக்கில் காத்திருக்கும் அப்பாவி இஸ்லாமியர்களின் முகங்களின் மீதுதான் விழுந்தது.


2008ல் உச்சநீதிமன்றம் சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நரோடா பாட்டியா, குல்பர்கு சொசைட்டி, கோத்ரா ரயில் எரிப்பு உட்பட 9 வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டது.

அந்தக் குழு முன்னால் தான் ஆஜராக விரும்புவதாக ஆஷிஷ் கேத்தன் தானே மனு செய்தார்.

அவர் அழைக்கப்பட்டார். அவர் தனது விரிவான வாக்குமூலங்களையும் 60 மணி நேர காட்சிக் கோப்புகளையும் அந்தக் குழுவிற்குக் கொடுத்தார்.

ஒரு தனி நபரால் இத்தனை சாட்சியங்களைத் தர முடியும் என்கிறபோது ஒரு அரசு நினைத்தால்?? அதன் பின் தொடர்ந்து பல முறை சென்று வாக்குமூலங்கள் அளித்தார்.

அதில் பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானிக்கு எதிராகப் பல நுணுக்கமான தகவல்களை வழங்கினார் ஆஷிஷ்.

நீதிமன்றங்களில் தொடர்ந்து ஆஜராகிக் கொண்டேயிருந்தார் ஆஷிஷ்.

பல முறை அவரிடம் வேண்டாத கேள்விகள், குதர்க்கமான கேள்விகள் என அவரை ஆத்திரப்படுத்தும் விதமாகவே நீதிபதிகளும், அரசு வழக்கறிஞர்களும் நடந்து கொண்டார்கள்.

இப்ப கூட நீங்க ரகசிய காமிரா வச்சிருக்கீங்களா என்றார் நீதிபதி ஜோஷி.

அவர் எல்லா குற்றவாளிகளின் முன்னணியில் ஆஷிஷிடம் அவரது குடும்பத்தார், அவரது வீடு, அது வாடகை வீடா, எத்தனை ஆண்டுகளாக இந்த விலாசத்தில் குடியிருக்கிறார் என அங்கு நீதிமன்ற அறையில் இருக்கும் கொலைகாரர்களுக்குத் தகவல் தருவதற்காகவே விசாரனையை நடத்தினார்.

சாட்சியம் அளிக்க வந்த இஸ்லாமியப் பெண்களையும் நீதிபதி ஜோஷி அவ்வாறே இகழ்ந்தார்.


பொது உரிமைகளைக் கூட மறுத்தார்.

அவரது நடத்தைக்கு எதிராகப் பல மனுக்கள் சென்றன. அவர் மாற்றப்பட்டார். நீதிபதி ஜோத்சனா பென் விசாரணையைத் தொடர்ந்தார்.

ஆகஸ்ட் 29, 2012 அன்று நீதிபதி ஜோத்சனா பென் குஜராத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பான மிக முக்கிய தீர்ப்புகளில் ஒன்றை உச்சரித்தார்.

நரேந்திர மோடியின் ஆட்சியில் இனப்படுகொலைகளை நிகழ்த்தி விட்டு சுதந்திரமாக நடமாடிய பாபு பஜ்ரங்கி, பா.ஜ.க. அமைச்சர் மாயா கோட்னானி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு சிறிய வெற்றி மக்களுக்குக் கிடைத்தது.

‘என்னைக் கொன்றாலும் பரவாயில்லை. என் சாவுக்குள் நான் 10&-15 ஆயிரம் இஸ்லாமியர்களைக் கொலை செய்ய வேண்டும்’ என்று மிக வெளிப்படையாக கூறும் பாபு பஜ்ரங்கியைக் காவல்துறை வாகனத்தில் பார்க்கும்போது கொஞ்சம் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

இருப்பினும் 165 பேரைக் கொன்ற அஜ்மல் கசாபுக்கும்,

2000 பேரைக் கொன்ற ஹிந்துத்வா தீவிரவாதிகளுக்கும் அளிக்கப்பட்ட வெவ்வேறு தண்டனைகள் நமக்கு இங்கு நீதித்துறையில் நிலவும் பாரபட்சத்தையே காட்டுகிறது.

அஜ்மல் கசாப் யாரோ ஏவிவிட்ட கருவியாகத்தான் இருக்கிறார்.

இரட்டைக் குடியுரிமை பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லியின் பாத்திரம் இன்னும் முழுமையாக விசாரிக்கப்படாமல் தான் உள்ளது.

ஆனால் இந்த ஹிந்துத்வா தீவிரவாதிகள் இதனை எல்லாம் தாங்களே திட்டமிட்டவர்கள்.

இந்தியா முழுவதும் காக்கி டவுசர்களைப் போட்டுக் கொண்டு ஆயுதப் பயிற்சியை இவர்கள் நகரங்களின் மையப் பகுதிகளில் நடத்துகிறார்கள்.

இந்தியா முழுவதும் இவர்களுக்கு இருக்கும் தீவிரவாத தொடர்புகள், ஆயுதப் பயிற்சி வகுப்புகள்,

ராணுவத்தில் உள்ள தொடர்புகள் என எல்லாம் ஹேமந்த கர்கரேயின் விசாரணையின்போதே துல்லியமாக வெளிப்பட்டு விட்டது.

எந்த இஸ்லாமியனாவது தனது மசூதிக்கே வெடிகுண்டு வைப்பானா என்று கூட சாதாரணமாக சிந்திக்க மறுத்து, உளவுத் துறை, உள்துறை, மீடியா கூட்டின் மூளைச் சலவையில் இந்த தேசம் சிக்கித்தவிக்கிறது.

இந்த மூளைச் சலவைக்கு எதிராகப் பேச எல்லா அரசியல் கட்சிகளும் மறுத்து வருகின்றன.


CONTINUED ……

UNMAIKAL said...

PART 4. இரட்டையர்கள்: மாயா கோட்னானி & அஜ்மல் கசாப் - முத்துகிருஷ்ணன்

இதனைப் பற்றியும் இந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகத் தொடர்ச்சியாகப் பேசியும்,

செயல்பட்டும்,

வழக்குரைஞராகப் பணியாற்றும் டீஸ்டா செதல்வாதின் வரலாற்றுப் பங்களிப்பை இந்த இடத்தில் நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும்.

ஒரு காலகட்டத்தின் மனசாட்சியாக விளங்குவது என்பது இதுவன்றி வேறில்லை.

இந்த மூளைச் சலவை மனநிலையில் இருந்து தான் இந்திய மத்திய தர வர்க்கம் குஜராத் மாநிலத்தை வளர்ச்சியின் பிறப்பிடமாகப் பார்க்கிறது.

கார் தொழிற்சாலைகளை குஜராத்திற்கு எடுத்துச் செல்ல அத்வானி சிங்கூரில் என்ன செய்தார் என்றும்,

இப்பொழுது சுசூகி தொழிற்சாலையில் நடந்த கலவரங்களுக்கும் நரேந்திர மோடிக்கும் உள்ள தொடர்புகள் வரை பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

குஜராத்தில் நடக்கும் விவசாயத் தற்கொலைகளையும், ஊட்டச்சத்துக் குறைபாடால் நடக்கும் சாவுகளையும் ஊடகங்கள் கையூட்டுப் பெற்று வெளியிடுவதில்லை.

மாறாக, கஞ்சிக்கு வழியில்லாமல் எலும்பு துருத்தி தெரியும் பெண்களை, அழகுணர்ச்சியுடன் வாழுபவர்கள் என்று சமீபத்தில் நரேந்திர மோடி மூடி மறைக்க முயற்சித்தது வரை நாம் உண்மையைக் காண முயல வேண்டும்.

India State Hunger Index-ன் படி குஜராத் இந்தியாவின் 13 வது மாநிலமாகவே உள்ளது. இது முற்றிலும் ஊடகங்கள் உருவாக்கும் மாயை.

இதே பா.ஜ.க. மத்தியில் ஆட்சி செய்தபோது இந்தியா ஒளிர்கிறது என்கிற மாயையை உருவாக்க முயன்றார்கள்.

அது எத்தனை அபத்தமானதோ அதே அளவுக்கு அபத்தமானது இந்த குஜராத ஒளிர்கிறது மாயை என்பதைப் பல ஆய்வாளர்கள் (இதைப் பற்றி மட்டுமே விரிவாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்) சுட்டிக் காட்டுகிறார்கள்.

இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த தீர்ப்பு வெளிவந்ததும் என மனதில் ஒரு விஷயம் உடனே நினைவுக்கு வந்தது.

தெகல்காவின் இந்தப் புலனாய்வு பதிவுகளின் எழுத்துப்படிகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து அவை 2008ல் ஜனவரி 4 ஆம் தேதிதான் அச்சகத்தில் இருந்து வந்து சேர்ந்தது.

அதை எடுத்துக் கொண்டு நானே சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அரங்குகளில் விநியோகித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரம் தமிழினி அரங்கில் 30 பிரதிகளை விற்பனைக்குக் கொடுத்தேன்.

அங்கிருந்த ஜெயமோகன் குஜராத் 2002 புத்தகத்தின் ஒரு பிரதியைக் கையில் எடுத்துக் புரட்டிக்கொண்டே சிரித்தபடி கூறினார்: “எங்களுக்கு வேலை வைக்காமல், நீங்களே எங்கள் வீர வரலாற்றை எழுதிவிட்டீர்கள்.’’

ஒருபுறம் சிலருக்கு வீர வரலாறாக இருப்பது மறுபுறம் ஒரு தேசத்தின் கலங்கம் நிறைந்த துயர வரலாறாக இருக்கிறது.

குஜராத்தில் இன்னும் ஏராளமான கொலைகாரர்கள் மிக சுதந்திரமாக சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கார்களில், காவல்துறையினரின் பாதுகாப்புடன் வளம் வருகிறார்கள்.

இதுதானா வளர்ச்சி, இதுதானா நாகரீகம்?

தீவிரவாதம் எந்த நிறத்தின் பின்னணியில் இருந்தாலும் அது அழித்தொழிக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்திய ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் தொடர்ந்து இதனைக் கையாள்வதில் பாரபட்சத்துடனே நடந்து வருகின்றனர்.

இதுதான் மேலும் மேலும் இந்த சமூகங்களின் மத்தியிலான மோதலை ஊக்குவிக்க வழிவகை செய்கிறது.

ஆட்சியாளர்களும், நீதித்துறையும் மனது வைத்தால் இந்தியாவை அமைதி நிலவும் ஒரு கேந்திரமாக மாற்றலாம்.

மனது வைப்பார்களா?
-

முத்துகிருஷ்ணன்

SOURCE: http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=218:-a-&catid=22:-1&Itemid=52

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//மோடி மதவாதி என்றால் நீங்கள் எல்லாம் யார்? மதவாதிகள் தானே?//

நாங்கள் மார்க்க வாதி. குர்ஆன் எதனை மார்க்கமாக சொல்கிறதே அதன்படி நடப்பவர்கள்.

//மனு ஸ்ருமிதியை எதிர்க்கும் நீங்கள் ஷரியாவை எதிர்ப்பதில்லை, நாத்திகர்கள் இரண்டையும் வேண்டாம் என்கிறோம்.//

மனு ஸ்ருமிதியின் அப்பட்டமான சாதி துவேஷத்தால் இன்று ராமநாதபுரமும் தர்மபுரியும் பற்றி எரிந்து வருகிறது. ஷரியாவினால் நமது நாட்டுக்கு என்ன பிரச்னை வந்தது. இங்குள்ள இந்திய முஸ்லிம்களால் இந்திய அரசுக்கு எந்த நஷ்டம் வந்தது? நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளும் இந்துத்வாவின் வேலை என்பது விசாரணையில் தெரிய வரவில்லையா? அடுத்து பகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் வருவது இரு நாடுகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னை. அதில் மதத்தை கொண்டு வர முடியாது. பாகிஸ்தானில் hழும் மக்கள் வேறு தெய்வங்களை வணங்கி வந்தாலும் இதே நிலைதான் தொடரும். ஏனெனில் இரு நாட்டின் ஆளும் வர்க்கத்திற்கும் பிரச்னைகளை திசை திருப்ப அந்நிய நாடு படையெடுத்து வருகிறது என்ற அவதூறை பிரவாரம் செய்தால் மற்ற பிரச்னைகள் பின்னுக்கு தள்ளப்படும். அதுதான் நடந்து வருகிறது.

//குஜராத்தில் மதசார்பற்ற ஆட்சி வேண்டும் என்பவர் ,சவுதியில் அதே போல ஆட்சி வர வேண்டும் என ஏன் சொல்ல மாட்டேன்கிறீர்கள்?//

சவுதியில் ஒரு சிறந்த ஆட்சி நடைபெற்று வரும்போது அங்கு ஏன் மாற்றம் வர வேண்டும். 20 வருடம் 25 வருடங்களாக சவுதி தனது குழந்தை அப்பா அம்மாவோடு சந்தோஷமாக வாழ்ந்து வரும் இந்து குடும்பங்களை நான் அறிவேன். அவர்களிடம் சவுதி ஆட்சியைப் பற்றி கேட்டுப் பாருங்கள். நமது நாட்டை விட பெண்கள் தைரியமாக இரவு நேரங்களில் வெளியில் தக்க துணையோடு செல்ல முடியும். வழிப்பறி, ஈவ் டீஸிங், கற்பழிப்பு, கொலை என்று எந்த பிரச்னையும் இல்லாமல் அவர்களால் 25 வருடம் தங்க முடிகிறது. தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை தர முடிகிறது. இவ்வாறு இருக்கும் போது ஏன் இந்த ஆட்சி மாற வேண்டும்?

இதுபோல் குஜராத்திலும் மோடியை ஆள சொல்லுங்கள். அவரே தொடர்ந்து முதல்வராக இருந்து கொள்ளட்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நிதிஷ்குமார் இவரை விட சிறப்பாக ஆளவில்லையா?


ராஜ நடராஜன் said...

சகோ!சுவனப்பிரியன்!வவ்வாலின் பின்னூட்டத்தில் சரியான தர்க்க வாதம் இருக்கிறது.மோடி அரசியல் பதவியிலிருந்து கொண்டு செய்யும் மதவாதத்தையே சகோக்களும் செய்கிறீர்கள்.இதற்கு ஒப்புக்கு சப்பாணியாக மார்க்கம் என்ற பெயர் வேறு.மதம் என்பது உலகளாவிய அளவில் நிறுவப்பட்ட ஒன்று.மார்க்கம் என்பதை நீங்கள் மட்டுமே உச்சரிக்கிறீர்கள்.

குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்ட மோடி எப்படி கண்டிக்கபட வேண்டியவரோ அதே போல் மதம் அல்லது நீங்கள் சொல்லும் மார்க்கத்தின் பெயரால் உலகளாவிய தீவிரவாதம் செய்தவர்களும்,செய்கிறவர்களும் கண்டிக்கபட வேண்டியவர்களே.தவறை தவறு என்று ஏற்றுக்கொள்ளாமல் இஸ்லாமிய தீவிரவாதத்தில் பெரும்பாலோர் மனதுக்குள் மகிழ்வதையே உணர முடிகிறது.

மோடியின் இந்துத்வா மட்டுமல்ல சோனியா காந்தி குடும்பத்தின் வாரிசு அரசியலும் கூட இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.ஆனால் மோடியும்,ராகுலும் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமையானவர்கள் என்பதோ அல்லது இந்திய மக்கள்,அரசியல் சதுரங்கம் போன்றவைகளே நடைமுறை யதார்த்தம்.

சகோ ஷேக் தாவூத் குஜராத்தின் களநிலையை ஓரளவுக்கு பிரதிபலிக்கிறார்.



suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//வவ்வாலின் பின்னூட்டத்தில் சரியான தர்க்க வாதம் இருக்கிறது.மோடி அரசியல் பதவியிலிருந்து கொண்டு செய்யும் மதவாதத்தையே சகோக்களும் செய்கிறீர்கள்.இதற்கு ஒப்புக்கு சப்பாணியாக மார்க்கம் என்ற பெயர் வேறு.மதம் என்பது உலகளாவிய அளவில் நிறுவப்பட்ட ஒன்று.மார்க்கம் என்பதை நீங்கள் மட்டுமே உச்சரிக்கிறீர்கள்.//

மோடி செய்யும் அதே வேலையை மார்க்க சகோதரர்கள் எங்கு எப்போது செய்தார்கள்? தாலிபான்களை கொண்டு வருவீர்கள். அங்கு நடப்பது சுதந்திர போரை ஒத்த ஒரு போராட்டம். தனது நாட்டுக்குள் புகுந்த அந்நிய சக்திகளை ஆயுதம் கொண்டு எதிர்க்கிறார்கள். அதற்காக அவர்கள் செய்யும் அனைத்து கொலைகளையும் ஆதரிக்கவில்லை. ஆனால் போராட அவர்களுக்கு உரிமை உண்டு. இதே கண்ணோட்டத்தோடு மோடியையும் நாம் பார்க்க முடியுமா? காவல்துறை அதிகாரிகளுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் அன்று நேரிடையாகவே உத்தரவு பிறப்பித்து முஸ்லிம்களை கொன்றொழித்தவர் மோடி. இரண்டையும் எப்படி ஒன்றாக்குகிறீர்கள்?

//குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்ட மோடி எப்படி கண்டிக்கபட வேண்டியவரோ அதே போல் மதம் அல்லது நீங்கள் சொல்லும் மார்க்கத்தின் பெயரால் உலகளாவிய தீவிரவாதம் செய்தவர்களும்,செய்கிறவர்களும் கண்டிக்கபட வேண்டியவர்களே.தவறை தவறு என்று ஏற்றுக்கொள்ளாமல் இஸ்லாமிய தீவிரவாதத்தில் பெரும்பாலோர் மனதுக்குள் மகிழ்வதையே உணர முடிகிறது.//

அப்பாவி பொது மக்களை இலக்காக்கும் எவரையும் நான் கண்டிப்பேன். அது மோடியாக இருந்தாலும் சரி. தாலிபான்களாக இருந்தாலும் சரி.

//மோடியின் இந்துத்வா மட்டுமல்ல சோனியா காந்தி குடும்பத்தின் வாரிசு அரசியலும் கூட இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.ஆனால் மோடியும்,ராகுலும் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமையானவர்கள் என்பதோ அல்லது இந்திய மக்கள்,அரசியல் சதுரங்கம் போன்றவைகளே நடைமுறை யதார்த்தம்.//

நான் ராகுலையும் ஆதரிக்கவில்லை. ஒரு சிறந்த அமைப்பு கிடைக்கும் வரை தற்போது நமக்கு முன் உள்ள ஒரே சக்தி காங்கிரஸ்தான். வேறு வழியில்லை. மேலும் இந்துத்வா வளர்வது இந்து மதத்துக்கே கேடு. அதனை உங்களைப் போன்றவர்கள் போகப் போக உணர்வீர்கள்.

//சகோ ஷேக் தாவூத் குஜராத்தின் களநிலையை ஓரளவுக்கு பிரதிபலிக்கிறார்.//

வரட்டும். இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் சட்டத்தின் பிடியில் மோடி அகப்படும் நாளை நீங்களும் நானும் பார்க்கத்தான் போகிறோம்.

'தெய்வம் நின்று கொல்லும்'




ராஜ நடராஜன் said...

சகோ!சுவனப்பிரியன்!மதம் கடந்தும் பார்வையை செலுத்தும் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளீர்கள் என்று மகிழ்ச்சியோடு இருந்தேன்.ஆனால் நீங்க இன்னும் பார்வைகளை அகலப்படுத்தனும்ன்னு நினைக்கிறேன்.

போட்டீங்களே ஒரு போடு!நமக்கு முன் உள்ள ஒரே சக்தி காங்கிரஸ்தான்னு.ஊடக செய்திகள்,ஊழல் பிரதாபங்களையெல்லாம் நீங்க உற்று நோக்குவதில்லை போல!

சல்மான் குர்ஷித்தின் மொழி வளத்திற்காக கிருஷ்ணாவை விட வெளியுறவுத்துறைக்கு தகுதி வாய்ந்தவர்.ஆனால் ஊழல் குற்றப்பத்திரிகை வந்த அடுத்த வாரமே புரமோசன் என்ற காங்கிரஸின் கோட்பாடு ரொம்ப நல்லாயிருக்குது.
700 பேர் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு வந்தாலும் ஸ்விஸ் வங்கி பெயரை சொன்னாலும் பிரணாப் எங்க ஆளுகளும் லிஸ்ட்ல இருக்கறதால எப்படி வாய் திறப்பேன்ங்கிற ராஜதந்திரமெல்லாம் ரொம்ப உசத்தி.ஊழல்களை கட்டுப்படுத்த லோக்பால் பில்லை சட்டப்படுத்த ஏன் தயக்கம்?

இதோ சொல்லி முடிக்கல!அதற்குள் தலிபான்களை சுதந்திர போரை ஒத்த ஒரு போராட்டம் என்கிறீர்கள்:சரி அப்படியே மத சுதந்திர போராட்ட வீரர்கள் என்று எடுத்துக்கொண்டாலும் உலகமெல்லாம் குண்டு வைக்கனுமா?

துப்பாக்கின்னு ஒரு பிஸ்கோத்து படத்துக்கு எதிரான இஸ்லாமிய அடையாளப்படுத்தலுக்கு எதிராக வரும் பதிவர்களின் விமர்சன அடிப்படைகள் கூட சகோக்களிடம் இல்லையென்பது வருத்தமான விசயம்.

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//700 பேர் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு வந்தாலும் ஸ்விஸ் வங்கி பெயரை சொன்னாலும் பிரணாப் எங்க ஆளுகளும் லிஸ்ட்ல இருக்கறதால எப்படி வாய் திறப்பேன்ங்கிற ராஜதந்திரமெல்லாம் ரொம்ப உசத்தி.ஊழல்களை கட்டுப்படுத்த லோக்பால் பில்லை சட்டப்படுத்த ஏன் தயக்கம்?//

நான் முன்பே சொன்னேனே! சிறந்த ஒரு அரசியல் கட்சி வரும் வரை காங்கிரஸை ஆதரிக்க வேண்டும். இல்லை என்றால் பிஜேபி வந்து விடும். அது அதை விட ஆபத்தானது.

//இதோ சொல்லி முடிக்கல!அதற்குள் தலிபான்களை சுதந்திர போரை ஒத்த ஒரு போராட்டம் என்கிறீர்கள்:சரி அப்படியே மத சுதந்திர போராட்ட வீரர்கள் என்று எடுத்துக்கொண்டாலும் உலகமெல்லாம் குண்டு வைக்கனுமா?//

தாலிபான்களின் அடாவடிகளைக் கண்டித்து பல பதிவுகளே எழுதியுள்ளேன். சமீபத்தில் கூட இலங்கை போராளி ஒருவர் ஐரோப்பாவில் கொல்லப்பட்டார். இது போன்று எண்ணிலடங்கா கொலைகள். அதற்காக நாம் ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் தீவிரவாதிகள் என்று சொல்வதில்லை. நீங்களும் புலிகளை ஆதரிக்கிறீர்கள். அவர்களின் கொள்ளையை குறை காண்பதில்லை. அவர்கள் செய்யும் பல அநியாயக் கொலைகளை கண்டித்து இதுவரை நீங்கள் ஒரு வார்த்தை பேசியதில்லை. நானாவது தாலிபான்களை கண்டிக்கிறேன். பதிவுகளும் எழுதுகிறேன். இஸ்லாம் சொல்லாத வழிமுறைகளை கையிலெடுப்பதை கண்டித்திருக்கிறேன்.

இந்த அளவு கூட இன்னும் நீங்கள் முன்னேறவில்லை. பிரபாகரன் பாசம் கண்ணை மறைக்கிறது. இல்லையா?

//துப்பாக்கின்னு ஒரு பிஸ்கோத்து படத்துக்கு எதிரான இஸ்லாமிய அடையாளப்படுத்தலுக்கு எதிராக வரும் பதிவர்களின் விமர்சன அடிப்படைகள் கூட சகோக்களிடம் இல்லையென்பது வருத்தமான விசயம்.//

வர வேண்டும். அதற்காக முயற்சித்துக் கொண்டுள்ளோம்.

தர்மபுரியில் வன்னியர்களுக்கும் தலித்களுக்கும் நடந்த சாதி சண்டையில் உங்களின் கருத்துக்களையே காணோமே! பரமக்குடியில் தேவர்களுக்கும் தலித்களுக்கும் இடையில் நடந்த வெட்டு குத்துக்களை நீங்கள் கண்டித்து எந்த பின்னூட்டமோ பதிவோ எழுதவில்லையே! இவற்றை ஆதரிக்கிறீர்கள் என்று நான் எடுத்துக் கொள்ளலாமா?

ராவணன் said...

அண்ணாச்சி மோடி உண்மையான இந்திய குடிமகன்.

உங்களைப் போல் அரேபியாவிற்கு மகுடி ஊதவில்லை.

மோடி இந்தியாவின் தலைவராவதை யாராலும் தடுக்கமுடியாது.

குண்டு வைப்பார்களா?

இத்தாலி சோனியாவைப் போற்றுபவர்களிடம் எதை எதிர்பார்க்கமுடியும்?

ராவணன் said...

அண்ணாச்சி...மாலிக் என்பவர் எழுதிய பதிவுகளைப் படிப்பதுண்டா?

அவர் உங்கள் சவுதியை மட்டுமல்ல..உங்கள் தலைவர் பிஜெவையும் தோலுரித்து தொங்கவிட்டுள்ளார்.

suvanappiriyan said...

ராவணன்!

//அண்ணாச்சி...மாலிக் என்பவர் எழுதிய பதிவுகளைப் படிப்பதுண்டா?

அவர் உங்கள் சவுதியை மட்டுமல்ல..உங்கள் தலைவர் பிஜெவையும் தோலுரித்து தொங்கவிட்டுள்ளார். //

அவர் ஒரு ஷியா முஸ்லிம். அவர் எவ்வாறு சவுதியை ஆதரித்து பதிவெழுத முடியும். அடுத்து தர்ஹா வணக்கம், முஹர்ரம் பண்டிகையில் கைகளை நெஞ்சையும் கீறிக் கொள்வது, கொடி ஏற்றுதல், தீ மிதித்தல், மூடப் பழக்கங்கள் அனைத்தையும் பின்பற்றுபவர்கள் ஷியாக்கள். அதெல்லாம் தவறு என்று சொல்லி வருபவர் பிஜே. எனவே அவரை இவர் எதிர்க்கிறார்.

//அண்ணாச்சி மோடி உண்மையான இந்திய குடிமகன்.

உங்களைப் போல் அரேபியாவிற்கு மகுடி ஊதவில்லை.

மோடி இந்தியாவின் தலைவராவதை யாராலும் தடுக்கமுடியாது.//

அவர் பிரதமரானால் உங்களைப் போன்றவர்களுக்குத்தான் ஆபத்து. பிராமணர்கள் மட்டுமே அவரது ஆட்சியில் கோலோச்ச முடியும். ராமர் முன்னிலைப்படுத்த படுவார். முனியாண்டி சாமி முருகன் சாமி எல்லாம ஓரங்கட்டப்படுவார். நான் நெத்திலே பொறந்தேன் நீ தொடையில பொறந்தே என்று மனு நீதியை மோடியும் அத்வானியும் தூக்கிக் கொண்டு வருவார்கள். சாதி வெறி உக்கிரத்தை அடையும். வழக்கம் போல் நாங்கள் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்போம்.

பாவம் ராவணன்.:-)



suvanappiriyan said...


கோவி கண்ணன்!

//உங்களைப் போன்ற வஹாபிகளுக்கு இஸ்லாமியர் அல்லாதவர் காபீர் என்று அழைக்கும் தைரியம் யார் கொடுத்தார்களோ அதே போல் அவர்களுக்கு யாரேனும் தைரியம் கொடுத்து இருக்கலாம்.//


காஃபிர்கள் என்றால் நிராகரிப்பவர்கள் என்று தமிழ்ப்படுத்தலாம். இப்பொழுது நான் ஏக இறைவனை மட்டுமே வணங்குவேன். அதனை ஏற்றுக் கொள்ளாது நான் பல கடவுள்களை வணங்குவேன் என்றால் என் பார்வையில் அவர் ஏக இறைவனை நிராகரிப்பவர். இது ஏதோ அவமானகரமான சொல்லாக நீங்களாகவே கற்பனை செய்து கொண்டீர்கள.

நான் இப்பொழுது குர்ஆனின் கூற்று படி ஆதமிலிருந்து பல்கி பெருகியவர்களே நாம் அனைவரும் என்கிறேன். இதன்படி கோவி கண்ணனும் எனது உறவினர் ஆகிறார். இது எனது நம்பிக்கை. ஆனால் கோவி கண்ணன் இதை ஒத்துக் கொள்ள மாட்டார். ஏனெனில் அதனை அவர் நம்பவில்லை. இதனை கோவி கண்ணனிடம் சொல்லி கட்டாயப் படுத்தவும் முடியாது. உங்களை காஃபிர் என்று அழைப்பதை விரும்பவில்லை என்றால் ஏக இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்..

அதே போல் இந்து மதத்தில் இருக்கும் வரை பிராமணர்களை தவிர மற்ற சாதியினர் சூத்திரர்கள் என்ற இடத்திற்கு வருகின்றனர். என்று அவன் நாத்திகனாகவோ அல்லது இஸ்லாமியனாகவோ மாறி விடுகிறானோ இந்து சட்டத்தின் படி சூத்திரன் என்ற கோட்டுக்குள் வர மாட்டான். மனு ஸ்ருமிதியின் சட்டம் ஒரு முஸ்லிமைக் கட்டுப் படுத்தாது. ஆனால் ஒரு இந்துவைக் கட்டுப்படுத்தும். இந்திய அரசியல் சட்டமே இஸ்லாமியர், கிறித்தவர் அல்லாதவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று தெளிவாக சொல்கிறதே!

சார்வாகன் said...

சகோ சு.பி,
நல்ல பதிவு.

ஆங்கில மூலம் முழுதும் தமிழ் படுத்தி இட்டு இருக்கலாமே!!.

நமக்கு மதம் மூலம் அரசியல் நடத்தும் எவரையும் பிடிப்பது இல்லை.ஜன்நாயகம்,மத சார்பின்மை என்பது ஒரு தலைவனுக்கு மிக்க அவ்சியம் என்வே நினைக்கிறேன்.
நான் மத சார் அரசியலை வெறுக்கிறேன்.ஆனால் ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மையோர் நலன் அந்நாட்டின் நாகரிகத்தின் அளவு என்கிறேன்.

இது பல் இஸ்லாமிய நாடுகளில் இல்லை என்றாலும் இப்போது நம் நாட்டைப் பற்றி மட்டுமே பேசுவோம்.
******
திரு மோடி 2002 ல் ஆட்சிக்கு வர அப்போதைய கோத்ரா சம்பவத்தை பயன்படுத்தினார் என்பதும், கல்வரத்தை பாரப்ட்சமின்றி ஒடுக்கவில்லை என்பதும் கண்டிக்கத் தக்கது.

இதுவரை அதற்காக் வருத்தம் தெர்விக்கவில்லை என்றாலும் இப்போது குஜராத் பொருளாதார,வளர்ச்சி நாயகன் என்ற வாதத்தையே வைக்கிறார்.
ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன்.
*******
குஜராத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார்.ஆனால் இந்தியா பிரதம் வேட்பாளர் ஆகும் வாய்ப்பு உள்ளது என்னும் போது

1. ஜன்நாயக,மத சார்பற்ற சக்திகளை திரட்டி மாற்று வலிமையான் வேட்பாளரை ஆதரிக்கலாம்.

2. மோடி,பாஜக உடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு தீர்வு காண்லாம்.

இரண்டுக்குமே அதிக பட்ச நிதானம்,விட்டுக் கொடுத்தல் தேவை. மாற்று வேட்பாளரை உருவாக்கும் முயற்சி இந்துத்வாவுக்கு சாத்கம் ஆகும் வாய்பை தவிர்க்க எந்த இன முறுகலும் நிகழக் கூடாது.

மோடி வேட்பாள்ர் ஆகி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் இப்போது அவ்வள்வு பிரகாசமாக இல்லை என்பதே நம் கருத்து . ஓட்டுகள் மத ரீதியாக பிள்வு பட்டால் மட்டுமே!!அதனை தவிர்க்க வேண்டும்.


உங்களுக்கும் சொல்வது என்போன்ற நாத்திகர்களை விமர்சியுங்கள்.நாங்களும் திருப்பி போடுவோம். இது வேறு.

ஆனால் பிற மதங்களை,பிற முஸ்லிம் பிரிவுகளை தாக்கி எழுதுவது விமர்சிப்பது போன்ற விடயங்கள் உங்களை பிளவு படுத்தி விடும்.

பாருங்கள் இப்பதிவுக்கு பிற மதத்த்வர் யாரும் ஆதரவு கருத்திடவில்லை.ஏன் என சிந்திக்க வேண்டுகிறேன். நான் இப்பதிவை ஆதரிக்கிறேன்.த.ம ஓட்டும் போட்டு விட்டேன்.

வாழ்த்துக்கள் சகோ!! வாழ்க வளமுடன்!!

டிஸ்கி: நாம் முஸ்லிம்கள் இந்நாட்டின் சிறுபானமையினர் என்பதல் பிறருக்கு உள்ள‌ அனைத்து உரிமைகளும் கிட்ட வேண்டும் என குரல் கொடுப்போம்.அதற்காக உங்கள் பதிவுகளை விமர்சிப்பதை (நீங்கள் மத பிரச்சாரம் செய்யும் வரை) செய்வோம் .நமக்கு அனைத்து மதங்களுமே ஒன்றுதான்!! கடவுளை மற மனிதனை நினை

நன்றி




suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//ஆனால் பிற மதங்களை,பிற முஸ்லிம் பிரிவுகளை தாக்கி எழுதுவது விமர்சிப்பது போன்ற விடயங்கள் உங்களை பிளவு படுத்தி விடும்.//

பதிவுலகில் ஆதரவு தேவை என்றால் வெகு சுலபமான வழி ஆபாசம். அடுத்து சினிமா. இரண்டையும் பதிவுகளாக தொட்டால் ஹிட்ஸ் எகிறும் என்பது எனக்கு தெரியும். ஆனால் நமது எழுத்து முடிந்த வரை சமூகத்தில் ஒரு சிறிய மாற்றத்தையாவது எற்படுத்த வேண்டும் என்று எண்ணுபவன்.

எனவே தான் இஸ்லாம் முதற்றொண்டு கிறித்தவம், இந்து, டார்வினிசம் என்று அனைத்து துறைகளையும் தொட்டுக் கொள்வது. இதன் மூலம் நானும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன். சமூக அவலங்களை தாட்சணியமின்றி சுட்டிக் காட்ட வேண்டும் நமது சக்திக்கு உட்பட்டு.

//பாருங்கள் இப்பதிவுக்கு பிற மதத்த்வர் யாரும் ஆதரவு கருத்திடவில்லை.ஏன் என சிந்திக்க வேண்டுகிறேன். நான் இப்பதிவை ஆதரிக்கிறேன்.த.ம ஓட்டும் போட்டு விட்டேன்.

வாழ்த்துக்கள் சகோ!! வாழ்க வளமுடன்!!//

நன்றி!

//டிஸ்கி: நாம் முஸ்லிம்கள் இந்நாட்டின் சிறுபானமையினர் என்பதல் பிறருக்கு உள்ள‌ அனைத்து உரிமைகளும் கிட்ட வேண்டும் என குரல் கொடுப்போம்.அதற்காக உங்கள் பதிவுகளை விமர்சிப்பதை (நீங்கள் மத பிரச்சாரம் செய்யும் வரை) செய்வோம் .நமக்கு அனைத்து மதங்களுமே ஒன்றுதான்!! கடவுளை மற மனிதனை நினை//

தாராளமாக விமரிசனம் செய்யுங்கள். எதிர்ப்பு இருந்தால்தான் எனக்கும் ஆர்வம் வரும்.

அதற்காக கடவுளை மறக்க வேண்டாம். கடவுளையும் நினைப்போம் மனிதனையும் நினைப்போம்.


UNMAIKAL said...

முஸ்லிம்களை அச்சுறுத்தும் போக்கு :

சென்னை விமான நிலையத்தில் அதிகரித்துவரும் அரச பயங்கரவாதம்!


Wednesday, 14 November 2012 17:53 மீடியா - செய்திகள்

NOV 14, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குள் பிரவேசிக்கும் முஸ்லிம்கள், குறித்த நேரத்தில் - குறித்த விமானத்தில், தங்களது பயணங்களை மேற்கொள்வது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அமீர் தாஹா (33). கொச்சியிலிருந்து சென்னை - டெல்லி வழியாக துபாய் செல்வதற்கு நேற்று (13/11) மாலை 6 மணிக்கு சென்னை வந்திறங்கினார்.

அப்போது, (7 மணி) மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அவர், உள்நாட்டு முனையத்தில் காரை விட்டு கீழே இறங்கி, விமான நிலைய உள்பகுதிக்குள் நடந்து சென்று கொண்டிருந்தார்.

போர்டிகோ பகுதியில் நின்றிருந்த அமீர் தாஹா, தனது செல்போனில் சிதம்பரத்தை படம் பிடித்ததாக தெரிகிறது.

அவர் முஸ்லிம் என்பதை தெரிந்துக்கொண்ட சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை மடக்கி பிடித்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.

அமீர் தாஹாவிடம், கொச்சியிலிருந்து சென்னை வந்த பயணச்சீட்டு, இன்று காலை 10.45 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி செல்லும் டிக்கட், அங்கிருந்து துபாய் செல்வதற்கான முறையான ஆவணங்கள் அனைத்தும் இருந்தபோதும், சிதம்பரத்தை ‘எதற்காக படம் பிடித்தாய்’? என்று கேள்விமேல் கேள்வி கேட்டு,துளைத்தெடுத்தனர்.

மேலும், உறுதி செய்யப்பட்ட அவரது பயணத்துக்கு இடையூறு செய்யும் வகையில், அவரை விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர்.

கேட்டரிங் டெக்னாலஜி முடித்துள்ள அமீர் தாஹாவை, கொடுமை படுத்த முடிவு செய்துவிட்ட விமான நிலைய அதிகாரிகள், கியூ பிராஞ் போலீசார், தீவிரவாத கண்காணிப்பு பிரிவு போலீசார், விமான நிலைய போலீசார் என பலருக்கும் தகவல் கொடுத்தனர்.

இரவு முழுவதும் தனி அறையில் வைத்து விசாரித்துள்ளனர்.

அது போதாதென்று, இன்று காலை சென்னை நிலைய போலீசில் அவரை ஒப்படைத்தனர்.

கேரள மாநில அரசுக்கும் தகவல் தெரிவித்து, அமீர் தாஹா பற்றிய விவரங்களை கேட்டுள்ளனர்.

வேடிக்கை என்னவென்றால், இந்த அமீர் தாஹாவை, சரியாக 40 நாட்களுக்கு முன் (03/10/12) விமானத்தை படம் பிடித்ததாக போலீசார் பிடித்து விசாரித்தனர்.

2 நாள் வைத்து விசாரித்த பிறகும், இவர் மீது குற்றம் இல்லை என்று கூறி, குற்ற நடைமுறை சட்டம் 41-வது பிரிவின் கீழ் சாதாரண வழக்கு, பதிவு செய்து விடுவித்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/612-2012-11-14-17-53-39

UNMAIKAL said...

முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.

வாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகள் என்றும் உறங்குவதில்லை

முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.

கடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக,

காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும்,

காஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல,

இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று

கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும்

உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது.

இந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக கதையளந்தன.

இப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது.

இவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி, பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக,

அவர்களுக்குச் சீருடை அணிவித்து,

ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது.

உண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல;

அவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை.

சுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.

SOURCE: http://www.vinavu.com/2012/07/30/supreme-court-state-terror/

முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்கம் தன் அதிகாரத்தை இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து வருகிற வேளையில் கொலைகாரர்களான அத்வானி, மோடி, அவர்கள் போன்றவர்களுக்கும் அவர்களின் கூட்டத்துக்கும் பாதுகாப்பளித்து வளமுடன் வாழ வைக்கவும் செய்கிறது.

UNMAIKAL said...

பஹ்ரைனில் உயிரிழந்த தமிழரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Monday, 12 November 2012 22:44

பஹ்ரைனில் கடந்த வாரம் தமிழகத்தில் தோப்புத்துறையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார்.

அவரது உடலை மீட்டு தருமாறு அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அங்குள்ள தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் (தமுமுக) வினரும், சமுதாய ஆர்வலர்களும் அவரது உடலை பெற்று தமிழகத்திற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டனர்.

இன்று காலை அவரது உடல் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து இறங்கியது.

உடலை திருச்சி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் (தமுமுக) ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டு அய்யம்பேட்டையில் உள்ள அவரது மனைவி வீட்டில் ஒப்படைக்கப்பட்டது.

அவரது உறவினர்கள் தமுமுக வினருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தனர்.

ராவணன் said...

அண்ணாச்சி....மோடி பிரதமர் ஆனால் நீங்கள் ஓரமா நின்னு வேடிக்கை பாப்பீங்களா?

ஒரே காமடிதான் அண்ணாச்சி....!

அங்கன வந்து ஓரமா யாராவது நிக்க முடியுமா?

ராவணன் said...

அண்ணாச்சி இன்னொன்ன மறந்துட்டீங்க....மோடி பிரதமரானா, ராமருக்கு நடக்கும் அபிசேகத்தைவிட மோடிக்கே அதிகம் நடக்கும்.

குல்லா போட்டவர்களும்...பூணூல் போட்டவர்களும் சேர்ந்தே செய்வார்கள்.

ஒங்க சவுதி மன்னரே நேரா வந்து அபிசேகம் செய்வார்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//மேலும் இந்துத்வா வளர்வது இந்து மதத்துக்கே கேடு//

நல்லா சொன்னீங்க அப்படியே வகாபியிசம் வளர்வது இஸ்லாமிற்கே கேடு என்றும் திருவாய் மலர்ந்தருளலாமே :-))

முகமது அய்யா காலத்து மசூதிகள் மற்றும் வரலாற்று சின்னங்களை அரபிய அர்சு பெரிசா கட்டப்போறேன்னு இடித்து தள்ளுவது குறித்து நீங்கள் ஒன்றுமே சொல்ல மாட்டேங்கிறிங்க :-))

மதாயின் சாலே எல்லாம் போய் பார்த்தேன் என சொன்னீர்கள் , முகமது அய்யாவிற்கு அருள்வாக்கு கிடைத்த மலைக்குகைகளை பார்த்து இருக்கலாமே, அதனை எல்லாம் பூட்டி மூடி வைத்துவிட்டதாக கேள்வி.

//பெருமானார் ( ﷺ ) அவர்களால் அஹ்லுல் பைத்
என்று புகழ்ந்துரைக்கப்பட்ட செய்யிதினா ஸல்மான்
அல் பார்சி றழியல்லாஹ் அன்ஹ் அவர்கள்
அடங்கப்பட்டிருக்கும் பள்ளிவாசலை சவுதி அரசாங்கம் உடைக்க
ஆரம்பித்திருக்கிறது. ஹந்தக் பகுதியில் ஏழு பெரும்
ஸஹாபாக்கள் அடங்கப்பட்டிருக்கும்
பள்ளிவாசல்கள் படிப்படியாக உடைக்கப்பட்டுவர
ுகின்றன. 1400 வருடங்களாக பேணிப்
பாதுகாக்கப்பட்டு வந்த இந்த
ஏழு பள்ளிவாசல்களும் பூட்டிப்
போடப்பட்டு மூடிவைக்கப்பட்டுள்ளன.
உள்ளே நுழைய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
சவுதி அரசாங்கம் இந்தப் பள்ளிவாசல்களுக்
கு மின்சாரம் வழக்குவதில்லை.
இது பற்றி பேசுவதற்கு எவராலும் பேச முடியாது.//

மேலும் படிக்க செல்லவும்,

http://alifboys.blogspot.in/2012/11/blog-post_2.html

------------------
//சவுதியில் ஒரு சிறந்த ஆட்சி நடைபெற்று வரும்போது அங்கு ஏன் மாற்றம் வர வேண்டும். 20 வருடம் 25 வருடங்களாக சவுதி தனது குழந்தை அப்பா அம்மாவோடு சந்தோஷமாக வாழ்ந்து வரும் இந்து குடும்பங்களை நான் அறிவேன். அவர்களிடம் சவுதி ஆட்சியைப் பற்றி கேட்டுப் பாருங்கள். நமது நாட்டை விட பெண்கள் தைரியமாக இரவு நேரங்களில் வெளியில் தக்க துணையோடு செல்ல முடியும். வழிப்பறி, ஈவ் டீஸிங், கற்பழிப்பு, கொலை என்று எந்த பிரச்னையும் இல்லாமல் அவர்களால் 25 வருடம் தங்க முடிகிறது. தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை தர முடிகிறது. இவ்வாறு இருக்கும் போது ஏன் இந்த ஆட்சி மாற வேண்டும்?//

அங்கு 25 ஆண்டுகளாக இருக்கிறார்கள் என சொல்கிறீர்கள்,

அவர்கள் வழிபட அங்கு இந்து வழிப்பாட்டு தலம் இருக்கிறதா? அமைக்க சுதந்திரம் உண்டா?

முன்னோர்களின் நினைவு நாளின் போது திவசம் கொடுக்க முடியுமா?

நெற்றியில் பட்டை அல்லது ராமம் போட்டுக்கொண்டு சவுதியில் நடமாட முடியுமா?

ஏன் பெண்கள் துணையில்லாமல் போக முடியாது, போனால் கற்பழிப்பு நடக்கும் சரி தானே?

தக்க துணையோட எங்கே வேண்டுமானாலும் தான் போகலாம் அது என்ன சவுதியில் போகலாம்னு பெருமை பீற்றல் :-))

இந்தியாவில் எங்கும் எந்த மத அடையாள சின்னத்தோடும் நடமாடலம், வழிப்பாட்டு தலம் அமைத்துக்கொள்ளலாம்.

இப்போதும் குஜராத்தில் முஸ்லீம்கள் வாழத்தான் செய்கிறார்கள், அப்புறம் என்ன புதுசா சொல்லிக்கிட்டு.

குஜராத்தோ இந்தியாவோ ஜனநாயக முறையில் ஆட்சியாளர்களை தேர்வு செய்கிறார்கள், ஆட்சியாளர் சரியில்லை என்றால் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்க முடியாது, தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் மோசமாக இருந்தும் மீண்டும் தேர்வானால் அது பெரும்பான்மை மக்களின் குற்றம். அதனை யார் சரி செய்வது.

மோடியை கூட வீட்டுக்கு அனுப்பிவிடலாம் சவுதி மன்னராட்சியை எல்லாம் அப்படி செய்ய முடியுமா இல்லை பேசத்தான் முடியுமா?

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//பெருமானார் ( ﷺ ) அவர்களால் அஹ்லுல் பைத்
என்று புகழ்ந்துரைக்கப்பட்ட செய்யிதினா ஸல்மான்
அல் பார்சி றழியல்லாஹ் அன்ஹ் அவர்கள்
அடங்கப்பட்டிருக்கும் பள்ளிவாசலை சவுதி அரசாங்கம் உடைக்க
ஆரம்பித்திருக்கிறது. ஹந்தக் பகுதியில் ஏழு பெரும்
ஸஹாபாக்கள் அடங்கப்பட்டிருக்கும்
பள்ளிவாசல்கள் படிப்படியாக உடைக்கப்பட்டுவர
ுகின்றன. 1400 வருடங்களாக பேணிப்
பாதுகாக்கப்பட்டு வந்த இந்த
ஏழு பள்ளிவாசல்களும் பூட்டிப்
போடப்பட்டு மூடிவைக்கப்பட்டுள்ளன.//

இஸ்லாம் உலகில் புனிதமாக கூறும் இடங்கள் மூன்று. ஒன்று மெக்காவில் இருக்கும் கஃபா. அடுத்தது மதினாவில் இருக்கும் பள்ளிவாசல். மூன்றாவது ஜெருஸலேத்தில் உள்ள பைதுல் முகத்தஸ் என்ற பள்ளிவாசல். இந்த மூன்றைத் தவிர வேறு எதுவும் இஸ்லாமிய பார்வையில் புனிதமில்லை. இன்று நாளுக்கு நாள் ஹஜ்ஜூக்கு கூட்டம் அதிகமாகி வருகிறது. இடப் பற்றாக் குறை. என்ன செய்வது? எனவே தான் கஃபாவுக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களையும் இடித்து அந்த இடங்களில் கஃபாவை விரிவு படுத்துகிறார்கள். மன்னரின் அரண்மனை ஒன்று அருகில் இருந்தது. அதையும் தற்போது தூக்கிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே இதெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல. அவர்கள் செய்வது உலக முஸ்லிம்களின் நன்மைக்கே. குறை சொல்பவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படப் போவதும் இல்லை.

//அங்கு 25 ஆண்டுகளாக இருக்கிறார்கள் என சொல்கிறீர்கள்,

அவர்கள் வழிபட அங்கு இந்து வழிப்பாட்டு தலம் இருக்கிறதா? அமைக்க சுதந்திரம் உண்டா?

முன்னோர்களின் நினைவு நாளின் போது திவசம் கொடுக்க முடியுமா?

நெற்றியில் பட்டை அல்லது ராமம் போட்டுக்கொண்டு சவுதியில் நடமாட முடியுமா?//

இதை எல்லாம் நாங்கள் பொது இடங்களில் செய்ய மாட்டோம் என்று உறுதி கூறிதானே வருகிறார்கள். வீட்டுக்குள் எதையும் செய்து கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.

//இந்தியாவில் எங்கும் எந்த மத அடையாள சின்னத்தோடும் நடமாடலம், வழிப்பாட்டு தலம் அமைத்துக்கொள்ளலாம்.

இப்போதும் குஜராத்தில் முஸ்லீம்கள் வாழத்தான் செய்கிறார்கள், அப்புறம் என்ன புதுசா சொல்லிக்கிட்டு.//

இந்தியா மத சார்பற்ற நாடு. சவுதி 100 சதவீதம் இஸ்லாத்தை பின் பற்றும் நாடு. இரண்டையும் ஒன்றாக்குகிறீர்களே!

//குஜராத்தோ இந்தியாவோ ஜனநாயக முறையில் ஆட்சியாளர்களை தேர்வு செய்கிறார்கள், ஆட்சியாளர் சரியில்லை என்றால் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்க முடியாது, தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் மோசமாக இருந்தும் மீண்டும் தேர்வானால் அது பெரும்பான்மை மக்களின் குற்றம். அதனை யார் சரி செய்வது.

மோடியை கூட வீட்டுக்கு அனுப்பிவிடலாம் சவுதி மன்னராட்சியை எல்லாம் அப்படி செய்ய முடியுமா இல்லை பேசத்தான் முடியுமா?//

நம் நாட்டு பாராளுமன்றம் போல் 'சூரா கவுன்சில்' என்ற ஒரு அமைப்பு உள்ளது. நம் நாட்டு மேல் சபை போல் பெரும் பெரும் கல்வி மான்கள் அதன் அங்கத்தினர். பெண்களும் அங்கத்தினர்களாக உள்ளனர். இந்த கமிட்டியின் பரிந்துரைப்படியே அரசர் எந்த முடிவுகளையும் எடுப்பார்.

மக்களாட்சியோ மன்னராட்சியோ எதுவாக இருந்தாலும் மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். சவுதியில் சந்தோஷமாகவே அனைத்து மத மக்களும் உள்ளனர். அது போதும்.